Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
4:22:52 PM
வியாழன் | 25 ஏப்ரல் 2024 | துல்ஹஜ் 1729, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
04:5012:2115:3118:3219:44
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:03Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்19:38
மறைவு18:27மறைவு06:46
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
04:5105:1705:42
உச்சி
12:15
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:4819:1419:39
Go to Homepage
செய்திகள்
Previous News ItemNext News Item
செய்தி எண் (ID #) 7064
#KOTW7064
Increase Font Size Decrease Font Size
வியாழன், ஆகஸ்ட் 25, 2011
சமுதாய அமைப்புகளின் கூட்டமைப்பாக நகராட்சி தேர்தல் ஒருங்கிணைப்பு குழு துவக்கப்பட்டது!
செய்திகாயல்பட்டணம்.காம்
இந்த பக்கம் 4441 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (37) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 2)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}

வரும் நகர்மன்ற தேர்தலை கருத்தில் கொண்டு - நேற்று (ஆகஸ்ட் 24) - நகரில், காக்கும் கரங்கள் அமைப்பின் ஏற்பாட்டில் கூட்டம் ஒன்றிற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அது குறித்து - அதன் ஏற்பாட்டாளர்கள் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கை வருமாறு:-

காக்கும் கரங்கள் நற்பணிமன்றத்தின் சார்பாக நமதூர் ஈக்கி அப்பா தைக்கா வளாகத்தில் இன்று நடைபெற்ற பொதுநல அமைப்புகளின் கலந்தாலோசனைக் கூட்டம் ஜனாப் ஜரூக் அவர்களின் தலைமையில் நடைபெற்றது.

இக்கூட்டத்தின் துவக்கமாக வாவு எஸ்.ஏ.ஆர். இஸ்ஹாக் அவர்கள் இறைமறை வசனத்தை ஓதினார்கள். வரவேற்புரை மற்றும் கூட்டம் குறித்த விளக்க உரையை இளைஞர் ஐக்கிய முன்னணியின் ஜனாப் முஹம்மது முஹைதீன் அவர்கள் விளக்கினார்கள்.

















இந்த கூட்டத்தில் பொது நல அமைப்புகளான காயிதே மில்லத் இளைஞர் சமூக அமைப்பு, அல்-அமீன் இளைஞர் நற்பனி மன்றம், இளைஞர் ஐக்கிய முன்னனி (Y.U.F), ஐக்கிய விளையாட்டுச் சங்கம், காயல் ஸ்போர்டிங் கிளப், ரெட் ஸ்டார் சங்கம், காயல்பட்டினம் நல அறக்கட்டளை (KWT), I.I.M, சீதக்காதி நகர் நல அறக்கட்டளை, ரஹ்மதுன்லில் ஆலமீன் அமைப்பு, சீதக்காதி நினைவு சங்கம் ஆகிய அமைப்புகளின் பிரதிநிதிகள் உட்பட நகரின் சமூக ஆர்வலர்கள் கலந்துக்கொண்டு தங்களது கருத்துக்களை பதிவு செய்தனர்.

அல்-அமீன் இளைஞர் நற்பணி மன்றம் சார்பாக ஜனாப் என்.டி.சலாஹூத்தீன்:- ஏகோபித்த ஆதரவு உள்ள ஒரு நகர்மன்ற தலைவரை தேர்ந்தெடுக்கப்பட வேண்டும். உறுப்பினர்கள் தேர்வில் நல்ல முறையில் கவனம் செலுத்தி எதையும் எதிர்பார்க்காத நபரை தேர்ந்தெடுக்க வேண்டும். ஊழல் இல்லாத நகராட்சியை உருவாக்குவதில் இந்த தேர்தல் ஒருங்கிணைப்பு குழுவின் பங்கு முக்கியமானதாக இருக்க வேண்டும் என்று கூறினார்கள்.

காயிதேமில்லத் இளைஞர் சமூக அமைப்பு சார்பாக ஜனாப் கே.எம்.டி.சுலைமான்:- ஜனாப் என்.டி.சலாஹூத்தீன் அவர்கள் தெரிவித்த கருத்தை ஆதரித்த அவர்கள் சிறப்பான நகர்மன்றத்தை உருவாக்குவதில் மிகுந்த கவனத்துடன் செயல்பட வேண்டும் என்று கூறினார்கள்.

சமூக ஆர்வலர் ஜனாப் அஹமது ஹூஸைன்:- கடந்தமுறை உறுப்பினரை தேர்வு செய்தது போன்று இல்லாமல், இந்த நகராட்சி தேர்தலுக்கு உறுப்பினர்களை தேர்வு செய்வதில் நாம் (நகராட்சி தேர்தல் ஒருங்கிணைப்பு குழுவும், ஊர் மக்களும்) மிகுந்த கவனத்துடன் தேர்வு செய்து தன்னிறைவு பெற்ற நகராட்சியாக உருவாக வழிசெய்திடவேண்டும். அது போன்றே ஓரே குடும்பத்தை சேர்ந்தவர்கள் மீண்டும், மீண்டும் போட்டியிடுவதை தவிர்க்க வேண்டும் என்றும் கூறினார்கள்.

ஐக்கிய விளையாட்டுச் சங்கம் சார்பாக ஜனாப் ஹாரூன்:- ஒருமித்த கருத்துடன் ஜமாஅத் மூலம் தேர்ந்தெடுப்பவர்களும், தாங்கள் வெற்றிபெற்ற பிறகு பணத்திற்கு ஆசைப்பட்டு சில தவறுகளை செய்துவிடுகிறார்கள். அவர்கள் செய்யும் தவறுகளுக்கு ஜமாஅத் எப்படி பொருப்பாக முடியும்? ஜமாஅத் அவர்களை தேர்ந்தெடுக்கும் பொழுது நல்லவர்களாகத்தான் இருக்கின்றார்கள் என்று கூறினார்கள்.

காயல்பட்டினம் அறக்கட்டளை சார்பாக ஜனாப் ஆதம் சுல்தான்:- வளமான நகர்மன்றத்தை உருவாக்குவதில் இந்த குழு உறுதியாக செயல்பட வேண்டும் என்றும், தலைவர் மற்றும் கவுன்சிலர்கள் தேர்வில் மிகுந்த எச்சரிக்கையுடன் தேர்வு செய்ய வேண்டும் என்றும் தமது கருத்தை பதிவு செய்தார்கள்.

இளைஞர் ஐக்கிய முன்னணி சார்பில் ஜனாப் மொஹூதும்:- இந்த குழு ஊரின் அனைத்து ஜமாஅத்களையும் ஒன்றிணைக்க வேண்டும் என்றும், காயல்பட்டினம் முஸ்லிம் ஐக்கிய பேரவையோடு ஒன்றுபட்டு செயல்படுவதன் மூலம் இன்ஷாஅல்லாஹ் நமது நாட்டம் வெற்றிபெரும் என்றும் தெரிவித்தார்கள்.

ஐக்கிய விளையாட்டுச் சங்கத்தின் ஜனாப் பல்லாக் அப்துல் காதர் நெய்னா:- வார்டு வேட்பாளரை தேர்ந்தெடுப்பதற்கு முன்பு அவருக்கு அப்பகுதியில் நல்ல பெயா இருக்கின்றதா என்றும், கவுன்சிலர் பதவிக்கு அவர் தகுதியானவர்தானா என்றும் பரிசோதித்து அவர்களுக்கு நாம் ஆதரவு தெரிவிப்பது சிறந்ததாகும் என்று கூறினார்கள்.

இவர்களைப் போன்றே சமூக ஆர்வலர் ஜனாப் சதக்கதுல்லாஹ், ரஹ்மதுன்லில் ஆலமீன் சார்பாக ஜனாப் செய்யது மீரான் ஆகியோரும் தங்களது கருத்துக்களை பதிவு செய்தார்கள்.

ரெட் ஸ்டார் சங்கம் சார்பாக ஜனாப் மரைக்கார்:- இந்த குழு எடுக்கும் முடிவுகளில் உறுதியாக இருக்க வேண்டும் என்றும், தலைவர் மற்றும் கவுன்சிலர்கள் தேர்வில் மிகவும் கவனத்துடன் செயல்பட வேண்டும் என்றும் கூறினார்கள்.

சீதக்காதி நகர் வார்டில் நம் சமூகத்தை சேர்ந்த 13 பேர் போட்டியிட்டதன் மூலம் கடந்த நகராட்சி தேர்தலில் மாற்று சமூகத்தை சேர்ந்த ஒருவர் வெற்றி பெற்றதாக சீதக்காதிநகர் நல அறக்கட்டளை சார்பாக கூட்டத்தில் கலந்து கொண்ட சகோ. ஜமால் அவர்கள் தங்கள் கருத்தை பதிவு செய்ததோடு, இன்ஷாஅல்லாஹ் வருகின்ற தேர்தலில் நகராட்சி தேர்தல் ஒருங்கிணைப்பு குழு மூலம் இதுபோன்ற பல பேர் போட்டியிடுவதை தவிர்க்க முயற்சி எடுக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்கள்.

சமூக ஆர்வலர் ஜனாப் வாவு இஸ்ஹாக்:- கடந்த முறை நகராட்சி தேர்தலில் வெற்றிபெற்ற 18 உறுப்பினர்களுக்கும் இந்த முறை தேர்தலில் போட்டியிட வாய்ப்பளிக்க கூடாது என்று கூறினார்கள்.

இக்கூட்டத்தில் கீழ்க்காணும் கருத்துக்கள் விவாதித்து முடிவு செய்யப்பட்டது:-

1. அக்டோபர் மாதம் நடைபெற இருக்கும் நமதூர் நகராட்சி மன்ற தேர்தல் சம்பந்தமாக அனைத்து பொதுநல அமைப்புகளின் கலந்தாலோசனைக் கூட்டத்தில் நகராட்சி தேர்தல் ஒருங்கிணைப்பு குழு புதியதாக உருவாக்குவது என்று முடிவு செய்யப்பட்டது.

2. வரலாற்று சிறப்புமிக்க காயல் மாநகரத்தில் அக்டோபர் மாதம் நடைபெற இருக்கும் நகராட்சி தேர்தலில் உண்மையான, ஊழலற்ற, உயர்ந்த மனிதர்களை நகர்மன்ற உறுப்பினர்களாக அனுப்பவும், காயல் நகரில் களப்பணியாற்றவும், புதியதாக உருவாக்கப்பட்ட நகராட்சி தேர்தல் ஒருங்கிணைப்பு குழுவிற்கு நமதூரின் அனைத்து ஜமாஅத்களும், அரசியல் அமைப்பின் பிரதிநிதிகளும், சமூக ஆர்வலர்களும், பொது மக்களும் முழு ஒத்துழைப்பு தருமாறு அன்புடன் வேண்டிக் கொள்வது என்று முடிவு செய்யப்பட்டது.

3. உலக காயல் நல மன்றங்களையும், புதியதாக வளைகுட பகுதியில் நகராட்சி தேர்தலுக்காக உருவாக்கப்பட்டுள்ள அமைப்பினர்களிடமும், நமதூரில் நடைபெறும் தேர்தலின்போது களப்பணி செய்வதற்கு உருவாக்கப்பட்டுள்ள நகராட்சி தேர்தல் ஒருங்கிணைப்பு குழுவிற்கு தங்களது கருத்துக்களையும், முழு ஆதரவையும் தந்துதவுமாறு கேட்டுக்கொள்வது என்று முடிவு செய்யப்பட்டது.

4. புதியதாக உருவாக்கப்பட்ட நகராட்சி தேர்தல் ஒருங்கிணைப்பு குழுவிற்கு ஜமாஅத் நிர்வாகிகள், பொதுநல அமைப்புகளின் பிரதிநிதிகள், சமூக ஆர்வலர்கள் அடங்கிய 50 பேர் கொண்ட குழு அமைப்பது என்று முடிவு செய்யப்பட்டது.

6. சாதி, சமய, இன வேறுபாடுகளை கலைந்து, பாரம்பரியமிக்க காயல் மாநகரத்தின் பாதுகாக்கப்பட்டு வரும் கண்ணியத்தை கருத்தில் கொண்டு வரும் தேர்தலின் போது, பொது மக்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் வினியோகம் போன்ற மோசமான நிகழ்வுகளை தடுத்துநிறுத்தி உண்மையான முறையில், நேர்மையான, ஜனநாயக வழியில் தேர்தல் நடைபெற நமது நகராட்சி தேர்தல் ஒருங்கிணைப்பு குழு முழுமையாக ஈடுபடுவது என்று இக்கூட்டம் தீர்மானிக்கிறது.

7. நகராட்சி தேர்தல் சம்பந்தமாக நடைபெற்ற இக்கூட்டத்திற்கு வருகைதந்த அனைத்து பொதுநல அமைப்பின் உறுப்பினர்களுக்கும், சமூக ஆர்வலர்களுக்கும் இக்கூட்டம் மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறது.

8. நமதூரில் இரத்ததானம் உட்பட பல்வேறு சமூக சேவைகளை செய்துவரும் இளைஞர்கள் படையை கொண்ட காக்கும் கரங்கள் அமைப்பின் சார்பாக, நமது நகராட்சியை சீர்மிகு நகராட்சியாகவும், நேர்மையான நகராட்சியாகவும் உருவாக்கும் எண்ணத்தில், நகராட்சி தேர்தல் ஒருங்கிணைப்பு குழு ஏற்படுத்துவதற்காக இக்கூட்டத்தை ஏற்பாடு செய்த காக்கும் கரங்கள் அமைப்பிற்கு இக்கூட்டம் நன்றியை தெரிவித்துக் கொள்கிறது.







மேலும் ஜனாப் ஆதம் சுல்தான், ஜனாப் மொஹிதீன் அப்துல் காதர் (YUF), ஜனாப் வாவு இஸ்ஹாக், ஜனாப் என்.டி. சலாஹுத்தீன், ஜனாப் ஹாரூன் ரஷீத், ஜனாப் ஜெய்னுலாப்தீன், ஜனாப் எம். ரஜாக் ஆகியோர் கொண்ட குழு ஒன்றும் அமைக்கப்பட்டுள்ளது.

கூட்டத்தின் நிறைவாக அனைவருக்கும் இஃப்தார் ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தது. நோன்பு திறப்பதற்காக கஞ்சி, சமூஸா, பருப்பு வடை, உளுந்து வடை மற்றும் ரோஸ் மில்க் வழங்கப்பட்டது.


இவ்வாறு அவ்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தகவல்:
எம்.எம். சாஹுல் ஹமீது


Previous News ItemNext News Item
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. Re:சமுதாய அமைப்புகளின் கூட்ட...
posted by Mohamed Salih (Bangalore) [25 August 2011]
IP: 121.*.*.* India | Comment Reference Number: 7203

மாஷா அல்லா.. நல்ல ஓரு அமைப்பு உருவாஹி இருக்கிறது .. எல்லா புகழும் வல்ல இறைவனுக்க ..

இந்த அமைப்பு ( MEGA ) அமைப்புடன் இணைத்து , மற்ற பொது நல அமைப்புடன கலந்து நல்ல பல திறமைமிக்க மக்களை கண்டறிந்து நமது நகர் மன்றத்துக்கு அனுப்ப எல்லாம் வல்ல இறைவனை துணை செய்வனஹா அமீன் ...

இந்த கூடத்தில் கலந்து கொண்ட அணைத்து ஜமாஅத் , பொதுநல சங்கம் , மற்றும் அனைவர்க்கும் என் மனமார்ந்த நன்றி .. வஸ்ஸலாம்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
2. மாற்று சமூகத்தை சேர்ந்த ஒருவர் நகராட்சி தேர்தலில் போட்டி இட கூடாதா ?
posted by நட்புடன்...தமிழர் - முத்து இஸ்மாயில் (காயல்பட்டினம்) [25 August 2011]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 7204

அஸ்ஸலாமு அழைக்கும்...

1) சீதகாதி அறகட்டளை சார்பாக நண்பர் ஜமால் அவர்களின் கருத்து சரியானதாக இல்லை!

மாற்று சமூகத்தை சேர்ந்த ஒருவர் கடந்த நகராட்சி தேர்தலில் போட்டி இட்டு வெற்றி பெற்று விட்டார் என்று குறிப்பிட்டு இருக்கார் இது பகைமையை உண்டாக்கும் கருத்து - மாற்று சமூகத்தை சேர்ந்த ஒருவர் நகராட்சி தேர்தலில் போட்டி இட கூடாதா ? வெற்றி பெற கூடாதா ? அவர் ஏன் வர கூடாது ? அவர் என்ன தவறு செய்தார் ? அவரும் இந்த காயல் மண்ணின் மைந்தன்தானே?

உங்கள் வார்டுக்கு உரிய நல்ல சேவைகளை செய்யவில்லையா ? அவர் துவேசம் பிடித்தவராக செயல்படுகிறாரா ? உங்கள் ஏரியாவை கண்டுகொள்ள அவரை தவிர்த்து ஒரு நல்ல சேவை செய்ய கூடிய (அவர் எந்த சமூகத்தவராக இருக்கட்டும்) நல்ல நபரை உங்கள் வார்டில் தேர்ந்தெடுங்கள் - உங்கள் அடிப்படை உரிமைகளை நகராட்சியில் பெற்று தரக்கூடிய நல்ல சேவை மனப்பான்மை உடையவரை உங்கள் வார்டில் தேர்ந்தெடுங்கள்...

நண்பர் ஹாரூண் ரஷீது அவர்களின் கருத்து சரியானது தான்.. முதலில் நாம் தேர்ந்துடுக்கும் போது நல்லவராக இருக்கிறார் பின்பு பணத்துக்கு ஆசை பட்டு தவறான செயலில் இறங்குகிறார்கள் என்று குறிப்பிடுகிறார் இது போல் தான் நம் ஐக்கிய பேரவை நகராட்சி துணை தலைவருக்கு (நல்லவராக தோற்றத்தில் தெரிந்த) நல்லவர் என்று நினைத்து ஒருவரை அமர்த்தினார்கள் பின்பு அவர் பணத்துக்காக செய்த தவறான காரியத்துக்கு நம் ஐக்கிய பேரவை என்ன செய்ய முடியும்..!

ஐக்கிய பேரவை - அணைத்து ஜமாத்துக்கள் - உலக காயல் நல மன்றங்கள் - பொது நல அமைப்புகள் இவைகள் ஒன்று கூடி ஆலோசித்து நல்ல தலைவரையும், உறுபினர்களையும் தேர்ந்துடுத்து அதற்க்கு நாம் எல்லோரும் ஆதரவு அளித்து நல்ல முன்னோடி நகர் மன்றமாக அமைய வல்ல இறைவன் ஆக்கி வைப்பானாக ஆமின்...


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
3. Re:சமுதாய அமைப்புகளின் கூட்ட...
posted by Hameed Arafath (Chennai) [25 August 2011]
IP: 122.*.*.* India | Comment Reference Number: 7205

அஸ்ஸலாமு அழைக்கும்,

நமதூரில் பல்வேறு அமைப்புகளின் கூட்டாக நகராட்சி தேர்தல் ஒருங்கிணைப்பு குழு துவங்கப்பட்டது அல்ஹம்துலில்லாஹ்... இந்த முயற்சி வெற்றி பெற மிகுந்த வாழ்த்துக்கள். மட்டும் அல்லது இந்த அமைப்புகளின் ஒருங்கிணைப்பால் நமதூரின் பல்வேறுப்பட்ட கொள்கையின் அடிப்படையில் உள்ளவர்களை ஒன்றாக ஒற்றுமையுடன் காண்பது மகிழ்ச்சி அளிக்கிறது அல்ஹம்துலில்லாஹ்.

இதே போன்று ஒற்றுமையுடன் செயல்பட்டு நமதூரின் நகராட்சி தலைவர் மற்றும் உறுப்பினர்களை அணைத்து மக்களின் திருப்தியான ஆதரவுடன் தேர்தெடுக்க வேண்டும் என்று கேட்டுகொள்கிறேன். ஊரில் ஊழல் பெருத்து விட்டதாக கேள்விபட்டேன். இந்த முறை அவ்வாறு தவறான நபர்களை தேர்ந்தெடுக்காமல் அனைவரும் கலந்தாலோசித்து தன்னலமற்றவரை தேர்ந்தெடுக்கவேண்டும்.

இந்த அமைப்புகளின் ஒருகிணைத்த குழு அதை சரியாக செய்யும் என நம்ப முடிகிறது ஏனென்றால் இந்த அமைப்பில் அவ்வாறான நல்ல நபர்கள் மற்றும் உறுதியான இளைஞ்ர்கள் இருக்கிறார்கள். இந்த ஒட்டுமொத்த அமைப்புகளையும் ஒன்றினைத்தது பாராட்டத்தக்க ஒரு செயல். அவர்களுக்கு நன்றியும் பாராட்டுக்களும். இன்ஷால்லாஹ் மெம்மேலும் அவர்களின் ஒருங்கிணைந்த பணி நமதூரில் தொடர இறைவணிடம் துஆ செய்கிறேன்....

அஸ்ஸலாமு அழைக்கும்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
4. Re:சமுதாய அமைப்புகளின் கூட்ட...
posted by Jamal (Kayalpatnam) [25 August 2011]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 7207

அன்புள்ள நண்பர் முத்து இஸ்மாயில் அவர்களே, நான் கூறிய கருத்து மாற்று சமூகத்தை சேர்ந்தவர் வெற்றிபெறக் கூடாது என்றோ, தேர்தலில் நிற்கக் கூடாது என்றோ இல்லை. மாறாக நம் சமுதாய மக்கள் 13 நபர்கள் போட்டி இடாமல் ஒருவர் மட்டுமே போட்டியிட்டு இருந்தால் நம் சமுதாய மக்களே வெற்றி பெற்று இருக்கலாம் என்கின்ற அடிப்படையில் தான் அந்த கருத்தை பதிவு செய்தேன்.

நமக்குள் போட்டியிட்டுக்கொள்வதால் அது மற்றவர்களுக்கு சாதகமாக அமையும் என்பதையே தெளிவுபடுத்தினேன். ஒற்றுமை என்னும் கயிற்றை நாம் பற்றிபிடிக்கவில்லை எனில் நம் சமுதாயம் முன்னேறுவது கியாம நாள் வரை நடைபெறபோவதில்லை.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
5. சத்தமின்றி இரத்தமின்றி ஒரு யுத்தம்
posted by A.W.Md Abdul Cader Aalim bukhari (Mumbai) [25 August 2011]
IP: 114.*.*.* India | Comment Reference Number: 7210

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)

இந்திய வரலாற்றிலேயே முதன் முதலாக ஊழலற்ற மாநகர் விரைவில் அமைய இருக்கின்றது இன்ஷா அல்லாஹ்.......

சமுதாய அமைப்புகளின் கூட்டமைப்பாக "நகராட்சி தேர்தல் ஒருங்கினைப்பு குழு" துவங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்..

இந்த‌ அமைப்பில் காய‌லர்க‌ள் அனைவ‌ரும் ஒரே குடையின் கீழ் ஒன்று சேர‌ வேண்டும் அது ந‌ம் அனைவ‌ரின் மீதும் க‌ட‌மை...

அத‌ற்காக‌ அரும்பாடும் அனைவ‌ருக்கும் அல்லாஹ்வின் அருள் என்றென்றும் நில‌வ‌ட்டுமாக‌! ஆமீன்…

இள‌ம் காய‌ல் சிங்க‌ங்க‌ளே!! ஏன் இன்னும் தூக்கம் விழித்தெழுங்க‌ள் இந்த‌ நேர‌த்தில் நாம் விழிக்காம‌ல் விட்டு விட்டால் இன்மேல் விழிக்க‌ விடாம‌ல் (ஊழ‌ல் சுனாமிக‌ள்) ஆக்கிவிடுவார்க‌ள்….


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
6. மக்களை பழக்கி வைத்து இருக்காங்க..... ! மக்களும் அப்டியே வாழ்ந்து பழகிட்டாங்க.... !
posted by நட்புடன்...தமிழர் - முத்து இஸ்மாயில் (காயல்பட்டினம்) [25 August 2011]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 7211

நண்பர்கள் அனைவர்களுக்கும் அறிய தருவது என்னவென்றால் -

நகராட்சி தேர்தல்.... நகராட்சி தேர்தல்.... னு நகர மக்களை ஒரு பயம் கலந்த கலக்கத்தில் இவரை தேர்ந்தெடுக்கணும் அவரை தேர்ந்துடுக்கணும்னு ஒரு மாதிரி பீதியை உண்டுபனுவதாக இருக்கிறது - எவரை தேர்ந்துடுதாலும் நகராட்சியில் மாற்றம் வர போவது இல்லை - அதிகாரிக்கு விளக்கு பிடிக்க வேண்டியது தான் நமது தலைவர்களும் உறுபினர்களும் - பணம் கொடுக்காமல் நமது வேலை நடக்காது - பிறந்ததர்க்கும் இறந்ததர்க்கும் (செர்டிபிக்கட்) சான்றிதழ் எடுக்க (லஞ்சம்) பணம் இல்லாமல் நடப்பது இல்லை -

எளவு வீட்டில் (கஷ்டத்தில் உள்ள வீடு) கையில் என்ன இருக்குதோ அதை வலு கட்டாயாமாக பிடுங்குவது போல் நம் நகராட்சி செயல்பாடு தற்போதும் இருக்கிறது... இனியும் இருக்க போகிறது.... நாளையும் இருக்க போகிறது...

எவன் வந்தாலும் இது மாறபோவது இல்லை - மக்களை பழக்கி வைத்து இருக்காங்க..... ! மக்களும் அப்டியே வாழ்ந்து பழகிட்டாங்க.... !


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
7. Re:சமுதாய அமைப்புகளின் கூட்ட...
posted by A.R.Refaye (Abudhabi) [25 August 2011]
IP: 2.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 7214

இந்த முக்கியமான செய்திக்கு தற்போது அமையபெற்ற MEGA வின் கருத்துக்களை அறிய ஆவலாய் உள்ளோம்.

A.R.Refaye-Abudhabi


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
8. Re:சமுதாய அமைப்புகளின் கூட்ட...
posted by A.W.S. (Kayalpatnam) [25 August 2011]
IP: 123.*.*.* India | Comment Reference Number: 7218

இது ஐக்கிய பேரவை செய்யவேண்டிய வேலை. ஆனால் பேரவை இந்த கூட்டத்தில் கலந்துகொண்ட மாதிரி தெரியவில்லையே? பேரவைக்கு அழைப்பு கொடுக்கப்பட்டதா? பேரவையின் அங்கத்தினர்களை படங்களில் காணமுடிகிறது. கூட்டத்தை நடத்திய "காக்கும் கரங்கள்" விளக்கம் தந்தால் பேரவையின் பங்கு என்ன என்பதை அறிய முடியும்.

காக்கும் கரங்களின் சொந்த முயற்சியில் இந்த கூட்டம் நடந்திருந்தால் வரவேற்க மற்றும் பாரட்ட தகுந்த செயல்.

இந்தக் கூட்டம் அவசர அவசரமாக நடந்தது போல் இருக்கிறது. எல்லா ஜமாஅத்தாரையும் அழைத்திருந்தால் தேர்தலின் அவசியம் பற்றிய விழிப்புணர்வு மக்களிடையே ஏற்பட காரனமாய் அமைந்திருக்கும். MEGA வுடன் சேர்ந்து செயல் பட முடிவுசெய்தது இன்ஷா-அல்லாஹ் கண்டிப்பாக ஒரு Plus point ஆக அமையும்.

"United we stand, divided we fall"


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
9. தேய்ந்துபோன ரிக்கார்டு மாதிரி ............
posted by N.S.E. மஹ்மூது (Kayalpatnam) [25 August 2011]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 7220

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்).

நகராட்சி தேர்தல் ஒருங்கிணைப்பு குழு அமைக்கப்பட இருப்பதுக்கு வாழ்த்துக்கள்.

சென்ற வாரம் நமது வெளிநாடு வாழ் காயல்மாநகர மக்களால் " நகராட்சித் தேர்தல் வழிகாட்டு அமைப்பு‘ " (MEGA) என்ற அமைப்புத் தொடங்கப்பட்டது, நல்ல பல திட்டங்களை வைத்து - வருகின்ற தேர்தலுக்கு நல் வழிகாட்டி- மக்களை விழிப்புணர்வு ஏற்படச் செய்ய திட்டமிட்டுள்ளார்கள்.

இந்த வாரம் (நேற்று) நமது ஊரில் உள்ள சகோதரர்கள் " நகராட்சி தேர்தல் ஒருங்கிணைப்பு குழு " அமைக்கப்பட இருப்பதாக தெரிவித்திருக்கிறார்கள் - அதில் சமுதாய பொது அமைப்புகளும் கலந்து கருத்துக்களை பகிர்ந்திருக்கிறார்கள் - இது வரவேற்க வேண்டிய செயலே.

--------------------------------------------

இப்படி பல அமைப்புகள் ஏற்படுவதை காட்டிலும் ஏதோ ஓரிரு அமைப்புகள் மட்டும் இருந்து மற்றவர்களை அரவணைத்து - செயல்களில் அவர்களின் வழிக்காட்டுதலை மக்களுக்கு காட்டினால் - தேர்தலை நல்ல முறையில் சந்தித்து , சிந்தித்து நல்ல உறுப்பினர்களை தேர்ந்தெடுத்து நகர் மன்றத்துக்கு அனுப்ப முடியும்.

மேலும் புதிது புதிதாக பல அமைப்புக்களை ஏற்படுத்தி மக்கள் மத்தியிலே தடுமாற்றங்களை ஏற்படுத்தாமல் இப்போது இருக்கின்ற அமைப்புக்களே ஒன்றாக கலந்தாலோசித்து ஐக்கியப் பேரவை , அனைத்து ஜமாஅத்துகள், சங்கங்கள் , பொது தொண்டு நிறுவனங்கள் மற்றும் தொழிலதிபர்கள் இவர்களுடன் நட்புறவை ஏற்படுத்திக்கொண்டு வருகின்ற தேர்தலில் மக்களுக்கு நல்வழி காட்டி, ஊழலில்லாத , திறமையான தலைவர் மற்றும் உறுப்பினர்களை தேர்ந்தெடுக்கச் செய்யுங்கள்.

--------------------------------------------

" நகராட்சி தேர்தல் ஒருங்கிணைப்பு குழு " ஆக இருக்கட்டும் அல்லது " நகராட்சித் தேர்தல் வழிகாட்டு அமைப்பு‘ " ஆக இருக்கட்டும் எதுவானாலும் உங்களுடைய எண்ணமும், செயலும் - சுயநலம் இல்லாது ஊர் மக்களுடைய நன்மையை மட்டுமே குறிக்கோளாக கொண்டு - அல்லாஹ்வின் மீது ஆணையாக செயல்பட வேண்டும்.

அப்படி உங்களால் நீதியாக செயல்பட முடியாது என்று நீங்கள் கருதினால் தயவு செய்து இந்த இரண்டு அமைப்புகளையும் அணுகாதீர்கள் அல்லாஹ்வின் தண்டனையை பயந்துக்கொள்ளுங்கள்.

இன்னும் இந்த மாதிரி அமைப்புகளை அமைத்து அதில் குளிர் காயலாம் என்று சூழ்ச்சி செய்ய வேண்டாம்.

சூழ்ச்சியாளர்களுக்கெல்லாம் சூழ்ச்சியாளன் அல்லாஹ்! என்பதை மறந்து விடாதீர்கள்.

--------------------------------------------

ஊடகங்களே !

இன்றைய காலம் ஊடகங்கள் மயமானது - ஊடகங்கள் மூலமே அத்தனையும் இயங்கிக்கொண்டிருப்பதால் - இந்த அமைப்புக்களின் செய்திகளை நம் ஊரில் உள்ள எல்லா ஊடகங்களும் பாகுபாடின்றி வெளியிடும்படி கேட்டுக்கொள்கிறேன் .

இதிலே ஊடகத்துறை கெளரவம் பார்க்க வேண்டாம் - யார் செய்தியை முந்தி வெளியிடுவது என்று நினைக்க வேண்டாம் - செய்திகள் மக்களை போய் சேரவேண்டும் என்ற ஓர் எண்ணம் மட்டுமே உங்களுக்கு இருக்க வேண்டும்.

அந்த செய்தியை மக்களுக்கு எத்தி வைப்பதன் மூலம் உங்கள் பணி மிகச் சிறந்ததாகிவிடுகிறது என்பதை மறந்துவிடாதீர்கள்.

-------------------------------------------

தேர்தல் ஒருங்கிணைப்புக்குழு! மற்றும் வழிகாட்டு அமைப்பே !!

உங்கள் செய்திகளுக்காக எழுதப்படும் கருத்துக்கள் சில சமயம் உங்களை வேதனைப்படுத்தும் - ஏன் அதை படிக்கின்ற எங்களையும்தான் வேதனைப் படுத்தும் - அதை பொருட்படுத்தாதீர்கள்.

காரணம் சில பண்படாத மக்கள் நம்மிடையே உண்டு என்பதால்தான். ஐந்து விரல்களும் ஒன்றுபோல் இல்லையே அது போல் எல்லா மக்களும் ஒன்றுபோல் இருக்க மாட்டார்கள்.

-------------------------------------------

மக்களே !

இந்த முறை வரும் தேர்தலில் தேர்தல் வழிகாட்டுதல்படி சிந்தித்து ,செயல்படுங்கள் நாம் எப்போதும் சொல்லிக்கொண்டிருக்கும் (தேய்ந்துபோன ரிக்கார்டு மாதிரி ) எவன் வந்தாலும் ஒன்னும் செய்யமாட்டான் , எல்லோரும் ஊழல் பேர்வழிதான் , இந்த ஜென்மத்துக்கு திருத்தமுடியாது என்று அல்லாஹ்வை மறந்தவர்களாக பழைய பஞ்சாக்கத்தையே பாடி கொண்டிராமல் நல்லவர்களை தேர்ந்தெடுங்கள்.

அல்லாஹ்! நம் நகர் மன்றத்தை நன் மக்கள் நிறைந்த மன்றமாக ஆக்கியருள்வான் ஆமீன்.

வஸ்ஸலாம்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
10. Re:சமுதாய அமைப்புகளின் கூட்ட...
posted by basheer sma (காயல்பட்டினம்) [25 August 2011]
IP: 180.*.*.* India | Comment Reference Number: 7222

தேர்ந்தெடுக்கப்படும் கவுன்சிலர்ளையும் நகராட்சி தலைவரையும் மூன்று மாதத்திற்கொருமுறை ஏதாவது ஒரு பொது அரங்கில் கூட்டி பொது மக்களை வைத்து கேள்விகள் கேட்க வேண்டும். முறைப்பாடுகள் இருந்தால் முறையிட வேண்டும். இதை நேரலையாக இணையத்திலும் ஒளிபரப்ப வேண்டும்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
11. Re:சமுதாய அமைப்புகளின் கூட்ட...
posted by MAK.JAINULABDEEN(president,kakkum karangal narpanimandrum) (kayalpatnam) [25 August 2011]
IP: 49.*.*.* India | Comment Reference Number: 7227

அஸ்ஸலாமு அலைக்கும்.

நேற்று(புதன்கிழமை)நடைபெற்ற காயல்பட்டினம் சமுதாய அமைப்புகளின் ஒருங்கிணைப்புக் கூட்டம் எங்களுடைய காக்கும் கரங்கள் நற்பணி மன்றத்தின் கடும் முயற்ச்சியில் மட்டும் (எந்த ஒரு உள்நோக்கமும் இல்லாமல்) ஊரின் நலனை மட்டும் கருத்தில் கொண்டு நடத்தப்பட்ட ஒரு கலந்தாலோசனைக்கூட்டம்.

இந்த கூட்டத்திற்கு காயல்பட்டினம் முஸ்லிம் ஐயிக்கியப் பேரவை அடக்கம் எல்லா ஊர் அமைப்புகளுக்கும் அழைப்பு கொடுத்து இருந்தோம். எங்களுடைய காக்கும் கரங்கள் எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் இரத்தம் தானம், முதலுதவி, பள்ளிவாசல் தூய்மைபடுத்துதல், மரம் நடுதல், மற்றும் நகர்நலப்பணிகளை செய்து வருகிறோமோ, அதே எண்ணத்தில் அல்லாஹுக்காக, அல்லாஹ்விடத்தில் நன்மையை நாடி மட்டுமே இந்த முயற்ச்சியை நமது ஊருக்காக செய்கிறோம். இதில் எந்த விதமான உள்நோக்கமோ, யாருக்கும் போட்டியாக செய்ய வேண்டும் என்ற என்னமோ எங்களின் காக்கும் கரங்கள் அமைப்பிற்கு கிடையாது. ஆதலால் எங்களின் செயல்பாடுகள் திறந்த புத்தகம். ஆகவே எங்களை நலப்பணிகள் இன்னும் அதிகம் செய்வதற்கு ஊக்கப்படுத்துங்கள். வாழ்துங்கள். வளர்கிறோம்.

தவறுகள் இருந்தால் சுட்டிக்காட்டுங்கள். நாங்கள் வயதில் சிறியவர்கள். திருந்துகிறோம். இன்ஷா அல்லாஹ்.

எல்லாம் அறியக்கூடியவனாக அல்லாஹ் இருக்கிறான்.அவனே எல்லாத்துக்கும் போதுமானவன். அஸ்ஸலாமு அலைக்கும்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
12. Re:சமுதாய அமைப்புகளின் கூட்ட...
posted by moosa sheik wavoo (bangalore) [25 August 2011]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 7229

நகராட்சி தேர்தல் ஒருங்கிணைப்பு குழுவிற்கு எனது மனமார்ந்த பாராட்டுகள். இந்த குழு தனது முதலாவது கூட்டத்திலேயே நம் ஊரில் உள்ள அனைத்து பொதுநல அமைப்புகளையும் இணைத்துள்ளது. இதுவே இக்குழுவிற்கு கிடைத்த முதல் வெற்றி. அதுபோன்றே வருகின்ற நகராட்சி தேர்தலில் ஊர் மக்கள் அனைவரையும் ஒன்றினைத்து நல்ல நகராட்சியை உண்டாக்குவதில் இக்குழுவிற்கு பெரும் பங்கு உள்ளது. எனவே நாம் இந்த குழுவை முழுமனதுடன் ஆதரிப்போம்.

இந்த குழு வெளியிட்டுள்ள செய்தியில் அடுத்த கட்டமாக ஜமாஅத், பொதுநல அமைப்பு மற்றும் சமூக ஆர்வலர்கள் அடங்கிய ஒருங்கிணைந்த குழு ஒன்று உருவாக்கப்படும் என்று கூறியுள்ளார்கள். அப்படி நடந்தால் இன்ஷாஅல்லாஹ் அந்த குழு தேர்ந்தெடுக்கும் தலைவர் மற்றும் கவுன்சிலர்கள் திறமையானவர்களாக இரப்பார்கள் என்பதில் சந்தேகம் இல்லை. நகராட்சி தேர்தல் ஒருங்கிணைப்பு குழுவிற்கு எனது வாழ்த்துக்கள்.

சமுதாய பொது நல அமைப்புகளை ஓரணியில் காணும்போது மகிழ்ச்சியாக உள்ளது. இதுபோன்று நமது ஊர்மக்கள் ஓர் அணியில் வந்துவிட்டால் இன்ஷாஅல்லாஹ் வெற்றி நிச்சயம். இந்த ஒற்றுமைக்காக பாடுபட காயல் மாநகரில் துவங்கியுள்ள புதிய குழுவிற்கு வெளியூர்களில் செயல்பட்டு வரும் காயல் நல மன்றங்கள், வெளிநாடுகளில் உள்ள காயல் நலமன்றங்கள், நமது ஊரின் அனைத்து ஜமாஅத்துக்கள் மற்றும் பொதுமக்கள் என அனைவரும் ஆதரவை தெரிவிப்போம். நேர்மையான நகராட்சி உருவாகிட ஒத்துழைப்போம்.

Administrator: Message edited


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
13. Re:சமுதாய அமைப்புகளின் கூட்ட...
posted by V D SADAK THAMBY (Guangzhou(China)) [25 August 2011]
IP: 119.*.*.* China | Comment Reference Number: 7239

தேவைற்ற போட்டியை தவிர்த்தால் நம் சமுதாய மக்களே வெற்றி பெற்று இருக்கலாம் என்கின்ற அடிப்படையில் தான் ஜமால் அவர்கள் அந்த கருத்தை பதிவு செய்திருந்தார் .அவர் சொல்லும் கருத்து மிகச்சரியானது .

இதையே நான் முபோருமுறை பதிவிலும் வலியுறுத்தினேன்.

சகோதரர் முத்து இஸ்மாயில் அவர்கள் மாற்று சமூகத்தை சேர்ந்தவர் அதிகம் வெற்றிவேண்டும் என்பதுபோலவும் நம் சமூகத்தை சேர்த்தவர்கள் ஊழல்பேர்வழிகள், எனவே அதிகம் வெற்றிபெறக்கூடது என்பதுபோலவும் கருத்துபட எழுதுகிறார் .

இவ்வாறு அவர் முன்னர் ஒரு இடத்திலும் தன் கருத்தை வெளிபடுத்தி இருந்தார். .

அவர் அவவாறு நினைப்பது முற்றிலும் தவறு.

நாம் நம் சமுதாயத்தை பற்றி மட்டுமே கவனம்/கவலை கொள்ள முடியும்.நாம் நமக்குள் போட்டியிட்டுக்கொள்வதால் அது மற்ற சமூகத்தவருக்கு சாதகமாக அமையும்.

எனவே , அது சமுதாய அமைப்பாக இருந்தாலும் சரி அல்லது இயக்கமானாலும் சரி, போட்டியை தவிர்த்து ஒற்றுமையாக செயல்பட்டால் , நம் சமுதாயம் வெற்றிபெறும்/முன்னேறும்..

மன்னிக்கவும்.மற்ற சமுதாயம் என்னதவறு செய்தது விட்டது அவர்கள் முன்னேற வேண்டாமா என எதிர் கேள்வி எழுப்ப வேண்டாம்.

நம் அமைப்புகளில் காயல் ஐக்கிய பேரவையே பிரதானமானது.எனவே எல்லா அமைப்புகளும் காயல் ஐக்கிய பேரவையுடன் ஒன்றிணைந்து செயல்பதுவது சாலச்சிறந்தது.

ஒன்றுபட்டால் வெற்றியுன்டு . இல்லையேல் அது அனைவர்க்கும் தாழ்வு .


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
14. Re:சமுதாய அமைப்புகளின் கூட்ட...
posted by Mohamed Ismail (Riyadh) [25 August 2011]
IP: 2.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 7246

இந்த அமைப்பின் நல்ல நோக்கம் வெற்றி பெற நாம் அனைவர்களும் துணை நிற்போம்,காக்கும் கரங்களின் செயல்பாடு பாராட்டுக்கு உரியது.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
15. Re:சமுதாய அமைப்புகளின் கூட்ட...
posted by A.W.S. (Kayalpatnam) [25 August 2011]
IP: 123.*.*.* India | Comment Reference Number: 7249

நாம் அனைவரும் கை சுத்தமானவர்களை தேர்ந்தெடுக்க மும்முரமாக இருக்கும் வேளையில் தேர்ந்தேடுக்கபடுபவர்கள் ஒரு சில செல்வந்தர்களின் மற்றும்/அல்லது குறிப்பிட்ட சில கொள்கையை ஏற்று கொண்டோரின் கைப்பாவையாக இருக்ககூடாது என்பதிலும் முனைப்பாக இருக்கவேண்டும்.

இங்கு சிலர் முரண்பாடான / எதிரான கருத்தை பதிவுசெய்துள்ளார்கள். அவர்களுக்கு கீழ்க்கண்ட குர்-அன் வசனத்தை ஞாபகமூட்ட விரும்புகிறேன்.

"எந்த ஒரு சமூதாயத்தவரும், தம் நிலையயைத் தாமே மாற்றிக் கொள்ளாத வரையில், அல்லாஹ் அவர்களை நிச்சயமாக மாற்றுவதில்லை" (Al-Quran 13:11).


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
16. Re:சமுதாய அமைப்புகளின் கூட்ட...
posted by Abdul Kader (chennai) [25 August 2011]
IP: 122.*.*.* India | Comment Reference Number: 7253

AND HOLD FAST, ALL OF YOU TOGATHER, TO THE ROPE OF ALLAH, AND BE NOT DIVIDED AMONG YOURSELVES, AND REMEMBER ALLAH’S FAVOUR ON YOU…. (AL-QURAN 103/3)

Wonderful effort and happy to see representatives from the various Kayal associations of different ideologies to get together and orgnise this coordination effort to cleanse our Municipality.

While it is just the beginning, concerted effort should be made to bring in all Jamaath representatives, as well as the “Kayal Muslim Iykiya Peravai” under one umbrella to have effective, collective representation to elect the next board members and a new Chairman.

Steps must be taken to bring in our non – Muslim brothers from the surroundings to avoid confrontation on various issues.

Let us also not forget the abroad Kayal Welfare Associations- through they live and work overseas- their inputs are as important as the local associations.

In this regard a few points should be noted:-

A) The future elected members should not be part of any political parties- including our community parties like IUML or TMMK as this would only create and increase divisions amongst us.

B) The notion that the Chairman or the majority of the members should be from the ruling party that rules the Tamil Nadu Govt. in order to facilitate welfare schemes and fund allocation etc, are ill founded, because it has proven otherwise. Many schemes which are essential were not even looked in to.

C) 33% quota of Women representation is in place and it is inevitable that we would be having at least 5 to 6 women members in the elected body. Firm actions must be taken to shun the existing status of electing a wife, mother, sister even “kamma” of another elected member. Concrete actions should be taken to educate and encourage our womenfolk to take up the responsibility.

D) A senate committee of elders from Jamaath must be formed to advice and monitor the elected members periodically, which would create transparency in their work and lessen corruption to a certain extend. This group could also guide and assist the members in major policy decisions for example the 2nd line water scheme, Under Ground drainage system, Tsunami housing, finding suitable locations for EB Substation, Solid waste management, slaughter house, one way etc

Let us all wholeheartedly support these joint organizations effort and sincerely hope it would achieve the desired results, and be careful not be hijacked by few powerful person like what happened last time.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
17. வாழ்த்துகளுடன் ஓர் அவா!
posted by MOHIDEEN ABDUL KADER (ABUDHABI) [25 August 2011]
IP: 2.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 7270

அன்பு அமைபாலர்களுக்கு அபுதாபில் இருந்து அன்புகலந்த வாழ்த்துக்கள்.

அடியேனின் அவா! அன்பு சகொதரெர் கேப்டன் சதக்கத்துல்லாஹ் தற்போது MDMK அரசியல் கட்சின் சார்பாக கலந்துகொள்ளவில்லை.காரணம் தெரியவில்லை. மேலும் அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளையும் அவசியம் தங்களுடன் அழைத்து அவர்களிடம் சரியான முறைகள் விளக்கி அவர்களின் அரசியல் கொள்கைகள் இல்லாதவாறு அவர்களின் ஆதரவாளர்கள் தாங்கள், MEGA, அணைத்து காயல் அமைப்பு, ஜாமாதுகளின் முடிவின் அடிபடையில் தேர்ந்து எடுக்கும் நபர்களை ஒருமிததுடன் ஆதரவளிக்க பயன் பெரும்.

காயல் ஐக்கிய பேரவையின் பங்கு என்ன இந்த நகர்மன்ற தேர்தலில் மற்றும் அவர்களின் கருத்துகள் யாவை, ஏன் அமைதி, அவர்கள் சரியான முறையில் அணைத்து அமைப்பு ,ஜமாது கலையும் எளிதில் ஒன்று கூடும் திறன் உள்ளதால் அவர்களின் AALOSANAIKAL மிக மிக அவசியம்.ஆனால் அவர்கள் முன்பு மாதரி இல்லாமல் தற்போதுள்ள MEGA, தங்கள் அமைப்புகளுடன் ஆலோசனை பெற்று அழகான முறையில் முடிவுகளை எடுக்கலாம்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
18. Re:சமுதாய அமைப்புகளின் கூட்ட...
posted by SyedAhmed (HK) [26 August 2011]
IP: 119.*.*.* Thailand | Comment Reference Number: 7281

இந்த முயற்சியை செய்த காக்கும் கரங்களுக்கும் சகோதரர் ஜெய்னுல் அபிதீனுக்கும் வாழ்த்துக்கள்.

கமென்ட் 11 விமர்சனங்களுக்கு நீண்ட விளக்கம் அளித்து உள்ளீர்கள். அறிஞர் அண்ணா சொன்ன ஒன்று நினைவுக்கு வருகிறது.
--------------------------------------------------------------------------------------------
" லட்சிய பயணம் போகும்பொழுது காகங்கள் நம் மீது எச்சமிடும் அதற்காக, காகங்களை விரட்டிசெல்வதில் நமக்கு எந்த பெருமையும் இல்லை. காகத்திற்கு தெரிந்ததும் புரிந்ததும் இது தான் என்று எச்சத்தை எச்சத்தை துடைத்து எரிந்து விட்டு பயணத்தை தொடர்ந்து மேற்கொள்ள வேண்டும்"
-------------------------------------------------------------------------------------------
காகங்களை விரட்டி சென்றால் நம் லட்சியம் மாறிவிடும், காகம் விரட்டுவது லட்சியம் ஆகி விடும். உங்கள் சமுதாய பனி சிறக்க வாழ்த்துக்கள்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
19. Re:சமுதாய அமைப்புகளின் கூட்ட...
posted by MUHAMED SHUAIB (kayalpatnam) [26 August 2011]
IP: 122.*.*.* India | Comment Reference Number: 7285

சகோதரர் செய்யது அஹ்மது அவர்கள் அண்ணாவின்அருமையான மேற்கோளை ஜுனியர் விகடன் இதழில் இருந்து எடுத்து காட்டியதற்காக நமது நெஞ்சார்ந்த நன்றிகள்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
20. Re:சமுதாய அமைப்புகளின் கூட்ட...
posted by MAK.JAINULABDEEN(president,kakkum karangal narpanimandrum) (kayalpatnam) [26 August 2011]
IP: 49.*.*.* India | Comment Reference Number: 7297

அஸ்ஸலாமு அலைக்கும். சகோதரர் முத்து அஹமத் காக்கா அவர்களே, ஒரு ஆள் கருத்துக்கள் எத்தனை வேண்டும் என்றாலும் சொல்லலாம். சொல்லக்கூடிய கருத்து சரிதானா? என்று நன்றாக யோசித்து விட்டு சொல்லணும். அடே அவன் நம்மள விட சின்னப்பையன். அவன் என்ன சொல்றது, நாமளும் எதாவது சொல்வோம். என்று சொல்லக்கூடாது. மரம் நடுவது, மரம் நடுவது என்று கிண்டல் பண்ணுகிறீர்களே? இது நகர் நலப்பணி இல்லையா?

முன்னாள் நமதூரில் இருந்தது போல் அதிகமான மரங்கள் ஊரில் இருந்தால் நமதூரில் அதிகமான நோய்கள் அண்டி இருக்காது. இந்த அளவுகூட ஊர் நலம் தெரியாத நீங்கள் என் வயதை விட என்ன அதிகமான மக்கள் சேவையில் அனுபவம் பெற்றீர்களோ தெரியவில்லை. எல்லாம் அறிந்தவனாக அல்லாஹ் ஒருவன் இருக்கிறான்.

குறை கூறுபவர்கள் குறை கூறிக்கொண்டுத்தான் இருப்பார்கள். "லட்சியப் பயணம் போகும்போது காகங்கள் நம் மீது எச்சமிடும். அதற்காக காகங்களை விரட்டி செல்வதில் நமக்கு எந்த பெருமையும் இல்லை. காகத்திற்கு தெரிந்ததும், புரிந்ததும் இதுதான் என்று எச்சத்தை துடைத்து எரிந்து விட்டு பயணத்தை தொடர்ந்து மேற்கொள்ள வேண்டும்". என்ற அறிஞ்சர் அண்ணாவின் சொல்லை ஹாங்காங் நண்பர் செய்யத் அஹமத் காக்கா அவர்கள் அழகாக நினைவுபடுத்தி இருக்கிறார்கள்.

அல்லாஹ்வே எல்லாவற்றையும் அறியக்கூடியவனாக இருக்கிறான். சூழ்ச்சிகாரர்களை விட மிகப்பெரிய சூழ்ச்சிக்காரன் அல்லாஹ். அவனின் பொருட்டால், அவனிடத்தில் நன்மையை நாடி மட்டுமே நாங்கள் இந்த பணியை செய்கிறோம். அவனுக்கு மட்டுமே பயப்படக்கூடியவனாக இருக்கிறோம். அல்லாஹ் எங்களுக்கு இதில் உதவியாக இருப்பான். அஸ்ஸலாமு அலைக்கும்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
21. Re:சமுதாய அமைப்புகளின் கூட்ட...
posted by muthu ahamed (dubai) [26 August 2011]
IP: 92.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 7302

தம்பி ஜைனுல் ஆப்தீன்! எங்கோ எழுதிய கருத்துக்கு இங்கே வந்து பதில் எழுதியது ஏனென்று தெரியவில்லை. மரம் நடுவது நகர்ணலப்பணி என்பது எல்லோருக்கும் தெரியு, நான் கேட்ட கேள்விக்கு மரம் நட்டோம் என்பதுதான் பதிலா? பத்து சங்கங்களை நோன்பு திறக்க அழைத்துவிட்டு, நகரமன்ற தேர்தல் குறித்து கருத்து கேட்டபின், இல்லாத இயக்கம் துவங்கப்பட்டதாக வெப்சைட்டுகளுக்கு பொய்யான செய்தி கொடுத்தது யார்? அல்லாஹ்வுக்காக செய்வதாக சொல்லும் நீங்கள், அந்த குறிப்பிட்ட சங்கங்களின் ( ஒருசிலரைத் தவிர்த்து) அதிகாரப்பூர்வ அனுமதி இல்லாமல் அவர்களால் இயக்கம் தொடங்கப்பட்டது என்ற பொய்யை கொஞ்சம்கூட பயம் இல்லாமல் நோன்பு நேரத்தில் பரப்புகிறீர்களே! இதுதான் அல்லாஹ்வை பயப்படும் லச்சணமா?

அதிகம் வேண்டாம்! கொஞ்சம் பொறுங்கள்! இதன் பின்னநினியில் யார் என்பது விரைவில் உண்மை வெளிவரும். திரை விலகும். நாடகம் முடியும்போது இன்ஷாஅல்லாஹ் வேஷங்கள் களையும். அப்போது தெரியும். அண்ணாதுரை சொன்ன காக்கைகள் யார் யார் என்று?


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
22. Re:பொய்யான செய்தியாக இருந்தால்
posted by SyedAhmed (HK) [26 August 2011]
IP: 121.*.*.* Hong Kong | Comment Reference Number: 7304

நோன்பு திறப்பதற்காக பல்வேறு சங்கங்களின் பிரதிநிதிகளை அழைத்து நகர்மன்றம் பற்றி கருது கேட்டு விட்டு புதிய அமைப்பு தொடங்கியதாக செய்தி கொடுத்ததாக குற்றச்சாட்டு சகோதரர் முத்து அகமது தெரிவித்து உள்ளார்.

காயல்பட்டினம்.காம் செய்தியை வெளியிட்டு உள்ளீர்கள் செய்தியை உறுதி செய்த பின்னர் வெளியிட வேண்டும் என்பதே பத்திரிக்கை தர்மம். எந்த செய்தியையும் உறுதி செய்யாமல் பரப்புபவன் பொய்யன் என்று நபிகள் நாயகம் சொல்லியுள்ளார்கள் .

இதை மனதில் கொண்டு காயல்பட்டினம்.காம் இந்த செய்தியில் உள்ள உண்மை தன்மையை வாசகர்களுக்கு விளக்கும் கடமை உங்களுக்கு உள்ளது.

இந்த சந்திப்பில் கலந்து கொண்டவர்களிடம் இந்த கேவியை முன்வைத்து பதில் தருவீர்களா?


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
23. Re:சமுதாய அமைப்புகளின் கூட்ட...
posted by Administrator (Chennai) [26 August 2011]
IP: 122.*.*.* India | Comment Reference Number: 7307

(1) கூட்டம் நடந்தது உண்மை. நடக்காத கூட்டத்தினை நடந்ததாக காயல்பட்டணம்.காம் செய்தி வெளியிடவில்லை

(2) கூட்டத்தை ஏற்பாடு செய்தவர்கள் சார்பாக வழங்கப்பட்ட அறிக்கை - அவ்வாறே, அவர்கள் வார்த்தையில் - வெளியிடப்பட்டுள்ளது. ஏற்பாட்டாளர்கள் தராத தகவலை காயல்பட்டணம்.காம் வெளியிடவில்லை

கூட்டத்தினை ஏற்பாடு செய்தவர்களால் - கூட்டத்தில் பேசப்படாதது செய்தியாக தரப்பட்டிருந்தால் - கூட்டத்தில் கலந்துக்கொண்டு, கையெழுத்திட்டோர் மறுப்புக்கூறும் பட்சத்தில் அதன் விளக்கமும் வெளியிடப்படும்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
24. Re:சமுதாய அமைப்புகளின் கூட்ட...
posted by mak.zainulabdeen.member.kaattu mohudoom palli. (kayalpatnam) [26 August 2011]
IP: 49.*.*.* India | Comment Reference Number: 7310

அஸ்ஸலாமு அலைக்கும்.முத்து அஹமத் காக்கா அவர்களே வாதங்களுக்கு பதில் உண்டு.விதண்டாவாதங்களுக்கு பதில் இல்லை.உங்களையும்,உங்கள் பின்னால் இருந்து இயக்குபவர்களையும் பொது மக்களுக்கு அல்லாஹ் மிக விரைவில் அடையாளம் காட்டுவான்.எல்லாத்திற்கும் அல்லாஹ் மிகப் போதுமானவன்.அஸ்ஸலாமு அலைக்கும்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
25. Re:சமுதாய அமைப்புகளின் கூட்ட...
posted by S.CHIDAMBARAM TEACHER (Kayalpatnam) [26 August 2011]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 7312

நகர மன்ற தலைவர் மற்றும் அணைத்து வார்டு உறுப்பினர்களும் ஊழல் அற்ற சேவை மனப்பான்மை உள்ளவர்களை தேர்ந்தெடுத்து காயல் மாநகரம் மேலும் சிறக்க வாழ்த்துகிறேன் .


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
26. Re:சமுதாய அமைப்புகளின் கூட்ட...
posted by syedahmed (GZ,China) [26 August 2011]
IP: 14.*.*.* China | Comment Reference Number: 7318

V . D . சதக் தம்பி காக்காவின் கூற்று உண்மையிலும் உண்மை. இதுவே சரி என்று ஆமோதிக்கிறோம்.Unity is strength என்ற பழமொழிக்கேற்ப அவருடைய உன்னத கருத்து வரவேற்கத்தக்கது. கூடி வாழ்ந்தால் கோடி நன்மை.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
27. Re:சமுதாய அமைப்புகளின் கூட்ட...
posted by muthu ahamed (dubai) [26 August 2011]
IP: 92.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 7319

தம்பி. ஜெய்னுல் ஆப்தீன்!

எனக்கு வார்ட் மெம்பெர் ஆகவேண்டுமென்றோ,ஏதாவது அரசியல் கட்சியில் சேர்ந்து எம்.எல்.ஏ ,எம்.பி ஆகவேண்டுமென்றோ எந்த ஆசையும் இல்லை. கடுங்குளிரிலும்,வெயிலிலும் பாலைவனத்தில் பாடுபட்டு, என்னால் முடிந்ததை குடும்பத்துக்கும்,ஊருக்கும் செய்வதோடு சரி! என்னை இயக்குபவன் அந்த அல்லாஹ் ஒருவனே!

ஆதாரங்கள் இல்லாமல் நான் எதையும் எழுதுவதில்லை. இன்ஷாஅல்லாஹ் சமயம் வரும்போது எல்லாம் வெளிப்படும். உண்மை வெல்லும்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
28. Re:சமுதாய அமைப்புகளின் கூட்ட...
posted by NUSKI MOHAMED EISA LEBBAI (Riyadh - KSA) [26 August 2011]
IP: 176.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 7321

அன்பு காயல் நெஞ்சங்களே நாம் எல்லோரும் ஆசை படுவது ஊழலற்ற மன்றம் அமைய வேண்டும் தலைவர் மற்றும் நல்லவராக இருந்து மற்றவர்கள் எல்லாம் அவருக்கு ஒத்துழைப்பு கொடுக்காமல் அல்லோலபட்டது நமது நகர சபை. மெகா,சமுதாய அமைப்புகளின் கூட்டமைப்பு உள்ளிட்ட யாவரும் இந்த பெருநாள் விடுமுறையில் ஒன்று கூடி ஐக்கிய பேரவையுடன் இனைந்து நல்ல ஒரு முடிவு எடுக்க வேண்டும். இதற்கு மெகா, காக்கும்கரங்கள்,அணைத்து சங்க கூட்டமைப்பு நிருவாகிகள் துரிதமாக செயல் பட்டு நல்ல முடிவினை எட்ட உறுதுணை புரிய வேண்டும் எல்லாம் வல்ல அல்லாஹ் அதற்கு தவ்பீக் செய்வானாக. அது வரை வீண் தர்க்கம் செய்யாமல் இந்த புனித ரமலான் கழிய வேண்டும் என்று அன்புடன் கேட்டு கொள்கிறேன் . நன்றி

வஸ்ஸலாம்
அன்புடன்
நுஸ்கி முஹம்மது ஈஸா லெப்பை
ரியாத்
சவுதி அரேபியா


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
29. Re:முத்து அகமது காகாவின் கேள்வி நியயமணாதே
posted by SyedAhmed (HK) [26 August 2011]
IP: 121.*.*.* Hong Kong | Comment Reference Number: 7325

சகோதரர் ஜெய்னுல் ஆபிதீன் அவர்களுக்கு அஸ்ஸலாமு அழைக்கும்

முத்து அகமது காகா கேட்டிருக்கும் கேள்வி நியாயமானது நீங்கள் விதண்டாவாதம் என்று சொல்வது வியப்பாக உள்ளது. பல முறை இந்த அரசியல்வாதிகளினால் ஏமாற்றப்பட்ட வலி ஒவ்வாருவரையும் அடைந்து இருக்கிறது முக்கியமாக தங்கள் வாழ்வின் வசந்தத்தை அரேபிய பாலைவனத்தில் கழித்து விட்ட நம் சகோதரர்களை. மீண்டும் ஒருமுறை ஏமாற யாரும் தயாராக இல்லை.

நோன்பு திறப்பதற்காக அழைத்துவிட்டு நகர்மன்றம் குறித்து கலந்துரையாடல் செய்துவிட்டு அமைப்பு தொடங்கப்படுவதாக நீங்கள் பொய் செய்தி கொடுத்தீர்கள் என்று குற்றம் சாட்டுகிறார் சகோதரர் அதற்க்கு உங்கள் பதில் என்ன என்று சொல்லி விட்டால் குழப்பம் தீர்ந்து விடும் ........... சொல்வீர்களா?


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
30. உள்ளாட்சி தேர்தல் ஒருங்கிணைப்பு குழு
posted by SAHUL HAMEED MM (KAYALPATNAM) [26 August 2011]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 7332

அன்பு உள்ளம் கொண்ட நமது KAYALPATNAM.COM இணையதளத்தின் அபிமானிகளே...... அஸ்ஸலாமு அல்லைக்கும்...

உள்ளாட்சி தேர்தல் ஒருங்கிணைப்பு குழு உருவகபட்டதக்கு பல பேர் தேவை அற்ற, ஆரோக்கியம் அற்ற கருத்துக்கள் பரிமாரபடுவது வருத்தம் தருகின்றது.

கூடத்தில் நடைபெற்ற கருத்துக்கள் படி வந்து இருந்த எல்லா அமைப்பின் பிரதிநிதிகள் முடிவின் படி உருவாக்கப்பட்டது என்பதை முதலில் புரிந்து கொள்ள வேண்டுமாய் அன்புடன் வேண்டுகிறேன்....

உருவாக்கப்பட்ட அமைப்பு மூலம் நமதூர் நகராட்சி மறுமலர்ச்சி ஏற்பட வேண்டும் என்ற நல்ல எண்ணத்தில் தொடங்கப்பட்டது.

நமதூர் சமுதாய பணிகளை தொடர்ந்து ஆற்றி வரும் அனைத்து சமுதாய ஆர்வலர்களும், இளம் வாலிபர்கள் இணைந்து தேர்தல் நேரங்களில் களப்பணி செய்து நல்லவர்கள் உறுப்பினர் ஆகா வேண்டும் என்பதை விட ஊழல் வாதிகள் , நமதுர்க்கு எதிராக செயல் படுபவர்கள் அடையாலம் கண்டு தெருவில் சென்று பிரச்சாரம் செய்து சமுதாய பார்வையில் இருந்து ஒழிக்கப்படவேண்டும் என்பதுதான் நம் அனைவர்களின் முடிவாக இருக்க வேண்டும்.

எனவே இரண்டு அமைப்புகளிலும் திறம்பட செயல்படும் நல்லவர்கள் இருகின்றார்கள்..... MEGA அமைப்பின் கவிமகன் அவர்கள் சொல்லும் கட்டளைகளாக இருந்தாலும், நாமதூர் மக்கள் தேர்தல் சம்மதமான எந்த கட்டளைகளாக இருந்தாலும் எங்கள் அமைப்பு தெருவில் இறங்கி பணி செய்ய காத்து இருகின்றோம்.....

ஆகவே ஆற்றுகின்ற பனி இறைவன் ஒருவனுக்கே என்று எண்ணி தேவை அற்ற விமர்சனங்கள் இரண்டு அமைபினர்களுக்கும் சொல்லாமல் நல்ல திடமான கருத்துகளை எங்களுக்கு அனுப்பி வரும் தேர்தலில் நாம் அனைவர்களும் என்னும் நகராட்சினை உருவாக்குவோம்.... வஸ்ஸலாம்.....


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
31. Re:சமுதாய அமைப்புகளின் கூட்ட...
posted by MAK.JAINULABDEEN(president,kakkum karangal narpanimandrum) (kayalpatnam) [26 August 2011]
IP: 49.*.*.* India | Comment Reference Number: 7333

அஸ்ஸலாமு அலைக்கும். சகோதரர் செய்யத் அஹமத் காக்கா அவர்களே, நான் அல்லாஹ், ரசூலை முன்னிறுத்தி சொல்கிறேன். யாரையும் நாங்கள் இப்தாருக்கு அழைத்து வலுக்கட்டாயமாக இந்த அமைப்பை துடங்கவில்லை. உள்ளாட்சி தேர்தல் சம்பந்தமாக கலந்தாலோசனைக் கூட்டம் ஆகஸ்ட் 24 மாலை அசர் தொழுகைக்குப்பிறகு ஈக்கிஅப்பா தைக்காவில் வைத்து நடைபெறும். இதில் கலந்து கொள்ளுமாறு கேட்டுகொள்கிறோம். அத்துடன் இப்தார் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்துள்ளோம் என்றுதான் அமைப்புகளுக்கு அழைப்பு கொடுத்து இருந்தோம். அதில் கலந்து கொண்டவர்கள் போட்டோதான் நமது காயல்பட்ணம்.காம் இல் வந்து இருக்கிறதே? அதில் கலந்து கொண்டவர்களில் எல்லாரிடமும் நீங்கள் கேட்கலாம்.

சரி, வந்திருந்த அனைவர்களும் ஒவ்வொரு அமைப்புகளின் நிர்வாகிகள், நாங்கள் எப்படி அவர்களை கட்டாயப்படுத்தி இருக்கமுடியும். கண்டிப்பாக இல்லை. அவர்களிடம் ஒப்புதல் வாங்கிய பிறகுதான் நாங்கள் இந்த அமைப்பை ஆரம்பித்துள்ளோம். (முத்து அஹமத் காக்கா அவர்களுக்கு) காக்கும் கரங்கள் நற்பணி மன்றத்தின் மேல் என்ன கோபமோ தெரியவில்லை. எதுவாக இருந்தாலும் நான் முன்னே சொன்னதுபோல் காக்கும் கரங்கள் ஒரு திறந்த புத்தகம். யார் வேண்டுமானாலும் படிக்கலாம். அதுமட்டும் இல்லாமல் நாங்கள் வயதில் மட்டுமே சிறியவர்கள். தப்பு இருந்தால் தயவுசெய்து சொல்லுங்கள். கண்டிப்பாக திருந்துவோம். கட்டளை இடுங்கள், செய்கிறோம். ஆனால் தயவு செய்து மிரட்டாதீர்கள். எங்களை வாழ்துங்கள். வளர்கிறோம்.

நான் இப்போதும் கேட்கிறேன். நாங்கள் செய்த தவறுதான் என்ன? எல்லாரும் பாராட்டும் போது நீங்கள் மட்டும் ஏன் எங்களை இழிக்கிறீர்கள். வயதில் சிறியவன் கேட்பதில் தவறு இருந்தால் மன்னிக்கவும். அஸ்ஸலாமு அலைக்கும்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
32. Re:சமுதாய அமைப்புகளின் கூட்ட...
posted by SyedAhmed (HK) [27 August 2011]
IP: 202.*.*.* Hong Kong | Comment Reference Number: 7340

சகோதரர் ஜைனுல் அபிதீனுக்கும் சாகுல் ஹமீதுக்கும் அஸ்ஸலாமு அழைக்கும்

உங்கள் விளக்கம் முத்து அகமது காகா வைத்திருந்த கேள்விக்கு விடையாக வந்து உள்ளது கண்டு மகிழ்ச்சி, நான் உங்களை குறை சொல்வதாக நீங்கள் நினைக்க வேண்டாம் நான் உங்கள் அமைப்பின் முயற்சியை எனது முதல் கமெண்டில் வரவேற்றது விமர்சன அம்புகளை துடைத்து எரிந்து விட்டு லட்சிய பயணம் மேற்கொள்ளுங்கள் என்று எழுதி இருந்தேன்.

சமூக சேவைக்கு வயது ஒரு தடை அல்ல. பெரியிவராக (கிழவராக அல்ல பெரிய மனது உடையவராக) இருந்தால் போதுமானது. சிலர் ரத்தம் தேவைபட்டால் நம்மிடம் தான் வருவார்கள் போன்ற கமென்ட் எழுதி இருந்தார்கள் அது உங்கள் போன்ற இறைவனின் உதவியை மட்டும் நாடும் சமூக சேவை அமைப்புக்கு அழகு இல்லை. உதவி நம்மால் யாருக்கும் செய்ய முடியாது இறைவன் நாடினால் நம்மை கொண்டு சிலருக்கு உதவி புரிவான் என்பதை என் சகோதரனாகிய உங்களுக்கு உரிமையுடன் சொல்லிக்கொள்கிறேன்.

கம்பியூட்டர் இல் இருந்து கமென்ட் தட்டுகிறீர்கள் என்ற தங்களது கமென்ட் தேவையற்றது என்பது எனது தாழ்மையான கருத்து. நான் சிலமுறை வளைகுடா சென்று இருக்கிரேன் அங்கு உள்ள நமது சகோதரர்கள் தங்களின் வாழ்கையின் அணைத்து வசந்தத்தையும் இழந்த பின்னரும், வாழ் நாள் முழுவதும் உழைத்து பிள்ளைக்கு திருமணமோ ஒரு வீடோ கட்டுகிறார்கள் அதற்கு தண்ணி கரென்ட் என்று ஊழல் செய்வோரின் மேல் அவர்களுக்கு நம்மை விட அதிகமாக கோபம் இருப்பது நியாயம் தானே? ஊழலற்ற நகராட்சி வர வேண்டும் என்பதில் நம்மை விட அதிக அக்கறை கொண்டவர்கள் நமது வளைகுடா சகோதரர்கள் என்பதை நீங்கள் உணர வேண்டும். நமது வளைகுடா சகோதரர்களின் பனி நேரம் போக மீதி நேரத்தில் ஊரை பற்றியே சிந்திக்கிறார்கள், அவர்களின் ஊரின் மேல் கொண்டுள்ள அக்கறை, ஒற்றுமை நமக்கு ஒரு பாடம், எனது கருத்து உங்களை புண் படுத்தி இருந்தால் நான் அதற்காக வருந்துகிறேன் உங்களை புண் படுத்துவது எனது நோக்கம் அல்ல, ஒரு நியாயமான கேள்வியை விதண்டாவாதம் என்று ஒதுக்குவது சரியல்ல என்றே எழுதினேன்.

முத்து அகமது காகா நியாயமான கேள்வியை வைத்தார் அதற்கான பதிலை (அணைத்து சங்கங்களுக்கும் புது அமைப்பு உருவாக்கம் பற்றி குறிப்பிட்டு அவர்களின் ஒப்புதலின் பேரில் தொடங்கப்பட்டது என்று இறைவன் சாட்சியாக சொல்லி உள்ளீர்கள் இனி சந்தேகத்திற்கு இடம் இல்லை என்று கருதுகிறேன் ) பாராட்டுக்கள் அல்லா உங்களது பயணத்தை வெற்றியாகி தர போதுமானவன்.

உங்கள் அமைப்பின் அணைத்து மக்கள் நல தொண்டுகள் சிறக்க வேண்டும் என்று வல்ல இறைவனை வேண்டுகிறேன்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
33. திசை மாறும் கப்பல்!
posted by muthu ahamed (dubai) [27 August 2011]
IP: 92.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 7354

சகோதரர்கள் செய்யத் அஹமத் HK ,சட்னி மீரான் பாய், தம்பி ஜைனுல் ஆப்தீன்,நண்பர் சாஹுல்ஹஅமீத் கவனிக்கவும். அஸ்ஸலாமுஅலைக்கும். எல்லோரும் ஒரு விஷயத்தை தயவுசெய்து சரியாகப் புரிந்து கொள்ள வேண்டும். சங்கங்களின் அதிகாரபூர்வமான அனுமதியுடன் இயக்கம் ஆரம்பிக்கப்பட்டதா என்ற எனது கேள்விக்கு முறையான பதில் வேண்டும்.

காக்கும் கரங்களின் நகர்ணலப் பணியிலோ,அந்த தம்பிமார்களின் உழைப்பையோ,மரம் நடுதல்,ரத்த தானம் இன்னும் அவர்கள் தங்கள் உடலை வருத்தி செய்கின்ற சமூக பணிகளை கொச்சைப்படுத்தும் அளவுக்கு நான் இல்லை. அதற்காக அவர்களை வாழ்த்துகிறேன். ஆனால் இப்போது நம் முன் உள்ள சப்ஜக்ட் அது இல்லை.

சட்னி மீரான் காக்காவின் முதல் பதிப்பை படிக்கவும். நாங்கள் எண்கள் கருத்துக்களை சொன்னோம். இன்னும் கூட்டத்திற்கு வராத மற்றவர்களையும் அழைத்து ஆலோசித்து ஒரு முடிவெடுத்து வேண்டுமானால் இயக்கம் ஆரம்பிக்கலாம் என்றுதான் எழுதி இருந்தர். நானும் ஊரில் உள்ள பல்வேறு சங்கங்களில் பொறுப்பில் இருக்கும் நண்பர்களை கேட்ட போது அவர்களும் இதைதான் சொன்னார்கள்.

இப்போது இத்தனை சங்கத்தையும் காக்கும் கரங்கள் நோன்புதிறக்க அல்லது கலந்துபேச அழைத்ததையோ,ஊருக்கு நல்லது நடக்க வேண்டும் என்ற அவர்களின் என்னத்தையோ,அவர்களின் நல்லமுரெயில் செய்த கூட்டத்தையோ குறை சொல்லவே இல்லை. இத்தனை சங்க உறுப்பினர்களும் கலந்து கொண்டதை மறுக்க வில்லை. எல்லோரையும் கலந்து ஆலோசித்து விரைவில் நல்ல ஒரு முடிவு காணலாம் என்று நிறைவு செய்த ஒரு கூட்டத்தில் கலந்து கொண்ட அத்தனை சங்கமும் அதிகாரபூர்வமாக இணைந்து செயலாற்ற முடிவு செய்து இயக்கம் கண்டதுபோல படிப்பவர்க்கு தோற்றம் ஏற்படுத்தும் ஒரு செய்தியை, வெறும் ஏற்பாடுதான் செய்தோம் என்று சொல்லும் காக்கும் கரங்கள் வெப்சைட்டில் செய்தியாக தந்தது ஏன்? மெகா ஆரம்பிக்கப்பட்ட ஓரிருநாட்களில் அவசரம் அவசரமாக தரப்பட்ட இந்த செய்தியின் பின்னணி என்ன? இந்த கேள்விக்கு இந்த நிமிஷம் வரை பதில் சொல்லாமல், என்னை சமூக நலப்பணிகளுக்கு எதிரானவனாக கருத வேண்டாம்.

செய்யத் அஹமத் காக்கா அவர்கள் எழுதுனது போல பல முறை அரசியல்வாதி மற்றும் பணக்காரர்கள், தகுதி இல்லாதவர்களால் ஏமாற்றப்பட்ட நமது ஊர் இந்த முறையும் ஏமாறக்கூடாது என்ற வெறிதான். நான் இத்தோடு நிறுத்திக்கொள்கிறேன். இன்ஷாஅல்லாஹ்,உண்மைகள் வெல்லும்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
34. Re:சமுதாய அமைப்புகளின் கூட்ட...
posted by SAHUL HAMEED MMS (KAYALPATNAM) [27 August 2011]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 7371

அன்பு முத்து அஹ்மத் காக்க அவர்களின் கனிவான கவனத்திற்க்கு...... உங்கள் கேள்விகளுக்கு நான் அல்லாஹ்வை முன் நிறுத்தி பதில் சொல்லிவிட்டேன்.....

நீங்கள் தொடர்ந்து தேவை இல்லாத பிரச்சனைகளை உருவாக்க தோன்றுவது போல் தெரிகின்றது...... நாங்கள் அல்லாஹ்வை தவிர யாருக்கும் அடிமைகளும் இல்லை..... நாங்கள் யாரிடமும் கைகட்டி நிக்கவும் தேவை இல்லை... என்பதை நீங்கள் முதலில் புரிந்து கொள்ளவும்

முத்து அஹ்மத் காக்க அவர்களே நமதூரில் நகர்மன்றதை நல்ல மன்றமாக உருவாக்குவதற்கு நான் மூன்று மதங்கள் முன்னராக சமுதாய பணிகளை நமதூரில் முன் நின்று செய்யும் அன்பு நண்பர்கள் தர்வேஷ் காக்க அவர்களிடமும் , SK SALIH அவர்களிடமும் , KOOSE சாகுல் ஹமீது அவர்களிடமும், KAYALPATNAM .COM MS . SALIH அவர்களிடமும் மேலும் சமுதாய பணிகள் செய்யும் பல அமைப்புகளிடமும் தொடர்ந்து பேசி வந்து கொண்டு இருந்தேன் என்பது எல்லோருக்கும் தெரிந்த செய்தி என்றல்லும் உங்களை போன்ற தெரியாத நபர்களுகாக பதிவு செய்ய விரும்புகின்றேன். அன்பு காக்க அவர்களே.... நான் சிறு வயது முதல் சமுதாய பணிகளில் இணைந்து என்னால் முடிந்த சேவைகள் ஆற்றி வருகின்றேன்.......... நீங்கள் யார் என்று எனக்கு தெரியவில்லை....

உங்களுக்கு எந்த விபரம் வேண்டும் என்றல் என்னை +919884145525 தொடர்புகொள்ளுங்கள் ....

எங்களை போன்ற இளம் இரத்தங்களை தேவை இல்லாத வார்த்தைகளில் கொச்சை படுத்த வேண்டாம் என்று அன்புடன் வேண்டுகிறேன்

நான் வாழ்வதற்க்கு போதிய வசதிகள் இருக்கின்றது அல்ஹம்துலில்லாஹ் .... எவனுக்கும் எந்த தருணத்திலும் எந்த சமயத்திலும் கை கட்டியோ , ஜால்ரா தட்டியோ வாழுகின்ற அளவில் எங்களை எங்கள் தாய் தந்தையர்கள் வளர்க்க வில்லை நான் செய்கின்ற பனி அல்லாஹ்விற்காக மட்டுமே.... வஸ்ஸலாம்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
35. Re:சமுதாய அமைப்புகளின் கூட்ட...
posted by AbulKader ThaikaSahib MSS (Riyad, KSA) [28 August 2011]
IP: 176.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 7374

சகோ. முத்து அஹமது அவர்களே, தங்குடைய கேள்வி "சங்கங்களின் அதிகாரபூர்வமான அனுமதியுடன் இயக்கம் ஆரம்பிக்கப்பட்டதா என்ற எனது கேள்விக்கு முறையான பதில் வேண்டும்." இதற்க்கு காக்கும் கரங்கள் தலைவர் சகோ. ஜைனுலாப்தீன் அவர்கள் பதில் கூறியுள்ளார்.

மேலும் தங்களுக்கு விளக்கம் வேண்டும் என்றால், இந்த கூட்டத்தில் கலந்துகொண்டு கருத்து கூறிய அனைத்து அமைப்புகளின் நிர்வாகிகள்/உறுப்பினர்களிடம் கேட்டு தெரிந்துகொள்ளுங்களேன்?

"கூட்டத்தினை ஏற்பாடு செய்தவர்களால் - கூட்டத்தில் பேசப்படாதது செய்தியாக தரப்பட்டிருந்தால் - கூட்டத்தில் கலந்துக்கொண்டு, கையெழுத்திட்டோர் மறுப்புக்கூறும் பட்சத்தில் அதன் விளக்கமும் வெளியிடப்படும்." என்று அட்மின் அவர்கள் 21 வது கம்மண்டில் விளக்கயுள்ளர்கள்.பின்னர் ஏன் அதே கேள்வியை திரும்ப திரும்ப கேட்டுகொண்டிருகின்றீர்கள்?

தங்களுக்கு விளக்கம் வேண்டுமா? காக்கும் கரங்கள் கூறிய விளக்கத்தில் திருப்தி இல்லையா? அப்படியென்றால் கூட்டத்தில் கலந்து கொண்ட,

=> அல்-அமீன் இளைஞர் நற்பணி மன்றம் சார்பாக ஜனாப் என்.டி.சலாஹூத்தீன்
=> காயிதேமில்லத் இளைஞர் சமூக அமைப்பு சார்பாக ஜனாப் கே.எம்.டி.சுலைமான்
=> சமூக ஆர்வலர் ஜனாப் அஹமது ஹூஸைன்
=> ஐக்கிய விளையாட்டுச் சங்கம் சார்பாக ஜனாப் ஹாரூன்
=> காயல்பட்டினம் அறக்கட்டளை சார்பாக ஜனாப் ஆதம் சுல்தான்
=> இளைஞர் ஐக்கிய முன்னணி சார்பில் ஜனாப் மொஹூதும்
=> ஐக்கிய விளையாட்டுச் சங்கத்தின் ஜனாப் பல்லாக் அப்துல் காதர் நெய்னா
=> ரெட் ஸ்டார் சங்கம் சார்பாக ஜனாப் மரைக்கார்:
=> சமூக ஆர்வலர் ஜனாப் வாவு இஸ்ஹாக்

இவர்களிடம் தொடர்பு கொண்டு தாங்கள் விளக்கம் பெற்று கொள்ளலாமே? இதன் மூலம் நாங்களும் உண்மை நிலையை அறிந்து கொள்ளலாமே?

மேலே குறிப்பிட்டுள்ள, பல்வேறு அமைப்புகளின் உறுப்பினர்கள்/நிர்வாகிகள் யாரும் இதுவரை இந்த செய்திக்கு மறுப்பு கூறவில்லையே? கூட்டத்தில் கலந்துகொண்ட அமைப்புகள் ஒன்றும் "LETTER PAD " அமைப்புகள் இல்லை, காயல் நகரில் பல ஆண்டு காலமாக சமூக சேவை செய்து வரும் சமூக அமைப்புகள்.

மேலும் சகோ. சாகுல் ஹமீத் அவர்கள் தனது கைபேசி இலக்கத்தை தந்துள்ளார், மேலும் விபரம் வேண்டுமென்றால் அவரை தொடர்பு கொள்ளுங்கள்.

ஊழலற்ற நகராட்சி அமைய நாம் அனைவரும் ஒற்றுமையுடன் செயல்படுவோம்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
36. பொறுமையாளர்களுடன் அல்லாஹ் இருக்கின்றான்
posted by சட்னி .செய்யது மீரான் (காயல்பட்டினம் ) [28 August 2011]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 7398

அஸ்ஸலாமு அலைக்கும்.

அன்பு முத்து அஹ்மத் காக்கா அவர்களுக்கு என் மனப்பூர்வமான வேண்டுகோள். நான் 19 -08 -2011 இதில் எனது கருத்தை உள்ளதை உள்ளபடி அல்லாஹ்வை முன்னிறுத்தி பதிவு செய்து இருந்தேன்.

இதில் நீங்கள் கலந்து கொள்ளவில்லை என்றாலும் இந் நிகழ்வில் கலந்து கொண்ட உங்கள் நண்பர் ஒருவர் சொன்னதாக சொல்லி காக்கும் கரங்கள் அமைப்பை குறை கண்டு கருத்து பதிவு செய்து இருந்திர்கள். மிகவும் வேதனை அளிக்க கூடியதாக உள்ளது. அதற்க்கு அந்த அமைப்பின் தலைவர், தம்பி ஜைனுல் ஆப்தீன்.மற்றும் தம்பி ஷாகுல் ஹமீது வல்லோன் அல்லாஹ்விற்கும், நம் உயிரினும் மேலான உத்தம நபிகள் நாயகம் அவர்களுக்கும் உகந்த வகையில்அழகான முறையில் மிகவும் விளக்கமாக, விபரமாக எடுத்து கூறியும் இருந்தார். வரவேற்கவேண்டியது.

மேலும் சமுக ஆர்வலரும், சமுதாய நல விரும்பியுமான நோனா.மஹ்மூத் மாமா மற்றும் நம் காயல் சொந்தங்களும் பதிவு செய்துள்ளார்கள். பின்னரும் நீங்கள் அதனை சாடுவதோடு மட்டும் அல்லாது மக்கள் திலகம் MGR இன் எங்க வீட்டு பிள்ளை பட பாட்டை போட்டு மிரட்டும் தொனியில் பதிவு செய்து உள்ளீர்கள்.வருத்தத்திற்கு உரியது.

அந்த கூட்டத்தில் கலந்து கொண்ட எந்த நல அமைப்பை சார்ந்த நாங்கள் யாரும் அடிமை சாசனத்தில் அடிமை என கையெழுத்து போட்டு கொடுக்கவில்லை, அவர்களும் அதை கேட்கவில்லை. இதுவே உண்மை . எங்களின் நோக்கம் எல்லாம் எல்லோரையும் ஒரு குடையின் கீழ் கொண்டு வருவதே..... தயவு செய்து இது போன்ற செயலில் நாம் யாரவது ஈடுபட்டால் நம் ஒற்றுமைக்கும் ,ஊழல் அற்ற நகர் மன்றம் அமைய வேண்டும் என்று உங்களை போன்ற நல்ல உள்ளங்களின் எண்ணத்தில் சோர்வும், பின்னடைவூம்,பிரிவினையும் ஏற்பட வாய்புள்ளது. அதற்க்கு நாம் இடம் கொடுத்து விட வேண்டாம். இதில் எனது பெயர் குறிப்பிட்டு நீங்கள் சொல்லி இருப்பதால் எனக்கு பிரியமான நபர் ஆக நீங்கள் இருக்கலாம் என்ற நல்ல நோக்கத்தில் வேண்டுகின்றேன் .

நோன்பு திறப்பு ஏற்பாடும் செய்து இருந்தார்கள். ஊரில் உள்ள பெரும்பான்மை நல அமைப்புகள் நண்பர்கள் வந்தும் நல்லதோர் கருத்துகளை பரிமாற்றம் செய்தோம். இதற்கான எல்லா வித ஏற்பாடுகளும் காக்கும் கரங்கள் நற்பணி மன்றம் நண்பர்கள் நல்ல முறையில் செய்து உபசரித்தார்கள். கோடானு கோடி நன்றிகள். ஒற்றுமையின் கயிற்றை பற்றி பிடிப்போம் வல்ல அல்லாஹ்வின் நல்உதவியால் வெற்றி பெறுவோம்.ஆமீன்

பகைதனை போக்கி, பலம்தனை பெருக்கி ஒற்றுமையுடன் நடை போட்டு வெல்வோம். பொறுமை காத்து இருங்கள் நீங்களும்,நாங்களும் நினைக்கும் நல்லதோர் செய்தி இன்று,நாளை அல்லது இந்த வார மட்டில் தெரிய வரலாம். இன்ஷா அல்லாஹ்.

பொறுமையாளர்களுடன் அல்லாஹ் இருக்கின்றான் (அருள்மறை திருவசனம்) உங்கள் அனைவருக்கும் இனிய நோன்பு பெருநாள் ,ஈகை திருநாள் நல்வாழ்த்துக்கள் .

நண்பர்களே நல்லதோர் நகர் மன்றம் காண நாடும் உங்களில் ஒருவன் .

சட்னி .செய்யது மீரான்
காயல்பட்டினம்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
37. Re:சமுதாய அமைப்புகளின் கூட்ட...
posted by Omer Anas VMA Qatar (Qatar) [29 August 2011]
IP: 78.*.*.* Qatar | Comment Reference Number: 7402

அஸ்ஸலாமு அலைக்கும்.காக்கும் கரங்கள் மூலம் நடைபெற்ற கூட்டத்தில் அனைவர்களும் அருமையாக‌ தங்களின் கருத்தினை சொல்லி இருக்கின்றார்கள்.பாராட்டுக்கள்.நாம் விழித்துக் கொள்ள வேண்டிய நேரமிது.நாம் நல்லவர்கள் என கை காட்டி விரல் ரேகை பதித்து அனுப்பியவர்களின்,லட்ச்சனங்களைத்தான்.பார்த்துக் கொண்டும்,அனுபவித்துக் கொண்டும் இருக்கிறோமே!

மீண்டும் நாம் நினைத்தோரை விட்டு விட்டு,நம் சங்கத்தில் இருப்போரையும்,NSE.மாமா,துளிர் சேக்னா காக்கா,தம்பி தர்வேக்ஷ்.இதுபோன்று நல் எண்ணம் கொண்டோரையும் போட்டி இன்றி தேர்ந்தெடுங்கள்.இவர்கள் எல்லாம் குறிப்பிட்ட சங்கம் மூலம் செயலபடும் போது மக்கள் அணுகவும்,தட்டிக்கேட்காமலேயே செயல் படவும் செய்வார்கள்.

NSE மாமா கருத்தில் சொன்னது போல் தனித்தனியாக இயங்காமல்,ஒன்றினைவோம்!வென்று மட்டும் காட்டாமல் செயல் படுத்தி நம்தூருக்கு பெருமை சேர்ப்போம்.ஆமின்!!

எங்கள் குடும்ப வோட்டு இத்தனை உங்களுக்குண்டு என்பதனை விட நமதூர் மொத்த வோட்டும் நமக்குண்டு என்று பெருமை படுவோம்!ஒன்று படுவோம்.வென்று காட்டுவோம்!! இப்பவே நம் காதில் ஒலிக்கிறது....போடுங்கம்மா வோட்டு நம்ம ஜமாத்த பார்த்து!!!ஹா..போடுங்க காக்கா வோட்டு நம்ம சங்க பிள்ளைகளை பார்த்து..நமது சின்னம்.ஒற்றுமை!!நாம் கலைவோம், வேற்றுமையை!! வென்றெடுப்போம்,,உறிமைகளை!!தோர்கடிப்போம்,கள்ளக் கயவர்களை!!!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>

முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்

பிற செய்திகள்

காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
FaamsCathedral Road LKS Gold Paradise
Fathima JewellersAKM Jewellers

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved