Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
5:35:24 AM
சனி | 20 ஏப்ரல் 2024 | துல்ஹஜ் 1724, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
04:5212:2315:3018:3319:43
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:05Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்15:52
மறைவு18:27மறைவு03:40
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
04:5405:1905:44
உச்சி
12:16
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:4819:1319:38
Go to Homepage
செய்திகள்
Previous News ItemNext News Item
செய்தி எண் (ID #) 14831
#KOTW14831
Increase Font Size Decrease Font Size
வெள்ளி, அக்டோபர் 31, 2014
எடந்தெரியாமல்லோ வந்துட்டேன்... (?!)
செய்திஎஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்)
இந்த பக்கம் 10838 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (8) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 0)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}

இன்று 17.30 மணியளவில், குதிரையா - கோவேறுக்கழுதையா என்று அறியப்படாத விலங்கு ஒன்று பொலிநடையாக நடந்து வந்து, காயல்பட்டினம் ஸீ-கஸ்டம்ஸ் சாலையில், இளைஞர் ஐக்கிய முன்னணி எதிரில் முகாமிட்டது.



ஊர் முழுக்க கழுதைமயமாக இருந்த காலத்தையெல்லாம் கடந்து, இந்தத் தலைமுறை சிறுவர்கள் அதைக்கூட பார்த்தறியாத வேளையில், குதிரை வடிவில் ஒன்று வந்திறங்கினால் கேட்கவா வேண்டும்?

எங்கே, பின்னங்காலால் பிடறியில் பின்னி விடுமோ என்ற அச்சம் மேலோங்க, ‘அனுமதிக்கப்பட்ட’ அனைத்து குறும்புகளையும் செய்து மகிழ்ந்தனர் வாண்டுகள். அவர்கள் சற்று வரம்பு மீறியபோது, பின்னணியில் இருந்த பெரியவர்கள் அவர்களைத் தடுக்கவும் தவறவில்லை.







பசியோடு இருந்த அவ்விலங்கு, வாண்டுகள் எதைக் கொடுத்தாலும் வாய்க்குள் இட்டுக் கொண்டிருந்தது பார்க்கப் பரிதாபமாக இருந்தது.


Previous News ItemNext News Item
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. Re:...
posted by Vilack SMA (Jeddah) [31 October 2014]
IP: 86.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 37956

இந்த குதிரையோட சொந்தக்காரன் இங்கே இருந்திருந்தால் , " அட , கழுதைக்கு பொறந்தவனே . இங்க எதுக்குடா தனியா வந்தா " என்று தான் திட்டியிருப்பார்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
2. உண்மைதான்...!
posted by M.N.L.முஹம்மது ரபீக் (சிங்கப்பூர்;) [31 October 2014]
IP: 14.*.*.* Singapore | Comment Reference Number: 37960

வண்ணார்க்குடியில் சலவைத்தொழில் நலிந்தமைக்கு காரணம் அனைத்து வீடுகளிலும் வாஷிங் மெஷின் குடிபுகுந்ததால்தான். நான் அறிய கழுதையின் முதுகில் துணி மூட்டையை ஏற்றிச் செல்லும் வழக்கம் நமதூரில் இருந்தது.

இரவு முழுக்க கழுதைகளின் இன்னிசையும் அவ்வப்போது நம் காதுகளில் ஒலிக்கும். காலப்போக்கில் கழுதை என்பது குதிரைக் கொம்பாய் போயிற்று.

ரமளான் மாதத்தில் கழுதையைத் தேடிப்பிடித்து டின்கட்டும் வழக்கம் எழுதப்படாத சட்டமாக காயல் குறும்பர்களுக்கு இருந்து வந்த காலம். இப்ப உள்ள தலைமுறையினருக்கு கழுதையும் தெரியாது கருப்பட்டியும் தெரியாது...!

-ஹிஜாஸ் மைந்தன்.

Moderator: Comment edited!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
3. Re:...
posted by ummuhani kareem (kayalpatnam) [31 October 2014]
IP: 59.*.*.* India | Comment Reference Number: 37961

பசியோடு இருந்தது பார்க்க பரிதாபமாக இருந்ததே! அதன் பசிக்கு ஏதாவது நீங்கள் வாங்கி கொடுத்திருந்தால் கருணையோடு உங்களையும், கேமராவையும் பார்த்திருக்கும்

லேப்டாப்பும் டேபும் செல்போனும் பழகிப்போன மக்களுக்கு இதெல்லாம் ஆச்சரியமான சமாசாரம் தான்

உம்முஹானி கரீம்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
4. கானக்கறிய காட்சி! ...
posted by முஹம்மது ஆதம் சுல்தான், (yanbu) [01 November 2014]
IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 37965

(கடைசி படத்தில்) குதிரையின் முன்னே, ரெடி ஒன்... டூ... திரி என்று எகிறி குதித்து குதிரைமேல் தாவத்தயாராகும் சிறுவன், அவன் சாகச வீரத்தை உற்சாகம் பொங்க பார்க்கத்துடிக்கும் வாண்டுகள் வரிசையுடன் நிற்கும் வனப்பான காட்சியை கானக்கறியதாய் கற்பனை செய்தால் அதில் கவிதை பிறக்கலாம்! அல்லாஹ் அனைத்தும் அறிந்தவன்!

அன்புடன்,
முஹம்மது ஆதம் சுல்தான்,


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
5. அன்று, இன்று
posted by Muhammad Abubacker (Muscat, Oman ) [02 November 2014]
IP: 82.*.*.* Oman | Comment Reference Number: 37973

பள்ளிவாசல்களுக்கு வெளியில் கால்நடைகள் குடிப்பதற்கு தண்ணீர் தொட்டி எல்லாம் இருக்கும். விலங்குகள் மீதும் இரக்கம் காட்டும் மார்க்கம் நமது மார்க்கம்.

ஊரில் உள்ள பழமையான பள்ளிவாயில்கள் நமது அடையாளங்கள். அடையாளங்கள் பாதுகாக்கப்பட வேண்டும். பழமையான பள்ளிவாயில்கள் நமது ஆயிரம் ஆண்டு கால வரலாறு.

நம்மில் மாற்றம் வேண்டும் என்று செல்பவர்களே அதிகம் ஆனால் மாற்றத்திற்கு யாரும் தயாரில்லை.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
6. Re:...
posted by yahya mohideen (dubai) [02 November 2014]
IP: 86.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 37975

அவர்கள் சற்று வரம்பு மீறியபோது, பின்னணியில் இருந்த பெரியவர்கள் . (C & P )

(இளைஞர் ஐக்கிய) முன்னணியில் இருந்த பெரியவர்கள் அவர்களைத் தடுக்கவும் தவறவில்லை- என்று இருக்க வேண்டும்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
7. Re:...
posted by K.D.N.MOHAMED LEBBAI (RIYADH ) [02 November 2014]
IP: 94.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 37976

அஸ்ஸலாமு அலைக்கும்

இந்த வனவிலங்கின் நிலைமையை நான் பார்க்கும் போது...எங்கள் ''' முகியத்தின் பள்ளி ஜமாத்தார்களின் ரொம்பவும் கனிவான ஒரு நற் செயல் தான் நியாபகத்துக்கு வருகிறது ....எங்கள் பழைய தோற்றத்துடன் இருந்த பள்ளியின் முன்'' ஒரு தொட்டி கட்டி நிறையவே தண்ணீர் நிரப்பி வைப்பார்கள்... வாய்யற்ற ஜீவன்கள் தண்ணீர் அருந்துவதை பார்க்கும் போது அனைவர்களின் மனதில் மற்றற்ற மகிழ்ச்சியாகும் ......

அந்த பொற்காலம் எங்கே ?? இப்போது ....நாம் தேடினாலும் அந்த பொற்காலம் நிச்சயம் கிடைக்காது .....பொதுவாகவே அனைவர்களிடமும் பணம் வந்து விட்டது ......ஆனால் மனம் என்பது வர வில்லையே ......

இப்போது நம் ஊரில் புதிய பள்ளிகள் நிறையாவே தோன்றினாலும் & பழைய பள்ளிகளை புதுபித்தாலும் சரி ....இந்த வாய் இல்லா ஜீவன்களுக்கு எங்கே தண்ணீர் தொட்டிகள் கட்டுகிறார்கள் ........கட்டுவார்களா ??

நல்ல வேலை இந்த குதிரை கடற்கரை பக்கம் தனியாக நின்று இருப்பதால் ...யாராவது பிடித்து கடற்கரை பக்கம் அழைத்து சென்று குழந்தைகளுக்கு குதிரை சவாரி விடாமல் விட்டார்களே .......

இந்த நிழற்படத்தை ...குழந்தையோடு ...சேர்த்து குதிரையும் பார்க்கும் போது நமக்கும் அந்த பழைய நியாபகங்களே தான் வருகிறது ....

நம் மழலையின் மகிழ்ச்சியை பாருங்களேன் ...... வஸ்ஸலாம்

K.D.N.MOHAMED LEBBAI
RIYADH


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
8. Re:...
posted by SHEIKH ABDUL QADER (RIYADH) [03 November 2014]
IP: 5.*.*.* | Comment Reference Number: 37981

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹு.

பாவம் பரியின் சுதந்திராம் பறிபோனதோ?
பரிதாபம் பரி
ஆளாளுக்குக்கருத்து சுதந்திரம்
தப்பிக்கத்தந்திரமறியாத பரிக்கு
பரிந்துரைக்கப்பதினாயியம்பேர் இருக்கிறார்கள்

அல்ஹம்துலில்லாஹ்.

நீ விலங்கிடப்படாமலும்
"விலங்கிடப்பட்ட விலங்கு"

"பள்ளிவாயிலில்கல்மட்டுமல்ல சில இல்லவாயில்களிலும் கால்நடைகளுக்காக நீர்த்தொட்டிகளிருந்ததை மறக்கவோ மறுக்கவோமுடியாது"

"இம்மையில் இரக்கம்காட்டுவோருக்கு இறைவன் இருலோகத்திலும் இரக்கம்காட்டுவான் ஆமீன்"

இறைவன் மிகப்பெரியவன்.

இறையடிமை,
ஷேக் அப்துல் காதிர்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>

முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்

பிற செய்திகள்

காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
Cathedral Road LKS Gold ParadiseFathima Jewellers
AKM JewellersFaams

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved