Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
4:11:25 AM
புதன் | 17 ஏப்ரல் 2024 | துல்ஹஜ் 1721, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
04:5412:2415:2818:3319:43
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:07Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்13:37
மறைவு18:27மறைவு01:41
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
04:5605:2105:45
உச்சி
12:17
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:4819:1319:38
Go to Homepage
செய்திகள்
Previous News ItemNext News Item
செய்தி எண் (ID #) 15956
#KOTW15956
Increase Font Size Decrease Font Size
செவ்வாய், மே 19, 2015
ஆஸாத் கோப்பை பொன்விழா கால்பந்து 2015: சென்னை அணி அடுத்த சுற்றுக்கு முன்னேற்றம்! அன்றாடம் போட்டிகள் இணையத்தில் நேரலை!!!
செய்திஎஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்)
இந்த பக்கம் 4506 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (5) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 0)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}

காயல்பட்டினம் ஐக்கிய விளையாட்டு சங்கத்தின் சார்பில், மவ்லானா அபுல்கலாம் ஆஸாத் நினைவு சுழற்கோப்பைக்கான - அகில இந்திய அளவிலான கால்பந்து சுற்றுப்போட்டிகள் ஆண்டுதோறும் நடத்தப்பட்டு வருகிறது.

50ஆம் ஆண்டு பொன்விழா சுற்றுப்போட்டிகள் இம்மாதம் 06ஆம் நாள் புதன்கிழமை 16.50 மணியளவில், ஐக்கிய விளையாட்டு சங்க மைதானத்தில் துவங்கியது.



மே 18 திங்கட்கிழமை மாலையில் நடைபெற்ற போட்டியில், சென்னை மாநகர காவல் (சிட்டி பொலிஸ்) அணியும், காயல்பட்டினம் ஐக்கிய விளையாட்டு சங்க (USC) அணியும் மோதின.





































முதற்பாதியில் மந்தமாக ஆடிய USC அணி, இரண்டாவது பாதியில் முழு உத்வேகத்துடன் விளையாடி வெற்றி பெற முயற்சி செய்தது. எனினும் அதற்கான வாய்ப்பு கிடைக்காமலே போயிற்று. கடந்தாண்டு USC அணியின் ஆட்டத்தைக் கண்டு ரசித்தவர்களுக்கு இப்போட்டியில் அவர்களின் ஆட்டம் ஏமாற்றத்தையே அளித்தது.





















இரு அணிகளுமே வெற்றிபெறும் முனைப்புடன் விளையாடியபோதிலும், சென்னை வீரர் உதயகுமார் ஆட்டத்தின் முதற்பாதியில் 23ஆவது நிமிடத்தில் ஒரு கோல் அடித்தார். பின்னர் ஆட்ட நிறைவு வரை எந்த அணியும் கோல் அடிக்காததால், 1-0 என்ற கோல் கணக்கில் சென்னை அணி வெற்றிபெற்று, அடுத்த சுற்றுக்கு முன்னேறியது.













இப்போட்டியை, நகரின் அனைத்துப் பகுதிகளிலிருந்தும் கால்பந்து ரசிகர்கள் திரளாக வந்து பார்த்து ரசித்தனர். உள்ளூர் அணி (USC) விளையாடியதால், ரசிகர்களின் ஆதரவு அவ்வணிக்கு ஒட்டுமொத்தமாகக் கிடைத்தது.













































இப்போட்டியில், காயல்பட்டினம் புறவழிச்சாலையில் அமைந்துள்ள பீ.எச்.எம்.ரெஸ்டாரெண்ட் உரிமையாளர் பாளையம் ஹபீப் முஹம்மத் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டார். இடைவேளையின்போது, அவருக்கு ஈரணியினரும், நடுவர்களும் அறிமுகம் செய்து வைக்கப்பட்டனர்.







மே 19 செவ்வாய்க்கிழமை) மாலை நடைபெறும் போட்டியில், சென்னை மாநகர காவல் (சிட்டி பொலிஸ்) அணியும், கோல்கத்தா CISF அணியும் மோதவுள்ளன.

அன்றாடம் நடைபெறும் போட்டிகள் அனைத்தும், www.azadtrophy.com என்ற இணையதளத்தில் நேரலை செய்யப்பட்டு வருகிறது.

தகவல் உதவி:
‘ஆசிரியர்’ கலீஃபா ஸதக்கத்துல்லாஹ்


நடப்பாண்டு கால்பந்துப் போட்டி குறித்த முந்தைய செய்தியைக் காண இங்கே சொடுக்குக!

கடந்தாண்டு நடைபெற்ற பன்னிரண்டாம் நாள் போட்டி குறித்த செய்தியைக் காண இங்கே சொடுக்குக!


Previous News ItemNext News Item
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. வெற்றி நமதே! அல்லாஹ் அனைத்தும் அறிந்த்தவன்! ...
posted by முஹம்மது ஆதம் சுல்தான்! (yanbu) [19 May 2015]
IP: 128.*.*.* Romania | Comment Reference Number: 40638

USC யும், KSC யும் இரண்டும் இரண்டு கண்கள்.இருஅணியினரும் இந்த பொன்னாண்டு பெருமை மிக சுழற்கோப்பையை பகிர்ந்து கொண்டால் பெரானந்தத்தின் உச்சியில் காயல் களைகட்டும் என்று எதிர்பார்த்தோம்.ஆனால் ஒரு அணியின் வெற்றி விளிமப்பில் நழுவி விட்டது.

பரவாயில்லை, வெற்றிக்கு வித்திடபட்டது வளர்வதில் சிறு வேகம் குறையலாம்.கடைசியில் காய்,கனியாகி அந்த வெற்றிககனியை நம் கரங்களாலையே கொய்திடலாம் இன்ஷா அல்லாஹ்! பல வெற்றி தோல்விகளை சந்தித்த வீரனாகிய உனக்கு நான் அதிகம் விளக்கத்தேவையில்லை!

ஒரு தாய்க்கு இரு தனயன்கள் தன் கண் முன்னே வெற்றி வீரர்களாக வாகை சூடிவருவதை பார்ப்பதில் பெருமைதான் அந்த வெற்றி ஒரு பிள்ளைக்கு சற்று காலம் தாழ்த்தியும் ஒரு பிள்ளைக்கு கைகளிலும் கிடைத்தால் அதையும் பார்த்து மனநிறைவு மகிழ்வில் அந்த தாய் எப்படி தன்னிதையம் பூரிப்படைவாளோ அதே அகமகிழ்வை அத்தனை காயல் நெஞ்சங்களும் அடையும் என்பதில் கிஞ்சிற்றும் சந்தேகமில்லை!

உற்ற்சாக உள்ளத்தோடு நம் மண்ணின் மறு அணியின் காளையர்களே களம் இறங்குங்கள் வெற்றி நமதே! அல்லாஹ் அனைத்தும் அறிந்த்தவன்!

அன்புடன்,
முஹம்மது ஆதம் சுல்தான்!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
2. Re:...
posted by A.M.Syed Ahmed (Jeddah) [19 May 2015]
IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 40639

அருமையான ஒரு நிகழ்வு ......வெற்றிக்கு முயற்சி செய்த USC க்கு வாழ்த்துக்கள் ......KSC இக்கு வெற்றி பெற வாழ்த்துக்கள்...பாஸ் இல்லாமலும் & காசு இல்லாமலும் ஆர்வமுகுதியால் " புளிய" மரத்தில் ஏறி நண்பர்களுடன் ஏறி பார்த்து ரசித்ததை எண்ணி வியக்கிறேன்...அதே மைதானத்தில் LK ஸ்கூல் காக பலமுறை விளையாடியதை நினைக்கிறன்.. "பஞ்சாப்பு சிங்கை" தெரு தெருவாக சுற்றி காட்டும் சிறுவர்கள் கூட்டம் .GREAT.

என்னுடைய ஒரு சிறிய "REQUEST" பெண்களும் இந்த மேட்சை நேரில் பார்க்க ஏற்பாடு பண்ணுங்கள்...உங்களுக்கு காசும் கிடைக்கும் & பெண்களுக்கு சீரியலில் இருந்து விடுதலையும் கிடைக்கும் & அடைபட்டு இருக்கும் பெண்களுக்கு மற்ற பெண்களுடனும், தோழி மார்களுடனும் நேரில் பேசும் வாய்ப்பும் கிடைக்கும் .(IF ISLAAM PERMITS WITH THE SEPARATE ENTRANCE AND PLACE)

Courtesy : S.A. Ayesha Hanan - Jeddah


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
3. Re:...
posted by K.D.N.MOHAMED LEBBAI (RIYADH) [19 May 2015]
IP: 159.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 40640

அஸ்ஸலாமு அலைக்கும்

நமது ஊர் USC .....அணியர்களின் தற்போதைய விளையாட்டு .அருமையே .....தங்களின் அற்புதமான விளையாட்டில் மெருகு தன்மை அதிகரித்து விட்டது ....அல்ஹம்துலில்லாஹ் ......

இன்ஷா அல்லாஹ்.....அடுத்து வருகின்ற விளையாட்டில் தாங்கள் வெற்றி காண்பீர்கள் ......தங்களின் இவ்வளவு முன்னேற்றம் நமக்கு பெருமையே .........

அடுத்து விளையாட உள்ள நமது KSC அணியர்களின் வெற்றியை எதிர் பார்த்து காத்து உள்ளோம் ....இன்ஷா அல்லாஹ் வல்ல நாயன் ....வெற்றியை நமது ஊர் KSC அணியர்களுக்கு தந்தருள்வானாகவும் ஆமீன்......

USC மைதானத்தை தற்போது நாம் பார்க்கும் போது ...எமக்கு பழைய நியாபகங்கள் தான் வருகின்றன .....

பல இன்னல்களுக்கு மத்தியிலும் ..தொடர்ந்து இவ்விளையாட்டினை நடத்தி வரும் நமது USC நிர்வாகத்தை மனதாரவே பாராட்டுகிறேன் ......

வஸ்ஸலாம்

K.D.N.MOHAMED LEBBAI
RIYADH


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
4. Re:...
posted by சாளை எஸ்.ஐ.ஜியாவுத்தீன் (அல்கோபார்) [19 May 2015]
IP: 95.*.*.* Romania | Comment Reference Number: 40641

முதலில் நச்..ச் என்று அருமையான ஆக்க்ஷன் புகைப்படங்களை பதிவு செய்த தம்பி எஸ்‌கே‌எஸ் க்கு நன்றிகள் பல. அதிலும் USC அணிக்காக விளையாடும் மச்சான்கள் இருவரையும் ஒன்றாக பதிவு செய்தது அருமை.

என் குடும்பத்தார், நண்பர்கள் அனைவர்களையும் பார்த்து பரவசம்.

யு‌எஸ்‌சி அணி கண்டிப்பாக வெற்றிபெறும் என்ற நம்பிக்கையில் இருந்தோம். ஓஹ்..ஹ் ஹைர்.. எல்லாம் நன்மைக்கே.

அனைத்து சகோதரர்களுக்கும் பாராட்டுக்கள்.

கே‌எஸ்‌சி அணிக்காக பிராத்திப்போம்.

சாளை எஸ்.ஐ.ஜியாவுத்தீன், அல்கோபார்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
5. Re:...கோட்டா,கூடாது.!
posted by omer anas (doha,qatar) [20 May 2015]
IP: 37.*.*.* | Comment Reference Number: 40642

இது,,,மிகப் பெரிய அதிர்ச்சியாக இருக்கும் கால்பந்தாட்ட ரசிகர்களுக்கு.! உள்ளூரில்,மிகப்பலம் பொருந்திய அணியான,USC அணி முதல் ஆட்டத்திலேயே வெளியேறி இருக்கிறது என்றால், அதிர்ச்சிதான் ஏற்ப்படும் முதலில் எங்களுக்கு.!!

வெற்றி தோல்வி என்பது வீரர்களுக்கு அழகு. ஆனாலும் இங்கே,இப்பவே, தோல்வியின் காரணங்கள்,அறியப்பட வேண்டும். அப்பத்தான் வரும் காலத்தில்,அது நமக்கு வெற்றிக் கனியாக மாறும்.!

நான் கால்பந்தாட்ட ரசிகன் மற்றுமின்றி கால்பந்தாட்ட மைதான விளையாட்டு அனுபவஸ்தன் என்ற முறையில் எனது கருத்தினை இங்கே பதிகிறேனே அல்லாது, USC நிர்வாகத்தில் தலையிடும் உரிமை எனக்கில்லை!

கருத்து 1

எந்தநிலையிலும்,கோச்சின், நிலை மீது தலையிடாதீர்கள்.

கருத்து 2

வருஷம் முழுவதும் இந்த இளம் வீரர்களை கட்டிக் காத்த கோச்சையே தேர்ந்தெடுத்து ஊக்குவியுங்கள்!

கருத்து 3

முதிய இளைஞ்சர்கள் தானே முன் வந்து, துடிப்பான இளைஞ்சர்களுக்கு வழி விடுங்கள்.

கருத்து 4

கோட்டா முறையினை மாற்றி, தகுதி வாய்ந்த வீரர்களை மட்டுமே களம் இறக்குங்கள்.

காரணம்...!

இது விழா அல்ல விளையாட்டு.! இங்கே இளைஞ்சனால், மட்டுமே சாதிக்க முடியும்.!

இன்று போனால் என்ன,
நாளைய வெற்றி நமதேஎன்று துஆச்செய்தவண்ணம்,

உங்கள்.
உமர் அனஸ்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>

முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்

பிற செய்திகள்
பப்பரமார் தெரு??? (?!)  (21/5/2015) [Views - 4150; Comments - 6]

காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
Fathima JewellersAKM Jewellers
FaamsCathedral Road LKS Gold Paradise

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved