Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
3:41:35 PM
வெள்ளி | 19 ஏப்ரல் 2024 | துல்ஹஜ் 1723, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
04:5412:2415:2818:3319:43
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:06Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்15:09
மறைவு18:27மறைவு03:03
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
04:5505:2005:45
உச்சி
12:16
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:4819:1319:38
Go to Homepage
செய்திகள்
Previous News ItemNext News Item
செய்தி எண் (ID #) 12154
#KOTW12154
Increase Font Size Decrease Font Size
செவ்வாய், அக்டோபர் 22, 2013
நகராட்சி குப்பை கொட்டுமிடம், உயிரி எரிவாயுக் கூடத்திற்காக இட ஆய்வு செய்த பின் மாவட்ட ஆட்சியர் அனுப்பியுள்ள ஆய்வுக் குறிப்புகள்!
செய்திஎஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்)
இந்த பக்கம் 3098 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (2) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 0)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}

காயல்பட்டினம் நகராட்சிப் பகுதிகளில் சேரும் குப்பைகளைக் கொட்டுவதற்கும், மக்கும் குப்பையைப் பயன்படுத்தும் வகையில் உயிரி எரிவாயுக் கூடம் அமைத்து, அதன் மூலம் மின் உற்பத்தி செய்வதற்கும், தமிழக அரசின் சார்பில் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இவ்விரு திட்டங்களுக்கும் இடங்கள் தேர்வு செய்வதற்காக, பல்வேறு சர்ச்சைகளுக்கிடையே ஆய்வுப் பணிகள் நடைபெற்று வருகிறது.

அதன் ஒரு பகுதியாக, இம்மாதம் 08ஆம் தேதியன்று காலையில், தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் எம்.ரவிக்குமார் காயல்பட்டினம் நகராட்சிக்கு வருகை தந்தார். அதனைத் தொடர்ந்து, மேற்படி திட்டங்களுக்குத் தேவைப்படும் இடங்கள் குறித்து, அது தொடர்பான அதிகாரிகளுடன் - நகர்மன்றத் தலைவர் மற்றும் உறுப்பினர்கள் முன்னிலையில் தல ஆய்வு மேற்கொண்டார்.



மேற்கொள்ளப்பட்ட ஆய்வு குறித்து, பின்னர் அவர் ஆய்வுக் குறிப்புகளை அனுப்பி வைத்துள்ளார். (மாவட்ட ஆட்சியரால் அனுப்பி வைக்கப்பட்ட ஆய்வுக் குறிப்புகளின் நகல், இம்மாதம் 11ஆம் தேதியன்று நடைபெற்ற காயல்பட்டினம் நகர்மன்ற அவசரக் கூட்டத்தின்போது, நகர்மன்றத் தலைவரால், அனைத்து உறுப்பினர்களுக்கும் வழங்கப்பட்டது.

மாவட்ட ஆட்சியர் அனுப்பி வைத்துள்ள தல ஆய்வு தொடர்பான ஆய்வுக் குறிப்பின் வாசகங்கள் வருமாறு:-

ஆய்வுக் குறிப்புகள்

பொருள்: தல ஆய்வுகள் - காயல்பட்டினம் நகராட்சி - மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்களால் 08.10.2013 அன்று தல ஆய்வு செய்யப்பட்டது. - ஆய்வின்போது கண்டறியப்பட்டவை - தொடர் நடவடிக்கை எடுத்து அறிக்கை அனுப்பத் தெரிவித்தல் - தொடர்பாக.

...........

தூத்துக்குடி மாவட்டம் காயல்பட்டினம் நகராட்சியில் வளர்ச்சித் திட்டப் பணிகளை செயல்படுத்துவதற்கான இடம் தெரிவு குறித்து மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்களால் 08.10.2013 அன்று தல ஆய்வுப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. தல ஆய்வின்போது காயல்பட்டினம் நகராட்சி ஆணையாளர், நகராட்சி மன்றத் தலைவர், மன்ற உறுப்பினர்கள் மற்றும் சம்பந்தப்பட்ட கிராம நிர்வாக அலுவலர்கள் ஆகியோர் உடனிருந்தனர்.

மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்களின் தல ஆய்வு குறிப்புரைகள் பின்வருமாறு:-

காயல்பட்டினம் நகராட்சிக்கு திடக்கழிவு மேலாண்மைத் திட்டத்தினை செயல்படுத்துவதற்காக ரூ.5.00 இலட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மேலும், எரிவாயு உற்பத்தி செய்து, அதன்மூலம் மின்சாரம் தயாரிக்கும் திட்டத்திற்காக ரூ.90.00 இலட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

மேற்படி இரண்டு திட்டங்களையும் செயல்படுத்த தகுதியான இடம் தெரிவு செய்யப்படாததன் காரணமாக, பணிகள் துவக்கப்படாமல் நீண்டகாலமாக நிலுவையாக உள்ளன. எனவே, மேற்படி திட்டங்களின் செயல்பாட்டிற்கான இடம் தெரிவு குறித்து தல ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன.

1. காயல்பட்டினம் தென்பாகம் கிராமம் - நில அளவை எண் 392/5 (மயானம்):

காயல்பட்டினம் தென்பாகம் வருவாய்க் கிராமத்தில் நில அளவை எண் 392/5இல் 3.05.9 ஹெக்டேர் பரப்பளவில் அமைந்துள்ள மயான நிலப்பரப்பு பார்வையிடப்பட்டது.

>> இந்நிலத்திற்கு முறையான அணுகுபாதை உள்ளது.

>> மயான நிலமாக இருந்தாலும், தற்போது அதன் ஒரு பகுதி மட்டுமே மயானமாகப் பயன்படுத்தப்பட்டு வருகிறது.

>> ஒவ்வொரு ஜாதிவாரியாக மயானம் அமைப்பதற்கு, இப்பகுதி முழுமையும் மயான பயன்பாட்டிற்காகவே பிற்காலத்திற்குத் தேவைப்படும் எனத் தெரிவிக்கப்படும் மன்ற உறுப்பினரின் ஆட்சேபனை நிராகரிக்கப்படலாம்.

>> எனவே, திட்ட செயலாக்கத்திற்குத் தேவையான 25.00 சென்ட் நிலப்பரப்பு இப்பகுதியிலிருந்து தெரிவு செய்யப்படலாம்.

(Action: நகராட்சி ஆணையாளர், காயல்பட்டினம்)

2. காயல்பட்டினம் தென்பாகம் கிராமம் - நில அளவை எண் 334/1, 334/2, 334/12 & 334/15 (நத்தம்):

காயல்பட்டினம் தென்பாகம் வருவாய்க் கிராமத்தில் நில அளவை எண் 334/1, 334/2, 334/12 & 334/15இல் உள்ள நத்தம் நிலங்கள் பார்வையிடப்பட்டன.

>> மேற்கண்ட நத்தம் நிலத்தில் பின்வரும் விவரப்படி காலிமனை விஸ்தீரணங்கள் உள்ளன.



>> வருவாய் ஆவணங்களின்படியும், தல ஆய்வின்படியும், மேற்படி நிலங்கள் நத்தம் காலிமனையாக உள்ளன.

>> இதனில் நிலஅளவை எண்கள் 334/1, 334/2இல் ஒரு பகுதிக்கான கிரைய ஆவணம் தனியார் ஒருவரிடம் உள்ளதாக கிராம நிர்வாக அலுவலரால் தெரிவிக்கப்பட்டது. ஆனால், 01.01.1987 முதல் 11.09.2013 வரையிலான காலங்களில் மேற்படி நிலங்களில் எவ்வித வில்லங்கமும் இல்லை என காயல்பட்டினம் சார்பதிவாளரிடமிருந்து 12.09.2013 அன்றைய தேதியில் வில்லங்கச் சான்று பெறப்பட்டு, ஆய்வின்போது காண்பிக்கப்பட்டது.

>> வருவாய்த்துறை ஆவணங்களின்படி, “நத்தம் - காலிமனை”யாக உள்ள பகுதிக்கு தனிநபர் கிரைய ஆவணம் வைத்துள்ளதாக கிராம நிர்வாக அலுவலர் தெரிவித்துள்ளதால், அரசு பட்டா வழங்காத நிலையில் எவ்வாறு மேற்படி நிலத்தை ஆவணம் மூலம் பரிவர்த்தனை செய்யப்பட்டது என்பதும், அப்பரிவர்த்தனை உண்மையானதா என்பதும் முழுமையாக விசாரித்து, அந்தப் பத்திரத்தை ரத்து செய்யவும், போலி பரிவர்த்தனை எனில் உடன் கிரிமினல் நடவடிக்கை தொடரவும் வட்டாட்சியர் கோரப்படுகிறார்.

>> அதே சர்வேயின் 334/12, 334/15ஐ வேலியிட்டு ஆக்கிரமிப்பைத் தடுக்க நடவடிக்கை எடுக்கவும்.

>> திட்ட செயலாக்கத்திற்குத் தேவையான 25.00 செண்ட் நிலப்பரப்பு இப்பகுதியிலிருந்தும் தெரிவு செய்யப்படலாம்.

(Action: வட்டாட்சியர், திருச்செந்தூர்,
வருவாய்க் கோட்டாட்சித் தலைவர், திருச்செந்தூர் &
நகராட்சி ஆணையாளர், காயல்பட்டினம்)


3. காயல்பட்டினம் தென்பாகம் கிராமம் - நில அளவை எண் 278 (பட்டா நிலம்)

காயல்பட்டினம் தென்பாகம் வருவாய்க் கிராமத்தில், நில அளவை எண் 278இல் உள்ள தனிநபர் பட்டா நிலம் திடக்கழிவு மேலாண்மைக்காக இனாமாகப் பெற வாய்ப்புள்ளதாக நகராட்சி தலைவியால் கூறப்பட்டதால் தலம் பார்வையிடப்பட்டது.

>> மேற்படி நிலமானது நகர்ப்புறத்திலிருந்து சுமார் 4.00 கி.மீ. தூரத்தில் அமைந்துள்ளது.

>> கடற்கரைப் பகுதியை ஒட்டி அமைந்துள்ளது.

>> மேற்படி நிலத்தின் கிழக்கு மற்றும் மேற்கு பகுதிகளில் நிலவியல் பாதை உள்ளது.

>> மேற்படி நிலத்தில் திட்ட செயல்பாட்டிற்காக 25.00 அளவுள்ள நிலப்பரப்பு குறைந்த அளவு விலை நிர்ணயத்தொகை அடிப்படையில் வழங்க சம்மதிப்பதாக சம்பந்தப்பட்ட நில உரிமையாளரால் தெரிவிக்கப்பட்டது.

>> மேற்படி 25.00 சென்ட் அளவுள்ள நிலத்தினை தானமாகப் பெறுவதற்கு நகராட்சி நிர்வாகத்தால் நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும்.

>> மேற்படி நிலப்பரப்பு கடற்கரை பகுதியினை ஒட்டி அமைந்துள்ளதால் “கடற்கரை மேலாண்மைப் பகுதி” வரையறைக்குள் (CRZ) அமையப்பெறாவண்ணம் திட்ட செயல்பாட்டிற்கான நிலம் தெரிவு செய்யப்படலாம்.

(Action: நகராட்சி ஆணையாளர், காயல்பட்டினம்)

>> மேற்கண்ட மூன்று இடங்களிலிருந்து காயல்பட்டினம் நகராட்சியில் செயல்படுத்தப்பட உள்ள திடக்கழிவு மேலாண்மை, எரிவாயு உற்பத்தி செய்து அதன் மூலம் மின்சாரம் தயாரிக்கும் திட்டத்திற்காக சுமார் 25.00 சென்ட் அளவுள்ள நிலப்பகுதி தெரிவு செய்து நகர்மன்றத் தீர்மானம் நிறைவேற்ற நகராட்சி ஆணையரால் துரித நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும்.

(Action: நகராட்சி ஆணையாளர், காயல்பட்டினம்)

4. ஏனையவை

1. புறம்போக்கு நிலங்கள்

காயல்பட்டினம் நகராட்சிக்குட்பட்ட, காயல்பட்டினம் வடபாகம் வருவாய்க் கிராமம் மற்றும் காயல்பட்டினம் தென்பாகம் வருவாய்க் கிராமம் ஆகியவற்றிலிருந்து காயல்பட்டினம் நகராட்சிக்கு ஒப்படைக்கப்பட்ட புறம்போக்கு நிலங்கள் பட்டியலைப் பெற்று, அந்நிலங்களை அடையாளங்கண்டு, அவற்றின் தற்போதைய நிலை குறித்து திருச்செந்தூர் வட்டாட்சியர் 10 தினங்களுக்குள் அறிக்கை செய்திட வேண்டும்.

(Action: வட்டாட்சியர், திருச்செந்தூர்)

2. அனுமதியற்ற மனைப்பிரிவுகள்

காயல்பட்டினம் நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் நகராட்சி அனுமதியின்றியும், நகர் மற்றும் ஊரமைப்புத் துறை அனுமதியின்றியும் பல்வேறு மனைப்பிரிவுகள் தற்போது அமைக்கப்பட்டு வருவதாகப் புகார்கள் வரப்பெற்றுள்ளன. தல ஆய்வின்போதும், ஆதிதிராவிடர் காலனி கடற்கரை சாலைப்பாதையினை ஆக்கிரமித்து மனைப்பிரிவு அமைக்கப்பட்டு வருவதாக பொதுமக்கள் புகார் தெரிவித்தனர்.

>> எனவே, காயல்பட்டினம் நகராட்சியில் முழுமையாக ஆய்வு மேற்கொண்டு, அனுமதியற்ற மனைப்பிரிவுகள் தொடர்பாக உரிய தொடர்நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும்.

>> அனுமதியற்ற மனைப்பிரிவுகளால் அரசுக்கும், நகராட்சிக்கும் ஏற்பட்டுள்ள இழப்புகள் குறித்து கணக்கீடுகள் செய்து, தொகையினை சம்பந்தப்பட்டவர்களிடமிருந்து வசூலிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும்.

>> அனுமதியற்ற மனைப்பிரிவுகள் குறித்து பொதுமக்கள் அறிந்துகொள்ளும் வகையில் விளம்பரப் பலகைகள் நிறுவப்பட வேண்டும்.

(Action: துணை இயக்குநர் (பொ), ந(ம)ஊதுறை, திருநெல்வேலி)

>> மேற்படி ஆதிதிராவிடர் காலனி கடற்கரை சாலைப்பகுதிகளில் உள்ள ஆக்கிரமிப்புகள் உடன் அகற்றப்பட வேண்டும்.

(Action: வட்டாட்சியர், திருச்செந்தூர்)





மாவட்ட ஆட்சித் தலைவர்
தூத்துக்குடி மாவட்டம்


பெறுநர்
1. வருவாய்க் கோட்டாட்சித் தலைவர், திருச்செந்தூர்.
2. துணை இயக்குநர் (பொறுப்பு), நகர் மற்றும் ஊரமைப்புத் துறை, திருநெல்வேலி.
3. நகராட்சி ஆணையாளர், காயல்பட்டினம்.
4. வட்டாட்சியர், திருச்செந்தூர்.

நகல்
1. மண்டல துணை இயக்குநர், நகராட்சி நிர்வாகம், திருநெல்வேலி.
2. மாவட்ட ஆட்சியரின் கூடுதல் நேர்முக உதவியாளர் (நிலம்), தூத்துக்குடி (தொடர் நடவடிக்கைக்காக)


இவ்வாறு, மாவட்ட ஆட்சியர் அனுப்பியுள்ள தல ஆய்வுக் குறிப்புரையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Previous News ItemNext News Item
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. Re:...
posted by M.I.மூசா நெய்னா (மதினா முனவ்வரா) [22 October 2013]
IP: 46.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 30917

நிலஅளவை எண் : 392/5 (மயானம்)

சாதகம் :

முறையான சாலை வசதி, நகராட்சிக்கு சொந்தமான நிலபரப்பு, மயான பயன்பாட்டிற்காக பிற்காலத்தில் தேவைபடும் என தெரிவிக்கும் மன்ற உறுப்பினர்களின் ஆலோசனை நிராகரிக்கபடலாம் போன்றவை.

பாதகம் :

மன்ற உறுப்பினர் சாமி அவர்களின் கடுமையான எதிர்ப்பு, தலைவி அவர்களின் உள்நோக்கம் கொண்ட பரிந்துரையின் காரணமாக மற்ற உறுப்பினர்களின் எதிர்ப்பு ஆகியவை.

கருத்து :

இந்த நிலபரப்பு நகராட்சிக்கு சொந்தமாக இருப்பதாலும் , மயான வசதிக்கு ஒதுக்கியது போக மீதி தேவையான நிலபரப்பு இருப்பதினாலும் , பிற்காலத்தில் எந்தவித வில்லங்கமும் ஏற்பட வாய்ப்பு இல்லாததினாலும் இந்த இடத்தையே தேர்வு செய்யலாம்.

உறுப்பினர்களே : தாங்கள் அனைவரும் தயவுசெய்து தலைவி அவர்களின் உள்நோக்கத்தை மறந்து இந்த இடத்தையே தேர்வு செய்ய உதவி செய்யும்படி வேண்டுகிறேன். ஏனெனில், இப்படியே வீண் வாக்குவாதங்கள் நடந்து கொண்டிருந்தால் வீண் கால விரயம் தான் ஆகும். தலைவி அவர்களின் உள்நோக்கம் என்ன என்பதை பல நகர்மன்ற நிகழ்வுகளின் மூலம் மக்கள் நன்கு அறிந்து உள்ளார்கள். இனியும் பிடிவாதம் பிடித்தால் தலைவி அவர்கள் வேறு வழிகளின் மூலம் தடை செய்ய முயற்சிப்பார்கள். இதனால் இத்திட்டமே முடங்கி போக வேண்டிய நிலை ஏற்படும். புரோட்டோகால் படி மாவட்ட ஆட்சியரை விட தேர்ந்தெடுக்கபட்ட மன்ற உறுப்பினர்களின் தீர்மானத்திற்க்கு தான் value அதிகம்.

நிலஅளவை எண் : 334/2 , 334/2, 334/12, 334/15 (நத்தம்)

இந்த நிலபரப்பில் வில்லங்கம் உள்ளது தெளிவாகிறது. கிராம அலுவலக கோப்புபடி தனியார் ஒருவருக்கு சொந்தம் என ஆணவம் உள்ளது. சார்பதிவாளர் ஆவணபடி எந்த வில்லங்கமும் இல்லை என்ற சான்று. ஆக, இது வருவாய்துறைக்கும், கிராம அலுவலகத்துக்கும், சம்பந்தபட்ட தனி நபருக்கும் இடையேயான முக்கூடல் பிரச்சனை. இப்பிரச்சனை தீர பல வருடங்கள் ஆகும். ஆக மொத்தத்தில், நகராட்சிக்கு சொந்தமான பல நிலபரப்புக்கள் முறையான ஆவணம், பட்டா இல்லாமல் பலரால் ஆக்கிரமிக்கபட்டு, ரியல் எஸ்டேட் தொழில் நன்றாக நடந்துள்ளது என்பதை அறிய முடிகிறது. இதற்கு வருவாய் துறையும், சார்பதிவாளர் அலுவலகமும், நகர்மன்றமும் இணைந்து முன்நின்று நல்லதொரு தீர்வு காண்பட வேண்டும் என்பது காலத்தின் கட்டாயம். இந்த இணயதளம் இதற்கான முயற்சியின் முதல்படிக்கட்டாக சில தகவல்களை ஏற்கெனவே வெளியிட்டது பாராட்டுக்ககுரியது

நிலஅளவை எண் : 278 ( பட்டா நிலம்)

வள்ளல் பெருந்தகை வாவு. செய்யது அப்துர்ரஹ்மான் ஹாஜியார் அவர்களின் பெருந்தன்மைக்கு நாம் என்றென்றும் நன்றி கூறுவோம். இந்த நிலபரப்பு கடற்கரை ஓரம், சாலை வசதியின்மை போன்ற காரணங்களை கருத்தில் கொண்டு, இத்திட்டத்திற்கு பயன்படுத்துவதை தவிர்த்து வருங்காலத்தில் வேறு திட்டத்திற்கு பயன்படுத்தி கொள்ளலாம் என்பதே என் கருத்து.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
2. மர்ஹூம் M K T அப்பா 7 ஏக்கர் அரசு நிலத்தை இதற்காகவே தொலை நோக்கு சிந்தனையுடன் 1958 இல்
posted by syed ahamed (காயல்பட்டினம்.) [22 October 2013]
IP: 61.*.*.* India | Comment Reference Number: 30918

நான் அப்போதே சொன்னேன் காயல்பட்டினம் தென்பாகம் கிராமம் நில சர்வே எண் 392 தான் இதற்க்கு சரியான தேர்வு.

அன்றைக்கே நமது முன்னால் சேர்மன் மரியாதைக்குரிய மர்ஹூம் M K T அப்பா 7 ஏக்கர் அரசு நிலத்தை இதற்காகவே தொலை நோக்கு சிந்தனையுடன் 1958 இல் நாளையை தலைமுறைகள் பயன் பெரும் வகையில் மிக சிறப்பாக ஒதுக்கி கொடுத்துள்ளார்கள்.

இப்போது ஏன் அந்த சர்வே எண் 392 நிலத்திற்கு எதிர்ப்பு கிளம்புகிறது.?

நாம் அனைவர்களும் சிந்தித்து பார்க்கும் நேரம் அமைந்து விட்டது.

முதலில் சர்வே எண் 392/ 7 ஏக்கர் நிலத்திற்கு யார் யார் எதிர்க்கிறார்கள் முதலில் இவர்களை அடையாளம் காணுங்கள். எதற்காக எதிர்க்கிறார்கள்..? ஏன் எதிர்க்கிறார்கள்..? தற்போது அந்த இடம் யார் ஆள்மையில் உள்ளது...?

இரண்டாவது எதற்காக தனியார் நபரின் சர்வே எண் 278 க்கு முக்கியத்துவும் கொடுக்கிறார்கள். அதற்க்கு என்ன காரணம்.?

பல காரணங்கள் என் மனதில் ஓடுகிறது அவ்விடத்தில் தற்போது நில மதிப்பு ஏதும் இல்லாத பல நில உரிமையாளர்களின் நில மதிப்பபை இதன் மூலம் உயர செய்ய இருக்கலாமே...! இன்னும் பல காரணங்கள் பல பேருக்கு இருக்கலாம்.

இப்போது நமக்கு தேவை சுய நலமில்லாத இடம்... அது நமது முன்னால் சேர்மன் மரியாதைக்குரிய மர்ஹூம் M K T அப்பா அவர்கள் பொது சிந்தனையோடு அன்று ஒதுக்கிட்ட சர்வே எண் 392 - 7 ஏக்கர் நிலமே சாத்தியம்.

ஏழை எளிய மக்கள் வாழ வழியின்றி இன்று நிலபுவாங்களின் பிடியில் காயல்பட்டினம் சிக்கி சீரழிந்து வருவது வேதனையான செய்தி.. முதலில் இது மாறவேண்டும்...

அரசு நிலம் அரசின் தேவைக்கு பயன் பெற வேண்டும்... அது இல்லைஎளின் தனியாரின் நிலத்தை விலைக்கு பெறலாம்.. இதுவே என கருத்து..


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>

முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்

பிற செய்திகள்
மாலையில் மிதமழை!  (21/10/2013) [Views - 2624; Comments - 3]

காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
AKM JewellersFaams
Cathedral Road LKS Gold ParadiseFathima Jewellers

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved