Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
4:11:36 AM
வியாழன் | 25 ஏப்ரல் 2024 | துல்ஹஜ் 1729, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
04:5012:2115:3118:3219:44
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:03Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்19:38
மறைவு18:27மறைவு06:46
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
04:5105:1705:42
உச்சி
12:15
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:4819:1419:39
Go to Homepage
செய்திகள்
Previous News ItemNext News Item
செய்தி எண் (ID #) 5897
#KOTW5897
Increase Font Size Decrease Font Size
வியாழன், மார்ச் 31, 2011
ஐக்கிய பேரவையின் கண்டன அறிக்கைக்கு காயல்பட்டணம்.காம் விளக்கம் ! (பாகம் - 2)
செய்திகாயல்பட்டணம்.காம்
இந்த பக்கம் 3763 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (6) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 3)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}

காயல்பட்டணம்.காம் இணையதளம் பத்தாண்டுகளுக்கும் மேலாக காயல்பட்டின நகர நடப்பு செய்திகளையும், உலகெங்கும் வாழும் காயல் நகர மக்களின் செய்திகளையும் வெளியிட்டு வருகிறது. எவ்வேளையிலும் இணையதளம் - அதுவே ஒரு செய்தியாவதை விரும்பியது இல்லை. கடந்த ஆண்டுகளில் நகரம் எதிர்நோக்கிய பல பிரச்சனைகளில் தாம் வெறும் ஊடகம் தானே என்று இருந்துவிடாமல், அப்பிரச்சனைகளில் தனது ஆக்கப்பூர்வமான ஒத்துழைப்பையும், செயல்திட்டங்களையும் காயல்பட்டணம்.காம் வழங்கியுள்ளது என்பதினை நினைவு கூறுகிறோம்.

இருப்பினும் காயல்பட்டினம் முஸ்லிம் ஐக்கிய பேரவை வெளியிட்டுள்ள அறிக்கையில் அர்த்தமற்ற குற்றச்சாட்டுகளை வெளியிட்டுள்ளதால் - அதற்க்கான விளக்கமான பதிலினை அளிக்கும் இக்கட்டான நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம் என்பதினை பணிவுடன் தெரிவித்துக்கொள்கிறோம்.

முதலில் சுனாமி குடியிருப்புகளும், தேர்தல் புறக்கணிப்பும்! என்ற தலைப்பில் ஆய்வு செய்தி வெளியிட்டதற்கான சூழ்நிலையை விளக்கிவிட்டி, ஐக்கிய பேரவை அறிக்கையில் கூறப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளுக்கு விளக்கங்கள் தருகிறோம்.



கடந்த டிசம்பர் மாதம் 29ம் தேதி நடந்த ஐக்கிய பேரவையின் பொதுக்குழு கூட்டத்தில் காயல்பட்டினம் கறுப்புடையார் பள்ளி (சிங்கித்துறை) வட்டத்தில் நடைபெறும் 169 வீடுகளின் கட்டுமான பணிகள் குறித்து விவாதிக்கப்பட்டது. அக்கூட்டத்தில் இத்திட்டம் குறித்த நடப்பு அரசின் செயல்பாடுகள் கடுமையாக விமர்சிக்கப்பட்டன. அக்கூட்டத்தின் முழு நிகழ்வுகள் வீடியோ பதிவும் செய்யப்பட்டது என்பதனை நினைவு கூறுகிறோம். பின்னர் அரசின் கவனத்தினை ஈர்க்கும் வகையில் ஜனவரி 4 அன்று ஆர்ப்பாட்டம் நடத்தப்பட வேண்டும் என்றும் தீர்மானிக்கப்பட்டது. பின்னர் இப்பிரச்சனை குறித்து நகரில் கடை அடைப்பு, ஆர்ப்பாட்டம், துணை முதல்வருக்கு பாக்ஸ் அனுப்புதல், முதல்வருக்கு அஞ்சல் அட்டை அனுப்புதல் என பல நிகழ்வுகள் நடந்தேறின. அவைகள் அனைத்தையும் காயல்பட்டணம்.காம் செய்திகளாக வெளியிட்டுள்ளது.

செய்திகள் வெளியிட்டோம் என்று மட்டும் இருக்காமல், இப்பிரச்சனை (சுனாமி குடியிருப்புகள்) குறித்த உண்மையை வெளிக்கொண்டுவரவேண்டும் எனும் பொருட்டு - தகவல் அறியும் சட்டத்தின் கீழ், தமிழக அரசின் பல துறைகளிடம் (தமிழக சுற்றுப்புற சூழல் அமைச்சகம், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், தமிழ்நாடு குடிசை மாற்று வாரியம், சுனாமி திட்டக்குழு என பல துறைகளிடமும்) வினாக்களை எழுப்பி, அவர்கள் வழங்கிய பதில்களையும் இணையதளத்தில் அவ்வப்போது வெளியிட்டும் வந்துள்ளோம்.

ஊடகம் என்று தரப்படும் செய்தியினை மட்டும் வெளியிட்டதோடு நிறுத்திக்கொள்ளாமல், ஐக்கிய பேரவையால் நகரம் நோக்கியுள்ள மிகப் பெரிய பிரச்சனை இது என சித்தரிக்கப்பட்ட ஒரே காரணத்திற்க்காக, இணையதளமே இதுகுறித்த பல தகவல்களை வெளிக்கொண்டுவந்தது.

அதுமட்டும் அன்றி - ஜனவரி மாதம் இறுதியில் ஐக்கிய பேரவைக்கு தொடர்புடைய அப்துல் ரஷீத் என்ற அவ்லியா என்பவர் - காயல்பட்டணம்.காம் இணையதளத்தை தொடர்புக்கொண்டு இவ்வழக்கு (சுனாமி குடியிருப்புகள்) குறித்து, நகராட்சியின் அதிகாரம் சம்பந்தமாக உயர் நீதிமன்ற தீர்ப்பு ஏதேனும் இருந்தால் தேடித்தரும்படி கேட்டுக்கொண்டார். அதனையும் காயல்பட்டணம்.காம் அவர்களுக்கு எடுத்து கொடுத்தது என்பதனை நினைவு படுத்துகிறோம்.

இச்சூழலில் தான் மார்ச் 1 அன்று தமிழகத்திற்கான தேர்தல் அறிவிக்கப்பட்டது. மேலும் மார்ச் 19 அன்று வேட்பாளர் மனுதாக்கல் துவங்கியது. இருப்பினும் - ஜனவரி மாதமும், பிப்ரவரி மாதமும் தேர்தல் புறக்கணிப்பு எச்சரிக்கை வெளியிட்டிருந்த ஐக்கிய பேரவை, மார்ச் 1 அன்று தேர்தல் அறிவிப்பு வெளிவந்தும், மார்ச் 19 அன்று வேட்பு மனு தாக்கல் துவங்கிய பின்பும், இது குறித்த எந்த அறிவிப்பையும் மக்களுக்கு தெரிவிக்காததினால் - ஆதங்கத்துடன் - தற்போது சர்ச்சைக்கு உட்படுத்தப்பட்டுள்ள ஆய்வு செய்தியை மார்ச் 24 அன்று வெளியிட்டோம்.

[பாகம் - 1]

[தொடரும்]


Previous News ItemNext News Item
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. KMUF&TSUNAMI SETTLEMENTS.
posted by SEYED AHAMED (HONG KONG, CHINA) [31 March 2011]
IP: 119.*.*.* Hong Kong | Comment Reference Number: 3674

சுனாமி குடியிருப்புக்களும் தேர்தல் புறக்கணிப்பும் என்ற தொடர் செய்திகளுக்கு KUMFக்கும் சம்பந்தம் என்று ஒருபொழுதும் காயல்.காம் சொன்னதில்லை. அப்படி இருக்கையில் பேரவைத் தலைவரின் அனுமதி ஏன் கோர வேண்டும்.

அதில் என்ன செய்திகள் பொய் செய்தி எது தவறான செய்தி என்று KMUF விளக்க வேண்டும். ஊடகம் எந்த செய்தியை வதந்தி போல் வெளி இட்டது.

பேரவை ஊரை கூட்டி கடை அடைப்பு, ஆர்ப்பாட்டம் போன்றவைகளை நடத்தி எதிர்ப்பு கூட்டத்தில் "அரசு ஒரு நடவடிக்கையும் எடுக்கதிருந்தால் தேர்தல் புறகணிப்பு என்ற செய்தியை உலக காயலர்கள் செய்தியிலும் videoவிலும் பார்த்தது பொய்யா? அல்லது KMUFசொன்னது விளையாட்டகவா, போலியான வார்த்தை ஜாலங்களா? அன்று அப்படி பேசிவிட்டு, இன்று தேர்தலை யாரும் புறக்கணிக்க தேவையில்லை என்று கூறுவது முரண்பாடாகத் தோன்றவில்லையா?

பேரவை அரசியலிலும் ஆன்மீகத்திலும் தலை இடக்கூடாது என்பதில் எல்லோரும் உறுதியாக இருக்கிறோம், ஆனால் அன்று ஒருமித்த முடிவும், இன்று சிலரின் தீர்மானங்களை பார்க்கும்பொழுது பிற மற்றும் உலக காயலர்களை முட்டாள்களாக்க நினைத்தா?

திமுக மற்றும் அதன் கூட்டணிகட்சியினரை திருப்திபடுத்த நினைக்கும் KMUFஐ வெளிஊர் வெளிநாடுகளில் வசிக்கும் நடுநிலையான காயலர்கள் வன்மையாக கருதுகிறோம்.

Moderator:Comment edited!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
2. சீவுதற்கு சிகையின்றி, சீப்புகள் எதற்காக?
posted by kavimagan m.s.abdul kader (dubai) [31 March 2011]
IP: 86.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 3676

காயல்பட்டணம்.காம் என்பது வெறும் செய்தி ஊடகம் மாத்திரம் அல்ல. நகர்நல சேவையில் தன்னை முழுவதும் அர்ப்பணித்துக்கொண்ட ஓர் அமைப்பு என்பதனை நாம் அனைவரும் அறிவோம்.

உள்ளூர் காயலர் முதல் உலகமெங்கும் பரவிக்கிடக்கின்ற ஒவ்வொரு மண்ணின் மைந்தரையும் இணைத்து, சிதறிக்கிடக்கின்ற சக்திகளனைத்தையும் ஒருங்கிணைத்து, பல்வேறு நகர்நலப் பணிகள் தொய்வின்றி தொடர்ந்திட களப்பணியாற்றும் சமூக நிறுவனம்.

இன்று வெளிநாட்டு மன்றங்களை இணைக்கின்ற பணி முதல் இக்ராவின் செயல்பாடுகள் வரை, ஒவ்வொன்றிலும் காயல்.காமின் பங்களிப்பு மகத்தானது.

CFFC போன்ற தற்காலிக அமைப்புகளைத் துவக்கி, அதிவேகமாக பணியாற்றிட காயல்.காம் ஆணிவேராக விளங்கி வருவதையும் நாம் அறிவோம்.

மேற்படி ஊடகத்தை நடத்திவரும் நிர்வாகத்தினரும், அங்கத்தினரும் சமூகனலப்பனியில் யாருக்கும் சளைத்தவர்களல்ல என்பதனை அவர்களோடு இணைந்து களப்பணியாற்றிய எங்களைப் போன்றோர் நன்றாக அறிவோம்.

இப்படிப்பட்ட நேர்மையும், நெஞ்சுரமும் கொண்ட, காயல்.காமின் நேயர்கள் யாரும், வெறும் பொழுதுபோக்கிற்காக அல்லாமல், மாறுபட்ட பல கருத்துக்கள் இருந்தபோதும் நகர்னலனுக்காகவே வாசித்தும், எழுதியும் வருகிறார்கள்.

இத்தகைய ஊடகத்தை,எவ்விதக் காரணமும் இன்றி காயப்படுத்த, நடக்காத ஒரு கூட்டத்தை நடந்தது போல் காண்பித்து, நண்பர் ஸாலிஹ் அவர்களையே துஆ ஓத வைத்து, அதன் தொடர்ச்சியாக கண்டன தீர்மானம் என்ற பெயரில், போலி அரசியல்வாதிகளைப் போல ஓர் அறிக்கையை வெளியிட்டிருப்பது ஐக்கியப்பேரவைக்கு அழகல்ல!

ஐக்கியப்பேரவையின் பெரியவர்களே! எம்மைப் பெற்றவர்களே!! இதுபோன்ற பல அவசர, ஆத்திர முடிவுகளால், அடுத்த தலைமுறை உங்கள் மீது வைத்திருக்கின்ற மதிப்பையும், நம்பிக்கையையும் இழந்து விட வேண்டாம் என்று பணிவோடு வேண்டுகிறோம்.

சீவுதற்கு சிகையின்றி, சீப்புகள் எதற்காக?


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
3. தீர்மாணம் நிறை வேற்றுவது மற்றும் தான் நம் வேலையா..??
posted by முத்துவாப்பா... (அல்-கோபர்) [31 March 2011]
IP: 89.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 3677

"காயல்பட்டினம் பொதுமக்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்பட்டு நம்முடைய நியாயமான உணர்வுகள் மதிக்கப்பட வேண்டுமென அரசை இக்கூட்டம் வலியுறுத்துகிறது. தவறும் பட்சத்தில் தேர்தலை புறக்கணிக்கும் கட்டாய நிலைக்கு இந்நகர மக்கள் தள்ளப்படுவார்கள் என்பதை இக்கூட்டம் வேதனையுடன் சுட்டிக்காட்டுகிறது" என்று தீர்மானம் வெளியிட்ட ஐக்கிய பேரவை, தங்களது கோரிக்கையை அரசு ஏற்க பட்சத்தில் நீங்கள் வெளியிட்ட தீர்மாணத்தின் படி தேர்தலை புறகணிப்பு அல்லவா செய்திருக்க வேண்டும். ஏன் அப்படி செய்யவில்லை..?

சரி அப்படியே நீங்கள் தேர்தலை புறகணிக்கவில்லை எனில் மாற்று அறிக்கையாவது வெளியிட்டுருக்க வேண்டாமா..? இதை சுட்டி காட்டிய காயல்பட்டணம்.காம் மீது என்ன தவறு இருக்கின்றது. தீர்மாணம் நிறைவேற்றுவது மற்றும்தான் நம் வேலையா..?? தீர்வு காண்பதில் இல்லையா....?

சேவை நோக்கத்துடன் செயல்பட்டு வரும் காயல்பட்டணம்.காம் மீது கண்டன தீர்மாணம் நிறைவேற்றி இருப்பது மிகவும் வருத்தத்திற்கு உரியதே..


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
4. விழலுக்கு இரைத்த நீராகாது
posted by IBN SAHIB (sadakathpms@gmail.com) (Dammam, Saudi Arabia) [31 March 2011]
IP: 89.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 3678

ஐக்கிய பேரவை முன்பு எடுத்த முடிவுக்கு மாற்றமான தீர்மானம் வெளியிடுவது ஆச்சரியமாக இருக்கிறது. தேர்தல் புறக்கணிப்பு என்ற அறிவிப்பு குறைந்தபட்சம் நம்மூர் மக்களுக்கு அனுகூலமான முடிவையோ அல்லது வேட்பாளர்களின் வாக்குறுதியையோ பெருவதற்குதானே?!

முக்கியமாக இந்த தேர்தல் புறக்கணிப்பு என்கின்ற அறிவிப்பு திமுக வேட்பாளரையே அதிகம் பாதிக்கும். எனவே திமுக அரசு நம்மூர் பெரியவர்களை மிரட்டினார்களா? என்பதையும் தீர ஆராய வேண்டும்.

KOTW நிர்வாகிகளே! நீங்கள் ஊர் நன்மையை நாடி எடுக்கும் எந்த செயல்பாடும் விழலுக்கு இரைத்த நீராகாது என்பதை மனதில் வைத்துக் கொள்ளவும்.

Moderator: Comment edited! (dear Br.Ibn Sahib, pls provide your original name.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
5. பெரும் தீட்டு
posted by சாளை S.I.ஜியாவுதீன் ( அல்கோபார்) [31 March 2011]
IP: 2.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 3682

எங்களைப் போல வெளி நாட்டில் இருப்பவர்களுக்கு ஊரோடு ஒன்று இனைப்பது இந்த இனைய தளம் தான். இதுவரை இவர்கள் எந்த சர்ச்சை, சஞ்சரவுகளில் சிக்காமல் நடுநிலமையோடு நடந்து கொண்டது நாம் அறிந்ததுதான்.

இவர்களின் செய்திகளில் நடந்தவை தானே பதித்து உள்ளார்கள். அவர்களின் செய்தி உண்மைக்கு புறம்பாக இருந்தால், உண்மை நிலையை அவர்களிடம் ஆதாரத்துடன் சொல்லி அவர்களை வலை தளத்திலேயே மறுப்பு செய்தி வரவைப்பது தான் முறையே தவிர, மற்ற வலைதளத்தில் மறுப்பு செய்தி பதிப்பது என்பது நல்லது அல்ல.

மேலும்,'முஸ்லிம் ஐக்கிய பேரவை' தீட்டாத தீர்மானத்தை தீட்டியதாக சொல்லி அறிக்கை விடுவது பெரும் தீட்டு.

நம் வலைதளங்களை நாம் மட்டும் பார்க்கவில்லை,பல நண்பர்களும் பார்வை இடுகிறார்கள்.

நம் மக்களிடமும், மற்றவர்களிடமும் நம் முஸ்லிம் ஐக்கிய பேரவைக்கு ஒரு கண்ணியம் உள்ளது என்பதை அனைவர்களும் அறிந்தது. அதை காப்பாத்துவது நம் அனைவர்களின் கடமை, குறிப்பாக ஐக்கிய பேரவைக்கும் கூட.

சாளை S.I.ஜியாவுதீன், அல்கோபார்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
6. Tsunami Housing project and boycot election
posted by Meera Sahib (kayalpatnam) [01 April 2011]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 3693

Assalamu alaikkum

It is very unexpected remark by the Aiykkiya Peravai and its members. Kayalpatnam.com is doing a yeoman service to our people. From the letter of the Aikkiya peravai it is clear that it has gone to the hands of politicians.

From the list of attendees only a few are (those aged people) without political allegience. The rest are ardent political followers. Hence they cannot take a proper decision. We must understand the Peravai is for the whole community and represent the people of kayalpatnam. I see some new people in the Peravai who are "verriers' (not worriers) of Kalainger.

Boycott is also a means to show our disapproval. It is not against law. It is allowed in the democratic set up. We are not forcing any individual to comply with but taking a unanimous decision on behalf of the Kayalpatnam people.

If Peravai taking a decision and reverting from it will make them lose their identity. It means we need not follow or accept Peravai's decision. We have witnessed so many villages boycot the election for their cause. If this is undemocratic then the whole village must be convicted. This is not so. It clearly shows that there is none to guide the Peravai.

Let Kayalpatnam.com do its service, we are behind you. I don't know how to write my comments in Tamil in this column. Should I be I would have explained more clearly.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>

முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்

பிற செய்திகள்

காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
Fathima JewellersAKM Jewellers
FaamsCathedral Road LKS Gold Paradise

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved