Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
10:26:10 AM
வெள்ளி | 19 ஏப்ரல் 2024 | துல்ஹஜ் 1723, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
04:5412:2415:2818:3319:43
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:06Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்15:09
மறைவு18:27மறைவு03:03
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
04:5505:2005:45
உச்சி
12:16
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:4819:1319:38
Go to Homepage
செய்திகள்
Previous News ItemNext News Item
செய்தி எண் (ID #) 14600
#KOTW14600
Increase Font Size Decrease Font Size
திங்கள், செப்டம்பர் 29, 2014
ஒ.பன்னீர்செல்வம் முதல்வராக பதவியேற்றார்! புதிதாக ஓர் அமைச்சர் கூடுதலாக நியமனம்!!
செய்திகாயல்பட்டணம்.காம்
இந்த பக்கம் 5265 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (3) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 1)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}

பெங்களூரு சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வரும் தமிழக முதல்வர் ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு வழக்கில், அவருக்கு 4 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், 100 கோடி ரூபாய் அபராதமும் விதித்து நேற்று (செப்டம்பர் 27) தீர்ப்பு வழங்கப்பட்டது. அதனை தொடர்ந்து முதலமைச்சர் ஜெயலலிதா - சட்டமன்ற உறுப்பினர் மற்றும் முதல்வர் பதவிகளை இழந்துள்ளார்.

இதனை அடுத்து புதிய முதலமைச்சரை தேர்வு செய்ய நேற்று அதிமுக எம். எல்.ஏ-க்கள் கூட்டம் நடைபெற்றது. இதில் ஓ. பன்னீர்செல்வம் சட்டமன்ற தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். இதனையடுத்து ஆட்சி அமைக்க உரிமை கோரி நேற்று ஆளுநரிடம் மனு அளிக்கப்பட்டது. அந்த மனுவை ஏற்று ஆளுநர் ரோசையா ஆட்சி அமைக்க அழைப்பு விடுத்தார்.



இதனை அடுத்து இன்று ஓ. பன்னீர்செல்வம் தமிழக முதலமைச்சராக பதவி ஏற்றார். சென்னையில் ஆளுநர் மாளிகையில் எளிய முறையில் பதவியேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. ஆளுநர் ரோசய்யா முன்னிலையில் ஓ.பன்னீர் செல்வம் பதவிப் பிரமாணம் எடுத்துக்கொண்டார்.



ஜெயலலிதா அமைச்சரவையில் இருந்த 30 பேரும் அமைச்சராக பதவியேற்றனர். பன்னீர் செல்வத்தை தொடர்ந்து நத்தம் விஸ்வநாதன் அமைச்சராக பதவியேற்றார். மேலும் எடப்பாடி பழனிச்சாமி, வளர்மதி, மோகன், பழனியப்பன், அமைச்சராக பதவியேற்றனர். செல்லூர் ராஜு, காமராஜ், தங்கமணி, செந்தில் பாலாஜி ஆகியோரும் அமைச்சராக பதவியேற்றுக் கொண்டனர்.

பதவியேற்பில் தலைமை செயலர் உள்பட உயர் அதிகாரிகள் அனைவரும் பங்கேற்றனர். ஆனால் பதவியேற்புக்கு அரசியல் கட்சித் தலைவர்கள் முக்கிய பிரமுகர்களுக்கு அழைப்பு இல்லை என்று தகவல் வெளியாகியுள்ளது.

புதிய அமைச்சராக அக்ரி கிருஷ்ண மூர்த்தி பதவியேற்றார்.

புகைப்படம்:
NDTV

தகவல்:
தினகரன்


Previous News ItemNext News Item
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. Re:...
posted by K.D.N.MOHAMED LEBBAI (RIYADH) [29 September 2014]
IP: 77.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 37545

அஸ்ஸலாமு அலைக்கும்

>>>> வாழ்த்துக்கள் <<<<

நம் மரியாதைக்குரிய தலைவி அம்மா அவர்களின் வழியில் வந்த தாங்கள் ....நம் தலைவி அம்மா அவர்களை போன்று ....ஏழை / நடுத்தர மக்களுக்கான பல நல்ல செயல் திட்டங்களை '' தந்து அம்மாவின் ( கனவை ) நினைவை நிறை வேற்றுவீர்கள் என்று தமிழக மக்கள் ரொம்பவும் எதிர் பார்கிறார்கள் ....

அதிக விரைவில் கடவுளின் புண்ணியத்தால் மீண்டும் நல்லதோர் நற் தீர்ப்பின் பயனால் .... நம் மரியாதைக்குரிய தலைவி அம்மா அவர்களின் வருகையும் & மீண்டும் தமிழக முதல்வராக பதவி ஏற்று நல்லதோர் பொன் ஆட்சியை தந்து ..... தமிழக அனைத்து ஏழை ...எளிய ..நடுத்தர மக்களும் பல நல்ல திட்டத்தின் மூலம் பலன்கள் பெறுவார்கள் என்பதும் உறுதியே ....பலதரப்புபற்ற அனைத்து பொது மக்களின் '''' பிராத்தனையும் '' ....எண்ணமும் இதுவே .....

அனைத்து பொது மக்களின் >> பிராத்தனையின் பலன் உண்டு என்பது யாவர்களும் அறிந்ததே .... வஸ்ஸலாம்

K.D.N.MOHAMED LEBBAI


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
2. Re:...வஞ்சகர்களின் சூழ்ச்சி அழியட்டும்
posted by Refaye (Abudhabi) [29 September 2014]
IP: 217.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 37548

அரசியலில் ஆயிரம் கருத்து வேறுபாடுகள் இருந்தாலும்.அம்மாவின் அரசியல் கட்டமைப்பும்,அக்கட்சின் கட்டுக்கோப்பும் மிகவும் பாராட்ட படக்கூடிய ஒன்று.எத்தனை பிரச்சினைகள் வந்த போதும் தம் தலைமை சிறைச்சாலையில் தரும் ஆலோசனைகளை அப்படியே பக்தியோடு ஏற்று அம்மாவின் அமைச்சர் முதல் அடிமட்ட தொண்டன் வரை அம்மாவின் புகழ் கெடாமல் பாதுகாத்து வருவதே இநேரத்தில் மிக முக்கியமான ஒன்று,இதுவே அம்மாவுக்கும் விருப்பமாய் இருக்கும், கயவர்கள் கால் ஊன்ற துடிக்கும் இந்நிலையை சிறைச்சாலை கம்பிக்குள் அம்மா சிறைபிடிப்பார்கள் அந்தகாலம் வெகு தொலைவில்இல்லை.

வஞ்சகர்களின் சூழ்ச்சி அழியட்டும்.

நான் பொதுவான கருத்தை தந்தமைக்காக என்னை எந்த அரசியலோடும் ஒப்பிக்க வேண்டாம் நான் அரசியலுக்கு அப்பாற்பட்டவன்.

A.R.Refaye-Abudhabi


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
3. Re:...
posted by P.S. ABDUL KADER (KAYALPATNAM) [30 September 2014]
IP: 180.*.*.* India | Comment Reference Number: 37550

கடைகோடி தொண்டனுக்கும் முதலமைச்சர் பதவியையும், அமைச்சர் பதவியையும் தூக்கிக்கொடுத்த நம் தலைவி, மக்கள் முதல்வர் சிறையில் இருக்க நாம் மட்டும் பதவி ஏற்கிறோமே என நினைத்து அழும் அதிமுக அமைச்சர்கள் அனைவர்களுக்கும் வாழ்த்துக்கள்.

மக்களுக்கு தெரியும் எது உண்மை? எது பொய் என்று.

தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும்
தர்மம் மறுபடியும் வெல்லும்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>

முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்

பிற செய்திகள்
“பாட்டல்ல கிடையாது!” (?!)  (28/9/2014) [Views - 3673; Comments - 2]

காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
Cathedral Road LKS Gold ParadiseFathima Jewellers
AKM JewellersFaams

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved