Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
11:55:44 PM
சனி | 27 ஜுலை 2024 | துல்ஹஜ் 1822, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
04:4912:2903:5206:4508:00
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:08Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்23:37
மறைவு18:39மறைவு11:26
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
04:5405:2005:46
உச்சி
12:24
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
19:0219:2819:54
Go to Homepage
செய்திகள்
Previous News ItemNext News Item
செய்தி எண் (ID #) 10485
#KOTW10485
Increase Font Size Decrease Font Size
செவ்வாய், மார்ச் 26, 2013
ஸ்டெர்லைட், டி.சி.டபிள்யு. எந்த ஆலையானாலும், மக்களை பாதிக்கும் வகையில் செயல்பட்டால் கடும் நடவடிக்கை! மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை!!
செய்திஎஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்)
இந்த பக்கம் 2442 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (3) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 0)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}

ஸ்டெர்லைட், டி.சி.டபிள்யு. உள்ளிட்ட எந்த ஆலையானாலும், மக்களை பாதிக்கும் வகையில் செயல்பட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் ஆஷிஷ் குமார் எச்சரித்துள்ளார்.

தூத்துக்குடி மாவட்ட ஆட்சியரகத்தில், மக்கள் குறைதீர் வாராந்திர கூட்டம் 25.03.2013 திங்கட்கிழமையன்று நடைபெற்றது. கூட்டத்தின் நிறைவில் செய்தியாளர்களை சந்தித்து மாவட்ட ஆட்சியர் ஆஷிஷ் குமார் தெரிவித்துள்ளதாவது:-

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் இருந்து வெளியான வாயு சம்பந்தமாக மக்கள் கண் எரிச்சல், தொண்டை அடைப்பு உள்ளிட்டவற்றால் பாதிக்கப்பட்டனர்.

இது சம்பந்தமாக ஆர்.டி.ஓ தலைமையில் விசாரணை செய்து ஸ்டெர்லைட்டில் உள்ள சல்பியூரிக் ஆசிட் பிளாண்டை ஏன் மூடக்கூடாது என்று விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

இது தவிர சுற்றுச்சூழல் மற்றும் மாசுகட்டுப்பாடு வாரிய உறுப்பினர் செயலர் நேற்று ஸ்டெர்லைட் ஆலையில் வந்து ஆய்வு செய்துள்ளார். அவர் அரசுக்கு அங்கு நடந்துள்ள விபரத்தை அறிக்கை அளிப்பார். அதில் மாவட்ட நிர்வாகத்திற்கும் ஒரு நகல் வரும்.

மக்களுக்காகத்தான் மாவட்ட நிர்வாகம் உள்ளது. மக்களை பாதிக்க செய்தவுடன் ஸ்டெர்லைட் மீது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

வைகோ அனுபவம் வாய்ந்த அரசியல் தலைவர். அவருக்கு மக்கள் பிரச்னைக்காக போராட உரிமை உள்ளது. அதே சமயம் மாவட்ட நிர்வாகம் மற்றும் கலெக்டர் மீது தவறான புகாரை தெரிவித்துள்ளார். வைகோ கலெக்டர் மீது தெரிவித்திருக்கும் புகார் அனைத்தும் தவறானதும், ஆதாரமற்றதுமாகும். அரசியல்வாதிகள் என்ன வேண்டுமானாலும் பேசலாம். வைகோவுடன் இருக்கக்கூடிய ஒருவர் தவறான தகவலை போஸ்டராக வெளியிட்டதால் அவர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது. ஒரு மாதம் அவர் ஊருக்குள் வராமல் தலை மறைவாக இருந்தார்.

மாவட்ட நிர்வாகத்தை பொறுத்தமட்டில் இதில் நல்ல முறையில் நடவடிக்கை எடுத்துள்ளது. ஸ்டெர்லைட் தவிர டி.சி.டபுள்யூ உள்ளிட்ட எந்த தொழிற்சாலைகளாலும் மக்களை பாதிக்கும் வகையில் செயல்பட்டால் அந்த ஆலைகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

தூத்துக்குடியில் உள்ள அனைத்து தொழிற்சாலைகளையும் ஒரு மாதத்திற்குள் ஆய்வு செய்ய ஏழு பேர் கொண்ட கமிட்டி அமைக்கப்படுகிறது. அந்த கமிட்டியினர் தொழிற்சாலைகள் அனைத்தும் அரசு விதிமுறைகளின் படி நிர்ணயிக்கப்பட்ட அளவிற்கு கழிவுகளை வெளியேற்றுகிறதா, அதனை விட அதிகமாக வெளியேற்றுகிறதா உள்ளிட்டவை குறித்து ஆய்வு செய்வர். அதிகமாக வெளியேற்றினால் அதனை சரி செய்யச் சொல்லி முதலில் தெரிவிப்போம். சரி செய்யவில்லை என்றால் ஆலையை மூடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்.

சில தொழிற்சாலைகளில் கழிவுகள் எல்லாம் முறையாக வெளியேற்றுவார்கள். அதே சமயம் அந்த ஆலையால் மக்களுக்கு பாதிப்பு ஏற்படும் என்று புகார் வந்தால் அது குறித்து விசாரிக்கப்படும். மக்களுக்கு பாதிப்பு என்று தெரிந்தால் அந்த தொழிற்சாலையை உடனடியாக மூடுவதற்கு வேண்டிய நடவடிக்கையை மாவட்ட நிர்வாகம் எடுக்கும்.

நாங்கள் எங்கள் பணியினை சிறப்பாக செய்து கொண்டிருக்கிறோம். வைகோ அவர் வேலையை செய்யட்டும். ஸ்டெர்லைட் ஆலைக்கு வழங்கப்பட்ட நோட்டீசுக்கு அவர்கள் சரியான பதிலை அளிக்கவில்லை என்றால் அடுத்த கட்டமாக கடும் நடவடிக்கையை அந்த ஆலை மீது எடுக்கவும் மாவட்ட நிர்வாகம் தயங்காது.


இவ்வாறு கலெக்டர் தெரிவித்தார்.

டி.எஸ்.ஓ காமாட்சி கணேசன், பி.ஆர்.ஓ தமிழ் இனியன், கலெக்டர் அலுவலக மேலாளர் நயினார்பிள்ளை, ஏ.பி.ஆர்.ஓ குமார், துணை ஆட்சியர்கள் நம்மையாழ்வார், கமலா, டி.எஸ்.ஓ நேர்முக உதவியாளர் நாகராஜன் மற்றும் அதிகாரிகள் உடனிருந்தனர்.

நன்றி:
தினமலர்


Previous News ItemNext News Item
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. Re:...
posted by suaidiya buhari (chennai) [26 March 2013]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 26466

கலெக்டர் உடைய இந்த எச்சரிக்கயை வரவேகிறோம்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
2. அன்பளிப்புகளுக்கும் கோடிகளுக்கும் விலைபோகாத மக்கள் சக்தி...
posted by நட்புடன் - தமிழன் முத்து இஸ்மாயில் (காயல்பட்டினம்.) [26 March 2013]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 26482

நல்லா இருந்த நீரோடையை கொடிய அமில விஷ கழிவால் நாசம் செய்து மலட்டுதன்மை அடைய செய்த DCW ஆலையின் மீது மாநில மற்றும் மாவட்ட நிர்வாகம் என்ன நடவடிக்கை எடுத்தது....? மக்கள் விழிப்புணர்வு பெறாத வரை எந்த நிர்வாகமும் நடவடிக்கை எடுக்க போவது இல்லை...

DCW ஆலையின் அமில விஷ கழிவிற்க்கு எதிராக ஒரு அமைப்பு மட்டும் போராடுவது சிரமம்...DCW ஆலையின் அமில விஷ கழிவிற்க்கு எதிராக தூத்துக்குடி மாவட்ட நகர் மக்கள் விழிப்புணர்வு பெற்று மக்கள் சக்தியாக ஒற்றுமையோடு போராடுவதே நலம்... அதுவே நமது நாளைய தலைமுறைகளை காப்பற்ற நாம் செய்யும் நல்ல சேவை...

மிக பெரிய அன்பளிப்புகளுக்கும் கோடிகளுக்கும் விலைபோகாத, DCW ஆலையின் அமில விஷ கழிவிற்க்கு எதிராக மக்களை நேர்வழி படுத்தி போராடும் KEPA விற்க்கு பாராட்டுக்கள்... உங்கள் மன தூய்மையான புனித பயணம் தொடரட்டும்.. விரைவில் நமது மக்களுக்கு வெற்றி கிடைக்கட்டும்... ஆமின்...


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
3. Re:...
posted by SEYED ALI (ABUDHABI) [26 March 2013]
IP: 2.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 26483

இவரது எச்சரிக்கை திருப்தியாக இல்லை. மக்கள் பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள் என்பது கண்கூடு. அதிலிருந்தே அவர்கள் அளவுக்கதிகமாக கழிவுகளை வெளியேற்றி இருக்கிறார்கள் என்று அறியமுடியும்.

இனி அவர்கள் எவ்வளவு வெளியேற்றுவார்கள் என்று ஆய்வு செய்வதில் அர்த்தமே இல்லை. கள்ளத்தனம் ஒருமுறை வெளியானால் போதாதா? இன்னும் எத்தனை முறை வெளியாக வேண்டும்? எத்தனை உயிர்கள் போக வேண்டும்? இவர்கள் ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க?

இதிலெல்லாம் ஆஷிஷ் குமார் அவர்கள் அரசியல் பேசாமல் தரன்கதராவையும் ஸ்டெர்லைட் -ஐயும் மூட நடவடிக்கை எடுக்கட்டும்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>

முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்

பிற செய்திகள்
பரந்......த மனசு! (?!)  (26/3/2013) [Views - 2987; Comments - 0]
நள்ளிரவில் இதமழை!  (25/3/2013) [Views - 2478; Comments - 0]

காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
Cathedral Road LKS Gold ParadiseFathima Jewellers
AKM JewellersFaams

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved