Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
8:25:26 PM
வெள்ளி | 29 மார்ச் 2024 | துல்ஹஜ் 1702, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
05:0812:3015:4118:3419:42
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:16Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்21:42
மறைவு18:28மறைவு08:48
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
05:0705:3105:55
உச்சி
12:22
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:4919:1319:37
Go to Homepage
செய்திகள்
Previous News ItemNext News Item
செய்தி எண் (ID #) 9721
#KOTW9721
Increase Font Size Decrease Font Size
சனி, டிசம்பர் 1, 2012
DCW ஆலையின் அத்துமீறல் குறித்து விழிப்புணர்வு பொதுக்கூட்டம்! சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் சிறப்புரை!! திரளானோர் பங்கேற்பு!!!
செய்திஎஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்)
இந்த பக்கம் 4011 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (3) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 0)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}

காயல்பட்டினம் நகராட்சி எல்லைக்குள் இயங்கி வரும் DCW தொழிற்சாலையின் மாசு நிறைந்த அமிலக் கழிவுநீர் - அரசு சட்ட விதிகளுக்கு மாற்றமாக பன்னெடுங்காலமாக காயல்பட்டினம் கடற்பரப்பில் கலக்கப்பட்டு வருகிறது. நகரில் புற்றுநோயாளிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரிப்பதற்கும், பலர் உயிரிழப்பதற்கும் இத்தொழிற்சாலையின் மாசுகளே முக்கிய காரணமாக இருக்கக் கூடும் என்று அஞ்சப்படுகிறது.

அரசின் மாசுக்கட்டுப்பாடு சட்ட விதிகளுக்கு மாற்றமாக செயல்பட்டு வரும் இத்தொழிற்சாலையின் சில பகுதிகளை மூடுமாறு, தூத்துக்குடி மாவட்ட மாசு கட்டுப்பாட்டு வாரியம் - தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியத்திற்கு பரிந்துரை செய்தும், இதுவரை அதன் மீது நடவடிக்கை எடுக்கப்படாததைக் கண்டித்தும், அரசின் மாசு கட்டுப்பாடு சட்ட விதிகளுக்கு மாற்றமாக செயல்பட்டு வரும் இத்தொழிற்சாலையைக் கண்டித்தும், அதன் மீது தகுந்த நடவடிக்கை எடுப்பது குறித்து மத்திய - மாநில அரசுகளின் கவனத்தை ஈர்க்கும் வகையிலும், நகரின் அனைத்து ஜமாஅத்துகள் - பொதுநல அமைப்புகள் - புறநகர் ஊர் நலக் கமிட்டியினர் ஆதரவுடன்,

29.11.2012 வியாழக்கிழமையன்று (நேற்று), காயல்பட்டினத்தில் ஒருநாள் அடையாள முழு கடையடைப்பு நடத்திடவும், காயல்பட்டினம் வள்ளல் சீதக்காதி திடலில் அன்று மாலை 04.30 மணிக்கு கண்டன ஆர்ப்பாட்டமும், இரவு 07.00 மணிக்கு பொதுக்கூட்டமும் நடத்திட தீர்மானிக்கப்பட்டிருந்தது. அதனடிப்படையில், அன்று காலை 06.00 மணி முதல் மாலை 06.00 மணி வரை காயல்பட்டினத்தில் முழு கடையடைப்பும், அதனைத் தொடர்ந்து, அன்று மாலை 04.30 மணியளவில் காயல்பட்டினம் வள்ளல் சீதக்காதி திடலில் கண்டன ஆர்ப்பாட்டமும் நடைபெற்றது.

ஆர்ப்பாட்டம் நிறைவுற்ற பின்னர், மாலை 06.00 மணியவில் செய்தியாளர் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.

அதனைத் தொடர்ந்து, அன்றிரவு 07.00 மணியளவில், காயல்பட்டினம் வள்ளல் சீதக்காதி திடலில் விழிப்புணர்வு பொதுக்கூட்டம் நடைபெற்றது.



காயல்பட்டினம் சுற்றுச்சூழல் பாதுகாப்பு அமைப்பின் தலைவர் ஹாஜி ஜெஸ்மின் ஏ.கே.கலீல் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், அதன் துணைத்தலைவர்களான ஹாஜி டி.ஏ.எஸ்.முஹம்மத் அபூபக்கர், ஹாஜி என்.எஸ்.இ.மஹ்மூது, பொருளாளர் ஹாஜி ஏ.ஆர்.முஹம்மத் இக்பால், மூத்த செயற்குழு உறுப்பினர் ஹாஜி மக்கீ நூஹுத்தம்பி, நகரின் மூத்த சுற்றுச்சூழல் ஆர்வலர் ஹாஜி எஸ்.எம்.எம்.ஸதக்கத்துல்லாஹ் என்ற ஹாஜி காக்கா உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர்.



அமைப்பின் செயலாளர் பல்லாக் அப்துல் காதிர் நெய்னா நிகழ்ச்சிகளை நெறிப்படுத்தினார். ஹாஃபிழ் காதிர் ஸாஹிப் ஜாஸிம் கிராஅத் ஓதி கூட்ட நிகழ்வுகளைத் துவக்கி வைத்தார். எம்.டபிள்யு.ஹாமித் ரிஃபாய் வரவேற்புரையாற்றினார். அதனைத் தொடர்ந்து, கூட்டத் தலைவரும், KEPA அமைப்பின் தலைவருமான ஹாஜி ஜெஸ்மின் ஏ.கே.கலீல் தலைமையுரையாற்றினார். அவரைத் தொடர்ந்து, நகரின் பசுமை ஆர்வலர் ஹாஜி எஸ்.ஏ.கே.முஹ்யித்தீன் அப்துல் காதிர் சிற்றுரையாற்றினார். DCWவிற்கெதிரான போராட்டங்கள் ஏன்?’ என்ற தலைப்பில் எஸ்.கே.ஸாலிஹ் அறிமுகவுரையாற்றினார். அமைப்பின் துணைச் செயலாளர் ஹாஃபிழ் எம்.எம்.முஜாஹித் அலீ - நகரில் உயிர்க்கொல்லி நோய்களால் பாதிக்கப்பட்ட மக்கள் குறித்தும், அந்நோய்கள் பரவாமல் தடுக்க தொடராக மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கைகள் குறித்தும் விளக்கிப் பேசினார்.



அதனைத் தொடர்ந்து, சென்னையைச் சேர்ந்த சுற்றுச்சூழல் ஆர்வலர் அருட்செல்வன் சிறப்புரையாற்றினார்.



ஒரு தொழிற்சாலை செயல்பட வேண்டிய விதம், அது விதிமீறி செயல்படுகையில் பொதுமக்கள் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள், சுற்றுச்சூழலில் அவ்வப்போது ஏற்படும் மாற்றங்களை ஆவணப்படுத்த வேண்டியதன் அவசியம் உள்ளிட்ட அம்சங்களை உள்ளடக்கி அவரது உரை அமைந்திருந்தது.

அவரைத் தொடர்ந்து, சென்னையைச் சேர்ந்த சுற்றுச்சூழல் ஆர்வலர் நிஜாமுத்தீன் சிறப்புரையாற்றினார்.



தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தின் நடவடிக்கைகள் குறித்தும், அத்துறை சிறப்புற செயல்பட்டுவிட்டாலே இதுபோன்ற சீரழிவுகள் காணாமல் போகும் என்றும் அவர் தனதுரையில் தெரிவித்தார்.

எம்.ஏ.புகாரீ (48) கூட்ட தீர்மானங்களை வாசிக்க, அனைவரும் தக்பீர் முழக்கத்துடன் அதற்கு ஆதரவு தெரிவித்தனர்.



எம்.ஏ.இப்றாஹீம் (48) நன்றி கூற, துஆ - ஸலவாத் - கஃப்ஃபாராவுடன் கூட்டம் நிறைவுற்றது. இக்கூட்டத்தில், நகரின் அனைத்துப் பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்கள் திரளாகக் கலந்துகொண்டனர்.



















29.11.2012 அன்று காயல்பட்டினத்தில் நடைபெற்ற முழு கடையடைப்பு, கண்டன ஆர்ப்பாட்டம், விழிப்புணர்வு பொதுக்கூட்டம் ஆகிய அனைத்து நிகழ்வுகளுக்குமான ஏற்பாடுகளை, அமைப்பின் தலைவர் ஹாஜி ஜெஸ்மின் ஏ.கே.கலீல் தலைமையில், துணைத்தலைவர்களான ஹாஜி டி.ஏ.எஸ்.முஹம்மத் அபூபக்கர். ஹாஜி என்.எஸ்.இ.மஹ்மூது, செயலாளர் பல்லாக் அப்துல் காதிர் நெய்னா, துணைச் செயலாளர் ஹாஃபிழ் எம்.எம்.முஜாஹித் அலீ, பொருளாளர் ஹாஜி ஏ.ஆர்.முஹம்மத் இக்பால், செயற்குழு உறுப்பினர்களான ஹாஜி மக்கீ நூஹுத்தம்பி, ‘நட்புடன் தமிழன்’ முத்து இஸ்மாஈல், ஏ.எஸ்.புகாரீ, நகர்மன்ற உறுப்பினர் எம்.எஸ்.எம்.ஷம்சுத்தீன், ஷஃபீயுல்லாஹ், எஸ்.அப்துல் வாஹித், எம்.எஸ்.முஹம்மத் ஸாலிஹ், எம்.ஏ.கே.ஜெய்னுல் ஆப்தீன், கேப்டன் ஸதக்கத்துல்லாஹ், எம்.ஏ.புகாரீ, யு.நவ்ஃபல், எம்.டபிள்யு.ஹாமித் ரிஃபாய், நோனா அபூ ஹுரைரா, காஜா முஹ்யித்தீன், தங்ஙள் ஹபீப், ஹாஜி எஸ்.ஐ.புகாரீ, எம்.டி.ஹபீப் முஹம்மத், பி.ஏ.புகாரீ, எம்.ஏ.இப்றாஹீம் (48), எம்.ஏ.புகாரீ (48), கே.எம்.டி.சுலைமான் எஸ்.ஏ.கே.முஹ்யித்தீன் அப்துல் காதிர் உள்ளிட்டோர் செய்திருந்தனர்.

கள உதவி:
M.W.ஹாமித் ரிஃபாய்


Previous News ItemNext News Item
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. السلام عليكم ورحمة الله وبركاته......
posted by M.S.Kaja Mahlari (Singapore) [01 December 2012]
IP: 220.*.*.* Singapore | Comment Reference Number: 24297

அவசியமான ஒரு ஆர்ப்பாட்டமும், போராட்டமும் இப்போதைக்கு தேவையான ஒன்றாகும், இவைகள் ஆலையின் தலைவாயிலின் முன்பு நடைபெற்று இருந்தால் இன்னும் மிக சிறப்பாக இருக்கும்.

அல்ஹம்துலில்லாஹ். இன்றும் ஒன்றும் கெட்டுப்போகவில்லை. ஆலையின் அராஜகத்தை (அடைக்க) அடக்க இது ஒரு முன்மாதிரி என எடுத்துக்கொள்வோம். அவர்களின் கொட்டத்தை அடக்க நாம் கொட்டிக்கொண்டே இருப்போம். சீக்கிரம் ஒரு முடிவை அல்லாஹ் வெளியாக்குவான் !

எல்லாம்வல்ல அல்லாஹ் இவர்களின் அநியாயத்தை தவிடுபொடியாக்கி ,பலவிதமான ,பயங்கர நோய் நொடிகளை விட்டும் நம் அனைவரையும் பாதுகாப்பானாக ! ஆமீன் ! யா ரப்பல் ஆலமீன் !


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
2. நீதி கிடைக்கும் வரை போராடுவோம்
posted by S.A.Muhammad Ali (Dubai) [01 December 2012]
IP: 2.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 24298

நம் மக்களின் வாழ்வாதாரங்களையும் சுற்றுசூழலையும் சீர்குலைக்கும் DCW என்ற அரக்கனுக்கு எதிரான அறப்போர் ஆரம்பம் ஆகி விட்டது. ஆர்ப்பாட்டம் என்றால் இப்படி தான் இருக்க வேண்டும் போராட்டம் என்றால் இப்படி தான் இருக்க வேண்டும் என்று பாடம் நடத்தி உள்ளீர்கள்.

கெமிக்கலை உருக்குகிறேன் என்று எங்களுக்கு கேன்சரை கொடுத்து உயிரை உருக்கும் கொலைகாரனே உன்னை ஒழிக்க இதோ உருவாகி விட்டது KEPA என்ற புயல். DCW என்ற மரத்தை வேரோடு சாய்க்காது அது ஓயாது.

இன்னும் நாம் கவனிக்க வேண்டிய விஷயங்கள் நிறைய உள்ளன. இது வரை நமது நாட்டில் போடப்பட்ட சுற்றுச்சூழல் வழக்குகள் அனேகமாக தொழில் நிறுவனங்களுக்கே சாதகமாக தீர்ப்பு வழங்கி வருகின்றது. எனவே நமது பக்கம் சாதகமாக நிறைய ஆதாரங்களை திரட்ட வேண்டும். KEPA வின் முயற்சிக்கு தங்களால் முடிந்த ஒத்துழைப்பை முழு அளவில் வழங்குங்கள்.

ஒன்று படுவோம். இன் ஷா அல்லாஹ் வெற்றி நிச்சயம்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
3. ரொம்ப சூப்பருங்க
posted by NIZAR AL (kayalpatnam) [02 December 2012]
IP: 115.*.*.* India | Comment Reference Number: 24323

கடைஅடைப்பு,ஆர்பாட்டம்,பொதுக்கூட்டம் என எல்லாமே சூப்பருங்க, கூட்டத்தில் S.K. சாலிஹ்வின் எதார்த்தமான கூட்ட விளக்கம். சென்னை நிஜாமுதீன் சிறப்பா பேசினாருங்க, என்ன தேவையோ அதமட்டும் புட்டு, புட்டு வைதாருங்க.

அதே போல புஹாரி காக்கா தீர்மானம் வாசிச்சாங்க. எல்லோருக்கும் ஏற்புடையதா இருந்ததுங்க.இவ்வளவு எல்லாம் நடந்தும் அடுத்த நாள் தினசரி பத்திரிகையில் என்னன்னு பார்த்தா அவ்வளவு அதிர்ச்சியும், ஆத்திரமும் தாங்க வந்துது,சின்ன கட்டத்தில, வேண்டா வெறுப்பா, சும்மா கடமைக்கு இந்த செய்தியை போட்டாங்க. DCW என்று கூட போட துப்பில்லாத இந்த பத்திரிகளை என்ன சொல்றதுங்க. அதுவும் நம் ஊரில் அதிகம் விற்பனையாகும் தினத்தந்தி, தினகரன் இப்படி மோசம் பண்ணிடாங்கன்னா எவ்வளவு பிரஷர் அவங்களுக்கு இந்த DCW கொடுதிருப்பாங்கன்ன பாருங்கலேன்.

எங்கயோ திருமணம் செய்து கொள்ளும் நடிகையின் படத்தையும் அவளுடைய முன்னாள், இந்நாள் சுய சரிதையும் முலுபக்கத்தில் புகைப்படத்துடன் கதை சொல்லும் இந்த ஏடுகள், நம் செய்தியை மாவட்ட செய்திக்கு கூட கொண்டு வராமல் இருட்டடிப்பு செய்தது மிகவும் பாரபட்சமான, கேவலமான, நடுநிலையற்ற செயலாகும்.

KEPA நிர்வாகிகள் இதற்கு கடும் கண்டனத்தை நம் ஊரின் சார்பாக இந்த பத்திரிகை நிர்வாகிகளிடம் பதிவு செய்யவேண்டும்.மேலும் DCW அலுவலர்கள் சார்பில் போடப்பட்ட நோடிசுக்கு பதில் கொடுக்க வேண்டும்.இதோடு கலபணியை நிறுத்தாமல் ஊரின் ஒட்டுமொத்த மக்களின் ஒத்துழைப்போடு இந்த அமிலகளிவுகளை கடலில் கலப்பதை முதலில் தடுக்கவேண்டும்.இறைவன் நம் முயற்சிகளில் வெற்றியை தருவானாக ஆமீன்,


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>

முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்

பிற செய்திகள்

காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
Cathedral Road LKS Gold ParadiseFathima Jewellers
AKM JewellersFaams

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved