Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
12:14:04 PM
ஞாயிறு | 6 அக்டோபர் 2024 | துல்ஹஜ் 1893, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
04:5312:1215:2918:1219:22
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:05Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்08:35
மறைவு18:06மறைவு20:29
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
04:5605:2005:44
உச்சி
12:05
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:2718:5119:15
Go to Homepage
செய்திகள்
Previous News ItemNext News Item
செய்தி எண் (ID #) 11420
#KOTW11420
Increase Font Size Decrease Font Size
செவ்வாய், ஜுலை 30, 2013
டிசிடபிள்யூ தொழிற்சாலை கழிவுகள் கடலில் கலப்பது தொடர்பாக திருச்செந்தூர் கோட்டாட்சியர் அறிக்கை அனுப்பியுள்ளார்: ஆட்சியர் ஆஷிஷ்குமார் தகவல்!
செய்திகாயல்பட்டணம்.காம்
இந்த பக்கம் 2621 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (4) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 0)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}

திருச்செந்தூரில் அமைக்கப்படுவதாக இருந்த உலகிலேயே உயரமான முருகன் சிலை, கோவில்பட்டி கதிரேசன் கோவில் மலையில் அமைக்கப்படும் என ஆட்சியர் ஆஷிஷ்குமார் தெரிவித்தார்.

தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடந்ததது. பொதுமக்களிடம் மனுக்களை பெற்ற ஆட்சியர் ஆஷிஷ்குமார் பின்னர் செய்தியாளர்களிடம் பேசுகையில், கோவில்பட்டியில் ரூ.7 கோடியில் ஹாக்கி மைதானம் அமைக்கப்படவுள்ளது. இதற்காக தோனுகால் கிராமத்தில 17 ஏக்கர் நிலம் தேர்வு செய்யப்பட்டு, அரசு ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

இதில் 6 ஏக்கர் நிலப்பரப்பில் ஹாக்கி மைதானமும், மீதமுள்ள இடங்களில் ஸ்டேடியம், அலுவலகம், வீரர்கள் தங்கும் அறை உள்ளிட்டவை அமைக்கப்பட உள்ளன. தூத்துக்குடியில் படகு போக்குவரத்து விரைவில் தொடங்கப்பட உள்ளது. இது தொடர்பான ஆய்வு பணிகள் தற்போது நடைபெற்று வருகறிது. இதற்காக 4 மோட்டார் படகுகள் விரைவில் வரவழைக்கப்பட உள்ளன.

தூத்துக்குடி, ஸ்பிக் நகர் சுற்றுலா மாளிகையின் பின்புறம் உள்ள கடற்கரை பகுதியில் 1500 ஏக்கர் நிலத்தில் கப்பல் கட்டும் தளம் அமைக்கப்பட உள்ளது. இதற்காக அரசு புறம்போக்கு நிலங்கள் கண்டறியப்பட்டு கையகப்படுத்தப்பட்டுள்ளது. குத்தகைக்கு விடப்பட உப்பள நிலங்கள் கையகப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. சில இடங்களில் குத்தகையை ரத்து செய்ய அரசுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இதில் ஒரு உப்பள அதிபர் நீதிமன்றம் மூலம் தடை உத்தரவு பெற்றுள்ளார்.

டிசிடபிள்யூ தொழிற்சாலை கழிவுகள் கடலில் கலப்பது தொடர்பாக திருச்செந்தூர் கோட்டாட்சியர் அறிக்கை அனுப்பியுள்ளார். மேலும், இந்த ரசாயண கழிவுகள் கலந்த நீர் ஆய்விற்காக கேரளாவில் உள்ள ஆய்வகத்திற்கு அனுப்பப்பட்டுள்ளது. ஆய்வு முடிவுகள் தெரிந்த பின்னர், ஆலை மீது நடவடிக்கை எடுக்கப்படும்.

தூத்துக்குடி மாவட்ட வெள்ளிவிழாவையொட்டி திருச்செந்தூரில் உலகிலேயே மிக உயரமான சிலை அமைக்கப்பட விருந்தது. ஆனால், ஆகம விதியப்படி அங்கு சிலை அமைக்க வாய்ப்பில்லை. எனவே, கோவில்பட்டி கதிரேசன் கோவில் மலையில் முருகன் கோவிலில், உயரமான முருகன் சிலை அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

இதற்கான ஆய்வு பணிகள் நடைபெற்று வருகிறது என்று ஆட்சியர் ஆஷிஷ்குமார் தெரிவித்தார்.

பேட்டியின் போது மக்கள் தொடர்பு அலுவலர் பாஸ்கரன், உதவி அலுவலர் குமார் ஆகியோர் உடனிருந்தனர். முன்னதாக பள்ளிகளில் குடிமக்கள் நுகர்வோர் மன்றங்களை ஏற்படுத்திட அரசு சார்பில் மூன்று பள்ளிகளுக்கு தலா ரூ.2500க்கான காசோலைகளை ஆட்சியர் வழங்கினார்.

தகவல்:
www.tutyonline.com


Previous News ItemNext News Item
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. 40 வருட தூக்கம்
posted by Abdul Wahid S. (Kaayalpattinam) [30 July 2013]
IP: 122.*.*.* India | Comment Reference Number: 29094

"டிசிடபிள்யூ தொழிற்சாலை கழிவுகள் கடலில் கலப்பது தொடர்பாக திருச்செந்தூர் கோட்டாட்சியர் அறிக்கை அனுப்பியுள்ளார்". (C & P)

கிட்டத் தட்ட 40 வருடங்களாக தூங்கிகொண்டிருந்த கோட்டாச்சியர் இப்பொழுதாவது விழித்துக்கொண்டது வரவேற்க்கத் தகுந்தது.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
2. விடிவு காலத்தை நோக்கி எதிர்பார்த்திருக்கும் விழிகள்...
posted by M.N.L.Mohamed Rafeeq. (Kayalpatnam.) [31 July 2013]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 29102

ஆறுமுகநேரி டிசிடபிள்யூ தொழிற்சாலை கழிவுகள் கடலில் கலப்பது தொடர்பாக, திருச்செந்தூர் கோட்டாட்சியர் அறிக்கை அனுப்பியுள்ளார். மேலும் இதன் ரசாயன கழிவுகள் கலந்த நீர் ஆய்விற்க்காக கேரளாவில் உள்ள ஆய்வகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. ஆய்வு முடிவு வந்த பின் ஆலை மீது நடவடிக்கை எடுக்கப்படும். -மாவட்ட ஆட்சியர் திரு ஆஷிஷ் குமார் தகவல்.

இச்செய்தி இன்று 30/07/2013 தினகரன் நாளிதழிலும் வெளியிடப்பட்டுள்ளது. ஆக டிசிடபிள்யூவுக்கு தலைவலி ஆரம்பித்துவிட்டது. எமது மக்களின் சாபம் சும்மா விடுமா?

-ராபியா மணாளன்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
3. .எட்டப்ப எடுபிடிகள்!.
posted by முஹம்மது ஆதம் சுல்தான் (YANBU) [31 July 2013]
IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 29106

எமது மக்களின் சாபம் என்ற வார்த்தையை சற்று திரித்திக்கொள்ளுங்கள் சகோதரர் ரபீக் அவர்களே!

எங்களின் எட்டப்பர்களைத்தவிர்த்துள்ள மக்களின் சாபம் என்று இனிமேல் எழுதவும்.அப்படிப்பட்ட அசிங்கமான வார்த்தையை எழுத வைத்துவிட்டார்கள் நம்மினுமுள்ள சில எட்டப்ப எடுபிடிகள்!

அல்லாஹ் அனைத்தும் அறிந்தவன்,
அன்புடன்,
முஹம்மது ஆதம் சுல்தான்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
4. Re:...
posted by K.D.N.MOHAMED LEBBAI (JEDDAH) [31 July 2013]
IP: 37.*.*.* | Comment Reference Number: 29121

அஸ்ஸலாமு அலைக்கும்

நாசமா போன >>D.C.W.<< தொழிற்சாலையின் கழிவுகள் தொடர்ப்பான அறிக்கையை நமது திருச்செந்தூர் கோட்டாட்சியர் அவர்கள் அனுப்பி இருப்பது சரி தான் ....

நம் மாவட்ட ஆச்சியாளர் அவர்கள் கொஞ்சம் துரிதமாகவே முழுமனதோடு ....இந்த கேடுகெட்ட >>DCW << தொழிற்சாலையை இழுத்து மூடுவதற்க்கான நடவடிக்கையை எடுத்தால் நம் ஊர் அனைத்து பொது மக்களும் மனம் உகந்து மாவட்ட அதிகாரி அவர்களுக்கு நன்றி கடன் பட்டவர்களாகவே இருப்பார்கள் .......என்ன ....இருப்போம் .....

நமது ஊர் + சுற்று வட்டார பொது மக்களின் உயிரை குடித்து ....இந்த வெளி மாநிலத்து காரன் ( DCW ) பணம் சம்பாதித்து கொண்டு போகவா ....?? நாம் நம் உயிரை கொடுக்க உள்ளோம் ....விட மாட்டோம் நாம் இந்த DCW தொழிற்சாலையை தூக்கும் வரை ....ஓயாவும் ...மாட்டோம் .....

இவனுக்கு DCW சாவுமணி அடிக்க ஆரபித்து விட்டது என்று தான் சொல்லணும் .இப்பவாது நம் திருச்செந்தூர் கோட்டாட்சியர் அவர்கள் விழித்தர்களே அது நமக்கு நல்லது தான் .

நம் ஹாஜி .முஹம்மது ஆதம் சுல்தான் காக்கா அவர்கள் சொன்னது போல நம்மிடம் இருக்கும் குள்ளநரி கூட்டத்தை முதலில் புடிங்கி எறியணும் அப்பத்தான் ...நமது பயணத்தை தொடர முடியும் .....வெற்றியும் காண முடியும் ....

நம் ஹாஜி .முஹம்மது ஆதம் சுல்தான் காக்கா அவர்களின் ஆதங்கம் நமக்கும் நன்கு புரிகிறது ..... COPY. P. .....'''எங்களின் எட்டப்பர்களைத்தவிர்த்துள்ள மக்களின் சாபம் என்று இனிமேல் எழுதவும்.அப்படிப்பட்ட அசிங்கமான வார்த்தையை எழுத வைத்துவிட்டார்கள் நம்மினுமுள்ள சில எட்டப்ப எடுபிடிகள்'''''''!.....நாம் ஒவ்வொருவர்களும் வேதனை பட கூடிய விசையம் தான் .......இது ......

உண்மையில் நமது ஊர் மக்கள் ஏன் இப்படி ஒற்றுமை இல்லாமல் உள்ளார்கள் ... DCW ...கேடுகெட்டவனின் கொஞ்ச பணத்துக்காக இப்படி கிழ்த்தரமாக விலை போய் விட்டார்களோ ......எப்படித்தான் நாம் இவர்களை திருத்துவது .....அல்லாஹு தான் இப்படி பட்ட எட்டப்பர்களை நம்மில் இருந்து காப்பாட்ட வேணும் .....ஊர் மக்களின் மீது அக்கறை இல்லாத இவர்களை நாம் என்னதான் சொல்ல ......

நம் ஒற்றுமையில் தான் ...வெற்றி இருக்கிறது என்பதை நாம் ஒவ்வொருவர்களும் நம் மனதில் கொள்ளனும் ... வஸ்ஸலாம்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>

முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்

பிற செய்திகள்

காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
Cathedral Road LKS Gold ParadiseFathima Jewellers
AKM JewellersFaams

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved