Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
8:28:02 PM
சனி | 27 ஏப்ரல் 2024 | துல்ஹஜ் 1731, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
04:5012:2115:3118:3219:44
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:03Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்21:28
மறைவு18:27மறைவு08:22
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
04:5105:1605:41
உச்சி
12:15
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:4919:1419:39
Go to Homepage
செய்திகள்
Previous News ItemNext News Item
செய்தி எண் (ID #) 6007
#KOTW6007
Increase Font Size Decrease Font Size
செவ்வாய், ஏப்ரல் 19, 2011
ஜூலை 08,09,10இல் காயல்பட்டினத்தில் இஸ்லாமிய தமிழிலக்கிய மாநாடு! முன்னேற்பாடுகள் தீவிரம்!!
செய்திஎஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்)
இந்த பக்கம் 3784 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (4) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 0)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}

காயல்பட்டினத்தில் வரும் ஜூலை மாதம் 08, 09, 10 தேதிகளில் இஸ்லாமிய தமிழிலக்கிய மாநாடு நடைபெறவிருக்கிறது. இதுகுறித்து, இஸ்லாமிய தமிழ் இலக்கியக் கழகம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கை பின்வருமாறு:-

இதுவரை நடத்தப்பட்ட மாநாடுகள்:
இஸ்லாமியத் தமிழ் இலக்கியக் கழகம் இதுவரை பதினான்கு மாநாடுகளை நாகூர், நீடூர், காரைக்கால், சென்னை, திருச்சி, கோட்டக்குப்பம், முத்துப்பேட்டை, ராஜகிரி, புதுச்சேரி, மயிலாடுதுறை, பள்ளபட்டி, பரமக்குடி, தஞ்சாவூர், அதிராம்பட்டினம் ஆகிய நகரங்களில் சிறப்போடு நடத்தி இருக்கிறது.

நூற்று எண்பது நூல்கள் பல்வேறு துறைகளிலும் வெளியிடப்பட்டுள்ளது. சாதனை படைத்த சான்றோர்கள், எழுத்தாளர்கள், கவிஞர்கள், பத்திரிகையாளர்கள், சமுதாய புரவலர்கள் இம் மாநாடுகளில் விருதுகள் வழங்கி கவுரவிக்கப்பட்டுள்ளனர். இம்மாநாடுகளில் அனைத்து சமுதாய கல்லூரி மாணவ - மாணவிகளும் பங்கேற்ற கட்டுரைப் போட்டிகள் இளைய தலைமுறையினரிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தி இருக்கின்றது.

இஸ்லாமியத் தமிழ் இலக்கியக் கழகத்தின் சார்பாக வெளியிடப்பட்டுள்ள `இஸ்லாமியத் தமிழ் இலக்கிய ஆய்வுக் கோவை’, `மானுடம் போற்று வோம்’, `இஸ்லாமியத் தமிழ் எழுத்தாளர்கள்’, `இலக்கிய உலகம்’, இஸ்லாம் வளர்த்த தமிழ்’, `தற்கால இஸ்லாமியத் தமிழ் இலக்கியம்’, `இலக்கி யச் செல்வர்கள்’, `ஆய்வுச் சோலை’, `ஆய்வுப் பேழை’ ஆகிய ஒன்பது நூல்கள் தமிழ் உலகில் நன்மதிப்பை பெற்றிருக்கின்றது.

இஸ்லாமிய தமிழ் இலக்கியக் கழகத்தின் நிறுவனர் மற்றும் நிர்வாகிகள்:
இஸ்லாமியத் தமிழ் இலக்கியக் கழகம் சிந்தனைச் செலவர் சிராஜுல் மில்லத் ஆ.கா.அ.அப்துஸ் ஸமத் சாஹிபின் வழிகாட்டுதலில் ஆரம்பிக்கப்பட்டு, நீடூர் வழக்கறிஞர் ஸயீத் சாஹிப் முதல் தலைவராகவும் செயலாற்றியிருக்கின்றனர்.

கழகத்தின் உலக ஒருங்கிணைப்பாளராக பேராசிரியர் கே.எம்.காதர் மொகிதீன், தலைவராக கவிஞர் வடக்கு கோட்டையார் வ.மு.செய்யது அஹமது, பொதுச்செயலாளராகக காரைக்கால் அண்ணா கலைக் கல்லூரி தமிழ்த்துறை தலைவர் பேராசிரியர் மு.சாயபு மரைக்காயர், பொருளாளராக சென்னை புதுக்கல்லூரி பேராசிரியர் ஹ.மு.நத்தர்சா ஆகியோர் நிர்வாகிகளாகவும், தமிழகம், சிங்கப்பூர், இலங்கை உள்ளிட்ட நாடுகளில் வாழும் தமிழறிஞர்கள் அதன் அங்கத்தினராகவும் இருக்கின்றனர்.

காயல்பட்டினத்தில் மாநாடு:
இஸ்லாமியத் தமிழ் இலக்கிய பதினைந்தாம் மாநாடு எதிர்வரும் 2011 ஜூலை 8, 9, 10 ஆகிய மூன்று தினங்கள் வரலாற்றுச் சிறப்பும், இஸ்லாமிய தமிழ் இலக்கியங்களும் நிறைந்திருக்கும் காயல்பட்டினத்தில் நடைபெற இருக்கின்றது.

இம்மாநாட்டில் உலகெங்கிலும் இருந்து இலக்கிய ஆர்வலர்கள், மார்க்க அறிஞர்கள், சமுதாய புரவலர்கள், மத்திய - மாநில அமைச்சர்கள், பாராளுமன்ற சட்டமன்ற உறுப்பினர்கள், கல்லூரிகளின் பேராசிரியர்கள் என இஸ்லாமியத் தமிழ் இலக்கியத் தனிச்சிறப்பை விளக்கிட சான்றோர்கள் பங்கேற்கின்றனர். காயல்பட்டினத்தில் பிறந்த புலவர்கள், மார்க்க அறிஞர்கள், கவிஞர்கள், இஸ்லாமிய தமிழ் இலக்கியம் மற்றும் அரபு தமிழிலும் பல நூல்களை பல்லாண்டுகளுக்கு முன்பாகவே யாத்தளித்துள்ளனர்.

இலக்கிய ஆர்வலர் கையேடு வெளியீடு:
இவ்விலக்கியங்களையும் காயல்பட்டினம் இலக்கிய மாநாட்டில் புதுப்பித்து வெளியிட முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. இம்மாநாட்டில் `இலக்கிய இணையம்’ என்ற இலக்கிய ஆர்வலர்களின் வாழ்க்கை குறிப்பு மற்றும் புதிய முகவரி உள்ளடக்கிய நூல் வெளியிடப்படுகிறது. இந்நூலில் இடம்பெற விரும்புவோர் இலக்கியக் கழக பொதுச் செயலாளரை தொடர்பு கொள்ளலாம்.

மாநாட்டு நிகழ்வுகள்:
மூன்று தினங்கள் நடைபெறும் காயல்பட்டின மாநாட்டில் இஸ்லாமிய தமிழ் இலக்கியம் குறித்து பட்டிமன்றம், கருத்தரங்கம், சன்மார்க்க அரங்கம், இசையரங்கம், மகளிர் அரங்கம், ஆய்வரங்கம் என பல்வேறு நிகழ்ச்சிகள் இடம்பெறுகின்றன.

தொடர்பாளர்கள்:
இம்மாநாடு சம்பந்தமாக இலக்கியக் கழக பொதுச் செயலாளர்
பேராசிரியர் மு.சாயபு மரைக்காயர்
8,தம்பி சாயபு மரைக்காயர் வீதி,
காரைக்கால் - 609 602,
அலைபேசி - 98424 88047

காயல் எஸ்.இ.அமானுல்லாஹ்,
484, நெய்னார் தெரு,
காயல்பட்டினம் - 628204,
அலைபேசி – 9443342222
Email: kayalaman@gmail.com
ஆகியோரை தொடர்பு கொள்ளலாம்.

ஜலாலிய்யாவில் ஆலோசனைக் கூட்டம்:
இம்மாநாடு சம்பந்தமான ஆலோசனை கூட்டம் 07-05-2011 சனிக்கிழமை மாலை 04.00 மணிக்கு காயல்பட்டினம், சதுக்கைத் தெரு, ஜலாலிய்யா நிகாஹ் மஜ்லிஸில் வைத்து நடைபெறுகின்றது.

இக்கூட்டத்தில் இலக்கியக் கழகத்தின் பொதுச் செயலாளர் பேராசிரியர் மு.சாயபு மரைக்காயர் பங்கேற்கிறார். நகரின் அனைத்து ஜமாஅத் நிர்வாகிகள், கல்வியாளர்கள், இலக்கிய ஆர்வலர்கள், நற்பணி மன்றங்களின் பொறுப்பாளர்கள் உள்ளிட்ட அனைவரும் இக்கூட்டத்தில் பங்கேற்று மாநாடு வெற்றிக்கான ஆலோசனை வழங்குகின்றனர்.

இஸ்லாமிய தமிழ் இலக்கிய பதினைந்தாம் மாநாடு பணிகளை இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநில பொதுச் செயலாளர் கே.ஏ.எம்.முஹம்மது அபூபக்கர், மணிச்சுடர் நாளிதழ் செய்தி ஆசிரியர் காயல் மகபூப் உள்ளிட் டோர் முனைப்போடு செய்து வருகின்றனர்.


இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தகவல்:
இஸ்லாமிய தமிழ் இலக்கியக் கழகம் சார்பாக,
உஸ்மான்,
36, மரைக்கார் லெப்பைத் தெரு,
மண்ணடி, சென்னை - 01.


முன்னதாக இம்மாநாடு வரும் மே மாதம் 27, 28, 29 தேதிகளில் நடைபெறுமென அறிவிக்கப்பட்டிருந்தது மாற்றப்பட்டு, புதிய தேதி அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.


Previous News ItemNext News Item
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. PRIDE & HONOUR
posted by K.V.A.T.H. AHAMED THAHIR,DOHA. (Doha - Qatar / Gulf Wing) [19 April 2011]
IP: 78.*.*.* Qatar | Comment Reference Number: 4015

IT GIVES ME IMMENSE PLEASURE TO CONDUCT THIS 15TH ISLAMIC CONFERENCE AT OUR TOWN KAYALPATNAM.

INDEED, I THANK THE ORGANIZERS OF THIS COMMITTE FOR THIS PROPOSAL.

WITH THANKS,
for K.V.A.T.BUHARI HAJI CHARITABLE TRUST,
K.V.A.T. H.AHAMED THAHIR, DOHA-QATAR


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
2. இஸ்லாமிய மாநாடு!
posted by அப்துல்காதர் S.H. (Jeddah, Saudi Arabia) [20 April 2011]
IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 4029

அனைத்துலக இஸ்லாமிய தமிழ் இலக்கிய மூன்றாவது மாநாடு கடந்த 1978 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் மிக பிரமாண்டமான முறையில் மூன்று நாட்கள் USC மைதானத்தில் வைத்து நடந்தபின்னர் இப்படி ஒரு மாநாடு இதுவரை நடக்கவில்லை. மீண்டுமொரு வாய்ப்பு நம் ஊருக்கு வருவதறிந்து மிக்க மகிழ்ச்சி. ஆனால் அது போன்று பிரமாண்ட பந்தலில் நடக்குமா? தமிழ் அறிஞர் கி.ஆ.பே.விஸ்வநாதன், கவிக்கோ அப்துல்ரஹ்மான் ஆகியோர் நம் காயல் மண்ணின் அருமை பெருமைகளை அழகுற எடுத்துச் சொனார்கள். கவிக்கோவின் "காயல்பட்டினத்தில் கல்லும்கூட கவி பாடும்" என்று தொடங்கிய கவிதை தொகுப்பு இன்றும் என் நினைவில் பதிந்துள்ளது. மேலும் L.K. பாடசாலையில் பெரும் அருங்காட்சியும் நடந்து. நமதுரின் பழங்காலத்துப் பொருட்கள், ஓலைச்சுவடிகள், அழகு பெண்டகங்கள், புத்தகங்கள், கைப்பிரதி குரான், இன்னும் பல்வேறு. இதுபோன்று இம்மாநாடும் நடக்கவேண்டும் என்பதே என் அவா.

வாழ்த்துக்கள்!!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
3. புகழோடு வாழியவே!
posted by கவிமகன் (துபாய்) [20 April 2011]
IP: 86.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 4045

பல்லாயிரம் ஆண்டுகளின் பந்தம்நீ
பலகோடி மக்களுக்கு சொந்தம்நீ!
ஆன்றநல் அறிஞர்கள் கவிஞர்தமை
அவனிக்கே அன்பளித்த அம்மாநீ!

கற்பகம்நீ நிலைத்திடவே உன்வேரில்
அற்புதமாய் நீர்வார்த்த நல்லோர்கள்
அரபுதமிழ் நூல்கோர்த்த இறைநேசர்
அணிசேர்க்கும் எமதூரில் மாநாடு!

காசிமெனும் வரகவியும் ஷாமொலியும்
கண்மணியாம் உமர்மகவு சாகிபொலி
கவியாற்ற கருதந்த கனிமொழியே!
புவிபோற்ற புகழோடு வாழியவே!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
4. மீண்டும் ஓர் வசந்தம்...!!!
posted by M.N.L.முஹம்மது ரஃபீக் (ஹிஜாஸ் மைந்தன்) (புனித மக்கா.) [22 April 2011]
IP: 90.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 4078

இந் நற்செய்தியைக் காணும் போது கண்குளிர்கிறது, கேட்கும் போது காதில் தேன் பாய்கிறது, உச்சரிக்கும் போது உதடும், உள்ளமும் இனிக்கின்றது, சரித்திரப் புகழ்மிக்க காயல் பதியில் மீண்டும் இலக்கியத் தென்றலின் இதமான குளிர்காற்று வீசப்போவதை எண்ணி இபோதே மெய்சிலிர்க்கின்றது.

பார்போற்றும் பாவலர்கள் பன்மொழி நாவலர்கள், பேராற்றல் மிக்க மூதறிஞர்கள் முத்து முத்தான கருத்துக்களை எத்திவைக்கும் சொல் வித்தகர்கள், மொத்தத்தில் நம் காயல் மிளிரப்போகிறது!

ஆஹா!அந்த நாள் ஞாபகம் நெஞ்சிலே வந்ததே நண்பனே!நண்பனே!!! கவிமகனே! உன்னைத்தான், உன் தந்தை இக்கனம் இல்லாமை கண்டு என் இதயம் கனக்கிறது. அக்குறையைச் சற்றேனும் சரிசெய்ய நீ இருப்பது ஆறுதலளிகிறது.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>

முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்

பிற செய்திகள்

காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
Fathima JewellersAKM Jewellers
FaamsCathedral Road LKS Gold Paradise

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved