Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
2:17:26 PM
வியாழன் | 25 ஏப்ரல் 2024 | துல்ஹஜ் 1729, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
04:5012:2115:3118:3219:44
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:03Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்19:38
மறைவு18:27மறைவு06:46
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
04:5105:1705:42
உச்சி
12:15
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:4819:1419:39
Go to Homepage
செய்திகள்
Previous News ItemNext News Item
செய்தி எண் (ID #) 8953
#KOTW8953
Increase Font Size Decrease Font Size
சனி, ஆகஸ்ட் 18, 2012
நோன்புப் பெருநாள் 1433: ஆக.19 - ஞாயிற்றுக்கிழமை 30ஆவது நோன்பு! மஹ்ழரா - ஜாவியா உலமாக்கள் கூட்டுக் கூட்டத்தில் அறிவிப்பு!!
செய்திஎஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்)
இந்த பக்கம் 3151 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (3) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 5)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}

காயல்பட்டினத்தில் ஷவ்வால் மாத தலைப்பிறை காணப்படாததாலும், பிற பகுதிகளிலிருந்தும் தலைப்பிறை காணப்பட்ட தகவல் கிடைக்கப் பெறாததாலும் நாளை - ஆகஸ்ட் 19ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை ரமழான் 30ஆம் நாள் என, காயல்பட்டினம் மஹ்ழரா - ஜாவியா அரபிக்கல்லூரிகளின் உலமாக்கள் கூட்டுக் கலந்தாலோசனைக் கூட்டத்தில் அறிவிக்கப்பட்டுள்ளது. விபரம் பின்வருமாறு:-

இன்று ரமழான் 29ஆம் நாள் நிறைவுற்றுள்ளதையடுத்து, நோன்புப் பெருநாள் குறித்து முடிவு செய்வதற்கான - காயல்பட்டினம் மஹ்ழரா - ஜாவியா அரபிக்கல்லூரிகளின் உலமாக்கள் (மார்க்க அறிஞர்கள்) கலந்தாலோசனைக் கூட்டம், இன்று (18.08.2012) 19.00 மணியளவில் காயல்பட்டினம் மஹ்ழரா அரபிக்கல்லூரியில், தமிழ்நாடு மாநில ஜமாஅத்துல் உலமா சபையின் தூத்துக்குடி மாவட்ட துணைத்தலைவரும், காயல்பட்டினம் முஹ்யித்தீன் பள்ளியின் இமாமுமான மவ்லவீ ஏ.கே.அபூ மன்ஸூர் மஹ்ழரீ தலைமையிலும்,

தூத்துக்குடி மாவட்ட காழீயும், காயல்பட்டினம் அல்ஜாமிஉல் கபீர் - பெரிய குத்பா பள்ளியின் இமாமும், மஹ்ழரா அரபிக்கல்லூரியின் துணை முதல்வருமான மவ்லவீ எஸ்.டி.அம்ஜத் அலீ மஹ்ழரீ ஃபைஜீ,

தமிழ்நாடு மாநில ஜமாஅத்துல் உலமா சபையின் தூத்துக்குடி மாவட்ட தலைவரும், அல்ஜாமிஉஸ் ஸகீர் - சிறிய குத்பா பள்ளியின் கத்தீபும், ஜாவியா அரபிக்கல்லூரியின் முதல்வருமான மவ்லவீ எஸ்.எம்.முஹம்மத் ஃபாரூக் அல்ஃபாஸீ,

காயல்பட்டினம் அல்ஜாமிஉல் கபீர் - பெரிய குத்பா பள்ளியின் கத்தீபும், முஅஸ்கர் மகளிர் அரபிக்கல்லூரிகளின் நிறுவனருமான மவ்லவீ ஹாஃபிழ் எச்.ஏ.அஹ்மத் அப்துல் காதிர் மஹ்ழரீ ஆகியோர் முன்னிலையிலும் நடைபெற்றது.





காயல்பட்டினத்திலிருந்தும், இதர பகுதிகளிலிருந்தும் ஷவ்வால் தலைப்பிறை பார்க்கப்பட்ட தகவல்கள் இக்கூட்டத்தில் எதிர்பார்க்கப்பட்டது. நீண்ட நேரமாகியும் இது குறித்து எந்தத் தகவலும் கிடைக்கப் பெறாததால், ஆகஸ்ட் 19ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமையன்று (நாளை) ரமழான் 30ஆவது நோன்பு நோற்கப்பட வேண்டும் என்று கூட்டத்தில் அறிவிக்கப்பட்டது. கூட்டத்தின் நிறைவில் வெளியிடப்பட்ட அதிகாரப்பூர்வ அறிவிப்பு பின்வருமாறு:-



இக்கூட்டத்தில், காயல்பட்டினம் மஹ்ழரா அரபிக்கல்லூரியின் பேராசிரியர் மவ்லவீ ஹாஃபிழ் எஸ்.செய்யித் அப்துர்ரஹ்மான் தங்ஙள் அஹ்ஸனீ ஃபாழில் பாக்கவீ, ஜாவியா அரபிக்கல்லூரியின் துணை முதல்வரும் - மகுதூம் ஜும்ஆ மஸ்ஜிதின் கத்தீபும் - அரூஸுல் ஜன்னஹ் மகளிர் அரபிக் கல்லூரியின் பேராசிரயருமான மவ்லவீ ஹாஃபிழ் எஸ்.கே.எம்.காஜா முஹ்யித்தீன் காஷிஃபீ, ஹாமிதிய்யா மார்க்கக் கல்வி நிறுவனத்தின் பேராசிரியர் மவ்லவீ ஹாஃபிழ் சாவன்னா பாதுல் அஸ்ஹப் ஃபாஸீ, மவ்லவீ ஹாஃபிழ் கத்தீப் கே.ஏ.அஹ்மத் அப்துல் காதிர் மஹ்ழரீ, மவ்லவீ ஹாஃபிழ் எம்.எம்.சுலைமான் லெப்பை மஹ்ழரீ, மவ்லவீ ஹாஃபிழ் உமர் ஃபாரூக் அஃழம் மஹ்ழரீ, மவ்லவீ ஹாஃபிழ் எஸ்.ஏ.கே.முஹம்மத் முஹ்யித்தீன் மஹ்ழரீ, ஹாஜியப்பா தைக்கா பள்ளியின் இமாம் மவ்லவீ ஹாஃபிழ் முஹம்மத் அலீ மஹ்ழரீ, ஜாவியா அரபிக் கல்லூரியின் பேராசிரியர் மவ்லவீ முஹம்மத் முஹ்யித்தீன், மவ்லவீ அப்துல் வதூத் ஃபாஸீ, மவ்லவீ ஹாஃபிழ் கே.ஏ.தாஜுத்தீன் மஸ்லஹீ, மவ்லவீ ஹாஃபிழ் நோனா காஜா முஈனுத்தீன் ஜிஷ்தீ மஸ்லஹீ உள்ளிட்ட - காயல்பட்டினம் நகரின் பல்வேறு உலமாக்களும், ஹாஜி ஸதக்கத்துல்லாஹ் (ச.த.), ஹாஜி எம்.ஏ.எஸ்.அபூ தல்ஹா, ஹாஜி பிரபுத்தம்பி உள்ளிட்ட பிரமுர்களும் கலந்துகொண்டனர்.



நோன்புப் பெருநாள் குறித்த அறிவிப்பை அறிந்துகொள்வதற்காக, இன்றிரவு மஃரிப் தொழுகை நிறைவுற்றவுடன், நகர பொதுமக்கள், உலமாக்கள் கலந்தாலோசனைக் கூட்டம் நடைபெறும் மஹ்ழரா அரபிக்கல்லூரி வளாகத்தில் திரண்டிருந்தனர்.





அதிகாரப்பூர்வ அறிவிப்பு கிடைக்கப்பெற்றதையடுத்து அவர்கள் தமக்கறிமுகமானோருக்கு உடனடியாக தகவல்களைத் தெரிவித்தவாறு கலைந்து சென்றனர்.

ஆகஸ்ட் 19ஆம் தேதி - ஞாயிற்றுக்கிழமை ரமழான் 30 நாட்கள் பூர்த்தியாவதையடுத்து, 20.08.2012 திங்கட்கிழமை நோன்புப் பெருநாள் கொண்டாடப்படும் என்று கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.


Previous News ItemNext News Item
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. Re:..ஒற்றுமை .
posted by mackie noohuthambi (kayalpatnam) [18 August 2012]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 21310

ஒரு முஸ்லிம் பொய் சொல்லலாமா, சொல்லவே கூடாது. ஆனால் இருசாராருக்கிடையே ஒற்றுமை ஏற்படுத்த பொய் சொல்லலாம். ஒரு மூமின் பொறாமை படலாமா கூடவே கூடாது. ஆனால் அவனைவிட அறிவில் கூட இருக்க வேண்டும் அவனை விட பொருளில் கூட இருக்க வேண்டும் ஏழை எளியவர்களுக்கு அல்லாஹ்வுடைய பாதையில் செலவு செய்ய இப்படி பொறாமை படலாம். இஉதிகாப் இருக்கும்போது வெளியே செல்லலாமா கூடவே கூடாது ஆனால் இருவருக்கிடையில் சமாதனம் செய்துவைக்க இஉதிகாப் முறித்துவிட்டு போனால் 10 வருடம் .. இஉதிகாப் இருந்த நன்மை கிடைக்கும் ... இப்படி பல நபி மொழிகள்.

சரியோ தப்போ உம்மத்தின் ஒற்றுமைக்காக நோன்பை 30 ஆக பிடிக்கலாமா அதுவும் பிறை கண்ணுக்கு தென்படாத பட்சத்தில்?அதுவும் மேன்மைக்குரிய உலமாக்கள் ஆய்ந்து அறிந்து அறிவிக்கும்போது அவர்கள் கருத்துக்கு மதிப்பளித்து அதன் படி நடப்பது நமது கடமை. உம்மத்தின் ஒற்றுமையே முக்கியம்.

லைலதுல் கதர் இரவு எது என்று அறிவிக்க வந்த நபிக்கு அது ஏன் மறக்கடிக்கப்பட்டது என்று அவர்களே சொல்கிறார்கள். உங்களில் ஒருசாரார் இன்னொரு சாராரோடு தர்க்கம் செய்து கொண்டிருந்தீர்கள். சஹாபாக்கள் உலக விஷயம் பற்றியா தர்க்கம் செய்திருப்பார்கள். மார்க்க விஷயமாகத்தான் தர்க்கம் செய்திருப்பார்கள் அதுவே நபிக்கு பிடிக்கவில்லை, அல்லாஹ்வுக்கு பிடிக்கவில்லை. இதை உணர்ந்து நாம் நாளை இரவு பெருநாள் இரவுக்கான அமல்களை தயார் செய்வோம். அல்லாஹ் அவரவர்கள் நோன்புகளை நல அமல்களை கபூல் செய்வானாக. வீணான தர்கங்களில் யாரும் ஈடு பட்டு நமது அமல்களை வீணாக்கி விடவேண்டாம். அல்லாஹ் எல்லோரையும் பாது காப்பானாக.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
2. Re:...
posted by K.D.N.MOHAMED LEBBAI (AL-KHOBAR) [19 August 2012]
IP: 37.*.*.* | Comment Reference Number: 21327

அஸ்ஸலாமு அலைக்கும்

'''''' நம் இஸ்லாமிய மக்கள் அனைவர்களுக்கும் எங்களின் இனிய நோன்பு பெருநாள் நல் வாழ்த்துக்கள் உரித்தகுக ''''''''

நாங்கள் மிக சிறப்பாக இன்று ( 19 / 08 / 2012 SUNDAY ) சவுதி அரேபியாவில் நோன்பு பெருநாள் கொண்டாடினோம். நாங்கள் சவுதி அரேபியாவில் சிறப்பாக 30 நோன்பு பிடித்தோம்.

நம் காயலர்கள் எல்லாம் ஒன்றாக சவுதி அல் - ஹோபரில் தவா சென்டரில் சிறப்பான முறையில் நோன்பு பெருநாள் தொழுகையை காலை 7 மணிக்கு நிறைவேற்றினோம். அல்ஹம்துலில்லாஹ் .........

இந்த புனிதமான நல் நாளில் நாம் யாவர்களும் ஒற்றுமையுடன் / ஒருவருக்கு ஒருவர் பாசத்துடனும் வாழ்ந்து & நம் மனைவி & மக்களுகாகவும் / நம் தாய் , தந்தை , நம் சகோதர , சகோதரிகளுக்காகவும் / நம் சொந்தம் & நம் நண்பர்களுககவும் ...... நாம் துவா செய்து வருவோமாக ஆமீன்......

இன்ஷா அல்லாஹ்......இது போன்று நம் ஊர் மக்கள் யாவர்களும் மிகவும் சிறப்பான முறையில் நாளை ( 20 / 08 / 2012-MONDAY ) நோன்பு பெருநாள் கொண்டாடி நம் இஸ்லாமிய மக்கள் யாவர்கள் ஹக்கிலும் + எங்கள் அனைவர்கள் ஹக்கிலும் துவா செய்யும் படி கேட்டு கொள்கிறோம்.

வஸ்ஸலாம்
K.D.N.MOHAMED LEBBAI
AL-KHOBAR
SAUDI ARABIA


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
3. Re:.உலமாக்கள் அவசியம் செய்ய வேண்டிகொள்பவை
posted by T,M,RAHMATHHULLAH (74)yr phn 280852 (KAYALPATNAM 04639 280852) [19 August 2012]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 21329

அஸ்ஸலாமு அலைக்கும்!

இப்ப வுள்ள விஞஜானத்தின்படியும் மார்க்கங்களின்படியும் மக்களுக்கு ஓரளவாவது யு கேஜி தரத்திலாவது பிறை பார்க்கும் முறை களின் பிக்ஹ சட்டங்களை பொது மக்களுக்கு பாடம் நடத்த வேண்டும் .அதனை . ரமழான் ,ஷவ்வால். , ,ஹஜ் தலைப்பபிறைக்கு ஒரு வாரங்களுக்கு முன்பாக பல பள்ளி களிலும் நான்கைந்து முறைகளாவது,கண்டிப்பாக தாலிம் முறை போல் பாடம் நடத்தினால் இன்ஷா அல்லாஹ் மக்களுக்கு உண்மை விவரங்கள் தெளிவாவதோடு ஊரில் ஒரே பெருநாள் ஒரே தலை நோன்பு ஏற்படும் இது நிச்சயம் .இன்ஷா அல்லாஹ்.. அனுபவம் கண்ட உண்மை. News I D 8953 of 18-8-2012 க்கான காமன்ஸ்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>

முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்

பிற செய்திகள்

காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
Cathedral Road LKS Gold ParadiseFathima Jewellers
AKM JewellersFaams

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved