Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
7:41:15 AM
வெள்ளி | 29 மார்ச் 2024 | துல்ஹஜ் 1702, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
05:0812:3015:4118:3419:42
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:16Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்21:42
மறைவு18:28மறைவு08:48
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
05:0705:3105:55
உச்சி
12:22
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:4919:1319:37
Go to Homepage
செய்திகள்
Previous News ItemNext News Item
செய்தி எண் (ID #) 12330
#KOTW12330
Increase Font Size Decrease Font Size
வெள்ளி, நவம்பர் 15, 2013
புதுக்கல்லூரி வைர விழா நிகழ்ச்சியில் துணை ஜனாதிபதி தலைமை விருந்தினர்! காயலர் உட்பட திரளானோர் பங்கேற்பு!!
செய்திகாயல்பட்டணம்.காம்
இந்த பக்கம் 2866 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (6) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 0)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}

சென்னையில் 1902 ஆம் ஆண்டு துவக்கப்பட்ட MUSLIM EDUCATIONAL SOCIETY OF INDIA - MEASI (மியாசி) அமைப்பு, சென்னை ராயபேட்டை பகுதியில் 1951 ஆம் ஆண்டு புதுக்கல்லூரி என்ற பெயரில் முஸ்லிம் சிறுபான்மை சமூகத்தினர்கான கல்லூரி ஒன்றினை துவக்கியது. 200 மாணவர்கள் கொண்டு துவக்கப்பட்ட இந்த கல்லூரியில், தற்போது - காலை மற்றும் மாலை அமர்வுகளில், அனைத்து சமுதாய மாணவர்களும் ஏறத்தாழ 5000 பேர் கல்வி பயில்கின்றனர். கலை மற்றும் அறிவியல் பட்டப்படிப்பு பயில விரும்பும் காயல் மாணவர்கள் தேர்வு செய்யும் கல்லூரிகளில் புதுக்கல்லூரி பிரதானமானதாகும்.

இந்த கல்லூரி தனது 60வது ஆண்டினை பூர்த்தி செய்ததை ஒட்டி, வைர விழா கொண்டாட்டங்கள் (DIAMOND JUBILEE CELEBRATIONS) - நவம்பர் 12 மற்றும் நவம்பர் 13 ஆகிய இரு தேதிகளில் நடைபெற்றன.





நவம்பர் 12 மாலை 6:30 மணி அளவில், சென்னை பல்கலைக்கழக நூற்றாண்டு அரங்கில் நடைபெற்ற நிகழ்ச்சியில் இந்திய துணை ஜனாதிபதி எம். ஹமீத் அன்சாரி, தலைமை விருந்தினராக கலந்துக்கொண்டு, வைர விழா கொண்டாட்டங்களை துவக்கி வைத்தார்.







துணை ஜனாதிபதி எம். ஹமீத் அன்சாரி தனது உரையில் கூறியதாவது:

2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இந்திய மக்கள் தொகையில் 18.4 சதவீதத்தினர் சிறுபான்மையினர். அதாவது 18.50 கோடி மக்கள் சிறுபான்மையினர். இது இப்போது 22 கோடியாக உயர்ந்திருக்க வாய்ப்பு உள்ளது.

இதில் பெரும்பான்மையாக உள்ள முஸ்லிம் சமூகத்தினர், அனைத்து வகையான மனித மேம்பாடுகளிலும் பின்தங்கியிருப்பதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

முஸ்லிம் சமூகத்தினர் மீது மட்டும் இதுபோன்ற பாரபட்சம் காட்டப்பட்டிருப்பதாக 12-வது ஐந்தாண்டு திட்ட அறிக்கை தெரிவிக்கின்றது. அதாவது, கடந்த சில ஆண்டுகளாக பல்வேறு துறைகளில் இந்தியா பெற்று வரும் வளர்ச்சியின் பயனை பெரும்பான்மையான சமூகத்தினர் பெற்று அனுபவித்து வரும் நிலையில், முஸ்லிம் சமூகத்தினருக்கு அந்த பயன் முழுமையாக சென்றடையவில்லை எனவும் தெரிவிக்கின்றன. மற்ற சமூகத்தினருடன் ஒப்பிடும்போது, கல்வியிலும் முஸ்லிம் சமூகத்தினர் பின்தங்கியுள்ளனர்.

அரசு அறிவிக்கும் பல்வேறு நலத் திட்டங்கள் முறையாகவும், முழுமையாகவும் இவர்களைச் சென்றடையாததும் இதற்கு ஒரு காரணம். இதற்கான விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டியது அவசியம்.

எனவே, நாட்டிலுள்ள சிறுபான்மையினரின் மேம்பாடு தவிர்க்க முடியாதது. அப்போதுதான் இந்தியா வளர்ந்த நாடாக உருவெடுக்க முடியும்.


இவ்வாறு தனது உரையில் துணை ஜனாதிபதி கூறினார்.

தமிழக ஆளுநர் டாக்டர் கே. ரோசையா முன்னிலை வகித்த இந்நிகழ்ச்சியில், சிறப்பு விருந்தினர்களாக மத்திய கப்பல் போக்குவரத்து துறை அமைச்சர் ஜி.கே. வாசன், மத்திய சிறுபான்மை துறை அமைச்சர் கே. ரஹ்மான் கான் ஆகியோர் கலந்துக்கொண்டனர்.



மத்திய அமைச்சர் ரஹ்மான் கான் தன் உரையில் தெரிவித்ததாவது:



தென்னிந்தியாவில் குறிப்பாக தமிழகத்தில் தான் முஸ்லிம் அமைப்புகளால் அதிக கல்லூரிகள் தொடங்கப்பட்டு, அந்த சமூகத்தினரிடையே உயர் கல்வியை பரப்பும் சிறந்த சேவையை செய்து வருகின்றனர்.

ஆனால், சச்சார் கமிட்டியின் அறிக்கை இந்திய முஸ்லிம்களின் கல்வி நிலை குறித்து அதிர்ச்சி அளிக்கும் வகையிலான தகவலை தெரிவிக்கின்றது.

முஸ்லிம் கல்வியில் பின்தங்கிய நிலை மாறும் வகையில், முஸ்லிம் சமூகத்தினர் மேலும் அதிக கல்வி நிறுவனங்களைத் தொடங்க வேண்டும்.


இவ்வாறு தனது உரையில் அவர் கூறினார்.

மத்திய அமைச்சர் ஜி.கே. வாசன் பேசியதாவது:



சிறுபான்மையினரின் வளர்ச்சியில் மிகுந்த அக்கறை கொண்டுள்ள மத்திய அரசு, அதற்காக "சிறுபான்மை நலத் துறை' என்ற தனி அமைச்சகத்தையே உருவாக்கியிருக்கிறது.

இதன் மூலம் பல்வேறு வளர்ச்சித் திட்டங்களையும் மத்திய அரசு அறிவித்து நடைமுறைப்படுத்தி வருகிறது.

2013-14 ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையில் சிறுபான்மை நலத் துறை அமைச்சகத்துக்கு ரூ. 3,511 கோடி ஒதுக்கப்பட்டது. இது கடந்த ஆண்டு ஒதுக்கப்பட்ட நிதியைக் காட்டிலும் 12 சதவீதம் கூடுதலாகும்.

மவுலானா அசாத் கல்வி மானிய இருப்புத் தொகை ரூ. 750 கோடியிலிருந்து, 12-வது ஐந்தாண்டு திட்ட காலத்தில் ரூ. 1,500 கோடியாக உயர்த்தப்பட்டுள்ளது.

பிரதமரின் 15 அம்ச திட்டத்தின் கீழ், ஒவ்வொரு அமைச்சகமும் தனக்கு ஒதுக்கப்பட்டுள்ள தொகையில் 15 சதவீதத்தை சிறுபான்மையினர் நலனுக்காக செலவிடவேண்டும் எனவும் மத்திய அரசு ஆணை பிறப்பித்துள்ளது.

இதுபோன்று சிறுபான்மையினரின் மேம்பாட்டில் மத்திய அரசு மிகுந்த கவனம் செலுத்தி வருகிறது.


இவ்வாறு தனது உரையில் அவர் கூறினார்.

விழாவில் சிறந்த கல்வியாளர்களுக்கான விருதுகள் வழங்கப்பட்டது. இவ்விருதினை சீதக்காதி டிரஸ்ட் பி.எஸ். அப்துர் ரஹ்மான் சார்பாக அவர் மகன் அப்துல் காதர் புஹாரி, மறைந்த சதக் டிரஸ்ட் எஸ்.எம். ஹமீத் அப்துல் காதர் சார்பாக அவர் தம்பி எஸ்.எம். யூசுப் சாஹிப் ஆகியோர் பெற்றுக்கொண்டனர். இவ்விருது விஐடி வேந்தர் விஸ்வநாதன் உள்ளிட்ட பலருக்கும் வழங்கப்பட்டது.



நவம்பர் 13 அன்று புதுக்கல்லூரி கலையரங்களில் - காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை, HIGHER EDUCATION IN INDIA - MINORITIES PERSPECTIVE என்ற தலைப்பில் கருத்தரங்கம் நடைபெற்றது. இதில் தலைமை விருந்தனராக மத்திய சிறுபான்மை துறை அமைச்சர் கே. ரஹ்மான் கான் கலந்துக்கொண்டார்.

நவம்பர் 13 அன்று மதியம் 2 மணிக்கு இளைய தலைமுறை உருவாக்கத்தில் பெரிதும் பங்களிப்புச் செய்வோர் பெற்றோர்களா? ஆசிரியர்களா? என்ற தலைப்பில் பட்டிமன்றம் நடைபெற்றது.











நவம்பர் 13 அன்று மாலை 6:30 மணிக்கு துவங்கிய நிறைவு நிகழ்ச்சிகளுக்கு சென்னை உயர்நீதிமன்றத்தின் முன்னாள் நீதிபதியும், சென்னை காப்புரிமை மேல்முறையீடு வாரியத்தின் தலைவருமான, நீதிபதி கே.என்.பாஷா தலைமை தாங்கினார். இந்நிகழ்ச்சியில், கல்லூரியின் முன்னாள் தலைமை ஆசிரியர்கள் கௌரவிக்கப்பட்டனர்.













வைர விழா நிகழ்ச்சிகளில் காயலர்கள் ...









புகைப்படங்கள்:
எஸ்.எஸ்.எம். சதக்கத்துல்லாஹ்
மற்றும்
PRESS INFORMATION BUREAU, NEW DELHI


Previous News ItemNext News Item
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. வாழ்த்துக்கள்...
posted by தமிழன் முத்து இஸ்மாயில் (காயல்பட்டினம்.) [15 November 2013]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 31448

வைர விழா கண்ட புதுக்கல்லூரிக்கு வாழ்த்துக்கள்...

இக்கல்லூரியில் பயின்ற பல ஆயிரம் மாணவர்கள் இன்று பல அரசு மற்றும் தனியார் நிறுவன துறைகளில் சாதனை படைத்துள்ளார்கள் என்பது மகிழ்ச்சியான செய்தி... இக்கல்லூரி மேலும் மேலும் வளர துவா செய்கிறேன்..


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
2. 60 வருடம் முன் நம் பெரியோர்கள் போட்ட விதை
posted by syed ahamed (chennai ) [15 November 2013]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 31449

வைர விழா காணும் புதுக்கல்லூரிக்கு எனது மனம் நிறைந்த வாழ்த்துக்கள் .

60 வருடம் முன் நம் பெரியோர்கள் போட்ட விதை இன்று பெரிய ஆலமரமாக வளர்ந்து பலருக்கு நல்ல பலனை தந்து கொண்டிருக்கிறது.

புதுக்கல்லூரிக்கு தமிழ் நாட்டில் இன்னும் பல கிளைகள் உருவாக வேண்டும். இன்னும் பல தலைமுறை பட்டதாரிகள் நமது தமிழகதுக்கு தர நாம் மனதார வாழ்த்துவோம்...


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
3. Re:...
posted by K.D.N.MOHAMED LEBBAI (JEDDAH) [16 November 2013]
IP: 5.*.*.* | Comment Reference Number: 31454

அஸ்ஸலாமு அலைக்கும்.

மாஷா அல்லாஹ்....நேற்று தான் நமது இஸ்லாமியர்களுக்காக ஆரபிக்கபட்டது போல் இருக்கிறது '' 60 '' ஆண்டுகள் தாண்டி தொடர்ந்து வெற்றி நடை ..... ரொம்பவும் ஆடம்பரம் இன்றி அமைதியான முறையில் நடந்து வருவதை எண்ணி நாம் அனைவர்களும் பெருமை படனும் ....

வல்ல இறைவன் அருளால் இக் கல்லூரின் சிறப்பு மேலும் வலு பெற்று ....நம் இனத்தினர்களும் மற்றும் மத இனத்தினர்களும் பயன் அடைந்து ...அவர்களின் வாழ்வில் பல சிறப்புக்கள் பெற்று வாழ்ந்திட அருள் புரிவானாகாவும் ஆமீன்............

இவ்விழாவில் நம் ஊர் மக்களும் இடம் பெற்று இருப்பது மகிழ்ச்சிகரமான செய்தி தான் .......

இக் கல்லூரில் நம் ஊர் மக்களும் படித்து பல நல்ல துறைகளில் + சொந்த தொழில்களிலும் முன்னுக்கு வந்து இருப்பதும் நாம் அறிந்ததே ........

நம் அருமை சகோதரர் ஒருவர் கூறியது போன்று இக் கல்லூரின் கிளை நமது பகுதிகளில் ஓன்று அமைந்து இருந்தால் இன்னும் நம் மக்களுக்கு நன்றாக இருந்து இருக்கும் ...........

>>>>இக் கல்லூரின் முன்னேற்றத்துக்கா நாம் ....துவா ....செய்து ....வாழ்த்துகிறோம் <<<<

வஸ்ஸலாம்
K.D.N.MOHAMED LEBBAI
JEDDAH


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
4. வாழ்த்துக்கள்
posted by A.S.L.SULAIMAN LEBBAI (RIYADH - S.ARABIA) [16 November 2013]
IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 31473

வைர விழா காணும் புதுக்கல்லூரிக்கு எனது மனம் நிறைந்த வாழ்த்துக்கள் .

நல்ல தரமான பல பட்டதாரிகளை நமது தாயகத்துக்கு இந்த புது கல்லூரி தந்து உள்ளது.

இன்னும் பல தலை முறைகளுக்கு நல்ல பட்டதாரிகள நமது தமிழகதுக்கு தர நாம் இந்த புது கல்லூரியை மனதார வாழ்த்துவோம்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
5. Re:...
posted by Mohammed Irshath (Riyadh) [16 November 2013]
IP: 94.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 31478

அஸ்ஸலாமு அலைக்கும்.

மாஷா அல்லாஹ்....நேற்று தான் நமது இஸ்லாமியர்களுக்காக ஆரபிக்கபட்டது போல் இருக்கிறது '' 60 '' ஆண்டுகள் தாண்டி தொடர்ந்து வெற்றி நடை ..... ரொம்பவும் ஆடம்பரம் இன்றி அமைதியான முறையில் நடந்து வருவதை எண்ணி நாம் அனைவர்களும் பெருமை படனும் ....

வல்ல இறைவன் அருளால் இக் கல்லூரின் சிறப்பு மேலும் வலு பெற்று ....நம் இனத்தினர்களும் மற்றும் மத இனத்தினர்களும் பயன் அடைந்து ...அவர்களின் வாழ்வில் பல சிறப்புக்கள் பெற்று வாழ்ந்திட அருள் புரிவானாகாவும் ஆமீன்............

இவ்விழாவில் நம் ஊர் மக்களும் இடம் பெற்று இருப்பது மகிழ்ச்சிகரமான செய்தி தான் .......

இக் கல்லூரில் நம் ஊர் மக்களும் படித்து பல நல்ல துறைகளில் + சொந்த தொழில்களிலும் முன்னுக்கு வந்து இருப்பதும் நாம் அறிந்ததே ........

நம் அருமை சகோதரர் ஒருவர் கூறியது போன்று இக் கல்லூரின் கிளை நமது பகுதிகளில் ஓன்று அமைந்து இருந்தால் இன்னும் நம் மக்களுக்கு நன்றாக இருந்து இருக்கும் ...........

>>>>இக் கல்லூரின் முன்னேற்றத்துக்கா நாம் ....துவா ....செய்து ....வாழ்த்துகிறோம் <<<< வஸ்ஸலாம்

முஹம்மத் இர்ஷாத்
ரியாத் மாகாணம்
சவுதி அரேபியா


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
6. Re:...Congratulation!
posted by Adam Abulhasan (Jeddah ) [18 November 2013]
IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 31529

Congratulation!

I am proud and happy to say that I am an old student of NEW COLLEGE!

It is really a pathway of our life career !

Anbudan,
Adam Abulhasan
Jeddah, Saudi Arabia


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>

முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்

பிற செய்திகள்

காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
Cathedral Road LKS Gold ParadiseFathima Jewellers
AKM JewellersFaams

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved