காயல்பட்டினம் ஐக்கிய விளையாட்டு சங்கத்தின் சார்பில், மவ்லானா அபுல்கலாம் ஆஸாத் நினைவு சுழற்கோப்பைக்கான - அகில இந்திய அளவிலான கால்பந்து சுற்றுப்போட்டிகள் ஆண்டுதோறும் நடத்தப்பட்டு வருகிறது.
50ஆம் ஆண்டு பொன்விழா சுற்றுப்போட்டிகள் இம்மாதம் 06ஆம் நாள் புதன்கிழமை 16.50 மணியளவில், ஐக்கிய விளையாட்டு சங்க மைதானத்தில் துவங்கியது.
![](/newsimg/65201553217.jpg)
மே 18 திங்கட்கிழமை மாலையில் நடைபெற்ற போட்டியில், சென்னை மாநகர காவல் (சிட்டி பொலிஸ்) அணியும், காயல்பட்டினம் ஐக்கிய விளையாட்டு சங்க (USC) அணியும் மோதின.
![](/newsimg/195201564086.jpg)
![](/newsimg/195201564397.jpg)
![](/newsimg/195201563720.jpg)
![](/newsimg/195201563745.jpg)
![](/newsimg/195201563757.jpg)
![](/newsimg/195201563767.jpg)
![](/newsimg/195201564415.jpg)
![](/newsimg/195201563778.jpg)
![](/newsimg/195201563788.jpg)
![](/newsimg/195201563800.jpg)
![](/newsimg/195201563812.jpg)
![](/newsimg/195201563822.jpg)
![](/newsimg/195201563832.jpg)
![](/newsimg/195201563841.jpg)
![](/newsimg/195201563917.jpg)
![](/newsimg/195201563926.jpg)
![](/newsimg/195201563937.jpg)
![](/newsimg/195201563948.jpg)
முதற்பாதியில் மந்தமாக ஆடிய USC அணி, இரண்டாவது பாதியில் முழு உத்வேகத்துடன் விளையாடி வெற்றி பெற முயற்சி செய்தது. எனினும் அதற்கான வாய்ப்பு கிடைக்காமலே போயிற்று. கடந்தாண்டு USC அணியின் ஆட்டத்தைக் கண்டு ரசித்தவர்களுக்கு இப்போட்டியில் அவர்களின் ஆட்டம் ஏமாற்றத்தையே அளித்தது.
![](/newsimg/195201563958.jpg)
![](/newsimg/195201563970.jpg)
![](/newsimg/195201563982.jpg)
![](/newsimg/195201563993.jpg)
![](/newsimg/195201564007.jpg)
![](/newsimg/195201563861.jpg)
![](/newsimg/195201563874.jpg)
![](/newsimg/195201563887.jpg)
![](/newsimg/195201563898.jpg)
![](/newsimg/195201563908.jpg)
இரு அணிகளுமே வெற்றிபெறும் முனைப்புடன் விளையாடியபோதிலும், சென்னை வீரர் உதயகுமார் ஆட்டத்தின் முதற்பாதியில் 23ஆவது நிமிடத்தில் ஒரு கோல் அடித்தார். பின்னர் ஆட்ட நிறைவு வரை எந்த அணியும் கோல் அடிக்காததால், 1-0 என்ற கோல் கணக்கில் சென்னை அணி வெற்றிபெற்று, அடுத்த சுற்றுக்கு முன்னேறியது.
![](/newsimg/195201564016.jpg)
![](/newsimg/195201564028.jpg)
![](/newsimg/195201564039.jpg)
![](/newsimg/195201564051.jpg)
![](/newsimg/195201564063.jpg)
![](/newsimg/195201564074.jpg)
இப்போட்டியை, நகரின் அனைத்துப் பகுதிகளிலிருந்தும் கால்பந்து ரசிகர்கள் திரளாக வந்து பார்த்து ரசித்தனர். உள்ளூர் அணி (USC) விளையாடியதால், ரசிகர்களின் ஆதரவு அவ்வணிக்கு ஒட்டுமொத்தமாகக் கிடைத்தது.
![](/newsimg/195201564107.jpg)
![](/newsimg/195201564121.jpg)
![](/newsimg/195201564131.jpg)
![](/newsimg/195201564143.jpg)
![](/newsimg/195201564153.jpg)
![](/newsimg/195201564164.jpg)
![](/newsimg/195201564175.jpg)
![](/newsimg/195201564185.jpg)
![](/newsimg/195201564198.jpg)
![](/newsimg/195201564208.jpg)
![](/newsimg/195201564219.jpg)
![](/newsimg/195201564231.jpg)
![](/newsimg/195201564241.jpg)
![](/newsimg/195201564255.jpg)
![](/newsimg/195201564267.jpg)
![](/newsimg/195201564279.jpg)
![](/newsimg/195201564290.jpg)
![](/newsimg/195201564300.jpg)
![](/newsimg/195201564312.jpg)
![](/newsimg/195201564322.jpg)
![](/newsimg/195201564334.jpg)
![](/newsimg/195201564344.jpg)
இப்போட்டியில், காயல்பட்டினம் புறவழிச்சாலையில் அமைந்துள்ள பீ.எச்.எம்.ரெஸ்டாரெண்ட் உரிமையாளர் பாளையம் ஹபீப் முஹம்மத் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டார். இடைவேளையின்போது, அவருக்கு ஈரணியினரும், நடுவர்களும் அறிமுகம் செய்து வைக்கப்பட்டனர்.
![](/newsimg/195201564363.jpg)
![](/newsimg/195201564374.jpg)
![](/newsimg/195201564383.jpg)
மே 19 செவ்வாய்க்கிழமை) மாலை நடைபெறும் போட்டியில், சென்னை மாநகர காவல் (சிட்டி பொலிஸ்) அணியும், கோல்கத்தா CISF அணியும் மோதவுள்ளன.
அன்றாடம் நடைபெறும் போட்டிகள் அனைத்தும், www.azadtrophy.com என்ற இணையதளத்தில் நேரலை செய்யப்பட்டு வருகிறது.
தகவல் உதவி:
‘ஆசிரியர்’ கலீஃபா ஸதக்கத்துல்லாஹ்
நடப்பாண்டு கால்பந்துப் போட்டி குறித்த முந்தைய செய்தியைக் காண இங்கே சொடுக்குக!
கடந்தாண்டு நடைபெற்ற பன்னிரண்டாம் நாள் போட்டி குறித்த செய்தியைக் காண இங்கே சொடுக்குக! |