Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
6:44:27 AM
சனி | 20 ஏப்ரல் 2024 | துல்ஹஜ் 1724, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
04:5212:2315:3018:3319:43
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:05Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்15:52
மறைவு18:27மறைவு03:40
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
04:5405:1905:44
உச்சி
12:16
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:4819:1319:38
Go to Homepage
செய்திகள்
Previous News ItemNext News Item
செய்தி எண் (ID #) 16975
#KOTW16975
Increase Font Size Decrease Font Size
செவ்வாய், டிசம்பர் 8, 2015
சென்னையில் KCGC மழை வெள்ள நிவாரணப் பணிகள்: 3ஆவது கூட்டம், நிவாரணப் பொருட்கள் வினியோகம் குறித்த விபரங்கள்! 30 சதவிகித பொருட்கள் வினியோகம் நிறைவுற்றது!!
செய்திஎஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்)
இந்த பக்கம் 2745 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (6) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 0)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}

சென்னையில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு - KCGC அமைப்பின் வெள்ள நிவாரணக் குழுவின் மூன்றாவது கலந்தாலோசனைக் கூட்டத்தில், பாதிக்கப்பட்டோருக்கு பாதுகாப்பான முறையில் நிவாரணப் பொருட்களை வினியோகத்தல் குறித்து விவாதிக்கப்பட்டு, அதனடிப்படையில், இன்று வினியோகமும் நடைபெற்றுள்ளது. இதுகுறித்த KCGC மழை வெள்ள நிவாரணக் குழுவின் அறிக்கை:-

சென்னையில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு, காயல்பட்டினம் மக்களை ஒருங்கிணைத்து இயங்கி வரும் காயல்பட்டினம் சென்னை வழிகாட்டு மையத்தின் சார்பில் வெள்ள நிவாரணக் குழு நியமிக்கப்பட்டு, தன்னார்வத்துடன் விருப்பம் தெரிவித்த உலக காயல் நல மன்றங்கள் மற்றும் தனியார்வலர்களையும் ஒருங்கிணைத்து, நிவாரணப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

மூன்றாவது கூட்டம்:

குழுவின் மூன்றாவது கலந்தாலோசனைக் கூட்டம், நேற்று (08.12.2015. திங்கட்கிழமை) 18.30 மணி முதல், 21.30 மணி வரை, சென்னை கீரீம்ஸ் சாலையிலுள்ள அலுவலகத்தில், குளம் முஹம்மத் இப்றாஹீம் தலைமையில் நடைபெற்றது.





பங்கேற்றோர்:

ஆடிட்டர் ரிஃபாய், அப்துஸ் ஸமத், எஸ்.இப்னு ஸஊத், எம்.எம்.அஹ்மத், குளம் முஹம்மத் தம்பி, சொளுக்கு எம்.ஏ.சி.முஹம்மத் நூஹ், எம்.எம்.செய்யித் இப்றாஹீம், ‘நெட்காம்’ புகாரீ, கே.கே.எஸ்.முஹம்மத் ஸாலிஹ், வழக்குரைஞர் ஹஸன் ஃபைஸல் ஆகியோர் கலந்துகொண்டனர்.

நிவாரணப் பொருட்களை ஈரோட்டில் கொள்முதல் செய்வதற்காக தனது சொந்த அலுவல்களை ஒதுக்க வைத்துவிட்டு, சுமார் 4 நாட்கள் இதற்காகப் பணியாற்றியதோடு, தற்சமயம் சென்னையில் KCGC வெள்ள நிவாரணக் குழுவினருடன் 3 நாட்கள் வரை தங்கி, வினியோக ஏற்பாடுகளை இணைந்து செய்து வரும் கரூர் இம்தியாஸ் இக்கூட்டத்தில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டார்.

மொத்தம் பெறப்பட்ட 10 லட்சம் ரூபாய் தொகைக்கும் பொருட்கள் கொள்முதல் செய்யப்பட்டுள்ளதாகக் கூட்டத்தில் அறிவிக்கப்பட்டதோடு, அவற்றை - ஆடைகள், உணவுப் பொருட்கள் ஆகியவற்றை உள்ளடக்கி - முறைப்படி ஒவ்வொரு குடும்பத்திற்கும் ஒரு பொதி என்ற அடிப்படையில் பொதியிடத் தீர்மானிக்கப்பட்டது.

வினியோகப் பொறுப்புக் குழு:

நிவாரணப் பொருட்கள் வினியோகத்தின்போது, இடைஞ்சல்களை ஏற்படுத்தும் வகையில் அரசியல் கட்சிகளின் தேவையற்ற தலையீடுகள், வினியோகிக்க திட்டமிடப்பட்டுள்ள பகுதிகளுக்கு நிவாரணப் பொருட்களைக் கொண்டு செல்லும் வழியிலேயே சேரிப் பகுதிகளைச் சேர்ந்தவர்கள் வழிமறித்து இடைஞ்சல் தரும் நிலை ஆகியவை குறித்து கவலை தெரிவிக்கப்பட்டதோடு, இத்தடைகளைத் தாண்டி, பொருட்களை - உரியவர்களுக்கு முறைப்படி கொண்டு சேர்ப்பதற்காக, பின்வருமாறு 8 பகுதிகளுக்கு தனித்தனி பொறுப்பாளர்களைக் கொண்ட பொறுப்புக் குழு நியமிக்கப்பட்டது:-

(1) சூளைமேடு - கே.கே.எஸ்.முஹம்மத் ஸாலிஹ்
(2) புளியந்தோப்பு - ஜான் பாஷா
(3) சிஐடீ நகர் – கே.எம்.டீ.முஹம்மத் தம்பி
(4) அத்திப்பேட்டை – அப்துஸ் ஸமத்
(5) ஜாஃபர்கான்பேட்டை (சூளைபள்ளம்) - கே.எம்.டீ.முஹம்மத் தம்பி

(6) ஊரப்பாக்கம் - இம்தியாஸ்
(7) எருக்கஞ்சேரி - எஸ்.இப்னு ஸஊத்
(8) அயனாவரம் பேருந்து நிலையம் - அப்துஸ் ஸமத்

வினியோகம்:

உலக காயல் நல மன்றங்கள் மற்றும் தன்னார்வலர்கள் மூலம் பெறப்பட்ட 10 லட்சம் ரூபாய் அனுசரணைத் தொகை மொத்தத்திற்கும் கொள்முதல் செய்யப்பட்டிருந்த நிவாரணப் பொருட்கள் அனைத்தும், ஏற்கனவே திட்டமிடப்பட்ட படி, 20 தன்னார்வலர்களைக் கொண்டு பொதியிடப்பட்டது.





அப்பணி நிறைவுற்றதும், சுமார் 30 சதவிகித நிவாரண பொதிப் பொருட்கள் வினியோகிக்கப்பட்டுவிட்டன. எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே! எஞ்சிய பொருட்களை நாளை (டிசம்பர் 09 புதன்கிழமை) முதல் வினியோகிக்க திட்டமிடப்பட்டுள்ளது - இன்ஷாஅல்லாஹ்!

அவரவருக்கு நிர்ணயிக்கப்பட்டிருந்த பகுதிகளில், சிற்சிறு இடைஞ்சல்கள் இருந்தபோதிலும் – பொறுப்பாளர்கள் நிவாரணப் பொருட்களை பாதிக்கப்பட்டோரிடம் முறைப்படி சேர்ப்பித்தனர்.







இனியும் இப்பணிகளுக்காக யாரேனும் அனுசரணையளித்தால், பொருட்கள் கொள்முதல் செய்யப்பட்டு வினியோகமும் தொடர்ந்து நடைபெறும் என்பதை இதன்மூலம் அன்புடன் அறியத் தருகிறோம்.

சென்னையில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணப் பணிகளைச் செய்ய வேண்டும் என்று, “காயல்பட்டினம் - சென்னை வழிகாட்டு மையம் (KCGC) துவக்கத்தில் தனித்தே திட்டமிட்டிருந்தது. ஆனால், அதன் ஒருங்கிணைப்புப் பணிகளின் மீது நம்பிக்கை - நல்லெண்ணம் கொண்டதன் அடிப்படையில் உலக காயல் நல மன்றங்களும், தன்னார்வலர்களும் தாமாக முன்வந்து தொகைகளைத் தந்தாலேயே இவ்வளவு கொள்முதலும், வினியோகமும் இறையருளால் சாத்தியமாயிற்று.

இவ்வகைக்காக உதவிய அனைத்து நல்லுள்ளங்களுக்கும் எல்லாம்வல்ல அல்லாஹ் ஈருலக நற்பேறுகளையும் நிறைவாக வழங்கியருள்வானாக, ஆமீன்.


இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தகவல்:
எஸ்.கே.ஸாலிஹ்


KCGC மழை வெள்ள நிவாரணக் குழுவின் இரண்டாவது கலந்தாலோசனைக் கூட்டம் குறித்த செய்தியைக் காண இங்கே சொடுக்குக!

KCGC தொடர்பான முந்தைய செய்தியைக் காண இங்கே சொடுக்குக!


Previous News ItemNext News Item
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. Re:...நெஞ்சம் நிறைந்த பாராட்டுக்கள் மனமார்ந்த நன்றிகள்.
posted by சட்னி,எஸ்.ஏ.கே.செய்யது மீரான்,ஜித்தா (Jeddah) [09 December 2015]
IP: 5.*.*.* | Comment Reference Number: 42377

வல்லோன் அல்லாஹ்விற்கு மிகவும் உகப்பான நற்செயல்தனை பாதிப்புக்குள்ளான மக்களுக்கு தொண்டாற்றிய தொண்டுள்ளங்களாகிய தங்கள் யாவருக்கும், இதற்காக வேண்டி உழைத்த மற்றும் பொருளால், பணத்தால் உதவிய நல்லுள்ளங்களுக்கும் அல்லாஹ்வின் நல்லருளும் நற்கிருபையும் உண்டாவதாக ஆமீன்.ஜசாக்குமுல்லாஹ் ஹைரா...

தகுந்த நேரத்தில் தேவை அறிந்து களமிறங்கி சேவை செய்த இந்த அமைப்பிற்கும் நிர்வாகிகளுக்கும் மனமார்ந்த பாராட்டுக்கள்...


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
2. Re:...நெஞ்சில் நிறைந்த மனித நேயம்,,,
posted by mackie noohuthambi (kayalpatnam ) [09 December 2015]
IP: 116.*.*.* India | Comment Reference Number: 42378

''செய்யாமல் செய்த உதவிக்கு வையகமும் வானகமும் ஆற்றல் அரிது'' என்று தமிழிலே சொல்வார்கள். நெஞ்சில் நிறைந்த மனித நேயம் தமிழகத்திலுள்ள மாற்று மத சகோதரர்களையும் திகைக்க வைக்கிறது. ''இவன் தந்தை என்நோற்றான்கொல் எனும் சொல்'' என்று வள்ளுவம் சொல்வதை போல் இந்த பம்பரமாய் சுழன்று வெள்ள நிவாரண பணிகள் ஆற்றும் இஸ்லாமிய இளைஞர்களை பாராட்டும் நாளிதழ்கள், தொலைக் காட்சிகளைப் பார்க்கும்போது சென்னை மழைக்கு ஒரு பாராட்டு அல்லாஹ் இந்த காவி சிந்தனையார்களுடன் நல்லவர்கள் சிந்தனையும் கலந்து விடாமல் முஸ்லிம்கள் என்றால் யார் அவர்கள் சுய ரூபம் என்ன என்பதை அவர்களுக்கு வெளிச்சம்போட்டு காட்டி இருக்கிறான்.

தமிழகத்தில் இந்து முஸ்லிம் என்ற பேதம் இல்லை அந்த சிந்தனைக்கே இடமில்லை என்று எல்லோரும் நன்கு புரிந்து கொண்டார்கள்.

''தி ஹிந்து தமிழ் நாளிதழில் சமஸ் இப்படி எழுதுகிறார்...''பெரு நகர வாசிகள் இதயமற்ற இயந்திரங்கள் எனும் பிம்பம் உண்டு. சென்னை வாசிகள் அதை நொறுக்கித் தள்ளியிருக்கிறார்கள். குறித்து வைத்துக் கொள்ளுங்கள்.இந்நாள்வரை பொது சமூகம் யாரை அதிகம் வெறுப்பு உணர்வோடும் கசப்பு உணர்வோடும் பார்த்துக் கடந்ததோ - ஒரு வீட்டை வாடகைக்கு விட யோசித்ததோ அந்த இஸ்லாமிய மக்கள்தான் ஓடி ஓடி உதவுவதில் முன்னிலையில் நிற்கிறார்கள்''.

இசை அமைப்பாளர் அபஸ்வரம் ராம்ஜி அவர்கள், ''மனிதம் துளிர்க்க வைத்த மாமழை'' என்ற நெகிழ்ச்சி பதிவில் ''அகதிகள் போல் நிற்கும் மக்களுக்கு பள்ளிவாசல்களில் அடைக்கலம் அளித்துவிட்டு முஸ்லிம்கள் கோயில் வளாகத்தில் நமாஸ் செய்வதை நெகிழ்ச்சியோடு பார்க்கிறேன்'' என்று தனது உணர்வுகளை இன்றைய இந்து தமிழ் நாளிதழில் பதிவு செய்துள்ளார், கோயில்களை முஸ்லிம்கள் சுத்தப் படுத்தி அங்கே இந்துக்கள் வழிபாட்டுக்கு வழி வகுத்துக் கொடுத்திருக்கிறார்கள்.என்ற செய்தியையும் இந்த நாளிதழ் வெளிச்சத்துக்கு கொண்டு வந்திருக்கிறது. இப்படி பல செய்திகள் முஸ்லிம்களின் மனித நேயத்தைக் கண்டு வியந்து பாராட்டு மழையாக வந்து பொழிந்து கொண்டிருக்கிறது.

காயல்பட்டின மக்கள் இப்படி அள்ளி அள்ளி கொடுப்பது ஒன்றும் புதிதல்ல

காய்ந்து சிவந்தது சூரிய காந்தி - கனலில்
தோய்ந்து சிவந்தது காய்ச்சிய தங்கம்
ஆய்ந்து சிவந்தது அறிஞர் தம் நெஞ்சம் - தினம்
ஈந்து சிவந்தன காயலர்கள் கரங்கள்.

காத்திருக்கும்போது நமது பெயர் காற்றென்றே இருக்கட்டும் . புறப்படும்போது நாம் புயலென்று காட்டுவோம் புரியும் அப்போது.

தொடரட்டும் உங்கள் மனித நேயப்பணி.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
3. Re:...
posted by NUSKI MOHAMED EISA LEBBAI (RIYADH - KSA) [09 December 2015]
IP: 2.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 42380

தொடரட்டும் உங்கள் மனித நேய தூய பணி. அல்ஹம்துலில்லாஹ்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
4. மனித நேயத்திற்கு மற்றுமொரு சான்று
posted by முஹம்மது ஆதம் சுல்தான்! (yanbu) [09 December 2015]
IP: 128.*.*.* Romania | Comment Reference Number: 42381

மனிதாபிமானமும்,மனித நேயமும் கைகோர்த்து களத்தில் இறங்கி எந்த ஒரு இன,மத மாட்ச்சிரயத்தையும் தாண்டி, "மனிதன்" மீளாத்துயரில் மிதக்கிறான் அவனை மடிமேலோ முதிகின் மேலோ சுமந்து காப்பாற்றி அவன் கண்ணீரை தற்காலிகமாவது துடைத்துதல் வேண்டும் என்ற தூய எண்ணத்தோடு இறங்கியுள்ள இரக்கமிகு இதயங்களே, நீங்கள் முஸ்லிம்கள்,இந்துக்கள் இன்னும்பல இன,மதத்தை சார்ந்தவர்கள் என்று பார்ப்பதற்கு கூட முடியவில்லை, பார்க்கும் நேரமும் இதுவல்ல.ஆனால் அவர்களின் தூயத் தொண்டுதான் நம் கண் முன்னே தோன்றி,தோன்றி மறைகின்றன!

அவர்கள் ஆவேசமாக ஆர்பரித்து சீறிப்பாய்ந்து செய்கின்ற புண்ணிய காரியங்கள் தான் முதன்மையாக மற்றவர்களுக்கு தெரிகின்றதே தவிர இவன் யார் அவன் யார் என்று தேடும் திடலல்ல அது,தேம்பி தேம்பி அழும் குரல்கள், துணை வருவோர் எவருமில்லையா என்று எல்லையற்ற துயர அபயத்தேடலுக்கு ஓடோடி வந்து உதவும் உத்தமர்களை வகைப்படுத்தும் நேரமும்,இடமுமல்ல அத்தருணம்!

ஆனால்,ஆனால் அதிலும் இஸ்லாமிய பாலகர்கள் முதல், இளைஞர்கள் பெரியோர்கள்வரை தங்களையே அர்பணித்து ஆயிரமாயிரம் உதவிகளை அள்ளித்தந்து கொண்டே இருக்கிறார்களே என்று அடையாளம் காட்டுகிறார்கள் அந்த நன்றியுடைய இளகிய இதயத்தார்கள்.அப்படிப்பட்டவர் களின் நன்றியொலி நகரெங்கும் ஒலித்ததால் தான் அனைத்து நாளேடுகள் முதல் நடமாடும் மீடியாக்கள்வரை முஸ்லிம்களை மிகைப்படுத்துகின்றன. உண்மைகளை ஒருசில மணிநேரங்கள், ஒருசில நாட்களுக்குமட்டும் தான் மூடிமறைக்க முடியும்!

எங்களினிய மாற்றுமத இதயங்களே இப்படிப்பட்ட இயற்கை சீற்றத்தின் இன்னலின் கோரப்பிடியிலிருப்பவர்களுக்கு உதவ வேண்டும் என்று எங்களூரார்கள் மட்டும் சொல்லவில்லை, எங்கள் உறவினர்கள் நண்பர்கள் மட்டும் சொல்லவில்லை எங்கள் உயிரினும் மேலான புனித மார்க்கத்தின் புண்ணிய நபியின் கட்டளை, அந்த மார்க்கதிற்க்காக எங்கள் ஆயுள் முழுவதையும் அர்பணிக்க தயாராக இருக்கும் எங்களுக்கு இந்த உதவிகளெல்லாம் ஒரு தூசி,தூசி,துரும்பே தான்!

வெள்ளத்தால் தப்பி பிழைத்து தஞ்சமடைந்த ஒரு மாற்றுமத சகோதரர் சொன்னாராம் இனி வரும் காலங்களில் பாபரி மசூதி போன்று ஒன்று இருந்து அதை இடிக்கவேண்டும் என்று எண்ணமிருந்தால் அந்த எண்ணத்தை மாற்றிக்கொள் மிருக குண மனிதனே,ஏனெனில் ஒருவேளை எதிர்காலத்தில் இதுபோன்ற வெள்ளப்பெருக்கு,இயற்கை சீற்றம் ஏற்பட்டால், எங்களுக்கு இருக்க இடம்,உண்ண உணவை பெற முடியாத ஒரு இடத்தை இழந்த நஷ்டவாளியாக ஆகிவிடுவோம் என்றாராம்!

இதை இன்னும் இன்னும் சத்தமாக சொல்லுங்கள் எங்களின் உடன்பிறவா சகோதரர்களே!உங்கள் குரோலோசை தலைநகர் வரை பலஆயிரமைல்கப்பாலும்ஒலிக்கவேண்டும் அல்லாஹ் அனைத்தும் அறிந்தவன்!

அன்புடன்,
முஹம்மது ஆதம் சுல்தான்!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
5. Re:...
posted by சாளை எஸ்.ஐ.ஜியாவுத்தீன் (அல்கோபார்) [09 December 2015]
IP: 94.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 42382

மாஷா அல்லாஹ்.

உங்களுடைய தூய பணியை வல்ல அல்லாஹ் அங்கீகரிப்பானாக. எல்லாப்புகழும் வல்ல அல்லாஹ்விற்கே.!!

அவரவர் தங்களுடைய அன்றாட பணியில் மிகவும் பிஸி ஆக இருப்பவர்கள், தங்களுடைய அனைத்து பணிகளுக்கும் ' பாஸ்' பட்டனை அழுத்தி விட்டு, இந்த மக்கள் பணியில் " பாஸ்ட் பார்வேர்ட்" பட்டனை அழுத்தி வேலைகள் பார்த்து வருகிறார்கள்.

காயல் நலமன்றங்களின் உல்லாச சுற்றுலா புகைப்படங்களை பார்க்கும் சமயம், மனதில் ஒரு ஆசையும் உற்சாகமும் வரும். நாமும் அங்கு இருந்து இருந்தால் இந்த சுற்றுலாவில் கலந்து கொள்ளலாமே என்று..!!

ஆனால் இந்த நிவாரண உதவிப் பணிகளில் ஈடுபட்டு இருக்கும் சொந்தங்களின் புகைப்படங்களை கண்டு, அந்த சுற்றுலா உற்சாகம் ஒன்றும் இல்லாமல் ஆகிவிட்டது.

இங்கு இருந்துக்கொண்டு பணத்தை மட்டும் அனுப்பி உள்ளோமே, களத்தில் இல்லையே என்ற வருத்தம் மனதில் ஓடிக்கொண்டே இருக்கின்றது.

யாரை பாராட்டுவது, யாருக்கு நன்றி சொல்லுவது என்றே புரியவில்லை.

வழமையான செய்திகளை பல நாட்கள் கழித்து பதிவு செய்யும் நம் காயல் அனைத்து வலைதளங்களும் , சிரமம் பார்க்காமல் சுடச்சுட செய்திகள் தருவதும் கூடுதல் சந்தோசம். பாராட்டுக்கள்.

சாளை எஸ்.ஐ.ஜியாவுத்தீன், அல்கோபார்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
6. நம்பிக்கை தான் வாழ்க்கை..!
posted by தமிழன் முத்து இஸ்மாயில். (kayalpattinam) [09 December 2015]
IP: 116.*.*.* India | Comment Reference Number: 42383

ஒருங்கிணைப்புப் பணிகளின் மீது நம்பிக்கை - நல்லெண்ணம் கொண்டதன் அடிப்படையில் உலக காயல் நல மன்றங்களும், தன்னார்வலர்களும் தாமாக முன்வந்து தொகைகளைத் தந்தாலேயே இவ்வளவு கொள்முதலும், வினியோகமும் இறையருளால் சாத்தியமாயிற்று. CP

நம்பிக்கையும் - நல்லெண்ணமும் தானே வாழ்க்கை..! தொடரட்டும் மனித நேயம்.

அவரவர் தகுதிகேற்ப இவ்வகைக்காக உதவிய அனைத்து நல்லுள்ளங்களுக்கும் எல்லாம் வல்ல அல்லாஹ் ஈருலக நற்பேறுகளையும் நிறைவான நல் வாழ்வையும் வழங்கியருள்வானாக - ஆமீன்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>

முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்

பிற செய்திகள்

காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
Cathedral Road LKS Gold ParadiseFathima Jewellers
AKM JewellersFaams

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved