Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
9:59:08 PM
சனி | 27 ஜுலை 2024 | துல்ஹஜ் 1822, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
04:4912:2903:5206:4508:00
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:08Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்23:37
மறைவு18:39மறைவு11:26
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
04:5405:2005:46
உச்சி
12:24
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
19:0219:2819:54
Go to Homepage
செய்திகள்
Previous News ItemNext News Item
செய்தி எண் (ID #) 6000
#KOTW6000
Increase Font Size Decrease Font Size
ஞாயிறு, ஏப்ரல் 17, 2011
தேர்தல் முடிவுக்கு பிறகு தேர்வு முடிவுகள்?
செய்திகாயல்பட்டணம்.காம்
இந்த பக்கம் 3655 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (6) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 0)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}

தமிழகத்தில் பன்னிரண்டாம் வகுப்பு அரசு தேர்வுகள் மார்ச் 2 அன்று துவங்கி மார்ச் 25 அன்று முடிவுற்றன. பத்தாம் வகுப்பு தேர்வுகள் மார்ச் 28 அன்று துவங்கி ஏப்ரல் 11 அன்று நிறைவுற்றன. மெட்ரிக் தேர்வுகள் மார்ச் 22 அன்று துவங்கி ஏப்ரல் 11 அன்று நிறைவுற்றன.

பன்னிரண்டாம் வகுப்பு தேர்வு முடிவுகள் ஒவ்வொரு ஆண்டும் மே மாதம் இரண்டாம் அல்லது மூன்றாம் வாரம் வெளியிடப்பட்டு வருகின்றன. அதனை தொடர்ந்தே பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் மே மாத இறுதியில் வெளியிடப்பட்டு வருகின்றன.

இவ்வருடம் தமிழக சட்டசபைக்கு ஏப்ரல் 13 அன்று நடந்த தேர்தலின் காரணமாக - பன்னிரண்டாம் வகுப்பு பரிட்சை தாள்கள் வழக்கத்தை விட முன்னரே திருத்தப்பட துவங்கியதாக தகவல்கள் தெரிவித்தன. மேலும் இவ்வருடம் தேர்வு முடிவுகள் மே 10 வாக்கில் வெளியிடப்படும் என்றும் சில தகவல்கள் தெரிவித்தன.

பொதுவாக - பொறியியல் மற்றும் மருத்துவ கல்லூரிகளில் மாணவர்கள் அனுமதியை விரைவில் துவங்கும் எண்ணத்தில் - பன்னிரண்டாம் வகுப்பு தேர்வு முடிவுகளை அரசு முன்னரே வெளியிடவே முயற்சி செய்கிறது.

2007, 2009 மற்றும் 2010 இல் தேர்வு முடிவுகள் மே 14 அன்று வெளியானது. 2008 இல் மே 9 அன்று முடிவுகள் வெளியாகின.

2009 இல் இந்திய பாராளுமன்ற தேர்தல்கள் தமிழகத்தில் மே 13 அன்று நடைபெற்றது. அதற்க்கு மறுதினமே (மே 14) பன்னிரண்டாம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியாகின. மே 16 அன்றே வாக்கு எண்ணிக்கை நடந்தது.

தற்போது தமிழக சட்டசபை தேர்தலுக்கான வாக்குகள் எண்ணிக்கை மே 13 அன்று நடைபெற உள்ளது. அதன் பிறகே - புது ஆட்சி அமைக்கப்பட்ட பின்னரே - தேர்வு முடிவுகள் வெளிவர வாய்ப்புள்ளதாக சில தகவல்கள் தெரிவிக்கின்றன. இதற்கு முன்-உதாரணமாக 2001 மற்றும் 2006 சட்டசபை தேர்தல்கள் கூறப்படுகிறது.

2001 ம் ஆண்டு சட்டசபைக்கான தேர்தல் மே 10 அன்று நடைபெற்று, மே 13 அன்று வாக்கு எண்ணிக்கை நடந்தது. பன்னிரண்டாம் வகுப்பு தேர்வு முடிவுகள் அவ்வாண்டு மே 28 அன்று வெளியாகின.

அது போல் 2006 ம் ஆண்டு சட்டசபைக்கான தேர்தல் மே 8 அன்று நடைபெற்றது. மே 11 அன்று வாக்கு எண்ணிக்கை நடந்தது. பன்னிரண்டாம் வகுப்பு தேர்வு முடிவுகள் அவ்வாண்டு மே 22 அன்று வெளியாகின.

தகவல்:
www.topperstalk.com


Previous News ItemNext News Item
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. அறுத்த கைக்கு உப்பு வைக்க .
posted by சாளை S.I.ஜியாவுதீன் (அல்கோபார்.) [18 April 2011]
IP: 2.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 4000

ரிசல்ட் எப்போ வரணுமோ அப்போ வரட்டும், தாங்கள் அனைவர்களும் நன்றாக தேர்வு எழுதி உள்ளீர்கள்தானே, நல்ல ஜாலியாக இருங்கள். ஆனால் வரம்பு மீறாதீர்கள்.

அப்புறம், என்னன்ன மார்க் வாங்கினால் என்னன்ன பாடங்கள் படிக்கலாம், எந்த கல்லூரில் படிக்கலாம் என்று நல்ல அலசி வைத்துக்கொள்ளுங்கள்.

மாணவிகளே தாங்கள், தங்களின் தாயாருக்கு உதவியாகவும் இருந்து, சமையல் வேலைகள் எல்லாம் நன்கு கற்றுக்கொள்ளுங்கள். (மஹ்மூத் மாமா மாதிரி எழுதிப் பார்த்தேன், வரவில்லை.. நம் பாணிதான் நமக்கு சரி).

** நம் அநேக பெண் பிள்ளைகளுக்கு சுடுதண்ணீர் (வெந்நீர்)போடக்கூட தெரியவில்லை என்பது நிதர்சனமான உண்மைதான்.

ஒருமுறை என்னுடைய நண்பனின் கம்மாவை பார்க்க சென்று இருந்தேன்(சிறு வயதில் அவர்கள் வீட்டில் ஒன்றாக படிப்போம், கம்மா கூட அல்ல, நண்பர்கள் கூட). அங்கு அப்போது +2 படித்து முடித்த மாணவியும் உண்டு. அங்கு நடந்த நிகழ்ச்சி.

“தாயீ... தம்பி முழித்து விடுவான், பால் கரைக்க வெந்நீர் போடுமா.. புள்ள”.

-உம்மா.. நான் கையிலே வேலையா இருக்கேம்மா..

-என்ன.. கிழிக்கிற வேலை.. இருக்கிறதே ஒரு ஜான் முடி, அதை எவ்வளவு நேரம்தான் நோண்டிக்கிட்டு இருப்பாய்.. "ஒரு அறுத்த கைக்கு உப்பு வைக்க மாட்டாள்".(இதுவரை இந்த பழமொழிக்கு எனக்கு அர்த்தம் தெரியலே, எங்க மன்ற தலைவர் டாக்டர் இத்ரீஸ் அவர்களிடம் கேட்டுவிடனும்)

-சரிமா..கத்தாதே.. நான் போடுறேன்..

-உம்மா.. எந்த சட்டிலே போட..

-சில்வர் குண்டு சட்டிலே போடு.

-எங்கமா அந்த சட்டி இருக்குது..

-நல்ல தேடி பாரேன்.

-இருக்கு..இருக்கு..

-உம்மா.. எந்த தண்ணீலே போட..

-சில்வர் குடத்தில் இருக்கும் தண்ணீரை எடுக்காதே.. அது பைப்பில் வந்தது. கீழே நீலக்கலர் வாளிலே இருக்கும் தண்ணீரை எடு..

-டொக்.. டொக்.. டொக்.. உம்மா அடுப்பு பத்தவில்லை..

-அது என்றைக்கு ஒழுங்கா பத்தி இருக்கு, நானும் மூன்று மாசமா அந்த மனுசன்ட கரடி கத்தா கத்தி பார்த்து விட்டேன்.. அடுப்பை ரிப்பேர் பார்த்து வாங்கோ என்று... ஒண்ணுக்கும் பிரயோசனம் இல்லை..

-(உடனே என் அருகில் இருந்த ஆத்துக்காரர்) ஏன்... உன் இரண்டு காக்காமார்களும் எருமை மாடு மாதிரி ஊர் சுத்திக்கொண்டு, தெண்ட சோரா இருக்கானுலே,, அவனுங்களே சொல்ல மாட்டியா.

-அடியா... அடுப்பு பக்கதிலே லைட்டர் இருக்கு.. அதை வைத்து பத்துடி..

-இல்லைமா...

-என் உயிரை எடுப்பா. இந்த பக்கம் இல்லேன்னா.. அந்தப்பக்கம் பாரேன்டி..

-இருக்கு.. இருக்கு.. பத்திடேன்..

-உம்மா.. அடுப்பை புல்லே(FULL ) வைக்கவா.. இல்லை சிம்மில் (SIM) வைக்கவா..

-உடனே.. கம்மா.. சாவுதீன்(கம்மாக்கு 'ஜி' வராது).. அடுப்பிலுமா சிம் இருக்குது.

-ஆமாம் கம்மா. மொபைல் போன் இல் கூட சிம் உள்ளது. உனக்குதான் சிம் என்றாலே புடிக்காதே..

இந்த கூப்பாடில் குழந்தையும் பதறி முழித்து, கத்து கத்து என்று கத்திவிட்டான்.

‘சனியன்... சனியன் ... ஒரு சுடுதண்ணீர் வைக்க துப்பு இல்லை... பிள்ளைக்கு பால் கரைக்க சுடு தண்ணீர் வைக்க சொன்னா.. பெரிய குடத்து நிறைய தண்ணீர் புடித்து வைத்து இருக்குது... சனியன்..

பார்த்தீர்களா...இது தான் அதிகமான நம் பெண் பிள்ளைகளின் நிலைமை... ”தாய்” என்று ஆரம்பித்து “சனியன்” வரை வந்து விட்டது.. நடுவே வாப்பாவயும், மாமாமார்களையும் துணைக்கு பாட்டு வாங்க வைத்தாகி விட்டாச்சு.

இதை தான் நம்ம ஆளு கல்யாணம் பண்ணி, வெளிநாடு அழைத்து வந்து, சமைத்துக் கொடுத்துக் கொண்டு இருக்கிறான். நம்ம பசங்க அநியாயத்திற்க்கு நல்லவனா இருக்கானுங்க... இருக்கட்டும் இருக்கட்டும்.. மாஷா அல்லாஹ்.

ஆகவே இந்த விடுமுறை நாட்களை நல்ல உபயோகமாக ஆக்கிக்கொள்ளுங்கள். குறிப்பாக யாருக்கு எல்லாம் கை அறுத்து உள்ளதோ.. அவர்களுக்கு எல்லாம் நல்லா உப்பு வையுங்க.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
2. ஒரு பட்டியல் போட முடியுமா..??
posted by முத்துவாப்பா... (அல்-கோபர்) [18 April 2011]
IP: 89.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 4003

ஜியாவுதீன் காக்கா "இதைதான் நம்ம ஆளு கல்யாணம் பண்ணி, வெளிநாடு அழைத்து வந்து, சமைத்துக் கொடுத்துக் கொண்டு இருக்கிறான்.

நம்ம பசங்க அநியாயத்திற்க்கு நல்லவனா இருக்கானுங்க..." அப்படி சொல்லி இருக்கீங்களே யார் யார் எல்லாம் அந்த நல்லவங்கன்னு கொஞ்சம் ஒரு பட்டியல் போட முடியுமா..??


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
3. அப்போ நான் தான் முதல், பின்பு நீ..
posted by சாளை. S.I.ஜியாவுதீன் (அல்கோபார்) [18 April 2011]
IP: 2.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 4009

என்ன தம்பி முத்துவாப்பா...உனக்கு பட்டியல் இடுவது என்றால் மிகவும் இஷ்டமோ.

சென்ற மாத ஒரு பதிவில் ஒரு சகோதரர் 'நாம் 100 கூறுகளாக பிரிந்து உள்ளோம்' என்றவுடன், உடனே நீ பட்டியலிடமுடியுமா? என்று கேட்டு இருந்தாய், இன்றும் அப்படியே...அரசியலில் நுழைந்தவுடன் அந்த மேடை மொழி உன்னிடம் வந்துவிட்டது பார்த்தாயா?

லிஸ்ட் போட ஆரம்பித்தால் முதலில் உன்பெயர் வரலாம் ஆனால் நீ இன்னும் உன் குடும்பத்தை இங்கு அழைத்து வரவில்லையே.. பார்போம்..

ஒருவேளை நீ bachelor சமையல் பற்றி சொல்லுகிறாயா? அப்போ நான் தான் முதல், பின்பு நீ..

சாளை. S.I.ஜியாவுதீன்,அல்கோபார்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
4. மாட்டிவிட்டு வேடிக்கை பார்க்கலாம்னு தான்...
posted by முத்துவாப்பா... (அல்-கோபர்) [18 April 2011]
IP: 89.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 4011

நான் லிஸ்ட் கேட்டது எதுக்குனா நீங்க யார் பேரயாவது சொல்லுவீங்க கொஞ்சம் மாட்டிவிட்டு வேடிக்கை பார்க்கலாம்னு தான்...


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
5. வாழ்வில் வசந்தம்
posted by N.S.E. மஹ்மூது (Kayalpatnam) [19 April 2011]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 4028

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்).

அன்பு மாணவ மணிகளே!

பிளஸ் 2 மற்றும் பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகளை அறிவதற்காக எல்லோரும் ஆவலாக காத்திருக்கிறீர்கள், இன்ஷா அல்லாஹ்! மே 14 ம் தேதி பிளஸ் 2 மற்றும் மே 25 ம் தேதி எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் என்று பள்ளிக் கல்வித்துறை முடிவு செய்திருப்பதாக செய்தி தாள்களிலே வெளியாகி இருக்கிறது. அனைத்து மாணவ மணிகளும் எல்லா பாடங்களிலும் அதிக மதிப்பெண்கள் எடுத்து தேர்ச்சிப்பெற வாழ்த்துக்கள்.

---------------------
பத்தாம் வகுப்பு :-

பத்தாம் வகுப்பு மாணவ மணிகளுக்கு இன்னும் பள்ளிக்கூட வாழ்க்கை முடிவடையவில்லை, மேலும் பிளஸ் 1க்கு போக இருக்கிற உங்களுக்கு டென்ஷன் இருக்காது.

அதனால் நீங்கள் இந்த விடுமுறையில் நன்றாக ஓய்வு எடுக்கலாம் அடுத்த விடுமுறையில் பல பேருக்கு ஓய்வு எடுக்க வாய்ப்புக் கிடைக்காது. எனவே நன்றாக ஓய்வு எடுத்துக்கொள்ள வேண்டியது.
---------------------------------------------
மாணவிகள் :-

நன்றாக ஓய்வு எடுப்பதுடன் ஓரளவு சமையல் கலையை கற்றுக்கொள்ளுங்கள், என்னதான் நாங்கள் (ஆண்கள்) " பிரியாணி " ஆக்குவதிலிருந்து " காயம் மருந்து " செய்வது வரை எந்த சமையலை நன்றாக செய்தாலும் நீங்கள் (வளையல் கரங்கள்) செய்கின்ற சமையலுக்கு ஈடாகாது, அது ரசமானாலும் அல்லது கொத்தமல்லி சட்டினியானாலும் சரி அதன் ருசியே தனிதான்.

எனவே சமையல் கலை என்பது இறைவனால் பெண்களுக்கு வழங்கப்பட்ட அருட்கொடை. எனவே அந்த அருட்கொடையை அவமதிக்கலாகாது.
--------------------------
பிளஸ் 2 :-

பள்ளி செல்லத் தொடங்கிய காலம் முதல் பிளஸ் 2 படித்து முடியும்வரை பெற்றோர்களின் முழுக்கட்டுபாட்டில் வாழ்ந்த உங்களுக்கு இனி வரும் காலத்தை ஓரளவு உங்களுடைய சுயக்கட்டுபாட்டில் அமைக்க வாய்ப்புக் கிடைத்திருக்கிறது.

பள்ளி படிப்பு முடிந்து சுதந்திரமாக இருக்கும் இந்த நேரத்தில் சில வாரங்கள் நன்றாக ஓய்வு எடுத்தபின் கல்லூரியில் சேர்வதற்கான வேலைகளை ஆரம்பம் செய்யுங்கள்.

தீர ஆலோசித்து ஒரு நல்ல முடிவு எடுத்து உங்கள் வருங்காலத்திற்கான திட்டங்களைத் துவக்குங்கள் அல்லாஹ்! நன்மையாக்கித் தருவான்.
--------------------------------------
மாணவிகள் :-

பள்ளிக்கூட வாழ்க்கை முடிந்து விட்டது இனிமேல் என்ன செய்யலாம் - மதரஸா சென்று மார்க்கக் கல்வியைப் படிப்பதா ? அல்லது கல்லூரிக்கு செல்வதா? எதுவாக இருந்தாலும் தேர்வு முடிவுகள் வரும் முன்பே திட்டமிட்டுக்கொண்டால் அதற்கான ஆயத்தங்களை செய்ய உதவியாக இருக்கும்.

என்னைப் பொறுத்தவரை நீங்கள் மதரஸாவிற்கு சென்று மார்க்கக் கல்வியை பயின்று அதன்படி நடந்தால் ஈருலுகப் பயனும் கிடைக்கும்.

இல்லை நீங்கள் கல்லூரிக்கு சென்று ஏதாவது ஒரு பட்டம் வாங்கத்தான் வேண்டும் என்ற நிலையில் இருப்பவர்களாக இருந்தால், நமது ஊரில் உள்ள கல்லூரிக்கு சென்று படித்து இளநிலை பட்டம் வாங்கிக் கொள்ளலாம். எக்காரணம் கொண்டும் வெளி ஊருக்கு சென்று படிக்காதீர்கள் அது நமக்கு பக்கத்து ஊரேயானாலும் சரி அது நல்லதல்ல.

சீனா போன்ற தூர பிரதேசமாகிலும் சென்று சீர் கல்வியை கற்க வேண்டும் என்று நமது நாயகம் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் சொன்னது மார்க்கக் கல்வியைத்தான், அதனால் உலகக் கல்விக்காக பெண் பிள்ளைகளே வெளியே செல்ல வேண்டாம்.

உங்களிலே எத்தனை பேர் ஐந்து வேளையும் சரியான நேரத்திற்கு தொழுது வருகிறீர்கள்? என்பதை நீங்களே சுயமாக சிந்தித்துப் பாருங்கள்!!!

எல்லாம் வல்ல அல்லாஹ்! நீங்கள் அனைவரும் அதிக மதிப்பெண்கள் எடுத்து தேர்ச்சி பெறவும், சீரான கல்வியைக் கற்று உங்கள் வாழ்வில் வசந்தம் வீசவும் கிருபை செய்வானாக ஆமீன். வஸ்ஸலாம்.

அன்புடன், " மஹ்மூது மாமா " .


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
6. all the best for our students
posted by sulaiman lebbai - riyadh (RIYADH - S.ARABIA) [20 April 2011]
IP: 2.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 4033

BEST WISHES FOR ALL OUR KAYAL 10th & +2 STUDENTS. INSHA ALLAH, THEY HAVE TO SCORE HIGH MARKS IN ALL SUBJECTS. WE WILL DO DUWA FOR ALL OUR STUDENTS. BEST WISHES.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>

முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்

பிற செய்திகள்

காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
Cathedral Road LKS Gold ParadiseFathima Jewellers
AKM JewellersFaams

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved