Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
9:26:55 PM
வெள்ளி | 26 ஏப்ரல் 2024 | துல்ஹஜ் 1730, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
04:5012:2115:3118:3219:44
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:03Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்20:32
மறைவு18:27மறைவு07:32
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
04:5105:1605:42
உச்சி
12:15
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:4919:1419:39
Go to Homepage
செய்திகள்
Previous News ItemNext News Item
செய்தி எண் (ID #) 6971
#KOTW6971
Increase Font Size Decrease Font Size
செவ்வாய், ஆகஸ்ட் 16, 2011
சமச்சீர் கல்வி தரமில்லை; தனியார் பள்ளிகள் புகார்!
செய்திஎஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்)
இந்த பக்கம் 2838 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (7) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 1)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}

தமிழகத்தில் அமல்படுத்தப்பட்டுள்ள, சமச்சீர் கல்வி தரமானதாக இல்லாததால், மெட்ரிக் பள்ளிகளில் படிக்கும், 40 லட்சம் மாணவ, மாணவியரின் கல்வித்தரம் பாதிக்கும் நிலை ஏற்பட்டுள்ளதாக, தனியார் பள்ளிகள் கூட்டமைப்பு குற்றம் சாட்டியுள்ளது. தமிழ்நாடு தனியார் பள்ளி சங்கங்களின் கூட்டமைப்பு, மேற்கு மண்டல கோரிக்கை மாநாடு, சேலத்தில் நேற்று நடந்தது.

அதில் பங்கேற்க வந்த, கூட்டமைப்பு மாநிலத் தலைவர் கோவிந்தராஜ், கிருஷ்ணகிரி மாவட்டத் தலைவர் சந்திரசேகரன் ஆகியோர் கூறியதாவது: தமிழகத்தில் அமல்படுத்தப்பட்டுள்ள சமச்சீர் கல்வியை, மெட்ரிக் பள்ளிப் பாடத்தோடு ஒப்பிடுகையில், தரம் குறைவாக உள்ளது. மெட்ரிக் பள்ளியில், 04ஆம் வகுப்பில் படித்ததை, சமச்சீர் கல்வியில் 07ஆம் வகுப்பில் படிக்க வேண்டிய நிலை உள்ளது. அதனால், கல்வித் தரம் குறைந்து, அகில இந்திய அளவில் நடக்கும் நுழைவுத் தேர்வு, போட்டித் தேர்வுகளில் வெற்றிபெற முடியாத நிலை உருவாகும்.

எனவே, சமச்சீர் கல்வியின் தரத்தை, நிறைவாகவும் செறிவாகவும் மேம்படுத்த வேண்டும். சமச்சீர் கல்வியால், மெட்ரிக் பள்ளிகளில் படிக்கும், 40 லட்சம் மாணவ, மாணவிகள் பாதிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, ஆந்திர மாநிலத்தில் உள்ளதைப் போல, அனைத்து பிரைமரி, நர்சரி, மெட்ரிக் மற்றும் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளிகளிலும் இணை பாடத் திட்டமாக, சி.பி.எஸ்.இ., பாடத் திட்டத்தை விரும்பும் மாணவர்கள் படிக்கும் வகையில், தமிழக அரசு அனுமதி வழங்க வேண்டும்.

ஆந்திராவில், நகரத்துக்கு இணையாக, கிராமப்புற மாணவ, மாணவிகளுக்கு கல்வியைப் போதிக்க அம்மாநில அரசு, 2008இல், "சக்சஸ்' என்ற திட்டத்தை கொண்டு வந்தது. அதன்படி, கிராமப்புறங்களில், 6,500 நடுநிலைப் பள்ளிகளைத் தேர்வு செய்து, அப்பள்ளிகளில் சி.பி.எஸ்.இ., பாடத் திட்டத்தை, ஆங்கில வழியில் அறிமுகம் செய்தது.

எனவே, தமிழகத்திலும் ஸ்டேட் போர்டு, சி.பி.எஸ்.இ., மற்றும் ஐ.சி.சி., கல்வி பாடத் திட்டம் நடைமுறையில் இருக்க வேண்டும். தரம் குறைந்த சமச்சீர் கல்வியால், தமிழர்கள் வெளிநாட்டு வேலைக்குச் செல்ல முடியாத நிலை உருவாகி விடும். தமிழகத்தில், 40 லட்சம் மெட்ரிக் மாணவ, மாணவிகள் படிக்க ஏதுவாக, சி.பி.எஸ்.இ., இணை பாடத் திட்டம் கொண்டு வரவேண்டும்.

மெட்ரிக் பள்ளிகளை, அரசே ஏற்று நடத்துவது இயலாத காரியம் என்பதால், தனியார் பள்ளிகளின் கோரிக்கையை, அரசு ஏற்க வேண்டும். தேர்தலின் போது, முதல்வர் ஜெயலலிதா தெரிவித்ததைப் போல, கல்விக் கட்டண குளறுபடிகளைக் களைய, பெற்றோர், பள்ளி நிர்வாகம் மற்றும் அரசு அதிகாரிகள் கொண்ட, முத்தரப்பு கமிட்டி அமைக்க வேண்டும். இவ்வாறு, அவர்கள் கூறினர்.

மாநிலச் செயலர் இளங்கோவன், பொருளாளர் சந்திரசேகரன், துணைத் தலைவர் சந்திரசேகரன், நாமக்கல் மாவட்டத் தலைவர் சண்முகசுந்தரம் உட்பட, சங்க நிர்வாகிகள் பலர் உடன் இருந்தனர்.

நன்றி:
தினமலர் (16.08.2011)


Previous News ItemNext News Item
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. Re:சமச்சீர் கல்வி தரமில்லை; ...
posted by M.A.SEYED ALI (KAYALPATNAM) [16 August 2011]
IP: 195.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 6924

மலத்தை எப்படி மறைத்தாலும் அதன் மணத்தை மறைக்க முடியாது. ஜெயலலிதா இத்தனை அகங்காரமும் மெனக்கெடும் காட்ட வேண்டியதுமில்லை. உச்சநீதி மன்ற மேல்முறையீடும் செய்ய வேண்டியதில்லை.

கொஞ்சம் கசப்பு காட்டியதோடு அப்போதே இந்த சமச்சீர் கல்வியை அமல்படுத்தியிருந்தால் மக்களின் அனாவசிய சலிப்புக்கு ஆளாக வேண்டியிருந்திருக்காது. சமசீர் கல்வியின் தரமே முக வின் முகத்தை வெளிப்படுத்தி இருக்குமே.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
2. Re:சமச்சீர் கல்வி தரமில்லை; ...
posted by seyed mohamed (Bangaluru) [16 August 2011]
IP: 115.*.*.* India | Comment Reference Number: 6929

தனியார் பள்ளி கொள்ளை தடுக்கும் சமசீர் கல்வி பற்றி தனியார் நிறுவனம் வேறு என்ன சொல்லும்?


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
3. Re:சமச்சீர் கல்வி தரமில்லை; ...
posted by SyedAhmed (HK) [16 August 2011]
IP: 202.*.*.* Hong Kong | Comment Reference Number: 6930

ஆரியர் வருகை, போர்டுகியர்கள் வருகை, வெள்ளையர் வருகை, டட்ச் வருகை என்று குறிப்பிட்ட Marticulation வரலாற்று ஆசிரியர்கள் மொகலாயர் படையெடுப்பு என்றனர்.

Matriculation படித்தால் தான் குழந்தைகள் அறிவு வளரும் என்று ஒரு மாயையை உருவாக்கினார்கள். மக்களிடம் கொள்ளை அடிக்க புத்தகம் சுமந்த கலுதைகளாய் மாணவர்களை ஆக்கினார்கள்.

பொது பாடத்திட்டம் இவற்றை ஒழித்து எறிந்துள்ளது என்பதே அதனுடைய இப்போதைய வெற்றி. பாடத்திட்டத்தை நல்ல தரத்துடன் அமைக்க வேண்டும் என்பதில் மாற்று கருத்து இருக்க முடியாது. இப்பொழுது இருக்கும் திட்டமே Matriculation ஐ விட நன்றாக உள்ளது இன்னும் தரமானதாக ஆக்க வேண்டும்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
4. இந்த டீயில் நிறம் இல்லை; ...
posted by குல்குஸ்மா முத்துவாப்பா... (அல்-கோபர்) [17 August 2011]
IP: 89.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 6939

என்னப்பா நடக்குது இந்த தமிழ் நாட்டுல ...? ரேசன் கடையில அரிசி தரமா இல்லைனா சண்டை போடுறான் , மின்சாரம் சரியா வரலேனா சண்டை போடுறான் .. இப்படி சின்ன சின்ன விசயத்திற்கு எல்லாம் சண்டை போடும் இவர்கள் , வருங்கால இந்தியாவின் தூண்களின் கல்வித் தரம் சரியாக இல்லையே ...!! இதை மட்டும் உங்கள் மனம் எப்படி ஏற்றுக் கொள்கிறது .... பல் இருக்குறவன் பக்கோடா சாப்பிடுரான்னு விட்டுட்டு போறத விட்டுட்டு சமச்சீர் கல்வியாம் .. சமச்சீர் கல்வி ... இது சமச்சீர் கல்வி இல்லை சீரழிக்கும் கல்வி.

வாய் கிழிய சமச்சீர் கல்வினு பேசுரவங்கள பார்த்து கேட்குறேன் .. உங்கள் பிள்ளைகள் +2 முடித்தவுடன் தமிழ் வாழ்க , செம்மொழி வாழ்கன்னு , சமச்சீர் கல்வி வாழ்கன்னு சொல்லி உங்கள் பிள்ளைகளை தமிழ் இலக்கியத்தில் கொண்டு சேர்க்கின்றீர்களா..?? இல்லை இருக்குறதுலேயே நல்ல கல்லூரியா பார்த்து பல லட்சங்கள் கொடுத்து ENGINEERING , MEDICAL கல்லூரிகளில் சேர்க்கின்றீர்களா ...? சும்மா ஏதாவது சொல்லி மக்களை குழப்ப கூடாது ..

நாட்டுல நாப்பது , ஐம்பது அரசியல்காரன் வச்சு இருக்குற மாநிலக்காரன் எல்லாம் நல்லா இருக்கான் , இந்த ஒரே ஒரு மஞ்சள் துண்டை வச்சுக்கிட்டு நாங்க படுற பாடு இருக்கே .. அவ்வவ்வா....

கடைசியா சமச்சீர் கல்வி பத்தி ஒன்னே ஒன்னு தாங்க சொல்லுறேன் .” இந்த டீயில் நிறம் இல்லை ,சுவை இல்லை , திடமும் இல்லை “


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
5. Re:சமச்சீர் கல்வி தரமில்லை; ...
posted by seyed mohamed (bengaluru) [17 August 2011]
IP: 115.*.*.* India | Comment Reference Number: 6942

நண்பர் குல்குச்மா, சமசீர் கல்வி என்றால் தமிழ் வழி கல்வி என்று சிலர் பொருள் தருவதால் விவாதம் நீளுகிறது. சமசீர் கல்வி தமிழ் மற்றும் ஆங்கில வழிகளில் உள்ளது என்ற அடிப்படை புரிந்து கொள்ளவும்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
6. Re:சமச்சீர் கல்வி தரமில்லை; ...
posted by seyed mohamed (bangaluru) [17 August 2011]
IP: 115.*.*.* India | Comment Reference Number: 6943

வருங்கால இந்தியாவின் கல்வி தரம் இல்லைன்னு யார் மனம் ஏற்டுகொள்கிறது? இதுக்கு மத்திய அரசு தான் திட்டம் வகுக்கனும், மாநில அரசு என்ன செய்யும். சரி, இலக்கியத்துக்கு தான் உங்க புள்ளைகளை அனுப்புவீர்களா என்று சம்பந்தமில்லாம இலக்கியம் ஏன் பேசணும்,நண்பா ? தொடர்புடையதா பேசுனா நல்லது.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
7. சமச்சீர்கல்வியினால் வருமானமும் அதிகரித்திருக்கிறது..
posted by நட்புடன்...தமிழர் - முத்து இஸ்மாயில் (காயல்பட்டினம்) [25 August 2011]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 7213

சமச்சீர் கல்வியின் தாக்கத்தால் மெட்ரிகுலேசன் பள்ளிகள் தங்கள் வியாபாரத்தை தற்போது சி.பி.எஸ்.சி பள்ளிகளை நோக்கி படையெடுக்க ஆரம்பித்துவிட்டார்கள்..ஏற்கனவே உள்ள பள்ளி வளாகத்திற்குள் ஒரு பிரிவு வகுப்பறைகளுக்கு சுற்றுச்சுவர் எழுப்பி தமிழகரசின் கல்விக்கடவுளிடம் ...தடையில்லாச்சான்று பெற்றுவருகின்றனர்...என்ன இதற்கு கைமாறாக இருபது லட்சம் முதல் முப்பது லட்சம் வரை பூசாரிகளின் தட்டில் போடவேண்டுமாம்...தமிழகரசு சமச்சீர்கல்விக்கு சமாதி கட்ட முயற்சி செய்தாலும், ஒரு புறம் சமச்சீர்கல்வியினால் வருமானமும் அதிகரித்திருக்கிறது..


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>

முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்

பிற செய்திகள்

காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
Cathedral Road LKS Gold ParadiseFathima Jewellers
AKM JewellersFaams

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved