Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
8:05:19 AM
சனி | 20 ஏப்ரல் 2024 | துல்ஹஜ் 1724, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
04:5212:2315:3018:3319:43
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:05Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்15:52
மறைவு18:27மறைவு03:40
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
04:5405:1905:44
உச்சி
12:16
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:4819:1319:38
Go to Homepage
செய்திகள்
Previous News ItemNext News Item
செய்தி எண் (ID #) 15748
#KOTW15748
Increase Font Size Decrease Font Size
ஞாயிறு, ஏப்ரல் 12, 2015
“தாய் வீட்டில் தங்கல்’ குறித்து சென்னையில் கருத்தரங்கம்! காயல்பட்டினத்து தகவல்களையும் உள்ளடக்கி, அமெரிக்க மானுடவியலாளர் சிறப்புரை!!
செய்திஎஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்)
இந்த பக்கம் 5194 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (4) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 1)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}

திருமணம் முடிந்த கையோடு பெண் வீட்டிற்கு புறப்பட்டுச்செல்லும் வழக்கம் என்பது காயல்பட்டினத்தில் காலங்காலமாக இருந்து வருகின்றது.

இத்தகவலைக் கேள்விப்படும் வெளியூர்வாசிகள் பலர் காயல்பட்டினத்தின் இந்த பண்பாட்டுத் தனித்தன்மையைக் குறித்து ஒட்டியும், வெட்டியும் கருத்துக்களைக் கூறி வருகின்றனர்.

காயல்பட்டினத்தின் இந்த பண்பாட்டுத் தனித்தன்மையானது, ஊர் - மாநிலத்தையும் தாண்டி பார்க்கப்படுகிறது என்பது பலருக்குத் தெரிந்திருக்க வாய்ப்பில்லை.

காயல்பட்டணம்.காம் இணையதளத்தின் “காயல்வரலாறு” பகுதியில் இடம்பெற்ற “காஹிரீ தர்ஸ் நடத்திட்டுண்டு...!” என்ற ஆக்கத்தில், அண்டை மாநிலமான கேரளத்தில் உள்ள சிற்றூர் ஒன்றில் இது போன்ற பழக்கம் நடைமுறையில் உள்ள தகவல் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இவ்வாறிருக்க, அண்மையில் இது தொடர்பாக விரிவான கள ஆய்வு ஒன்றும் நடைபெற்றுள்ளது. அது குறித்த விபரம் வருமாறு:-



சென்னை அடையாறில் உள்ள - சென்னை வளர்ச்சி ஆராய்ச்சி நிறுவனத்தில் {MADRAS INSTITUTE OF DEVELOPMENT STUDIES – MIDS } இம்மாதம் 06ஆம் நாள் திங்கட்கிழமையன்று 15.30 மணிக்கு, “தென்னிந்தியாவில் தாய் வீட்டில் தங்கி வாழும் திருமணம்“ {Matrilocal Marriage In South India} என்ற தலைப்பில் உரை நடைபெற்றது.

பணி நிறைவு பெற்ற பேராசிரியரும் அமெரிக்கா நாட்டின் போல்டர் பகுதியில் உள்ள கொலராடோ பல்கலைக் கழகத்தின் மானுடவியல் துறையின் சிறீலங்கா ஆய்விற்கான அமெரிக்க கழகத்தின் தலைவருமான டென்னிஸ் மக்கில்வாரி (Dennis McGilvray) காணொளி காட்சிகளுடன் உரை நிகழ்த்தினார்.



நடுவன் ஆளுகைப் பகுதியான காரைக்காலில் தொடங்கி தமிழகத்தின் கடற்கரையோர ஊர்களான நாகூர், அதிராம்பட்டினம், கீழக்கரை, காயல்பட்டினம், தூத்துக்குடி மாவட்டத்தின் உட்பகுதிகளான செக்காரக்குடி, திருவைகுண்டம், கேரளத்தின் வெட்டுத்துறா, கோழிக்கோடு, தலஸ்ஸேரி, கண்ணூர், பய்யனூர் வரை உள்ள பகுதிகளில் தன்னுடைய கள ஆய்வில் கண்டறிந்த - திருமணத்திற்குப் பிறகு மணமகள் தாய்வீட்டு தங்கல் முறைகளைப் பற்றி பேராசிரியர் டென்னிஸ் மக்கில்வாரி விவரித்தார்.





தன்னுடைய கள ஆய்வுப் பகுதிகளில் வாழ்ந்து வரும் தமிழகத்தின் முஸ்லிம் மரைக்காயர்கள், ஹிந்து வெள்ளாளர்கள், கேரளத்தின் கிறிஸ்தவ மீனவர்கள், கோயா, மாப்பிள்ளா, கேயீ, அரக்கல் முஸ்லிம் சமூகங்களிடையே கவனம் செலுத்தியுள்ளார் பேராசிரியர் டென்னிஸ் மக்கில்வாரி.

திருமணம் முடித்த மகள்களுக்கென தனி வீடு, ஒரே வீட்டிற்குள்ளேயே இரண்டு மகள்களுக்கும் ஒரே மாதிரியான வசதிகளுள்ள இரட்டை அமைப்பு முறை, தாயுடன் வாழாமல் மகளின் தனித்த வீட்டில் கணவன் வந்து வசிப்பது, ஒரே வீட்டினுள் மகளுக்கென தனி அறை என அவரின் உரையில் சுவையான பல தகவல்கள் வெளியாயின.

தமிழகத்தின் செக்காரக்குடியின் நான்குடி வெள்ளாளர்கள், திருவைகுண்டத்தின் கோட்டை வெள்ளாளர்கள், கேரளத்தின் வெட்டுத்துறா மீனவர்கள் போன்ற முஸ்லிமல்லாத சமூகங்களும் தாய்வழி தங்கல் முறையைக் கடைபிடிப்பதாக அவர் தெரிவித்தார்.

பொதுவாகவே, இந்தப் பகுதிகளில் தாய் வீட்டுத்தங்கல் முறைகளுடன் தாய்வழித்தாய் வழித்தோன்றல் முறைமை (MATRILINEAL), தந்தை வீட்டுத் தங்கல் முறை, தனிக்குடித்தன முறைகளும் நடைமுறைகளில் உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

அவரது உரையைத் தொடர்ந்து கேள்வி–விடைக்கு நேரம் ஒதுக்கப்பட்டது.

“இந்த தனித்த பண்பாட்டுக் கூறின் தொடக்கப்புள்ளி எது?” என்ற கேள்விக்கு அவர் விடையளிக்கையில், “அந்தப் பகுதி மர்மமாகவே உள்ளது” என்றார்.

இந்த நிகழ்விற்கு சென்னை வளர்ச்சி ஆராய்ச்சி நிறுவனத்தின் சமூக பண்பாட்டு அறிவு வரலாற்றுத் துறையின் கலையியற்குழு பொறுப்பாளர் பேராசிரியர் ஆ.இரா. வேங்கடாசலபதி தலைமை வகித்தார்.

நிகழ்ச்சியில், மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலைக் கழகத்தின் முன்னாள் துணை வேந்தரும், கல்வி - மனித உரிமை செயற்பாட்டாளருமான முனைவர் வஸந்தி தேவி, ஆவணப்பட இயக்குநரும் ஒளிப்படக் கலைஞருமான கோம்பை எஸ்.அன்வர், இலங்கை கொழும்பு கல்கிஸ்ஸவைச் சேர்ந்த பணி நிறைவு பெற்ற ஆங்கில ஆசிரியர் நிழாம் ஹமீத், அப்சர்வர் ரிஸர்ச் ஃபவுண்டேஷன் சென்னை பிரிவின் இயக்குநர் என்.ஸத்ய மூர்த்தி உட்பட பல பேராசிரியர்களும் ஆய்வு மாணவர்களும் இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.

இந்த உரைக்கான கள ஆய்வுப் பயணத்தின் ஒரு பகுதியாக, பேராசிரியர் டென்னிஸ் மக்கில்வாரி, நிழாம் ஹமீத் குழுவினர் கடந்த பிப்ரவரி மாதத்தில், காயல்பட்டினம் பெரிய நெசவுத் தெருவில் இரண்டு நாட்கள் தங்கியிருந்து தகவல்கள் சேகரித்துச் சென்றமை குறிப்பிடத்தகுந்தது.

பேராசிரியர் டென்னிஸ் மக்கில்வாரி - மானுடவியல், திருமணம், இனமுறுகல், சாதி, ஸூஃபியிசம், சமூகவியல், கைவினை, சிற்பம், கோயில், இலங்கைத் தமிழர் - முஸ்லிம் உறவு தொடர்பான ஆய்வுகளுக்காக இலங்கையின் கிழக்கு மாகாணத்திலும், தமிழகத்தின் பல பகுதிகளிலும் கணிசமான காலத்தைக் கழித்துள்ளார்.

ஆங்கிலத்தைத் தாய்மொழியாகக் கொண்ட அமெரிக்கராக இருந்தபோதிலும், தனது ஆய்வுக்களம் தமிழ் வழங்கும் பகுதி என்பதால் அவர் தமிழை முழுமையாகக் கற்றுக்கொண்டுள்ளார். இதுவரை அவர் 5 தனி ஆய்வு நூல்களும், 9 இதழ் கட்டுரைகளும் எழுதியுள்ளார்.

பேராசிரியர் டென்னிஸ் மக்கில்வாரி, அமெரிக்காவிலுள்ள பல கல்வி - ஆய்வு சார் நிறுவனங்களில் பல்வேறு பொறுப்புக்களை வகித்துள்ளதோடு, விருதுகள் பலவும் பெற்றுள்ளார். இவர் ஒரு இன விளக்கவியல் ஒளிப்படக்கலைஞரும் கூட. [Website: http://www.colorado.edu/anthropology/mcgilvray/Home.html]

‘தென்னிந்தியாவில் தாய்வழி தங்கல்’ பற்றிய இவரது ஆய்வானது, விரைவில் வெளிவரவுள்ள “A House for Every Daughter : Matrilocal Marriage in Sri Lanka and Beyond“ என்ற ஆங்கில நூலின் ஓர் அத்தியாயமாக இடம்பெறவுள்ளது.

களத்தொகுப்பு, செய்தியாக்கம் மற்றும் படங்கள்:
சாளை பஷீர் ஆரிஃப்
எழுத்தாளர் / சமூகப் பார்வையாளர்


[தலைப்பில் சிறு திருத்தம் செய்யப்பட்டது @ 22:20 / 12.04.2015]


Previous News ItemNext News Item
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. Re:...
posted by Vilack SMA (Jeddah) [12 April 2015]
IP: 77.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 40110

புகைப்படத்தில் எங்கள் வீட்டை பார்த்ததில் சந்தோசம்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
2. Re:...மருமக்கள் தாயகம்
posted by mackie noohuthambi (kayalpatnam) [12 April 2015]
IP: 163.*.*.* Japan | Comment Reference Number: 40111

காயல்பட்டினத்தில் மட்டுமல்ல தமிழகத்தின் கடலோர பகுதிகளில் இந்த மருமக்கள் தாயகம் தொன்று தொட்டு வாழ்வியலாக இருந்து வருகிறது. இதை எதிர்ப்பவர்கள் கணவன் வீட்டுக்கு மனைவி செல்வதுதான் முறை என்கிறார்கள். ஒரே வீட்டில் பல ஆண்கள் பல பெண்கள். இங்கே இஸ்லாம் சொல்லும் மகரம் எங்கே இருக்கிறது ஒருவர் மனைவியை மற்றவர் பார்ப்பதும் மற்றவர் கணவரை அடுத்தவர் மனைவி பார்ப்பதும் சர்வ சாதாரணமாக நடக்கிறது. அவர்கள் அதற்கு விளக்கம் சொல்லும்போது வாடகை வீடு பிடித்து அங்கே குடியிருக்க வேண்டும் என்கிறார்கள். ஒரு வீட்டில் பெண் கேட்டார்கள். நாங்களே வீடு கட்டி கொடுத்து பெண்ணையும் நாங்களே வைத்துக் கொள்வோம் என்றார்கள். அந்த பெண்ணும் சம்மதிக்க விலை அவள் பெற்றோரும் சம்மதிக்க வில்லை. நிதர்சன உண்மைகள் உணர்வுகள் வேறு மேடைப் பேச்சுக்கள் வேறு. எனவே இந்த ஆராய்ச்சி நல்ல முடிவுகளை தீர்வுகளை சமுதாயத்துக்கு தரும் என்று எதிர்பார்ப்போம்.

இருவர் ஒன்றானால் ஒருவர் என்றானால் இளமை முடிவதில்லை.

உள்ளங்கள் இணைவதில்தான் வாழ்க்கையின் வெற்றி இருக்கிறதே தவிர இந்த மாதிரி விஷயங்களில் விவாதங்கள் நடத்துவது விவகாரமாகவே இருக்கும். ஆராய்சிகளின் முடிவு இதைத்தான் சொல்லப் போகிறது.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
3. காயலின் கலாச்சாரம் கண்ணியமானது!
posted by முஹம்மது ஆதம் சுல்தான்! (yanbu) [13 April 2015]
IP: 90.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 40117

"தாய் வீட்டில் தங்கல்" என்ற தலைப்பில் வந்திருக்கின்ற இந்த செய்தி சரியா அல்லது தவறா என்ற ஆராய்ச்சிக்கு போகுமுன், எனக்கு ஒரு மார்க்க விளக்க தீரிப்பை அறிய விரும்புகிறேன். பெண் தன் தாய் வீட்டில் தங்கினால் அது இஸ்லாத்தில் குற்றமா? அல்லாஹ்வாலும் அருமைத் தூதராலும் இது ஹராமான செயல் இதை செய்பவர்கள் பாவத்திர்க்குறியவர்கள்,நரகத்திற்கு சொந்தக்காரர்கள் என்று கூறி இருகிறார்களா? அப்படி ஒரு தீர்ப்பு இருந்தால் அது ஆதாரத்துடன் எங்களுக்கு கிடைக்குமா? என்பதை உலமா பெருந்தகைகளிடமிருந்து பெற விரும்புகிறேன்!

ஒருவேளை அப்படியொரு சட்டம் இஸ்லாத்தில் இல்லை, பெண் தாயுடன் தங்குவது இஸ்லாத்தின் பார்வையில் குற்றமாகாது எனபது தெளிவாகிவிட்டால்,அடுத்து கவனத்தில் பலரும் கொண்டுவருவது,பெற்ற பெண் பிள்ளைக்கு வீடு கொடுத்து திருமணம் செய்வது என்பது, வரதட்சணைக்கு வழிவகுக்கும் செயல், இது கேவலம் இல்லையா? என்று இந்த வரதட்சணை பெரும் நிகழ்வை "தாய் வீடு தங்கல்" என்ற நிகழ்வோடு முடிச்சிப்போட்டு தாங்களும் குழம்பி நம்மையும் குழப்ப முயற்சித்து தங்களின் எதிர்ப்பை வெளிப்படுத்துகிறார்கள்!

எச்சூழ்நிலையிலும் வரதட்சணை வாங்கக்கூடாது என்பதில் இரு கருத்துக்கள் இல்லை. மணமகன் "மஹர்" கொடுத்துதான் திருமணம் முடிக்கவேண்டும் அதுதான் நபிவழி திருமண முறையாகும்!

இப்போதுள்ள எதார்த்தத்தை பேசுவோம், தாய்வீடு தங்காமல் தன் கணவன் வீட்டாருடன் செல்லும் வழமையுள்ள திருமணங்களில் அந்த மணமகன் முறையாக "மஹர்" கொடுத்திருக்கிறாரா? "வலிமா"என்ற திருமண விருந்துகள் அனைத்திற்கும் அரை பைசாக்கூட மணமகள் வீட்டிலிருந்து பெறாமல் அச் செலவுகள் அனைத்தையும் மணமகனே செய்திருக்கிறாரா? சீர் சனது என்ற ஒரு ரூபாய் பெறுமதியான பொருளைக்கூட பெண் வீட்டாரிடமிருந்து பெறாமல் அத்திருமணம் நடந்ததா? தன் தாய்போட்ட நகை அரை கிராமாக இருந்தாலும் அதையும் கழட்டிக்கொடுத்து விட்டு நான் தரும் ஆடையை மட்டுமே உடுத்துக்கொண்டு என்னுடன் வரவேண்டும் என்ற நிபந்தனைகளுடன் எத்தனை திருமணங்கள் நடந்தன என்பதை அறுதியிட்டு உறுதியாக அல்லாஹ் அறிய கூறமுடியுமா?

தன் தாய் தன் பிள்ளைக்கு ஒருரூபாய் பெறுமதியான பொருளை கொடுப்பதும் சரி, ஒரு வீட்டை கொடுத்து தன் துணைவானோடு மகிழ்வுடன் இணைத்து வாழவைப்பதும் சரி

வீட்டைப்பெறுவது அவமானம் என்றால் அந்த மாமா,மாமியார் இடமிருந்து பெறும் எந்த சிறிய பொருளும் அவமானம் தானே?

ஒரு xxxx இயக்கத் தலைவர் தான் செல்லும் ஊரெல்லாம் காயல்பட்டணத்தில் மாமியார் வீட்டிலேயே மருமகன் வாழும் கேவலமான வாழ்க்கை முறையைக் கொண்டுள்ளார்கள் என்று ஏளனமாக பேசுகிறார் ஆனால் அவர் அல்லாஹ்வும் அருமை ரசூலும் ஹராம் என்று சொல்கின்ற ஒரு திருமண முறையை காயலில் செய்கிறார்கள் என்று இன்றுவரை அடித்து சொல்ல வில்லை

நான் அத்தலைவருக்கு மேலே எழுதியுள்ள என்னுடைய சந்தேகங்களையும்,என் விளக்கத்தையும் எழுதி கேட்டதோடு,அவருக்கு ஒரு அறைகூவலும் விடுத்தேன் அதாவது,ஒரு ரகசிய வாக்கெடுப்பு நடத்துவோம்,மணமுடித்த முஸ்லிம் பெண்கள் மாமியார் வீட்டில் தங்கி இருப்பது விருப்பமா?அல்லது தன் தாயுடன் தங்குவது விருப்பமா? என்பதை தங்கள் ஒப்புதலை வாக்களித்து தெரிவிக்கவும். தாங்களின் வாக்கு ரகசியமாவும் நீங்கள் யாருக்குவாகளித்தீர்கள் என்பது வெளியில் தெரியாது.என்கின்ற ஏற்ப்பாட்டை செய்யவும் உங்கள் அமைப்பினருடன் நாங்களும் ஒத்துழைத்து உதவி செய்ய சித்தமாக உள்ளோம் என்று கூறி இருந்தேன்!

இதன் முடிவு,மாமியார் வீட்டில் தங்குவதைத்தான் மிக,மிக விரும்புகிறோம் என்று பெரும்பாலான பெண்கள் கூறுவார் களேயானால்,அடுத்த கணமே எங்கள் காயல் திருமண முறையை திருத்தியமைக்கவும்,சமுதாய பணிகளை தீவிரமாக செயல்வடிவமாக்கவும் பாடுபடுவோம்!

ஒருவேளை தாய்வீட்டில் தங்குவதைத்தான் மிக,மிக விரும்புகிறோம் என்று பெரும்பாலான பெண்கள் கூறுவார் களேயானால்,நீங்கள் காயலைப்பற்றி கூறும் அவதூறு பிரச்சாரங்களுக்கு வருத்தம் தெரிவிப்பதோடு இனிமேலும் காயல் ஊரின் திருமண காலாச்சாரத்தை விமர்சிக்க மாட்டேன் என்பதை பகிரங்கமாக ஒப்புக்கொண்டு அறிக்கை விடுவீர்களா? என்று கேட்டிருந்தேன்.இதுவரை பதிலில்லை.

அல்லாஹ் அனைத்தும் அறிந்தவன்!

அன்புடன்,
முஹம்மது ஆதம் சுல்தான்!

Moderator: Comment edited!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
4. ..Re தாய் வீட்டில் தாங்கள்தான் நிச்சயம் பாதுகாப்பு!
posted by omer anas (doha,qatar) [14 April 2015]
IP: 37.*.*.* | Comment Reference Number: 40129

அஸ்ஸலாமு அலைக்கும்.சகோதர சகோதரிகளே.. தாய்வீட்டிலமகள் தங்குவதுசரியா?,மாமியார்வீட்டில் மகள்தங்குவதுசரியா?

அருமையான தலைப்பு அருமையான கருத்தரங்கம்.இங்கே நான் பதியப்போவது ஒருவேலை,தலைப்புக்கு வேணுமானால்,சம்பந்தமில்லாமல்இருந்து,காயல்.காம் (அறிந்தே)வெட்டி விடும்.அதைபற்றி கவலை எனக்கில்லை.காப்பி பண்ணி முகநூலில் இட்டுக்கொள்கிறேன். எனக்குவயது 16ஆரோ17லோஇருக்கும்,அது சமயம்,ஆந்திராவில்,நின்று ஒரிஸ்ஸா மானிலம் கட்டாக் போக மெயிலில் கிளம்பி காலை விஜயவாடா அடைந்ததும்,ஒரு மூதாட்டி என்னிடம் வந்து தம்பி நீ தமிழா என்றார்கள்.நானும் ஆம் என்றேன்.கையிலொருபுகைபடத்தை வைத்திருந்த அந்த பாசமிகு தாய் இவனை பார்த்தாயா,என்றார்கள்.அம்மா,,யார் இவர் என்றேன்,மகனே,,நான் பெற்ற ஒரே மகனப்பா இவன்.என்னை ரயிலேற்றிக் கொண்டு வந்து,இங்கே நில் அம்மா,எல்லாரும் பசியார ஏதாவது வாங்கி வாரோம் நாங்களிருவரும் என்றுகூறி,மனைவியோடுபோன, என்பிள்ளை என்னை விட்டுச் சென்று மூன்றுமாத காலமாகிறதுஎங்காவது கண்டால்,இங்கேயே வரச்சொல் என்றார்கள் பிரிவின் விடைதெரியாத அந்த உத்தமித்தாய் .இடிந்துபோய்விட்டேன் நான்.புதியதாக,நான் என் தாயைபிரிந்து வெளிமானிலம் வரும்போது,எனக்குள் எப்படி இருந்திருக்கும் என்று நினைத்து பாருங்கள்.!

#பொதுவா சிந்திப்போர்களே,,நியாயமா சிந்திப்போர்களே,நடப்பை சிந்திப்போர்க்களே..இஸ்லாம் மார்க்கம் கற்றோர்களே,சிந்திப்பீர்..அதே நேரம் பெற்றதாயை,மகள்அனாதையாக்கி எங்காவது விடுவாளா? அல்லது பெற்ற மகளைஎங்காவது கஸ்டப்படத்தான் அவள் தாய் விடுவாளா?சிந்திப்பீர்!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>

முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்

பிற செய்திகள்

காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
Cathedral Road LKS Gold ParadiseFathima Jewellers
AKM JewellersFaams

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved