Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
12:10:11 PM
ஞாயிறு | 6 அக்டோபர் 2024 | துல்ஹஜ் 1893, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
04:5312:1215:2918:1219:22
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:05Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்08:35
மறைவு18:06மறைவு20:29
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
04:5605:2005:44
உச்சி
12:05
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:2718:5119:15
Go to Homepage
செய்திகள்
Previous News ItemNext News Item
செய்தி எண் (ID #) 15092
#KOTW15092
Increase Font Size Decrease Font Size
வெள்ளி, டிசம்பர் 26, 2014
அந்த ஏழு நாட்கள்! (?!)
செய்திஎஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்)
இந்த பக்கம் 4111 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (7) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 2)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}

ஆண்டுதோறும் டிசம்பர் மாத கடைசி வாரம் விடுமுறைக் காலமாக இருப்பதால், வெளியூர்கள் மற்றும் வெளிநாடுகளில் வசிக்கும் காயலர்கள் அந்நாட்களில் தாயகம் திரும்புவது வழமை. இந்த 7 நாட்களில், ஆண்டுதோறும் குறைந்தது 30 திருமண நிகழ்ச்சிகளும், அதிகபட்சமாக நூற்றுக்கும் மேற்பட்ட திருமண நிகழ்ச்சிகளும் நடத்தப்படுவதுண்டு.

நடப்பு டிசம்பர் மாத கடைசி இரண்டு வாரங்களில், காயல்பட்டினத்தில் 40க்கும் மேற்பட்ட திருமணங்கள் நடைபெறுகிறது. வெளியூர் - வெளிநாடுகளிலிருந்து இத்திருமணங்களுக்காக விடுமுறை எடுத்து வந்திருப்போரும், வழமையான விடுமுறையில் வந்திருப்போரும் நகரில் குவிந்திருப்பதால், நல விசாரணை, அரட்டை, சிற்றுலா, சுற்றுலா என நகரே பரபரப்பாக இயங்கிக் கொண்டிருக்கிறது.

இவை ஒருபுறமிருக்க, இன்று வெள்ளிக்கிழமை ஜும்ஆ தொழுகையின்போது, காயல்பட்டினம் அல்ஜாமிஉஸ் ஸகீர் சிறிய குத்பா பள்ளியில் மக்கள் திரள் அதிகமாக இருந்ததால், உட்பள்ளி, நடுப்பள்ளி, வெளிப்பள்ளி, பக்கப் பகுதிகள், மாடி என அனைத்தும் நிறைந்து, சித்தன் தெரு வீதியிலும் 3 வரிசையில் பொதுமக்கள் நின்று தொழும் நிலை ஏற்பட்டது.







மக்கள் திரளை உணர்ந்தறிந்த பள்ளி நிர்வாகத்தினர், வீதிகளில் தொழும் பொதுமக்களுக்காக பாய்களை விரித்து, ஏற்பாடுகளைச் செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

கள உதவி:
K.M.T.சுலைமான்


ஜும்ஆ தொழுகையில் மக்கள் திரள் தொடர்பான முந்தைய செய்தியைக் காண இங்கே சொடுக்குக!

சிறிய குத்பா பள்ளி தொடர்பான முந்தைய செய்தியைக் காண இங்கே சொடுக்குக!


Previous News ItemNext News Item
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. மாஷா அல்லாஹ்!..
posted by முஹம்மது ஆதம் சுல்தான்! (yanbu) [26 December 2014]
IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 38577

மாஷா அல்லாஹ்! அப்படின்னா முற்றுகை போராட்டத்திற்கு முழுபலம் சேர்ந்தாற்போல் மிகப்பெரிய எழுச்சியைக் காணலாம், அதில் வெற்றியும் பெறலாம் இன்ஷா அல்லாஹ்! அல்லாஹ் அனைத்தும் அறிந்தவன்!

அன்புடன்,
முஹம்மது ஆதம் சுல்தான்!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
2. Re:...
posted by K.D.N.MOHAMED LEBBAI (RIYADH) [27 December 2014]
IP: 94.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 38578

அஸ்ஸலாமு அலைக்கும்

மாஷா அல்லாஹ்....சூப்பர் தலைப்பு ....தலைப்புக்கு தாங்கள் '' பெயர் வைப்பதில் '' பலே கில்லாடி '''' தான் .....

டிஸ்சம்பரில் கீழகரை ஊரில் தான் தொடராக கல்யாணம் வைப்பார்கள் .....இப்போது நமது ஊரிலும் இந்த மாதத்தில் வைப்பது நல்லது தான் .....நம் ஊர் மக்கள் லீவில் ஊர் வருபவர்கள் ...இரு ஊர் கல்யாண '' வைபவத்திலும் '' தோதுவு போல கலந்து கொள்ளலாம் .... வஸ்ஸலாம்

K.D.N.MOHAMED LEBBAI
RIYADH


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
3. Re:...
posted by எஸ்.எ.கே.செய்யது மீரான்,ஜித்தா. (ஜித்தா.) [28 December 2014]
IP: 176.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 38604

நேற்று இன்று நாளை என இந்த வாரம் முழுவதும் மணவிழா காட்சியும் எல்லோர் மனதிலும் மகிழ்ச்சி மழைதான்.

இதில் என்னுடைய பால்ய நண்பர்கள்,பழகிய நட்புகள்,பள்ளித்தோழர்கள் மகன் மகள்களுக்கும் மற்றும் அண்டை அயலார்கள் அவரவர் தம் மக்கள் செல்வங்களுக்கு திருமணம்.

மணவிழா கண்ட ,காணும் மணமக்கள்கள் அனைவருக்கும் வல்லோன் அல்லாஹ் எல்லா நலமும் வளமும் வழங்கி வாழ்வாங்கு வாழ்ந்திட அவனது வற்றாத கருணை மழையை சொரிந்தருள்வானாக ஆமீன்.

அவர்கள் தம்பெற்றோர் உற்றார் உறவினர் மற்றும் ஊரார்கள் அனைவர் மீதும் நல்லருளை பொழிவானாக ஆமீன்.

மணமக்கள் வாழ்க.. வாழ்க..வாழ்கவே..
வளமாய்..நலமாய்
வல்லவன் அல்லாஹ்வினருளால்
வாழ்க.. வாழ்க.. பல்லாண்டு வாழ்கவே..

மனமார்ந்த வாழ்த்துக்கள்.

பாரக்கல்லாஹ் ஆமீன்.

பிரார்த்தித்து மனமுவந்து வாழ்த்தும்
அன்பு நெஞ்சம் எஸ்.எ.கே.செய்யது மீரான்,ஜித்தா.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
4. Re:...திருமணம் எனும் நிகாஹ்,,,
posted by mackie noohuthmbi (kayalpaattinam) [28 December 2014]
IP: 180.*.*.* India | Comment Reference Number: 38605

திருமணம் எனும் நிக்காஹ்....

அட, கவ்ஷிகி சக்ரபூர்த்தி - முன்னா ஷௌகத் அலி நடித்து சமீபத்தில் வெளி வந்த திரைப் படம், அது ஊத்திக்கிரிச்சே ... உங்கள் ஊகம் சரியானதுதான்.

ஆனால் நான் சொல்ல வந்தது நமதூரில் நடக்கும் திருமணம் எனும் நிகாஹ். டிசம்பர் மாதம் என்றால் தமிழகத்தை 2004 ஒரு குலுக்கு குலுக்கிய ஆழி பேரலையும் சுனாமியும்தான் மக்கள் நினைவுக்கு வரும். ஆனால் அன்று கூட மக்கள் அறியாமல் காயல்பட்டினம் ஐக்கிய விளையாட்டு சங்கத்தில் ஒரு திருமண நிகழ்ச்சி அமைதியாக நடந்து கொண்டிருந்தது.

நான் தொலைபேசியில் தொடர்பு கொண்டு ஒரு நண்பரிடம் கேட்டேன், சுனாமியின் தாக்குதல் அதன் தாக்கம் காயபட்டினத்தில் எப்படி உணரப்பட்டது என்று கேட்டேன். சுனாமியா அப்படி என்றால் என்ன, ஒன்றும் தெரியவில்லையே , நான் ஒரு திருமண விழாவில் பிசியாக இருக்கிறேன் பிறகு பேசுங்கள் என்று போனை கட் பண்ணிவிட்டார்.

அப்படித்தான், இந்த ஏழு நாட்கள்.

எந்த மழையின் தாக்கமும் இங்கு தெரியாது. இங்குள்ள திருமணம் எனும் நிக்காஹ் இரு தனி கதைதான்.

வெளியூர்களில் RECEPTION - WEDDING - FEAST இவை மூன்றும் ஒரே நாளில் ஒரே மூச்சில் நடந்து முடிந்து விடும். இங்கு இது 3 நாட்கள் தனி தனியாக நடக்கிறது. இதற்கான பொருளாதார செலவுகள் சொல்லி முடியாது.

மன மேடையில் ஆலிம்கள் மிக அழகாக பேசுவார்கள்... நபி வழி என்பார்கள் -நபிமார்கள் முன்மாதிரி என்பார்கள் - ஆன்றோர்கள் நடை முறை - சான்றோர்கள் சகோதரத்துவ வழிமுறை என்பார்கள். "திருமணத்தில் சிறந்த திருமணம் செலவால் மிக குறைந்த திருமணம்" என்று நபிகள் நாயகம் திரு வசனத்தை அரபியிலும் தமிழிலும் நம் உள்ளத்தில் ஆழ பதிய செய்வார்கள். ஆனால் அந்த வசனம் சொல்லப்படும் இடம் மின் விளக்கு அலங்காரங்களால் பல ஆயிரம் ரூபாய்கள் செலவுகளால் ஜொலித்து நிற்கும். அந்த மேடை மலர்களால் அலங்கரிக்கப் பட்டு ராஜ தர்பாரில் போடப்பட்டிருக்கும் மன்னருக்குரிய சிம்மாசனங்களில் மாப்பிள்ளை வந்து அமர்வார். காலை 9 மணிக்கு திருமணம் என்று அழைப்பிதழில் காணப்படும் ஆனால் 10 மணிக்குத்தான் இஸ்லாமிய பாடல்களுடன் திருமண அரங்கத்துக்குள் மணமகன் நுழைவார். அவரை அழைத்து வருபவர்கள் மேலை நாடுகளில் - அரபு நாடுகளில் - அமீரகங்களில் உயர் பதவிகளில் இருப்பவர்கள். அவர்கள் கைக் கடிகாரத்தை பார்த்துதான் அவர்கள் அலுவலக சுவரில் மாட்டப்பட்டிருக்கும் நாள்காட்டியுடன் இணைந்த மணியை சரி செய்வார்கள். ஆனால் இங்கு வந்தவுடன் அவர்களில் நேரந்தவாறாமை அவர்களிடமிருந்து விடை பெற்றுவிடும்.

நேற்று அழைப்புக்கு வரவிலையே என்று ஒருவர் குறைபட்டுக் கொள்வார் - ஒரு வீட்டுக்கு பொய் திரும்புவதற்கு 120 ரூபாய் செலவாகிறது. நமது வீட்டிலிருந்து மாப்பிள்ளை வீட்டுக்கு 40 ரூபாய் - மாப்பிள்ளை வீட்டிலிருந்து பெண்வீட்டுக்கு போக 40 ரூபாய், நம் வீட்டுக்கு திரும்பி வர 40 ரூபாய். ஒரு திருமண வீட்டுக்கு பொய் வர செலவு.

இப்படி ஒரே நேரத்தில் பல இடங்களில் அழைப்பு என்றால் எவ்வளவு செலவு வரும் என்று கணக்கு பார்த்துக் கொள்ளுங்கள். அடுத்து ஒரே நாளில் திருமணம் - அதற்கு வந்திருப்பவர்களுக்கு பிஸ்கட் ஒரு பக்கெட் குறைந்த செலவு 10 ரூபாய் ஒரு நபருக்கு. ஆயிரம் பேர் வந்தால் 10,000 ரூபாய் அவுட்.

அடுத்து சாப்பாடு ஒரே நாளில் பல இடங்களில் ஒரே நபருக்கு அழைப்பு. இவர் வருகையை கணக்கு பண்ணி சாப்பாடு ஆக்குவார்கள். ஒரு வீட்டில் அதிகம் ஆள் வந்துவிட்டதால் சாப்பாடு தட்டி விட்டது என்பார்கள். ஒரு வீட்டில் ஆட்கள் குறைவாக வந்ததால் சாப்பாடு மிஞ்சி சீரழிந்து விட்டது என்பார்கள். ஒரு சட்டி சாப்பாடு குறைந்த பட்சம் 30,000 அவுட்.

கல்யாணத்துக்கு முந்திய இரவு ஒரு சாப்பாடு. கல்யாண பகல் ஒரு சாப்பாடு. கல்யாணம் முடிந்த இரவு மாப்பிள்ளையின் நண்பர்களுக்கு பெண் வீட்டில் சாப்பாடு. இந்த செலவுகள் கணக்கு தெரியவில்லை.....இப்படியே திருமணம் எனும் நிகாஹ் கதை இன்னும் தொடர்கிறது....

மடிக் கணினி மறைந்து இதயக் க(ணி)னி - i pad - e -pad என்று பல விஷயங்கள் இளைஞர்கள் கைகளில் தவழ்கின்றன. முகநூல், த்விட்டேர் என்று பல இணையத்தளம் பெற்ற புது வரவுகள் இளைஞர்களை பாடை படுத்துகிறது....ஆனால் இந்த திருமணம் எனும் நிகாஹ் அதற்காக செலவிடப்படும் நேரங்கள், பல லட்சக்கணக்கான ரூபாய் செலவுகள், அதற்காக நாம் எடுத்துக் கொள்ளும் சிரமங்கள், ஏற்படும் மன அழுத்தங்கள் மட்டும் கூடிக் கொண்டே போகிறது. இது ஒரு தொடர்கதையாக போய்க் கொண்டிருக்கிறது...

எது நபி வழியில் திருமணம்...திருமணம் எனும் நிக்காஹ்..

.நபிகள் நாயகம் சொல்கிறார்கள்...திருமணத்தில் சிறந்த திருமணம் செலவால் குறைந்ததுதான் .... சிந்திப்போம்.

அந்த ஏழு நாட்கள்......


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
5. Re:...
posted by Mauroof (Dubai) [28 December 2014]
IP: 217.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 38618

அவசியமற்ற செய்தி, பொருத்தமற்ற அதன் தலைப்பு மற்றும் தேவையற்ற சில கருத்துப்பதிவு(கள்).


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
6. Re:...
posted by M.S.ABDULAZEEZ (Gz China) [28 December 2014]
IP: 14.*.*.* China | Comment Reference Number: 38619

Maashaa Allah..


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
7. Re:...ONE MAN'S FOOD IS OTHER MAN'S POISON
posted by mackie noohuthambi (kayalpaattinam) [29 December 2014]
IP: 180.*.*.* India | Comment Reference Number: 38632

இங்கே கருத்து பதிவு செய்துள்ளவர்களுக்கு அல்லாஹ் ரஹ்மத் செய்வானாக.

ஒருவரின் உணவு இன்னொருவருக்கு விஷம் என்று ஆங்கிலத்திலே ஒரு பழமொழி சொல்வார்கள்.

இணையதளங்கள் அன்றாடம் ஊரில் நிகழும் நிகழ்ச்சிகளை ஊர் மக்கள் அவர்கள் உலகளாவி வாழ்கிறவர்களுக்கு போய் சேர வேண்டும். அந்த செய்தியை முதன்மையாக அறிவித்தவர்கள் என்ற பெருமையை பெறவேண்டும் என்று ஆசைப்பட்டு அவற்றை இங்கு நமக்கு அறியத்தருகிறார்கள். அது அவர்கள் கடமையும் கூட, தொழில் வெற்றிக்கான இலக்கும் அதுவே. அவர்களை குறை சொல்ல முடியாது.

முதல்வனாய் இரு அல்லது முதல்வனோடு இரு

ஒரு செய்திக்கு கருத்து பதிவு செய்பவர் அவர் மனோநிலைப் படி அவர் மனதில் என்ன நினைக்கிறாரோ அதை பதிவு செய்வார். அதை மற்ற எல்லோரும் ஏற்றுக் கொள்ளவேண்டும் என்று அவர் எதிர்பார்ப்பதும் இல்லை. எனவே அவரை குறை சொல்லவும் முடியாது.

ஆனால் கருத்துக்கள் பதிவு செய்யும்போது மற்றவர்கள் மனம் புண்படும்படி தனி மனித தாக்குதல் இருக்கக் கூடாது என்பதும் ஆரோக்கியமான விவாதங்கள் பதிவு செய்யப்படுவதும் ஊடகங்களுக்கு அதன் நிறுவனர்களுக்கு உற்சாகம் தரும். படிப்பவர்களுக்கும் மயிலறகாய் அது வருடி விடும் சுகத்தை தரும்.

இறுக்கமான செய்திகளையும் உருக்கமான செய்திகளையும் நகைச்சுவை கலந்து பதிவு செய்தால் அது எல்லோரையும் மகிழ்விக்கும். யான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம் என்ற எண்ணம் மேலோங்கி நிற்க வேண்டும் என்பது என் போன்றோர்களின் அபிலாஷை. .

திருமணம் எனும் நிகாஹ் - இன்னும் ஒரு முக்கிய செய்தி பதிவு செய்ய மறந்து விட்டேன். LKG UKG படிப்பவர்கள் BAABAA BLACK SHEEP - TWINKLE TWINKLE LITTLE STAR என்ற RHYMES மனப் பாடமாக சொல்வார்கள்.. ஆனால் திருமண மேடையில் மணமகனாக வீற்றிருக்கும் ஒரு ஆலிமுக்கு கூட அடுத்த ஆலிம் EEJAAB QABOOL என்ற பெயரால் QABILTHU NIKAAHAHAA .என்று பாடம் சொல்லிக் கொடுக்க வேண்டிய பரிதாப நிலை இங்கு உள்ளது. அதை மணமகன் மனப் பாடமா சொல்ல எத்தனை நொடிகள் தேவைப் படும்?

2G, 3G.அலைக் கற்றை பற்றி விலாவாரியாக தெரிந்து வைத்திருக்கும் இந்த இளைய தலைமுறை இந்த முக்கியமான வாழ்வின் திருப்பு முனையில் நின்று கொண்டு QABILTHU NIKAAHAHAA VA THAZWEEJAHA என்பதை கூட சுயமாக சொல்ல தெரியவில்லையே என்பதை வேதனையுடன் இங்கு பதிவு செய்கிறேன்...

இந்த சீர் திருத்தங்களை ஒரே இரவில் செய்து முடிக்க முடியாது. மக்களிடையே பொது கருத்து வேண்டும். CONCENSUS என்று ஆங்கிலத்திலே சொல்வார்கள். அந்த நிலை உண்டாகும் வரை இந்த நிலை தொடரும்....ஆனால் என்றோ ஒரு நாள் இந்த மாற்றங்கள் வந்தே தீரும்.

மாற்றம் ஒன்றுதான் மாறாதது.. அன்பர்களுக்கு நன்றி.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>

முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்

பிற செய்திகள்

காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
Fathima JewellersAKM Jewellers
FaamsCathedral Road LKS Gold Paradise

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved