Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
3:34:37 PM
வியாழன் | 25 ஏப்ரல் 2024 | துல்ஹஜ் 1729, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
04:5012:2115:3118:3219:44
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:03Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்19:38
மறைவு18:27மறைவு06:46
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
04:5105:1705:42
உச்சி
12:15
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:4819:1419:39
Go to Homepage
செய்திகள்
Previous News ItemNext News Item
செய்தி எண் (ID #) 20287
#KOTW20287
Increase Font Size Decrease Font Size
செவ்வாய், மார்ச் 20, 2018
“பொதுமக்களிடமிருந்து எந்த ஆட்சேபணையும் பெறப்படவில்லை!” – குப்பை புதிய வரி குறித்து நகராட்சி ஆணையர் உண்மைக்குப் புறம்பான தகவல்!!
செய்திஎஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்)
இந்த பக்கம் 1908 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (2) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 0)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}

குப்பை புதிய வரி குறித்து பொதுமக்களிடமிருந்து எந்த ஆட்சேபணையும் பெறப்படவில்லை என உண்மைக்குப் புறம்பாக காயல்பட்டினம் நகராட்சி ஆணையர் அறிக்கை வெளியிட்டுள்ளதாக “நடப்பது என்ன?” சமூக ஊடகக் குழுமம் தெரிவித்துள்ளது. இதுகுறித்த செய்தியறிக்கை:-

குப்பைகளை அகற்ற அனைத்து வீடுகளிலிருந்தும் கட்டணம் (USER FEE) வசூல் செய்ய - காயல்பட்டினம் நகராட்சி, சில நடவடிக்கைகளை கடந்த ஆண்டு மேற்கொண்டது.

SOLID WASTE MANAGEMENT RULES 2016 என்ற மத்திய அரசின் விதிமுறைகளை மேற்கோள்காட்டி, இது குறித்து 24-3-2017 அன்று, தனி அலுவலராக (SPECIAL OFFICER) செயல்புரியும் காயல்பட்டினம் நகராட்சியின் ஆணையர் மூலம், தீர்மானம் (#1373) ஒன்று நகராட்சியில் நிறைவேற்றப்பட்டது. அந்த தீர்மானத்தில் - நகராட்சி சார்பாக தயாரிக்கப்பட்டுள்ளதாக கூறி, மாதிரி துணை விதிகளுக்கு (Bylaws) ஒப்புதல் வழங்கப்பட்டன.

இந்த தீர்மானம் நிறைவேற்றப்படுவதற்கு சில வாரங்களுக்கு முன்பே (9-3-2017), நடப்பது என்ன? குழுமம் சார்பாக - காயல்பட்டினம் நகராட்சி ஆணையரிடம், இதற்கு எதிர்ப்பு தெரிவித்து மனு வழங்கப்பட்டது. அதில் - ஏற்கனவே பல்வேறு வரிசுமைகளால் பாதிக்கப்பட்டுள்ள பொது மக்கள் மீது, தனது அத்தியாவசிய பணியினை செய்ய - அதுவும் மக்கள் பிரதிநிதிகள் இல்லாத சூழலில் - புதிய வரியினை நகராட்சி அறிமுகம் செய்யக்கூடாது என தெரிவிக்கப்பட்டிருந்தது. இதே கருத்தை வலியுறுத்தி - நகராட்சி சார்பாக நடப்பட்ட கருத்துக்கேட்கும் கூட்டத்தில், நடப்பது என்ன? குழுமம் சார்பாக - ஆட்சேபனை பதிவு செய்யப்பட்டது.

இதற்கிடையில் - ஏப்ரல் 20, 2017 அன்று தினமணி நாளிதழில், அறிவிப்பு ஒன்றினை காயல்பட்டினம் நகராட்சி வெளியிட்டிருந்தது. (படம் இணைக்கப்பட்டுள்ளது) அதில் - அந்த அறிவிப்பு வெளியாகி, 15 தினங்களுக்குள், இந்த புதிய வரி குறித்து ஆட்சேபனை ஏதும் இருப்பின் - பொது மக்கள் தெரிவிக்கலாம் என்றும் கூறப்பட்டிருந்தது.



அதனை தொடர்ந்து - நகரின் பல்வேறு மக்களின் கருத்துக்களை கேட்டறிந்து, அவர்களின் ஆட்சேபனை கையெழுத்துக்களை பெற்று - காயல்பட்டினம் நகராட்சி ஆணையர் திரு பொன்னம்பலம் அவர்களை நேரடியாக மே 4 அன்று சந்தித்து, ஆட்சேபனை மனு, நடப்பது என்ன? குழுமம் சார்பாக வழங்கப்பட்டது.





இதற்கிடையில் - இந்த ஆட்சேபணைகளையும் மீறி, காயல்பட்டினம் நகராட்சி சார்பாக புதிய வரி வசூல் செய்யப்பட துவங்கப்பட்டுள்ளதாக அறிந்து, இது குறித்த ஆட்சேபனை மனு, மாவட்ட ஆட்சியரிடம், நடப்பது என்ன? குழுமம் சார்பாக - 19-2-2018 அன்று வழங்கப்பட்டது.

அதில் - எவ்வாறு, துணை விதிகளை அமலுக்கு கொண்டு வருவதற்கு முன்னர், பின்பற்றப்படவேண்டிய நடவடிக்கைகளை காயல்பட்டினம் நகராட்சி பின்பற்றவில்லை என்பது தெரிவிக்கப்பட்டு, உடனடியாக புதிய வரியினை - காயல்பட்டினம் நகராட்சி வாபஸ் வாங்க வேண்டும் என்ற கோரிக்கையையும் வைக்கப்பட்டது.

மாவட்ட ஆட்சியரிடம் நடப்பது என்ன? குழுமம் சார்பாக வழங்கப்பட்ட இம்மனுவிற்கு தற்போது பதில் வழங்கியுள்ள காயல்பட்டினம் நகராட்சி ஆணையர், மனுவில் குறிப்பிட்டுள்ள புதிய திடக்கழிவு வரி அரசாணைப்படி விதிக்கப்பட்டு அதற்கான ஆட்சேபணை ஏதேனும் இருப்பின் தெரிவிக்கக்கோரி நாளிதழில் பொதுமக்களுக்கு விளம்பரம் செய்யப்பட்டது. எனினும் குறிப்பிட்ட நாட்களுக்குள் எந்த ஆட்சேபணையும் பொதுமக்களிடமிருந்து வரப்பெறவில்லை. எனவே புதிய திடக்கழிவு வரி அரசாணைப்படி விதிக்கப்பட்டது என தெரிவித்துள்ளார்.



இது உண்மைக்கு புறம்பான தகவலாகும். இந்த புதிய வரிக்குறித்த ஆட்சேபனை, காயல்பட்டினம் நகராட்சி ஆணையரிடம் - வெளிப்படையான முறையில், மே 4 அன்று, நேரடியாக வழங்கப்பட்டது. உண்மை இவ்வாறு இருக்க - பொது மக்களிடம் இருந்து எந்த ஆட்சேபனையும் வரவில்லை என காயல்பட்டினம் நகராட்சி ஆணையர் தெரிவித்திருப்பது அதிர்ச்சி அளிக்கிறது. இது சம்பந்தமான அடுத்தக்கட்ட நடவடிக்கையை, நடப்பது என்ன? குழுமம் விரைவில் மேற்கொள்ளும் என இதன் மூலம் தெரிவிக்கப்படுகிறது.

இவண்,
நிர்வாகிகள்,
நடப்பது என்ன? சமூக ஊடகக் குழுமம்.
[மக்கள் உரிமை நிலைநாட்டல் மற்றும் வழிகாட்டு அமைப்பின் (MEGA) சமூக ஊடகப்பிரிவு; அரசு பதிவு எண்: 75/2016; தூத்துக்குடி மாவட்டம்]

[பதிவு: மார்ச் 18, 2018; 4:30 pm]
[#NEPR/2018031801]


இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Previous News ItemNext News Item
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. Re:...
posted by Mauroof (Dubai) [20 March 2018]
IP: 86.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 46077

கடும் கண்டனத்திற்குரியது. சட்ட நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
2. Re:..ஜனவரி பெப்ரவரி குப்பை வரி .
posted by mackie noohuthambi (kayalpatnam ) [21 March 2018]
IP: 27.*.*.* India | Comment Reference Number: 46078

ஊர் இரண்டு பட்டால் கூத்தாடிக்கு வசதி என்று சொல்வார்கள்.

நமது நாட்டில்தான் அதிக வரி விதிக்கப்படுகிறது என்று நேற்று நாளிதழில் பார்த்தேன்.

மக்களின் ஆட்சேபனை வரவில்லை என்று அதிகாரி அவர்கள் கூறுவதற்கு மறுப்பு தெரிவித்து இங்கே பதிவு செய்யப் பட்டிருக்கிறது. மக்களிடம் கையெழுத்து வாங்கி மனுக்கள் அளிக்கும் பழக்கம் எல்லா விஷயத்துக்கும் உண்டு இந்த விஷயத்துக்கு மட்டும் நடப்பதென்ன குழு மட்டும் ஆட்சேபனை தெரிவித்துள்ளது.

ஊரிலுள்ள ஜமாத்துக்கள் பல பெயர்களில் இயங்கும் பல்வேறு குழுக்கள். முஸ்லீம் ஐக்கிய பேரவை போன்றவர்கள் இதை கண்டும் காணாமல் இருந்தார்களா அல்லது அவர்கள் ஆட்சேபனையும் அதிகாரி அவர்களால் புறக்கணிக்கப்பட்டுள்ளதா என்று தெரியவில்லை.

மக்கள் நலனில் அக்கறை உள்ள எந்த அரசும் லாபம் பார்க்கும் நோக்கத்துடன் செயல்படக்கூடாது என்பதுதான் ஒரு அரசுக்கு அழகு. ஆனால் நமது நாட்டில் இன்னும் சில ஆண்டுகளில் மாதங்களில் முதலாவதாக வருவதால் ஜன வரி இரண்டாம் மாதம் பெப்ர வரி என்று வந்தாலும் ஆச்சரிய படுவதற்கில்லை.

நமது நாட்டில் தொழில் தொடங்க வரும் வெளி நாட்டு நிறுவனங்கள் தங்கள் நாடுகளில் லஞ்சம் அளிக்கும் வழக்கம் இல்லை என்று உறுதிபட தெரிவித்து விட்டுத்தான் ஒப்பந்தம் போடுகின்றன ஆனால் உள்ளூரில் தொழில் நடத்த அடிக்கடி தரப்படும் லஞ்சம் அவர்களுக்கு பெரும் உறுத்தலாகவே இருக்கிறது இதனாலேயே பாதியில் அவர்கள் ஒப்பந்தத்தை முறித்துவிட்டு போய்விடுகிறார்கள் என்ற செய்தியும் நாளிதழில் படித்தேன். இப்படி ஊழல் மயமான நாட்டில் எதையும் தட்டிக் கேட்க முடியாத சூழ்நிலையில் நாம் இருக்கிறோம்.

நாம் ஒன்றுபட்டு எதிர்ப்பு தெரிவித்தால் இந்த வரியையும் வரவிடாமல் செய்ய முடியும் மினி காவல் நிலையத்தையும் நமதூரில் இருந்து அகற்ற முடியும்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>

முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்

பிற செய்திகள்

காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
Cathedral Road LKS Gold ParadiseFathima Jewellers
AKM JewellersFaams

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved