Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
12:24:15 PM
வெள்ளி | 29 மார்ச் 2024 | துல்ஹஜ் 1702, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
05:0812:3015:4118:3419:42
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:16Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்21:42
மறைவு18:28மறைவு08:48
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
05:0705:3105:55
உச்சி
12:22
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:4919:1319:37
Go to Homepage
செய்திகள்
Previous News ItemNext News Item
செய்தி எண் (ID #) 9514
#KOTW9514
Increase Font Size Decrease Font Size
செவ்வாய், அக்டோபர் 30, 2012
ஹஜ் பெருநாள் 1433: கடற்கரையில் முன்னனுமதியின்றி நிறுவப்பட்ட பொழுதுபோக்குகள் மீது நகராட்சி நடவடிக்கை!
செய்திஎஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்)
இந்த பக்கம் 3311 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (6) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 0)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}

நடப்பாண்டு ஹஜ் பெருநாளை முன்னிட்டு காயல்பட்டினம் கடற்கரையில் - 27.10.2012 சனிக்கிழமை மாலையில் தின்பண்டக் கடைகள், ராட்சத பலூன் உட்பட பல்வேறு கடைகள் அமைக்கப்பட்டிருந்தன. நகராட்சியின் முன்னனுமதி எதுவும் பெறப்படாமல் அக்கடைகள் அமைக்கப்பட்டிருந்தது.

அன்று இரவு 08.00 மணியளவில் ராட்சத பலூனுக்காக இயக்கப்பட்ட ஜெனரேட்டர் திடீரேன நிறுத்தப்பட்டது. அந்நேரத்தில் நகரில் மின் வினியோகமும் தடைபட்டிருந்ததால், ராட்சத பலூனைச் சுற்றி நின்ற ஆண்களும், பெண்களும் இருட்டில் தள்ளுமுள்ளுகளைச் சந்தித்தனர்.

இதுகுறித்து நகராட்சி நிர்வாகத்திடம் பொதுமக்கள் முறையிட்டதையடுத்து, அவ்விடம் வந்த நகராட்சி அதிகாரிகள், அன்றுடன் கடையை அகற்றிடுமாறு அக்கடைகளின் உரிமையாளர்களுக்கு எச்சரிக்கை விடுத்துச் சென்றனர்.

எனினும், முன்னனுமதி பெறாத அக்கடைகள் மறுநாள் - 28.10.2012 அன்றும் அங்கு அமைக்கப்பட்டிருந்தது. காசு கொடுத்து - பொருட்களின் மீது வளையத்தை வீசி விளையாடும் சூதாட்டக் கடையை ஆண் - பெண் வேறுபாடின்றி பொதுமக்கள் மொய்க்கத் துவங்கினர்.



அதனையடுத்து அவ்விடம் வந்த சமூக ஆர்வலர்கள் சிலர், காயல்பட்டினத்தின் கலாச்சாரத்திற்கு எதிரான - பொதுமக்களுக்கு எந்தப் பயனையும் தராத அவ்விளையாட்டை உடனடியாக நிறுத்தி, கடையை அகற்றுமாறு வலியுறுத்திக் கூறினர். அதனையடுத்து, சில மணித்துளிகளில் அக்கடை மூடப்பட்டது.

கடற்கரையில் முன்னனுமதி பெறாமல் மீண்டும் கடைகள் அமைக்கப்பட்டிருந்ததைக் கேள்வியுற்று, காயல்பட்டினம் நகர்மன்றத் தலைவர் ஐ.ஆபிதா ஷேக், நகராட்சி சுகாதார ஆணையர் அஷோக் குமார், காயல்பட்டினம் நகர்மன்ற 07ஆவது வார்டு உறுப்பினர் ஜெ.அந்தோணி ஆகியோர் கடற்கரைக்கு விரைந்து வந்தனர்.



அங்கு, தின்பண்டக் கடைக்காரர்களிடம் பேசிய நகர்மன்றத் தலைவர், பிழைப்புக்காக இதுபோன்ற வணிகங்களைச் செய்வதில் தவறில்லை என்றும், அதே நேரத்தில் அவர்களுக்காக ஒதுக்கப்பட்ட இடங்களில் அமர்ந்து பொருட்களை விற்றால், கடற்கரையை சுத்தமாக வைத்துக்கொள்ள இயலும் என்றும் தெரிவித்தார்.



கடற்கரையில் சிறுவணிகர்களுக்காக பாதுகாப்பான கடைகள் கட்டித்தர நகராட்சி நிர்வாகம் முயற்சித்து வருவதாகவும், அதுவரை கடற்கரை மணற்பரப்பை அசுத்தப்படுத்தாமல் - நகராட்சியின் முன்னனுமதி பெற்று பொருட்களை விற்குமாறும் கேட்டுக்கொண்டார்.

பின்னர், ராட்சத பலூன் உரிமையாளரிடம் பேசிய அவர், கடந்த நோன்புப் பெருநாளின்போதே - முன்னனுமதி பெறாமல் ராட்சத பலூன் நிறுவியதற்காக நகராட்சி நிர்வாகத்தால் எச்சரிக்கப்பட்ட நிலையிலும் மீண்டும் முன்னனுமதி பெறாமல் அமைத்தது தவறு என்றும், போதிய பாதுகாப்பு ஏற்பாடுகள் எதுவும் செய்யப்படாத நிலையில் அமைக்கப்பட்டுள்ள இதுபோன்ற பொழுதுபோக்கு அம்சங்களால் பொதுமக்கள் - குறிப்பாக குழந்தைகளுக்கு பாதிப்பு ஏற்பட்டுவிடாதிருக்கும் பொருட்டு, அதனை உடனடியாக அகற்றிடுமாறும் கூறினார்.





அதுபோல, எடை நிர்ணயம் எதுவுமின்றி - பலவீனமான ராட்டினத்தில் சிறுவர் - பெரியோர் என அனைவரையும் ஏற்றி கட்டணம் வசூலித்துக்கொண்டிருந்ததையும், சுற்றி வேலி எதுவும் அமைக்காமல் நிறுவப்பட்டிருந்த குழந்தைகளுக்கான ராட்டினத்தையும் அவர் கடுமையாகக் கண்டித்துச் சென்றார்.











இந்நிலையில், 29.10.2012 திங்கட்கிழமையன்றும் (நேற்று) ராட்சத பலூன் - ராட்டினம் உள்ளிட்ட பொழுதுபோக்கு அம்சங்கள் அகற்றப்படாததைக் கண்ணுற்ற பொதுநல ஆர்வலர்கள் நகராட்சி நிர்வாகத்திடம் முறையிட்டனர். அதனையடுத்து, நகர்மன்றத் தலைவர் உத்தரவின்பேரில் உடனடியாக அவ்விடம் விரைந்து வந்த காயல்பட்டினம் நகராட்சி ஆணையர் எஸ்.பொன்வேல் ராஜ், உடனடியாக அக்கடைகளை அகற்றுமாறு கூறி, கடைகள் அகற்றப்பட்ட பின்னரே அவ்விடத்தை விட்டும் திரும்பிச் சென்றார்.





[செய்தியில் கூடுதல் படங்கள் இணைக்கப்பட்டுள்ளது @ 11:42 / 01.11.2012]


Previous News ItemNext News Item
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. தேவையான நடவடிக்கைகள்
posted by Salai Sheikh Saleem (Dubai) [30 October 2012]
IP: 217.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 23295

மிகவும் தேவையான தைரியமான நடவடிக்கைகள் துரித கதியில் எடுத்த நகராட்சி மன்ற தலைவிக்கும் மற்றும் உறுப்பினர்களுக்கும் பாராட்டுக்கள்.

ஏதோ ஒரு குக்கிராமத்தில் நடப்பதுபோல் எந்தவித முன்னனுமதியும் பெறாது மக்களின் பாதுகாப்பையும் மனதில் கொள்ளாது அதைவிட கலாசார நெறிமுறைகளுக்கு மாறாக சூது விளையாட்டுக்களை கேளிக்கையாக்கும் கேடுகேட்டவர்களை கடற்கரையை விட்டு விரட்டுவதோடு கடினமான அபராதத்தொகையும் வசூலித்திருக்க வேண்டும்.

ஏன் நம்மவர்கள் தங்களால் முடிந்த கேளிக்கை அம்சம் நிறைந்த விளையாட்டுக்களை அங்கே போட முன்வரவில்லை?

கடற்க்கரை பயனாளிகள் சங்கம் இருக்கத்தானே செய்கிறது? சென்ற பெருநாளிலும் இப்படித்தானே நடைபெற்றது ? இதை மனதில் வைத்து அவர்களே இந்த கேள்விகளை இந்த கொள்ளைக்காரர்கள் கடற்க்கரைக்குள் நுழையும் முன்பே கேட்டு விரட்டி இருக்க வேண்டாமா? அல்லது கடற்க்கரை கட்டுப்பாட்டில் இருக்கும் வார்டின் உறுப்பினரே இதை சரி செய்திருக்கலாமே ?

இல்லை, இதற்கும் சேர்மன் தானா ????


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
2. கண்டாலே சும்மா அதிருதுலே
posted by சாளை S.I.ஜியாவுத்தீன் (அல்கோபார்) [30 October 2012]
IP: 94.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 23299

துரித நடவடிக்கை எடுத்த நகராட்சி அதிகாரிகள், தலைவி அவர்கள் மற்றும் உறுப்பினர்(கள்) ஆகியோருக்கு நன்றிகள் பல.

* பொருட்களின் மீது வளையத்தை வீசி விளையாடும் சூதாட்டக் கடை - இங்கு தான் கூட்டம் அதிகம் உள்ளது.

எது தீங்கோ அங்கு தான் ஈர்ப்பு அதிகம் இருக்கும். இது தவறு, சூதாட்டம் என்று பலருக்கு தெரிவதில்லை. நம் திறமையினால் தான் பரிசு விழுகிறது என்று பதில் கூறுபவரும் உண்டு.

** இந்த வளைய விளையாட்டு என்றவுடன், என்னுடைய கல்லூரி நாட்கள் தான் நினைவுக்கு வருகின்றது. எங்கு பொருட்காட்சி, திருவிழா நடந்ததாலும் நாங்கள் அங்கு ஆஜர் ஆகிவிடுவோம்.

என் நண்பன் ஒருவன்(அறிவழகன்/படிப்போ சுத்தம்) . அவன் பத்து வளையம் வீசினால், நிச்சயம் 7 அல்லது 8 பரிசுகள் கிடைப்பது உறுதி. ஹாஸ்டலில் இருக்கும் நண்பர்கள் பலர் உபயோகிக்கும் சோப்பு டப்பா, டம்ளர், பென்சில். கூலிங் கிளாஸ் ஆகியவைகள் இப்படி வந்தது தான்.

எங்களை கண்டாலே வளையம் சூதாட்ட கடை நடத்துபவருக்கு கிலி தான். "கண்டாலே சும்மா அதிருதுலே" என்பதன் அகராதி அர்த்தத்தை அவரிடம் காணலாம்.

கடைசியில் என்ன.. எங்கள் தலையை கண்டாலே எழுதி வைத்த சிலேட் ஒன்றை அவசர அவசரமாக தொங்க விட்டு விடுவார்..

சிலேட் வாசகம்.. " ஒருவருக்கு 10 வளையம் மட்டுமே கொடுக்கப்படும் "...கண்டாலே சும்மா அதிருதுலே..!!!

சாளை S.I.ஜியாவுத்தீன், அல்கோபார்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
3. பாராட்டுக்கள்,,
posted by MOHAMMED LEBBAI MS (DXB) [30 October 2012]
IP: 92.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 23306

உடனடி களமிறங்கி நடவடிக்கை எடுத்த நகராச்சி தலைவி, ஆணையர் மற்றும் கவுன்சிலர் அந்தோணி மற்றும் முயற்சி எடுத்த சமூக ஆர்வலர்கள் அனைவர்களுக்கும் எண்ணிலடங்கா பாராட்டுக்கள்,,,,,


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
4. Re:...
posted by sulaiman (abudhabi) [30 October 2012]
IP: 86.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 23308

அஸ்ஸலாமு அழைக்கும் ,பாதுகாப்பற்ற பொழுதுபோக்கு சாதனங்களை கொண்டுவந்து தனது காரியங்களை நிறைவேற்றி ,கைநிறைய சம்பாதித்த பிறகு நடவடிக்கை எடுப்பதால் யாருக்கு என்ன நன்மை. நோன்பு பெருநாளின் போதே எச்சரித்தும் அதை பொருட்படுத்தாமல் முன் அனுமதி பெறாமலும் மீண்டும் அதே தவறை செய்துள்ளார்கள்.இதை நமது நகராச்சி நிர்வாகமும் வாய்பொத்தி வேடிக்கை பார்த்துவிட்டு 3 நாட்கள் கழித்து அப்புற படுத்தி எதை சாதித்து விட்டார்கள் . காலம் தாழ்த்திய நடவடிக்கை வெறும் கண் துடைப்பு நாடகம்தான்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
5. Re:...
posted by K.D.N.MOHAMED LEBBAI (AL-KHOBAR) [30 October 2012]
IP: 37.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 23310

அஸ்ஸலாமு அலைக்கும்

நம் ஊர் கடற் கரையில் பொது மக்களுக்கு பாதுகாப்பு இன்றி... நிறுவப்பட்ட பொழுதுபோக்கு விளையாட்டினை துரிதமாகவே அப்புறபடுத்த. நடவடிக்கை எடுத்த. நம் நகராட்சி தலைவி அவர்களையும் / நம் நகராட்சி ஆணையர் எஸ்.பொன்வேல் ராஜ் அவர்களையும் / மன்ற உறுப்பினர் அவர்களையும் மனதார பாராட்டுகிறோம் .......

நம் நகராட்சி சுகாதார ஆய்வாளர் எஸ்.பொன்வேல் ராஜ் அவர்கள். கடைகள் அகற்றப்பட்ட பின்னரே அவ்விடத்தை விட்டும் திரும்பிச் சென்றார். என்கிற செய்தியை படித்ததும்..... நம் சுகாதார ஆய்வாளர் அவர்கள் மேல் நமக்கு இன்னும் மரியாதை கூடி விட்டது.

என்னப்பா இது............ நம் பெண்களும் அல்லவா இந்த சூதாட்டம் பக்கம் இருக்கிறார்கள்..... இந்த போட்டோவை பார்த்ததும் நம் மனது சங்கடமானது.............

குறிப்பு >>>>>> தங்களின் கடற்கரை போட்டோக்களை பார்த்ததும் நாங்களும் தங்களோடு ஊரில் ஒன்றாகவே இருப்பது போன்று தோன்றியது.....

வஸ்ஸலாம்
K.D.N.MOHAMED LEBBAI
AL-KHOBAR
SAUDI ARABIA


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
6. கேளிக்கைகள் கேள்விக் குறியாக மாறும் போது...!
posted by M.N.L.முஹம்மது ரபீக், (புனித மக்கா.) [30 October 2012]
IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 23316

கொடுமைடா...! குழந்தைகள் ஏறி விளையாடும் இந்த மூஸா நபி காலத்து ராட்டினத்துக்கே பாதுகாபில்லாத அபாயம். இதுலெ வேறெ சில எருமைமாடுகளும் ஏறி உட்கார்ந்திருப்பது தான் கொடுமையிலும் கொடுமை. அத்து விழுந்தா...? அல்லாஹ் தான் பாதுகாக்கணும். -ராபியா மணாளன்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>

முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்

பிற செய்திகள்

காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
Cathedral Road LKS Gold ParadiseFathima Jewellers
AKM JewellersFaams

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved