காயல்பட்டினம் நகராட்சிக்குச் செலுத்த வேண்டிய குடிநீர் கட்டணம், வீட்டு வரி, சொத்து வரி உள்ளிட்டவற்றை, மத்திய அரசால் செல்லாது என்று அறிவிக்கப்பட்ட 500 ரூபாய், 1000 ரூபாய் பணத்தாள்களைக் கொண்டு, நவம்பர் 14ஆம் நாள் வரை செலுத்தலாம் என நகராட்சியால் அண்மையில் அறிவிக்கப்பட்டிருந்தது.
அரசு உத்தரவின் அடிப்படையில், தற்போது இந்தக் கால அவகாசம் நவம்பர் 24ஆம் நாள் வரை நீட்டிப்புச் செய்யப்பட்டதாக பின்னர் அறிவிக்கப்பட்டது.
இவ்வாறிருக்க, நிலுவையிலுள்ள வரிகளை பொதுமக்கள் தமது 500 ரூபாய், 1000 ரூபாய் பணத்தாள்களைக் கொண்டும் செலுத்தலாம் என காயல்பட்டினம் நகராட்சியின் சார்பில் - ஒலிபெருக்கி பொருத்தப்பட்ட ஆட்டோ வாகனம் மூலம் நகர வீதிகளில் நேற்று பரப்புரை செய்யப்பட்டது. மழை பொழிவு காரணமாக, ஒலிபெருக்கி ப்ளாஸ்டிக் மறைப்பு கொண்டு மூடப்பட்டிருந்தது.
|