Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
3:31:49 AM
ஞாயிறு | 1 செப்டம்பர் 2024 | துல்ஹஜ் 1858, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
04:5612:2215:2518:3119:41
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:09Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்04:40
மறைவு18:26மறைவு17:26
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
04:5805:2305:48
உச்சி
12:17
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:4719:1119:36
Go to Homepage
செய்திகள்
Previous News ItemNext News Item
செய்தி எண் (ID #) 15931
#KOTW15931
Increase Font Size Decrease Font Size
வியாழன், மே 14, 2015
திமுகவிலிருந்து அனிதா ராதாகிருஷ்ணன் நீக்கம்!
செய்திகாயல்பட்டணம்.காம்
இந்த பக்கம் 3887 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (9) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 2)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}

திருச்செந்தூர் தொகுதி திமுக எம்எல்ஏ அனிதா ராதாகிருஷ்ணன் தி.மு.க., உயர்நிலை செயல்தி்ட்டக்குழு உறுப்பினரும், முன்னாள் மாவட்ட செயலாளருமான கருப்புசாமி பாண்டியன், ஆகியோர் தி.மு.க.,வில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளதாக திமுக தலைமைக் கழகம் அறிவித்துள்ளது.

இது குறித்து தி.மு.க. பொதுச்செயலாளர் அன்பழகன் இன்று வெளியிட்டுள்ள அறிக்கை:

தூத்துக்குடி தெற்கு மாவட்டம், திருச்செந்தூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் அனிதா ராதாகிருஷ்ணன் கழகக் கட்டுப்பாட்டை மீறியும், கழகத்திற்கு அவப்பெயர் ஏற்படும் வகையில் செயல்பட்டதாலும் தி.மு.க. உறுப்பினர் பொறுப்பு உட்பட கழகத்தின் அனைத்துப் பொறுப்புகளிலிருந்தும் தற்காலிகமாக நீக்கி வைக்கப்படுகிறார்.

காரணம் என்ன?

திருச்செந்தூர் தொகுதி திமுக - எம்.எல்.ஏ. அனிதா ராதாகிருஷ்ணன், முன்னாள் திமுக மாவட்ட செயலர் கருப்பசாமி பாண்டியன் ஆகியோர், அதிமுகவில் இணையவிருப்பதாக தகவல் பரவி உள்ளது.

கடந்த சில ஆண்டுகளாக, தூத்துக்குடி மாவட்ட திமுக செயலர் பெரியசாமிக்கும், அனிதாவுக்கும் ஏழாம் பொருத்தமாக இருப்பதால், அனிதாவால், கட்சியில் முழுமையாக செயல்பட முடியவில்லை. இதனால், திமுக சார்பில் நடந்த எந்த நிகழ்ச்சிகளிலும், அனிதா பங்கேற்காமல் ஒதுங்கி இருந்தார். இந்த விரக்தியில், மீண்டும் அதிமுக பக்கம் திரும்ப திட்டமிட்டிருந்தார்.

சொத்து குவிப்பு வழக்கில், அதிமுக பொதுச் செயலர் ஜெயலலிதாவுக்கு சாதகமாக தீர்ப்பு வந்ததும், அதற்கு வாழ்த்து தெரிவித்து உள்ளார், அனிதா. மேலும், எம்.எல்.ஏ. பதவியை, ஜெயலலிதா ராஜினாமா செய்ய சொன்னால், அதை செய்வேன் எனவும், கூறினார். அதேபோல், முன்னாள் திமுக மாவட்ட செயலர் கருப்பசாமி பாண்டியனும், அதிமுகவில் சேரப் போவதாக கூறப்படுகிறது.

சொத்துக்குவிப்பு வழக்கிலிருந்து ஜெயலலிதா விடுதலை ஆனதில் மகிழ்ச்சி. திருச்செந்தூர் தொகுதியில் போட்டியிட அம்மா விரும்பினால் ராஜினாமா செய்ய தயார் என அத்தொகுதியின் எம்எல்ஏவான அனிதா ராதாகிருஷ்ணன் கூறியிருந்தார். இது திமுக மேலிடத்திற்கு கடும் அதிருப்தியை ஏற்படுத்தி இருந்தது. இந்நிலையில், அவர் கட்சியிலிருந்து இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

தகவல்:
www.tutyonline.com


Previous News ItemNext News Item
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. திமுகவுக்கு விமோசனம் இல்லை.
posted by சாளை.அப்துல் ரஸ்ஸாக் லுக்மான் (அபூதாபி) [14 May 2015]
IP: 2.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 40575

அனிதா அண்ணாச்சிக்கு நல்ல காலம் பிறந்துட்டு. திமுக, பெரியசாமியின் குடும்ப அரசியலில் இருந்து மீளாத வரை, திருச்செந்தூர் தொகுதில் திமுகவுக்கு விமோசனம் இல்லை.

அனிதா அண்ணாச்சியை போல், மக்களின் உறுப்பினராக, இந்த தொகுத்திக்கு சேவை செய்தவர்கள் வேறு யாரும் இல்லை. குறிப்பாக நமதூருக்கு நலத்திட்டங்கள் கொண்டு வந்தவர் இவரை தவிர வேறு யாரும் இல்லை.

2016 சட்டமன்ற தேர்தலில், இந்த தொகுதி திமுவுக்கு இல்லை.

-சாளை அப்துல் ரஸ்ஸாக்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
2. எங்கிருந்தாலும் வாழ்க!
posted by முஹம்மது ஆதம் சுல்தான்! (yanbu) [14 May 2015]
IP: 128.*.*.* Romania | Comment Reference Number: 40576

எந்த கட்சியில் இருந்தாலும் அந்த கட்சிக்கு விசுவாசமில்லாமல் சில நேரங்களில் தமது கட்சி வேட்பாளருக்கு விரோதமான நிழல் நடவடிக்கையில் இறங்கும் இயல்புடைய குணம் கொண்டவர்!

ஏழை எளியவருக்கு உதவும் ஈகை குணத்தை இயல்பாகவே பெற்ற இதயமுடையவர்! எளிமையுடனும், பிரியமுடனும் பிறரிடம் பழகும் பண்பாளர்! எங்கிருந்தாலும் வாழ்க! செல்லுமிடத்தில் நலமுடனும், வளமுடனும் உணமையுடனும் வாழ்ந்து உயர்ந்தோங்குவீராக! அல்லாஹ் அனைத்தும்அறிந்தவன்!

அன்புடன்,
முஹம்மது ஆதம் சுல்தான்!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
3. அனிதா அண்ணன்...
posted by KJ KALIFA SEYED MOHAMED (CHENNAI) [14 May 2015]
IP: 182.*.*.* India | Comment Reference Number: 40577

கட்சி மாறுவது(தாவுவது) அண்ணனின் டிரென்ட். அரசியல் எனும் சாக்கடையில் ஒட்டு போடும் மக்களே பரிதாபத்துக்கு உரியவர்ஹல். 49 O (NOTA) வை ஞாபகத்தில் வைக்கவும்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
4. Re:...குமாரசாமியும் சுப்ரமணியசாமியும்
posted by mackie noohuthambi (kayalpatnam) [14 May 2015]
IP: 180.*.*.* India | Comment Reference Number: 40583

MEN MAY COME AND MEN MAY GO BUT I GO FOR EVER.

திமுக தலைவர் கலைஞர் இந்த மிரட்டல்களுக்கும் கட்சி மாறல்களுக் கும் அஞ்சியவர் அல்ல .அவர் குடும்பம் ''கழகம்'' என்றிருந்தது மாறி, ''தன் குடும்பமே கழகம்'' என்ற மனோநிலைக்கு தள்ளப் பட்டிருப்பது என்னவோ உண்மைதான்.

குடும்பம் மனைவி மக்கள் பாசம் என்று இருப்பவர்களுக்கு இந்த மாதிரி சபலங்கள் ஏற்படுவது இயற்கைதான். கலைஞரும் ஒரு சராசரி மனிதர் தான். அவரது பலவீனமும் அதுதான்

காமராஜர், அண்ணா, MGR , ஜெயலலிதா இவர்கள் யாருக்கும் இந்த குடும்பம் மக்கள் பேரன் பேத்தி என்ற நெருக்கடிகள் இல்லை.

ஆனாலும் கழகத்தின் தலைவராக அவர் பொறுப்பேற்ற நாள் முதல் அவர் இழந்த பெரும் இழப்பு MGR தான். அதற்குப் பிறகு படிப்படியாக அவர் இழப்பதற்கு ஒன்றுமில்லை என்று சொல்லும் அளவுக்கு கழகத்தின் முக்கிய தலைவர்கள் எல்லாம் ஒன்றன் பின் ஒன்றாக வெளியேறினார்கள்.

எனவே இப்போது அனிதா ராதாக்ருஷ்ணன் கருப்பசாமி அணி மாறுவது ஒன்றும் அவருக்கு அதிர்ச்சி தரும் செய்தி அல்ல. பத்தோடு பதினொன்று அத்தோடு இது ஒன்று.போனால் போகட்டும் போடா இந்த பூமியில் நிலையாய் வாழ்ந்தவர் யாரடா என்று பாடி விட்டு பூ என்று ஊதிவிட்டு போய் விடுவார்.

அவருக்கு இப்போது உள்ள மன உளைச்சல் எல்லாம், நீதிபதி குமாரசாமி இப்படி செய்துவிட்டாரே, எல்லாவற்றையும் நீர்த்து போக செய்து விட்டாரே என்ற கவலைதான்.

குமாரசாமியால் கலைஞருக்கு தலைவலி
சுப்ரமணியசாமியால் அம்மாவுக்கு தலைவலி


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
5. Re:...
posted by nizam (india) [14 May 2015]
IP: 115.*.*.* India | Comment Reference Number: 40586

லுக்மான் காக்கா சொல்வது நுற்று நூறு சரி. பல நல திட்டங்கள் குறிப்பாக நல்லூர் ரோடு அது சிரைமப்பதர்க்கு முன்பு அந்த ரோடை கடக்க அரைமணி நேரம் ஆகும். நமதூர் கடற்கரை பூங்கா தண்ணீர் தொட்டிகள் ஏன் தற்போது செயல்படுத்தப்பட்டுவரும் குடிநீர் திட்டம் இவர் அமைச்சராக இருக்கும் போதுதான் செயல்வடிவம் பெற்றது.

காயல் திருசெந்தூர் சாலை பலனுற்றுகனகாநோருக்கு இதய அறுவை சிஹிச்சை உதவி நபிகளாரின் பொன்மொழியை நினைவு கூறுகிறேன் ஒருவர் செய்த உதவிக்கு கைம்மாறு அந்த உதவி பிறரிடம் அடிகடி சொல்வது குறைந்தபட்சம் திட்டாமல் இருக்கலாம் அவரை பொருத்தவரை அவ்வளவு சீக்கிரம் தீமூகாவை விட்டு வந்துருக்கமாடார்

அவரது இன்றைய பேட்டியை தந்தி டிவியில் கண்டேன் கலைஜரை இச்டலினை ஒரு வார்த்தை இகழவில்லை தூத்துக்குடியில் கடந்துவரும் கேவலமான அரசியிலை சாடினார்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
6. Re:...
posted by சாளை எஸ்.ஐ.ஜியாவுத்தீன் (அல்கோபார்) [14 May 2015]
IP: 94.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 40588

காற்றுள்ள போதே தூற்றிக்கொள்’’ என்ற பழமொழிக்கு ஒப்ப வாழ்பவர்கள் தான் அரசியல்வாதிகள்.

நம் அண்ணாச்சி காற்று இல்லாத போதும் தூற்றும் ஆற்றல் உள்ளவர்.

நடப்பவைகள் மக்களுக்கு நன்மையாக அமையட்டும்.

சாளை எஸ்.ஐ.ஜியாவுத்தீன், அல்கோபார்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
7. Re:...
posted by K.D.N.MOHAMED LEBBAI (RIYADH) [14 May 2015]
IP: 159.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 40589

அஸ்ஸலாமு அலைக்கும்

இந்த அரசியலில் என்னதான் நடக்கிறது என்றே ,,யாராலும் சொல்ல முடிய வில்லை .......நமது ஊரை பொறுத்த வரைக்கும் நம் மரியாதைக்குரிய ..அனிதா ராதாகிருஷ்ணன் அண்ணாச்சி அவர்கள் நல்லவர் தான் ....நமது ஊரின் பல நல்ல காரியங்களில் முனைப்பாகவே செய்து உள்ளார்கள் ...என்பதை யாராலும் மறுக்கவே முடியாது .......

மரியாதைக்குரிய நம் .அனிதா ராதாகிருஷ்ணன் அண்ணாச்சி நமது ஊரின் சொத்து .......நமது ஊர் அனைத்து மக்களும் அண்ணாச்சி அவர்களிடம் எப்போதும் பாசத்துடன்.....இருப்பார்கள் .....இது தான் உண்மை ......

அண்ணாச்சி அவர்கள் எந்த கட்சிக்கு போனாலும் அவர்களுக்கு இந்த தொகுதி மக்கள் பாசமாகவே இருப்பார்கள் ....பொது மக்களின் நலனுக்காகவே உள்ள ஒருவர் நம் அண்ணாச்சி தான் ,...

வஸ்ஸலாம்

K.D.N.MOHAMED LEBBAI
RIYADH


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
8. திரும்பி பார்க்கிறேன்!...
posted by முஹம்மது ஆதம் சுல்தான்! (yanbu) [15 May 2015]
IP: 128.*.*.* Romania | Comment Reference Number: 40597

திரும்பி பார்க்கிறேன்!

அண்ணாச்சி அனிதா அவர்கள் அ தி மு க விலிருந்து தி மு க வில் இணைந்து ,நமதூருக்கு வருகை தந்த நேரம் ஊரே அல்லோல கல்லோல பட்டு கொண்டிருந்த வேலையில் பஜாரில் சகோதரர் சேக் அப்துல் காதர்(தாடி காதர்) அவர்களை கேட்டேன் மச்சான் நீங்கள் மட்டும் என்ன பாக்கி நீங்களும் தி மு க வில் சேர்ந்திட வேண்டியதுதானே என்றேன், அதற்கு அவரின் நெத்தியடி பதிலாக,போடா போ ,காயலில் கடைசி தொண்டன் அ தி மு க வில் இருக்கிறான் என்றால் அது நான்தாண்டா என்றாரே பார்க்கலாம்!

கொள்கையில் என் எதிகட்சியை சேர்ந்தவராக இருந்தாலும் ,அவர் கட்சி மீது வைத்திருக்கும் விசுவாசம் ,நம்பிக்கை, இலட்சியப்பிடிப்பு எதிலும் இமியளவு கூட சபலம் இல்லாத உறுதியான அவர் உள்ளம் உயரே உயரே எங்கேயோ எட்டாத இடத்தில் பறந்து சிறந்துயர்வதுபோல் எண்ணி மெய்சிலிர்ந்து போனேனேன்! அதே நேரம்,

கடந்த 10,15 நாட்களுக்கு முன்னால் ஒரு கட்சி கூட்ட மேடையில் முன்வரிசையில் அமர்ந்திருந்த ஒருவரை குறிப்பிட்டு ஒரு பேச்சாளர் சொன்ன அடைமொழி வார்த்தை கண்ணியமிகு கட்சியின் மூத்த உறுப்பினர் அவர்களே என்று அழைத்தார்.அந்த வார்த்தையை கேட்டவுடன் நான் அதிர்ச்சியானேன்.ஏனெனில் அவரின் பலகட்சி பிரவேசத்தை சற்று பின்னோக்கிப்பார்த்தேன் முதலில் தி மு க--to - அதிமுக- to - ஜானகி அதிமுக- to - மதிமுக- to - அதிமுக- to - தி மு க- to - அதிமுக (தற்போதைய நிலை) நாளை பா ஜ க விற்கு பாய்ந்தாலும் ஆச்சரியமில்லை.

அற்ற குளத்து அருநீர் பறவையில் தான் எத்தனை விதம் ,எத்தனை ரகம்.இவை எல்லா வற்றையும் எற்று கொள்கிறோமே நாம் எந்த ரகம்? அல்லஹ் அனைத்தும் அறிந்தவன்!

அன்புடன்,
முஹம்மது ஆதம் சுல்தான்!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
9. Re:...
posted by S.A.K.Seyed Meeran.JEDDAH. (Jeddah) [15 May 2015]
IP: 5.*.*.* | Comment Reference Number: 40598

பணத்திற்காகவும்,பதவி சுகத்திற்காகவும் இயக்கத்தில் இருப்பவனல்ல தி.மு.க காரன் .

அற்ற குளத்து அருநீர் பறவை போல் இல்லாது ஒட்டியும் ஆம்பலும் போல் ஒட்டி உறவாடி சோதனைகளிலும் வேதனைகளிலும் உரமாய் இருப்பவனே உண்மைத் தொண்டன் ,

கலைஞரின் அன்பு உடன்பிறப்பு.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>

முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்

பிற செய்திகள்
மீண்டும் இதமழை!  (15/5/2015) [Views - 2810; Comments - 1]

காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
Fathima JewellersAKM Jewellers
FaamsCathedral Road LKS Gold Paradise

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved