Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
7:53:05 AM
வெள்ளி | 19 ஏப்ரல் 2024 | துல்ஹஜ் 1723, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
04:5412:2415:2818:3319:43
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:06Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்15:09
மறைவு18:27மறைவு03:03
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
04:5505:2005:45
உச்சி
12:16
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:4819:1319:38
Go to Homepage
செய்திகள்
Previous News ItemNext News Item
செய்தி எண் (ID #) 14884
#KOTW14884
Increase Font Size Decrease Font Size
புதன், நவம்பர் 19, 2014
நகரில் தேங்கும் மழை நீர் வழிந்தோட நிரந்தரத் தீர்வு கோரி இ.யூ.முஸ்லிம் லீக் ஒருங்கிணைப்பில், நவ. 22 அன்று அனைத்துக் கட்சிகள் நடத்தும் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்!
செய்திஎஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்)
இந்த பக்கம் 4456 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (10) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 8)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}

காயல்பட்டினத்தில் பெய்து வரும் கனமழையால் நகரின் பல்வேறு பகுதிகளில் தேங்கியிருக்கும் மழை நீரை வழிந்தோடச் செய்திட நிரந்தரத் தீர்வு காணக் கோரி, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் காயல்பட்டினம் நகர கிளை ஒருங்கிணைப்பில், நகரின் அனைத்து அரசியல் கட்சிகளின் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தை, இம்மாதம் 22ஆம் நாள் சனிக்கிழமையன்று காலை 11.00 மணியளவில், காயல்பட்டினம் வள்ளல் சீதக்காதி திடலில் நடத்திட, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் நடத்திய அனைத்துக் கட்சிகள் கலந்தாலோசனைக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து, அக்கட்சியின் தூத்துக்குடி மாவட்ட செய்தி தொடர்பாளர் எஸ்.கே.ஸாலிஹ் வெளியிட்டுள்ள அறிக்கை:-

காயல்பட்டினத்தில் கடந்த ஒரு மாத காலமாகப் பெய்து வரும் தொடர் மழையின் காரணமாக, நமதூரின் பல்வேறு பகுதிகளில் மழை நீர் தேங்கி, நகரில் சுகாதாரச் சீர்கேடு ஏற்பட்டுள்ளது. இதன் மூலம் பல்வேறு நோய்களால் குழந்தைகள் முதல், பெரியவர்கள் வரை பாதிக்கப்பட்டுள்ளனர்.

தாழ்வான பகுதிகளில் மழை நீர் வீட்டுக்குள் புகுந்து, வாழ வழியில்லாமல் உள்ளதோடு, பள்ளிவாசல்கள், கோயில்கள், கல்விக் கூடங்களில் மழை நீர் சூழ்ந்துள்ளதாலும், பொதுமக்களும் - மாணவர்களும் கடும் சிரமத்திற்குள்ளாகியுள்ளனர். இந்த அவல நிலையைப் போக்க, காயல்பட்டினம் நகராட்சி போதிய நடவடிக்கை எடுக்கவில்லை.

நகரில் தேங்கும் மழை நீர் வழிந்தோட நிரந்தரத் தீர்வு காண்பதற்காக, 18.11.2014 செவ்வாய்க்கிழமையன்று 16.30 மணியளவில், காயல்பட்டினம் சதுக்கைத் தெருவிலுள்ள - இந்திய யூனியன் முஸ்லிம் லீக் காயல்பட்டினம் நகர கிளை அலுவலகமான ‘தியாகி பி.எச்.எம்.முஹம்மது அப்துல் காதிர் மன்ஸில்’ கட்டிடத்தில், நகரின் அனைத்து அரசியல் கட்சிகள், அனைத்து ஜமாஅத்துகள் மற்றும் பொதுநல அமைப்புகளின் கலந்தாலோசனைக் கூட்டம், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் காயல்பட்டினம் நகர தலைவர் வாவு கே.எஸ்.முஹம்மத் நாஸர் தலைமையில் நடைபெற்றது.

முஸ்லிம் லீக் நகர செயலாளர் ஏ.எல்.எஸ்.அபூஸாலிஹ் கிராஅத் ஓதி கூட்டத்தைத் துவக்கி வைத்தார். அதன் மாநில துணைச் செயலாளர் எஸ்.ஏ.இப்றாஹீம் மக்கீ அனைவரையும் வரவேற்றுப் பேசினார். தூத்துக்குடி மாவட்ட துணைத்தலைவர் மன்னர் பாதுல் அஸ்ஹப் கூட்ட அறிமுகவுரையாற்றினார்.



அவரைத் தொடர்ந்து, காயல்பட்டினம் நகர்மன்ற உறுப்பினர்களான இ.எம்.சாமி, கே.ஜமால், சுகு, எஸ்.ஏ.சாமு ஷிஹாபுத்தீன், நகர காங்கிரஸ் கட்சியின் சார்பில் எம்.எம்.கமால், இளைஞர் ஐக்கிய முன்னணி (YUF) சார்பில் அதன் செயலாளர் எஸ்.ஏ.கே.முஹ்யித்தீன் அப்துல் காதிர், ஆறாம்பள்ளி சார்பில் ‘மாஷாஅல்லாஹ்’ தாவூத், திராவிட முன்னேற்றக் கழகம் காயல்பட்டினம் நகர கிளை செயலாளர் மு.த.ஜெய்னுத்தீன், தேசிய முற்போக்கு திராவிடர் கழகம் காயல்பட்டினம் கிளை செயலாளர் எம்.எச்.எம்.ஸதக்கத்துல்லாஹ், மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் தூத்துக்குடி மாவட்ட பொருளாளர் காயல் எஸ்.இ.அமானுல்லாஹ், பாரதீய ஜனதா கட்சியின் கேந்திர பொறுப்பாளர் பண்டாரம், பூந்தோட்டம் சக்தி குமார், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் நகர செயலாளர் பன்னீர் செல்வம் ஆகியோர் கருத்துரையாற்றினர்.

நடப்பு வடகிழக்குப் பருவமழை காரணமாக காயல்பட்டினம் நகரில் தேங்கியுள்ள மழை நீரை வழிந்தோடச் செய்து, நகரில் சுகாதாரச் சூழலை ஏற்படுத்திட காயல்பட்டினம் நகராட்சி போதிய அக்கறை செலுத்தவில்லை என்று குற்றஞ்சாட்டிப் பேசிய அவர்கள், இதற்கு நிரந்தரத் தீர்வு காண்பதற்காக அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில் மக்கள் போராட்டம் நடத்தப்பட வேண்டும் என்று வலியுறுத்திப் பேசினர்.



அதன் தொடர்ச்சியாக, போராட்ட செயல்திட்டம் - நாள் - நேரம் குறித்து முடிவு செய்திட,

(01) வாவு கே.எஸ்.முஹம்மத் நாஸர் (இந்திய யூனியன் முஸ்லிம் லீக்)
(02) காயல் எஸ்.இ.அமானுல்லாஹ் (மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம்)
(03) பன்னீர் செல்வம் (மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி)
(04) மன்னர் பாதுல் அஸ்ஹப் (இந்திய யூனியன் முஸ்லிம் லீக்)
(05) எம்.எம்.கமால் (இந்திய தேசிய காங்கிரஸ்)

(06) மு.த.ஜெய்னுத்தீன் (திராவிட முன்னேற்றக் கழகம்)
(07) எம்.எச்.எம்.ஸதக்கத்துல்லாஹ் (தேசிய முற்போக்கு திராவிடர் கழகம்)
(08) பண்டாரம் (பாரதீய ஜனதா கட்சி)
(09) அப்துல் அஜீஸ் (சமத்துவ மக்கள் கட்சி)
(10) எஸ்.ஏ.இப்றாஹீம் மக்கீ (இந்திய யூனியன் முஸ்லிம் லீக்)

(11) இ.எம்.சாமி (நகர்மன்ற உறுப்பினர்)
ஆகியோரடங்கிய குழு நியமிக்கப்பட்டது. இக்குழு, மறுநாள் (நவம்பர் 19 புதன்கிழமை) காலை 11.00 மணிக்குக் கூடி, போராட்டம் குறித்து இறுதி முடிவு செய்ய கூட்டம் ஒருமனதாக ஒப்புதலளித்தது.

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தூத்துக்குடி மாவட்ட செய்தி தொடர்பாளர் எஸ்.கே.ஸாலிஹ் நன்றி கூறினார்.

இக்கூட்டத்தில், எஸ்.ஐ.அஷ்ரஃப், எம்.ஜஹாங்கீர், ஏ.கே.முஹம்மத் முகைதீன், எஸ்.எம்.பி.பத்ருல் ஹக், ஏ.ஏ.அபூபக்கர் அஜ்வாத் ஆகிய காயல்பட்டினம் நகர்மன்ற உறுப்பினர்களும்,

இந்திய யூனியன் முஸ்லிம் லீக், திராவிட முன்னேற்றக் கழகம், இந்திய தேசிய காங்கிரஸ், தேசிய முற்போக்கு திராவிடர் கழகம், மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம், சமத்துவ மக்கள் கட்சி, பாரதீய ஜனதா கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆகிய அரசியல் கட்சிகளின் பிரதநிதிகளும்,

அல்ஜாமிஉல் அஸ்ஹர் ஜும்ஆ மஸ்ஜித், ஆறாம்பள்ளி, காயல் இரத்த தானக் கழகம், இத்திஹாதுல் இக்வானில் முஸ்லிமீன் (ஐ.ஐ.எம்.), ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த், அரிமா சங்கம், இளைஞர் ஐக்கிய முன்னணி, காயிதேமில்லத் இளைஞர் சமூக அமைப்பு ஆகிய பொதுநல அமைப்புகளின் பிரதிநிதிகளும் கலந்துகொண்டனர்.





சிறப்புக் குழுக் கூட்டம்:

அதன் தொடர்ச்சியாக, இன்று (நவம்பர் 19 புதன்கிழமை) காலை 11.00 மணியளவில், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் காயல்பட்டினம் நகர கிளை அலுவலகத்தில், அதன் நகர தலைவர் வாவு கே.எஸ்.முஹம்மத் நாஸர் தலைமையில் நடைபெற்ற சிறப்புக் குழு கலந்தாலோசனைக் கூட்டத்தில், குழுவினர் 11 பேரும் கலந்துகொண்டனர்.





இக்கூட்டத்தின் நிறைவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:-

தீர்மானம் 1 - நகராட்சிக்குக் கோரிக்கை:

மழைக்காலங்களின்போது, தேங்கும் மழை நீர் வழிந்தோட முறையான வடிகால்கள் இல்லாத காரணத்தால், காயல்பட்டினம் நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் பொதுமக்கள் பெரும் துன்பத்திற்கு உள்ளாகின்றனர்.

தற்போது தொடர்ச்சியாக பெய்து வரும் வடகிழக்குப் பருவமழை காரணமாக, காயல்பட்டினம் நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் மழை நீர் பெருமளவில் தேங்கி, நகர மக்களின் இயல்பு வாழ்க்கையைப் பெரிதும் பாதித்துள்ளதோடு, சாலைப் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டுள்ளது.

இந்த அவல நிலையைப் போக்கிட நகராட்சி இதுவரை எடுத்துள்ள நடவடிக்கைகள் போதுமானதாக இல்லை என இக்கூட்டம் கருதுகிறது. எனவே, இது விஷயத்தில் நகராட்சி அதிகாரிகளும், உள்ளாட்சி மக்கள் பிரதிநிதிகளும் இன்னும் அதிக கவனம் செலுத்தி, தேங்கியுள்ள மழை நீரை உடனடியாக அகற்றிடவும், இனியும் தேங்காவண்ணம் மேலதிக நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் இக்கூட்டம் கேட்டுக்கொள்கிறது.

இக்குறையைப் போக்கிட வழிவகைகளைக் கண்டறியவும், பின்னர் நிரந்தரத் தீர்வு காண அரசை வலியுறுத்தவும் நகராட்சி மன்றம் ஆவன செய்ய வேண்டும் என இக்கூட்டம் வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறது.

தீர்மானம் 2 - போர்க்கால நடவடிக்கை:

தொடராகப் பெய்து வரும் நடப்பு வடகிழக்குப் பருவமழை காரணமாக காயல்பட்டினம் நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் தேங்கியுள்ள மழை நீரில் உருவாகும் கிருமிகளால் நகரில் பல்வேறு தொற்றுநோய்கள் பரவி, குழந்தைகள் முதல் முதியோர் வரை அனைவரையும் பாதித்து வருகிறது.

இந்த நோய்க்கிருமிகளை அழிக்க, தேங்கிய மழை நீரில் கொசு ஒழிப்பு மருந்து தெளித்தல், ப்ளீச்சிங் பவுடர் தூவுதல், கொசு விரட்டும் புகையடித்தல் ஆகிய பணிகள் தற்போது நகராட்சியால் மேற்கொள்ளப்பட்டாலும், அவை போதுமானதாக இல்லை.

நகரின் பரப்பளவு, மொத்த மக்கள் தொகை ஆகியவற்றைக் கருத்திற்கொண்டு, இன்னும் அதிக பணியாளர்களைப் பயன்படுத்தி, தேவையான கருவிகளை வாங்கி, மேற்படி பணிகளை நகரின் அனைத்துப் பகுதிகளிலும் திருப்திகரமாகச் செய்திட நகராட்சியை இக்கூட்டம் வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறது.

தீர்மானம் 3 - கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்:

காயல்பட்டினத்தில் பெய்து வரும் தொடர்மழையால் உருவாகியுள்ள இடையூறுகளை போர்க்கால அடிப்படையில் நீக்கிடவும், மழையினால் உருவாகும் பாதிப்புகளை நிரந்தரமாக நீக்கிட தொலைநோக்குத் திட்டங்களை நடைமுறைப்படுத்திட காயல்பட்டினம் நகராட்சியை வலியுறுத்தியும், இது விஷயத்தில் தமிழக அரசு அதிகாரிகளின் கவனத்தை ஈர்க்கவும், எதிர்வரும் 22.11.2014 சனிக்கிழமை காலை 11.00 மணியளவில், காயல்பட்டினம் வள்ளல் சீதக்காதி திடலில், கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தைத் துவக்கமாக நடத்திட இக்கூட்டம் தீர்மானிக்கிறது.

இப்போராட்டத்திற்குப் பின்னரும் இவ்விஷயத்தில் நடவடிக்கை மேற்கொள்ளப்படாவிட்டால், போராட்டத்தை இன்னும் தீவிரப்படுத்தவும் முடிவு செய்யப்படுகிறது.


இவ்வாறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. நண்பகல் 12.00 மணியளவில் கூட்டம் நிறைவுற்றது.


இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தகவல் உதவி:
S.A.இப்றாஹீம் மக்கீ


இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தொடர்பான முந்தைய செய்தியைக் காண இங்கே சொடுக்குக!


Previous News ItemNext News Item
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. Re:...
posted by K.D.N.MOHAMED LEBBAI (RIYADH) [20 November 2014]
IP: 77.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 38189

அஸ்ஸலாமு அலைக்கும்

நல்லதோர் தீர்மானம் ....இந்த போராட்டத்தால் நம் ஊர் மக்கள் நலன் மீது நம் நகர் மன்றம் நல்லதோர் செயல் திட்டங்களை வகுக்கட்டும் ......

இந்த போராட்டத்தால் நம் நகராச்சி கண் விழிக்குமா ....என்று பார்ப்போம் ........... பொறுத்தோம் ...இன்னும் நாம் பொருத்து இருந்து பார்ப்போம் .....

வஸ்ஸலாம்

K.D.N.MOHAMED LEBBAI
RIYADH


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
2. சிவபூஜையில் கரடிக்கு என்ன வேலை?
posted by Hameed Rifai (Jeddah) [20 November 2014]
IP: 79.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 38198

கேட்காமல் இருக்கவும் முடியவில்லை. கேட்டால் எனக்கும் ஒரு அடையாள அட்டை வழங்கப்படும். அதைப்பற்றி எனக்குக் கவலையும் இல்லை. தாய்ச்சபையின் தங்கங்களுக்கு எனது கேள்விகள் சில:-

(1) இக்கூட்டம் நடக்கப்போவது தொடர்பான செய்தியில் (செய்தி எண் 14879) அனைத்து அரசியல் கட்சிகள், ஜமாஅத்துகள், பொதுநல அமைப்புகளின் கலந்தாலோசனைக் கூட்டம் என்றுதானே குறிப்பிடப்பட்டிருந்தது?

நகர்மன்றத்தின் மக்கள் நல நடவடிக்கைகளுக்கு குறுகிய நோக்கத்துடன் முட்டுக்கட்டையாக இருந்து வரும் உறுப்பினர்கள் அனைவரும் அணி சேர்ந்து, வந்துள்ளார்களே? பிரச்சினைக்குரியவர்கள் அழைக்கப்பட்டதன் மர்மம் என்ன? அவர்களைக் கொண்டு பிரச்சினை இல்லை என்று கருதினால், அச்செய்தியில் நகர்மன்ற உறுப்பினர்களும் இணைந்து நடத்தும் கூட்டம் என்று குறிப்பிட்டிருக்கலாமே? ஏன் செய்யவில்லை??

(2) ஒருவேளை அவர்களிடம் கருத்துக் கேட்பதற்காக தாங்கள் அழைத்திருக்கலாம். அப்படியானால் நகர்மன்றத் தலைவரையும் அழைத்திருக்க வேண்டுமே? அழைக்கவில்லையா அல்லது அழைத்தும் அவர்கள் வரவில்லையா? அழைக்கப்படவில்லை என்றே நான் விசாரித்து அறிந்துள்ளேன்.

(3) தரமற்ற சாலைகளைப் போட்டு, அதிகாரிகளால் பணப்பிடித்தம் செய்யப்பட்ட ஒப்பந்தக்காரருக்கு மீண்டும் மீண்டும் நகர்மன்றக் கூட்டத்தில் ஒப்பந்தப்புள்ளி வழங்கப்படுவதைக் கண்டித்து இக்கூட்டத்தில் பேசியிருந்திருக்க வேண்டும்.

ஆக்கிரமிப்புகளை அகற்ற நகர்மன்றக் கூட்டத்தில் தீர்மானம் போடப்படாததைக் கண்டித்திருக்க வேண்டும்.

இதையெல்லாம் செய்வதை விட்டுவிட்டு, கூட்டம் துவங்கியது முதல், முடியும் வரை பேசிய அனைவரும் (ஓரிருவர் தவிர) தலைவி எதிர்ப்பு புராணம் பாடியதிலிருந்தே வெளிப்பட்டுவிட்டதே இக்கூட்டத்தின் உண்மை நோக்கம்?

நகராட்சியைச் சுற்றி நடக்கும் நாடகத்தின் ஒரு பகுதிதானே இங்கேயும் அரங்கேறியிருக்கிறது?

(4) நகர்மன்றத் தலைவராகட்டும் அல்லது உறுப்பினர்களாகட்டும்! ஒருவரைப் பற்றிக் குறை சொல்வதற்கு முன், அவரிடம் விளக்கம் கேட்க வேண்டும் என்பதுதானே முறை? அதை ஏன் செய்யவில்லை?

(5) அண்மையில், நமதூரில் நடைபெற்ற மிகப்பெரிய பதட்டச் சூழ்நிலைக்குக் காரணமாகக் கருதப்பட்டவரும் கூட அங்கு வந்ததன் மர்மம் என்ன? எதிரிக்கு எதிரி நண்பன் என்பதாலா?

(6) தலைவியைப் பிடிக்காத உறுப்பினர்களோ அல்லது உறுப்பினரைப் பிடிக்காத தலைவியோ வேறு எங்கேனும் பேசிக்கொள்ளட்டும். அவர்களுக்கு தாய்ச்சபை நடத்திய கூட்டத்தில் களம் அமைத்துக் கொடுத்ததன் மர்மம் என்ன? கண்டிப்பாக, காயிதேமில்லத், சிராஜுல் மில்லத், முனீருல் மில்லத் ஆகியோரை திருப்திப்படுத்தும் காரியமாக இது இருக்க வாய்ப்பில்லை. அப்படியானால், யாரை திருப்திப்படுத்த?

(7) 18ஆம் தேதி நடைபெற்ற கூட்டத்தின் நிறைவில் அமைக்கப்பட்ட சிறப்புக் குழுவிலும், நகர்மன்ற உறுப்பினர் ஒருவர் இடம்பெற்றுள்ளாரே? “நகராட்சியைக் கண்டித்து நடத்தும் போராட்டத்திற்கான சிறப்புக் குழுவில் நகர்மன்ற உறுப்பினர்!!!” வேடிக்கையாக உள்ளதே? தாய்ச்சபையின் விளக்கம் என்ன?

(8) காயல்பட்டினத்தில் செயல்படும் சமுதாய இயக்கங்களில் பெருவாரியான மக்களின் ஆதரவைப் பெறத் தகுதியான அமைப்பாக இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கை நான் பார்க்கிறேன். அந்தத் தகுதியைத் தக்கவைத்துக்கொள்ளும் ஆசை அதன் நிர்வாகிகளுக்கு உள்ளதா, இல்லையா?

பொறுப்பானவர்கள் விளக்கமளித்தால் நன்றாக இருக்கும்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
3. Re:...தண்ணீரும் தண்ணியும் ..
posted by mackie noohuthmbi (kayalpaattinam) [21 November 2014]
IP: 180.*.*.* India | Comment Reference Number: 38201

தமிழகத்தில் எல்லா ஊர்களிலும் இந்த அடை மழையால் ஒரு அசாதாரண நிலை ஏற்பட்டுள்ளது. இதற்கு காயல்பட்டினமும் விதி விலக்கல்ல . நாடு தண்ணீரில் மிதக்கும் இதே வேளை நாட்டு மக்களில் பெரும்பாலோர் "தண்ணியில்": மிதக்கிறார்கள்.மதுக் கடைகளிலும் திரை அரங்குகளிலும் கூட்டம் குறையவில்லை. அது வேதனையாக இருக்கிறது.

இந்த சந்தர்ப்பத்தில் ஆர்ப்பாட்டம் போராட்டம் என்று தங்கள் குரல்களை எதிர்ப்புக்களை வெளிப்படுத்துவதை விட, நகர்மன்ற தலைவர், நகரமன்ற உறுப்பினர்கள், அனைத்து ஜமாத்தினர்கள். அனைத்துக் கட்சியினர் எல்லோரும் சேர்ந்து ஒரு கூட்டம் கூடி இந்த பேரிடரை சமாளிக்க ஒன்று கூடி ஒரு முடிவெடுத்தால் மக்களுக்கு அது பேருதவியாக இருக்கும்.

மோசமான கால நிலை காற்றழுத்த மண்டலம் - இறைவனின் கோபப் பார்வைக்கு நாம் ஆளாகி இருக்கிறோமோ என்று நினைத்து அல்லாஹ்விடம் மன்னிப்பு கேட்போம். அவனிடம் கோரிக்கை வைப்போம். நமது உயர்த்திய கரங்களை அவன் வெறுமையாக திருப்பி அனுப்ப மாட்டான். இதுதான் நபிகள் நாயகம் நமக்கு கற்று தந்த மழைகால அரசியல்.

இந்த விஷயத்தில் நகர்மன்ற தலைவி அவர்களே உடனடியாக ஒரு பொதுக் கூட்டத்துக்கு அழைப்பு விடுத்து நிலைமையை பரிசீலித்து ஆக்க பூர்வமான முடிவுகளை மேற்கொள்வது நல்லது. வேகம் தேவைதான், அதற்காக விவேகத்தை பின் தள்ளிப் போடுவது ஏற்புடையது அல்ல.

பெரியவர்கள், ஊர் நலனில் உண்மையான அக்கறை உள்ளவர்கள் இப்போது போராட்டத்தை நடத்துவதை விட மக்களுக்கு தேவையான அறிவுரைகளை வழங்கி இந்த ஒரு அசாதாரண நிலையை எப்படி சமாளிப்பது என்று ஆலோசனை கூறினால் நல்லது. நமது மக்கள்தானே கஷ்டப்பட்டுகிறார்கள். உதவிக் கரம் நீட்டுவதர்கான வழி வகைகளை ஆராயுங்கள்.

நீரோட்டம் நிறைந்து நிற்கும் இந்த சூழலில் போராட்டம் அவசியம்தானா?

இந்த நேரத்தில் மழையால் பாதிக்கப்பட்டு நிற்பவர்களின் விழி நீரை துடைக்க உதவாது என்பது அடியேனின் தாழ்மையான கருத்து.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
4. Re:...
posted by Zubair Rahman-AB. (Doha-Qatar) [21 November 2014]
IP: 176.*.*.* Qatar | Comment Reference Number: 38203

வெறுமனே போராட்டம், ஆர்ப்பாட்டம் என்று நேரத்தைப்போக்காமல் அனைத்து அமைப்பினரும் தங்களின் "செயல் வீரர்களை" களப்பணியாற்ற களத்தில் இறக்குங்கள். ஒவ்வொருவருக்கும் கடமை உள்ளது, வெறுமனே நிர்வாகத்தை மட்டும் குறை சொல்லிக் கொண்டிருக்காமல். அனைத்து அமைப்பிற்குமே இதில் பொறுப்பு உள்ளது என்பதனை நினைவில் கொள்ளவும்.

மழைக்காலம் தொடங்க ஆரம்பித்த உடனேயே நீர் வடிகால் ஆக்கிரமிப்புகளையும், உடைப்புகளையும் சரி செய்தாலே பகுதி அளவு பிரச்சினை தீர்ந்து விடும். வல்லோனின் நாட்டம் அவனை தவிர்த்து இயற்கையின் சீற்றத்தை யாரால் நிறத்த முடியும்.

இன்னொன்று கூட செய்யலாம் "இயற்கையின் சீற்றத்திற்கு தடை போட" ஒரு கவன ஈர்ப்பு தீர்மானமும், ஆர்ப்பாட்டமும் நடத்தி நிர்வாகத்தின் கவனத்தை ஈர்க்கலாம். யோசியுங்கள் அனைத்து ?????? கட்சியினரும் சேர்ந்து.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
5. நகராட்சிக்கு சொந்தமான நீர் ஓடைகளை / நிலங்களை ஆட்டையை போட்டு ஆக்கிரமித்து இருக்கும் நிலங்களை மீட்க வலியுறுத்தி நகரமன்ற உறுப்பினர்களிடம் விவாதிக்கப்பட்டதா..? இந்த உறுப்பினர்கள் தீர்மானம் கொண்டு வருவார்களா...?
posted by தமிழன் முத்து இஸ்மாயில் (காயல்பட்டினம்.) [21 November 2014]
IP: 180.*.*.* India | Comment Reference Number: 38205

இக்கூட்டம் நடக்கப்போவது தொடர்பான செய்தியில் அனைத்து அரசியல் கட்சிகள், ஜமாஅத்துகள், பொதுநல அமைப்புகள், சங்கங்களின் கலந்தாலோசனைக் கூட்டம் என்றுதானே குறிப்பிடப்பட்டிருந்தது.. ? நகரின் ஆம் ஆத்மி கட்சிக்கு அழைப்பில்லை என்பது குறிப்பிடத்தக்கது..! (தூத்துக்குடி ஆம் ஆத்மி கட்சியின் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ஜனாப் அஹமத் சாகிப் அவர்கள் அழைப்பு வரவில்லை என தெரிவித்தார்)

இக்கூட்டத்திற்கு நகர்மன்ற தலைவரை அழைக்கபடாத காரனதாம் என்ன...? அதற்க்கான உண்மை நோக்கம் தான் என்ன ? இக்கூட்டத்தில் தலைவி எதிர்ப்பு புராணம் பாடியதிலிருந்தே வெளிப்பட்டுவிட்டதே தாய் சபையின் உள் நோக்கம் என்னவென்று..!

M K T அப்பா அவர்களின் பதவி காலத்தில் ஒதுக்கப்பட்ட நகராட்சிக்கு சொந்தமான நீர் ஓடை நிலத்தில் தனி நபர்கள் ஆக்கிரமிப்புகளை அகற்றும்படி நகர்மன்றக் கூட்டத்தில் தீர்மானம் கொண்டு வாருங்கள் என்று இக்கூட்டத்திற்கு வந்திருக்கும் நகர் மன்ற உறுப்பினர்களிடம் கோரிக்கை வைத்தீர்களா..? முக்கியமான இதையெல்லாம் செய்வதை விட்டுவிட்டு சும்மா சும்மா நகர் மன்ற தலைவிக்கு எதிர்ப்பு புராணம் பாடுவதின் மூலம் எந்த கழிவு நீரும் / மழைநீரும் சரியாகபோவதில்லை...!

கண்டிப்பாக, காயிதேமில்லத், சிராஜுல் மில்லத், முனீருல் மில்லத் ஆகியோரின் கனவுகளை / எண்ணங்களை திருப்திப்படுத்தும் காரியமாக இக்கூட்டம் நடத்தப்பட்டதாக என்னால் உணரமுடியவில்லை..!

யாரையோ ஒருவரை திருப்திபடுத்தும் நோக்கில் இக்கூட்டம் நடதப்பட்டதாகவே உணரமுடிகின்றது...!

நகராட்சிக்கு சொந்தமான நீர் ஓடைகளை / நிலங்களை ஆட்டையை போட்டு ஆக்கிரமித்து இருக்கும் நிலங்களை மீட்க வலியுறுத்தி நகரமன்ற உறுப்பினர்களிடம் விவாதிக்கப்பட்டதா..? இந்த உறுப்பினர்கள் தீர்மானம் கொண்டு வருவார்களா...? தாய் சபை இதற்க்கு ஒரு குழு அமைக்க முன் வருமா..? முன் வாருங்கள் அணைத்து ஜமாத் / பொதுநல அமைப்புக்கள் சேர்ந்து தீர்வு காண்போம்.. முன் வாருங்கள் பார்ப்போம்..? உங்களை யார் தடுக்கிறார்கள்..? அவர்களை வெளிப்படையாக கூறமுடியுமா..?

மேற்குறிப்பிட்டு இருக்கும் கருத்துக்களுக்கு விளக்கம் அளித்தால் தாய் சபையின் நடுநிலை என்னவென்று நகர் மக்கள் புரிந்து கொள்வார்கள்...!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
6. Re:...
posted by எஸ்.ஏ.இப்ராஹிம் மக்கி (காயல்பட்டணம்) [21 November 2014]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 38206

இச்செய்தியில் கருத்து பதிந்தவர்களுக்கான விளக்கம்.

22-11-2014 சனிக்கிழமை அன்று நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டுள்ள ஆர்ப்பாட்டம் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் என்றுதான் அறிவிக்கப்பட்டுள்ளது. எவரையும் கண்டிக்கும் போராட்டம் என்று அறிவிக்கப்படவில்லை.

இதுபோன்ற ஆர்ப்பாட்டங்களுக்கு முன்னர் நடைபெறும் ஆலோசனைக் கூடங்களில் பலரும் தங்களுக்குள்ள கருத்துகளை வெளிப்படுத்துவார்கள். அது தவிர்க்க முடியாதவை. அவ்விசயத்தில் நாம் யாருக்கும் தடைபோட முடியாது. ஆனால் கூட்டத்தின் முடிவில் நிறைவேற்றப்படும் தீர்மானம் எவ்வாறு அமைகிறது என்பதைதான் பார்க்கவேண்டும்.

நகராட்சியும் வருவாய் துறை உள்ளிட்ட அரசு துறைகளும் இன்னும் அதிக கவனம் செலுத்தி வெள்ள நிவாரண பணிகளில் ஈடுபட வேண்டும் என்பதும் தொலைநோக்கு திட்டம் வகுக்கப்பட வேண்டும் என்பதும், அதற்கு அத்துறைகளின் கவனத்தை ஈர்க்கவேண்டும் என்பது மட்டுமே இந்த ஆர்[ப்பாட்டத்தின் நோக்கமாகும்.

நகரமன்றத் தலைவியை இதற்கு முன்னர் பல்வேறு கூட்டங்களுக்கு நாங்கள் அழைத்தும் அலட்சிய படுத்தியே வந்துள்ளார். மேலும் முஸ்லிம் லீக் சார்பில் குடிநீர் சம்பந்தமாக நடைபெற்ற ஒரு ஆர்ப்பாட்டத்தின் போது நிகழ்விடத்திற்க்கே வந்து ஆர்ப்பாட்டத்தை சீர்குலைக்கும் முயற்சியாக விளக்கம் அளிக்கும் பிரசுரம் என்ற பெயரில் அவ்விடத்தில் வினியோகித்து பிரச்சனையை உருவாக்கினார். ஆக எங்களை தொடர்ந்து அலட்சிய படுத்துவதால் தான் இந்த கூட்டத்தில் அவர் அழைக்கப்படவில்லை.

வெள்ள நிவாரன பணியில் நகராட்சின் நிலைகுறித்து அறிந்து கொள்வதற்காக நகர்மன்ற உறுப்பினர்களை அழைத்தோம் அவ்வளவுதான் அதற்கு வேறு எந்த உள்நோக்கமும் இல்லை.

அண்மையில் நமதூரில் ஏற்பட்ட பதட்டமான சூழ்நிலையில் சம்பந்தப்பட்ட இரு சாராரும் உட்கார்ந்து பேசி அமைதியான சூழ்நிலை உருவாகி சுமூகமான முடிவு கண்ட பிறகு அதை மறந்து விடுவதுதான் விவேகமானதாகும். அதை விடுத்து அவரை அழைக்கலாமா ? இவரை அழைக்கலாமா ? என்று கேட்பது அறிவுடைமை ஆகாது ! வேண்டுமானல் பிரச்சனையை திசை திருப்பவும், சிலரை வம்புக்கு இழுத்து குளிர்காயவும் உதவுமே தவிர வேறு எதற்க்கும் பயன்படாது.

காயிதே மில்லத், சிராஜுல் மில்லத் போன்ற தலைவர்களையும் இழுத்து தேவையில்லாமல் கிண்டல் செய்து கருத்துக்களை எழுதுவது பண்பல்ல. யாரையும் திருப்தி படுத்த ஆலோசனை கூட்டமோ ஆர்ப்பாட்டமோ நடைபெறவில்லை. இறைவனின் திருப்பொருத்தம் ஒன்றை நாடியே இவைகளை நாங்கள் செய்கிறோம். இன்ஷா அல்லாஹ் இனியும் செய்வோம்.

மேலும் நிவாரண பணிகளில் இறங்குவதுதான் புத்திசாலித்தனம் என்பன போன்ற கருத்துக்களை பதிவோருக்கு எங்களது விளக்கம் என்னவென்றால். நிவரான பணிகளை மேலும் முடிக்கி விடத்தான் இந்த ஆர்ப்பாட்டம் பொது கூட்டம் போடலாம் என்று கருத்து தெரிவிப்பவர். ஆர்ப்பாட்டம் நடத்தி கவண ஈர்ப்பு நடைவடிக்கை மேற்கொண்டால் எப்படி தவறு காண்கிறார் என்று புரியவில்லை.

ஆலோசனைக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானங்களை இவர்கள் ஆழமாக படித்தால் எங்கள் நோக்கத்தை புரிந்து கொள்வார்கள்.

இவண்,
எஸ்.ஏ.இப்ராஹிம் மக்கி,
மாநில துணைச் செயலாளர்,
இந்திய யூனியன் முஸ்லிம் லீக்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
7. உடனடி நிவாரணம் தேவை இப்போது!
posted by முஹம்மது ஆதம் சுல்தான்! (yanbu) [21 November 2014]
IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 38207

நான் என்றும் மதிக்கும் அன்பு சகோதரர் மக்கி நூஹுத்தம்பி காக்காவின் கருத்தோடும், அவர்களின் யோசனை யோடும் அணிசேர்கிறேன்! குற்றவாளியை கூண்டிலேற்றி குதுகூகுலமடையக்கூடிய நேரமல்ல இது.

ஊர்முழுதும் வெள்ளத்தில் மிதக்கிறது உடனடியாக ஒட்டுமொத்தமாக போர்காலாடிப்படையில் புனர்பணியில் களம் இறங்கி முதல்நிலை உதவிகளை எந்த கட்சி என்றோ ,எந்த தலைமை என்றோ மாட்ச்சரியம் பாராமல் தற்பாது தாங்கள் செய்வதுதான் தங்கள் இயக்கத்தின் நற்பெயருக்கு மேலும் ஒரு புண்ணியச்செயல் மைல்கல் நன்மையாகும்!

இப் புண்ணிய பணியை நீங்கள் முன்னின்று நடுத்துவீர்கலேயானால் இந்த ஊரே உங்கள் பின்னால் நின்று உக்களுக்கு ஒத்தாசையாக வர காத்திருக்கிறது!

இதை விட்டுவிட்டு கொழுந்துவிட்டு எரிந்து கொண்டிருக்கின்ற குடிசையை கொழுத்த யார் தீக்குச்சி கொடுத்தார்கள் என்று ஆராய்ச்சியில் இருங்குவதைவிட எறியும் அந்த வீட்டை உடனே அனைத்துவிட்டு ஆர, அமர அனைத்தையும் விசாரிப்பது துதான் விவேகமான செயல் என்பது விளையாடும் சிறுவர்களுக்கு கூட தெரியும் உண்மையாகும் !

அல்லாஹ் அனைத்தும் அறிந்தவன்,
அன்புடன்,
முஹம்மது ஆதம் சுல்தான்!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
8. கிண்டல் செய்வது எனது நோக்கமல்ல! ஆதங்கத்தையே வெளிப்படுத்துகிறேன்!!
posted by Hameed Rifai (Jeddah (ksa)) [21 November 2014]
IP: 5.*.*.* | Comment Reference Number: 38208

பொதுவாழ்வில், விமர்சனங்களுக்கு முகம் கொடுத்து விளக்கமளிப்பதே வரவேற்கத்தக்க பண்பு. அந்த அடிப்படையில், சகோதரர் இப்றாஹிம் மக்கி அவர்களின் விளக்கத்திற்கு முதலில் எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

“இது யாரையும் கண்டிக்கும் நோக்குடன் நடத்தப்படும் போராட்டமல்ல; கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்தான்” என்ற விளக்கத்தை அறிந்து மகிழ்ச்சி.

கூட்டத்தில் பலரும் பலவற்றைப் பேசத்தான் செய்வார்கள், எல்லாவற்றுக்கும் தடை போட முடியாது என்பது இந்தக் கூட்டத்தில் பேசப்பட்டவற்றுக்குப் பொருந்துவதாக இல்லை. பேசியவர்கள் மற்ற கட்சியினர் மட்டுமல்ல, இந்தக் கூட்டத்தை ஒருங்கிணைத்த தாய்ச்சபையின் நிர்வாகிகளும்தான் என்பதை அறிந்தும் நான் மறைத்தே கருத்துப்பதிந்திருந்தேன். தற்போது தாங்கள் வெளிப்படையாகப் பேசியுள்ளதால் நானும் வெளிப்படையாகக் குறிப்பிட வேண்டிய நிலை ஏற்பட்டுவிட்டது.

நகர்மன்றத் தலைவி அவர்களை பல்வேறு கூட்டங்களுக்கு அழைத்தும் அவர்கள் அலட்சியப்படுத்தியதாகக் கூறியிருக்கிறீர்கள். இப்படி பொத்தாம்பொதுவாகக் கூறுவதை விட, இன்னின்ன கூட்டங்களுக்கு, இன்னின்னார் சென்று அழைத்தோம் என்று பட்டியலிட்டால், விசாரித்து விளக்கமளிக்கத் தோதுவாக இருக்கும்.

நகர் நன்மைக்காக அவர்கள் பொதுநல அமைப்புகளையும், ஜமாஅத்துகளையும் பலமுறை அழைத்தும், உள்நோக்க அரசியலில் சிக்காத சில ஜமாஅத் நிர்வாகிகளும், பொதுநல அமைப்பினருமே கலந்துகொண்டுள்ளதை நேரில் பார்த்தறிந்துள்ளேன். அப்படியிருக்க, அவர்கள் மறுத்திருப்பார்கள் என்பதை என்னால் நம்ப இயலவில்லை. இருந்தாலும் தாங்கள் விரும்பினால், விளக்கம் தந்தால் ஏற்க தயாராகவே உள்ளேன்.

உங்கள் கூற்றுப்படி அவர்கள் முன்னர் சில முறை மறுத்தார்கள் என்பதற்காக மொத்தமாகப் புறக்கணிக்க இயலாது. காரணம் அவர் நகர்மன்றத் தலைவர். இதை பாரம்பரியமிக்க கட்சியினருக்கு நான் சொல்லித் தெரிய வேண்டிய நிலையில்லை.

சரி, அவர்களைத்தான் சந்திக்க விருப்பமில்லை. ஆணையர் எங்கே சென்றுவிட்டார்? அவரும் நீங்கள் அழைத்து அலட்சியப்படுத்தினாரா? இல்லையே? அவரிடம் விளக்கம் பெற்றிருக்கலாமே?

செய்ய வேண்டியவற்றைச் செய்யவில்லை. உறுப்பினர் சாமி அவர்களைப் போராட்ட ஏற்பாட்டுக் குழுவிலும் இணைத்து செய்யக்கூடாததையெல்லாம் செய்துள்ளீர்கள் என்பதே எனது ஆதங்கம்.

நன்றாகப் புரிந்துகொள்ள வேண்டும். நான் தாய்ச்சபையைக் குறைகூறவில்லை. அது மல்லாக்கப் படுத்துக் கொண்டு எச்சில் துப்புவதற்கு நிகரானது என்பதை நான் உணர்வேன். அதன் நிர்வாகிகள் என்ற போர்வையில் சிலர் செய்யும் நியாயத்திற்குப் புறம்பான வேலைகளைத்தான் ஏற்க முடியவில்லை. அவ்வாறான ஒரு முயற்சி நடைபெற்றபோது, தன் தரப்பு நியாயத்தை உணர்த்தவே நகர்மன்றத் தலைவி அவர்கள் பொதுமக்களுக்கு விளக்கமளித்து பிரசுரம் அளித்துள்ளதை நான் அறிவேன். அப்பிரச்சினைக்குள் இன்னும் ஆழமாகச் செல்ல விரும்பவில்லை.

காயிதேமில்லத், சிராஜுல் மில்லத், முனீருல் மில்லத் ஆகியோர் மீது மதிப்பு கொண்டிருந்ததாலேயே அதைக் குறிப்பிட்டேனே தவிர கிண்டல் செய்வது என் நோக்கமல்ல. ஆபாக்களை (முன்னோர்களை) கிண்டல் செய்வது எனது கொள்கையும் அல்ல.

இத்தனையையும் தாண்டி, ஆலோசனைக் கூட்ட தீர்மானங்களைப் படிக்குமாறும், அதன்படியே போராட்டம் நடத்தவுள்ளதாகவும் கூறியிருக்கிறீர்கள்.

நான் ஏற்கனவே சொன்னதும், இப்போது சொல்ல விரும்புவதும்:

இது போராட்டம் நடத்துவதற்கான நேரமல்ல. களப்பணியாற்றுவதற்கான நேரம் மட்டுமே. அதை ஓரளவுக்கு செய்யத்தான் செய்கிறீர்கள். ஊரில் இருந்தால் நானும் உங்களோடு இணைந்து செய்திருப்பேன். அல்லாஹ் அந்த பாக்கியத்தை எனக்கு வழங்கவில்லை.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
9. இது வரை நகராட்சி சார்பில் நிவாரண நடவடிக்கைகள் என்ன?
posted by சாளை.அப்துல் ரஸ்ஸாக் லுக்மான் (அபூதாபி) [21 November 2014]
IP: 92.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 38211

தொடர் மழை காரணமாக ஊரில் எங்கு பார்த்தாலும் வெள்ளம். பல குடியிருப்பு பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்து மக்கள் அவதிக்குள்ளாகியுள்ளனர். இந்த நேரத்தில் முஸ்லிம் லீக் சார்பில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் அறிவித்துள்ளனர். இந்த சூழ்நிலை காரணமாக நடந்த ஆலோசனை கூட்டத்தில் நடைபெற்ற நடப்புகளை சில சகோதரர்கள் கண்டித்து கருத்து பதிந்தனர். அதற்கு முஸ்லிம் லீக் சார்பில் பதில் கொடுத்துள்ளனர்.

இப்போதைய தேவை, மக்களுக்கு நிவாரணம் கிடைக்க வேண்டும். நகராட்சி எடுக்கும் நடவடிக்கைகளுக்கு பொதுமக்கள் ஒத்தாசை செய்ய முடியுமே தவிர, நிவாரணப் பணிகளை எடுக்க வேண்டியது, நகராட்சியின் வேலை தான்.

ஒருவர் மீது மற்றவர் குறை கூறுவது தொடர்கதை தான்.

2011-ல் இதே போன்ற சூழல் ஏற்பட்ட போது நகராட்சி சார்பில் நடவிக்கை எடுத்தனர். தலைவி, அனைத்து பகுதிகளுக்கும் சென்று நிவாரண பணிகளை முடிக்கி விட்டார்.

http://kayalpatnam.com/shownews.asp?id=7453

இந்த வருடம் அதிக மழை பெய்திருக்கலாம். ஆனால், வெளிநாட்டில் வசிக்கும் என்னைப் போன்றவர்கள் தெரிந்து கொள்ள விரும்புவது, இத்தனை நாட்களாக நகராட்சி செய்த நடவடிக்கைகள் தான் என்ன? விபரம் தெரிந்தவர்கள் தெரிவிக்கவும்.

-சாளை அப்துல் ரஸ்ஸாக்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
10. தலைவியை அழைத்துதான் இருக்க வேண்டும்!
posted by முஹம்மது ஆதம் சுல்தான்! (yanbu) [22 November 2014]
IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 38216

இந்திய முஸ்லிம் லீக் துணைச்செயலாளரின் அறிக்கையின்படி நகரமன்ற தலைவியை நாங்கள் அழைக்கவில்லை என்று கூறியுள்ளார். இதுவரை அவரை அழைத்து அவர் வரவில்லை என்று கூறும் அவர்கள் அதன் விபரத்தை தரவில்லை, இருப்பினும் ஒரு பெரிய இயக்கம் ஊருக்கு பொதுவான இயக்கம் என்று சொல்லும் அமைப்பானது நகர்மன்ற தலைவியை தற்போதுள்ள சூழ்நிலையில் அழைத்துதான் இருக்கவேண்டும்! அதுதான் ஒரு பொது இயக்கத்தின் தார்மீக பெருந்தன்மை நடவடிக்கை ஆகும்!.

நீங்கள் அழைத்து அவர்கள் சரியான காரணமின்றி வரவில்லை என்றால் அதயும் அந்த கூட்டத்திலும் பொதுமக்களிடமும் தெரிவித்திருந்தால் உங்கள் நடுநிலை எண்ணத்தை எவரும் அறிய வாய்ப்பை இருந்திருக்கும்! ஆனால் தங்கள் அமைப்பின் இந்த நடவடிக்கை ஏதோ ஒரு மனநெருடலையும், எதோ ஒரு உள்நோக்கம் இதில் ஒளிந்திருக்கிறதோ என்ற ஐயத்தையும் என்போன்றோர்களுக்கு எழுப்புகிறது.

அல்லாஹ அனைத்தும் அறிந்தவன்!

அன்புடன்
முஹம்மது ஆதம் சுல்தான்!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>

முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்

பிற செய்திகள்

காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
Cathedral Road LKS Gold ParadiseFathima Jewellers
AKM JewellersFaams

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved