Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
3:49:42 PM
வெள்ளி | 29 மார்ச் 2024 | துல்ஹஜ் 1702, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
05:0812:3015:4118:3419:42
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:16Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்21:42
மறைவு18:28மறைவு08:48
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
05:0705:3105:55
உச்சி
12:22
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:4919:1319:37
Go to Homepage
செய்திகள்
Previous News ItemNext News Item
செய்தி எண் (ID #) 14380
#KOTW14380
Increase Font Size Decrease Font Size
புதன், ஆகஸ்ட் 27, 2014
ஆக. 31 அன்று காயல்பட்டினம் வழியே விநாயக சதுர்த்தி ஊர்வலம்! ஆறுமுகநேரி காவல் நிலையத்தில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் முஸ்லிம் அமைப்பினர் பங்கேற்பு!!
செய்திஎஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்)
இந்த பக்கம் 4631 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (7) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 0)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}

இம்மாதம் 31ஆம் நாள் ஞாயிற்றுக்கிழமையன்று, காயல்பட்டினம் வழியாக விநாயக சதுர்த்தி ஊர்வலம் நடைபெறவுள்ளது.

ஊர்வலம் தொடர்பான விதிமுறைகள் குறித்த கலந்தாலோசனைக் கூட்டம், ஆறுமுகநேரி காவல் நிலையத்தில், காவல் ஆய்வாளர் முத்து சுப்பிரமணியன் தலைமையில் நடைபெற்றது.



இக்கூட்டத்தில், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தமிழ்நாடு மாநில துணைச் செயலாளர் எஸ்.ஏ.இப்றாஹீம் மக்கீ, மாவட்ட துணைத்தலைவர் மன்னர் பாதுல் அஸ்ஹப், நகர துணைச் செயலாளர்களான எம்.எச்.அப்துல் வாஹித், எம்.இசட்.சித்தீக், தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காயல்பட்டினம் நகர தலைவர் ஷம்சுத்தீன், துணைத்தலைவர் ஹனீஃப், துணைச் செயலாளர் அபூதாஹிர், பொருளாளர் ஜப்பான் சுலைமான், செய்கு ஹுஸைன் பள்ளியின் நிர்வாகிகளான இஸ்மத், செய்கு ஹுஸைன் ஆகியோர் கலந்துகொண்டனர்.



வரும் ஞாயிற்றுக்கிழமையன்று மாலையில், ஆறுமுகநேரியிலிருந்து வரும் விநாயகர் சிலை ஊர்வலம் காயல்பட்டினம் மகாத்மா காந்தி வளைவைக் கடக்கையில், அருகிலுள்ள செய்கு ஹுஸைன் பள்ளி, ஐக்கிய விளையாட்டு சங்க மைதானம் ஆகிய இடங்களில் வெளியாட்கள் யாரையும் அனுமதிக்கக் கூடாது என்றும், ஊர்வலத்தில் வரும் மாற்று மதத்தினரைக் கண்டித்து முழக்கங்களை எழுப்பவோ, சைகை காட்டவோ கூடாது என்றும் இக்கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது.

தகவல் & படங்கள்:
ச.பார்த்திபன்


கடந்தாண்டு நடைபெற்ற விநாயகர் சதுர்த்தி ஊர்வலம் தொடர்பான செய்தியைக் காண இங்கே சொடுக்குக!


Previous News ItemNext News Item
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. தீர்மானம்... !...?
posted by shuaib (jeddah) [27 August 2014]
IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 36782

## ஊர்வலத்தில் வரும் மாற்று மதத்தினரை கண்டித்து கோஷம் எழுப்புவதோ, சைகை காட்டுவதோ கூடாது ## (C&P)

நாம் யாரும் அப்படி இதுவரை அவர்களை நோக்கி கோசம் எழுப்பியதோ, சைகை செய்ததோ கிடையாது. நமதூரில் மட்டுமல்ல எங்குமே அப்படி நடந்தது கிடையாது.

அவர்களும் ஊர்வலம் செல்லும்போது முஸ்லீம்களின் மத உணர்வுகளை புண்படுத்தாமல், கோசம் எழுப்பாமல், நமை நோக்கி சைகை செய்யாமல் செல்ல வேண்டும் என்றும் தீர்மானம் இருக்க வேண்டும்தானே...?

அது என்ன ஒரு பக்க சார்பு தீர்மானம்... !...?

வழி பழைய வழி தானே...?


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
2. Re:...
posted by MAC.Mujahith (Mumbai) [27 August 2014]
IP: 115.*.*.* India | Comment Reference Number: 36783

ஏன்..." இதில் மாற்று மத நண்பர்கள் கலந்து கொள்ளவில்லையா..?

இந்த கூட்டம் முஸ்லிம்களுக்கு மட்டும் தானா...?

இரு சாராரும் கூடி இருந்தால் என் போன்றவர்களின் மனதில் சந்தேகம் வராமல் தித்திப்பாக இருந்திருக்கும்..."


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
3. Re:...
posted by shaik abbas faisal d (kayalpatnam) [27 August 2014]
IP: 180.*.*.* India | Comment Reference Number: 36787

தீர்மானத்தில் ஊர்வலத்தின் வழி பற்றி எதுவும் குறிப்பிடப்பட வில்லையே,வழியில் எதுவும் மாற்றம் உண்டா? ஊரில் பொதுவாக ஒரு பேச்சு நடைமுறையில் உள்ளதே,அதாவது இந்த வருட விநாயகர் சதுர்த்தி ஊர்வலம் காயல்நகரின் பிரதான வீதி (main road)வழியாக வர உள்ளது என்று, இந்த செய்தி உண்மையா?


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
4. குற்றவாளிகளாக!?
posted by shahul hameed sak (malaysia) [28 August 2014]
IP: 113.*.*.* Malaysia | Comment Reference Number: 36792

முஸ்லிம்களை பிரச்னைக்குரியவர்களாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது எப்படி ஒத்து கொண்டார்கள் நம்மவர்கள்?


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
5. ஆலோசனை கூட்டமா? அல்லது (advice ) அறிவுறுத்தல் கூட்டமா ?
posted by முஹம்மது ஆதம் சுல்தான்! (yanbu) [28 August 2014]
IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 36795

இது ஆலோசனை கூட்டமா அல்லது (advice ) அறிவுறுத்தல் கூட்டமா என்ற என்ற சந்தேகம் எழுந்துள்ளது .

இருதரப்பினரும் மேற்கொள்ளக்கூடிய ஒழுங்கு நடவடிக்கையை விளக்கும் முகமாக நடைபெறும் கூட்டத்தில் இருசாராரும் இருக்கவேண்டியதுதானே ஒரு ஆலோசனை கூட்டத்தின் மரபு.ஒருவேளை ஒவ்வோருசாராரையும் தனித்தனியே அழைத்து ஆலோசனை நடத்துவதாக வைத்துக்கொண்டாலும் எடுக்கப்படும் முடிவை இருசாராரும் ஏற்றுக்கொள்ள்ளும் முகமாக இருசாரார்கள் மத்தியில் வைத்து தீர்ப்பாக்கி தீர்மானமாக நிறைவேற்றி வெளியிடவேண்டும் இதுதான் ஒரு அரசாங்க நிர்வாக சமாதான அதிகாரியோ, காவல்துறை அதிகாரியோ மேற்க்கொள்ளவேண்டிய இருதரப்பு சமரச நடவடிக்கையின் சருத்தாகும் !

ஆனால் இந்த செய்தியை வாசிக்கும் பொழுது . நடந்திருக்கும் கூட்டமோ ஒரு தரப்புக் குறிய அறிவுறுத்தல் அடங்கிய நிபந்தனையை விதிக்கும் கூட்டமாகவே படுகிறது . முழு விபரமும் அறிய முடியவில்லை.சம்பந்தப்பட்டவர்கள் முழு விளக்கத்தையும் தருவர்ர்களேயானால் அதற்க்கு தகுந்தாற்போல் நம் தரப்பின் முடிவையும் காவல் துறைக்கு தெரிவிக்க ஏதுவாக இருக்கும்!அல்லாஹ் அனைத்தையும் அறிந்தவன்!

அன்புடன்,
முஹம்மது ஆதம் சுல்தான்!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
6. சமாதானக்கூட்ட விளக்கம்
posted by எஸ்.ஏ.இப்ராஹிம் மக்கி (காயல்பட்டணம்) [28 August 2014]
IP: 116.*.*.* India | Comment Reference Number: 36797

இச்செய்தியில் கருத்து பதிவிட்டவர்கள் சில கேள்விகளை எழுப்பியுள்ளனர். கூட்டத்தில் கலந்துகொண்டவர்கள் என்ற அடிப்படையில் அவர்களுக்கான விளக்கம் :-

ஒவ்வோர் ஆண்டும் இரு தரப்பினரையும் வைத்துதான் சமாதானக் கூட்டங்கள் நடத்தப்பட்டு வருகிறது. ஆனால், நடப்பாண்டில் கடந்த 23/08/2014 சனிக்கிழமை அன்று நமதூர் கே.எம்.டி. அருகில் நடைபெற்ற கோயில் தீ எரிப்பு & திடீர் கட்டிடம் அதனால் ஏற்பட்ட பிரச்சனைகளைக் கருத்தில் கொண்டு இரு தரப்பினரையும் ஒன்றாக கூட்டினால் ஏதாவது விரும்பத் தகாத வார்த்தைகள் வந்து அதனால் சமாதானக் கூட்டம் பாதித்து விடக் கூடாது என்கிற அடிப்படையில் காவல் துறையினர் தனித்தனியாக கூட்டங்களை நடத்தி, நம் தொடர்பாக வழமையாக போடக்கூடிய தீர்மானங்களை நிறைவேற்றினார்கள்.

அதுபோன்று அவர்களையும் அழைத்து கூட்டம் நடத்தி அவர்களுக்கும் வழமையாக போடக்கூடிய தீர்மானங்களை நிறைவேற்றுவார்கள். அத்தீர்மானங்களில் ஊர்வலம் மாலை 04:30 மணியிலிருந்து 06:00 மணிக்குள்ளாக நமதூர் மாகாத்மா காந்தி வளைவைக் கடக்கவேண்டும். ஊர்வலத்தில் வருபவர்கள் யாரையும் கண்டித்து கோஷம் போடவோ, சைகை காட்டவோ கூடாது என்கிற தீர்மானம் கண்டிப்பாக இருக்கும்.

இதை ஏன் இங்கு குறிப்பிடுகிறேன் என்றால் காவல்துறை நிறைவேற்றுகிற தீர்மானங்கள் இரு தரப்பினருக்கும் அறிவுரை அளிக்கும் விதத்தில்தான் அமையும். எனவே நமக்கு மட்டுமான தீர்மானமாக நீங்கள் கருத வேண்டியதில்லை.

கூட்டத்தில் நமதூர் காயிதே மில்லத் நகர் பகுதியில் சென்ற ஆண்டு ஊர்வலத்தில் வந்தவர்கள் சில விரும்பத்தாக செயல்களில் ஈடுப்பட்டதை சுட்டிக்காட்டினோம். இவ்வாண்டு அந்த இடங்களில் காவல்துறை உரிய பாதுகாப்பு வழங்க நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர்.

எஸ்.ஏ.இப்ராஹிம் மக்கி,
மாநில துணைச்செயலாளர்,
இந்திய யூனியன் முஸ்லிம் லீக் - தமிழ்நாடு


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
7. Re:...
posted by P.S. ABDUL KADER (KAYALPATNAM) [28 August 2014]
IP: 180.*.*.* India | Comment Reference Number: 36814

இந்த ஆண்டு நடக்கஇருக்கும் விநாயக சதூர்த்தி ஊர்வலத்திற்கு, நம்மவர்கள், ஊர் முக்கிய பிரமுகர்கள் முந்தைய ஆண்டை போல வரவேற்ப்பு சால்வை போடுவார்களா? ஊர்வல வேடிக்கை பார்ப்பார்களா?


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>

முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்

பிற செய்திகள்

காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
FaamsCathedral Road LKS Gold Paradise
Fathima JewellersAKM Jewellers

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved