Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
10:01:54 PM
சனி | 27 ஜுலை 2024 | துல்ஹஜ் 1822, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
04:4912:2903:5206:4508:00
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:08Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்23:37
மறைவு18:39மறைவு11:26
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
04:5405:2005:46
உச்சி
12:24
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
19:0219:2819:54
Go to Homepage
செய்திகள்
Previous News ItemNext News Item
செய்தி எண் (ID #) 10628
#KOTW10628
Increase Font Size Decrease Font Size
சனி, ஏப்ரல் 20, 2013
“காயலர் மீது தாக்குதல்” செய்திக்கு மறுப்பு!
செய்திஎஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்)
இந்த பக்கம் 4116 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (7) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 3)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}

கையில் வெட்டுக் காயத்துடன், திருச்செந்தூரிலுள்ள அரசு மருத்துவமனையில் காயலர் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், தான் தாக்கப்பட்டதாக காவல்துறையிடம் அவர் புகார் அளித்துள்ளதாகவும், காயல்பட்டணம்.காம் செய்தி வெளியிட்டிருந்தது.

இது தொடர்பாக, காயல்பட்டினம் தைக்கா தெருவைச் சேர்ந்த எஸ்.எம்.அஹ்மத் ஃபரீத், கே.டி.எம். தெருவைச் சேர்ந்த என்.எம்.முஹம்மத் இக்பால் ஆகியோர் விளக்கமளித்துள்ளனர். அதில்,

காயல்பட்டினம் தைக்கா தெருவைச் சேர்ந்த எஸ்.எம்.அகமது பரீத், கடந்த 01.05.2012இல் காயல்பட்டினம் கூலக்கடை பஜாரில், N.M.டிரேடர்ஸ் பம்புசெட் ஹார்டுவேர் கடையை தன் சொந்தப் பணத்தில் துவக்கியதாகவும்,

19.09.2012 அன்று, அமெரிக்க நாட்டிலிருக்கும் தன் மகளைப் பார்ப்பதற்காக புறப்பட்டுச் சென்று, 05.03.2013 அன்று திரும்பியதாகவும்,

அதுவரை கடையை நடத்த, சதுக்கைத் தெருவைச் சேர்ந்த தங்க தம்பி காதர் சாகிபு என்பவரை கடை ஊழியராக நியமித்துச் சென்றதாகவும்,

அமெரிக்காவிலிருந்து திரும்பி வருவதற்குள், கடைக்குரிய ஆவணங்களை சட்ட விரோதமாக மாற்றி மோசடி செய்து, கடை ஊழியராக இருந்த அவர் தன்னை கடை உரிமையாளராக்கிக் கொண்டதாகவும், தனது கையெழுத்தைப் போலவே கையெழுத்திட்டு நம்பிக்கை மோசடி செய்தது குறித்து ஆறுமுகநேரி காவல் நிலையத்தில் கடந்த மார்ச் மாதத்தில் புகார் செய்துள்ளதாகவும்,

அதன் பின்னர், தான் செய்த குற்றங்களுக்கு அஞ்சி, கடையை அவராகவே தங்களிடம் ஒப்படைத்ததாகவும், எஸ்.எம்.அகமது பரீத் கூறியுள்ளார்.

தற்போது, வீரபாண்டியன்பட்டினம் - காயல்பட்டினம் இடையில் நடந்த நிகழ்வில் தனக்கோ - தனது மகளின் மாமனார் என்.எம்.முஹம்மத் இக்பாலுக்கோ துளியளவும் தொடர்பில்லை என அல்லாஹ்வின் மீது ஆணையிட்டுக் கூறுவதாகவும், இது உண்மைக்குப் புறம்பாக தங்க தம்பி காதர் சாகிப் திட்டமிட்டு சித்தரித்ததே என்றும் அவர் மேலும் கூறியுள்ளனர்.

[செய்தி திருத்தப்பட்டுள்ளது @ 13:52 / 20.04.2013]


Previous News ItemNext News Item
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. Re:... மக்கள் மன்றத்தில்
posted by moosamaraikar.s.m.b (riyadh) [20 April 2013]
IP: 89.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 26964

ஊடக சகோதரா!!! உங்களுக்கு ஒருவிஷயம் கூறப்பட்டால் அதை உறுதி செய்யாதவரை பிறருக்கு பரப்பவேண்டாம்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
2. எதையும் எழுதும் முன்பு யோசிக்கவும்
posted by Hasan (Al Khobar) [20 April 2013]
IP: 37.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 26966

எதையும் எழுதும் முன்பு யோசிக்கவும். ஆள் , தராதரம் எல்லாம் அறிந்தவர்களிடம் கேக்கவும். இல்லை என்றால் சட்ட சிக்கலில் கொண்டு போயி காயல் ஊடகங்கல் மாட்டி கொள்ள நேரிடும். ஒருவர் அரசு மருத்துவமனையில் படுத்துகொண்டால் எழுதி விடுவீர்களா..

உங்களுக்கும் தினமலருக்கும் என்ன வித்தியாசம் ...குறைந்த பட்சம் கருத்துகளையாவது நிறுத்தி இருக்க வேண்டும்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
3. அல்லாஹ் அனைத்தையும் அறிந்தவன்.
posted by kavimagan m.s.abdul kader (qatar) [20 April 2013]
IP: 178.*.*.* Qatar | Comment Reference Number: 26981

கண்ணியமும், நேர்மையும், சமூக ஒழுக்கமும், கட்டுப்பாடும் நிறைந்த மர்ஹூம்.செய்யத் முஹம்மத் பாக்கவி அவர்களது மகனார்தான் ஜனாப்.அஹமத் ஃபரீத் அவர்கள். நீண்ட காலமாக வியாபார தளத்தில் போராடி, தினமும் 15 மணி நேரத்திற்கு மேல் உழைப்பை சிந்தி, நான் அறிந்து 35,40 ஆண்டு கால கடின உழைப்பிற்குப் பிறகு ஃபரீத் காக்கா அவர்கள் இந்த சிறிய கடையைத் துவங்கினார்கள். வன்முறையை அறவே விரும்பாத, சாந்தவாதியான இவர் மீதான குற்றச்சாட்டை, அல்லாஹ்வின் உதவியால், நீதியின் துணை கொண்டு இவர் தகர்த்து எறிவார் என்ற நல்ல நம்பிக்கையுடன் அவருக்காக துஆ செய்கிறேன். அல்லாஹ் எல்லாவற்றையும் அறிந்தவன்!அவன் சத்தியத்திற்கு மட்டுமே துணை நிற்பவன்!!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
4. Re:...
posted by Cnash (Makkah) [20 April 2013]
IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 26983

வர வர செய்தியின் தரம் தாழ்ந்துகொண்டே செல்கிறது என்பதை இது போன்ற செய்தியை வெளியிடுவதும், அதற்கு ஒரு மறுப்பு செய்தி வெளியிடுவதையும் வைத்து விளங்கமுடிகிறது.. இதுபோன்ற செய்தியால் யாருக்கு என்ன லாபம்!! இது ஒரு தனிப்பட்ட சகோதரர்களின் பிரச்சனை!! யார் சொல்லுவது உண்மை என்று கூட அறிய முடியவில்லை? அப்ப எதற்கு இந்த நியூஸ்?

இனி ஊரில் வீட்டுக்கு வீடு நடக்கும் குடும்ப பிரச்சனைகளும், பக்கத்துக்கு வீடுகளுக்கிடையில் நடக்கும் முடுக்கு பிரச்சனைகளும் செய்தியாக வந்தாலும் ஆச்சர்யபடுவதற்கில்லை! உங்களை தளத்தை நீங்கள் பரிசோதித்து கொள்ளுங்கள்!! தரம் உயர்த்த பல முயற்சிகள் எடுத்தீர்கள்!! பத்திரிக்கை தரம் தாழ முயற்சிகள் ஏதும் தேவை இல்லை . எது போன்ற செய்திகளே போதும்!! விமர்சிக்க அல்ல!!! உங்கள் நலம் விரும்பும் ஒருவனாக!!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
5. ஊடகம் என்றால் என்ன...? அதன் அன்றாட வேலை என்ன..? அதை நாம் முதலில் விளங்கி கொளவேண்டும்...
posted by நட்புடன் - தமிழன் முத்து இஸ்மாயில் (காயல்பட்டினம்.) [21 April 2013]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 26986

வர வர செய்தியின் தரம் தாழ்ந்துகொண்டே செல்கிறது என்பதை இது போன்ற செய்தியை வெளியிடுவதும், அதற்கு ஒரு மறுப்பு செய்தி வெளியிடுவதையும் வைத்து விளங்கமுடிகிறது.. C - P

ஒரு காயல் சகோதரர் நகருக்கு வெளியில் தாக்கப்பட்டு காயப்படுத்தப்பட்டு ஆம்புலன்சில் எடுத்து செல்லப்பட்டு வெளியூரில் மருத்தவமனையில் சிகச்சை எடுத்து வருகிறார் அது காவல்துறை வரை செய்தி போய் சேர்ந்து விசாரணை நடந்து வருகிறது குறிப்பிடத்துக்கது.. இச்சம்பவம் செய்தியாக வந்துள்ளது..

அச்செய்தியை ஊடகம் என்ற முறையில் செய்தி போடுவதில் தவறு என்ன இருக்கின்றது..?

பிறகு அச்செய்திக்கு சம்பந்தப்பட்டவர்கள் மறுப்பு செய்தி கொடுத்து அதையும் செய்தியாக போடுவதிலும் தவறு என்ன இருக்கின்றது..?

இந்த மாதிரி செய்தி போடுவதினால் என்ன குழப்பம்..?

நாம் செய்தியாக தான் பார்க்க வேண்டுமே தவிர நாமும் குழம்பி பிறரையும் குழப்புவது சரியாக தெரியவில்லை..

உதாரனத்திற்க்கு சமீபத்தில் ஒரு காயல் வாசி விபத்தில் காயம் அடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார்.. அதை செய்தியாக நாம் படிக்கவில்லையா...? அது போல ஒரு காயல் வாசி கையில் வெட்டுக் காயத்துடன் திருச்செந்தூரிலுள்ள அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் அதை செய்தியாக போடுகிறார்கள் அதை நாம் இதன் மூலம் படித்து அறிகின்றோம்..

ஊடகம் என்றால் என்ன...? அதன் அன்றாட வேலை என்ன..? அதை நாம் முதலில் விளங்கி கொளவேண்டும்... இன்றைய சம்பவம் நாளை செய்தியாக தருவது ஊடகத்தின் வேலை..

காயப்பட்டவரின் செய்தியையும் படிக்கின்றோம்... பிறகு அதற்க்கான காரணத்தின் அதன் மறுப்பு செய்தியையும் படிக்கின்றோம்...! எது உண்மை என்பதை காவல்துறையும் நீதி துறையும் விசாரித்து பின் உண்மை வெளி படும்... ஊடகத்தின் வேலை செய்தி வெளியுடுவதே...

அன்பு சகோதரர்களே...

இப்படி நான் கருத்து பதிவதால் நான் இத்தளத்தின் பங்குதாராரும் அல்ல ஆதரவாளனும் அல்ல...! உங்களை போல் இன்னும் பலரை போல் ஒரு சாதாரண வாசகன் மட்டுமே...


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
6. Re:சிலரது கருத்துக்கள் ...
posted by OMER ANAS (DOHA QATAR.) [21 April 2013]
IP: 78.*.*.* Qatar | Comment Reference Number: 26991

உண்மையில் ஒண்ணுமே நமக்கு புரியலப்பா..!

இருந்தாலும், ஊடகம் என்பது தனக்கு வரும் செய்தியினை வெளியிடுமே தவிர இதற்க்கென்று விசாரணை கமிஷன் வைக்காது! அதன் வேலையும் இதுவல்ல!

நம் கருத்துக்களால்தான் நாம் நமக்கு அறிந்த சில உண்மையினை வெளிபடுத்த வேண்டும்! தம்பி கவிமகன் போல்.!

இந்த ஊடகம் தனக்கு வந்த இரண்டு செய்தியினையும் மறுப்பின்றி வெளியிட்டு உள்ளது! இந்த விசயத்தில் காயல்.காம் நியாயமாகவே செயல்பட்டுள்ளது. அப்புறம் ஏன் நாம் இந்த ஊடகத்தை சாடவேண்டும்? இதுபோல் எந்த ஊடகத்தையும் நாம் ஏன் சாட வேண்டும்?

Moderator: Comment edited!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
7. ஊடகத்தின் வேலை என்ன? செய்தியை செய்தியாக தருவது தானே?
posted by M.N.L.முஹம்மது ரபீக், (காயல்பட்டினம்.) [21 April 2013]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 26993

அன்பு நண்பர்களே! விருப்பு வெறுப்பு காய்த்தல் உவத்தல் என்பதெல்லாம் காயல்பட்டினம் டாட் காமிற்கு கிடையாது. செய்திகளின் தரம் குன்றி விடவுமில்லை.

வேலை பளு காரணமான செய்தி வர தாமதமானால் என் போன்றோருக்கு ஏற்படும் ஏக்கத்தை நான் மக்காவிலிருந்த காலங்களில் உணர்ந்திருக்கின்றேன். இத்தளத்தின் நிர்வாகிகள் வெறும் நேரப்போக்கிற்காகவோ, கேளிக்கைக்காகவோ நடத்தி வரவில்லை! வெறும் மூன்றே நிமிடம் நுனிப்புல் மேயும் நமக்கே இப்படி என்றால் ஒரு செய்தியை சேகரித்து அதன் நம்பகத்தன்மையை அறிந்து நடந்ததை நடந்ததாக மக்களுக்கு கொண்டு சேர்ப்பதே ஊடகத்தின் வேலை. செய்தியை போட்டு விட்டு அடிக்குறிப்பில் தன் கருத்தைச் சொல்லுவது செய்தியின் தன்மையை அழித்து விடும்.

இது தொடர்பான முந்தைய செய்தியை யாரோ ஒருவர் சொல்லக் கேட்டு ஏனோதானோ என செவிவழிச் செய்தியாக இவர்கள் வெளியிடவில்லை. பொறுமையாகப் படித்துப் பாருங்கள் புரியும்.

ஒருவருக்கு இரத்தக்காயம் ஏற்பட்டு மயங்கிய நிலையில் ஆம்புலன்ஸ் மூலம் அரசு மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்பட்டு அவர் வாக்கு மூலத்தை கேட்டறிந்து அதனை முதல் தகவல் அறிக்கையாக காவல்துறையினரால் வழக்கு பதிவு செய்யப்பட்ட பின்னர்தானே செய்தியாக வெளியிட்டிருந்தார்கள்? இதனால் இணையதளத்திற்கு என்ன லாபம்? யாருக்கும் ஆதரவாக வெளியிடவில்லையே?

சரி! மறுப்பு செய்தியை மறுதரப்பினர் அறிக்கையாக தந்து தமது நியாயத்தை வெளிப்படுத்தியிருப்பதை மறு நாளே வெளியிட்டு மக்களுக்கு அறிய தரவும் செய்துள்ளனர். இதில் செய்திகளின் தரம் எங்கே குறைந்துவிட்டது?

தினமலருக்கு நிகராக சித்தரிப்பதும் முடுக்குச் சண்டை கூட செய்தியாக வரலாம் என அனுமானிப்பதும் ஏற்புடையதல்ல! முடுக்குச் சண்டை சிவில் பிரிவினைச் சார்ந்தது. அதே நேரம் கைகலைப்பு வெட்டு குத்து காயம் உயிழப்பு என கிரிமினலாக (அல்லாஹ் பாதுகாப்பானாக) மாறும்போது அதுவும் செய்தியாகத்தான் நாழிதழ்கள், தொலைக்காட்சி, போன்ற ஊடகங்களில் வெளிவரும். அப்போது முடுக்குத் தகறாறும் முதல் பத்தியிலும் தலைப்புச் செய்திகளாகவும் இடம் பெரும்.

எனவே ஒரு செய்தியை செய்தியின் கண்ணோட்டத்திலேயே பார்க்க வேண்டும். அதைத் தவிர்த்து ஊடகத்தின் உழைப்பை சாடுவதோ கொச்சைப்படுத்துவததோ தரமான வாசகர்களுக்கு உகந்தல்ல!

-ராபியா மணாளன்.

Moderator: Comment edited!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>

முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்

பிற செய்திகள்

காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
Fathima JewellersAKM Jewellers
FaamsCathedral Road LKS Gold Paradise

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved