Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
10:54:11 PM
வியாழன் | 25 ஏப்ரல் 2024 | துல்ஹஜ் 1729, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
04:5012:2115:3118:3219:44
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:03Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்19:38
மறைவு18:27மறைவு06:46
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
04:5105:1705:42
உச்சி
12:15
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:4819:1419:39
Go to Homepage
செய்திகள்
Previous News ItemNext News Item
செய்தி எண் (ID #) 10929
#KOTW10929
Increase Font Size Decrease Font Size
வெள்ளி, மே 31, 2013
காயல்பட்டினம் மக்களின் வாழ்க்கை முறை குறித்து டி.சி.டபிள்யு. துணைத்தலைவர் அவதூறு அறிக்கை! KEPA செய்தி வெளியீடு!!
செய்திஎஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்)
இந்த பக்கம் 4731 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (21) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 6)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}

காயல்பட்டினம் மக்களின் வாழ்க்கை முறை குறித்தும், நகரில் புற்றுநோய் பெருக்கத்திற்கு அவர்களின் வாழ்க்கை முறையே காரணமென்றும், தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியத்திடம் - காயல்பட்டினம் நகராட்சி எல்லைக்குள் இயங்கி வரும் டி.சி.டபிள்யு. தொழிற்சாலையின் மூத்த துணைத்தலைவர் (நிர்வாகம்) ஜி.ஸ்ரீனிவாசன் அறிக்கை சமர்ப்பித்துள்ளதாக, காயல்பட்டினம் சுற்றுச்சூழல் பாதுகாப்பு அமைப்பு (KEPA) பின்வருமாறு செய்தி வெளியிட்டுள்ளது:-

அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்பாளனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்...

காயல்பட்டினம் மக்களின் வாழ்க்கை முறை குறித்து டி.சி.டபிள்யு. நிறுவனத்தின் மூத்த துணைத் தலைவர், மாசு கட்டுப்பாட்டு வாரியத்திடம் சமர்ப்பித்த அவதூறு அறிக்கை!

காயல்பட்டினம் சுற்றுச்சூழல் பாதுகாப்பு அமைப்பு (KEPA) ம்ளீநி தொழிற்சாலை குறித்து தகவல் அறியும் உரிமை சட்டம் மூலம் நூற்றுக்கணக்கான பக்கங்கள் அடங்கிய ஆவணங்களைப் பெற்றது. அதில் ஒன்று KEPA ஏற்பாட்டில் நகரில், 2012 நவம்பர் 29 அன்று நடைபெற்ற கடையடைப்பு, ஆர்ப்பாட்டம் ஆகியவற்றைத் தொடர்ந்து, டிசம்பர் 03, 2012 அன்று DCW தொழிற்சாலை சார்பாக - தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் தலைமை நிலையத்தில் சமர்ப்பிக்கப்பட்ட விளக்க அறிக்கை ஆகும். இந்த அறிக்கை இந்நிறுவனம் குறித்த மாசு கட்டுப்பாடு வாரியத்தின் ஃபைல் எண் TIO / F 35629 / 2012இல் இடம்பெற்றுள்ளது. அதில் பக்கங்கள் 271 - 277 இல் இந்நிறுவனத்தின் மூத்த துணைத் தலைவர் (நிர்வாகம்) திரு. ஜி.ஸ்ரீனிவாசன் சமர்ப்பித்த நான்கு பக்க விளக்கமும் அடங்கும். இவ்விளக்கம், காயல்பட்டினம் நகர மக்களின் வாழ்க்கை முறை குறித்து ஆதாரமற்ற அவதூறான குற்றச்சாட்டுகளக் கொண்டுள்ளது. ஆங்கிலத்தில் இடம்பெற்றுள்ள இவ்வறிக்கை தமிழில் தற்போது மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.

டி.சி.டபிள்யு. நிறுவனத்தின் மூத்த துணைத் தலைவர் திரு. ஜி.ஸ்ரீனிவாசன் தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியத்திடம் டிசம்பர் 03, 2012 அன்று சமர்ப்பித்த அறிக்கையின் தமிழாக்கம்:-

காயல்பட்டினத்துடன் தொடர்புடைய ஒருவனாக, மற்றும் DCW வுடன் - இந்த மக்களுடன் இணைந்துள்ள ஒருவனாக, இந்த கீழ்க்கண்ட முக்கியக் குறிப்புகள் கவனத்திற்கு கொண்டுவர தகுதியானவைகள் ஆகும்.

>> அடிப்படையில், காயல்பட்டினம் மக்களின் வாழ்க்கை முறைகள் பிற இடங்களை விட வித்தியாசமானதாக இருக்கிறது. அவர்களின் வாழ்க்கை முறைகள் தமிழ்நாட்டில் வாழக்கூடிய மற்ற பல மக்களிடையேயிருந்து வித்தியாசமாகவும் உள்ளது.

>> அவர்களின் மத நிர்பந்தம் மற்றும் அவர்களின் பாரம்பரியத்தை நிலைநிறுத்தவும் வேண்டி அவர்கள் தனித்த வாழ்க்கை முறையை வாழ்கின்றனர்.

>> பற்றாக்குறையுடைய 1 அல்லது 2 சென்ட் நிலத்தில், அவர்களின் வீடுகள் கட்டப்பட்டு, போதுமான அளவு தாவரங்கள் அவர்களின் வீட்டிலிருந்து கண்ணுக்கெட்டிய தொலைவில் இல்லாமல் அவர்கள் வாழுமிடம் அமைந்துள்ளது. அவர்களின் வீடுகள் மிகவும் சிறியது மற்றும் எந்தவிதமான காற்றோட்டமும் இல்லாதது. வீட்டிற்குள் சூரியக் கதிர்கள் நுழைவதற்கு எந்த இடமும் அங்கு இல்லை. எனவே, பெரும்பான்மையான மக்கள் விட்டமின் குறைபாட்டினால் குறிப்பாக, விட்டமின் டி குறைபாட்டினால் அவதிப்படுகிறார்கள். இது தோல் புற்றுநோய் உள்ளிட்ட தோல் சார்ந்த நோய்களுக்கு வழிவகுக்கிறது.

>> மேலும் அவர்களின் பாரம்பரியத்தை நிலைநிறுத்தவும் மற்றும் அவர்களின் மத ரீதியான உணர்ச்சி அபிப்ராயத்தாலும், அவர்கள் ரத்த சொந்தங்களையே பெரும்பாலும் திருமணம் செய்து கொள்கின்றனர். அவர்களின் தந்தையின் / தாயின் உடன் பிறந்தவர்களின் மகள்களே மனைவிகளாக ஆகின்றனர். இது போன்ற திருமணங்களால் குழந்தைகள் குறைபாடுடன் பிறக்கும் என்பது மருத்துவ ரீதியாக நிரூபிக்கப்பட்டுள்ளது. பிறக்கும் குழந்தைகள் உடல் ரீதியான குறைப்பாட்டுடனோ, பிற பிரச்சனைகளுடனோ பிறக்கும். ஏறத்தாழ எல்லா குடும்பங்களிலும் ஒரு உடல் ஊனமுற்ற குழந்தை இருக்கும். இதனை அவர்களின் இடத்தில் காணலாம்.

>> மேலும், நெருக்கமான உறவினர்களின் திருமணங்களால், குழந்தைகள் பலவிதமான விட்டமின்கள் (குறைவால்) அவதிப்படுகின்றனர் என்பதோடு, அவர்களின் கண் பார்வை அதிக அளவில் பாதிக்கப்பட்டுள்ளது. ஒரு வயது குழந்தையும் கூட கண்ணாடி அணிந்திருக்கிறது என்பதோடு, பெரும்பாலும் அனைவரும் கண்ணாடி அணிந்துள்ளனர் என்பது காயல்பட்டினத்தில் தெளிவாகத் தெரிகிறது. இது நெருக்கமான உறவினர்களிடையே செய்யப்படும் திருமணங்களால் ஏற்படும் பலவிதமான காரணிகளால் உண்டாவதாகும்.

>> பெரும்பான்மையான முஸ்லிம் ஆண்கள் ஆண்டின் பெரும்பகுதியில் வருமானம் ஈட்ட வெளியே சென்றுவிடுகின்றனர் மற்றும் வெளிநாடுகளிலேயே தங்கிவிடுகின்றனர். அவர்கள் வரும்போதெல்லாம், எந்த வேலைக்கும் போகாமல் இருப்பதன் விளைவாக, அவர்களின் வீட்டிலேயே முடக்கிக் கிடந்து மற்றும் விடுமுறையை கழிப்பதையே அவர்களின் பொழுதுபோக்காக கொண்டுள்ளனர். அதைப்போலவே, அவர்களின் வீட்டிற்குள்ளே அவர்களின் இயக்கம் மிகச் சிறியதாக உள்ளதுடன், அவர்களுக்கு உடற்பயிற்சியும் பற்றாக்குறையாக உள்ளது. இதனால் உண்டாகிற தொப்பை தொடர்புடைய பிரச்சினைகளால் அவர்கள் அவதிப்படுகின்றனர்.

>> திருமணங்கள் / மற்ற பெரிய நிகழ்ச்சிகள் போன்ற மிகப்பெரும் நிகழ்ச்சிகளில், அவர்கள் அனைத்தையும் அனைவருக்காகவும் செய்கின்றனர். அவர்கள் அலுமினியத்தால் முலாம் பூசப்பட்ட ஒரு பெரும் பாத்திரத்தில், பெரும் வகையில் அனைவருக்காகவும் சமைக்கின்றனர். சமையலுக்கான பாத்திரமானது முறையாக அலுமினியத்தால் முலாம் பூசப்படாமல் இருந்தால், சமைக்கப்பட்ட இறைச்சி / உணவு சிறந்ததாக இருக்காது. அவர்கள் ஒவ்வொரு முறையும் அலுமினியத்தால் முலாம் பூச, சுமார் 6 கிலோ கிராம் அலுமினியத்தை பயன்படுத்துகின்றனர். இந்த முலாம் சுழற்சி 6 பெரிய சமையல் நிகழ்ச்சிகளில் இழக்கப்பட்டுவிடும். தோராயமாக, ஒரு கிலோகிராம் அலுமினியம் உணவு சமைத்தலின்போது கலக்கப்பட்டு, அது உணவுடன் சென்றுவிடுகிறது. இது கேன்சருக்கு முக்கிய காரணம். ஏனென்றால் இந்த உலோகம் உணவுடன் சேர்ந்து உண்ணப்படும்போது புற்றுநோயை உண்டுபண்ணுவதற்கான காரணமாக இருக்கிறது.

>> காயல்பட்டினம் மக்களின் மற்றுமொரு உணவுப் பழக்கம் அதிக கொழுப்புச் சக்தி நிறைந்ததான டால்டாவை உண்ணுவது ஆகும். இங்கு ஒரு செழிப்பான உணவைப் பார்க்கும்போது, எவரொருவரும் டால்டா அடுக்கினை காண முடியும். அது அவர்கள் உண்ணுவதற்கு முன்னர் வடிக்கப்படும். இது அதிக கொழுப்பு நிறைந்த பொருளாகும். நெய் அதிக செலவுடையதாக இருப்பதும், மாற்றுப் பொருளாக டால்டாவை (நெய்யை விட) 25% குறைந்த செலவில் பயன்படுத்துவதற்கு ஒரு காரணமாகும். அது அதிக அளவில் பிரச்சனைகளுக்கு வழிவகுக்கிறது.

>> காயல்பட்டினம் மக்கள் அனைத்து நேரங்களிலும் அசைவ உணவை எடுத்துக் கொள்ளும் மனப்பாங்கை உடையவர்களாக இருக்கின்றனர். அது அவர்களின் உணவுப் பழக்கத்தில் கண்டிப்பான ஒன்றாக இருக்கிறது. இன்று இறைச்சியின் தரத்திற்கு எந்த சான்றிதழ்களும் இல்லை. அந்த விலங்குகள் தங்களுக்குக் கிடைக்கும் அனைத்துவித உணவு ஆதாரங்களையும் உண்ணுகிறது. ஆகவே உடல் ஆரோக்கிய ரீதியாக அனைத்து வகையான இறைச்சிகளை உண்பது ஆபத்தானதாகும். புற்றுநோயை உண்டுபண்ணுவதற்கான பல கதைகளை இவை வழங்குகின்றன.

>> மேற்கண்ட அனைத்துடனும், விட்டமின் டி குறைபாடு, உடற்பயிற்சி பற்றாக்குறை, சிறிய வீட்டிற்குள்ளேயான நகர்வு, உணவுப் பழக்கம், அதிக அளவு கொழுப்பு மற்றும் பல அங்கே புற்றுநோய்க்கான இயற்கையான காரணிகளாக அமைந்துள்ளது.

>> சில்வர் முலாம் பூசப்பட்ட இனிப்பு வகைகளை உண்பது அவர்களின் விருப்பத்துக்குண்டான மற்றுமொரு உணவுப் பழக்கமாகும். இது புற்றுநோய்க்கான ஒரு அதிமுக்கியத்துவ காரணமாகும்.

>> மற்றுமொரு முக்கியமான காரணம், காயல்பட்டினத்தில் பெரும்பாலும் அனைத்து தெருக்களிலும் அலைபேசி கோபுரங்கள் இருப்பது. அதிக அளவில் கோபுரங்கள் காயல்பட்டினத்தின் தெருக்களை ஆக்கிரமித்திருக்கின்றன. இந்த வகை கோபுரங்களிலிருந்து வெளியிடப்படுகிற கதிர்கள் நிச்சயமாக புற்றுநோய்க்கான காரணங்களாகும் என்பதை மதிப்பாய்வுகள் நிரூபித்திருக்கின்றன.

>> மற்றொரு காரணம் அதிக அளவில் மாத்திரைகளை காயல்பட்டினத்தில் பயன்படுத்துவதைக் காணலாம். இது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. மேலே தெரிவிக்கப்பட்ட பல காரணங்களுக்கு மருத்துவர்களை (புற்று நோய் இல்லாவிட்டாலும்) மருத்துவர்களை அடிக்கடி அணுகுகின்றனர். இதனால் தொடர்ந்து மாத்திரைகள் உட்கொள்ள வேண்டியுள்ளது. இதனாலும் கேன்சர் உண்டாகும்.

புற்றுநோய்க்கான சில காரணங்களைப் பார்த்தாகிவிட்டது. காயல்பட்டினம் அல்லாத ம்ளீநிக்கு அருகாமையில் இருக்கும் கிராமங்களிலிருந்து மக்களுக்கு எந்த நோய் இருந்ததாகவும் பதிவு செய்யப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், ம்ளீநிவிலிருந்து பணிமூப்பு அடைந்த நூற்றுக்கணக்கான பணியாளர்கள் கட்டுமஸ்தான உடல்நிலையையும், 10 குழந்தைகள் வரை பெற்றும் வாழ்ந்து வருகின்றனர். அவர்கள் எங்கள் நிறுவனத்தின் மிக அருகில் இருக்கின்றனர். மற்றும் எதுவும் அவர்களை பாதிக்கவில்லை. ஆலையைச் சுற்றியுள்ள மக்களிடம் ஒரு பொது மதிப்பாய்வு மற்றும் ஆய்வு மேற்கொண்ட சுகாதாரத் துறை, அவர்களின் மருத்துவமனைகளில் புற்றுநோய்க்காக எந்த பதிவுகளும் இல்லை என்பதை உறுதி செய்துள்ளது.

புற்றுநோய்க்கு பலவித காரணங்கள் இருக்கின்றன. புற்றுநோய் பாதிப்பை ஒருவர் பெறுவதற்கு நூற்றுக்கணக்கான காரணங்கள் இருப்பதை மருத்துவ வரலாறு உறுதிப்படுத்தியுள்ளது. பாதரசத்தை (Mercury) பயன்படுத்திய காலங்களில், பாதரச பயன்பாட்டுடன் மிக அருகில் இருந்து பணியாற்றியவர்களை நிறுவனம் பரிசோதனைக்கு அனுப்பியிருந்தது. அவர்களின் உடல்நிலை நன்றாகவும், உடல் கட்டுடனும் இருப்பதாக அறிக்கை வந்தது. அந்த அறிக்கை வேலூர் மருத்துவமனையால் சுதந்திரமாக மதிப்பீடு செய்யப்பட்டது.

புற்றுநோய் ஐந்து பெரும் பிரிவுகளாக பிரிக்கப்படுகிறது: (1) உடலின் உள் மற்றும் வெளி பாகங்களான நுரையீரல், பெண் மார்பகங்கள் மற்றும் கோலன் போன்ற பாகங்களில் செல்கள் அமைந்துள்ளது கார்சினோமாக்களாகும். (2) எலும்பு, குலுத்தெலும்பு, கொழுப்புகள், இணைப்புத் திசு, தசை மற்றும் தொடர்புடைய மற்ற திசுக்களில் செல்கள் அமைந்துள்ளது சார்கொமாக்கள் ஆகும் (3) எலும்பு மஜ்ஜைகளில் துவங்கி மற்றும் அடிக்கடி இரத்த ஓட்ட மண்டலத்தில் அடைவது லிம்போமாக்கள் ஆகும். (4) எலும்பு மஜ்ஜைகளில் துவங்கி மற்றும் அடிக்கடி இரத்த ஓட்ட மண்டலத்தை இணைக்கும் லுக்கீமியாக்கள் ஆகும். (5) தைராய்டு, பிட்யூட்டரி சுரப்பி, அட்ரினா சுரப்பி மற்றும் மற்ற சுரப்பித் திசுக்களில் உருவாகும் அடினோமாக்கள் ஆகும்.

புற்றுநோய்க்கான பொதுவான பெரும்பான்மையான காரணங்கள் வாழ்க்கை முறையுடன் தொடர்புடைய காரணிகளாக இருக்கின்றன. (1) புகையிலை (புகைத்தல்) (2) தவறான உணவுப் பழக்கங்கள் (உணவுக் கட்டுப்பாடு) (3) சில வகையான தொற்றுகள் மூலமாக (4) குடும்பங்களின் மூலமாக வருகின்ற மரபுக் காரணிகள் (5) சில வகையான கதிர்வீச்சுகள் (6) மதுவின் காரணமான உடல் செயற்பாடுகள் (7) சூரிய ஒளியின் பாதிப்பு (8) புற ஊதாக் கதிர்களின் பாதிப்பு (9) எக்ஸ் கதிர்கள் மற்றும் காமாக் கதிர்களின் பாதிப்புகள்

கட்டுபாடற்ற செல் வளர்ச்சியால் உண்டாகும் நோய் புற்று நோய் ஆகும். நூற்றுக்கணக்கான புற்றுநோய் வகைகள் இருக்கின்றன. பலவித காரணங்களுடன் ஒரு ஒன்றிணைந்த தொகுதி நோயாக புற்றுநோய் இருக்கிறது. டிஎன்ஏவினை உடைக்க காரணமாக இருக்கின்ற எந்தவொரு அடைப்படைக்கூறும் புற்றுநோயாகும். மனித பாப்பிலோமா வைரஸ் செர்விகல் புற்றுநோயை ஏற்படுத்துவது போல சில வகையான வைரஸ்கள் புற்றுநோய் ஏற்பட காரணமாக இருக்க முடியும். ஹெப்பாடிடிஸ் பி மற்றும் சி (மஞ்சள் காமாலை) கல்லீரல் புற்றுநோய்க்கு காரணமாகிறது. எப்ஸ்டீன் பார் வைரஸ் குழந்தைத் தன்மை புற்றுநோய்க்கு காரணமாகிறது. எச்ஐவி வைரஸ் எதிர்சக்தி அமைப்பை பாதிப்பதோடு, புற்றுநோயை வளர்ப்பதற்கும் வழிவகுக்கிறது. புகையிலை புகைப்பது மற்றும் மது அருந்துவது நுரையீரல் புற்றுநோய், தொண்டை புற்றுநோய், வாய் புற்றுநோய் மற்றும் கல்லீரல் புற்றுநோய்க்குக் காரணமாகிறது.

கெடாமல் இருப்பதற்காக, சிலவகை இறைச்சி உணவுகளுக்கு (பதப்படுத்தப்பட்ட இறைச்சிகள் மற்றும் புகைப்பதனப்படுத்தப்பட்டவைகள்) சேர்க்கப்படும் சோடியம் நைட்ரைட்கள் புற்றுநோய்க்குக் காரணமாகும் கார்சினோஜன்கள் ஆகும். அதிக அளவில் கொழுப்பில் தோய்க்கப்பட்ட பதப்படுத்தப்பட்ட பன்றி இறைச்சி மார்பக புற்றுநோய்களுக்குக் காரணமாகிறது. ஹைட்ரோ ஜெனரேட் செய்யப்பட்ட எண்ணெயைக் கொண்ட டோனட்கள் புற்றுநோய்க்குக் காரணமாகிறது. ஹைட்ரோஜெனரேட் செய்யப்பட்ட எண்ணெயில், அதிக வெப்பநிலையில் தயாரிக்கப்படும் பிரென்ச் ப்ரைஸ் புற்றுநோய்க்குக் காரணமாகிறது. வெண்மை மாவு, சர்க்கரை மற்றும் ட்ரான்ஸ் கொழுப்பு கொண்ட சிப்ஸ், க்ரேக்கர்ஸ், கூக்கிஸ் போன்றவை அக்ரிலாமிடீஸ்னை பெற்றுள்ளதால், அவை புற்றுநோய்க்கு காரணிகளாக உள்ளது. ஆஸ்பெஸ்டாஸ், புகைக்கக்கூடிய புகையிலையின் அங்கப் பொருட்கள், அப்லாடாக்ஸின், ஆர்சனிக் போன்ற வேதியியல் கார்சினோஜன்கள் புற்றுநோய்க்குக் காரணமாகின்றன. சிலவகை வைரஸ்கள், பாக்டீரியாக்கள் மற்றும் ஒட்டுண்ணிகள் மூலம் புற்றுநோய் வருகின்றது. ஹைட்ரோசைக்டிக் அரோமாடிக் அமீன்களை உருவாக்குகின்ற அனைத்துத் தீப்பட்டுக் கருகிய உணவுகளும் புற்றுநோய்க்குக் காரணமாகின்றன. அதிக அளவில் உப்புப்படுத்தப்பட்டவைகள், புகைக்கப்பட்ட, ஊறுகாய் உணவுகள் வயிற்றுப் புற்றுநோய்க்குக் காரணமாகின்றது.

எனவே DCW தொழிற்சாலையின் வேதிப்பொருட்களினால் புற்றுநோய் வருகிறது என கூறுவது தவறான ஆதாரமற்ற குற்றச்சாட்டாகும்.

மேற்கண்ட வாசகங்கள், டி.சி.டபிள்யு. நிறுவன துணைத் தலைவர் திரு. ஜி.ஸ்ரீனிவாசன் தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியத்திடம் டிசம்பர் 03, 2012 அன்று சமர்ப்பித்த அறிக்கையின் தமிழாக்கம் ஆகும்.

(நாள்: 31.05.2013)

வெளியீடு:
காயல்பட்டினம் சுற்றுச்சூழல் பாதுகாப்பு அமைப்பு - KEPA
(Registered under Tamilnadu Societies Registration Act, 1975 REGN. No. 11 / 2013 - Thoothukudi District)
(கடைப்பள்ளி எதிரில்) 51 / H1, ஆஸாத் தெரு (முதல் மாடி), காயல்பட்டினம்.


ஆங்கிலத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள அந்த அறிக்கையின் மூல வாசகங்கள் வருமாறு:-









இவ்வறிக்கை, பொதுமக்கள் பார்வைக்கு பிரசுரமாக அச்சிடப்பட்டு, இன்று ஜும்ஆ தொழுகைக்குப் பின், KEPA சார்பில் நகரின் 4 ஜும்ஆ பள்ளிகளிலும் அனைத்து பொதுமக்களுக்கும் வினியோகிக்கப்பட்டது. பிரசுரம் வருமாறு:-




Previous News ItemNext News Item
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. விஷம் தலைக்கேறிவிட்டது...!
posted by M.N.L.முஹம்மது ரபீக், (காயல்பட்டினம்.) [31 May 2013]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 27641

DCW வின் விஷம் கக்கும் கருநாகமே...! உன் விஷப் பல்லைப் பிடுங்கி செயலிழக்கச் செய்யும் காலம் வெகு தொலைவில் இல்லை! மக்கள் சக்திக்கு முன் மண்டியிடாத எந்த சக்தியுமில்லை! நீ எடுத்துள்ள வாந்தியிலிருந்தே தெரிகின்றது உனக்கு செரிமானக் கோளாறு என்று! இனி பேதி ஒன்றுதான் பாக்கி அதுவும் விரைவில் வெளியகும்.

-ராபியா மணாளன்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
2. .அயோக்கிய அறிக்கை தந்த அரக்கன் !
posted by முஹம்மது ஆதம் சுல்தான் (YANBU SAUDI ARABIA ) [31 May 2013]
IP: 176.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 27647

கம்பெனி விசியமாக அவசரமாக ஒரு மீடிங்கிக்கு சென்று கொண்டிந்த நான் மேலோட்டமாக இந்த DCW துணைத் தலைவர் அயோக்கிய அறிக்கையை படித்தவுடன் ரத்தம் கொதித்துவிட்டது.

செ....அடி பதிலை,பல ஆதரங்களுடன் இன்ஷா அல்லாஹ் பின்னர் கொடுக்கிறேன்!

நான் இப்பொழுது சொல்ல வருவது,காயல் மண்ணில் பிறந்த தன்மானம் உள்ள எந்த ஒரு உண்மையான காயல் குடிமகனும் இனிமேல் இந்த அயோக்கியமான அவதூறு அறிக்கை அளித்தவரை எந்த ஒரு நிகழ்சிக்கும் நமதூருக்கு அழைக்க மாட்டான் என்று நம்புகிறேன்! மீறி செய்பவன் காயல் குடிமகனாக இருக்கவும்மாட்டான்.

கொதிப்புடன்,
முஹம்மது ஆதம் சுல்தான்

Moderator: Comment edited!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
3. ஓநாய் அழுகிறது.
posted by Abdul Wahid S. (kayalpattinam) [01 June 2013]
IP: 123.*.*.* India | Comment Reference Number: 27651

ஆடு நனைகிறதென்று (பல ஆடுகளை கொன்ற) ஓநாய் அழுகிறது.

திருடனே மக்களுடன் சேர்ந்து திருடன் திருடன் என்று கத்திய கதைதான் ஞாபகத்திற்கு வருகிறது.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
4. Re:...
posted by Mohamed Sarjoon (sharjah) [01 June 2013]
IP: 176.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 27653

அடப்பாவி... அப்பா மற்றும் அம்மாக்களோடு கூடப் பிறந்தவர்களின் மக்களை மண முடித்தால் கேன்சர் வரும் என்றால், கூடப்பிறந்த அக்கா மகளை மணமுடிக்கும் உன் கூட்டமே ஒட்டு மொத்தமா அழிஞ்சி இருக்குனுமேடா?


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
5. Re:...
posted by Mohamed Azib (Holy Makkah) [01 June 2013]
IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 27655

முழுக்க முழுக்க வெறும் பொய்யை மூலதனமாக்கி நச்சு விஷத்தை அறிக்கையாக்கி கக்கியுள்ளது இந்த கொடிய பாம்பு, இதை சட்டம் எனும் தடியால் அடிக்க முடியுமா என்பது கேள்விக்குறியே?


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
6. குடல் கொதிக்கிறது!
posted by S.K.Seyed Ibrahim (Kayalpatnam) [01 June 2013]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 27657

திரு. ஸ்ரீனிவாசன் அவர்களின் கருத்துக்கு முற்றிலும் நான் மாறுபடுகிறேன்.

அவர் அளித்துள்ள இந்த அறிக்கையில், காயல்வாசிகளின் வாழ்க்கை முறை குறித்து கூறியிருக்கிறார். அதில் மிக முக்கியமாக குடியிருக்கும் வீடு குறுகியது என்றும், உண்ணும் உணவு முறை குறித்தும் குறிப்பிட்டிருக்கிறார்.

இவைதான் காரணமென்று சொன்னால், நகர்ப்புறங்களில் ஃப்ளாட் சிஸ்டம் அடிப்படையில் கட்டப்பட்ட வீடுகள் அனைத்தும் அப்படித்தானே உள்ளன?

அதேபோன்று, உணவுப் பழக்கவழக்கத்தை புற்றுநோய்க்குக் காரணமாக அவர் கூறியிருப்பதும் நகைப்பிற்குரியது.

அலைபேசி கோபுரங்களைக் குறிப்பிடுகிறார். அதிலுள்ள கெடுதியை மறுப்பதற்கில்லை என்றாலும், அது இந்த ஊரில் நிறுவப்பட்டு சில ஆண்டுகளே ஆகின்றன. ஆனால் புற்றுநோய் இத்தொழிற்சாலையின் தாக்கம் இந்தப் பகுதி பூமியில் நிலைபெறத் துவங்கியது முதலே உள்ளது.

நாங்கள் முன்வைக்கும் குற்றச்சாட்டுகளோ, இந்த நச்சு ஆலையின் 50 ஆண்டுகால மாசு பற்றியதாகும். இது காயல்வாசிகளுக்கு மட்டுமல்ல! சுற்றுவட்டார மக்கள் அனைவரையும் பாதிக்கிறது. சுற்றுவட்டார மக்களெல்லாம் நன்றாக இருக்கிறார்கள் என்றால், 26.05.2013 அன்று ஆறுமுகநேரியில் ஒரு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றதே, ஏன்? அதில் நானும் கலந்துகொண்டு கண்டன உரையாற்றினேன்.

உன் ஆலையின் பாதிப்பை உணர்த்த, ஆலையைச் சுற்றி ஒவ்வொரு நாளும் ஓடிக்கொண்டிருக்கும் துருப்பிடித்த வாகனங்களே கண் கண்ட சாட்சி. இரும்பு வாகனத்திற்கு இந்த நிலையென்றால், இரத்தம் ஓடும் உடம்புக்கு பாதிப்பு வரும் என்பதைக் கூற, திருச்சி ரோஸ் கார்டனிலிருந்து டாக்டர் கோவிந்தராஜனா வர வேண்டும்?

ஒன்றை மட்டும் இறுதியாகக் கூறிக்கொள்கிறேன்! சுற்றுவட்டாரத்தில் அனைவரும் நன்றாக இருக்கிறார்கள் என்பது இந்த ஆலையின் எச்சில் எலும்புக்கு வாய் பிளக்கும் சிலரை வைத்துக்கொண்டு ஆலை நிர்வாகம் உதிர்க்கும் சொற்களே. அப்படிப்பட்ட எச்சில் எலும்புகள் காயல்பட்டினத்திலும் உள்ளனர்.

வேடிக்கை என்னவென்றால், மற்ற இடங்களில் அவர்களைக் கண்டுபிடிப்பது சிரமம். ஆனால், காயல்பட்டினத்தில் உன் ஆலைக்கு ஆதரவாக வாய் திறந்தாலே - அவன் வாங்கித் தின்று கொழுத்தவன் என்பதை கண்ணை மூடிக்கொண்டு பச்சைக் குழந்தையும் சொல்லிவிடும்.

விரிவையஞ்சி முடிக்கிறேன். தேவைப்பட்டால் இன்ஷாஅல்லாஹ் தொடருவேன். உன் நச்சு ஆலைக்கெதிராக நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தின்போது இந்திய தலைநகர் டில்லியில் நாடாளுமன்ற உறுப்பினரிடம் ஜெய்ப்பூர் காயல் நல மன்றம் சார்பில் மனு அளிக்கச் சென்ற குழுவில் நானும் இடம்பெற்றவன் என்ற உரிமையிலேயே இக்கருத்தைப் பதிவு செய்துள்ளேன்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
7. இதை தட்டி கேட்க யாரும்மில்லையா KEPA வை தவிர !!!
posted by salman faris (YANBU) [01 June 2013]
IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 27660

அன்பார்ந்த நமது காயல் மக்கள்கலை நமதுரையும் நமது மக்களின் வாழ்க்கை முறை குறித்தும், சமூகதைத்யும் இழிவு படுத்தி அவதூறு அறிக்கை விட்ட அந்த துணைத்தலைவர் ஜி.ஸ்ரீனிவாசன் மீதும் அந்த தொழிற்சாலை DCW மீதும் .....நமது ஊர் மக்கள் இப்போமாவது ஒன்று சேர்ந்து இனியாவது நடவடிக்கை எடுக்கவும்...........

சில மாதங்களுக்கு முன் நடை பெற்ற முற்றுகை போராட்டதில் நமது ஊரை சார்ந்த சில முக்கிய் பிரமுகர்கள் போராட்டதில் கலந்து கொள்ளவில்லை அதையெல்லாம் மறந்து விட்டு இனியாவது ஒற்றுமையாக இருந்து செயல்பட்டு அந்த தொழிற்சாலை DCW மீது நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்..........

KEPA வின் இளம் பிஞ்சுகளை நீங்கள் உங்களின் சேவையை ஆரம்பியுங்கள் ......நீங்கள் உங்களின் KEPA வின் மூலம் நமது ஊரு மக்களின் நலனை நாடி நீங்கள் எடுத்த மிக பெரிய முயற்ச்சி வல்ல அல்லாஹ்வின் அருளால் மிக விரைவில் வெற்றி அடைவோம் இன்ஷால்லாஹ் ......

குறிப்பாக இதை நிலையில் நமது மக்கள் ஒற்றும்மையின்ரி இருந்றல் ஒரு ஸ்ரீனிவாசன் இல்லை பல ஸ்ரீனிவாசன் விளைவார்கள்.

Moderator: Comment edited!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
8. உன்னை விட பல துறைகளில் அறிவு திறன் படைத்தவர்கள் பலர் எங்கள் சகோதரர்களில் உண்டு...
posted by நட்புடன் - தமிழன் முத்து இஸ்மாயில் (காயல்பட்டினம்.) [01 June 2013]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 27662

நீர் சேமிப்பு நீரோடை ஆற்றில் உனது தொழிற்சாலையின் இரசாயன கழிவுகளை கொட்டி அங்குள்ள நல்ல நீரை விஷத்தன்மை அடைய வைத்து மாசு படுத்தி அங்கு மேய்ச்சலுக்கு வரும் கால்நடைகள் ஆடு - மாடுகள் தாகத்தால் நீர் அருந்த முடியாமல் மதி இழந்த கால்நடைகள் வேறு சூழ்நிலை அறியாது உனது இரசாயன கழிவுகளை குடித்து கொடிய சாவுகளை அடைகின்றன...

உனது இந்த கொடிய அமில கழிவு கலத்தல் செயலுக்கு எனது 2 ஆடுகளை நான் பறி கொடுத்துள்ளேன்... என்னைப் போல பலர் தனது கால்நடைகளை இழந்துள்ளார்கள்... மதி இழந்த கால்நடைகளின் பாவம் உன்னை சும்மா விடாது...

பல உயிர்களை கொன்று தன் வசதியை பெருக்கும் உனக்கு காயல்பட்டினத்தின் வாழ்க்கை முறையை பற்றி உனக்கு என்ன தெரியும்...?

பிற உயிர்களை கொன்று அதன் எலும்பு துண்டுகளை உண்ண வைத்து அதை உண்டவர்கள் சிலர் உனது (அவதூறு) அறிக்கையை ஏற்று கொள்வார்கள்...

உனது அறிவு - உழைப்பு திறமையால் எத்தனை கோடிகளும் சம்பாதித்து கொள்.. அதற்க்கு நாங்கள் தடையாக இருக்க போவது அல்ல.. குழந்தைகள் உட்பட மனித உயிரையும் - கால்நடைகளின் உயிரையும் - நிலத்தடி நீரையும் - மண் வளத்தையும் - நல்ல நீர் ஆற்றையும் - கடல் வளத்தையும் - நீ அழித்து வருவதே எங்களின் ஆதங்கம்..! மேலும் எதிர்ப்புகளை செய்கின்றோம்...!

உனது அறிக்கை உன்னை போன்று கொடிய மனநிலை உள்ளவர்கள் சரி காண்பார்கள்... அது எங்களிடம் பலிக்காது.. காரணம் உன்னை விட பல துறைகளில் அறிவு திறன் படைத்தவர்கள் பலர் உண்டு...

Moderator: Comment edited!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
9. Re:...
posted by P.S.ABDUL KADER (KAYALPATNAM) [01 June 2013]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 27664

அனைத்து சமூக மக்களின் ஒற்றுமையை சீர்குலைக்கும் விதமாக, குறிப்பாக காயல் இஸ்லாமியர்களை வீண் வம்புக்கு துண்டும் விதம் அவதுறு அறிக்கை வெளியிட்ட DCW துணைத் தலைவரை வன்மையாக கண்டிக்கிறோம்.

அணைத்து சமூக மக்களை மாமா மச்சான் என்று பலகி வருபவர்கள் காயல் மக்கள்தான், பிற இடங்களை விட இந்த பகுதி மக்கள் உன் பார்வைக்கு வித்தியாசமாகத்தான் இருக்கும்.

- அனைத்து சமூக மக்களுமே தனித்தனி வாழ்க்கை முறையை கடைப்பிடித்து வருகிண்டார்கள், இது காயல் இஸ்லாமியர்களுக்கு என்று தனி விதிவிலக்கல்ல.

- 8 க்கு 10 சதுரடி இல் 2 வாழை மரத்துடன் வாழும் உமக்கு காயல் மக்களின் பற்றாகுறை பேச என்ன தகுதி.

- அக்கா மகளிடம் (திருமண) உறவு கொண்டாட துடிக்கும் உமக்கு விட்டமின் குறைபாடு இல்லையா?

-அசைவம் என்று சொல்லிக்கொண்டு க,உ, ப தின்னும் உமக்கு கொழுப்பு இல்லையா?

Moderator: Comment edited!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
10.
posted by சாளை S.I.ஜியாவுத்தீன் (அல்கோபார்) [01 June 2013]
IP: 37.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 27668

மரியாதைக்குரிய டி.சி.டபிள்யு. துணைத்தலைவர் அவர்களின் அவதூறு அறிக்கையை படித்தவுடன், " படித்தவன் சூதும் வாதும் செய்தால் அய்யோ என்று போவான் " - என்ற வாக்கு தான் நினைவுக்கு வருகின்றது.

அவர் கூறிய அனைத்து கருத்துக்களும் கீழக்கரை, அதிராம்பட்டினம், கடற்க்கரை ஓரம் அமைந்துள்ள அனைத்து ஊர்களிலும், கேரளாவிலும், ஸ்ரீலங்காவிலும் பின்பற்றி வருகின்றார்கள். அங்கு எல்லாம் இது மாதிரியான கொள்ளை நோய்களோ, கான்சரோ இல்லையே. காரணம் அங்கு டி.சி.டபிள்யு இல்லை.

ஒரு இடத்தில் மட்டும் மறந்து ஒரு உண்மையை சொல்லியுள்ளார்,

- " அந்த விலங்குகள் தங்களுக்குக் கிடைக்கும் அனைத்துவித உணவு ஆதாரங்களையும் உண்ணுகிறது " -

உண்மை தான் ஐயா.. உண்மை தான். . உன் ஆலை வெளியேற்றும் நச்சுக்களிவுகளால் நீர்,காற்று, நிலம், பயிர்கள் அனைத்தும் விஷமாக மாறியுள்ளது.

ஆறறிவு உள்ள நீங்களே இது மாதிரி நடந்துக்கொண்டால், ஐந்து அறிவு உள்ள மிருகம் எதை உண்ணும். பாவம் அதற்க்கு விஷ பயிர், விஷ தண்ணீர் என்று பிரிக்க தெரியவில்லையே. இயற்கையான விஷ பயிர் என்றால் அதற்க்கு தெரியும். நீங்கள் தான் இயற்கையையே மாற்றி வைத்துள்ளீர்களே.

இவரின் அறிக்கையை படித்து படித்து ஆத்திரம் தான் வருகின்றது. கொய்யாலே..!! அதிகம் எழுதினால் அட்மின் அவர்கள் கத்திரி போட்டுவிடுவார்.

சாளை S.I.ஜியாவுத்தீன், அல்கோபார்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
11. இவலா நம்மஊர பத்தி பேசுற
posted by shaha (Madurai) [01 June 2013]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 27670

இவலா நம்மஊர பத்தி பேசுற? இவ்வளவ் வருசமா ஊருல இல்லாத நோய் நீ புதுஷா ஒரு ''வேதி'' பொருள் தயாரித்தியே அப்போதான்டா வந்துது நோய்! பாவி பயலே இதுல கம்ப்லையிண்டு வேர

Moderator: Comment edited!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
12. Re:...
posted by nizam (india) [01 June 2013]
IP: 115.*.*.* India | Comment Reference Number: 27671

அப்பட்டமான மழுப்பல்.

திரு ஸ்ரீனிவாசன் அவர்களே ஒரு நாள் காயல்பட்டணம் திருச்செந்தூர் ஆறுமுகநேரி ஆத்தூர் அதன் சுற்று வட்டாரங்களில் இறைச்சி கடைகளை பாஸ்ட் பூட் கடைகளை நோட்டமிட்டு பாருங்கள். இஸ்லாமியர்களுக்கு இணையாக மற்ற சமூகத்தினரும் இருப்பதை காணலாம். எனக்கு மாற்று மததினரில் அதிகமான நண்பர்கள் மிகுந்த வருத்தத்துடன் அவர்களை சம்பந்த படுத்திறேன். மேலும் மேலும் தொலைகாட்சி சமையல் நிகழ்ச்சி தாராள பொருளாதார மயம் போன்றவற்றால் இந்தியாவின் கணிசமான மக்கள் இறைச்சி பாஸ்ட் புடை நோக்கிதான் பயனிக்கரார்கள். சிலகாலம் முன்பு நடந்த நீயா நானா நிகழ்ச்சியில் புரியப்பட்டது.

இப்படிப்பட்ட சூழ்நிலையில் ஒரு குறிப்பிட்ட சமுகதிநிரை மட்டும் சம்பந்த படுத்துவது கொச்சை படுத்தும் செயல். ஒரு அறிவார்ந்த சமுகத்தை சார்ந்த படித்த உங்களுக்கு அழகா? காயல் மக்களின் முக்கிய உணவான மீன் தங்கள் தொழிற்சாலை கழிவுகளை சாப்பிட்டு அதை சாப்பிட்டு மனிதர்களுக்கு பாதிப்பு வருதுவதை பலத்த சந்தேகம் எழுந்துள்ளதால்தானோ மீன் உணைவை வசதியாக அறிக்கையில் மறந்து விட்டது என்?

தூத்துக்குடி இல் சிறுபான்மை கிருத்துவர்கள் ஸ்டெர்லைட் எதிராக போராடுகிறார்கள். ஆனால் அந்த நிர்வாகம் அந்த மக்களின் தனிப்பட்ட வாழ்கையை கொச்சைபடுத்தவில்லை

காயல் மக்கள் தனிமையோடு வாழ்வதாக குரிபிட்டீர்கள். அது உண்மையானால் தங்கள் தொழிற்ச்சாலை கட்டுவதற்கு நிலம் ஆதரவு தந்திருபார்களா? விக்கிபீடியா சென்று காயலின் வாழ்க்கை முறையை பண்டித நேரு மார்கோபோலோ பாராட்டியதை அறிந்து உங்கள் வார்த்தைகளை வாபஸ் வாங்கி கொள்ளுங்கள்.

கொஞ்சம் குளிர்சாதன அலுவலகத்தில் இருந்து வெளியே வந்து காயலில் வேலை பார்க்கும் ஆசிரியர் முதல் ஆசாரி வரை பேட்டி எடுத்து பாருங்கள். அவர்கள் சொல்லும் வார்த்தை இந்த ஊர்ருக்கு வந்தவன் பசியோடு திரும்ப மாட்டான் என்பது அறிந்து இப்படி இந்த ஊரை விமர்சித்து விட்டோமே என்று உங்களது மனசாட்சி குத்தும். இன்னும் சொல்ல போனால் உங்கள் தொழிற்ச்சாலையை விட அதிக வெளியூர் மாற்று மதத்தினர் இந்த ஊரை நம்பி கட்டுமானம் சில்லறை வியாபாரிகள் பிழைகின்றனர்

எல்லோரும் வெளி நாட்டில் சென்று வேலை செய்வதாக கூறியுள்ளீர்கள். திரைகடலோடி திரவியம் தேடுவது தமிழனின் பாரம்பரியத்தில் ஒன்று. வெளிநாட்டில் வாழும் இந்தியர்கள் சுமார் ஐந்து கோடி அந்த வருமானத்தில்தான் எல்லா ஊழல்களுக்கு மத்தியில் இந்தியா பிழைத்து கொண்டு இருக்கிறது. தங்கள் குடும்பத்தில் ஒருவர் கூட வெளிநாட்டில் வேலை செய்யவில்லை என கூற முடியுமா? அப்படிப்பட்ட சூழ்நிலையில் காயல் மக்களின் வெளிநாட்டு வாழ்க்கை மட்டும் ஏன் தங்களுக்கு கசக்கிறது.

ஒரு ISO CERTIFIED கம்பனி விதியின் படி இந்திய அரசியல் சட்ட படி ஒரு குறிப்பிட்ட சமூகத்தினரை அவர்களது கலாச்சாரத்தை விமர்சிப்பது சட்டத்தை மீறிய செயலாகும். மிக பெரிய அதிகாரியான அனுபவம் மிகுந்த அதிகாரியான நீங்கள் இது நீங்களாக மட்டும் தயாரித்த அறிக்கையில்லை என திட்டவிட்டமாக கூறமுடியும். இதன் பின்னணியில் சில கைக்குலிகளும் உள்ளனர். காலம் பதில் சொல்லும்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
13. Re:...
posted by NUSKI MOHAMED EISA LEBBAI (Riyadh -KSA) [01 June 2013]
IP: 146.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 27672

ஆடு பாம்பே நீ ஆடு பாம்பே அதிகாரம் (அவாள் ) உன் வசம் என்று ஆடு பாம்பே. விஷம் கக்கி விட்டார். ஜெயினின் உண்ட சோத்துக்கு நன்றி கடன் செலுத்தும் திரு. ஸ்ரீநிவாசன். எங்கள் பழக்க வழக்கம் என்ன என்று எப்படி தெரியும். எங்கள் ஊரில் பாதாள சாக்கடை உண்டா? பன்றிகளின் கூட்டம் சாக்கடையில் கும்மாளம் இடுகின்ற ஊரில் இருந்து கொண்டு எமது ஊர் பற்றி பற்றி அவதூறான அறிக்கை கொடுக்க நீர் யார்? கண்ணாடி வீட்டில் இருந்து கொண்டு கல் எரிய வேண்டாம். யாகாவாராயினும் நா காக்க.

அன்பு KEPA மற்றும் ஐக்கிய பேரவை நிருவாகிகளே ஒன்று படுங்கள். KEPA தலைவர் ஹாஜி காக்கா அவர்களே நீங்களும் ஐக்கிய பேரவையின் நிருவாக குழுவில் உள்ளவர் தானே. தயவு செய்து நான் பெரியவனா ? நீ பெரியவனா என்ற ஈகோ வை ஒதுக்கி தள்ளி நமதூர் பற்றி தவறான அறிக்கை கொடுத்து இருக்கும் DCW நச்சு ஆலைக்கு எதிராக பொருத்தமான வக்கீலை குறிப்பாக இது விசயத்தில் போராடி வரும் ஏற்கனவே DCW WARE HOUSE தூத்துக்குடி இல். அதன் சுற்று சூழல் பாதிப்பு பற்றி வழக்கு தொடுத்து போராடி வரும் வக்கீல் ஜோயல் அவர்களை ஜனாப் காயல் அமானுல்லாஹ் காக்கா (MDMK) அவர்கள் மூலம் சந்தித்து ஆலோசனை பெற்று நமதூர் சார்பில் மான நஷ்ட வழக்கு போட்டு நீதி நியாயம் கிடைக்க ஆவன செய்யுமாறு ரியாத் ( சவுதி அரேபியா ) வாழ் காயல் மக்கள் சார்பில் பணிவன்புடன் கேட்டு கொள்கிறோம். நமது வெற்றியை நாளை சரித்திரம் சொல்லும். இப்படை தோற்கின் எப்படை வெல்லும். எல்லாம் வல்ல அல்லாஹ் நமது மக்கள் மத்தியில் ஒற்றுமையை கொடுப்பானாக ஆமீன்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
14. Re:...
posted by Abu Huraira (Abu Dhabi) [01 June 2013]
IP: 83.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 27673

அன்புள்ள KEPA நிர்வாகிகளுக்கு அஸ்ஸலாமு அழைக்கும்.

உங்களுடைய சேவை மீண்டும் மீண்டும் உயர்வு பெற வாழ்த்துக்கள். அல்லாஹ்விற்கே எல்லாப்புகழும்.

மீண்டும் மக்களை திரட்டி அந்த துணை தலைவர் மற்றும் நிர்வாகம் எதிராக எல்லா ஊர் மக்களையும் இணைத்து போராட்டம் நடத்துங்கள். ஒரு தனிப்பட்ட சமுதாயத்தை (மார்க்கத்தை) பயன்படுத்தியதற்கு துணை தலைவர் மீது வழக்கும் தொடரவும். வல்ல நாயன் தீய அழிவில் இருந்து நம்மை காப்பானாக. ஆமீன். நன்றி வஸ்ஸலாம்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
15. Re:...
posted by Hameed Rifai (Yanbu) [01 June 2013]
IP: 69.*.*.* United States | Comment Reference Number: 27676

யாருக்கும் தெரியாது என்று எண்ணியே டி.சி.டபிள்யு. துணைத்தலைவர் திரு. ஸ்ரீனிவாசன் அவர்கள் இந்த அறிக்கையை, காதும் காதும் வைத்தாற்போல் மாசு கட்டுப்பாட்டு வாரியத்திடம் சமர்ப்பித்திருப்பார் என்று கருதுகிறேன்.

ஆனால், தகவல் அறியும் உரிமை சட்டம் என்ற ஒன்று, இந்திய குடிமகனின் சுதந்திர உணர்வுக்கு இன்றும் சிறு நம்பிக்கையளித்துக் கொண்டிருப்பது அவருக்கு அறிக்கை சமர்ப்பிக்கும் நேரத்தில் கவனத்தில் வராமல் போனதில் வியப்பில்லை.

மக்களிடம், “நான் உங்களோடுதான் இருக்கிறேன்” என்று ஏமாற்றுவதும், மாசு கட்டுப்பாட்டு வாரியத்திடம், அந்த மக்களைப் பற்றியே கதை கதையாய் அளப்பதும் இன்னும் எத்தனை காலத்திற்குத்தான் எடுபடப் போகிறது?

உங்களிடம் பணியாற்றியதற்காக கைநீட்டி சம்பளம் வாங்கியவர்களும், உள்ளதை மறைத்துவிட்டு - உண்மைகளை மறந்தவர்களாக ஜால்ரா தட்டி கைக்கூலி வாங்குபவர்களும் நாளுக்கு நாள் வலிமையிழந்துகொண்டே வருகிறார்கள் என்பதையும், இவர்களைத் தவிர குடிமக்கள் அனைவரும் தெளிவாகவே உள்ளனர் என்பதையும் இனியேனும் கவனத்தில் கொண்டு இந்த ஆலை நிர்வாகம் செயல்பட வேண்டும்.

மீண்டும் சொல்கிறோம்...

பொய்ப் பிரச்சாரங்களைக் கைவிடுங்கள்!

போலிகளை உதறித் தள்ளுங்கள்!

எல்லோருக்கும் பாதிப்பை ஏற்படுத்தித்தான் சம்பாதிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் மண்ணள்ளி வையுங்கள்!

உங்கள் ஆலையை மூட வேண்டாம்! அதைச் சுற்றியுள்ளவர்களுக்கு பாதிப்புகள் எதுவும் ஏற்படுத்தாத வகையில், அரசு விதிகளை மட்டும் மதித்து செயல்படுங்கள்!!

இதுவரை செய்த பாதிப்புகளையும் நீக்கிப் பரிகாரம் காணுங்கள்! தலைமுறை உங்களை வாழ்த்தும்!!

இதை விட்டுவிட்டு, குறுக்குவழி பிரச்சாரங்களை நீங்கள் கைவிடாத வரையில் எங்கள் போராட்டமும் கைவிடப்படாது!!!

இன்னொரு முக்கிய விஷயம்: நகரில் ஐக்கியப் பேரவை உட்பட எல்லோரையும் மதித்தும், அரவணைத்தும், ஆலோசனைகளைப் பெற்றுமே KEPA இயங்கி வருகிறது. எனவே, ஏதோ இன்னும் பிரச்சினைகள் இருப்பது போன்ற மனப்பாங்குடன் கருத்துப் பதிவு செய்து, பேனைப் பெருமாளாக்காமல் நல்ல முறையில் கருத்துப்பதிவு செய்வதே, இப்பணிகள் சிறப்புற நடைபெற துணையாக இருக்கும்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
16. Re:...ஸ்ரீனிவாசா..
posted by mackie noohuthambi (colombo) [01 June 2013]
IP: 223.*.*.* India | Comment Reference Number: 27677

ஒருவனுக்கு ஒருத்தி என்று வாழும் தமிழ்நாட்டில் தமிழ் கடவுளுக்கே இரண்டு மனைவிகள். பரமசிவனுக்கு பார்வதியும் மீனாட்சியும் மனைவிகள். முருகனுக்கு வள்ளியும் தெய்வானையும் மனைவிகள். ஸ்ரீ நிவாசன் போன்ற அக்ரகாரத்து அம்பிகள் அசைவதை தொடுவது பாவம் தீட்டு என்ற நிலை மாறி அவர்கள் இறைசிக் கடையில் தவம் கிடக்கின்ற காட்சிகள் கொஞ்ச நஞ்சமல்ல. குடி போதையில் பேசுகிறவர்கள். ஒரு கோப்பையிலே என் குடியிருப்பு ஒரு கோல மயில் என் துணை இருப்பு என்று கண்டதே காட்சி கொண்டதே கோலம் என்று களியாட்டம் ஆடுகிறவர்கள் குத்தாட்டம் போடுகிறவர்கள், சூதாட்டம் ஆடுகிறவர்கள் எல்லாம் கயல்பட்டினத்தின் பாரம்பரியத்தை பற்றி பேச நாவேடுது வந்ததுதான் ஆச்சரியம்.

ராஜகோபால் ஆச்சாரியாரும் பண்டிதர் நேருவும் பெரியாரும் அண்ணாவும் போற்றி பாராட்டிய காயல்பட்டினம், சமீபத்திலே மது விளக்குக்கு எதிராக நடைபயணம் வந்து வைகோ அவர்கள், தமிழகமே காயல்பட்டினம் போல் அமைதி பூங்காவாக இருக்க வேண்டும் என்று ஆசைபடுகிறேன் என்று சொன்னார். நான் மீண்டும் பிறந்தால் ஒரு காயல்பட்டின தாயின் வயிற்றில் பிறக்க வேண்டும் என்று கலைஞர் சொன்னார்.

எவ்வளவு நெஞ்சழுத்தம் இருந்தால் ஸ்ரீ நிவாசனுக்கு இந்த துணிச்சல் வந்திருக்கவேண்டும். நாங்கள் சமாதான சகவாழ்வை விரும்புபவர்கள். சகோதரத்துவத்தை வளர்ப்பவர்கள். வேறு ஒரு சமுதாயதவரை பற்றி இப்படி எழுதி இருந்தால். இன்றே அவருக்கும் மரண ஓலை வந்திருக்கும். அவர் வீட்டில் கடவுள் படத்துக்கு பதிலாக அவருடை படத்துக்கு மாலை போட்டிருப்பார்கள்.

ஸ்ரீநிவாசன் அவர்களே,

செல்லுமிடத்து சினம் காக்க காவாக்கால்
தன்னையே கொல்லும் சினம்

யாகாவாராயினும் நா காக்க காவாக்கால்
சோகாப்பர் சொல்லிளுக்கு பட்டு

நச்சு கழிவுகளை வெளியேற்றி அதன் மூலம் தன் குடும்பத்தை வளர்த்துக் கொண்டிருக்கும் ஸ்ரீ நிவாசன் அவர்களை உடனடியாக பதவி நீக்கம் செய்ய வேண்டும். காயல்பட்டினம் மண்ணிலிருந்து இந்த சாஹுபுரத்தை அப்புறப்படுத்த வேண்டும்.

சாவை கொண்டு வருவதாலேயே அதற்கு சாகுபுரம் என்று பெயர் வந்தது என்பது ஸ்ரீனிவாசனுக்கு என்ன தெரியும். KEPA நிர்வாகம் இதற்கு உடனடியாக மக்கள் போராட்டம் ஒன்றை முன்னெடுத்து சென்று ஸ்ரீநிவாசன் பொது மேடையில் மன்னிப்பு கேட்க வைக்க வேண்டும். உடனடியாக ஊர் கூட்டத்தை கூட்டுங்கள் அவசரமாக செயல்படுங்கள்.

Moderator: Comment edited!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
17. தாங்களின் இந்த பொய்யான அறிக்கைக்கு எனது கண்டனத்தை பதிவு செய்கின்றேன்...
posted by M.S.M. சம்சுதீன் - நகரமன்ற உறுப்பினர் - 13 வது வார்டு (காயல்பட்டினம்.) [01 June 2013]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 27680

திரு ஸ்ரீனிவாசன் அவர்களே அனுபவம் மிகுந்த பெரிய அதிகாரி என்று நினைத்தேன்... ஆனால் நீங்கள் இப்படி கேவலமாக இறங்கி விட்டீர்களே...! தான் வாழ பிறரை காயப்படுத்தும் வேலையை அல்லவா செய்துள்ளீர்கள்.. எமது ஊரை பற்றி அவதூறான அறிக்கை கொடுக்கும் முன் முதலில் தான் வசிக்கும் இடத்தை மனதில் நினைத்து பாருங்கள்...

எங்கள் ஊரின் பாரம்பரிய உணவு பழக்கம் ஊரில் இருக்கும் போது மட்டும் அல்ல... பறந்து விரிந்து இருக்கும் பல வெளிநாடுகளில் நானும் எங்கள் சகோதரர்கள் அனைவர்களும் இதையே உண்ணுகிறோம்... அங்கு இந்த கொடிய தோல் நோய் - கண் எரிச்சல் - பார்வை மங்குதல் - புற்று நோய் - இடைவிடாத இருமல் - இவைகள் இல்லையே...

நீங்கள் சொல்லும் உணவு பழக்கத்துக்கு ஹார்ட் அட்டாக் வரலாம் என்றுதான் சொல்வார்கள்... மேலே குறிப்பிட்ட நோய்க்கு சம்பந்தமில்லையே... இவைகள் அனைத்தும் தாங்களின் தொழிற்சாலை மூலம் வெளியேறும் அமில விஷ கழிவால் அல்லவா பரவுகிறது...

திரு ஸ்ரீனிவாசன் அவர்களே.. தாங்களின் இந்த அவதூறு அறிக்கையின் மூலம் தாங்களின் மீதுள்ள மதிப்பை நகர மக்களிடமிருந்து மிக கேவலமாக மதிப்பு இழந்து விட்டீர்கள்... என்பதே உண்மை...

தாங்களின் இந்த பொய்யான அறிக்கைக்கு எனது கண்டனத்தை பதிவு செய்கின்றேன்...

மக்கள் மத்தியில் kepa அமைப்பின் மூலம் மேலும் விழிப்புணர்வு தேவை...


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
18. DCW நிர்வாகமே எங்களை இனியும் சீன்டாதே!!
posted by முஹம்மது ஆதம் சுல்தான் (YANBU) [02 June 2013]
IP: 176.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 27691

அண்மையில் மாசுக்கட்டுபாட்டு வாரியம் DCW யிலிருந்து வரும் கழிவு நீரிலும், மண்ணிலும் மாசு இருப்பதை ஊரிஜிதம் செய்து அறிக்கை அனுப்பியது!

அதை மேற்கோள் காட்டி கடந்த வாரம் DCW நிர்வாகத்திற்கு இந்த அறிக்கையை தீவிரமாக பரிசீலனை செய்து உரிய நடவடிக்கையை எடுங்கள் ,உங்கள் ஆலையை மூடுவது எங்கள் நோக்கமல்ல ,நம்முடைய சுற்ற சூழல் மாசுபடாமல்,நோய் கிருமிகள் தாக்கப்படாமல் பாதுகாக்கப்பட வேண்டுமென்பதுதான் எங்களின் எதிர்பார்ப்பு!என்கின்ற மென்மையான வேண்டுகோளை விடுத்திருந்தேன்!

என்னைமட்டுமல்ல நமதூரின் நடுநிலைவாதிகளின் பெருந்தன்மையான அணுகுமுறையைக்கூட அலட்சியம் செய்து,உங்களால் ஆனதை பாருங்கள் என்ற ஆணவத்தோடு அந்த ஆலையின் துணைத்தலைவர் நமதூரையும்,நம் புனித மார்க்கத்தின் அடிப்படையில்வாழும் வாழ்க்கைமுறை கலாசாரத்தையும் கொச்சைபடுத்தும் முகமாக அறிக்கை என்ற பெயரில் அவரின் மனித நிலை தாண்டி கொப்பழித்து இருக்கிறார்!

அவருடைய குற்றசாட்டுக்களை ஏறக்குறைய அவரது பாணி யிலேயே பதில் அளித்தால்தான் உரைக்கும்!

கேள்வி பதில்களை வரிசைபடுதுத்துகிறேன் கீழே:

கேள்வி>1 தனித்த வாழ்க்கைமுறை,2 செனட்டில் எந்த வெளிச்சமும் ,வெளிக்காற்றும் புக முடியாத அளவிற்கு நெருக்கமான வீடுகளின் அமைப்பு!>>>>>இது குற்றசாட்டு.

பதில்>>>> அப்பா! நீர் எந்த உலகத்தில் இருக்கிறீர், அருகிலுள்ள சென்னை பட்டணத்தைப் பார்க்கவில்லையா? ஒவ்வொரு வீடும் நல்ல இட வசதியோடும்,.காற்று மற்றும் சூரிய வெளிச்சதோடும் அல்லவா ஜொலிக்கிறது! உம்நெஞ்சை தொட்டு சொல்லும்,. உம்முடைய பாணியில் அந்த நெருக்கடி குடித்தன வாழ்க்கை வாழும் அனைத்து சென்னை வாசிகளுக்கும் 90%புற்று நோய் பீடித்திருக்க வேண்டுமே ?

தமிழகத்திலேயே ஏன் இந்தியாவிலேயே ஒரு வீட்டிற்கும் அடுத்த வீட்டிற்கும் நடுவே போதுமான இடைவெளி விட்டு,சந்து அமைத்து வீடு கட்டி சகல சுகாதார காற்று வெளிச்சத்தோடு அமையும் ஒரே ஊர் எங்கள் காயல் பட்டணம் ஒன்றுதான்! இதுபோலுள்ள வேறு ஊரை இந்த அமைப்புக்களோடு காட்ட முடியுமா?

கேள்வி>> ரத்த பந்தங்களுடன் திருமண உறவு>>>>> குற்றசாட்டு

பதில்>>> உடன்பிறந்த சொந்த சகோதிரியின் மகளை மனம் முடிக்கிறீர்களே? அது ரத்த பந்தம் ரத்த உறவு இல்லையா? அந்த ரத்த உறவால் உம்முடைய கணிப்புப்படி ஆயிரகணக்கான ஏன் இலட்சக்கணக்கானவர்களுக்கு கேன்சர் நோய் வரவேண்டுமே ஏன் உமது கணிப்பு தவறுகிறது?

கேள்வி>>3 காயலர்கள் பெரும்பாலோர் வெளி நாட்டில் இருக்கிறார்கள்>>>>குற்றசாட்டு

பதில்>> நான் முதல் ஏராளமானோர் வெளி நாட்டில் தான் வாழ்கிறோம் அதனால் கேன்சர் வருகிறது என்றால், இதோ இங்கே நான் வாழும் வெளிநாட்டில் எனக்கு தெரிந்த மாற்றுமத சகோதரர்கள் சுமார் 40 முதல் 45 சதவீதம் வாழ்கிறார்கள் உம்முடைய கணிப்புபடி அவர்களுக்கும் கேன்சர் வரவேண்டுமே?>

கேள்வி>>4 திருமண விருந்து பாத்திரங்கள் சுத்தமில்லாமலும் ,உண்பதற்கு தகுதியற்ற பாதுகாப்பில்லாமல் இருக்கிறது>>>குற்றசாட்டு

பதில் >>ஒரு ஊர் என்று எடுத்துக்கொண்டால் ஏதோ ஒன்றிரண்டு இடங்களில் இதுபோன்ற கவனக்குறைவு ஏற்படுவது இயல்பே. இதனால்தான் கேன்சர் வருகிறது என்றால், நான் கேட்கிறேன், நீங்கள் நடத்தும் திருமண மண்டபத்திலுள்ள அனைத்து பாதிரங்களைஎல்லாம் ஆய்வு செய்வோம் அப்போது தெரியும் உங்கள் சாயல் வெளுப்பதை!

கேள்வி>> 5 காயலில் அணைத்து வீடுகளிலும் அசைவ உணவை உண்கிறார்கள் அதனால் தான் கேன்சர் வருகிறது>>>> குற்றசாட்டு.

பதில்>>அசைவ உணவால்தான் கேன்சர் வருகிறது என்று சொல்லும் நீர் எந்த விஞ்சானியிடம் சான்றிதல் பெற்றீர், உலகத்திலேயே ஒன்று அல்லது ஒன்றரை சதவீத மக்கள் மட்டும்தான் சைவ உணவை உண்கிறார்கள்.

அசைவ உணவால்தான் கேன்சர் வருகிறது என்றால் ஒவ்வொரு ஊரிலேயும் எண்ணிலடங்கா கேன்சர் மருத்துவமனை முளைத்திருக்க வேண்டுமே! சென்னை அடையாறு கேன்சர் மருத்துவமனை திருவனத்தபுரம் கேன்சர் செனட்டர் ,சென்னை தனியார் கேன்சர் செனட்டர் ஆகிய இடங்களில் பல நூற்றுக் கணக்கான சைவம் மட்டுமே உணவாக கொள்ளும் உள்,வெளி கேன்சர் நோயாளிகள் சிகிச்சை பெற்று வருகிறார்கள் என்பது உமக்கு தெரியுமா. (இறைவன் அவர்களுக்கு நற்சுகத்தை கொடுத்தருள வேண்டும்) நீர் விருப்பபட்டால் அங்கு கூட்டிக்கொண்டு காட்ட நான் ஏற்பாடு செய்கிறேன்!

இன்னும் பல பிதற்றல்கள்,

பெறிதாக நீட்ட விரும்பாமல் இறுதியாக ஒரு சம்பவத்தை மட்டும் விளக்கி முடிக்கிறேன்!

கடந்த 1 1/2 வருடத்திற்கு முன்னாள்,நமதூர் சென்னை வாழ் தங்க நகை வியார வர்த்தகர் L .K S. செய்தகமது அவர்கள் நமது KEPA அமைப்பின் செயல்பாடுகளையும்,நமதூரின் பாதிப்புகளையும் தெரிந்து கொள்ள நாடி அச்சேவை செய்யும் அமைப்புகளை நேரில் வரும்படி அழைத்தார்கள் ,KEPA சார்பாக சகோதரர் ADMIN சாலிஹ் அவர்களும்,சவ்தி ஜித்தா காயல் நகர்மன்றம் சார்பாக சகோதரர் முஜாஹிதும்,KWT அமைப்பின் சார்பாக நானும் சென்று அவர்களை சந்தித்தோம்!

KEPA வின் முழுசெயல்பாட்டையும்,CD கேசட்டையும் பார்த்த செய்தகமது அவர்கள், இப் பிரச்சனையை சென்னை அடையாறு கேன்சர் செனட்டர் தலைவி டாக்டர் சாந்த தேவி அவர்களிடம் சமர்ப்பிபோம் அவர்களை சந்திக்க நான் ஏற்பாடு செய்கிறேன் நாளைக்கு அங்கு வந்து விடுங்கள் என்று கூறி சந்திக்கவும் வைத்து விட்டார்கள்!

ஆசியாவிலேயே புகழ்பெற்ற புற்றுநோய் சிகச்சை நிபுணர் பதம ஸ்ரீ சந்தா தேவி அவர்கள் நம்முடைய KEPA வின் செயல்பாட்டு விபர அறிக்கையும் படித்துவிட்டு,அத தருணத்திலேயே அங்குள்ள மற்றய மருத்துவர்களை கூப்பிட்டு உடனே இந்த ஊருக்கு செல்ல ஏற்பாட் செயுங்கள்.ஒரு மருத்துவ குழுவும் வரவேண்டும் என்று உத்தரவு விட்டார்,

அத்தனை பேர்களுக்கும் விமான செலவுகள் முதல் அனைத்து செலவுகளையும் LKS செய்தகமது அவர்களே மேற்கொண்டு டாக்டர் சந்தா தேவி அவர்களை காயலூருக்கு அழைத்தும் வந்து விட்டார்கள்!

சாந்தா தேவி நமதூருக்கு புறப்படும் பொழுது.அவர்கள் சொன்னது நம் ஊர் சுற்றுவட்டார அனைத்து மருத்துவர்களும் காயலுக்கு வரவேண்டும் என்ற கூறினார்கள்,ஆசியாவின் சிறந்த மேதை அழைக்கிராகள் என்ற அகமகிழ்வோடு அனைத்து மருத்துவர்களும் கிழக்கே குமரி மாவட்டம் முதல் மதுரை வரையுலுள்ள ஒரு மருத்துவ பட்டாளமே குமிந்தது!

டாக்டர் சாந்தா தேவி அவர்கள் அனைத்து டாக்ட்டர்களுடன் ஆலோசனை நடத்திய பின்னர் KMT மருத்துமனை திறந்த மேடை அரங்கில் நூற்றுக்கணக்கான ஆண்கள் பெண்கள் மத்தியில் விரிவாக உரையாற்றினார்கள் !

அவர்கள் உரையில் ஒரு சதவீதம் கூட நமதூரின் கலாச்சாரம் பற்றியோ,வாழ்க்கைமுறை பற்றியோ,உணவு பழக்கங்களான அசைவ மற்றும் புலால் உணவு பற்றியோ கொஞ்சம் கூட கோடிட்டு காட்டவில்லை!

மாறாக DCW ஆலையின் செயல்பாடுகளை பற்றி தீவிரமாக கண்காணித்து முடிவெடுப்பதாக கூறினார்கள்! அதோடு மட்டுமல்ல அன்று வந்த அனைத்து மருத்துவர்கள் பட்டாளத்தில் ஒரு மருத்துவர் கூட நம் ஊரின் வாழ்க்கை முறை ,உணவு பழக்கம், கலாசாரம் ஆகிய எதைப்பற்ற்யும் எள்ளளவு கூட எசகு பிசகாக கூறவில்லை!

ஆக இவ்வளவு மருத்துவ மேதை முதல் அனைத்து மருத்துவர்கள் வரை நமதூரைப்பற்றி ஒரு வார்த்தை கூட சொல்லாத நிலையில்,இந்த துணைத்தலைவர் மேதாவித்தனமாக மிகப்பெரிய கண்டுபிடிப்பாக கதை அளந்திருப்பதிலிருந்து அவர் கடைந்தெடுத்த காழ்ப்புணர்ச்சியின் மொத்த உருவமாகத்தான் மிளிர்கிறார், அதற்க்கு மெருகூட்ட ஒருசில எடுபிடி எட்டப்ப வாரிசுகளின் உதவியும் கிடைத்துள்ளது என்பது தான் நிதர்சனமான உண்மை!

அல்லாஹ் அனைத்தையும் அறிந்தவன்!

Moderator: Comment edited!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
19. பூசணிக்காயை சோற்றில் மறைக்க முயற்சி செய்து இருப்பது அவாளே அவளுக்கு தரம் இறக்கி கொண்டார்...
posted by நட்புடன் - தமிழன் முத்து இஸ்மாயில் (காயல்பட்டினம்.) [02 June 2013]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 27699

சகோதரர் முஹம்மது ஆதம் சுல்தான் அவர்களின் ஆணித்தரமான கேள்விகளுக்கு டி.சி.டபிள்யு. துணைத்தலைவர் பதில் தர முடியுமா...?

டி.சி.டபிள்யு. துணைத்தலைவர் ஜி.ஸ்ரீனிவாசன் அவர்கள் ஒரு சிறிய எலுமிச்சை பலத்தை கூட சோற்றில் மறைக்க முடியாத சூழலில் (நெருக்கடி கொடுக்க kepa அமைப்பு) இருக்கும் போது பெரிய பூசணிக்காயை சோற்றில் மறைக்க முயற்சி செய்து இருப்பது அவாளே அவளுக்கு தரம் இறக்கி கொண்டார்...

எனது சகோதரனின் (முஹம்மது ஆதம் சுல்தான் அவர்களின்) கேள்விக்கு ஜி.ஸ்ரீனிவாசன் அவர்களே.. தாங்களின் பதில் என்ன...?


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
20. Re:...
posted by mohmedyounus (muscat) [02 June 2013]
IP: 82.*.*.* Oman | Comment Reference Number: 27704

காயல்பட்டினம் மக்கள்-கறி சாப்ப்பாடு, அலுமினியம் முலாம், சொந்த கார திருமணம், வெளியூர் எல்லாம் இருக்கட்டும்… நாங்கள் ஆறு மாதங்களுக்கு முன்பு நடத்திய போராட்டத்தில் ….நீங்கள் மேற்குறிய காரணங்கள் ஒன்றுமே இல்லாது, உடல் உழைப்பை மட்டுமே கொண்ட மீனவ பெருமக்களும் கலந்து கொண்டு தங்களுக்கு ஏற்பட்ட இன்னல்களை சொன்னார்களே....?

பிரச்சனையை வேறு கோணத்தில் திசை திருப்புவதாக உள்ளது திரு ஸ்ரீனிவாசனின் அறிக்கை… கவனமாக கையாள வேண்டும்.

பதில் அறிக்கை வெளியுடும்போது சகோதர சமுதாயத்தையும் சேர்த்து கொள்ள வேண்டும்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
21. Re:...
posted by Seyed Mohamed Sayna (Bangkok) [02 June 2013]
IP: 58.*.*.* Thailand | Comment Reference Number: 27705

அஸ்ஸலமு அழைக்கும்

வாங்கும் சபலத்துக்கு வேலை செய்ய வேண்டும் , விளக்கு பிடிக்க கூடாது

இவ்வளவு தூரம் பேசி விட்டார் , யாராவது இவர் மீது பொது நல வழக்கு போடுங்கள் எங்களையும், எங்கள் கலாச்சரத்தையும் இழிவு படுத்தி விட்டார், எங்கள் ஒட்டு மொத்த மக்களையும் மனது நோகடிசி விட்டார், யங்கள் மதத்தை இழிவு படுத்தி விட்டார் , இவருக்கு தகுந்த தண்டனை வழங்க வேண்டும் என்று ஒரு பொது நல வழக்கு போடுங்க ,

இதுக்கு மேலும் இவருடன் செய்றது இலவச மருத்துவ முகாம் , இவருடன் சேர்ந்து மக்களுக்கு நல்லது செய்கின்றோம் என்று , சொல்லாதீர்கள் ,

அன்று போட்டி வங்கி விட்டு கண்டு கோளாமல் இருந்தீர்கள் இன்று அவர் உங்களையும் சேர்த்து வினா எழுப்பி இருகிறார் ,

இப்படிக்கு
Seyed Mohamed (Sayna)
Kayal Ikiya Mandram (KIM)
Bangkok -Thailand

Moderator: Comment edited!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>

முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்

பிற செய்திகள்

காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
Cathedral Road LKS Gold ParadiseFathima Jewellers
AKM JewellersFaams

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved