Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
1:59:49 AM
புதன் | 24 ஏப்ரல் 2024 | துல்ஹஜ் 1728, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
04:5212:2315:3018:3319:43
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:04Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்18:48
மறைவு18:27மறைவு06:05
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
04:5205:1705:42
உச்சி
12:15
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:4819:1319:39
பௌர்ணமி @ 05:21
Go to Homepage
செய்திகள்
Previous News ItemNext News Item
செய்தி எண் (ID #) 14387
#KOTW14387
Increase Font Size Decrease Font Size
வியாழன், ஆகஸ்ட் 28, 2014
கல்வி, வேலைவாய்ப்பு, மருத்துவ தேவைகளுக்கு சென்னை வரும் காயலர்களுக்கு KCGC-ன் குறுகிய காலம் தங்கும் விடுதி! சென்னை மண்ணடியில் உதயம்!!
செய்திகாயல்பட்டணம்.காம்
இந்த பக்கம் 3860 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (4) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 1)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}

கல்வி, வேலைவாய்ப்பு, மருத்துவ தேவைகளுக்கு சென்னை வரும் காயலர்கள் - குறுகிய காலத்திற்கு சென்னையில் தங்க KCGC அமைப்பு ஏற்பாடு செய்துள்ளது. இது குறித்து வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பு வருமாறு:

அல்லாஹ் கூறுகிறான் : ஆணாயினும், பெண்ணாயினும் முஃமினாக இருந்து யார் (சன்மார்க்கத்திற்கு இணக்கமான) நற்செயல்களைச் செய்தாலும், நிச்சயமாக நாம் அவர்களை(இவ்வுலகில்) மணமிக்க தூய வாழ்க்கையில் வாழச் செய்வோம்; இன்னும் (மறுமையில்) அவர்களுக்கு அவர்கள் செய்து கொண்டிருந்தவற்றிலிருந்து மிகவும் அழகான கூலியை நிச்சயமாக நாம் கொடுப்போம். (அல்குர்ஆன்: 16:97)

அன்பிற்குரிய சகோதரர்களே!

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...

நமது காயல்பட்டணம் சென்னை வழிகாட்டு மையம் (KCGC) என்ற அமைப்பு தொடங்கப்பட்டு மூன்றாண்டுகளுக்கு மேலாக வல்லோன் அல்லாஹ்வின் உதவியைக் கொண்டு தமது பணிகளை செவ்வன செய்து வருகின்றோம். அல்ஹம்துலில்லாஹ்!

கல்வி, வேலைவாய்ப்பு, மருத்துவம் உள்ளிட்ட பல்வேறு தேவைகளுக்காக சென்னை வரும் காயலர்களுக்கு உரிய வழிகாட்டுகிறோம். பல்வேறு வகைகளில் நமதூர்வாசிகளுக்கு எத்தனையோ நல்ல வழிகாட்டல்களை வழங்கி இருக்கிறோம். இன்ஷா அல்லாஹ் இனி எதிர் வரும் காலங்களில் காயலர்கள் மென்மேலும் பயன்பெறும் வகையில் செயல்பட விரும்புகிறோம்.

அதனடிப்படையில், சென்னை மண்ணடியில் கல்வி, வேலை வாய்ப்பு மற்றும் மருத்துவம் போன்ற காரணங்களுக்காக சென்னைக்கு வரும் காயலர்களுக்கு சிறிது நாட்கள் தங்கி, அவர்களது தேவையை பூர்த்தி செய்துக்கொள்ள எமது அலுவலகத்துடன் ஒரு தற்காலிக தாங்கும் விடுதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

தங்கும் நபர்களுக்கான விதிமுறைகள்:

* தங்கும் அறைகளில் ஓரே நேரத்தில் அதிகபட்சமாக மொத்தம் 10 நபர்கள் மட்டுமே தங்க வசதியுண்டு. (காயல்பட்டணத்தை சேர்ந்த ஆண்கள் மட்டும்)

* கல்வி, வேலை வாய்ப்பு மற்றும் மருத்துவம் போன்ற காரணங்களுக்காக தங்க வருபவர்கள், ஊரிலிருந்து வரும்போதே கே.சி.ஜி.சி-ன் உள்ளூர் பிரதிநிதியாகிய (PRO) சகோதரர் N.S.E மஹ்மூத் (+91 97863 42923) அவர்களிடமிருந்து ஒப்புதல் கடிதம் பெற்று வர வேண்டும்.

* காயல்பட்டணம் அல்லாத வேறு ஊரிலிருந்து கல்வி, வேலை வாய்ப்பு மற்றும் மருத்துவம் போன்ற காரணங்களுக்காக வரும் “காயலர்கள்” கே.சி.ஜி.சி உறுப்பினர்கள் யாரேனும் ஒருவரின் சிபாரிசு / பரிந்துரை கண்டிப்பாக பெற்றிருத்தல் வேண்டும்.

* அறைகளில் தங்க வரும் நபர்கள், தங்களது புகைப்படம் மற்றும் முகவரியுடன் கூடிய அடையாள அட்டை (Passport, Driving License, Voters Id, Adhaar Card & etc) ஏதேனும் நகல் ஒன்றை கண்டிப்பாக அலுவலகத்தில் சமர்பிக்க வேண்டும்.

* கல்வி மற்றும் வேலை வாய்ப்பு போன்ற காரணங்களுக்காக வருபவர்கள் நாளொன்றுக்கு ரூ.50 செலுத்த வேண்டும். இதற்கு முன்பணமாக (Advance) ரூ. 250 அலுவலகத்தில் செலுத்த வேண்டும்.

* மருத்துவ காரணங்களுக்காக வருபவர் கட்டணம் ஏதுமின்றி தங்கிக்கொள்ளலாம்.

* அறைகளில் சமையல் (சாப்பாடு, டீ, சுடு தண்ணீர்) செய்வதற்கு அனுமதி இல்லை.

கல்வி, வேலை வாய்ப்பு, மருத்துவம் போன்ற காரணங்களுக்காக வருபவர்கள் எத்தனை நாட்கள் வரை தங்கிக்கொள்ளலாம்?



நமதூரிலுள்ள காயல் நல மன்றகள், சங்கங்கள், அமைப்புகள் ஆகியவற்றின் பிரதிநிதிகள், உறுப்பினர்கள் ஆகியோர் சென்னைக்கு வரும்போது மறவாமல் நமது KCGC அலுவலகத்திற்கு வருகைத் தருமாறு அன்புடன் அழைக்கிறோம்.

மேலும், KCGC அலுவலகம் மற்றும் தங்கும் விடுதி தொடர்பான தகவல்கள் பெற இதனடியில் தரப்பட்டுள்ள அலைப்பேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

ஹைதர் உசேன் – (நிர்வாக அலுவலர்) : +91 87544 09169.

நாம் பிறந்த ஊருக்கும், நமது சொந்தங்களுக்கும் நம்மால் முடிந்த உதவிகளையும், வழிகாட்டல்களையும் செய்து வர வல்ல அல்லாஹ் நம்மவர்களுக்கு நல்லருளை தருவானாக ஆமின்.

உளத்தூய்மையுடன் இறைத்திருப்தியையும் மறுமை இலக்கையும் மட்டுமே குறிக்கோளாகக் கொண்டு செயலாற்றிட வல்ல ரஹ்மான் உதவி செய்வானாக. மேலும் நம் எண்ணங்களைத் தூய்மையாக்கி நம்காரியங்களை வெற்றியாக்கி ஈருலகிலும் நம்யாவரையும் மேன்மைப்படுத்துவானாக, ஆமீன். வஸ்ஸலாம்...

தங்களன்புச் சகோதரன்,
எஸ்.கே.ஷமீமுல் இஸ்லாம்,
செயலாளர், KCGC.


இவ்வாறு அவ்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Previous News ItemNext News Item
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. Re:...சென்னை 375
posted by mackie noohuthambi (chennai) [29 August 2014]
IP: 180.*.*.* India | Comment Reference Number: 36826

1639 ஆகஸ்ட் 22ம் திகதி சென்னை நகரம் என்ற மத்ரஸா பட்டினம் உதயமானது. இன்று அதற்கு வயது 375.

இந்த நேரத்தில் இப்போது மத்ரஸா பட்டினமாக இருக்கும் காயல்பட்டினத்து மக்களுக்காக இப்படி ஒரு "காயலர் இல்லம்" சென்னையில் உதயமாகி இருப்பது முக்கியத்துவம் பெறுகிறது. இந்த 375 ஆண்டுகளில் நமது காயல்பட்டினத்து மக்கள் இங்கு வந்து குடியேறி தொழில் செய்து பள்ளிவாசல்கள் அமைத்து, மதரசாக்கள் அமைத்து பல்வேறு நல்ல காரியங்கள் செய்துள்ளார்கள். ஊரில் இருந்து வருபவர்களுக்கு அவர்கள் இடத்திலேயே தங்க, உண்க, தொழில் செய்ய ஏற்பாடுகள் செய்திருக்கிறார்கள். ஊரில் நடக்கும் நல்ல காரியங்களுக்கு பொருளாதார உதவிகளும் செய்து வந்திருக்கிறார்கள்.

காலபோக்கில் சென்னை நகரம் நெருக்கடி மிகுந்த நகரமாக மாறியபோது உள்ளங்களும் நெருக்கடிக்குள் ஆயின. பக்கதிலிருப்பவர்களை கூட கவனிக்க முடியாமல் அடுக்கு மாடி வீடுகளும் சென்னையை விட்டு வெகு தூரத்தில் குடி இருக்க வேண்டிய நிர்ப்பந்தமும் ஏற்பட்டது . தொழில், வேலைகள் என்று பலரும் இயந்திர மயமான வாழ்க்கையை மேற்கொள்ள வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது .

இப்படியே போனால் நம் மக்களுக்கு நம் முன்னோர்கள் செய்த உதவிகளுக்கு முற்றுப் புள்ளி விழுந்து விடுமோ என்று சிந்தித்த இளைஞர்கள் மீண்டும் நமதூர் மக்களுக்கு உதவி செய்ய வேண்டிய கட்டாயத்தை சிந்தித்து அதற்கு வித்திட்டதுதான் இந்த KCGC யின் காயலர் இல்லம் உதயமாவதற்கு வழி செய்துள்ளது. அல்ஹம்து லில்லாஹ்.

நமதூர் மக்கள் இந்த நல்ல நோக்கத்தை புரிந்து கொண்டு, இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளவேண்டும். அதன் சட்டதிட்டங்கள் மிக கவனமாக, பல உறுப்பினர்களின் கருத்துக்களை கேட்டு, நீண்ட கலந்துரையாடல் - விவாதங்கள் செய்து வரையப்பட்டவை .

முன் காலங்களில் முத்துச்சாவடி என்று அமைத்து நாடெங்கும் நம் மக்களுக்கு உதவிகள் செய்தார்கள் மறைந்து விட்ட அந்த நல்லோர்களுக்கு இந்த நேரத்தில் நாம் து ஆ செய்வோம் .அவர்கள் மண்ணறைகளை அல்லாஹ் விசாலமாக்கி வைத்து அவர்களுக்கு மேலான சுவர்க்க வாழ்வை கொடுத்து அருள் புரிவானாக.

அந்த வழியில் தங்கள் பயணங்களை ஆரம்பித்துள்ள KAYALPATNAM CHENNAI GUIDANCE COMMITTEE உறுப்பினர்களின் இந்த முயற்சி நல்ல பலனளிக்க அல்லாஹ் அருள்புரிவானாக. அவர்கள் தொழிலில் அபிவிருத்தியையும் உடல் ஆரோக்கியத்தையும் நீண்ட ஆயுளையும் கொடுத்து எல்லா வளமும் பெற்று வாழ அருள்புரிவானாக. தொடர்ந்து இந்த நல்ல காரியங்களை செய்யும் உள்ளம் கொண்டவர்கள் இதில் உறுப்பினர்களாக சேர்ந்து தங்கள் பங்களிப்பை வழங்கும் படி வேண்டிக் கொள்கிறேன்.

உள்ளத்தில் நல்ல உள்ளம் உறங்காது. அது எப்போதும் யாருக்கு என்ன உதவி செய்யலாம் என்று சிந்தித்துக் கொண்டே இருக்கும். வாழ்த்துக்கள்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
2. NOBLE SERVICE - MAY ALLAH ACCEPT OUR GOOD DEEDS
posted by V.M.T.MOHAMED HASAN (HONG KONG) [29 August 2014]
IP: 125.*.*.* Hong Kong | Comment Reference Number: 36829

DEAR BROTHERS

ASSALAMU ALAIKUM.

INDEED VERY HAPPY TO READ THE MESSAGE AND ITS AN NOBLE SERVICE TO THE COMMUNITY (UMMAH) AND MAY ALMIGHTY ALLAH ACCEPT ALL OUR GOOD DEEDS DOING FOR THE SAKE OF HIM.

HOPE UMMAH WILL GE BENEFIT FROM THIS SERVICE.

CONGRATULATIONS TO ALL THE COMMITTEE MEMBERS AND WISHING ALL THE BEST.

FEE AMANILLAH

YOUR BROTHER
V.M.T.MOHAMED HASAN
CAMP : HONG KONG


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
3. Re:...KCGC
posted by hylee (kayalpatnam) [29 August 2014]
IP: 115.*.*.* India | Comment Reference Number: 36830

'தமிழ் நாதம்'மக்கி நூஹு தம்பி அவர்களின் கருத்து அருமையாக உள்ளது. அவரே அணைத்து விசயங்களை அதில் உள்ளடக்கி உள்ளார். KCGC நல்ல உள்ளங்களுக்கு வாழ்த்துக்கள்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
4. Re:...
posted by NUSKI MOHAMED EISA LEBBAI (RIYADH -KSA) [30 August 2014]
IP: 212.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 36881

சீரிய பணியாற்றும் KCGC இன் திருப்பணிகள் நின்று நிலைக்க வாழ்த்துகிறேன். வல்லோனாம் அல்லாஹ்விடம் வுள்ளார இறைஞ்சுகிறேன் ஆமீன் .


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>

முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்

பிற செய்திகள்

காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
Cathedral Road LKS Gold ParadiseFathima Jewellers
AKM JewellersFaams

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved