Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
10:22:06 AM
வியாழன் | 25 ஏப்ரல் 2024 | துல்ஹஜ் 1729, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
04:5012:2115:3118:3219:44
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:03Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்19:38
மறைவு18:27மறைவு06:46
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
04:5105:1705:42
உச்சி
12:15
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:4819:1419:39
Go to Homepage
செய்திகள்
Previous News ItemNext News Item
செய்தி எண் (ID #) 16386
#KOTW16386
Increase Font Size Decrease Font Size
சனி, ஆகஸ்ட் 8, 2015
தொலைபேசி நிலைய துணைப் பொறியாளர் நம்பிராஜன் பணி நிறைவு பெற்றார்! பொதுமக்களுக்கு அறிக்கை!!
செய்திஎஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்)
இந்த பக்கம் 2979 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (4) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 0)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}

காயல்பட்டினம் தொலைபேசி நிலைய துணைப் பொறியாளர் பீ.நம்பிராஜன், 30.06.2015 அன்று பணி நிறைவு பெற்றுள்ளார்.

அவருக்கு, 29.06.2015 அன்று காயல்பட்டினம் தொலைபேசி நிலையத்திலும், 30.06.2015 அன்று தூத்துக்குடி மண்டல அலுவலகத்திலும் வழியனுப்பு விழா நடைபெற்றது.

இவை குறித்தும், பொதுமக்களுக்குத் தேவையான சில தகவல்களையும் உள்ளடக்கி, பணி நிறைவு பெற்றுள்ள பீ.நம்பிராஜன் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:-

காயல்பட்டினம் தொலைபேசி நிலைய சந்தாதாரர் பெருமக்களே! எனது பணிவான வணக்கங்கள்!

P.நம்பிராஜன் SDE, BSNL காயல்பட்டினம் ஆகிய நான் 30.06.2015 அன்று பணியிலிருந்து ஓய்வு பெற்றுள்ளேன்.

நான் 1976ஆம் ஆண்டு திருநெல்வேலி வண்ணாரப்பேட்டை அலுவலகத்தில் எழுத்தராக பணியில் சேர்ந்து, !982ஆம் ஆண்டு வரை பணியாற்றினேன்.

பின் டெலிபோன் இன்ஸ்பெக்டர் தேர்வில் தேர்ச்சி பெற்று, ஜூன் !982இல் சிவகங்கையில் பணியில் சேர்ந்து, மார்ச் 1987 வரை அங்கு பணியாற்றினேன்.

ஏப்ரல் 1987இல் காயல்பட்டினத்தில் டெலிபோன் இன்ஸ்பெக்டராக பணியில் மாறுதலாகி வந்தேன். ஏப்ரல் 1994 வரை காயல்பட்டினத்தில் பணியாற்றினேன். அப்பொழுது காயல்பட்டினம் தொலைபேசி நிலையம் 400 லைன் ஆக இருந்தது. நான் பணிபுரிந்த 1987-1994 வரை 400லிருந்து 500 ஆகவும், 500லிருந்து 600 ஆகவும் விரிக்கம் பெற்றது.

1994இலிருந்து 1998 வரை உடன்குடிக்கு மாற்றலாகிச் சென்று பணியாற்றினேன். உடன்குடி, சாத்தான்குளம் பகுதிகளில் கேபிள் பதிக்கும் வேலையை செவ்வனே செய்தேன். 1998 ஜூன் மாதம் ஜூனியர் டெலிகாம் ஆபீஸர் பயிற்சி முடிந்து, திருச்செந்தூரில் இண்டோராக பணியில் சேர்ந்து, 2003 ஜூலை வரை பணியாற்றினேன்.

2003 ஜூலையில் காயல்பட்டினம் தொலைபேசி நிலையத்திற்கு ஜூனியர் டெலிகாம் ஆபிஸ் அவுட்டோராக பணியில் சேர்ந்தேன். திரு.ஜெயக்கொடி சப்டிவிஷனல் எஞ்சினியர் அவுட்டோராக பணியில் இருந்தார்கள். இருவரும் இணைந்து, அக்டோபர் 2013 வரை பணியாற்றினோம்.

திரு. ஜெயக்கொடி அவர்களோடு பணியாற்றிய 10 ஆண்டு காலமும் எனது பொற்காலமாகவே எண்ணுகிறேன். பழகுவதற்று இனியவர். இருவரும் காயல்பட்டினத்தில் எல்லா தெருக்களிலும், சந்துகளிலும், கேபிள் பதிக்கும் பணியை வெற்றிகரமாகச் செய்தோம்.

2013 அக்டோபரில் திரு ஜெயக்கொடி அவர்கள் DE ஆக பதவி உயர்வு பெற்று, தூத்துக்குடிக்கு மாற்றலாகிச் சென்றார்கள். 2013 அக்டோபரிலிருந்து 2015 ஜூன் வரை நான் தனியாகவே காயல்பட்டினம் தொலைபேசி நிலைய பணிகளை செய்தேன்.

2014 அக்டோபர் மழைக் காலத்தில் காயல்பட்டினத்தில் பெய்த பெருமழையால் ஊரே வெள்ளக்காடானது. பஞ்சாயத்திலிருந்து JCB வைத்து தண்ணீர் வடிக்க எல்லா தெருக்களிலும் தோண்டிய பொழுது, BSNL கேபிள்கள் மிகுந்த அளவில் சேதம் ஆயின. பழுதுகளைச் சரிசெய்ய மிகுந்த சிரமப்பட்டோம். காயல்பட்டினம் தொலைபேசி நிலைய ஊழியர்களின் ஒத்துழைப்போடு பழுதுகளைச் சரிசெய்ததை எனது பணிக்காலத்தில் சவாலான செயலாகக் கருதுகிறேன்.

தற்பொழுது காயல்பட்டினம் தெருவெங்கும் தண்ணீர் பைப் பதிக்கும் பணி நடைபெற்று வருகிறது. அவர்களும் BSNL கேபிள்களை சேதமாக்கி விடுகின்றனர். உடனுக்குடன் சரிசெய்து வருகிறோம். காயல்பட்டினத்தில் எல்லா தெருக்களிலுமுள்ள தொலைபேசி கம்பங்களை அகற்றி உள்ளேன். ஜெயக்கொடி அவர்களும், நானும் இணைந்து 800க்கும் அதிகமான பிராட்பேண்ட் இணைப்புகளைக் கொடுத்து இருக்கிறோம்.

29.06.2015 அன்று, திரு. ஜெயக்கொடி DE தலைமையில் எனக்கு சிறப்பான பணி ஓய்வு விழா காயல்பட்டினம் தொலைபேசி நிலையத்தில் வைத்து நடைபெற்றது.





30.06.2015 அன்று, மரியாதைக்குரிய GM, BSNL அவர்கள் தலைமையில் தூத்துக்குடி அலுவலகத்தில் சிறப்பாக முறையில் ஓய்வு விழா நடைபெற்றது.

திரு.ஏ.முருகன் புதிய SDE ஆக காயல்பட்டினத்தில் பணியில் சேர்ந்துள்ளார்கள். திரு. இ.ஜெயக்கொடி அவர்கள் DE ஆக திருச்செந்தூரில் பணியில் உள்ளார்கள்.

இரவு 9 மணியிலிருந்து காலை 7 மணி வரை இந்தியா முழுவதும் எல்லா மொபைல் போனுக்கும் இலவசமாக பேசும் வசதியை அனைவரும் பயன்படுத்தும்படி அன்புடன் கேட்டுக் கொள்கிறேன். BSNLக்கு தொடர்ந்து தங்களது மேலான ஆதரவை அளிக்கும்படி பணிவுடன் கேட்டுக் கொண்டு பிரியாவிடை பெறுகிறேன்.

டெலிபோன் பழுது தொடர்பான எந்த புகார்களாக இருந்தாலும், 280198 என்ற எண்ணில் தொடர்புகொண்டால் பதில் கிடைக்கும். கணிணி முறையில் புகார் அளிக்க 198 என்ற எண்ணைத் தொடர்புகொள்ளலாம்.

நன்றி! வணக்கம்!


இவ்வாறு, பணி நிறைவு பெற்ற காயல்பட்டினம் தொலைபேசி நிலைய உதவி பொறியாளர் தனதறிக்கையில் தெரிவித்துள்ளார்.

BSNL தொடர்பான முந்தைய செய்தியைக் காண இங்கே சொடுக்குக!


Previous News ItemNext News Item
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. Re:...
posted by NUSKI MOHAMED EISA LEBBAI (RIYADH - KSA) [08 August 2015]
IP: 93.*.*.* Romania | Comment Reference Number: 41593

வாழ்த்துக்கள் அய்யா. உங்கள் ஒய்வு காலம் இனிமையாக, அமைதியா, சந்தோஷ மாக அமைய எல்லாம் வல்ல அல்லாஹ்விடம் வேண்டுகிறேன்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
2. Re:...
posted by HUSSAIN HALLAJ (YANBU - KSA) [08 August 2015]
IP: 78.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 41595

வாழ்த்துக்கள் அய்யா. நன்றி .

என்றும் அன்புடன்
ஹுசைன் ஹல்லாஜ்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
3. Re:...Congradulation sir.
posted by S.A.Shaik Mohamed (Dubai) [08 August 2015]
IP: 92.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 41596

Congradulation Sir..

I wish your retired life will be peaceful and live long happily with your family.

Really he is a kind person from BSNL. I used to call him the problem faced regarding BSNL broadband. He used to fulfil our needs through his subordinate without any delay by honestly.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
4. Re:...தொடர்ந்து பணியாற்ற முடியாது
posted by mackie noohuthambi (kayalpatnam) [08 August 2015]
IP: 163.*.*.* Japan | Comment Reference Number: 41602

அரசு பணிகளில் அமர்ந்து அசுர சாதனைகள் நிகழ்த்தினாலும் மூன்று ஆண்டுகளுக்குள் தண்ணி இல்லாத காட்டுக்கு மாற்றி விடுவார்கள். பெட்டி படுக்கையை தூக்கிக் கொண்டு பிள்ளை குட்டிகள் மனைவி மக்களை அழைத்துக் கொண்டு நாடோடிகள் போல் அலையை வேண்டியுள்ளது. இதனால்தான் நமது மக்கள் அரசு பணியில் சேர விருப்பம் கொள்வதில்லை. ஆட்சி தலைவர் பதவிக்கு சம்பளம் அள்ளி அள்ளி கொடுத்தாலும் லஞ்சம் வாங்கக் கூடாது என்று மார்க்கம் சொல்வதால் அதிலும் மனம் ஈடுபடுவதில்லை.

ஒருவர் என்னிடம் நகை சுவையாக சொன்னார். நான் கேட்டேன் நீங்கள் பிரதமர் ஆகினால் உங்களுக்கு கணிசமான சம்பளம் கிடைக்குமே என்றேன். அவர் அதற்கு ஆங்கிலத்தில் பதில் சொன்னார்

I DONT WANT PRIME MINISTER'S SALARY, I DO WANT PRIME MINISTER'S INCOME

நாடு எங்கே போகிறது என்ன நிலைமையில் இருக்கிறது என்பதற்கு இந்த உரையாடல் ஒரு சான்று. நேர்மையாக வாழும் நம்பிராஜன்கள் இந்த நாட்டில் எவ்வளவு பேர் இருக்கிறார்கள். நீங்கள் பணி ஒய்வு பெறுகிறீர்கள். ஆனால் பணியில் இருந்த காலங்களில் எப்படியெல்லாம் பந்தாடப் பட்டிருக்கிறீர்கள் என்று சொல்லாமலே சொல்லி இருக்கிறீர்கள்.

கூண்டில் அடைபட்ட அழகு கிளியாக இருந்து தந்ததை சாப்பிட்டு வாழ்வதை விட நினைத்த இடங்களுக்கு பறந்து சென்று விரும்பியதை சாப்பிடும் கறு நிற காகமாக இருப்பது மேல். வாழ்த்துக்கள்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>

முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்

பிற செய்திகள்

காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
Cathedral Road LKS Gold ParadiseFathima Jewellers
AKM JewellersFaams

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved