Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
12:05:27 AM
ஞாயிறு | 28 ஜுலை 2024 | துல்ஹஜ் 1823, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
04:4912:2903:5206:4508:00
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:09Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்---
மறைவு18:39மறைவு12:20
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
04:5405:2005:46
உச்சி
12:24
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
19:0119:2719:54
Go to Homepage
செய்திகள்
Previous News ItemNext News Item
செய்தி எண் (ID #) 14591
#KOTW14591
Increase Font Size Decrease Font Size
சனி, செப்டம்பர் 27, 2014
ஜெயலலிதா குற்றவாளி என தீர்ப்பு! உடனடியாக பதவி இழக்கிறார்!!
செய்திகாயல்பட்டணம்.காம்
இந்த பக்கம் 4636 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (8) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 2)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}

பெங்களூரு சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வரும் தமிழக முதல்வர் ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு வழக்கில் இன்று (செப்டம்பர் 27) தீர்ப்பு வழங்கப்பட்டது.

பகல் 2.25 மணியளவில் பெங்களூர் சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஜான் மைக்கேல் டி குன்ஹா தீர்ப்பை வழங்கினார். சொத்துக் குவிப்பு வழக்கில் சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோர் மீதான குற்றச்சாட்டுகளும் நிரூபணமானதாக நீதிமன்றம் அறிவிப்பு.

முதல்வர் பதவியை இழந்தார் ஜெ:

பெங்களூர் சிறப்பு நீதிமன்ற வழக்கறிஞர் பவானி சிங் 'தி இந்து'விடன் கூறியதாவது: "சொத்துக் குவிப்பு வழக்கில் ஜெயலலிதா மீதான அனைத்து குற்றச்சாட்டுகளும் நிரூபிக்கப்பட்டுள்ளன.மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தின்படி ஜெயலலிதா எம்.எல்.ஏ. பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்படுகிறார்.

அவரது முதல்வர் பதவியையும் இழக்கிறார். தீர்ப்பை அடுத்து முதல்வர் ஜெயலலிதாவின் காரில் இருந்து தேசியக் கொடி அகற்றப்பட்டது. தண்டனை விபரம் மீதான விவாதம் 3 மணிக்கு தொடங்குகிறது. எதிர்தரப்பு சார்பில், ஜெயலலிதாவுக்கு அதிகபட்ச தண்டனை வழங்க வேண்டும் என வாதிடும்" என்றார்.

அவருக்கான இசட் பிளஸ் பாதுகாப்பும் விலக்கிக் கொள்ளப்பட்டுள்ளது.

இந்த வழக்கில் சம்பந்தப்பட்டுள்ள அனைவருக்குமான தண்டனை விபரங்கள் விரைவில் அறிவிக்கப்படும்.

தகவல்:
தி இந்து


Previous News ItemNext News Item
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. நீதி சாகவில்லை!.
posted by முஹம்மது ஆதம் சுல்தான் (yanbu) [27 September 2014]
IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 37509

நீதி சாகவில்லை, முழுவிபரங்களையும் பொறுத்த்திருந்து பார்ப்போம்!

பிறகட்சி ஊழலின் பிறப்பிடம்,பெருச்சாளி என்று ஒப்பாரி வைத்து ஆட்சிக்கு வந்த அம்மையார் அவர்களே, அரசன் அன்று கேட்பானோ இல்லையோ, தெய்வம் நின்று கேட்க்கும்!

மேலும் விபரமறிந்தபின் விலாசுகிறேன் இன்ஷா அல்லாஹ்!

அல்லாஹ் அனைத்தும் அறிந்தவன்!

ஆனந்தத்துடன்,
ஆதம் சுல்தான்!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
2. ஊடகங்களின் மவுனம், இந்த ஜனநாயகத்துக்கு மிகப்பெரிய ஆபத்து
posted by தமிழன் முத்து இஸ்மாயில் (காயல்பட்டினம்.) [27 September 2014]
IP: 180.*.*.* India | Comment Reference Number: 37510

உப்பு திண்டவர் தண்ணி குடிக்கத்தான் வேண்டும்..!

மத்தியானத்துக்கு பிந்தைய இந்நாள் / முன்னால் முதல்வர் ஓபிஎஸ் அவர்களுக்கு வாழ்த்துக்கள்...

ஜெயலலிதாவின் வழக்கு குறித்து எழுதாவிட்டால் ஜெயலலிதா காப்பாற்றப்படுவார் என்பது போன்ற பொய்யான நம்பிக்கையின் அடிப்படையில் பல ஊடகங்கள் காக்கின்றன...! மவுனம் காத்தன..! ஜெயலலிதாவின் 91 ஆட்சியிலும் சரி..! 2001 ஆட்சியிலும் சரி..! பல்வேறு ஊழல்கள் வெளி வருவதற்க்கான / வந்ததற்கான ஒரே காரணம் ஊடகங்களின் அற்புதமான பணிதான்...! ஆனால் 2011ஆட்சியில் ஊடகங்கள் மிக மிக மோசமான துரோகத்தை தமிழகத்துக்கு செய்து கொண்டிருக்கின்றன.

"ஊடகங்களின் மவுனம், இந்த ஜனநாயகத்துக்கு மிகப்பெரிய ஆபத்து"


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
3. Re:...மகேசன் தீர்ப்பு!
posted by omer anas (DOHA QATAR.) [27 September 2014]
IP: 37.*.*.* | Comment Reference Number: 37513

வல்லோன் மகேனின் தீர்ப்பு இப்பத்தான் ஒவ்வொரு இடமாக இறங்க ஆரம்பித்து உள்ளது. அல்ஹம்துலில்லாஹ்!!! இதுபோல்பல தீர்ப்புகள் நாளையே வேறு ஒரு கட்சி கொள்ளை கூட்டத்திற்கும் வரும்.வரணும்,,,ஆகவே, ஆணவம் கொண்ட மானிடரே இனியாவது,அரசன் அன்று கொல்வான்,இறைவன் நின்று கொல்வான்.என்பதை எல்லோரும் புரிந்து நடந்து கொள்ள வேண்டும். துஆ சலாம்!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
4. Re:...முதல்வர் இல்லாத தமிழகம்
posted by mackie noohuthambi (chennai) [27 September 2014]
IP: 180.*.*.* India | Comment Reference Number: 37517

1952 முதல் 2014 வரை தமிழகம் எத்தனையோ முதல்வர்களை கண்டிருக்கிறது. ஆட்சி மாற்றங்கள் எத்தனை ஏற்பட்டபோதும் ஒரு முதல்வர் இல்லாத தமிழகமாக இன்று இரவு அது துயில் கொள்ளப் போகிறது. அந்த ஒரு அசாதாரண நிலை இங்கு. பிரதமர் இல்லாத இரவு அங்கே. வரலாற்றில் ஒரு முக்கியமான இரவு இது 27.9.2014. பனி இல்லாத மார்கழியா படை இல்லாத மன்னவனா - முதல்வர் இல்லாத மாநிலமா - ஆம் அங்கே மோடி இல்லை - இங்கே லேடி இல்லை.

எல்லாம் அவன் செயல். அவன் நாடியவர்களுக்கு ஆட்சி அதிகாரத்தை கொடுக்கிறான். அவன் நாடியவர்களிடமிருந்து அதை பறித்துக் கொள்கிறான். சகல சக்தியும் நிறைந்த அல்லாஹ் ஒருவனுக்கே புகழ் அனைத்தும். சிந்தித்து பார்க்கிறவர்களுக்கு இந்த திருமறையில் அதிக அத்தாட்சிகள் இருக்கின்றன...


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
5. நீதயின் கண்களிலிருந்து எவரும் தப்ப முடியாது!
posted by முஹம்மது ஆதம் சுல்தான்! (yanbu) [27 September 2014]
IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 37519

அன்பு சகோதரரே ,ஊடகங்கள் மௌனம் காத்தாலோ அல்லது அது ஊதி பெரிதாக்கினாலோ உண்மையை, நடுநிலைமையை,நேர்மையை நீதியை நெரித்து விட முடியாது!.நசித்துவிட முடியாது!!

தூரப்பார்வையிலிருந்து பார்ப்பவர்களுக்கு வேண்டுமானால் அது துவண்டுவிடுவது போல் தெரியலாம்! என்றாவது ஒருநாள் உண்மை வாழ்க்கைக்கு அது கை கொடுக்கும் ஏனனில்அது ஒவ்வொருவரின் "நித்திய வாழ்வின் நிழல்"என்ற சித்தாந்தத்தில் வாழும் வழுக்கலில்லா உள்ளத்திற்கு சொந்தக்காரர்கள் என்றும் பயப்படத் தேவையில்லை!

இந்த முதல்வரின் தீர்ப்பு ஒரு முன்மாதிரியே,எப்பேர்பட்ட எத்தனாக இருந்தாலும் அவர் எப்பேர்பட்ட உயர் அரசியல் செவாக்குள்ளவராக இருந்தாலும் ஊழலும்,ஒழுங்கீனமும் உடைய பொது வாழ்கையிலிருந்து பெறப்படும் பொதுசொத்தில் ஒரு பைசாவை பெற்றாலும் அந்த குற்றதிற்க்குறிய தண்டனையை நீதி தேவதை நிச்சியம் ஏதாவதொரு வழியில் கொடுப்பாள்.அந்த நீதயின் கண்களிலிருந்து எவரும் தப்ப முடியாது இதில் நமக்கு வேண்டப்பட்டவர்,வேண்டப்படாதவர்,நாம் சார்ந்திருக்கும் அமைப்பு,கட்சி,தலைமை என்ற எந்த வேறுபாட்டிற்கும் இடமில்லை

குற்றம் செய்தவன் தண்டிக்கப்படவேண்டும் என்ற சித்தாந்தத்தில் சிறிதளவும் பிசகாதவர்கள் பலபேர் இந்த பூமியிலுள்ளார்கள் அந்தவரிசையில் இந்த ஆதம் சுல்தானும் ஒருவனுமாவான்! .தவறு செய்பவர் எவரையும் தட்டிக்கேட்பதில் தயவு தாட்சன்யமோ,சமரசமோ செய்யாமல் வாழ்ந்துவருபவன் நான். என் வாழ்நாள் முழுதும் இப்படிப்பட்ட வாழ்கையை எனக்கும் என் போன்றோர்களுக்கும் வல்ல அல்லாஹ் வழங்கிடுவானாக ஆமீன்! அல்லாஹ் அனைத்தும் அறிந்தவன்!

அன்புடன்,
முஹம்மது ஆதம் சுல்தான்!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
6. Re:...
posted by P.S. ABDUL KADER (KAYALPATNAM) [28 September 2014]
IP: 180.*.*.* India | Comment Reference Number: 37524

காட்டுமிராண்டித்தனத்தில் ஹிட்லரையும் மிஞ்சி விட்டது. காலை 11 மணிக்கு தானே தீர்ப்பு ஏன் காலதாமதம் ? எங்கே 11மணிக்கே தீர்ப்பு வாசிக்கப்பட்டு மாலை ஜாமீனுக்கு அப்ளை செய்து வெளியே வந்துவிடுவாரோ என்றே தீர்ப்பு தாமதமாக...இறுதி நேரத்தில் எழுதப்பட்டது . 1மணி 3மணி என்று இறுதி நேரத்தில்தண்டனை அறிவிக்கப்பட்டது . இன்றுடன் அக்டோபர் 5வரை தசரா விடுமுறை அதுவரை சிறையில்வைக்கவேண்டும்என்றே பழிவாங்கப்பட்டதீர்ப்பு இது அனைத்து எதிரிகளும் சேர்ந்து ஒரு வீர பெண்மணியின் முதுகில் குத்தும் விதம் இது .தமிழர்கள் உரிமைக்கு போராடிய தமிழகமுதல்வருக்கு நாமே ஆதரவு அளிக்காமல் இருந்தால் நியாயமா?


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
7. Re:...
posted by K.D.N.MOHAMED LEBBAI (RIYADH) [28 September 2014]
IP: 77.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 37530

அஸ்ஸலாமு அலைக்கும்

நம் நாட்டின் அரசியலில் இது வெல்லாம் சகஜம் அப்பா ......நாட்டில் நடக்காததையா எங்கள் தலைவி அம்மா அவர்கள் செய்து விட்டார்கள் .....பொதுவாகவே அரசியலில் இது வெல்லாம் ஒன்றுமே இல்லை நம் நாட்டில் .....

நாட்டின் தீர்ப்புக்கு எங்கள் தலைவி அம்மா அவர்கள் தலை வணங்கி இருப்பதில் இருந்து ...எவ்வளவு பெருந்தன்மை என்பதை நாடும் சரி .... மக்களுக்ம் சரி உணர்ந்து இருப்பார்கள் .... எங்கள் தலைவி அம்மா அவர்களின் மதிப்பு பொது மக்கள் மத்தியில் இன்னும் உயர்ந்து விட்டது ....இது தான் உண்மையே .....

தீர்ப்பு என்பது யாவர்களும் மதிப்பு அளிக்க பட வேண்டிய ஒரு மரியாதைக்குரிய செயல் ....

நாளை இன்னும் மற்ற தீர்ப்பு மற்ற கட்சிகளில் இருப்பதை யாவர்களும் அறிவர்கள் '' ஜி...... யை பார்ப்போம் ......

அதிக விரைவில் மரியாதைக்குரிய தலைவி அம்மா அவர்களின் நேரடி கண் பார்வையில் நல்லதோர் தலைமை அமைந்து தமிழக மக்களுக்கு பல .... நல ,, நல்ல ,, திட்டங்கள் வந்து .... தமிழக பொது மக்கள் பலன் பெறுவார்கள் என்பதில் எள்ளளவும் சந்தேகம் இல்லை .... இது நடக்கும் ...... இதுவும் யாவர்களும் அறிவர் ............பொருத்து இருந்து பார்க்கலாம் ......

வஸ்ஸலாம்
K.D.N.MOHAMED LEBBAI


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
8. கனி மொழியும் அவரின் தாயாரின் 2 G உழலின் நீதி முழுவிபரங்களையும் பொறுத்த்திருந்து பார்ப்போம்!
posted by pirabu Shuaibu (Chennai) [29 September 2014]
IP: 182.*.*.* India | Comment Reference Number: 37542

உப்பு திண்டவர் தண்ணி குடிக்கத்தான் வேண்டும்..! கனி மொழியும் அவரின் தாயாரின் 2 G உழலின் நீதி முழு விபரங்களையும் பொறுத்த்திருந்து பார்ப்போம்!

புரட்சி தலைவி நிச்சயம் இந்த தீர்ப்பு வில் இருந்து வெற்றி பெறுவார் தமிழ் நாட்டின் முதல்வராக கூடிய விரைவில் அமர்வார்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>

முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்

பிற செய்திகள்
“பாட்டல்ல கிடையாது!” (?!)  (28/9/2014) [Views - 3712; Comments - 2]

காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
FaamsCathedral Road LKS Gold Paradise
Fathima JewellersAKM Jewellers

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved