Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
10:20:11 PM
வியாழன் | 28 மார்ச் 2024 | துல்ஹஜ் 1701, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
05:0812:3015:4118:3419:42
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:17Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்20:52
மறைவு18:28மறைவு08:06
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
05:0705:3205:56
உச்சி
12:22
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:4919:1319:37
Go to Homepage
செய்திகள்
Previous News ItemNext News Item
செய்தி எண் (ID #) 13332
#KOTW13332
Increase Font Size Decrease Font Size
ஞாயிறு, மார்ச் 23, 2014
நாடாளுமன்றத் தேர்தல் 2014: ஆம் ஆத்மி தூத்துக்குடி தொகுதிக்கான தேர்தல் கலந்தாலோசனைக் கூட்டம்! காயலர்களும் பங்கேற்பு!!
செய்திஎஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்)
இந்த பக்கம் 3815 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (14) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 5)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}

இந்திய நாடாளுமன்றத் தேர்தல் வரும் ஏப்ரல் மாதம் 07ஆம் நாளன்று துவங்கி, மே 12ஆம் நாள் வரை ஒன்பது கட்டங்களாக நடைபெறவுள்ளது. தமிழகத்தில் ஏப்ரல் 24 அன்று ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது. இதற்கான அறிவிப்பு, இந்திய தேர்தல் ஆணையத்தால் மார்ச் 05ஆம் நாளன்று வெளியிடப்பட்டுள்ளது. அதன் தொடர்ச்சியாக, தேர்தல் நடத்தை விதிமுறைகள் நடைமுறைக்கு வந்துள்ளது.



இத்தேர்தலில், அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி கட்சியின் சார்பில், தூத்துக்குடி நாடாளுமன்றத் தொகுதி வேட்பாளராக சுற்றுச்சூழல் ஆர்வலரும், சமூகப் போராளியுமான ம.புஷ்பராயன் போட்டியிடுவார் என அக்கட்சியின் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

தேர்தல் பரப்புரைப் பணிகளை ஒருங்கிணைப்பதற்காக, ஆம் ஆத்மி கட்சியின் தூத்துக்குடி மாவட்ட தலைமை தேர்தல் காரியாலயம் இம்மாதம் 22ஆம் நாள் சனிக்கிழமை (நேற்று) காலை 10.30 மணியளவில் திறக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. காரியாலய அமைவிடம் போக்குவரத்துக்கு இடைஞ்சல் தரும் என்ற காரணங்கூறி, திறப்பு விழாவிற்கு காவல்துறை அனுமதி மறுத்தது.



இதனையடுத்து, தூத்துக்குடி மீனவர் முன்னணி கூட்டரங்கில் அவசர ஆலோசனைக் கூட்டம் நேற்று காலையில் நடைபெற்றது. கோவில்பட்டி நகர்மன்ற முன்னாள் தலைவர் தம்பி பாலசுப்பிரமணியன், வழக்குரைஞர் ரஜினி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.



தேர்தல் பரப்புரைக்கான ஆம் ஆத்மியின் செயல்திட்டங்கள் குறித்து, ஆம் ஆத்மி கட்சியின் தூத்துக்குடி தொகுதி தேர்தல் பணிக்குழு தலைவர் சுபாஷ் ஃபர்னாந்து, காயல்பட்டினத்திலிருந்து இக்கூட்டத்தில் பங்கேற்ற எம்.என்.அஹ்மத் ஸாஹிப் ஊழல் எதிர்ப்பு இயக்கம் - சென்னை அமைப்பின் தூத்துக்குடி மாவட்ட பொருளாளர் ஜோதிமணி உட்பட, தூத்துக்குடி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து கூட்டத்தில் கலந்துகொண்ட பலர் கருத்துரையாற்றினர்.

சுற்றுச்சூழலுக்கு மாசு விளைவிக்கும் போக்குகளுக்கு எதிராக - குறிப்பாக காயல்பட்டினம் நகராட்சிக்குள் இயங்கி வரும் டி.சி.டபிள்யு. தொழிற்சாலையின் சுற்றுச்சூழல் மாசுகளுக்கு எதிராக இக்கட்சி கைமாறு எதிர்பாராமல் களமிறங்க வேண்டும் என காயல்பட்டினம் சுற்றுச்சூழல் ஆர்வலர் முஜாஹித் அலீ பேசினார்.



தூத்துக்குடி தொகுதியின் ஆம் ஆத்மி வேட்பாளர் ம.புஷ்பராயன் இணையதள (ஆன்லைன்) உதவியுடன் கணினி வழியே சிறப்புரையாற்றினார்.



நன்றியுரையுடன் கூட்டம் நிறைவுற்றது. இக்கூட்டத்தில், ஊழல் எதிர்ப்பு இயக்கம் - சென்னை அமைப்பின் தூத்துக்குடி மாவட்ட கிளை அங்கத்தினர், காயல்பட்டினத்தைச் சேர்ந்த சமூக ஆர்வலர்கள், கோவில்பட்டியைச் சேர்ந்த வழக்குரைஞர்கள் உள்ளிட்ட சமூக ஆர்லவர்கள் உட்பட ஆம் ஆத்மி கட்சியின் அபிமானிகள் மாவட்டத்தின் பல பகுதிகளிலிருந்தும் கலந்துகொண்டனர்.





கூட்ட ஏற்பாடுகளை, ஆம் ஆத்மி கட்சியின் மாநில பொறுப்பாளர் சேவியர் ஒருங்கிணைப்பில், ஜோசப், கெபிஸ்டன், குணசீலன், ஜோய் கேஸ்ட்ரோ, ஜெயேந்திரன், ராஜேஷ், ஜெகன் உட்பட பலர் செய்திருந்தனர்.



கூட்டத்தைத் தொடர்ந்து, செய்தியாளர் சந்திப்பு நிகழ்ச்சியும் நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது.



ஸ்ரீவைகுண்டத்தைச் சேர்ந்த கணினி பொறியாளர் இளஞ்செழியன், “எனது ஓட்டு விற்பனைக்கல்ல!” என்ற முழக்கத்தையும், ஆம் ஆத்மி கட்சிக்கு வாக்கு கேட்கும் வகையில் - அதன் தேர்தல் சின்னமான துடைப்பத்தையும் தனது காரில் பொறித்து வடிவமைத்திருந்தார். தேர்தல் ஆணையத்தின் முறையான அனுமதி பெற்று இதனைச் செய்வதாகக் கூறிய அவர், தனது காரின் மீது பொதுமக்களின் ஆதரவுக் கைச்சான்றுகளைச் சேகரித்தார். பொதுமக்கள் அதில் ஆர்வமுடன் கைச்சான்றிட்டனர்.



தேர்தல் காரியாலயம் அமைவதால் போக்குவரத்துக்கு எவ்வித இடையூறும் ஏற்படாது என்று, ஆம் ஆத்மி கட்சியிடமிருந்து தேர்தல் ஆணையத்தால் பெறப்பட்ட உறுதிமொழியையடுத்து, தூத்துக்குடியில் காரியாலயம் திறக்க காவல்துறை அனுமதியளித்துள்ளதாக கடைசியாக பெறப்பட்ட செய்திகள் தெரிவிக்கின்றன.

களத்தொகுப்பு & படங்கள்:
ஹாஃபிழ் M.M.முஜாஹித் அலீ


Previous News ItemNext News Item
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. 49 O or AAP இதில் ஒன்றே மக்களின் தீர்ப்பு..
posted by செய்து அகமது (chennai ) [23 March 2014]
IP: 116.*.*.* India | Comment Reference Number: 33881

எல்லா புகழும் இறைவனுக்கே யாருக்கு நமது ஓட்டுகளை வரும் தேர்தலில் வாக்களிப்பது என்று யோசித்து இருந்த நேரத்தில் 49 O தான் நினைவுக்கு வந்தது.

தற்போது ஒரு நல்ல தலைமையை கொண்டு இயங்கும் எளிய மக்கள் கட்சிக்கு வாக்களித்தால் என்ன என்ற முடிவுக்கு வைத்துள்ளேன்.

எது சரி, எது தவறு என இளைய தலைமுறையினர்கள் கண்டிப்பாக உணர வேண்டும்.

எளிய மக்கள் கட்சியில் இணைந்ந்து அவர்களின் முன்னேற்றத்திற்காக ஆதரவு கொடுக்கும் காயலின் அன்பு நெஞ்சங்களுக்கு வாழ்த்துக்கள்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
2. Re:...ஆம் ஆத்மி தூத்துக்குடி தொகுதிக்கான தேர்தல்
posted by mohideen thambi s a m (jeddah) [23 March 2014]
IP: 176.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 33882

காயல்பட்டினம் நகராட்சிக்குள் இயங்கி வரும் டி.சி.டபிள்யு. தொழிற்சாலையின் சுற்றுச்சூழல் மாசுகளுக்கு எதிராக இக்கட்சி கைமாறு எதிர்பாராமல் களமிறங்க வேண்டும் என காயல்பட்டினம் சுற்றுச்சூழல் ஆர்வலர் முஜாஹித் அலீ பேசினார்.

இதற்கு நல்ல தீர்வு நம் ஊர் மக்கள் இவர்களை ஆதரித்தால் வழி பிறக்குமா ஊர் நலன் கருதி மாத்தி யோசிக்கவும் ஆம் ஆத்மி இக்கு ஓட்டு போட்டு பார்க்கலாமே


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
3. Re:...
posted by AHAMED SULAIMAN (Dubai) [23 March 2014]
IP: 217.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 33888

அஸ்ஸலாமு அலைக்கும்,

கண்டிப்பாக தமிழ் நாட்டில் நாம் இந்த தேர்தலில் சாதாரண மக்கள் கட்சிக்கு (ஆம் ஆத்மி) க்கு வாக்கு அளிக்க கூடாது அவர்களுக்கு போடும் ஓட்டு நமக்கு பாதகமாக அமையும் இது நிட்சியம் .

இந்த தேர்தல் முடிந்து இனி வரும் தேர்தலில் தாழ்த்தப்பட்ட மக்கள் , முஸ்லிம்கள் , இன்னும் சில அமைப்புகளுடன் இணைந்து இந்த (ஆம் ஆத்மி) கட்சியை ஆதரிக்கலாம்.

ஆனால் இந்த நாடாளுமன்ற தேர்தலில் ஆம் ஆத்மி நாம் ஆதரித்தால் கண்டிப்பாக நம் ஆத்மிகள் ( நம் மக்கள் ) பாதிக் கப்படுவார்கள் என்பது உண்மை.

நம் மக்கள் இதனை கண்டிப்பாக இந்த தேர்தலில் தவிர்த்துதான் ஆக வேண்டும் .

கருணாநிதிக்கு ( தி . மு . க ) நம் சமுதாயம் போடும் கடைசி ஓட்டு இந்த தேர்தலாகதான் இருக்கும் .

இனிமேல் முஸ்லிம் சமுதாயம் தாழ்த்தப்பட்ட சமுதாயம் மற்றும் பல அமைப்புகளோடு இணைந்து ஒருங்கினைப்பாக செயல்படனும் மற்ற அரசியல் கட்சிகள் இந்த அமைப்பை வந்து பார்க்கும் அளவில் நம் செயல்பாடுகள் அமைய வேண்டும் .

கண்டிப்பாக நம் இளைய சமுதாயம் இந்த இடத்தில் சிந்தித்து செயல்பட வேண்டும் அம்மா , மோடி மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் போன்றவற்றுக்கு நம் வாக்கு விழாமல் பார்ப்பது மட்டும் நம் கடமை அல்ல.

மாறாக ஆம் ஆத்மி க்கு வீழும் அணைத்து வாக்குகளும் அம்மா , மோடி கூட்டனிக்கு சாதகமாகதான் அமையும் என்பது சாதாரண மக்களுக்கும் தெரியும் கண்டிப்பாக நம் சமுதாயம் இதில் மிக கவனமாக இருக்க வேண்டும் .


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
4. மாத்தி யோசி !!!
posted by MOHIDEEN ABDUL KADER (ABUDHABI) [23 March 2014]
IP: 176.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 33889

இந்த தேர்தலை புறகனிப்பது விடவும்,சமுதாய தலைவர்கள் வேறு வழி இல்லை என்று பழைய பல்லவி பாடி எப்போதும் போல் தி. மு.க , ஆ. தி.மு.க. போன்ற ஊழல், குடும்ப அரசியல் மதவாத மற்றும் முஸ்லிம்களை கொன்றுகுவிக்கும் கொலைகார கும்பலுக்கு ஓட்டு போடுவதை விட அரசியல் சாக்கடைகளை போக்கி சாமார்த்தியமான சாதாரன அன்றாட மக்களின் தேவைகளை அறிந்து அவர்கல்தான் அதிகாரிகள். தேர்ந்தெடுக்கும் உறுப்பினர்கள் முதல் அரசு அலுவலர்கள் வரை மக்களின் வேலைகாரர்கள் என்று நிருபிக்க IIT ல் பொறியியல் படித்து வருவாய் துறையில் உதவி இயக்குனராக பணிபுரிந்து டெல்லியில் ஓர் ரோல் மாடலாக மாற்றி தற்போது இந்தியா என்ன, உலகமே அதிர்ந்து பார்க்கும் அளவிற்கும் மோடியை எதிர்க்கும் மற்றும் எதிரிகளின் ஓட்டுகளை பிரிக்கும் மிக பெரிய சக்தி ஆம் ஆத்மி கட்சி.

இவர்களும் நமக்கு ஓர் எடுத்துக்காட்டே தவிர முழுமையானது அல்ல எதுவரை என்றால் அவர்களின் வாக்குகள் நிரந்தர ஆட்சிபொறுப்பில் வந்த பிறகு நடக்கும் விதத்தில் தான் உள்ளது.

இதுவரை பலருக்கு நமது வாக்குகள் கொடுத்து ஏமாந்ததுதான் மிச்சம். இவர்களுக்கு இம்முறை மக்கள் மாத்தி யோசித்து ஓர் வாய்ப்புகொடுத்து பார்க்கலாம்.

இக்கட்சி தலைமை முஸ்லிம் மக்களுக்கு என்ன திட்டங்கள் வைத்துள்ளார்கள், இடஒதிக்கீடு,சமுதாய பாதுகாப்பு போன்ற அம்சங்களை தெளிவாக தரவேண்டும்.

நம் தொகுதி வேட்பாளர் காயலில் D.C.W. வால் ஏற்படும் தொல்லைகளை எவ்வாறு நிவர்த்திசெய்ய போகிறார்கள், தொடர்வண்டி வேலைகளின் நிறுத்தத்திற்கு என்ன தீர்வு போன்ற உறுதி மொழிகள் தரவேண்டும்.

நமது நாட்டின் அரசியலை சுத்தம் செய்து ஊழலை துடைக்கும் துடப்பனுக்கே நமது ஓட்டு.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
5. Re:...
posted by K.D.N.MOHAMED LEBBAI (KAYAL PATNAM) [23 March 2014]
IP: 61.*.*.* India | Comment Reference Number: 33890

அஸ்ஸலாமு அலைக்கும்

ஆம் ஆத்மி கட்சி கூட்டத்தில் நம் ஊர் மக்கள் கலந்து கொண்டதை பார்க்கும் போது நமக்கு தமாசகவே உள்ளது .... காரணம் நம் ஊரில் இந்த ஒரு கட்சி மட்டும் தான் இல்லாமல் இருந்தது ...அதுவும் வந்து விட்டதே ....சூப்பரோ ...சூப்பர் ...

நம் அருமை நண்பர் .ஜனாப் .முஜாஹித் அலீ அவர்களின் ... DCW தொழிற்சாலையை பற்றி மிக தன்மையான பேச்சை இச்சமயத்தில் நாம் பாராட்டியே ஆகணும் .....

சரியான நேரத்தில் ....சரியான பேச்சு ....இந்த DCW தொழிற்சாலை பற்றி நாம் இந்த MP தேர்தல் நேரத்தில் முக்கியமான கட்சி தலைவர்களிடம் கண்டிப்பாகவே முறை இட வேணும் ....நாம் இந்த தேர்தல் சமயத்தை தவிர விட்டால் ....நாம் பின்பு யோசிக்க வேண்டியது வரும் .....

நமக்கு கிடைத்து உள்ள சரியானதோர் நேரம் தான் இந்த ..MP ..தேர்தல் ....DCW தொழிற்சாலையை நாம் முறையாக மூடும் விதமாக செயல் பட வேணும் ....

நாம் நம் அருமை நண்பர் .ஜனாப் .முஜாஹித் அலீ அவர்களின் இந்த பேச்சை வரவேற்பத்தோடு நம் ஊர் அனைத்து பொது மக்களும் நண்பரோடு இணைந்து செயல் பட வேணும் ......

ஓன்று மட்டும் நாம் கவனமாக ...நமது ஓட்டை '' தன்மையான நம் ஊருக்கு நன்கு செயல் திட்டங்களை தருகின்ற கட்சிக்கு தான் ...ஓட்டை போடணுமே தவிர ...ஓட்டை நாம் வேஸ்டு பண்ண கூடாது .....நம் ஊரின் நலம் தான் முக்கியமே ....

பொதுவாக...ஆம் ஆத்மி...கட்சி வட நாட்டில் நல்ல செல்வாக்கு பெற்று உள்ளது உண்மையே ....தமிழகத்திலும் இக் கட்சி வளரனும் ....

மா .தி .மு .க ....கட்சி அறிக்கையில் நமது ஊர் பிரச்சினையான ..DCW தொழிர்சாலை பற்றியும் நமக்கு சாதகமாகவே குறிப்பிட்டு இருப்பது பாராட்டுக்குரியது ......

தமிழகத்தின் பெரிய கட்சியான D.M.K & A.D.M.K. ....இந்த இரு கட்சிகளும் நம் ஊரின் முக்கியமான பெரும் பிரச்சனையான DCW தொழிற்சாலை பற்றி ஒன்றுமே சொல்லவே இல்லை என்பதும் நம் ஊர் பொது மக்கள் நன்கு அறிந்த உண்மையே ........

பொருத்து இருப்போம் ....நம் ஊர் மக்களின் எண்ணம் எப்படி இருக்கிறது என்று .....இந்த தேர்தல் முடிவு சொல்லும் ........ வஸ்ஸலாம்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
6. Re:..இமயம் முதல் குமரி வரை!.
posted by OMER ANAS (DOHA QATAR.) [24 March 2014]
IP: 176.*.*.* Qatar | Comment Reference Number: 33902

.சகோதர,சகோதரிகளே,இமயம் முதல் குமரி வரை எங்கு சென்றாலும்,எல்லா அரசியல் கட்சிகளும் அவங்க அவங்க கட்சி ஜெயிக்க வேண்டும் என்றுதான் வியூகம் அமைத்து ஓட்டு கேட்கின்றன! நீங்கள் தரும் வாக்குகளுக்காக,வாக்குறிதியினை, தாராளமாக உங்களுக்கு கொடுத்து விட்டு பதவிக்கு வந்ததும் மக்களை மறந்து போகின்றன! ஆனா ஆம் ஆத்மி மட்டுமே உங்களிடம் ஓட்டு பிச்சை கேட்க்காமல் உங்களிடம் உங்கள் உரிமையை ஓட்டாக கேட்கிறது. வெற்றி பெற்றால் அது உங்கள் வெற்றியே.மக்கள் வெற்றியே!இதில் ஆம் ஆத்மிக்கு எந்த ஆதாயமும் இல்லை.நஷ்டமும் இல்லை.நமது வெற்றியை நாம்தான் தீர்மானிக்க வேண்டும். நல்லோரையும் தீயோரையும் தேர்ந்து எடுப்பது நம் எண்ணத்தில்தான் உள்ளது.இதை நீங்கள் இன்றே இப்போதே தீர்மைத்தாலும் சரி.இன்னும் பத்து வருடம் கழித்து முடிவு செய்தாலும் சரி.நல்ல முடிவை எடுங்கள். ராமன் ஆண்டாலும்,ராவணன் ஆண்டாலும் யாருக்கும் கவையில்லை இந்த நாட்டிலே.!ஆனா,ஆம் ஆத்மிக்கு மட்டும் உண்டு!ஏன்னா அது உங்கள் ஆத்மி! .மக்களே தீர்ப்ப உங்களுக்கு சாதகமா நீங்களே எழுதுங்க! ஆம் .....நாளை நமதே!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
7. Re:...
posted by Cnash (Makkah ) [24 March 2014]
IP: 212.*.*.* Switzerland | Comment Reference Number: 33911

யாருக்கு ஒட்டு போட்டாலும் ஜெயா வருவார் / மோடி வருவார் என்று சொல்லி பயமுறுத்துவதே நமது வழக்கமாகி விட்டது .. ஆம் ஆத்மிக்கு போடும் ஒட்டு பிஜேபி க்கு என்றால் .. நேரிடையாக திமுக விற்கு போடும் ஒட்டு பிஜேபி க்கு போகாது என்று யாராவது உத்திரவாதம் கொடுக்க முடியுமா நம் வாக்குகளை வாங்கி திமுக அதிக இடங்களை பிடித்து , ஒரு வேளை BJP ஆட்சியும் மத்தியில் அமையும் போது அவர் முன்பு போல ஆதரிக்க மாட்டார் என்று யாராவது உத்திரவாதம் தர முடியுமா.. அப்படி தருபவர்கள் 1999திலும், 2001 சட்டமன்ற தேர்தலிலும் நடந்ததை எண்ணி பார்ப்பார்களா? 25 சட்ட மன்ற இடங்களை பிஜேபிக்கு தாரைவார்ததை மறந்து விட்டோமா?

இன்று மத்தியில் மத வாத மோடிக்கு எதிராக மிக பெரிய சவாலாகவும் போட்டியாகும் வீரியத்துடன் எதிர்க்கும் ஒரே ஆள் அர்விந்த் கேஜ்ரிவால் தான் .. இப்படி நாம் வெல்லுகின்ற கட்சிக்கு தான் வோட்டு போடுவோம் என்று சொல்லி கொண்டு இருந்தால் .. ஊழலும் மத வெறியும் தான் நம்மை வென்றும் கொன்றும் கொண்டிருக்கும் .. மன மாற்றம் இன்றைய கட்டாய தேவை / நாம் மாறாதவரை நாடும் மாற போவதில்லை

... ஒரு முறையாவது மற்றம் வேண்டி நம்மிடம் ஒட்டு பிச்சை வாங்கி நம்மை ஏமாற்றி கொண்டிருக்கும் இந்த ஒட்டு பொருக்கி அரசியல் கட்சிகளுக்கு பாடம் புகட்டுவோமே .. ஒருவர் சொல்லிவிட்டு கழுத்தை அறுத்த எதிரி .. மற்றவர் நம்ப வைத்து கழுத்தை அறுத்த துரோகி .. எதிரியும் துரோகியும் எதிரே தெரியும் போது ஒருவர் எதிருக்கு ஆதரவு தருவேன் என்று சொல்லுவது .. மற்றொருவர் துரோகியை தொடர்ந்து கொண்டே செல்வோம் என்று அடம் பிடிப்பதும் ..அவர்களுக்காக அருள் வந்து ஆடுவதையும் நினைத்து உலகம் அவர்களை பார்த்து எள்ளி சிரிப்பது தெரியாமல் .. உண்மையாக உழைக்கும் ஒரு கட்சியை ஊழலுக்கு எதிராக போராடும் ஒரு கட்சியை அதற்கு ஆதரவு கொடுக்கும் மக்களை பார்த்து இவர் சிரிப்பதை பார்த்தல் வேடிக்கையாகவே உள்ளது ..


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
8. Re:...
posted by farook (ksa) [24 March 2014]
IP: 90.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 33913

தொவ்ஹிட் ஜமாஅத் ஆதரவில் அதிமுகவிற்கு முஸ்லிம் ஓட்டும் , சில சகோதரர்கள் சொல்லுவதுபோல் ஆம் ஆத்மிக்கு நம்ம ஓட்டும் , மமக / முஸ்லிம் லீக் ஆதரவோடு நம் முஸ்லிம் ஒட்டு திமுக கூட்டணிக்கும் நல்ல பிரிஞ்சு போடுங்க ..

அப்ப தான் இந்த மூன்றில் யாரவது வந்தால் ஏதாவது செய்வாங்க ,

நம்மளும் எந்த கூட்டணியும் எங்க முஸ்லிம் ஒட்டுமொத்த ஒட்டால்தான் வெற்றிபெற்றது என்று இனி சொல்ல முடியாது .


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
9. நம் பொன்னான வாக்கு வீணாக கூடாது!.
posted by முஹம்மது ஆதம் சுல்தான் (YANBU) [25 March 2014]
IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 33926

எல்லா அரசியல் கட்சிகளும் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள் தான்!அதில் எந்த எதிர்மறை எண்ணமும் இல்லை. எந்த கட்சியும் நம் இஸ்ல்லாமிய சமுதாயத்திற்கு இன்னல் விளைவிக்காமல் இல்லை, என்ன அதில் அளவுகளின் விகிதம் தான் சற்று கூடக்குறைய இருக்கும்!

தற்போது நம் கண் முன்னே இருக்கும் பெரிய ஆபத்து, சுனாமிபோல் நம் சமுதாயத்தை அழித்தொழிக்கத் துடிக்கும் ஒரு சக்திபோல் ஒரு பெரிய பிரளயம் நம்மை பயமுறுத்த தொடங்கி விட்டது!அது சுனாமி அலையா அல்லது சூம்பிபோன அசுத்த அலையா என்பதை வல்ல இறைவன் நமக்கு விரைவில் வெளிச்சம் காட்ட உள்ளான்!

இக்கட்டான சூழ்நிலையில் நிற்கும் நாம்,தற்போது எடுக்க வேண்டிய முடிவுதான் நம்மை அச்சுறுத்தும் இந்த அபாய நிலையிலிருந்து பாதுகாக்கப்படும் ஒரே வழியாகும்!இதில் இறந்த காலத்தில் என்ன நடந்தது ,எதிர்காலத்தில் என்ன நடக்கும் என்ற ஆராய்ச்சியில் இறங்கி அளவுக்கு மீறி ஆலோசனை செய்து,இதுதான் புனிதமான முடிவு என்று முன்,பின் பாராமல் துணிச்சலான நிலையென்று ஒரு நிலைக்கு நம்மை நாமே ஆட்படுத்திக்கொள்ள வேண்டாம்!

சில விசியங்களை நாமும் தந்திரமகத்தான் கையாள வேண்டுமென நம் புனித நபியின் புண்ணிய வழிகாட்டி நம்மை வழி நடத்திச் செல்கிறது!

தற்போது வலிமையாக களத்தில் நிற்க்கும் அரசியல் கட்சிகளில் நமக்கு குறைவான துன்பத்தையும், துரோகத்தையும் தந்த கட்சி எது? நமக்கு உண்மையாகவே உதவியும்,ஒத்தாசையும் செய்ததின் அளவு விகிதம் எந்த கட்சியில் அதிகமாக இருக்கிறது? நம் வாழ்வாதார உரிமையின் வழிகாட்டியான இடஒதிக்கீற்றிக்கு உண்மையிலேயே உதவிய கட்சி எது?நம்முடைய பெரும்பாலான இஸ்லாமிய இயக்கமும், அமைப்புகளும் ஒற்றுமையுடன் இக்காலத்தின் கட்டாயம் கருதி ஓரணியில் ஒருங்கிணைந்து ஆதரவு கொடுக்கும்அணி எது? என்று அலசி ஆராய்ந்து அந்த அணிக்கு நம்முடைய ஆதரவை அளிப்பதுதான் தற்போது நமக்குறிய பாதுகாப்பாகும்!

இது தவிர்த்து நாம் மாற்றமாக அளிக்கப்படும் ஒவ்வொரு வாக்கும் உண்மையிலேயே நம்மினத்திற்கெதிராக விழும் வாக்காகும் என்பதில் எள்ளளவும் சந்தேகம் இலை!

இந்த ஆதம் சுல்தானாகிய நான் ஒரு குறிப்பிட்ட கட்சிக்கு ஐந்து வயதிலிருந்தே ஆதரவுடையவனும்,அங்கதினர் என்ற அந்தஸ்தும் பெற்றவனாவேன்!ஆனால் அல்லாஹ் அறிய அந்த குறிப்பிட்ட கட்சிக்குள் எல்லோரையும் கவிழ்த்து விடவேண்டும் என்ற எந்த "ஒருதலை" முயற்சியிலும் ஈடுபடவில்லை என்பதை உள்ளசுத்தியுன் கூறுகிறேன்! இப்போது என் கண்முன் நிற்பதெல்லாம்,நம்மின மக்களுக்குபாதுகாப்பான, வெற்றியடையக்கூடிய ஒரு அணியில் அடைக்கலாமாகிவிட வேண்டும் என்ற ஒரு பாதுகாப்பு எண்ண உணர்வுதான் மேலோங்கி நிற்கிறது!

ஆம் ஆத்மி கட்சி: மிகவும் உண்மையானதும் ஊழலற்றதும் மக்களுக்கு நன்மை செய்ய துடிக்கும் பல மனசாட்சியுடையவர்கள் அடங்கிய கட்சி என்று பிரபலபடுதப்படுகிறது!அது எந்த அளவிற்கு உண்மை என்ற ஆராய்சிக்கு போக விரும்ப வில்லை, ஆனால் ஒரு எதார்த்தம் என்னவென்றால் இதுவரை அக்கட்சி எந்த ஆட்சியையும் மேற்சொன்ன நற்க்குணங்களுடன் ஆண்டு அனுபவிக்க வில்லை!

அடுத்து, நம் சிறுபான்மை சமுதாயமாகிய இஸ்லாமிய சமுதாயதிற்க்குறிய அதன் கொள்கை குறிக்கோள் எனன? அது தெள்ளத்தெளிவாக கூறப்பட வில்லை.நம்முடைய இட ஓதிக்கீட்டின் நிலையான,எச்சூழ்நிலையிலும் பிறலாத பலமான நிலைபாட்டின் வாக்குறுதி என்ன? பன்முகமதத்தவர்களால் வாழப்படும் பெரிய நம் நாட்டில் சிறுபான்மை இஸ்லாமியர்களின் வாழ்வாதார உரிமையும்,நம் இறையாண்மையும் எந்த அளவிற்கு போற்றி பாதுகாக்கப்படும் என்ற தெளிவான நிலை சொல்லப்படவில்லை!

சரி இவ்வளவு வாக்குறுதியும் தந்தால் வாக்கு அளிப்பீர்களா என்றால்,அதுவும் சிந்திக்க கூடிய ஒன்றுதான்.ஏனனில் ஒரு பெரிய பலம் பொருந்திய நாடாளுமன்ற உறுப்பினர் வெற்றி பெறக்கூடிய அளவிற்கு வளர்ந்து விட்ட கட்சி அல்ல.அக்கட்சின் நோக்கத்தை உண்மை உணர்வோடு ஒத்துக்கொண்டாலும் காலத்தின் கட்டாயத்தாலும் ,நம் முன்னே நம்மை அழிக்கத்துடிக்கும் கொடியவர்களிடமிருந்து நாம் பிழைத்தெழ, “வெந் தீ” வளையத்திலிருந்து வெளிவரவேண்டிய இச்சூழ்நிலையில் இருக்கும் நாம் இந்த கட்சிக்கு வாக்களிக்க முடியாதவர்களாக இருக்கிறோம் என்பதுதான் நிதர்சனமான உண்மை!முதலில்வட்டம்,மாவட்டம்,மாநிலம் என்று வெற்றிபெற்று வரட்டும்.அவர்களின் நேர்மையான ஆட்சித்திறனைப்பார்த்து முடிவெடுப்போம்!

ஒரு பெரிய கட்சியின் தலைவன் அனைத்து மேடையிலும் முழங்கும் வார்த்தையானது மத்தியில் மதவாத கட்சியை ஆட்சி அமைக்க விடமாட்டோம் என்று லட்சோபலட்ச மக்கள் முன் கொடுக்கும் வாக்குறுதியாகும்!

என்னுள்ளத்தை திறந்து நம்மின மக்களின் நன்மைக்காக அனைத்து உணர்வுகளையும் கொட்டிவிட்டேன்!சிறந்ததை சீர்தூக்கி பார்த்து செயலாக்குவீர்களாக

அல்லாஹ் அனைத்தும் அறிந்தவன்
அன்புடன்,
முஹம்மது ஆதம் சுல்தான்! .


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
10. ஆம் ஆத்மி - தேர்ந்தெடுத்தது ஏன் ?
posted by S.A.Muhammad Ali (Velli) (Kayalpatnam) [25 March 2014]
IP: 180.*.*.* India | Comment Reference Number: 33935

அஸ்ஸலாமு அலைக்கும்.

ஆம் ஆத்மி கட்சிக்கு பொது மக்கள் மத்தியில் ஆதரவு பெருகி வருவதை கண்டு மற்ற கட்சிகள் பீதியில் உள்ளது என்பது நிதர்சனமான உண்மை. அதனால் தான் உங்கள் வோட்டை வீண் விரையம் ஆக்கி விடாதீர்கள் என்று கூப்பாடு போடுகிறார்கள். ஆம் ஆத்மி கட்சியை ஆதரிப்பதற்கான சில காரணங்களை இங்கே குறிப்பிட விரும்புகிறேன்.

1. நடக்க இருக்கும் பொது தேர்தலில் எந்த கட்சியும் அறுதி பெரும்பான்மை பெற போவதில்லை என்று அனைவரும் அறிவோம்.

காங்கிரஸ் கட்சி, கம்யூனிஸ்ட் கட்சி தமிழகத்தில் வெற்றி பெற வாய்ப்பில்லை.

நம் தமிழகத்தில் உள்ள கூட்டணிகள் பிஜேபி, அதிமுக, திமுக ஆகிய மூன்று கூட்டணிகளும் முறையே பிஜேபி யின் A, B, C அணிகள் என்பதை அறிந்தும் ஒருவன் தலையை எடுப்பேன் என்கிறான், மற்றவர் கையை எடுப்பேன் என்கிறார், அடுத்தவர் விரலை எடுப்பேன் என்கிறார்.

அதனால் நான் விரலை எடுப்பவருக்கு ஆதரவு அளிப்பேன் என்று சொல்லுவது பொருத்தமாக இல்லை.

காயிதே மில்லத் சாஹிப் அவர்களுக்கு பின் தமிழகத்தில் இஸ்லாமியர்களை திராவிட கட்சிகளுக்கு அடகு வைத்து தங்களின் தேவைகளை பூர்த்தி செய்வதில் தான் முஸ்லிம் தலைவர்களின் பங்கு இருக்கின்றது. இது போன்று எண்ணற்ற பொதுமக்கள் வேறு வழியில்லாமல் சில கட்சிகளை ஆதரித்து வந்த வேளையில் ஒரு விடிவெள்ளியாக பிறந்ததே ஆம் ஆத்மி.

2. ஆம் ஆத்மி கட்சியின் கட்டமைப்பே கீழ்மட்டத்தில் இருந்து மேல்மட்டத்திற்கு செல்கிறது. அனைத்து உறுப்பினர்களும் சேர்ந்தே தலைமை உறுப்பினர்களை தேர்ந்து எடுக்கிறார்கள்.

3. தேர்ந்து எடுக்கப்படும் வேட்பாளர்கள் ஒழுக்கமானவர்களாக இருக்கிர்ரார்களா என்று சரி பார்க்கப்படுகிறது.

4.அந்தந்த தொகுதி மக்களால் வேட்பாளர்கள் தேர்ந்து எடுக்கப்படுகிறார்கள்.

5.இங்கு கட்சியின் பண பரிமாற்றங்கள் கணக்கு காட்டப்படுகிறது.

6. கார்பரேட் கம்பனிகளுக்கு அடிபணிவதில்லை

7. ஒரு குடும்பத்தில் இரண்டு வேட்பாளர்களுக்கு வாய்ப்பு அளிக்கப்படுவதில்லை.

8. இதுவரை அறிவிக்கப்பட்டுள்ள வேட்பாளர்களில் அதிகமான முஸ்லிம்களுக்கு வாய்ப்பு அளித்துள்ள ஒரே கட்சி ஆம் ஆத்மி.

9.தற்போது நமது தொகுதியில் பல முனை போட்டி நிலவுவதாலும், இளைஞர்கள் மத்தியில் விழிப்புணர்வு உள்ளதாலும், மேலும் அனைத்து மீனவ சமுதாய வோட்டுக்களும் ஆம் ஆத்மி கட்சிக்கு ஆதரவாக இருப்பதாலும் திரு.புஷ்பராயன் அவர்கள் வெற்றி பெற வாய்ப்பு உள்ளது.

எனவே ஆம் ஆத்மிக்கு வோட்டளிப்பதால் உங்கள் வோட்டு வீணாக போவதில்லை.

10.ஊழல் என்ற நோயால் நம் நாடு பாதிக்கப்பட்டுள்ளது.அதனை துடைப்பத்தால் துப்புரவு செய்யுமாறு உங்களை தாழ்மையுடன் கேட்டு கொள்கிறேன்,

முஹம்மது அலி (வெள்ளி)


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
11. Re:...
posted by farook (ksa) [25 March 2014]
IP: 90.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 33946

ஆதம் காக்கா சொன்னதை நாம் சீர் தூக்கி பார்க்கனும் . தமிழநாட்டில் எந்த கட்சி முஸ்லிம் விரோதபோக்கால் பிஜேபி உடன் கூட்டணி வைத்தது , எந்த கட்சி அரசியல் சூழ்நிலைகளுக்காக தனது மாநில எதிரி கட்சியை வீழ்த்த பிஜேபி உடன் கடந்த காலத்தில் அமைத்து தற்போது விலகி நிற்கிறது என்று எல்லோருக்கும் தெரியும் .

தேசிய அளவில் ஆம் ஆதிமி கட்சி இருப்பது ஆரோக்கியமே . ஆட்சி அதிகாரத்தில் அமர்ந்து அதன் பின்புதான் அதன் ரூபம் தெரிய வரும் . முதல் ஆட்சியே ஊழல் காங்கிரஸின் தயவில் தான் மைனாரிட்டி ஆட்சி நடத்தினார் .


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
12. ஒட்டுமொத்த முஸ்லிம்களும் இணைந்து வாக்களிப்போம்
posted by V D SADAK THAMBY (Guangzhou,China) [25 March 2014]
IP: 113.*.*.* China | Comment Reference Number: 33947

ஆம் ஆத்மி கட்சி பற்றி அங்கலாய்ப்பவர்கள் சிந்தனைக்கு:

நடந்துமுடிந்த டெல்லி சட்டமன்ற தேர்தலில் இவர்களுக்கு போதிய பெரும்பான்மை இல்லாதிருந்தும் ஏன் காங்கிரஸ் ஆதரவுடன் இவர்கள் ஆட்சியமைக்க வேண்டும்? காங்கிரஸ் ஊழல் கட்சி என்பது இவர்களுக்கு முன்பே தெரியாதா? பதவி சுகத்திர்க்காகத்தானே இந்த முயற்சி? அந்த ஆட்சி நீடித்ததா?

எனவே தயவுசெய்து புதுபுது கதைகளை சொல்லி முஸ்லிம்களின் ஓட்டுக்களை பிரித்து "முஸ்லிம்களின் வாக்குரிமை சக்தியை" வீணடிக்க வேண்டாம்.

ஒட்டுமொத்த முஸ்லிம்களும் இணைந்து வாக்களிப்போம் "உதயசூரியனுக்கு"


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
13. Re:...
posted by Cnash (Makkah ) [25 March 2014]
IP: 212.*.*.* Switzerland | Comment Reference Number: 33952

என்ன பதவி சுகம் என்று விளக்கமா சொல்லுங்கள் ...பதவி ஏற்று 40 நாளில் தான் மக்களுக்கு கொடுத்த வாக்கை நிறைவேற்ற முடியவில்லை என்று முதலமைச்சர் பதவியை தூக்கி ஏறிந்தது பதவி சுகமா? இல்லை மத்தியில் ஆண்டாலும் அது பிஜேபி யானாலும் RSS ஆனாலும் பரவா இல்லை தனக்கும் தன குடும்பத்திற்கும் பதவி வேணும் என்று விடாமல் 15 வருடம் ஒட்டி கொண்டு இருந்தது பதவி சுகமா?

வழிய காங்கிரஸ் ஆதரித்த போதும் 10 நிபந்தனைகளை போட்டு அதை மத்திய காங்கிரஸ் அரசு செய்தால் தான் ஆதரவை பெற்று கொள்வேன் என்று அதட்டி சொன்னது பதவி சுகமா?

காங்கிரஸ்சில் காலடியில் கிடந்து சட்டமன்றத்தில் அவர்கள் மிரட்டி கேட்ட சீட்டை முஸ்லிம் லீக்கிடம் இருந்து பிடுங்கி கொடுத்து,

ஒவ்வொரு இலாக்காகளை பெறுவதற்கு டெல்லியில் தவம் கிடந்தது ஆதரவு கடிதம் கொடுப்பதை தாமத படுத்தி மகளுக்கும் மகனுக்கும், மருமகனுக்கும் ராசாவிற்கும் காத்திருந்து பதவி பெற்றது பதவி சுகமா என்று இன்று விளக்குமாறை கையில் பிடித்திருக்கும் ஆம் ஆத்மிக்கு விளக்குமாறு கேட்டு கொள்கிறோம்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
14. Re:...
posted by farook (ksa) [26 March 2014]
IP: 176.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 33965

வழிய காங்கிரஸ் ஆதரித்த போதும் 10 நிபந்தனைகளை போட்டு அதை மத்திய காங்கிரஸ் அரசு செய்தால் தான் ஆதரவை பெற்று கொள்வேன் என்று அதட்டி சொன்னது பதவி சுகமா? Copy-ப

அந்த பத்தோ நூறோ நிபந்தனைகளை, பதவியை காங்கிரஸ் ஆதரோவோடு அனுபவிக்கும் முன் போட்டு இருக்கணும்? minority அரசா இருந்தாலும் பரவில்லை , எதோ நாலு நாளோ நாற்பது நாளோ பதவி ஆசையோடு கவ்ருவமும் கிடைக்கும் என்பது தான் ஆம் ஆத்மி தலைவரின் ஆசையா இருந்தாது .

பதவி ஏற்று 40 நாளில் தான் மக்களுக்கு கொடுத்த வாக்கை நிறைவேற்ற முடியவில்லை என்று முதலமைச்சர் பதவியை தூக்கி ஏறிந்தது பதவி சுகமா? c-p-

கொடுத்த வாக்குறிதியை நிறைவேற்ற திறமை இல்லை என்பது தான் உண்மை . மதவாத bjp, ஊழல் காங்கிரஸ் மாற்றமா ஒரு கட்சி இருக்குதே என்று தான் டெல்லி மக்கள் ஆம் ஆத்மிக்கு ஒட்டு போட்டார்கள் , அனால் ஆட்சி செய்ய திறமை இல்லை .

சின்ன மீனை விட்டு கொடுத்து பிரதமர் பெர்ய மீனை புடிக்க தான் பதவியை துறந்தார் என்று ஏன் சொல்ல கூடாது?

வெளிநாட்டு அறக்கட்டளையின் பிடியில் ஆம் ஆத்மி கட்சி இல்லை என்று உறிதியா சொல்ல முடியுமா ?

http://indianexponent.com/forums/topic/12-reasons-why-i-dont-fully-trust-aap-and-kejriwals-intentions


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>

முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்

பிற செய்திகள்

காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
Cathedral Road LKS Gold ParadiseFathima Jewellers
AKM JewellersFaams

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved