Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
5:30:27 PM
சனி | 27 ஜுலை 2024 | துல்ஹஜ் 1822, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
04:4912:2903:5206:4508:00
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:08Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்23:37
மறைவு18:39மறைவு11:26
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
04:5405:2005:46
உச்சி
12:24
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
19:0219:2819:54
Go to Homepage
செய்திகள்
Previous News ItemNext News Item
செய்தி எண் (ID #) 15635
#KOTW15635
Increase Font Size Decrease Font Size
ஞாயிறு, மார்ச் 22, 2015
சரியான ஆதாரமில்லாததாகக் கூறி, மவ்லவீ ஹாமித் பக்ரீ குழுவினர் வழக்குகளிலிருந்து விடுதலை!
செய்திஎஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்)
இந்த பக்கம் 6994 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (20) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 1)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}

குற்றச்சாட்டுகளுக்கு சரியான ஆதாரமில்லாததாகக் கூறி, காயல்பட்டினம் ஐக்கிய சமாதானப் பேரவை தலைவர் மவ்லவீ ஹாஃபிழ் என்.ஹாமித் பக்ரீ மன்பஈ உள்ளிட்ட 12 பேரும் வழக்குகளிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளனர்.

இதுகுறித்து, ஐக்கிய சமாதானப் பேரவை அமைப்பின் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கை:-

கடந்த 2002ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் (புனித ரமழான் மாதம் 27ஆம் நாளன்று) மிகப்பெரிய சதி வழக்கில் சிக்க வைக்கப்பட்டு, எமது அமைப்பின் தலைவர் மவ்லவீ ஹாஃபிழ் என்.ஹாமித் பக்ரீ மன்பஈ உட்பட 12 பேர் - காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு, கடலூர் மத்திய சிறைச்சாலையில் அடைக்கப்பட்டு, பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டனர்.

சென்னை பூந்தமல்லி தடா நீதிமன்றத்தில், கடந்த 12 ஆண்டுகளாக நடைபெற்று வந்த இவ்வழக்கு மீதான விசாரணை 23.02.2015 அன்று முடிவுக்கு வந்தது. நீதிபதியால் வழங்கப்பட்ட தீர்ப்பில் - ஹாமித் பக்ரீ மற்றும் குழுவினர் குற்றமற்றவர்கள், நிரபராதிகள், அவர்களுக்கெதிரான எந்த வாதங்களும், சாட்சியங்களும் நிலை நிற்கவில்லை என்றும், எனவே அவர்களை விடுதலை செய்வதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

இதன் மூலம், எமது அமைப்பின் தலைவர் மவ்லவீ ஹாஃபிழ் என்.ஹாமித் பக்ரீ உள்ளிட்ட 12 பேரும் வழக்குகளிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளனர் என்பதை மகிழ்வுடன் அறியத் தருகிறோம்.


இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தகவல்:
P.M.N.ரியாஸுத்தீன்


ஐக்கிய சமாதானப் பேரவை தொடர்பான முந்தைய செய்தியைக் காண இங்கே சொடுக்குக!


Previous News ItemNext News Item
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. Re:...
posted by sulaiman (saudi) [22 March 2015]
IP: 93.*.*.* Romania | Comment Reference Number: 39761

அல்ஹம்துலில்லாஹ் , அல்லாஹு அக்பர்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
2. அல்லாஹ் அனைத்தும் அறிந்தவன்.
posted by முஹம்மது ஆதம் சுல்தான்! (yanbu) [22 March 2015]
IP: 128.*.*.* Romania | Comment Reference Number: 39762

அன்று அரபுநாட்டிலிருந்து விடுமுறையில் ஊர் செல்லும் வழியில் சென்னையில் மவ்லவி ஹமீத் பகரீ அவர்களை சந்தித்தேன். அப்போது அவர்கள் இவ்வழக்கின் பிணையில் இருந்தார்கள். பார்த்தவுடன் வார்த்தைகள் வர மறுத்தன, வழிந்தோடும் கண்ணீர் கரைபுரண்டோட கட்டித்தழுவிக் கொண்டோம்!

அல்லாஹ்வின் சிறு சோதனை காலம் சோர்ந்துவிடவில்லை. எங்கள் ஹக்கில் துவாச்செய்யுங்கள் என்ற அந்த ஓரிரு வார்த்தைகளை மட்டும்தான் கூறினார்கள்.

அல்ஹம்திலில்லாஹ்! தேனினும் இனிய தித்திப்பான செய்தி!. அல்லாஹ் அனைத்தும் அறிந்தவன்!

அன்புடன்,
முஹம்மது ஆதம் சுல்தான்!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
3. அல் ஹம்து லில்லாஹ
posted by A.S.L.SULAIMAN LEBBAI (RIYADH - S.ARABIA) [22 March 2015]
IP: 95.*.*.* Romania | Comment Reference Number: 39764

சரியான ஆதாரமில்லாததாகக் கூறி, மவ்லவீ ஹாமித் பக்ரீ மற்றும் குழுவினர் வழக்குகளிலிருந்து விடுதலை

அல் ஹம்து லில்லாஹு . அல்லாஹு மிக பெரியவன் .


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
4. அல்ஹம்துலில்லாஹ்.
posted by சாளை.அப்துல் ரஸ்ஸாக் லுக்மான் (அபூதாபி) [22 March 2015]
IP: 92.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 39766

அல்ஹம்து லில்லாஹ். எல்லா புகழும் வல்ல அல்ல்ஹ்வுக்கே. முஸ்லிம்கள் மீது, தமிழக அரசால் ஜோடிக்கப்பட்டு, பொய் வழக்கு போடப்பட்ட பல வழக்குகளில் இதுவும் ஒன்று. இந்த வழக்கில் இருந்து நிரபராதிகள் என்று விடுதலையான, ஹாமித் பக்ரி ஆலிம், அப்துல் மஜீத் மஹ்ழரி ஆலிம் மற்றும் அனைவருக்கும் அல்லாஹ்வின் அருள் நிலவட்டுமாக.

இதே மாதிரி, எண்ணற்ற நமது சகோதரர்கள் பொய் வழக்குகள் போடப்பட்டு, விசாரணை கைதியாகவே பல ஆண்டுகள் சிறையில் தங்களது இளமையை தொலைத்து நிற்கிறார்கள். அவர்களும் சீக்கிரம் நிரபராதி என்று விடுதலை பெற நாம் அனைவரும் துஆ செய்வோமாக. ஆமீன்.

-சாளை. அப்துல் ரஸ்ஸாக்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
5. Re:...
posted by NUSKI MOHAMED EISA LEBBAI (RIYADH - KSA) [22 March 2015]
IP: 78.*.*.* Romania | Comment Reference Number: 39768

அல்ஹம்து லில்லாஹ். மகிழ்ச்சியான செய்தி.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
6. Re:...
posted by Ameer Baliya (Riyadh) [22 March 2015]
IP: 2.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 39769

அல்ஹம்துலில்லாஹ் ..அல்லாஹு அக்பர்..


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
7. Re:...
posted by K.D.N.MOHAMED LEBBAI (RIYADH) [22 March 2015]
IP: 37.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 39770

அஸ்ஸலாமு அலைக்கும்

எந்த ஒரு ஆதாரமில்லாததாகக் கூறி.... நம் மரியாதைக்குரிய ஜனாப் .மவ்லவீ ஹாமித் பக்ரீ அவர்கள் & குழுவினர்கள் யாவர்களும் வழக்குகளிலிருந்து விடுதலை செய்யபட்டு இருப்பது அறிந்து மகிழ்ச்சியானது .....

>> அல் ஹம்து லில்லாஹு ..... . வல்ல இறைவனுக்கே எல்லா புகழும் <<

வஸ்ஸலாம்

K.D.N.MOHAMED LEBBAI
RIYADH


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
8. Re:...
posted by தமிழன் முத்து இஸ்மாயில். (kayalpattinam) [22 March 2015]
IP: 163.*.*.* Japan | Comment Reference Number: 39771

அல்ஹம்துலில்லாஹ் - அல்லாஹு அக்பர்,

நீதி ஒரு நாள் வென்றே தீரும் அதில் சந்தேகமில்லை - ஆனால் இத்தனை ஆண்டுகள் இவர்கள் மனநிம்மதில்லாமல் காவல்துறையால் அலைக்களிக்கப்பட்டது மிகவும் வேதனை அளிக்ககூடிய விசியம்.

[Administrator: Comment edited]


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
9. Re:...
posted by Vilack SMA (Jeddah) [22 March 2015]
IP: 176.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 39772

அல்லாஹு அக்பர். மகிழ்ச்சியான செய்தி .


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
10. Re:...
posted by சாளை எஸ்.ஐ.ஜியாவுத்தீன் (அல்கோபார்) [22 March 2015]
IP: 95.*.*.* Romania | Comment Reference Number: 39773

அல்ஹம்து லில்லாஹ்.

இது மாதிரி எந்த தவறும் பண்ணாத பல சகோதரர்கள் சிறையில் வாடி வருகிறார்கள். அவர்களையும் வல்ல அல்லாஹ் விடுதலை செய்ய அருள் புரிவானாக.

இத்தனை நாட்கள் இவர்கள் பட்ட கஷ்டங்கள், சங்கடங்கள், இழப்புகள் ஆகியவற்றை யார் திருப்பி தரப்போகிறார்கள்.

சாளை எஸ்.ஐ.ஜியாவுத்தீன், அல்கோபார்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
11. Re:...
posted by Mohamed Shaikna (Chennai) [22 March 2015]
IP: 113.*.*.* India | Comment Reference Number: 39775

அல்ஹம்துலில்லாஹ்...

நல்ல ஒரு தீர்ப்பு 12 வருடங்களுக்கு பிறகு...

இன்னும் இதை போல் எத்தனை நிரபராதி மக்களை அநியாய வழக்குகளில் சேர்துள்ளர்களோ - அல்லாஹ் தான் அறிவான்..

அவர்கள் அனைவருக்கும் நீதி விரைவில் கிடைத்திட வல்ல ரஹ்மானிடம் இறைஞ்சுவோம் - இன் ஷா அல்லாஹ்.

வஸ்ஸலாம்...


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
12. Re:...மன உளைச்சலுக்கும் கண்ணியம் இழப்புக்கும் ஈடு செய்ய முடியுமா இந்த தீர்ப்பு...
posted by mackie noohuthambi (colombo) [22 March 2015]
IP: 103.*.*.* | Comment Reference Number: 39776

2002 இல் தொடுக்கப்பட்ட வழக்கில் 13 வருடங்களுக்கு பின் தீர்ப்பு வந்திருக்கிறது. விடுதலை செய்யப்பட்டோம் என்ற திருப்தி பாதிக்கப் பட்டவர்களுக்கு ஏற்பட்டாலும் இத்தனை காலம் அநியாயமாக குற்றம் சாட்டப்பட்டு மன உளைச்சல் ஏற்பட்டது.

போகும் இடமெல்லாம் ஒரு குற்றவாளியை பார்ப்பது போல் மக்கள் பார்த்தது அதனால் ஏற்பட்ட தலை குனிவுகளுக்கு என்ன மாற்று மருந்து தரப்போகிறது இந்த நீதி மன்றங்கள்.

எந்த வழக்கை எடுத்தாலும் இந்த நாட்டில் 12 வருடம் 20 வருடம் 30 வருடங்கள் கழித்து தீர்ப்பு சொல்லப்படுகிறதே, அவர்கள் நிரபராதிகள் என்று தீர்ப்பு வழங்கும்போது அதை கேட்க அவர்கள் தந்தை உயிருடன் இல்லை தாய் உயிருடன் இல்லை.

ஹாமித் பக்ரி என்ற ஒரு தனிப்பட்ட நபருக்காக நான் கேட்கவில்லை. சமுதாயத்தின் அடிமட்டத்தில் இருப்பவர்கள் ஒடுக்கப்பட்டவர்கள். இன்னும் கோவை சிறையிலே குற்றப் பத்திரிக்கையே தாக்கல் செய்யப்படாமல் விசாரணை கைதிகளாக தங்கள் இளமையை சிறையிலே கழித்து அங்கேயே முதுமையையும் கண்டுகொண்டிருக்கிறார்களே அவர்களுக்கு என்ன விடிவு.

ஜனநாயகத்தின் படு மோசமான ஒரு அங்கம் இது. தாமதப்பட்ட தீர்ப்பு மறுக்கப்பட்ட தீர்ப்பு. இதற்கு மாற்று வழியை கண்டு பிடிக்க நீதிபதிகள் முயசிக்க வேண்டும். இல்லாவிட்டால் வன்முறைகளும் பாலியல் பலாத்காரங்களும் கொலை கொள்ளைகளும் பகிரங்கமாக நடப்பதை தவிர்க்க முடியாது..

தீர்ப்பு வரும்போது குற்றம் சாட்டப்பட்டவர்கள் மண்ணறையில் மாய்ந்து கொண்டிருப்பார்கள் அல்லது வெந்தணலில் வெந்து கொண்டிருப்பார்கள்.அல்லது தங்களையே மாய்த்துக் கொண்டு பரலோகம் போயிருப்பார்கள். பாதிக்கப் பட்டவர்கள் பரிதவித்துக் கொண்டிருப்பார்கள்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
13. Re:...வாழ்த்துக்கள்.அல்லாஹ் பெரியவன்.
posted by சட்னி,எஸ்.ஏ.கே.செய்யது மீரான்-ஜித்தா (ஜித்தா) [23 March 2015]
IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 39781

சரியான ஆதாரமில்லாததா குற்றச்சாட்டு என 12 ஆண்டுகளாக விசாரித்து விடுதலை பெற்றுள்ள இவர்களுக்கு வாழ்த்துக்கள்.அல்லாஹ் பெரியவன்.

இது போன்ற நிலையில் உள்ளவர்கள் யாவரும் விடுதலை பெற்று மகிழ்வுடன் வாழ வல்லோன் அல்லாஹ் பேரருள் புரிவனாக ஆமீன்,


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
14. Re:...الحمد لله
posted by Omer Abdul Qadir (Chennai) [23 March 2015]
IP: 182.*.*.* India | Comment Reference Number: 39791

2:155. நிச்சயமாக நாம் உங்களை ஓரளவு அச்சத்தாலும், பசியாலும், பொருள்கள், உயிர்கள், விளைச்சல்கள் ஆகியவற்றின் இழப்பினாலும் சோதிப்போம்; ஆனால் பொறுமையுடையோருக்கு (நபியே!) நீர் நன்மாராயங் கூறுவீராக!

2:156. (பொறுமை உடையோராகிய) அவர்களுக்குத் துன்பம் ஏற்படும் போது, “நிச்சயமாக நாம் அல்லாஹ்வுக்கே உரியவர்கள்; நிச்சயமாக நாம் அவனிடமே திரும்பிச் செல்வோம்” என்று கூறுவார்கள்.

2:157. இத்தகையோர் மீது தான் அவர்களுடைய இறைவனின் நல்லாசியும், நற்கிருபையும் உண்டாகின்றன, இன்னும் இவர்கள் தாம் நேர் வழியை அடைந்தவர்கள்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
15. Re:...
posted by mohamed salih (chennai) [23 March 2015]
IP: 182.*.*.* India | Comment Reference Number: 39794

அல்ஹம்துலில்லாஹ் , அல்லாஹு அக்பர்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
16. Re:...
posted by nizam (india) [23 March 2015]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 39800

அல்லா அவர்களுக்கு ரஹ்மத் செய்வானாக. அவர்கள் ஜமிஉல் அஷர் பள்ளியில் கதீபாக இருந்த காலம் பொற்காலம் என்று சொல்வேன். ஒவொரு ஜும்மவிலும் அவர்கள் கற்று கொடுத்த துஆக்கள் மார்க்க விளக்கங்கள் எங்களது வாழ்வையே மாற்றியமைத்தது. எளிமை புன்சிரிப்பு அநிதியைஎதிர்த்து பொங்கியெழும் ஆற்றல் அவரை காயலின் மணிமகுடம் என்று அழைக்கலாம்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
17. Re:...பொறுமைக்கு கிடைத்த வெற்றி
posted by Abulhasan Adam (Riyadh) [23 March 2015]
IP: 95.*.*.* Romania | Comment Reference Number: 39810

அல்ஹம்துலில்லாஹ்....அல்லாஹ் பெரியவன்

உங்கள் பொறுமைக்கு கிடைத்த வெற்றி

எல்லா புகழும் அல்ல்ஹவுக்கே


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
18. அந்த காலத்தைச் சற்று பின்னோக்கிப் பார்க்கிறேன்...
posted by SK Shameemul Islam (Chennai) [24 March 2015]
IP: 122.*.*.* India | Comment Reference Number: 39822

பாசமிகு மவ்லவி ஹாமித் பக்ரி அவர்களும் மவ்லவி அப்துல் மஜீத் மஹ்லரி அவர்களும் அவர்களுடன் மற்ற நண்பர்களும் சிறையில் தள்ளப்பட்ட அந்த காலத்தைச் சற்று பின்னோக்கிப் பார்க்கிறேன்.

முஸ்லிம் சமூகத்தில் யாருமே இவர்களை நெருங்க முடியா தீவிரவாதிகள் என்ற பீதியை அன்று அன்றைய அரசுகளும் காவல் துறையும் பத்திரிக்கைகளும் முந்திக்கொண்டு பரப்பின. எவ்வாறெல்லாம் அவர்களைக் களங்கப்படுத்த முடியுமோ அத்தனையையும் செய்தன.

காலங்கள் கடந்து இன்று நீதி மன்றம் நியாயமான தீர்ப்பை வழங்கி உள்ளது. இதனால் இவர்களுக்கு ஏற்பட்ட பல்வேறு சிரமங்களையும் மன உளைச்சல்களையும் அரசுகளும் காவல்துறையும் பத்திரிக்கைகளும் எவ்வாறு ஈடு செய்யப்போகிறது.

இது போன்று இன்னும் எண்ணற்ற வழக்குகளில் சிக்கித் தவிக்கும் அப்பாவி முஸ்லிம்களை எப்போது விடுவிக்கப் போகிறது. இன்னும் எத்தனைக் காலம் கழித்து இதே போன்ற நீதி கிடைக்கப் போகிறது.

இவ்வாறு தொடர்கதையாவது நாட்டின் வளர்ச்சியையும் முன்னேற்றத்தையும் பாதிக்காதா என்பதை சம்பந்தப்பட்டவர்கள் உணர்ந்தால் நல்லது.

சமீபத்திய டெல்லி சட்டசபை தேர்தலும் அதனைத் தொடர்ந்து தேர்ந்தெடுக்கப்பட்ட புதிய அரசும் இதற்கு நல்லதொரு எடுத்துக்காட்டு.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
19. Re:...
posted by O.A.Nazeer Ahmed (chennai) [25 March 2015]
IP: 106.*.*.* India | Comment Reference Number: 39832

Alhamdhulillah.. HE knows everything.. Very much happy to know Bakri Alim has been declared innocent..

All 12 years he might have been mentally tortured.. Anyway he is relieved now.. We must thank the ALMIGHTY...


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
20. Re:...காலம் பதில் சொல்லும்...என்பார்கள் சொல்லி விட்டது தமிழக அரசுக்கு...
posted by AnbinalA (Jaipur) [25 March 2015]
IP: 101.*.*.* India | Comment Reference Number: 39838

உண்மை புதைக்கப்பட வில்லை - மாறாக விதைக்கப்பட்டுள்ளது.எனவே தான் 12ஆண்டுகள் உருண்டோடியும் வெற்றி எனும் மரமாக வளர்ந்து நிற்க்கிறது.தமிழக அரசே உனக்கு பாடாம் படிக்க அதன் நிழலில் அமர்ந்துக் கொள்...அல்லது தன்னைத்தானே கொல்...

ஜனாப்.ஹாமீத் பக்ரீ ஆலீம் , ஜனாப்.அப்துல் மஜீத் ஆலீம்.,மற்றும் சகோதரர்கள் ஒன்றிணைந்து தமிழக அரசு மீது மானநஷ்ட ஈடாக சுமார் 1200000000022 கோடி ரூபாய் கேட்டு வழக்கு தொடுங்கள். அப்போதுதான் இதுபோன்ற அப்பாவிகள் இவர்கள் போலுள்ள அ ட ப் பா வி க ளி ட ம் இருந்து விடியல் பெற முடியும்...

அன்று வெளியே இருந்து ஜெயில் அனுப்பியவர் இன்று ஜெயிலாக வெளியே இருக்கிறார்... படைத்தவனுக்கே புகழ் அனைத்தும்...


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>

முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்

பிற செய்திகள்

காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
Cathedral Road LKS Gold ParadiseFathima Jewellers
AKM JewellersFaams

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved