Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
6:08:57 PM
வெள்ளி | 29 மார்ச் 2024 | துல்ஹஜ் 1702, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
05:0812:3015:4118:3419:42
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:16Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்21:42
மறைவு18:28மறைவு08:48
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
05:0705:3105:55
உச்சி
12:22
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:4919:1319:37
Go to Homepage
செய்திகள்
Previous News ItemNext News Item
செய்தி எண் (ID #) 15924
#KOTW15924
Increase Font Size Decrease Font Size
புதன், மே 13, 2015
சர்வே எண் 278 வழக்கு: தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் தொடர உயர் நீதிமன்றம் அனுமதி!
செய்திகாயல்பட்டணம்.காம்
இந்த பக்கம் 2438 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (3) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 0)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}



காயல்பட்டினம் தென் பாக கிராமம் சர்வே எண் 278 இடத்தில் பயோ காஸ் திட்டப்பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன.

சுற்றுச்சூழல் துறைகளின் முறையான அனுமதி பெறாமல் நடைபெறும் இப்பணிகளை எதிர்த்து, சகாயமாதா மீனவர் சங்கம், கொம்புத்துறை ஊர் நல குழு மற்றும் கொம்புத்துறை சதுப்பு நில காடுகள் பாதுகாப்பு குழு ஆகியவை இணைந்து தொடர்ந்துள்ள இவ்வழக்கு ஏப்ரல் 30 அன்று சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரை கிளையில் விசாரணைக்கு வந்தது.

வழக்கினை அனுமதித்து எதிர்தரப்புகளுக்கு நோடீஸ் அனுப்ப உத்தரவிட்ட நீதிபதிகள் மணிக்குமார் மற்றும் சொக்கலிங்கம் ஆகியோர், வழக்கினை - கோடைக்கால விடுமுறையில் கூடும் சிறப்பு நீதிமன்ற அமர்வில் விசாரிக்க அனுமதி வழங்கினர்.

சுற்றுச்சூழல் துறை அரசு செயலர், நகர ஊரமைப்பு இயக்ககம் (DTCP) மற்றும் மாவட்ட ஆட்சியர் (மாவட்ட கடலோரம் மேலாண்மை அமைப்பு தலைவர்), தூத்துக்குடி மாசு கட்டுப்பாட்டு வாரியம் - சுற்றுச்சூழல் பொறியாளர், காயல்பட்டினம் நகர்மன்றத் தலைவர், காயல்பட்டினம் நகர்மன்ற ஆணையர் மற்றும் இப்பணிகளுக்கான ஒப்பந்தப்புள்ளி பெற்றுள்ள SK & Co. நிறுவனம் ஆகியோர் இவ்வழக்கில் எதிர் மனுதாரர்கள் ஆவர்.

நீதிபதிகள் பீ.என.பிரகாஷ் மற்றும் புஸ்பா சத்யநாராயணா ஆகியோர் முன்னிலையில் - உயர்நீதிமன்றத்தின் விடுமுறை அமர்வு மே 6 அன்று முதல் முறையாக கூடியது. அப்போது சர்வே எண் 278 வழக்கு (வழக்கு எண் WP [MD] 7730/2015), 59வது வழக்காக விசாரணைக்கு வந்தது.

எதிர்மனுதாரர்கள் அனைவரின் தரப்பிலும் நோடீஸ் ஏற்றுக்கொள்ளப்பட்டதை தொடர்ந்து, வழக்கினை - விடுமுறை நீதிமன்றத்தின் மே 13 அமர்வுக்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.

மே 13 இன்று - இவ்வழக்கு விடுமுறைக்கால நீதிபதிகள் டி.எஸ்.சிவஞானம் மற்றும் ஜி.சொக்கலிங்கம் ஆகியோர் முன்னிலையில் - 64வது வழக்காக வந்தது. இன்றைய விசாரணையின் போது - நகர்மன்றத் தலைவர் ஐ.ஆபிதா சேக், ஆணையர் காந்திராஜ் ஆகியோர் நீதிமன்றத்திற்கு வந்திருந்தனர்.

நகராட்சி சார்பாக தவிர்த்து எழுத்துப்பூர்வமாக எதிர் தரப்பினர் எவரும் தங்கள் வாதங்களை சமர்ப்பிக்காத நிலையில், வாய் மொழியிலான வாதங்கள் நடைபெற்றன.

அப்போது - வழக்கில் எழுப்பப்பட்டுள்ள கேள்விகள் பிரதானமாக சுற்றுச்சூழல் விதிமுறைகள் சம்பந்தமாக இருப்பதால், உயர்நீதிமன்றம் மூலம் விசாரணையை தொடர்வதா அல்லது தேசிய பசுமை தீர்ப்பாயத்திற்கு வழக்கினை மாற்றுவதா என முடிவு செய்ய, எதிர் மனுதாரர்கள் ஒவ்வொருவரும் தங்கள் நிலைப்பாட்டை - தனித்தனியாக தாக்கல் செய்ய - கால அவகாசம் வழங்கி, இவ்வழக்கினை அடுத்த வாரத்திற்கு ஒத்தி வைப்பதாக நீதிபதிகள் கூறினர்.

அப்போது மனுதாரர்கள் சார்பாக பேசிய வழக்கறிஞர் எம்.பி.செந்தில், உயர்நீதிமன்றத்தில் இவ்வழக்கினை வாபஸ் பெற்று, தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் வழக்கினை தொடர - நீதிபதிகளிடம் உடனடி அனுமதி கோரினார். அதனை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், அது குறித்த தீர்ப்பினை வழங்கினர்.

மனுதாரர்கள் சார்பாக வழக்கறிஞர்கள் டி.அருள் மற்றும் எம்.பி.செந்தில் ஆகியோர் ஆஜராகினர்.

அரசு துறை தரப்புகள் சார்பாக அரசு வழக்கறிஞர்கள் கே.செல்லப்பாண்டியன், பாஸ்கர பாண்டியன், மாசு கட்டுப்பாடு வாரியம் சார்பாக வழக்கறிஞர் சி.இளமான், நகர்மன்றத் தலைவர் ஐ.ஆபிதா சேக் சார்பாக அஜ்மல் அஸோசியேட்ஸ், நகர்மன்ற ஆணையர் சார்பாக அரசு வழக்கறிஞர் எம்.ராஜராஜன், ஒப்பந்ததாரர் சார்பாக எஸ்.முத்து கிருஷ்ணன் ஆகியோர் ஆஜராகினர்.

[Administrator: செய்தி திருத்தப்பட்டது @ 6:30 pm / 13.5.2015]


Previous News ItemNext News Item
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. Re:...
posted by nizam (india) [14 May 2015]
IP: 115.*.*.* India | Comment Reference Number: 40553

சே சே அக்கபோராக இருக்கிறது. ஒரு குப்பை கொட்டும் விசயத்துக்கு இவ்வளவு மனித உழைப்பு ஈகோகள் தேவைதான மக்கள் வெறுப்பின் விளிம்பில் இருக்கிறார்கள்

இரண்டு பெரிய ஊரின் இணையங்களுக்கு என்னை போன்ற சாமாநீயரின் வேண்டுகோள் இந்த விசயத்துக்கு முகியத்துவத்ட்யை குறைப்பது நல்லது இணையத்தில் வெளியாலவேண்டும் என்பதாலோ இரு தரப்பினரும் சமாதானம் சமரசம் செய்து கொள்ள வழிகள் இருந்தும் செயாமல் நீதிமன்ற நடவடிக்களில் இடுபடுகிரார்கள் என்ற சந்தேகம் உண்டாகிறது.

என்னை பொருத்தவரை காயல் விசயங்களை பொருத்தவரை உலக காயல் மன்றகல்தான் மிகபெரிய நீதிமன்றம். குப்பைமேடு விவகாரத்தின் கருத்துவேர்பாடு நகரமன்ற தேர்தலுக்கு அப்புறம் உலக காயலர்களிடையே உண்டான மனகசப்பை அடிப்படையாக உண்டானது என்று மக்களிடம் பொதுவான கருத்து உள்ளது.

உலக காயலர்களே தாங்கள் நடத்தும் கூட்டங்களில் இதை முக்கிய அஜண்டாவாக எடுத்து சமரசம் செய்து வைத்தால் இந்த பிரச்சினைக்கு முற்றுபுள்ளி வர alla போதுமானவன்.

நகரில் கவனம் செலுத்துவதற்கு விசயங்கள் எவ்வளவோ உள்ளன முதலில் மழை வடிகால் விசயத்துக்கு வருவோம் இப்போது பெய்த சாதார மழைக்கு மிக பொருட்செலவில் நடத்தபடுகிற விளையாட்டு போட்டியை வேறு இடத்தில் நடத்தும் சூழ்நிலை என்றால் அடைமழை வந்தால் தாழ்வான பகுதிகளில் மக்கள் வாழ்க்கை என்னவாகும் இதுவரை பல முறை இணையத்தில் வேண்டுகோள் விடுத்தும் இதுவரை எந்த முயற்ச்சிகளும் நகராட்சி மேற்கொண்டதாக இணையம் மூலம் தெரியவில்லை எனது தாழ்மையான கேள்வி?

எவ்வளவு காலத்து அடைமழை. வருவது மிக பொருட்செலவில் உண்டாக்க பட்ட சாலை வயல்பாத்தி போல vettividuvadu செய்துகொண்டு இருப்பது நிரந்தர தீர்வாக வடிகால் பணிகளை முடுக்கி விட வேண்டாமா.

மற்றதாக புதிய perundhu nilayam அல்ஜம்மிஉல் askar keemu kachheri தெருவு அருகில் உள்ள சாலைகள் விபத்து undaakum அளவுக்கு சேதமடை துள்ளது நவீன காலத்தில் நோய் தாகத்தில் சாமானியர் படும் பாடு சொல்லி மாளாது. அரசு கே எம் டி மருத்துவமனைகளுக்கு நகராட்சி தனது நிதியை கொடுத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிறிய நிவாரணம் உண்டாக வாய்ப்பாகுமே

இப்போது கல்வி சீசன் கொள்ளையடிக்கும் கல்விநிருவங்கள் இதற்க்கு மாநகராட்சி தங்களால் முடிந்த கையிருப்பில் உள்ள தொகையை கொண்டு சிறிய நிவாரணத்தை கொடுக்கலாமே

இதையெல்லாம் விவாதிக்க குறைந்தபட்சம் நகரமன்ற கூட்டம் நடத்த படவேண்டுமே கொஞ்ச காலத்துமுன்பு சண்டைசச்சரவோடு கூட்டமாவது நடக்கும் இப்போது அதுவும் நடப்பதாக தெரியவில்லை குறைந்த பட்சம் இணையத்தில் விவாதிக்கப்படும் காமன்டில் பங்கேற்று நகரமன்ற தலைவரும் உருபினர்களும் பதில் அளித்தால் சற்று ஆறுதலாக இருக்கும்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
2. ஆக்கப்பூர்வ யோசனைபதிவிற்கு அரைநிமிடம் ஒதுக்குங்கள்!..
posted by முஹம்மது ஆதம் சுல்தான்! (yanbu) [14 May 2015]
IP: 128.*.*.* Romania | Comment Reference Number: 40567

சகோதரர் நிஜாம் அவர்களின் யோசனை மிகவும் நல்ல யோசனையாகப்படுகிறது!

காய்தல் உவத்தலின்றி,நடுநிலையான நெஞ்சத்துடன் நகராட்சித்தலைவரும்,உறுப்பினர்களும் ஊரின் நலன்நாடும் நடுநிலை நியாய உணர்வுள்ளவர்கள் கேட்கும் கேள்விகளுக்கு தக்க பதில் தருவதோடு அதற்குரிய தீர்வையும் சொன்னால் ஒரு பத்து கேள்விக்குறிய பதிலின் எதிர்பார்ப்புகளில் குறைந்தது ஒரு இரண்டிற்க்காவது விடை கிடைத்து விடிவு காலம் பொறக்காதா?

முயற்சித்துபார்த்தால் என்ன?மக்கள் மன்றத்தை அவரவர்களின் அப்பழுக்கற்ற நெஞ்சமுடைய அரங்கில் கூடுவோம்.ஒவ்வொரு பிரிவினரும் ஊர்நலன் நாடி எந்த "ஈகோ"வுமில்லாமல் இமாலய பிரச்சனை முதல் இலேசான வரை இலகுவாக தீர்வுகாண முயற்சிப்போமே, மாத்தி யோசிப்போமே உலக மகா காயல் நலமன்ற கண்ணியமானவர்களே, என் உணர்வில் உள்ளதை வெள்ளையுள்ளத்தோடு வெளிப்படையாக கொட்டிவிட்டேன் இவனெல்லாம் சொல்லி நாமென்ன செய்றது.என்ற எண்ணமுடையவர்களைத்தவிர,

இந்த யோசனையை இன்னும் வேறு விதமாக கையாளலாமே என்ற உங்களின் அறிவுக்கூர் ஆலோசனையையாவது இது போன்ற மக்கள் மன்ற பொது கருத்து பதிவுறும் இணையதளத்தில் செய்யலாமே. யார் குத்தியாவது அரிசியாகனும்.ஆக்கப்பூர்வ யோசனைபதிவிற்கு ஒரு அரைநிமிடத்தையாவது ஒதுக்குங்களேன்,அன்புள்ளங்களே! அல்லாஹ் அனைத்தும் அறிந்தவன்!

அன்புடன்,
முஹம்மது ஆதம் சுல்தான்!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
3. இத்திட்டம் முடிவுற்றபின் மீண்டும் ஒருமுறை இக்கருத்தை / பதிவை காணுங்கள்
posted by தமிழன் முத்து இஸ்மாயில். (guruvayoor.) [14 May 2015]
IP: 163.*.*.* Japan | Comment Reference Number: 40579

சர்வே எண் 278 நகராட்சி பிரச்சனை இப்போதுள்ள பிரச்சனை அல்ல..! இது கடந்த 9 ஆண்டுகளாக நடைபெறும் சிக்கலான பிரச்சனை என்பது நகரில் எத்தனை பேருக்கு தெரியும்..!

சர்வே எண் 278 ல் நடைபெறும் பயோ கேஸ் திட்டத்தால் யார் பயன் அடைவார்கள் / பயன் அடைந்தார்கள் என்பது குறித்த உண்மை நிலவரம் விரைவில் வெளிப்படும்..!

சர்வே எண் 278 நகராட்சி பிரச்சனை சுயநலமா..? பொது நலமா..? இன்ஷா அல்லாஹ் - காலம் கடந்து பாருங்கள் உண்மை நிலவரம் நகர்மக்கள் அனைவருக்கும் விரைவில் விளங்கும்..!

(குறிப்பு:- கண்டிப்பாக சர்வே எண் 278ன் இத்திட்டடால் நகர் மக்கள் பயன் அடையபோவதில்லை இது எனது வலுவான பதிவு - காலம் கடந்து இத்திட்டம் முடிவுற்றபின் மீண்டும் ஒருமுறை இக்கருத்தை / பதிவை காணுங்கள்)


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>

முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்

பிற செய்திகள்
காலை முழுக்க இதமழை!  (12/5/2015) [Views - 2955; Comments - 2]

காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
FaamsCathedral Road LKS Gold Paradise
Fathima JewellersAKM Jewellers

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved