Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
10:46:35 PM
வியாழன் | 25 ஏப்ரல் 2024 | துல்ஹஜ் 1729, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
04:5012:2115:3118:3219:44
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:03Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்19:38
மறைவு18:27மறைவு06:46
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
04:5105:1705:42
உச்சி
12:15
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:4819:1419:39
Go to Homepage
செய்திகள்
Previous News ItemNext News Item
செய்தி எண் (ID #) 13058
#KOTW13058
Increase Font Size Decrease Font Size
புதன், பிப்ரவரி 19, 2014
நளினி, பேரறிவாளன் உள்பட 7 பேர் விடுதலை: தமிழக அரசு!
செய்திகாயல்பட்டணம்.காம்
இந்த பக்கம் 2458 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (3) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 1)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}

ராஜீவ் காந்தி கொலை வழக்கின் குற்றவாளிகள் முருகன், சாந்தன், பேரறிவாளன், நளினி, ராபர்ட் பயஸ் உள்ளிட்ட 7 பேரையும் விடுதலை செய்ய முடிவு செய்துள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.

முதல்வர் ஜெயலலிதா தலைமையில் இன்று காலை நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கின் குற்றவாளிகள் முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகிய மூவரின் தூக்கு தண்டனையை ரத்து செய்து நேற்று (செவ்வாய்க்கிழமை) உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

இந்நிலையில், முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகிய மூவரையும் உடனடியாக விடுதலை செய்ய மத்திய அரசுக்கு பரிந்துரைப்பதாக தமிழக அரசு இன்று அறிவித்துள்ளது.

இது தொடர்பாக தமிழக சட்டப்பேரவையில், விதி எண் 110-ன் கீழ் முதல்வர் ஜெயலலிதா இந்த அறிவிப்பை வெளியிட்டார்.

அப்போது, 'முருகன், சாந்தன், பேரறிவாளன், நளினி, ஜெயக்குமார், ரவிச்சந்திரன், ராபர்ட் பயஸ் ஆகிய 7 பேரையும் விடுதலை செய்ய மத்திய அரசுக்கு பரிந்துரைக்கப்படுகிறது. மூன்று நாட்களுக்குள் இவர்களை விடுவிக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்காவிட்டால் தமிழக அரசே அதன் அதிகாரத்தை பயன்படுத்தி விடுதலை செய்யும்' என்று முதல்வர் அறிவித்தார்.

உச்ச நீதிமன்றம் பரிந்துரை:

முன்னதாக, மூவரின் தூக்கு தண்டனையை ரத்து செய்து நேற்று தீர்ப்பு அளித்த உச்ச நீதிமன்றம், குற்றவியல் நடைமுறைச் சட்டப் பிரிவு 432-ன் படி தமிழக அரசு மூன்று பேரையும் விடுதலை செய்வது குறித்து முடிவு எடுக்கலாம் என பரிந்துரைத்திருந்தது குறிப்பிடத்தக்கது.

தகவல்:
தி இந்து


Previous News ItemNext News Item
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. Re:...
posted by AHAMED SULAIMAN (Dubai) [19 February 2014]
IP: 217.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 33252

அஸ்ஸலாமு அழைக்கும் ,

இந்த மூன்று நபர்களின் தூக்கு ரத்தானது மகிழ்சியான ஒன்றுதான் காரணம் இவர்களின் மீதுள்ள குற்ற காரண காரணம் சிறுபிள்ளை தனமானது இது போல காரணங்கள் கூட இல்லாமல் கைபிள்ளை தனமான காரணத்துக்காக இஸ்லாமிய தமிழர்களும் மற்ற மாநிலத்தில் இஸ்லாமியர்களும் அற்ப காரணம் கூட இல்லாமல் சிறைகளில் முடங்கியுள்ளார்கள் .

கண்டிப்பாக தண்டனைகள் கொடுக்க வேண்டும் அதில் எந்த கருத்து வேறுபாடுகளும் இல்லை , ஆனால் உண்மயான குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும் , அப்போதான் குற்றங்கள் கண்டிப்பாக குறையும் அதை விட்டு விட்டு மரண தண்டனை கூடாது என்றால் அது சரியல்ல தண்டனை என்பது குற்றத்துக்கு தங்குந்த தண்டனையாக கண்டிப்பாக இருக்க வேண்டும் .

நம் நாட்டில் சட்டம் , ஜனநாயகம் , சமத்துவம் என்ற வார்த்தைகளை பயன்படுத்தி செயப்படும் கூத்துகள் , நாடகங்கள் கொஞ்ச நஞ்சம் அல்ல , இந்த நாட்டுக்கு தகுந்த சரியான சட்டங்கள் என்றால் அது என்றும் சரியாத சரியான சரியா சட்டங்கள்தான் .

இதன மூலம்தான் இந்த நாட்டில் அமைதியையும் சாந்தியையும் சமாதானத்தையும் சமதர்மத்தையும் கொடுக்க முடியும் .

மனித சமுதாயம் நிம்மதியாக இருக்க இஸ்லாமிய சட்ட திட்டங்கள்தான் உதவும் .


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
2. Re:...
posted by mackie noohuthambi (chennai) [19 February 2014]
IP: 124.*.*.* India | Comment Reference Number: 33253

நீரே முக்கண் முதல்வரும் ஆகுக, நெற்றிக் கண் திறப்பினும் குற்றம் குற்றமே.

நீதி கேட்டு நெடிய காலம் காத்திருந்தவர்கள் 23 வருடங்கள் நெருப்பாற்றில் நீந்தி வந்தவர்கள் கருணை மனு மீது தீர்ப்பு வழங்க குடியரசு தலைவர் நீண்டகால தாமதம் செய்ததால் இவர்கள் விடுதலை செய்யப் பட்டிருக்கிறார்கள். ஆனாலும் இவர்கள் ராஜீவ் காந்தியை கொலைசெய்வதற்கு துணை போனவர்கள் என்ற பழி துடைக்கப் படவில்லை. அரசு அன்று கொல்லும் தெய்வம் நின்று கொல்லும் என்று சொல்வார்கள்.

இதற்குதான் தீர்ப்பு நாள் என்று ஒன்று உண்டு.அன்று இங்கே விடுதலை செய்யப்பட்டவர்கள் தண்டிக்கப் படுவார்கள். இங்கே அநியாயமாக சிறை பிடிக்கப் பட்டவர்கள் அங்கே மன்னிக்கப் படுவார்கள் என்று இஸ்லாம் கூறுகிறது..

கோவை சிறையில் இதேபோல் 15-20 வருடங்கள் குற்றவாளிகள் என்று தீர்ப்பும்கூட வழங்கப்படாத கைதிகள் அப்பாவி முஸ்லிம்கள் சிறையில் வாடிக் கொண்டிருக்கிறார்கள் அவர்கள் இளமையை தொலைத்து முதுமையை தொட்டுக் கொண்டிருக்கிறார்கள். இவர்கள் முஸ்லிம்கள்.

இவர்களுக்காக வாதாட
ஒரு கலைஞர் இல்லை
ஒரு புரட்சி புயல் இல்லை
ஒரு மருத்துவர் இல்லை
ஒரு புரட்சி தலைவி இல்லை
ஒரு சதாசிவம் இல்லை

அவர்களுக்கு அவர்கள் சாகும்வரை இதுதான் கதி என்றால், அந்த தீர்ப்பு நாளின் அதிபதியான அல்லாஹ்வின் வேதனை உங்களை சூழ்ந்து கொள்ளும் நாள் வெகு தொலைவில் இல்லை. இவர்களின் சாபம் உங்கள் சிம்மாசனங்களை குப்புற தள்ளிவிடும், ஜாக்கிரதை. அவர்களையும் விடுதலை செய்யுங்கள்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
3. எங்கே நீதி?
posted by முஹம்மது ஆதம் சுல்தான் (yanbu) [20 February 2014]
IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 33261

குண்டு வெடிக்கிறது உடல் சிதறுகிறது அய்யோ அம்மா என்ற அலறல்கள் அங்கொன்றும் இங்கொன்றுமாக உடல்கள் சிதறி சின்னாபின்னமாக ரத்த வெள்ளத்தில் மிதக்கின்றன.

ராஜிவ்காந்திக்கு வைத்த குறியில் கோரமாய் இறந்தவர்கள் எத்தனை அப்பாவிமக்கள். தன் கணவனை இழந்து தன்தாலியை இழந்து,பொட்டிழந்து, பூவிழந்து பூமியில் நாதியற்று நாளைப்பொலுதை எப்படிகழிப்பதென்று நாட்களை, மாதங்களை, வருடங்களை வேதனை கண்ணீரில் கழித்துக்கொண்டிருக்கும் இல்லை கரைந்து கொண்டிருக்கும் எத்தனை குடும்பங்கள், அக்குடும்பங்கள் இன்றுவரை மனக்கொதிப்பின் முனைகளில் முழு வாழ்க்கைகளையும் பறிகொடுத்துவிட்டு நடமாடும் பிணமாக வாழ்கிறார்களே அவர்களை இந்த நீதியரசர்கள் காணவில்லையா?அக்கோர கொடிய கொலைதாக்குதலில் தன் மகனை இழந்தவர்கள் எத்தனைபேர்?தன் தந்தையை இழந்தவர்கள் எத்தனைபேர்? இவர்களையெல்லாம் இந்த நீதியரசர்களுக்கு தெரியாதா?

இவ்வளவு கொடூர கொடிய காரியத்தை செய்தவர்கள் ஏதோ 23 வருடங்கள் மன உளைச்சலுடன் இருக்கிறார்களாம் அதனால் மன்னித்து விட வேண்டுமாம்! என்ன நீதி? என்ன நடுநிலைமை? என்ன சட்டம்? என்ன மனசாட்சி? நீதி அரசர்களே உங்களுக்கும் குடும்பம்,பிள்ளை குட்டிகள் இருக்கத்தானே செய்கிறது.

சரி நீங்கள் நேர்மையான நீதியரசர்கள் என்றால் உங்கள் நீதியை எல்லா இடமும்,எல்லோருக்கும் சமமாக வழங்கிடவேண்டும் பல்லாண்டு காலமாக எந்தவித விசாரணையும் இல்லாமல் கோவை முதல் பல சிறைகளில் வாடி,வதங்கி தங்கள் உடலில் உயிரை மட்டும் ஏந்தி அது எந்த நேரத்திலும் பிரிந்து விடக்கூடிய பரிதாபநிலையில் தவிக்கும் அப்பாவி முஸ்லிம்கள் உங்கள் கண்களுக்கு படவில்லையா? அடப்பாவிகளே. அப்படியென்றால் நாங்கள் இரண்டாம் தர குடிமக்களா? பக்கத்துக்கு நாட்டில்லுவர்களை விட நாங்கள் கீழ்தரமானவர்களா?கேவலமானவர்களா? நாங்கள் இந்த நாட்டில் பிறந்தது தான் குற்றமா?

நீதியரசர்கள, நீங்கள் உங்கள் கருப்பு அங்கியைஅணியும்போலுது அணுவளவாவது உங்கள் உதிரத்தின் மனச்டாட்சி உங்களை கேட்காதா? கேடுகெட்ட அரசியல் வாதிகளே உங்களுக்கு இந்த மூவரின் உயிர்தான் உலகத்திலேயே பிரதானமானதா?

எத்தனை இஸ்லாமிய உயிர்கள் இன்றுவரை இரும்பு கம்பிகளுக்குள்ளே இருக்கிறார்கள்,நாம் ஏன் இங்கு இருக்கிறோம் என்று இன்றுவரை அவர்களுக்கும் தெரியவில்லை,அவர்களை அழைத்துவந்த அந்த அரக்கர்களுக்கும் தெரியவில்லை, அம்மாநிலத்தை ஆண்டுகொண்டிருக்கும் ஆட்சி தலைமைக்கும் தெரியவில்லை.

தீவிரவாததிற்கு தூபமிடுபவர்கள் யார்?தீவிரவாததிற்கு வித்தூண்டுபவர்கள் யார்? தீவிரவாதி எப்படி உருவாகிறான்?

நீதி தேவதை கண்ணை கட்டியிருப்பது நடுநிலையை குறிப்பதற்க்காகதான்.ஒருவேளை நீதியே கட்டப்படவேண்டிய ஒன்றுதான் என்ற சித்தாந்தம் தலைதூக்குமேயானால், அந்நீதியை தட்டிப்பறிப்பதில் தாமதம் ஏற்படாத இழி நிலை தான் இந்நாட்டில் மிஞ்சும்!

அல்லாஹ் அனைத்தும் அறிந்தவன்!
அன்புடன்,
முஹம்மது ஆதம் சுல்தான்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>

முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்

பிற செய்திகள்

காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
Cathedral Road LKS Gold ParadiseFathima Jewellers
AKM JewellersFaams

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved