Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
1:02:58 AM
சனி | 27 ஏப்ரல் 2024 | துல்ஹஜ் 1731, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
04:5012:2115:3118:3219:44
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:03Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்21:28
மறைவு18:27மறைவு08:22
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
04:5105:1605:41
உச்சி
12:15
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:4919:1419:39
Go to Homepage
செய்திகள்
Previous News ItemNext News Item
செய்தி எண் (ID #) 6323
#KOTW6323
Increase Font Size Decrease Font Size
வெள்ளி, மே 27, 2011
ரியாத் தமிழ் தஃவா ஒன்றியத்தின் சன்மார்க்க தஃவா நிகழ்ச்சியில் காயலர்கள்!!!
செய்திஒய்.எம்.சாலிஹ் (மக்கா)
இந்த பக்கம் 3161 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (5) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 5)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}

ரியாத், சவுதிஅரேபியா - இறைவனின் அருளால் சென்ற 17.06.1432 (20.05.2011) வெள்ளிக்கிழமை ரியாத், நிவ் ஸினாஇய்யா தஃவா நிலையத்தின் ஏற்பாட்டில் மாபெரும் தஃவா நிகழ்ச்சியொன்று அரங்கேறியது அதில் காயலர்கள் உள்பட பெரும்பாலோனர் கலந்து கொண்டனர் அல்ஹம்துலில்லாஹ். மதியம் 11.00 மணிக்கு தலைமை உரையை நிகழ்த்தினார் தஃவா நிலையத்தின் தமிழ் அழைப்பாளர் அஷ்ஷைக் முனவ்வர் (மதனி) அவர்கள். தலைமை உரையை அடுத்து 'உளத்தூய்மைக்கு இஸ்லாம் கூறும் வழிவகைகள் யாவை?" எனும் தொனிப்பொருளில் அதே அழைப்பாளர் மூலமாக சிற்றுரையொன்று இடம்பெற்றது. அதனை அடுத்து குத்பாப் பிரசங்கமும், ஜும்ஆத் தொழுகையும் இடம்பெற்றன.

ஜும்ஆத் தொழுகையை அடுத்து குத்பாப் பிரசங்கத்தின் சாராம்சம் அஷ்ஷைக் முஆஸ் அவர்களால் மொழிபெயர்ப்புச் செய்யப்பட்டது. 'நன்மை தீமை யாவும் அல்லாஹ்வின் நாட்டத்தின் படியே நிகழும் என்பதை ஆணித்தரமாகப் புகட்டும் 'லா ஹவ்ல வலா குவ்வத இல்லா பில்லாஹ்| எனும் கலிமா எம் நாவுகளில் சதாவும் திளைக்க வேண்டும்" என்பதே அதன் தலைப்பாகும்.



அடுத்த நிகழ்ச்சியாக தம்மாம், அல் கொபார் தஃவாக் கிளையிலிருந்து விஷேட பேச்சாளராக வருகை தந்த அஷ்ஷைக் அலி அக்பர் (உமரி) அவர்கள் அமீருல் முஃமினீன் கலீபா உமர் (ரலி) அவர்களின் வாழ்வும், சேவைகளும் எனும் தலைப்பில் உரை நிகழ்த்தினார். அவர் தமதுரையில் 'உமரின் நாவில் இறைவன் பேசுகிறான்" என நபியவர்கள் கூறிய பல்வேறு சந்தர்ப்பங்களையும், அவ்வாறு கூறியதற்கான காரணத்தையும் எடுத்துரைத்ததோடு, அவர்கள் இஸ்லாமிய சமுதாயத்துக்குச் செய்த சேவைகளையும் பட்டியலிட்டுக் காட்டினார்.



அதனை அடுத்து உரையிலிருந்து தெரிவுசெய்யப்பட்டு பத்து வினாக்கள் சபையோரிடம் வினவப்பட்டு சரியான பதிலளித்தோர் பரிசுக்குரியவராகத் தெரிவுசெய்யப்பட்டனர். அதனைத் தொடர்ந்து பகலுணவுக்காகவும் அஸர்த் தொழுகைக்காகவும் இடைவேளை வழங்கப்பட்டது.



அஸர்த் தொழுகையை அடுத்து ஆரம்ப உரையாக 'இஸ்லாத்தில் வேரூண்டிக் கிடக்கும் மூட நம்பிக்கைகள்" எனும் தலைப்பில் தம்மாம், அல் கொபார் தஃவா நிலையத்திலிருந்து விஷேட பேச்சாளராக வருகை தந்த அஷ்ஷைக் ரஹ்மதுல்லாஹ் (இம்தாதி) அவர்களது உரை இடம்பெற்றது. நவீன யுகம் என்று மார்தட்டிக்கொள்ளும் இக்காலத்திலும் சமூகத்தில் காணப்படும் மூடநம்பிக்கைகளை அவர் அடையாளமிட்டுக் காட்டியதோடு அவைகளை ஒளித்துக் கட்டுவதற்கான வழிகளையும் முன்வைத்தமை குறிப்பிடத்தக்கது.



அதனை அடுத்து உரையிலிருந்து தெரிவுசெய்யப்பட்டு பத்து வினாக்கள் சபையோரிடம் வினவப்பட்டு சரியான பதிலளித்தோர் பரிசுக்குரியவராகத் தெரிவுசெய்யப்பட்டனர்.



அதன் மறுகனமே ரியாத், ரவ்தா தஃவா நிலையத்தின் தமிழ் அழைப்பாளர் அஷ்ஷைக் ரம்ஸான் பாரிஸ் (மதனி) அவர்கள் 'இன்றைய முஸ்லிம்களின் சூழ்நிலை என்ன?" என்ற கருப்பொருளில் தமது உரையை ஆரம்பித்தார். சுமார் ஒரு மணிநேரம் நீடித்த அவரது உரையில் 'உஸ்மானியரின் ஆட்சியோடு வீழ்ச்சியடைந்த இஸ்லாமிய சாம்ராஜ்யம் இன்று வரை தலைதூக்காமல் இருப்பதற்கான மூலகாரணம் என்ன? என்பதையும் குர்ஆனுக்கும், ஸுன்னாவுக்கும் முக்கியத்துவம் வழங்காது குழுக்களுக்கும் தலைவர்களுக்கும் கண்மூடித்தனமாகக் கட்டுப்படுவதால் முஸ்லிம்களுக்கு மத்தியில் ஏற்படும் விளைவுகள் எவை?" என்பதையும் அவர் சுட்டிக்காட்டினார்.



அதனை அடுத்து உரையிலிருந்து தெரிவுசெய்யப்பட்டு பத்து வினாக்கள் சபையோரிடம் வினவப்பட்டு சரியான பதிலளித்தோர் பரிசுக்குரியவராகத் தெரிவுசெய்யப்பட்டனர்.

மஃறிப் தொழுகையை அடுத்து கலந்துகொண்ட பேச்சாளர்கள், மௌலவிமார்கள், பரிசுக்குரியவராகத் தெரிவுசெய்யப்பட்டவர்கள் சகலருக்கும் பரிசுகள் வழங்கப்பட்டதோடு அண்மையில் சத்திய இஸ்லாத்தில் இணைந்த சகோதரர் அஹ்மத் கிருஷ்னா மற்றும் அப்துல்லாஹ் சிவக்குமார் ஆகியோர் கௌரவப் பரிசுகள் வழங்கப்பட்டு கௌரவிக்கப்பட்டனர்.



இறுதியாக, ரியாத் தமிழ் தஃவா ஒன்றியத்தின் தலைவரும், தல்லா தஃவா நிலைய தமிழ் அழைப்பாளருமான அஷ்ஷைக் ளபருள்ளாஹ் (பஹ்ஜி) அவர்களின் நன்றியுடையுடன் நிகழ்ச்சிகள் யாவும் இனிதே நிறைவுபெற்றன. அல்ஹம்துலில்லாஹ்.

தகவல்:

அபூ அஹ்மத் சோனா,
தமிழ் தஃவா ஒன்றியம்,
ரியாத், சவுதிஅரேபியா.



Previous News ItemNext News Item
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. Kayalpatnam.com ku அன்பு வேண்டுகோள்
posted by Satni.S.A.K.Seyedmeeran (Jeddah.KSA) [28 May 2011]
IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 4820

அஸ்ஸலாமு அழைக்கும்.

காயலர்கள்உலகில் இல்லாத இடமும் இல்லை.
காயலர்கள் கலந்து கொள்ளாதநிகழச்சிகளும் இல்லை.

சவுதி ரியாத் மட்டுமல்ல காயலர்கள் ஜெட்டாஹ், தம்மாம் தாயப்,ஜுபைல், போன்ற எல்லா நகரங்களிலும் வாரம், மாதம் என தமிழ் தஃவா ஒன்றியத்தின் சன்மார்க்க தஃவா நிகழ்ச்சிகல் நடந்து வருகிறது. நமதூர் மக்கள் இந்த 2 நபர் மட்டும் இல்லை. பல நமதூர் மக்கள் கலந்து கொள்கிறார்கள். எல்லோரும் தான் கலந்து KONDATHARKKU NEWS, PHOTOS Anuppiduvathillai.

இந்த 2 நபர் மட்டும் காயலர்கள் ULLARKAL
Thankalum Idanai Matham Thavarathu Pirasurikkirirkal. Appadi Endral Idhu Pondru 2 நபர் மட்டும் காயலர்கள் கலந்து Kollum Nigalukalin News, Photoskalai Pirasurithal Kayalpatnam.com il Idam Kanathu.3 Web site Alla 30 Web Site Vanthalum Kanathu.

Idanal Website Tharam Kelvikkuriythakaum, Kelikkuriyathakaum Agidum.

ANBUDAN
Kayalarkal Matrum Kayal Websitekalin Nalam Virumbi
Satni.S.A.K.Seyedmeeran.
Jeddah

Moderator:Comment edited!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
2. சாட்டையை சுற்ற பல விஷயங்கள் உள்ளன
posted by சாளை S.I.ஜியாவுதீன் (அல்கோபார்) [28 May 2011]
IP: 2.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 4833

என்ன இது புது புகைச்சலாக இருக்கின்றது.

"ரியாத் தமிழ் தஃவா ஒன்றியத்தின் சன்மார்க்க தஃவா நிகழ்ச்சி" - என்று மட்டும் போட்டால், உடனே இது என்ன காயல் நிகழ்ச்சியா, காயலர்கள் கலந்து கொண்ட நிகழ்ச்சியா என்று பல்வேறு கண்டனங்கள்.

சரி "ரியாத் தமிழ் தஃவா ஒன்றியத்தின் சன்மார்க்க தஃவா நிகழ்ச்சியில் காயலர்கள்" என்று செய்தி போட்டால் அதற்கும் குறை, இருவர் மட்டும்தான் காயலரா என்று...

அந்த நிகழ்ச்சியில் காயலர்கள் பலர் கலந்து கொண்டார்கள், அதில் இருவர் பரிசு பெற்று உள்ளார்கள், அந்த பதிவுகள் வந்து உள்ளன. இதில் என்ன குறை உள்ளது என்று தெரியவில்லை.

நின்னா குற்றம், உட்கார்ந்தா குற்றம்... என்ன பண்ணுவது.

செய்யத் மீரான் காக்கா, லூஸ்ல விடுங்க காக்கா...... சாட்டையை சுற்ற பல விஷயங்கள் உள்ளன, அதில் கவனத்தை செலுத்துங்க... சரிங்களா...

சாளை S.I.ஜியாவுதீன், அல்கோபார்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
3. News
posted by Administrator (Kayalpatnam) [28 May 2011]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 4839

காயல்பட்டினத்தை தாண்டி நடைபெறும் மார்க்க சம்பந்தப்பட்ட நிகழ்ச்சிகள் - ஏதோவொரு வகையில் காயலர்களின் பங்கேற்ப்பு அதில் உள்ளது என்ற அடிப்படையில் - சவுதி அரேபியா, துபாய், சிங்கப்பூர் போன்ற பகுதி செய்தியாக பல மாதங்களாக வெளியிடப்பட்டு வருகிறது. பிற பகுதியில் நடைபெறும் இது போன்ற நிகழ்வுகள் அதன் தகுதி அடிப்படையில் கண்டிப்பாக வெளியிடப்படும் என்பதனையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

வெளியூரிகளில் நடக்கும் மார்க்க நிகழ்வுகள் குறைவு என்பதால் இது குறித்த வரம்புகளை காயல்பட்டணம்.காம் செய்திகுழு இதுவரை நிர்ணயிக்கவில்லை. பெறப்படும் செய்திகள் - case by case - அடிப்படையில் இதுவரை வெளியிடப்பட்டுவருகிறது என்பதனையும் தெரிவித்துக்கொள்கிறோம்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
4. ரியாத் தஃவா நிகழ்ச்சி
posted by Hasan (Khobar) [28 May 2011]
IP: 78.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 4840

அஸ்ஸலாமு அலைக்கும்,
இது இரண்டு காயலர்கள் கலந்து கொள்ளும் நிகழ்ச்சி அல்ல

நானும் ரியாத்தில் வாழும் காலத்தில் சென்றுள்ளேன். சுமார் காயலர்கள் 10-15 பேர் வருவார்கள். இந்த முறை இருவர் பரிசு பெற்றுள்ளார்கள்.

மாஸா அல்லாஹ், ஷாதுலி காக்கா அவர்கள் அதிகமான முறை பரிசு வாங்குவார்கள், ஆதலால் போட்டோவில் வந்திருப்பார்கள். இது தவறு ஒன்றும் இல்லையே!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
5. கோணல் சட்டியானாலும் கொழுக்கட்டை வெந்தால் சரி ..
posted by முத்துவாப்பா... (அல்-கோபர்) [28 May 2011]
IP: 89.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 4844

கோணல் சட்டியானாலும் கொழுக்கட்டை வெந்தால் சரி அப்படின்னு சொல்லுவாங்க ... நீங்க ஏன் சட்டி(செய்தி போட்டது) யாருன்னு பார்க்குறீங்க கொழுக்கட்டை (செய்தி) நல்ல இருக்கானு பாருங்க... நம்ம ஊரு காரங்க மட்டும் நடத்துற நிகழ்ச்சில பங்கு பெற்று பரிசு வாங்குறத விட மொத்த ரியாத் தமிழ் மக்கள் பங்குபெற்ற நிகழ்ச்சில நம்ம காயலர்கள் பரிசு வாங்குறது கண்டிப்பா ஒரு என்னை பொருத்தவரைக்கும் ஒரு முக்கியமான செய்திதான்...


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>

முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்

பிற செய்திகள்
நகர மெட்ரிக் முடிவுகள்!  (27/5/2011) [Views - 2897; Comments - 0]

காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
Cathedral Road LKS Gold ParadiseFathima Jewellers
AKM JewellersFaams

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved