Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
10:02:16 AM
செவ்வாய் | 16 ஏப்ரல் 2024 | துல்ஹஜ் 1720, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
04:5412:2415:2818:3319:43
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:07Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்12:47
மறைவு18:27மறைவு00:54
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
04:5605:2105:46
உச்சி
12:17
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:4819:1319:38
Go to Homepage
செய்திகள்
Previous News ItemNext News Item
செய்தி எண் (ID #) 14233
#KOTW14233
Increase Font Size Decrease Font Size
புதன், ஜுலை 30, 2014
நோன்புப் பெருநாள் 1435: பெருநாள் மாலை கடற்கரை காட்சிகள்!
செய்திஎஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்)
இந்த பக்கம் 5199 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (1) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 0)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}

காயல்பட்டினத்தில், இம்மாதம் 29ஆம் நாள் செவ்வாய்க்கிழமையன்று (இன்று) ஈதுல் ஃபித்ர் - நோன்புப் பெருநாள் கொண்டாடப்பட்டது.

அன்று காலையில் காயல்பட்டினத்தின் அனைத்து பள்ளிவாசல்கள் - பெண்கள் தைக்காக்களில் பெருநாள் தொழுகை மற்றும் குத்பா பேருரைகள் நடைபெற்றன.

நிறைவில், அனைவரும் ஒருவரையொருவர் கட்டித் தழுவி, கைலாகு செய்து தமக்கிடையில் வாழ்த்துக்களைத் தெரிவித்தவர்களாக மகிழ்ச்சியைப் பரிமாறிக் கொண்டனர்.

அவர்கள் தம் நெருங்கிய - தூரத்து உறவினர்களின் இல்லங்களுக்குச் சென்று, அங்கிருந்தோருக்கு பெருநாள் வாழ்த்துக்களைத் தெரிவித்து, சிறுவர் - சிறுமியருக்கு அன்பளிப்புப் பொருட்களை வழங்கி மகிழ்வித்தனர்.

நேற்று மாலையில், தம் நண்பர்கள் புடைசூழ காயல்பட்டினம் கடற்கரைக்கு வந்த பொதுமக்கள், அங்குள்ள மணற்பரப்பில் அமர்ந்தவாறு, ஊர்க்கதைகள் பேசி, உணர்வுகளைப் பகிர்ந்துகொண்டு, கிடைக்கும் தின்பண்டங்களை வாங்கி, இணைந்தமர்ந்து கொறித்தனர்.

கடற்கரைக்குச் செல்லும் பொதுமக்களுக்கு போக்குவரத்து இடையூறின்றி இருப்பதற்காக, ஆறுமுகநேரி காவல்துறை ஆய்வாளர் முத்து சுப்பிரமணியன் உத்தரவின் பேரில், காவல்துறையினர் ஸீ-கஸ்டம்ஸ் சாலை – சொளுக்கார் தெரு சந்திப்பு மற்றும் ஸீ-கஸ்டம்ஸ் சாலை – கொச்சியார் தெரு சந்திப்பில் வாகனங்களைத் தடுத்து நிறுத்தி, சொளுக்கார் மற்றும் கொச்சியார் தெருக்களுக்குள் அவற்றை நிறுத்துமாறு பணித்தனர். இதனால், போக்குவரத்து சீராக இருந்தது.

இயலாநிலை குழந்தைகளுக்காக இயங்கி வரும் காயல்பட்டினம் துளிர் சிறப்புக் குழந்தைகள் பள்ளி, தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் - காயல்பட்டினம் கிளையின் ஆம்புலன்ஸ் சேவை ஆகியவற்றுக்காக கடற்கரை நுழைவாயிலில் பொதுமக்களிடமிருந்து நன்கொடைகள் சேகரிக்கப்பட்டன.





நேற்று மாலையில் கடற்கரையில் பதிவு செய்யப்பட்ட காட்சிகள் பின்வருமாறு:-









































































































































































பெருநாள் மாலையில் கடற்கரையில், மட்டன் கபாப், பஞ்சு மிட்டாய், மசாலா போலி, வடை - கறி கஞ்சி, மஞ்சள் மிட்டாய் (ஜாங்கிரி) உள்ளிட்ட கடைகளும், பெண்கள் அழகு பொருட்கள், குழந்தைகளுக்கான பொம்பை விளையாட்டுப் பொருட்கள் அடங்கிய விற்பனைக் கடைகளும் நிறைய அமைக்கப்பட்டிருந்தன.

கடற்கரையில் நேற்று ஆயிரக்கணக்கானோர் திரண்டதையடுத்து, கடற்கரை தொழுமிடத்தில் மஃரிப் ஜமாஅத் சுமார் 12 முறை நடத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

கடந்தாண்டு (ஹிஜ்ரீ 1434) நோன்புப் பெருநாளன்று மாலை கடற்கரை காட்சிகள் குறித்த தகவல்களடங்கிய செய்தியைக் காண இங்கே சொடுக்குக!


Previous News ItemNext News Item
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. Re:...
posted by சாளை S.I.ஜியாவுத்தீன் (அல்கோபார் ) [30 July 2014]
IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 36160

அனைவர்களுக்கும் புனித பெருநாள் வாழ்த்துக்கள்.

மாஷா அல்லாஹ்.

புகைப்படங்களை தெளிவாக பதிவு செய்த தம்பி SKS அவர்களுக்கு நன்றிகள்.

ஊரில் உறவுகளை பிரிந்து இருந்தாலும், அவர்களை புகைப்படத்தில் கண்டு ஆனந்தம் அடையும் வாய்ப்பு அளித்த உங்களுக்கு நன்றிகள் பல.

மௌஸின் உருளையை உருட்ட உருட்ட ஆனந்தம்.

நண்பர்கள் குழுவாக, குடும்பத்தினர்கள் அவரவர் குழுவாக, ஒத்த வயதினர் அவர்களின் குழுவாக.. ஆனந்தமாக இருப்பதை கண்டு ஆனந்தம். இந்த ஆனந்தம் நிரந்தரமாக அமைய வல்ல அல்லாஹ் அருள் புரிவானாக.

அவ்வளவு ஆனந்தம் இருந்தாலும், புகைப்படத்தில் கீழ் பகுதியை பார்த்தால் அனைத்து ஆனந்தமும் அணைத்து விடுகிறது.. அவ்வளவு குப்பைகள்.. அவ்வளவு கழிவுகள். என்று விடியுமோ..! சுத்தமான காயல் கடற்கரையாக.!!

48 குடும்ப புகைப்படத்தில் ஒரே பெண்குழந்தைகளாக இருக்கின்றான, ஒரு கிடாவையும் காணவில்லை.வல்ல ரஹ்மான் அருளட்டும்.

சாளை S.I.ஜியாவுத்தீன், அல்கோபார்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>

முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்

பிற செய்திகள்

காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
Cathedral Road LKS Gold ParadiseFathima Jewellers
AKM JewellersFaams

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved