Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
1:59:53 AM
சனி | 20 ஏப்ரல் 2024 | துல்ஹஜ் 1724, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
04:5212:2315:3018:3319:43
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:05Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்15:52
மறைவு18:27மறைவு03:40
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
04:5405:1905:44
உச்சி
12:16
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:4819:1319:38
Go to Homepage
செய்திகள்
Previous News ItemNext News Item
செய்தி எண் (ID #) 12836
#KOTW12836
Increase Font Size Decrease Font Size
புதன், ஐனவரி 22, 2014
அதிமுக சார்பில் எம்.ஜி.ஆர். பிறந்த நாள் பொதுக்கூட்டம்! நகர்மன்றத் தலைவர், ஜெனிஃபர் சந்திரன் உட்பட பலர் உரையாற்றினர்!!
செய்திஎஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்)
இந்த பக்கம் 3061 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (4) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 1)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}

அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் காயல்பட்டினம் நகர கிளை நிர்வாகிகளின் சார்பில், கட்சியின் நிறுவனரும், தமிழக முன்னாள் முதல்வருமான எம்.ஜி.ராமச்சந்திரன் என்ற எம்.ஜி.ஆரின் 97ஆவது பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம், இம்மாதம் 19ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை மாலை 06.00 மணியளவில், காயல்பட்டினம் வள்ளல் சீதக்காதி திடலில் நடைபெற்றது.



கட்சியின் நகர செயலாளர் செய்யது காசிம் முன்னிலை வகித்தார். சிறுபான்மைப் பிரிவு மாவட்ட செயலாளர் எம்.ஜெ.செய்யித் இப்றாஹீம் வரவேற்றுப் பேசினார். கட்சியின் மூத்த உறுப்பினர் காயல் மவ்லானா உட்பட நிர்வாகிகள் சிலர் பேசினர்.



கூட்டத்திற்குத் தலைமை தாங்கிய கட்சியின் மூத்த உறுப்பினர் எஸ்.ஏ.மெய்தீன் பேசுகையில், கிழக்கு கடற்கரை சாலையை காயல்பட்டினம் வழியே கொண்டு வருவது தொடர்பாக நகர முஸ்லிம் லீக் சார்பில் நிறைவேற்றப்பட்டுள்ள தீர்மானத்தை விமர்சித்துப் பேசினார்.



காயல்பட்டினம் வழியாக வரவிருந்த கிழக்கு கடற்கரைச் சாலையை - வழி மாற்றி திட்டமிட, திமுக மாவட்ட செயலாளர் என்.பெரியசாமி முயற்சி செய்தபோது, அக்கட்சியுடன் கூட்டணியில் இருந்த முஸ்லிம் லீக் அப்போது கேட்காமல், ஆட்சி மாறி - திட்டத்திற்கான ஒப்பந்தப்புள்ளி அறிவிக்கப்பட்டு, பணிகளும் நடைபெற்றுக் கொண்டிருக்கும் இச்சூழலில் அதுகுறித்து தீர்மானமியற்றுவது, வரும் தேர்தலில் அதிமுகவிற்கு எதிராக பிரச்சார வியூகம் வகுப்பதாகவே உணர முடிவதாக அவர் கூறினார்.

அடுத்து பேசிய - அதிமுக ஜெயலலிதா பேரவை நகர செயலாளர் எல்.எஸ்.அன்வர், திமுக ஆட்சியில் காயல்பட்டினத்தில் குறிப்பிடும்படி எந்தப் பணியும் நடக்கவில்லை என்றும், அதிமுக ஆட்சியில் பல்வேறு திட்டப் பணிகள் தொடர்ச்சியாக செய்யப்பட்டுள்ளதாகவும் கூறினார்.



அடுத்து, அண்மையில் அதிமுகவில் இணைந்த - காயல்பட்டினம் நகர்மன்றத் தலைவர் ஐ.ஆபிதா ஷேக் பேசினார்.



தன்னை கட்சியில் இணைத்துக்கொண்ட தலைமைக்கு நன்றி கூறி உரையைத் துவக்கிய அவர், அதிமுக ஆட்சிக்காலத்தில் காயல்பட்டினத்தில் இரண்டாவது குடிநீர் திட்டம் நிறைவேற்றப்படுவதையும், நகரில் பயோகேஸ் திட்டம் அமைய 90 லட்சம், பழைய நகர்மன்றக் கட்டிடத்திற்குப் பகரமாக புதிய கட்டிடம் கட்ட 1.5 கோடி நிதியொதுக்கித் தந்த தமிழக முதல்வருக்கு நன்றி தெரிவிப்பதாகவும் கூறினார்.

தூத்துக்குடி தொகுதி நாடாளுமன்ற உறுப்பினராக இருக்கும் - திமுகவைச் சேர்ந்த எஸ்.ஆர்.ஜெயதுரை, ஒரு நாடாளுமன்ற உறுப்பினருக்கான எல்லா சலுகைகளையும் அனுபவித்துக்கொண்டிருக்கும் நிலையில் - கடமைகளை மட்டும் கண்டுகொள்ளாமல் இருப்பதாகவும், 58 சதவீத கூட்டங்களில் மட்டுமே கலந்துகொண்டுள்ளதாகவும், நாடாளுமன்றத்தில் அவர் எழுப்பிய கேள்விகளிலும் கூட - மற்ற தொகுதிகளுக்காகவும், பிற மாநிலங்களுக்காகவும் குரல் கொடுத்துள்ளதாகவும் கூறிய அவர், காயல்பட்டினத்திற்குள்ளேயே மத்திய அரசுக்கான பல கோரிக்கைகள் காத்திருக்க (உதாரணமாக காயல்பட்டினம் ரயில் நிலையம் நடைமேடை பிரச்சனை), அவைகளை புறக்கணித்த நிலையில் இதர பகுதிகளுக்கு கோரிக்கை அளித்துள்ளதையே தான் விமர்சிப்பதாகவும் கூறினார்.

அடுத்து ஜெனிஃபர் சந்திரன் உரையாற்றினார்.



திமுக தலைவர், தன் குடும்பத்திற்காக கட்சியை அழித்துக் கொண்டிருப்பதாகக் குற்றஞ்சாட்டிய அவர், அதிமுக தலைமை - தன்னலமற்று மக்கள் நலத் திட்டங்களைத் தொடர்ந்து வழங்கி வருதாகக் கூறினார்.

நிறைவாக சிறப்புப் பேச்சாளர் வைகை பாரதி வாஹிது பேசினார். மறைந்த எம்.ஜி.ஆர். வரலாற்றுச் சரிதங்களைப் பட்டியலிட்டுப் பேசிய அவர், நடப்பு அதிமுக ஆட்சியின் சாதனைகளை விளக்கிப் பேசி, வரும் நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுக தலைமையிலான அணி 40 இடங்களையும் வெல்லும் என்று கூறினார்.

புரட்சி சங்கர் நன்றி கூறினார். இக்கூட்டத்தில், கட்சியினரும், நகர பொதுமக்களும் கலந்துகொண்டனர். கூட்ட ஏற்பாடுகளை, கட்சியின் நகர துணைச் செயலாளர் கே.ஏ.எஸ்.சேகு அப்துல் காதிர் செய்திருந்தார்.









களத்தொகுப்பு & படங்கள்:
A.K.இம்ரான்

படங்களில் உதவி:
‘தமிழன்’ முத்து இஸ்மாஈல்
மற்றும்
ஹிஜாஸ் மைந்தன்
(செய்தியாளர், காயல்பட்டணம்.காம்)


[Administrator: செய்தி திருத்தப்பட்டது @ 4:35 pm / 22.01.2014]


Previous News ItemNext News Item
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. Re:...
posted by சாளை S.I.ஜியாவுத்தீன் (அல்கோபார் ) [22 January 2014]
IP: 77.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 32640

பார்வையாளர்களின் எண்ணிக்கைக்கு சமமாக, மேடையில் இருப்பவர்களின் எண்ணிக்கை இருப்பது போல தெரிகின்றது.

அம்மாவின் ஆட்சியில் நம் ஊருக்கும், நம் நாட்டிற்கும் நன்மைகள் பல கிடைத்திட பிராத்திக்கின்றேன்.

ஆபிதா அம்மா, மௌலானா காக்கா பேசும் போது மட்டும் கன்னத்தில் கையை வைத்து கவலையுடன் இருக்கின்றீர்கள். பழசை எல்லாம் மறங்க, ஊர் நன்மையை நாடி அனைவர்களும் ஒற்றுமையாக இருங்க..அரசியல் தானே..! விடுங்க. டோன்ட் வொரி.

ஆக மொத்தம், மீசை மைதீன் மாமா, நன் முத்து சம்சு காக்கா ஆகியோரின் 'கை'கள் ஓங்கி ஒலிப்பது போல தெரிகின்றதே..!! வாழ்த்துக்கள்.

சாளை S.I.ஜியாவுத்தீன், அல்கோபார்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
2. Re:...
posted by P.S. ABDUL KADER (KAYALPATNAM) [22 January 2014]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 32647

புரட்சி கதாநாயகன், கழகத்தின் மூத்த உறுப்பினர் மீசை மெய்தீன் மாமா அவர்கள் தலைமையில் ஓரணியில் நடைபெட்ட கூட்டம் இது. மேடையில் 38 சேர் வைத்து முசிகால் சேர் போட்டிதான் நடந்தது, மேடையில் இருக்க இடமில்லை புதுமுகம், போட்டியா கட்சி உரிமம் கொண்டாடும் நகரமன்ற உறுபினர்க்க்கு முதலிடம். உறுப்பினர்கள் 10நபர்கலில் 2 நபர்மட்டும்தான் கடைசி வரை கூட்டத்தில் இருந்தார்கள், சிறப்பு பேசாளர் கிராம கவிதை பாடி நீர்ரடினார். மொத்தத்தில் இந்த கூட்டம் நகரமன்ற தலைவி கட்சியில் இன்னைதமைக்கு பாராடுகூட்டம்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
3. Re:...
posted by zubair rahman-ab. (Doha-Qatar) [22 January 2014]
IP: 37.*.*.* | Comment Reference Number: 32648

சட்டங்கள் ஆயிரம் இயற்றலாம் ! திட்டங்கள் பல்லாயிரம் தீட்டலாம்! ஆனால் ஒவ்வொருவரும் தான் சார்ந்த கட்சியை பற்றி பெருமையுடன் பிதற்றிக்கொள்வதெல்லாம், எங்கள் கட்சி ஆட்சியில் இருக்கும்பொழுது இதை இயற்றினோம் அவர்கள் நடைமுறை படுத்துகிறார்கள் என்றே சொல்லுவார்கள்.

ஆனால் இவர்கள் (எந்த கட்சியாக இருந்தாலும் சரி ) தீட்டிய எத்தனை திட்டம் முடிவடைந்து மக்களை நன்மை சென்றடைந்தது என்றால் அதனை விரல் விட்டு எண்ணி விடலாம்,

ஆதலால் அருமை பாசமிகு கட்சியின் பால் அல்லது இயக்கத்தின் பால் ஈர்ப்பு கொண்டு பணியாற்றும் சகோதரர்களே ஒருசில திட்டங்கள் மக்களின் இன்றியமையாத அவசியத்தேவைகளில் ஒன்றானதாகவும் அதன் மூலம் மக்களின் தேவை சிறிதளவேனும் நிறைவடையும் என்றால் அதனை அனைவரும் ஒன்றிணைந்து கட்சி மற்றும் இயக்க பேதங்களை தூக்கி எரிந்து விட்டு அத்திட்டம் அதிவேகத்தில் நிறைவடைய "ஒன்றிணைந்து" ஆவன செய்யுமாறு தங்களின் பணிவான கவனத்திற்கு இந்த செய்தி மூலம் சமர்ப்பிக்கிறேன்.

நான் யாரையும் தனிப்பட்ட முறையில் குறியிட்டு காண்பிக்கவில்லை என்பதனையும் தெளிவுபடுத்துகிறேன்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
4. கப்பலே கவிழ்ந்தாலும் கன்னத்தில் கைவைக்க கூடாது! .
posted by முஹம்மது ஆதம் சுல்தான் (YANBU) [23 January 2014]
IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 32658

சகோதரர் ஜியாதீன் அவர்களே,சகோதரி ஆபிதா அவர்கள் கன்னத்தில் கைவைத்திருக்கும் காரணத்தின் "கணத்தை" சற்று குறைவாகவே தாங்கள் குறிப்பிடுவதாக நான் கணிக்கிறேன்!

கப்பல் கவிழ்ந்தாலும் கன்னத்தில் கைவைக்காதே என்பது முன்னோர்களின் பழமொழியாகும்..

கப்பல் கவிழிந்த கவலையை விட மிக "கணம்" பொருந்திய கவலையால் என்மனதை பாதிப்புள்ளாக்கிவிட்டு என் கண் எதிரிலேயே கம்பீரமாய் கர்ஜித்து கொண்டிருப்பதை சற்று கண் கொண்டுதான் பாருங்களேன் காயல்பதி மக்களே என்று நகர் மன்றதலைவி நாசூக்காக தன் செயல் மூலம் சொல்வதுபோல் இல்லையா?

அல்லாஹ் அனைத்தையும் அறிந்தவன்!
அன்புடன்,
முஹம்மது ஆதம் சுல்தான்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>

முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்

பிற செய்திகள்

காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
Cathedral Road LKS Gold ParadiseFathima Jewellers
AKM JewellersFaams

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved