Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
1:39:14 AM
வெள்ளி | 19 ஏப்ரல் 2024 | துல்ஹஜ் 1723, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
04:5412:2415:2818:3319:43
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:06Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்15:09
மறைவு18:27மறைவு03:03
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
04:5505:2005:45
உச்சி
12:16
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:4819:1319:38
Go to Homepage
செய்திகள்
Previous News ItemNext News Item
செய்தி எண் (ID #) 10477
#KOTW10477
Increase Font Size Decrease Font Size
ஞாயிறு, மார்ச் 24, 2013
ஸ்டெர்லைட் ஆலையிலிருந்து விஷவாயு கசிவு! தூத்துக்குடியில் ஆயிரக்கணக்கானோருக்கு மூச்சுத் திணறல்!
செய்திஎஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்)
இந்த பக்கம் 3537 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (2) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 1)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}

விஷவாயு கசிவு:

தூத்துக்குடி மாநகர் பகுதியில் 23.03.2013 சனிக்கிழமையன்று (நேற்று) அதிகாலை 05.00 மணி முதல் 07.00 மணி வரை கடுமையான நச்சுக்காற்று வீசியது. இதனால் அப்பகுதியில் வசித்த ஆயிரக்கணக்கானோருக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட ஏராளமானோர் தூத்துக்குடி அரசு மருத்துவமனை மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றனர். பொதுமக்கள் மட்டுமின்றி, மரம், செடி, கொடிகளிலுள்ள ஒரு பகுதி இலைகளும் இந்த வாயுக்கசிவால் கருகிய நிலையில் காணப்பட்டன.

மருத்துவக் குழுவினர் முகாம்:

தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் உத்தரவின் பேரில், அங்குள்ள பல மருத்துவமனைகளில் மருத்துவக் குழுவினர் முகாமிட்டுள்ளனர்.

ஸ்டெர்லைட் ஆலை காரணம்:

இந்நிகழ்வு, தூத்துக்குடியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. தூத்துக்குடி பகுதியில் இயங்கி வரும் ஸ்டெர்லைட் தாமிர உருக்கு தொழிற்சாலையே இதற்குக் காரணமாக இருக்கக் கூடும் என்று கருதிய ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டக் குழுவினர், ஆலையை மூட அரசை வலியுறுத்தி தூத்துக்குடி ராஜாஜி பூங்கா முன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அதனைத் தொடர்ந்து பாதுகாப்புப் பணிக்காக காவல்துறையினர் குவிக்கப்பட்டனர்.

ம.தி.மு.க. மாவட்ட செயலாளர் அறிக்கை:

அதன் தொடர்ச்சியாக, ஸ்டெர்லைட் ஆலையின் இந்த வாயுக்கசிவு குறித்து மாவட்ட நிர்வாகம் வெள்ளை அறிக்கை தாக்கல் செய்ய வேண்டுமென, மதிமுக கட்சியின் மாவட்டச் செயலாளர் ஜோயல் கூறியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:-

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையில் 23.03.2013 சனிக்கிழமையன்று அதிகாலையில் விஷவாயு வெளியேறி காற்றில் கலந்ததால், கண் எரிச்சல், நெஞ்செரிச்சல், சுவாசக் கோளாறுகள், மூச்சுத்திணறல் ஏற்பட்டு பல்லாயிரக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டனர்.

அதிகாலை 02.00 மணியளவில் அந்த தொழிற்சாலையில் இருந்து சல்பியூரிக் ஆக்ஸைடு பிளாண்ட் பகுதியில் விஷவாயு சிறிதளவு வெளியேறியுள்ளது. அது காற்றில் கலந்ததால் தூக்கத்தில் இருந்த பொதுமக்கள் பாதிக்கப்பட்டனர். இதுபோன்று அதிகாலை 06.00 மணியளவில் தொழிற்சாலையிலிருந்து பெருமளவு விஷவாயு வெளியேறியுள்ளது. இதனால் நகர் முழுவதும் - நோயாளிகள், குழந்தைகள், சிறுவர்கள் உட்பட பல்லாயிரக்கணக்கானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். உயிர் போய்விடுமோ என்ற அச்ச உணர்விற்கும் மக்கள் ஆளாகினர்.

எனவே இதுகுறித்து தொலைபேசி மூலம் தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகளுக்கும், மாசுகட்டுப்பாட்டு நிர்வாகத்திற்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து உடனடியாக மாவட்ட நிர்வாகத்தினரும், மாசுகட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகளும் ஸ்டெர்லைட் தொழிற்சாலைக்கு சென்று ஆய்வு நடத்தினர்.

தூத்துக்குடியில் உள்ள லட்சக்கணக்கான மக்களின் உயிரோடு விளையாடும் ஸ்டெர்லைட் தொழிற்சாலையை, மக்களின் நலன் கருதி உடனடியாக மூட மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். இதுகுறித்து உண்மை நிலையை வெள்ளையறிக்கையாக வெளியிட வேண்டும். இல்லையெனில் மக்களை திரட்டி பெரியளவில் போராட்டம் நடைபெறும்.


இவ்வாறு, மதிமுக மாவட்டச் செயலாளர் ஜோயல் தனதறிக்கையில் தெரிவித்துள்ளார்.

ஆலை நிர்வாகம் மறுப்பு:

இது ஒருபுறமிருக்க, ஸ்டெர்லைட் ஆலையிலிருந்து விஷவாயு எதுவும் வெளியேறவில்லை என ஆலை நிர்வாகத்தின் சார்பில் மறுப்பு தெரிவிக்கப்பட்டதாகத் தெரிகிறது.

மாவட்ட ஆட்சியர் தகவல்:

ஆனால், இந்த விஷவாயுக் கசிவுக்கு ஸ்டெர்லைட் ஆலைதான் காரணம் என முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளதாகவும், உச்ச நீதிமன்றம் வரையறுத்துள்ள அளவுக்கு மேல் கந்தக டை ஆக்ஸைட் வெளியேறியதால் சில குறிப்பிட்ட இடங்களில் பொதுமக்களுக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டுள்ளதாகவும், தற்போது இந்த ஆலை மீதான வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளதால், தமிழக முதல்வருடன் கலந்தாலோசித்த பின் மேல் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், பொதுமக்கள் பாதிப்படைந்துள்ளதால் ஆலை மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் ஆஷிஷ் குமார் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.

நன்றி:
தூத்துக்குடி ஆன்லைன்


Previous News ItemNext News Item
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. பல கொடிய நோய்கள் பரவி இதில் சிறுவர்களும் - குழந்தைகளும் விதிவிலக்கல்ல...
posted by நட்புடன் - தமிழன் முத்து இஸ்மாயில் (காயல்பட்டினம்.) [24 March 2013]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 26436

எல்லா தொழிற்சாலையும் இந்த விஷ கழிவு - விஷ வாய்வு விசியத்தில் மறுக்க தான் செய்வார்கள்...! நாங்கள் கராணம் அல்ல..! தங்களுக்கு சம்பந்தமல்ல என்று தான் பொய் புழுகுவார்கள்..

காயல்பட்டினத்தில் DCW தொழிற்சாலை அங்குள்ள கொடிய விஷ கழிவுகளை ஆற்றில் ஓடை வழியாக கடலிலும் வான் வழியிலும் வெளியேற்றுகின்றன... அதனால் அதை சுற்றி உள்ள மக்களுக்கு மிக பெரிய பாதிப்புகள் தொடர்கின்றன.... கொடிய புற்று நோய் - கொடிய கண் நோய் - கொடிய நெஞ்சி வலி - தோல் அரிப்பு நோய் - மேலும் பல கொடிய நோய்கள் பரவி இதில் சிறுவர்களும் - குழந்தைகளும் விதிவிலக்கல்ல...

மண், நீர், கடல் வளம் அனைத்தையும் நாசம் செய்த DCW தொழிற்சாலை மீதும் இந்த அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்... விரைவில்! .


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
2. Re:...
posted by சாளை S.I.ஜியாவுத்தீன் (அல்கோபார் ) [24 March 2013]
IP: 94.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 26444

என்ன வாழ்க்கை இது..

பயத்துடனே தான் வாழனுமா?

என்னத்தை திறந்து விடுவானுவோ என்று தினமும் கடல் நீரையும், வாய்க்காலையும் பார்த்துக்கொண்டே காலத்தை ஓட்டனுமா?

குக்கரில் சமைத்துக்கொண்டு இருக்கும் குடல் கறி, அடி பிடித்து, ஒரு மாதிரியான வாசனை வந்தாலும், பயத்துடன் எதையோ திறந்து விட்டுட்டானுவோ என்று பீதியுடன் பலருக்கு போன் அடித்து, இறுதியில் குக்கரை திறந்து பார்க்கும் பய வாழ்க்கை.. என்ன வாழ்க்கை. இது.

இஸ்மாயில் டாக்டர் கூறுவது போல செங்கோட்டை பக்கம் வீடு பார்த்து போக வேண்டியதுதான்.

வல்ல இறைவா பயம் இல்லாத நிம்மதியான வாழ்வை எங்களுக்கு தா.. யா இறைவா.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>

முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்

பிற செய்திகள்
பரந்......த மனசு! (?!)  (26/3/2013) [Views - 2958; Comments - 0]
நள்ளிரவில் இதமழை!  (25/3/2013) [Views - 2445; Comments - 0]

காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
FaamsCathedral Road LKS Gold Paradise
Fathima JewellersAKM Jewellers

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved