Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
5:09:59 PM
வெள்ளி | 29 மார்ச் 2024 | துல்ஹஜ் 1702, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
05:0812:3015:4118:3419:42
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:16Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்21:42
மறைவு18:28மறைவு08:48
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
05:0705:3105:55
உச்சி
12:22
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:4919:1319:37
Go to Homepage
செய்திகள்
Previous News ItemNext News Item
செய்தி எண் (ID #) 14147
#KOTW14147
Increase Font Size Decrease Font Size
திங்கள், ஜுலை 21, 2014
அகில உலக திருக்குர்ஆன் மனனப் போட்டியில் காயல்பட்டினம் தொடர்புடைய இலங்கை மாணவர் பங்கேற்பு!
செய்திஎஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்)
இந்த பக்கம் 3745 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (3) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 0)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}

ஐக்கிய அரபு அமீரகம் - துபை நகரில், ஆண்டுதோறும் புனித ரமழான் மாதத்தில், அகில உலக திருக்குர்ஆன் மனனப் போட்டி விமரிசையாக நடத்தப்படுவது வழமை. 18ஆம் ஆண்டாக இவ்வாண்டு ரமழான் முதல் நாள் முதல் 20ஆம் நாள் வரை, துபை சேம்பர் ஆஃப் காமர்ஸ் கட்டிட கேளரங்கில் நடைபெற்ற போட்டியில், உலகின் 87 நாடுகளிலிருந்து - திருமறை குர்ஆனை மனனம் செய்த ஹாஃபிழ் மாணவர்கள் பங்கேற்றனர்.





ரமழான் 21ஆம் நாளன்று போட்டி முடிவுகள் அறிவிக்கப்பட்டன. அதில், நைஜீரிய நாட்டு மாணவர் 250,000 திர்ஹம்களை முதல் பரிசாகப் பெற்றார். இது தவிர, சிறந்த குரல் வளம், உச்சரிப்பு, கிராஅத் என பல வகைகளில் சிறப்புப் பரிசுகளும் சாதனை மாணவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளன.

இப்போட்டியில், இலங்கை மாவனல்ல - வளவுவத்த என்ற ஊரைச் சேர்ந்த முஹம்மத் முபாரக், மீரா பேகம் தம்பதியின் 15 வயது மகனான ஹாஃபிழ் முஹம்மத் ஸாபிர் பங்கேற்றார்.

இம்மாணவரது தாயாரின் தந்தையான மர்ஹூம் ஷேக் அப்துல் காதிர் என்பவர், காயல்பட்டினம் நெசவுத் தெருவைச் சேர்ந்த முஹம்மத் அலீ என்பவரின் மகனும், அதே தெருவைச் சேர்ந்த ஹஸன் இக்பால் என்பவரின் உறவினருமாவார்.

போட்டியில் பங்கேற்று, 80 விழுக்காடுகளுக்கு மேல் மதிப்பெண்கள் பெற்ற பிரிவில் இம்மாணவரும் இடம்பெற்றதால், அவருக்கு 30,000 திர்ஹம்கள் பரிசுத் தொகையாக வழங்கப்பட்டுள்ளது.

உலகப் புகழ்பெற்ற அகில உலக திருக்குர்ஆன் மனனப் போட்டியில் காயல்பட்டினம் தொடர்புடைய மாணவர் பங்கேற்ற செய்தியறிந்து, காயல்பட்டினத்தைச் சேர்ந்த துணி உமர், டீ.ஏ.எஸ்.மீரா ஸாஹிப், சாளை ஷேக் ஸலீம் ஆகியோர் மாணவரை அவர் தங்கியிருந்த அறைக்கு நேரடியாகச் சென்று பாராட்டி, வாழ்த்திப் பிரார்த்தித்து வந்தனர்.



திருமறை குர்ஆனை மனனம் செய்த ஹாஃபிழ்கள் காயல்பட்டினத்தில் ஆயிரக்கணக்கில் இருந்து வரும் நிலையில், இதுபோன்ற போட்டிகளில் பங்கேற்பதற்கேற்ப அவர்களின் தரத்தை மேம்படுத்த மத்ரஸா நிர்வாகங்கள் முயற்சிக்க வேண்டும் என எதிர்பார்ப்பதாக அக்காயலர்கள் கூறினர்.

தகவல்:
துபையிலிருந்து...
சாளை ஷேக் ஸலீம்


Previous News ItemNext News Item
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. Re:...
posted by abbas saibudeen (kayalpatnam) [21 July 2014]
IP: 115.*.*.* India | Comment Reference Number: 36062

அல்ஹம்துலில்லாஹ். எல்லாம் புகழும் வல்ல இறையூண் ஒருவனுக்கே . i .t . அப்பாஸ் ஆகிய எனக்கு (பெரிய நெசவு தெரு ) பெரியம்மா மகன் தம்பியும் ஆன முஹம்மத் சாபிர் அவர்களுக்கு எனது குடும்பத்தார் சார்பில் நெஞ்சம் கலந்த வாழ்த்துக்களை யுரிதாக்குகிறேன்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
2. Re:...ஹாபில்களின் சரணாலயம்
posted by mackie noohuthambi (kayalpatnam) [22 July 2014]
IP: 180.*.*.* India | Comment Reference Number: 36069

பெருமையாக உள்ளது. கயல்பட்டினத்தின் ஹாபிழ்கள் இருவருக்கு ஹாமிதிய்யா மார்க்க கல்வி நிறுவனத்தில் பயின்றவர்களுக்கு உம்ரா செல்ல ஒரு காலத்தில் கிடைத்த வாய்ப்புக்கு பிறகு ஊரில் எவ்வளவோ மாற்றங்கள் ஏற்பட்டு விட்டன.

பறவைகளின் சரணாலயம் வேடந்தாங்கல் என்பதுபோல் ஹாபில்களின் சரணாலயமாக காயல்பட்டினம் இருக்கிறது.

வருடம்தோறும் பல மத்ரசாக்களிளிருந்தும் ஹாபிகள் உருவாகி வெளியாகி நமக்கு மகிழ்ச்சி தருகிறார்கள்.அவர்கள் தராவீஹ் தொழுகைகளில் மட்டும் கவனம் செலுத்துகிறார்கள்.இந்த மாதிரி வெளிநாடுகளில் நடத்தப்படும் போட்டிகளில் அவர்கள் பங்குபெற வெளிநாடு வாழ் காயலர்கள் காயல் மன்றங்கள் முயற்சிகள் மேற்கொள்ளலாமே,

மதரசாக்களும் மாற்றி யோசித்தால் இன்ஷா அல்லாஹ் கூடிய விரைவில் இந்த பரிசு மழை நமதூரிலும் பெய்யும் நாள் வெகு தூரத்தில் இல்லை.வெற்றி பெற்ற மாணவருக்கு இதயம் நிறைந்த வாழ்த்துக்கள்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
3. Re:...
posted by ஹசன் இக்பால் (கொழும்பு ) [23 July 2014]
IP: 122.*.*.* India | Comment Reference Number: 36079

இலங்கையில் உள்ள எங்கள் உறவினர் முஹம்மது ஸாபிர் அண்மையில் துபையில் நடைபெற்ற சர்வதேச குர்ஆன் போட்டியில் ஹிப்ழ் பிரிவில் 80 விழுக்காடுகளுக்கு அதிகமான புள்ளிகளைப் பெற்று பரிசு வென்றிருக்கிறார் என்ற செய்தி எங்கள் குடும்பத்தினருக்கும் உற்றார் உறவினர்களுக்கும் நண்பர்களுக்கும் கூட பெரும் மகிழ்ச்சியைத் தந்தது; அல்ஹம்து லில்லாஹ். அவருக்கு எங்கள் பாராட்டுகள்.

அவர் ஏற்கனவே இலங்கையில் இடம்பெற்ற அகில இலங்கை ஹிப்ழ் போட்டியில் முதலாமிடத்தை வென்றிருந்ததன் காரணமாகவே சர்வதேச குர்ஆன் போட்டியில் இலங்கையின் ஒரேயொரு பிரதிநிதியாகக் கலந்து கொள்ளும் அரிய வாய்பபை அடைந்து கொண்டார். அவர் எதிர்காலத்தில் நிறைய போட்டிகளில் உற்சாகத்துடன் கலந்து கொண்டு பரிசுகள் வெல்வதற்கும், சர்வதேச குர்ஆன் போட்டிகளில் அரபு நாடுகளைச் சார்ந்தவர்களுடன் போட்டி போட்டு முதலாமிடத்தை வென்று கொள்வதற்கும் எல்லாம் வல்ல அல்லாஹ் நல்லருள் பாலிப்பானாக!

இலங்கை சிறியதொரு நாடாக இருப்பதால் முஹம்மது ஸாபிருக்கு சர்வதேச குர்ஆன் போட்டியில் கலந்து கொள்வது சாத்தியமாயிற்று; இந்தியா பல மாநிலங்கள் அடங்கியதாக உள்ளதால், பல கட்டங்களைத் தாண்டிச் செல்ல வேண்டியுள்ளது. இதற்கு சரியான பயிற்சியும் வழிகாட்டலும் அவசியம்.

எனவே ஹிப்ழ் துறையில் நல்ல பாண்டித்தியம் உளள்ளவர்களைப் பயன்படுத்தி இதற்கான ஆக்கப்பூர்வ ஏற்பாடுகள் செய்யப்படுமானால், இலை மறை காய்களாக உள்ள நமதூர் ஹாபிழ்கள் உலகம் மெச்சும் இறை மறைக் கனிகளாக மணமும் சுவையும் பரப்புவார்கள் என்பதில் எள்ளளவும் சந்தேகமில்லை. இறைவன் நமது நாட்டத்தையும் தேட்டததையும் நிறைவேற்றித் தருவானாக!

ஹஸன் இக்பால் (கொழும்பிலிருந்து)


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>

முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்

பிற செய்திகள்

காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
Cathedral Road LKS Gold ParadiseFathima Jewellers
AKM JewellersFaams

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved