Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
9:33:28 AM
வியாழன் | 18 ஏப்ரல் 2024 | துல்ஹஜ் 1722, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
04:5412:2415:2818:3319:43
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:06Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்14:24
மறைவு18:27மறைவு02:24
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
04:5505:2005:45
உச்சி
12:17
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:4819:1319:38
Go to Homepage
செய்திகள்
Previous News ItemNext News Item
செய்தி எண் (ID #) 6848
#KOTW6848
Increase Font Size Decrease Font Size
வியாழன், ஆகஸ்ட் 4, 2011
தமிழக பட்ஜெட் : ரூ.8900 கோடிக்கு புதிய திட்டங்கள்!
செய்திகாயல்பட்டணம்.காம்
இந்த பக்கம் 2532 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (2) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 0)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}

தமிழக சட்டப்பேரவையில் இன்று (ஆக.4) தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட்டில் ரூ.8,900 கோடி அளவுக்கு புதிய திட்டங்களும் சலுகைகளும் அறிவிக்கப்பட்டு உள்ளன. தமிழக அரசின் இந்த ஆண்டுக்கான பட்ஜெட் சட்டசபையில் இன்று தாக்கல் செய்யப்பட்டது. நிதியமைச்சரும், அவை முன்னவருமான ஓ.பன்னீர்செல்வம் பட்ஜெட்டை தாக்கல் செய்தார். அதில் அவர் திட்டங்கள் மற்றும் சலுகைகளை அறிவித்தார். வரி நிர்வாகம் குறித்து அவர் கூறியதாவது:



வணிக வரித்துறையில் மின்னணு ஆளுகை முறைகளை புகுத்துவது அவசியமாக கருதப்படுகிறது. இதற்காக மத்திய அரசு ரூ.45.37 கோடியை அனுமதித்துள்ளது. இதில் மத்திய அரசின் பங்கு ரூ.31.26 கோடியாகும். மின் ஆளுகை முறையை முழுமையாக புகுத்த அரசுஇந்த நிதியை பயன்படுத்திக்கொள்ளும். வணிக வரித்துறையில் உள்ள நிலுவைகளை முடிவுக்கு கொண்டு வர சமாதான் திட்டத்தை மீண்டும் செயல்படுத்த வேண்டுமென்ற கோரிக்கைகளை கருத்தில் கொண்டு வரும் அக்டோ பர் 1ம் தேதி முதல் 2012 மார்ச் 31ம் தேதி வரை மீண்டும் ஒரு சமாதானதிட்டத்தை செயல்படுத்த அரசு முடிவு செய்துள்ளது.

இதேபோல பதிவு செய்யப்பட்ட பத்திரங்கள் ஆய்வுக்காகவும் சந்தை விலையை நிர்ணயம் செய்வதற்காகவும் அதிகஅளவில் நிலுவையில் உள்ளன. இதனால் அரசுக்கு கிடைக்க வேண்டிய வருவாய் கிடைக்கவில்லை. எனவே வசூலிக்கப்படாமல் உள்ள இந்த தொகையை வசூலிக்கும் பொருட்டும் பொது மக்களுக்கு பத்திரங்கள் திரும்ப கிடைக்கச் செய்யும் பொருட்டும் சமாதான் திட்டத்தை மீண்டும் அமல்படுத்த அரசு முடிவு செய்துள்ளது.

2011-12ம் ஆண்டுக்கான இடைக்கால நிதி நிலை அறிக்கையை மொத்த வருவாய் வரவுகள் ரூ.79 413.26 கோடி எனவும், செலவு ரூ.78,974.48 கோடி எனவும், வருவாய் உபரி ரூ.438.78 கோடி எனவும் மதிப்பிடப்பட்டது. இந்த இடைக்கால நிதிநிதி அறிக்கையில் நிதிப்பற்றாக்குறை ரூ.13,506.85 கோடியாக மதிப்பிடப்பட்டது.

இந்த அரசு தொடங்கி உள்ள பல்வேறு புதிய திட்டங்களையும் வளர்ச்சி முயற்சிகளையும் செயல்படுத்த கூடுதல் நிதி தேவை ரூ.8900 கோடியாகும். இந்த திட்டங்களை நிறைவேற்ற நிதி ஆதாரத்தை பெருக்க ஏற்கனவே அரசு வணிக வரி, பத்திரப்பதிவு கட்டணம் ஆகியவற்றில் சில மாற்றங்களை கொண்டு வந்ததின் மூலம் அரசுக்கு ரூ.3618 கோடி வருவாய் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த திருத்த வரவு செலவு மதிப்பீட்டில் மொத்த வருவாய் வரவு ரூ.85,685 கோடி. இதில் செலவினம் ரூ.85,511 கோடி. வருவாய் உபரி ரூ.173.87 கோடி. அதே சமயம் நிதிப்பற்றாக்குறை ரூ.16,881 கோடியாகும். இது மாநில மொத்த உற்பத்தி மதிப்பில் 2.90 விழுக்காடாகும்.

மாநில அரசின் தற்போதைய கடன் சுமையும் 13வது நிதிக்குழு நிர்ணயித்துள்ள அளவை விட குறைவாகவே உள்ளது. கூடுதல் வருவாய் ஆதாரங்கள் பொருளாதார வளர்ச்சி காரணமாக வருங்காலத்தில் ஏற்பட வாய்ப்புள்ளதால் கடன்களை குறைக்க வாய்ப்பு ஏற்படும் என்ற நம்பிக்கை உள்ளது.

முதலமைச்சர் தேர்தல் அறிக்கையின்போது அறிவித்த பல்வேறு வாக்குறுதிகளை நிறைவேற்ற முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது.

இந்த வாக்குறுதிகளை நிறைவேற்றும் வண்ணம் மக்களுக்கு ரூ.8900 கோடி அளவுக்கு புதிய திட்டங்களும், சலுகைகளும் கிடைக்கும்.

மேலும் கடந்த ஆண்டு ஏற்பட்ட ரூ.2220 கோடி வருவாய் பற்றாக்குறையையும் அறவே நீக்கி ரூ.173.87 கோடி வருவாய் உபரி ஏற்படக்கூடிய அளவில் வரவு செலவு திட்டம் அமைந்துள்ளது.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

புதிய மருத்துவ காப்பீட்டு திட்டம் துவங்கப்படும், நடமாடும் மருத்துவமனைகள் செயல்படுத்தப்படும், 3 ஆயிரம் புதிய பஸ்கள் வாங்கப்படும், மோனோ ரயில் திட்டப் பணிகளை இந்த ஆண்டே துவங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்பன உள்ளிட்ட பல்வேறு அறிவிப்புகள் இந்த பட்ஜெட்டில் இடம் பெற்றுள்ளன.

ஏற்கனவே அறிவித்தபடி மாணவ மாணவியருக்கு இலவச மடிக்கணினி வழங்கும் திட்டம், கிராமப்புற ஏழைகளுக்கு இலவச கறவை மாடுகள், ஆடுகள் வழங்கும் திட்டம் உள்ளிட்ட திட்டங்கள் செப்டம்பர் 15ஆம் தேதி அன்று முதலமைச்சர் ஜெயலலிதாவால் துவக்கி வைக்கப்படும் என்ற அறிவிப்பையும் பன்னீர்செல்வம் அறிவித்துள்ளார்.

தகவல்:
www.chennaionline.com


Previous News ItemNext News Item
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. எப்போ பிள்ளைங்க படிக்க ஆரம்பிக்க போராங்களோ
posted by சாளை S.I.ஜியாவுதீன் (அல்கோபர்) [04 August 2011]
IP: 77.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 6654

வாழ்த்துக்கள்..

பள்ளிக்கூட மாணவர்களுக்கு ஊக்க தொகை...நன்று.

பள்ளிகூட மாணவர்களுக்கு இலவச சைக்கிள்..மிக்க நன்று..

பள்ளிகூட மாணவர்களுக்கு இலவச பஸ் பாஸ்..நல்லதோ நல்லது..

பள்ளிகூட மாணவர்களுக்கு இலவச மதிய உணவு.. வெரி குட்.

பள்ளிகூட மாணவர்களுக்கு நோட் புக் கம்ப்யூட்டர், அதான் மடிக்கணணி..மிகவும் நல்லது...

அம்மா எல்லாம் நல்லாத்தான் கொடுக்குறீங்க..நோட் புக் என்று எதுவோ கொடுப்பாங்களே..அதை இன்னும் கொடுக்கவில்லையே..

எப்போ பிள்ளைங்க படிக்க ஆரம்பிக்க போராங்களோ...

பத்தாம் வகுப்பு பசங்க எல்லாம் மிகவும் சந்தோசமாக இருக்கிறார்களாம், அனைவர்களும் பாஸ் என்று அறிவிப்பு வருமாம்..

நம்ம காலத்தில் இப்படி இல்லையே..வச்சு சுளுக்கு எடுத்து தான் பாஸ் பண்ண வச்சாங்க..(ஸ்பெஷல் கிளாஸ், டியூஷன்,இரவு ஸ்டடி..)

சாளை S.I.ஜியாவுதீன், அல்கோபர்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
2. well planned budget
posted by syedahmed (GZ, China) [04 August 2011]
IP: 14.*.*.* China | Comment Reference Number: 6663

முந்தைய தி.மு.க. ஆட்சியின் திட்டங்கள் கவர்ச்சி திட்டங்கள்; இன்றைய அ.தி.மு.க. ஆட்சியின் திட்டங்கள் புரட்சி திட்டங்கள். தொலைநோக்கு பார்வையில் இந்த அரசு மேற்கொண்டுள்ள பட்ஜெட் ஒரு துல்லியமான சீரான வழிக்கு வழிக்காட்டி என்றுதான் பெருமிதம் கொள்ளவேண்டும்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>

முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்

பிற செய்திகள்

காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
FaamsCathedral Road LKS Gold Paradise
Fathima JewellersAKM Jewellers

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved