Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
12:40:41 AM
ஞாயிறு | 28 ஏப்ரல் 2024 | துல்ஹஜ் 1732, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
04:5012:2115:3118:3219:44
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:02Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்22:26
மறைவு18:27மறைவு09:17
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
04:5005:1505:41
உச்சி
12:15
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:4919:1419:39
Go to Homepage
செய்திகள்
Previous News ItemNext News Item
செய்தி எண் (ID #) 6491
#KOTW6491
Increase Font Size Decrease Font Size
வியாழன், ஜுன் 16, 2011
சமச்சீர் கல்வி: முதல்வர் ஆலோசனை!
செய்திஎஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்)
இந்த பக்கம் 2309 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (3) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 0)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}

சமச்சீர் கல்வி குறித்து பள்ளிக் கல்வித் துறை அமைச்சர், அதிகாரிகளுடன் முதல்வர் ஜெயலலிதா புதன்கிழமை தீவிர ஆலோசனை நடத்தினார். உச்சநீதிமன்ற தீர்ப்பைத் தொடர்ந்து, அவர் இந்த ஆலோசனைக் கூட்டத்தை நடத்தியுள்ளார். சமச்சீர் கல்விக்கான புத்தகங்களை 1 மற்றும் 6ஆம் வகுப்புகளுக்கு வழங்குவது குறித்தும், சமச்சீர் கல்வித் திட்டத்தின் அடுத்த கட்ட நிலை பற்றியும் கூட்டத்தில் விரிவாக விவாதிக்கப்பட்டதாக தலைமைச் செயலக அதிகாரிகள் தெரிவித்தனர்.

சமச்சீர் கல்வியை 1 மற்றும் 6 ஆகிய இரண்டு வகுப்புகளுக்கு அமல்படுத்த வேண்டும் எனவும், மற்ற வகுப்புகளுக்கு சமச்சீர் கல்வியை அமல் செய்வது பற்றி தமிழக தலைமைச் செயலாளர் தலைமையில் 9 பேர் கொண்ட நிபுணர் குழுவை அமைத்து ஆய்வு செய்யவும் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்தக் குழு இரண்டு வாரங்களுக்குள் தனது அறிக்கையை அளிக்க வேண்டும் என நீதிமன்றம் கூறியுள்ளது.

முதல்வர் ஆலோசனை: நீதிமன்ற உத்தரவைத் தொடர்ந்து, முதல்வர் ஜெயலலிதா தலைமையில் தலைமைச் செயலகத்தில் புதன்கிழமை ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்த ஆலோசனைக் கூட்டத்தில் தலைமைச் செயலாளர் தேவேந்திரநாத் சாரங்கி, பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் சி.வி.சண்முகம், பள்ளிக் கல்வித் துறை செயலாளர் சபிதா, பள்ளிக் கல்வி இயக்குநர் வசுந்தராதேவி உள்ளிட்ட பலரும் பங்கேற்றனர்.

1 மற்றும் 6ஆம் வகுப்புகளில் சமச்சீர் கல்வியை அமல்படுத்த உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதால் அந்த வகுப்புகளுக்கு பாடப் புத்தகங்களை வழங்கிட அதிகாரிகளுக்கு அரசு அறிவுறுத்தியுள்ளதாகத் தெரிகிறது. மேலும், உச்ச நீதிமன்றம் அறிவித்துள்ள குழுவினை விரைந்து அமைப்பது குறித்தும் கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டுள்ளது.

1 மற்றும் 6ஆம் வகுப்புகளுக்கான பாடப் புத்தகங்களில் செம்மொழி மாநாடு குறித்தோ, அதுபற்றிய இலட்சினைகள் இருந்தாலோ அதை தாள்கள் ஒட்டி மறைத்த பிறகு பாடங்கள் நடத்த அதிகாரிகளுக்கு ஆலோசனைகள் வழங்கப்பட்டுள்ளன.

நிபுணர் குழு பணிகள்: 1 மற்றும் 6ஆம் வகுப்புகளைத் தவிர்த்து மற்ற வகுப்புகளில் சமச்சீர் கல்வித் திட்டத்தை அமல்படுத்துவது குறித்து ஆராய தமிழக தலைமைச் செயலாளர் தேவேந்திர நாத் சாரங்கி தலைமையில் 9 பேர் கொண்ட குழுவை அமைக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இந்தக் குழுவில் இடம்பெறும் உறுப்பினர்கள் குறித்தும், உடனடியாக குழு தனது ஆய்வுப் பணிகளை தொடங்குவது பற்றியும் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டுள்ளது. ஓரிரு நாட்களில் குழு அமைக்கப்பட்டு பணிகள் தொடங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. நிபுணர் குழு தனது ஆய்வு அறிக்கையை சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்வதற்கு இரண்டு வாரங்களே கால அவகாசம் இருப்பதால் அதற்கான பணிகள் விரைவில் தொடங்கும் என தலைமைச் செயலக அதிகாரிகள் தெரிவித்தனர்.

முதல்வருடன் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்துக்குப் பின், பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் சண்முகம், தலைமைச் செயலாளர் சாரங்கி உள்ளிட்டோர் இந்தப் பணிகளை நிறைவேற்றுவது குறித்து ஆலோசித்தனர்.

நன்றி:
தினமணி (16.06.2011)


Previous News ItemNext News Item
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. கழுதைக்கு தெரியுமா கற்பூரத்தின் வாசனை.? பழமொழி.
posted by s.s.md meerasahib (riyadh) [16 June 2011]
IP: 94.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 5312

அன்பு நண்பர்களே....

வெண்கல குவளைக்குள் தலையை விட்ட பூனையை போல...

மாட்டின்வாலில் கட்டப்பட சர வெடியை போல.........

கழுதையின் வாலில் கட்டப்பட்ட தகர டப்பாவை போல.......

ஆட்டின் வாலில் கட்டப்பட்ட கொழுந்திலையை போல......

அம்மாவின் அகங்காரம், பிடிவாதம் என்ற வாலில் கருணாநிதியால் கட்டப்பட்டு இருக்கிறது இந்த சமசீர் கல்வி திட்டம். இதனை துப்பவும் முடியாமல் விழுங்கவும் தவிக்கும் அம்மாவின் நிலையோ ஐயோ..... பறிதாவம்.

கோர்ட் தீர்ப்பை எதிர் பார்க்கும் அம்மா.!!!

எட்டாத முந்திரிக்கு கொட்டாயி விட்டது போல......

பட்டிக்காட்டான் முட்டாயை பார்த்தது போல......

உச்ச நீதிமன்றம் அறிவித்துள்ள குழுவின் முடிவையும், கோர்ட் தீர்ப்பை எதிர் பார்த்து இருக்கும் அம்மா.

1 மற்றும் 6ஆம் வகுப்புகளுக்கான பாடப் புத்தகங்களில் செம்மொழி மாநாடு குறித்தோ, அதுபற்றிய இலட்சினைகள் இருந்தாலோ அதை தாள்கள் ஒட்டி மறைத்த பிறகு பாடங்கள் நடத்த அதிகாரிகளுக்கு ஆலோசனைகள் வழங்கப்பட்டுள்ளன.

என் யோசனை.... மறைக்க ஒரு பக்கம் அம்மாவின் போட்டோவும், மறு பக்கம் சசிகலாவின் போட்டோவும் போட்டால்.... போதும் மறைந்துவிடும்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
2. எதிர்க்கட்சி தலைவர்
posted by Lebbai (Riyadh) [16 June 2011]
IP: 88.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 5318

சட்டசபை எதிர்க்கட்சி தலைவர், இந்த முக்கியமான தருணத்தில் ஆதரவாகவும் பேசவில்லை, எதிராகவும் பேசவில்லை. ஆளும் கட்சி தவறு தவறை சுட்டிக்காட்டுவோம் என்ற வசனமெல்லாம் அடித்த புயலில் காணாமல் போகிவிட்டது.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
3. அரை குறை சீர் கல்வி!
posted by kavimagan kader (dubai) [16 June 2011]
IP: 86.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 5320

பள்ளிமாணவ,மாணவியரின் காலமும்,மக்களின் வரிப்பணமும் விரயம் ஆவதை எண்ணி உண்மையிலேயே கவலைகொள்ளும் இதயங்களுடன் என்னையும் இணைத்துக்கொள்கிறேன்.அதே நேரத்தில், என்ன நிகழ்கிறது என்பதனை அறியாமலேயே, கருணாநிதி ஏதோ சாதித்துக் கிழித்து விட்டதைப்போலவும், அதனை ஜெயலலிதா தைக்க மறுப்பதைப் போலவும் அடுக்கு மொழியில் அளந்து விடுகின்ற நண்பர்கள், எனது இந்த கருத்துக்கு விளக்கம் அளிப்பார்கள் என்று நம்புகிறேன்.

கடந்த ஐந்தாண்டு காலமாக கருணாதி செயல்படுத்திய இலவச டிவி, ஒரு ரூபாய் அரிசி, காப்பீட்டுத் திட்டம், வீடு கட்டும் திட்டம், என்று ஒவ்வொன்றின் பின்னணியிலும் அவரது குடும்ப நலன் மாத்திரம்தான் இருந்தது என்று, எல்லா ஊடகங்களாலும் தோலுரித்து தொங்கவிடப்பட்ட கதை, கழுதை வாலில் கட்டிய தகர டப்பாவின் ஓசையாக காதில் ஒலித்துக்கொண்டே இருக்கிறது. சரி விஷயத்திற்கு வருவோம்!

சமச்சீர் கல்வி என்பது, சமூக ஆர்வலர்களின் இருபது ஆண்டு கால கோரிக்கை. தேர்தல் களத்தில் மக்களால் புறந்தள்ளப்படுவோம் என்பதனை நன்றாக உணர்ந்திருந்த கருணாநிதி, மக்களை திசைதிருப்ப தனது அரசின் அந்திம காலத்தில் கொண்டுவந்த திட்டம்தான் சமச்சீர்கல்வி.

முத்துக்குமரன் கமிட்டி பரிந்துரைத்த 109 விஷயத்தில்,வெறும் நான்கினை மாத்திரம் ஏற்றுக்கொண்டு, மற்றதைக்குறித்து கிஞ்சிற்றும் அக்கறையின்றி அள்ளித் தெளித்த அவசரகோலத்தில் கொண்டுவரப்படும் இத்திட்டத்தினால் தரமான கல்வியைத்தர முடியாத காரணத்தால், அதனை சீரமைத்து அடுத்த ஆண்டு முதல் செயல்படுத்த வேண்டும் என்பதுதான் தனது அரசின் கொள்கை என்று, ஜெயலலிதா சட்டமன்றத்திலும், நீதிமன்றத்திலும் கூறியுள்ளார்.

இதன் பின்னணியில் இருக்கும் நியாயத்தை உணர்ந்துகொண்ட நீதிமன்றம், அதே நேரத்தில் புதிய புத்தகம் கொண்டுவருவதால் ஏற்படும் கால விரயத்தையும் மனதிற்கொண்டு, ஒன்று மற்றும் ஆறாம் நிலைகளில் மாத்திரம் தற்போதைக்கு இதனை செயல்படுத்த அரசுக்கு உத்தரவிட்டுள்ளது.

இந்தத் திட்டத்தின் ஓட்டை உடைசல்களை பேராசிரியர் ஜவாஹிருல்லாஹ் போன்ற உறுப்பினர்கள் சபையில் விமர்சித்தபோது, முன்னாள் பள்ளிக் கல்வி அமைச்சர் தங்கம் தென்னரசு விக்கித்து, வாயடைத்துப் போய் இருந்ததை பத்திரிகைச் செய்திகள் படம்பிடித்துக் காட்டின.

சமச்சீர் கல்வி என்பது ஒன்றும் கருணாநிதி வீட்டுச் சொத்தல்ல! அது எண்ணற்ற சிந்தனையாளர்களின் கனவு. அது சரியான தருணத்தில், சரியான முறையில், மெய்ப்படும்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>

முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்

பிற செய்திகள்

காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
Fathima JewellersAKM Jewellers
FaamsCathedral Road LKS Gold Paradise

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved