Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
1:03:49 AM
சனி | 27 ஏப்ரல் 2024 | துல்ஹஜ் 1731, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
04:5012:2115:3118:3219:44
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:03Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்21:28
மறைவு18:27மறைவு08:22
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
04:5105:1605:41
உச்சி
12:15
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:4919:1419:39
Go to Homepage
செய்திகள்
Previous News ItemNext News Item
செய்தி எண் (ID #) 14974
#KOTW14974
Increase Font Size Decrease Font Size
வியாழன், டிசம்பர் 4, 2014
வழக்குச் சிக்கல்களிலிருந்து ஜெயலலிதா விடுபடுவதற்காக காயல்பட்டினம் உள்ளிட்ட இந்திய தர்காக்களில் வக்ஃப் வாரியத் தலைவர் தமிழ்மகன் உசேன் பிரார்த்தனை!
செய்திஎஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்)
இந்த பக்கம் 7641 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (5) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 8)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}

சொத்துக் குவிப்பு வழக்கில், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக பொதுச் செயலாளர் ஜெ.ஜெயலலிதாவுக்கு 4 ஆண்டு சிறைத் தண்டனையும், அபராதமும் விதித்து, பெங்களூரு சிறப்பு நீதிமன்றத்தால் தீர்ப்பளிக்கப்பட்டது. அதன் தொடர்ச்சியாக சில நாட்கள் பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையிலிருந்த அவர், தற்போது பிணையில் உள்ளார்.

ஜெயலலிதா சிறையிலிருந்தபோது விடுதலைக்காகவும், பிணையில் வெளிவந்த பிறகு வழக்குச் சிக்கல்களிலிருந்து அவர் முழுமையாக விடுபடுவதற்காகவும், அக்கட்சியைச் சார்ந்தவர்களால் உண்ணாவிரதங்கள், பல்சமயப் பிரார்த்தனைகள் நடத்தப்பட்டு வருகிறது.

அந்த வரிசையில், தமிழ்நாடு வக்ஃப் வாரிய தலைவரும், அனைத்துலக எம்.ஜி.ஆர். மன்றச் செயலாளருமான தமிழ்மகன் உசேன், அஜ்மீரில் துவங்கி, இந்தியாவின் 100 தர்காக்களில் ஜியாரத் செய்து, சிறப்புப் பிரார்த்தனை செய்து வருகிறார்.

30.11.2014 ஞாயிற்றுக்கிழமையன்று 16.00 மணியளவில் காயல்பட்டினத்திற்கு தமிழ்மகன் உசேன் வருகை தந்தார்.



ஸாஹிப் அப்பா தர்ஹா, லெப்பப்பா தர்ஹா, பெரிய முத்துவாப்பா தர்ஹா, காட்டு மகுதூம் பள்ளி ஷஹீத் முத்து மகுதூம் வலிய்யுல்லாஹ் தர்ஹா ஆகிய தர்ஹாக்களில் ஜியாரத் செய்தார். அவ்விடங்களிலுள்ள மஹான்களின் மண்ணறை மீது போர்வை போர்த்தி, மலர் தூவி மரியாதை செலுத்திய தமிழ்மகன் உசேன், தமிழக முன்னாள் முதல்வரும், அதிமுக பொதுச் செயலாளருமான ஜெயலலிதா - சொத்துக் குவிப்பு வழக்குச் சிக்கல்களிலிருந்து முழுமையாக விடுபடுவதற்காக நடத்தப்பட்ட சிறப்புப் பிரார்த்தனைகளில் பங்கேற்றார்.















காயல்பட்டினத்தில் தர்ஹாக்களுக்கு அவர் சென்றபோது, அந்தந்த தர்ஹா நிர்வாகிகளால் வரவேற்பளிக்கப்பட்டது.





அனைத்து நிகழ்ச்சிகளிலும், காயல்பட்டினம் நகர்மன்றத் தலைவர் ஐ.ஆபிதா ஷேக், நகர்மன்ற உறுப்பினர் எம்.எஸ்.எம்.ஷம்சுத்தீன், அதிமுக நகர துணைச் செயலாளர் கே.ஏ.ஷேக் அப்துல் காதிர், ஜெயலலிதா பேரவை நகர செயலாளர் எல்.எஸ்.அன்வர், சிறுபான்மைப் பிரிவு மாவட்ட செயலாளர் எம்.ஜெ.செய்யித் இப்றாஹீம், கட்சியின் நிர்வாகிகளான ராமச்சந்திரன், எஸ்.ஏ.முகைதீன், என்.எம்.அஹ்மத், சின்னத்தம்பி உள்ளிட்ட - காயல்பட்டினம் மற்றும் சுற்றுவட்டார அதிமுக நிர்வாகிகள், காயல்பட்டினம் சுற்றுவட்டார ஊர்களின் உள்ளாட்சித் தலைவர்கள், நகர பொதுமக்கள் திரளாகக் கலந்துகொண்டனர்.

அதிமுக குறித்த முந்தைய செய்தியைக் காண இங்கே சொடுக்குக!


Previous News ItemNext News Item
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. Re:...
posted by அப்துல் லத்தீஃப் (DUBAI) [04 December 2014]
IP: 2.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 38342

NO COMMENTS .......... இதை தவிர என்ன சொல்வது என்று தெரியவில்லை.......


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
2. Re:...இறைவனிடம் கை ஏந்துங்கள் அவன் இல்லை என்று சொல்லுவதில்லை...
posted by mackie noohuthmbi (kayalpatnam) [05 December 2014]
IP: 180.*.*.* India | Comment Reference Number: 38356

வக்ப் வாரிய தலைவராக தமிழகத்தின் இஸ்லாமிய தலை நகருக்கு வருகை தந்துள்ள தமிழ் மகன் ஹுசைன் அவர்களுக்கு வாழ்த்துக்கள்.

வக்ப் வாரியத்துக்கு உள்பட்ட பள்ளிவாசல்களின் வருமானங்கள் செலவினங்கள் பற்றி ஆய்வு செய்து ஆவன செய்ய வந்துள்ள உங்களை வருக வருக என்று வரவேற்கிறோம்.

வக்ப் போர்டு தலைவராக நாகூர் ஹனீபா, கவிக்கோ அப்துர் ரஹ்மான் ஹைதர் அலி போன்றவர்கள் பதவி வகித்த காலங்கள் நினைவுக்கு வருகிறது.

இன்னிசை விருந்தளிப்பவர்களும் அரசியல் தலைவர்களும் இந்த பொறுப்புக்கு நியமிக்க படுகிறார்களே தவிர ஒரு மௌலவி ஆலிம் மார்க்க மேதை யாரும் இதுவரை அந்த பொறுப்பில் அமர்த்தப்பட்டதாக தெரியவில்லை.

வக்ப் விஷயங்களில் திருமறையும் நபிகளாரின் வழிமுறையும் என்ன சொல்கின்றது ஷரீஅத் சட்டங்கள் என்ன என்று தெளிவாக சொல்லக் கூடியவர்கள் அவர்கள்.

அவர்களை புறந்தள்ளி விட்டு ஆட்சியில் யார் இருக்கிறார்களோ அவர்களில் ஒருவருக்கு இந்த பாரிய பொறுப்பு கொடுக்கப்பட்டால் அவரவர்கள் கட்சியின் தலைவரின் ஆணைப் படி அவர்கள் நடக்க வேண்டிய கட்டாயத்தில் இருப்பார்கள். இதற்கு தாங்களும் விதி விலக்கல்ல.

இன்னும் ஒருபடி மேலே சென்று மக்களின் தலைவர் என்று இப்போது அழைக்கப் படும் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்கள் மீண்டும் முதல்வராக வேண்டும் என்று நீங்கள் சென்ற தர்காக்கள் தோறும் வேண்டுதல் வைத்ததாக தெரிகிறது.

“தமிழகத்து தர்காக்களை பார்த்து வருவோம் தூய வழி காட்ட சொல்லி கேட்டு வருவோம்” என்று காயல் கவிஞர் ஷேய்க் முஹம்மது அவர்கள் பாடினார்கள்.

இறை நேச செல்வர்களுக்காக து ஆ கேட்பது என்ற நிலை மாறி இறை நேச செல்வர்களிடமே தங்கள் தேவைகளை நிறைவேற்றக் கோரும் பழக்கம் நம்மிடம் இருக்கிறது.

வீட்டிலே உப்பு இல்லை என்று ஒரு நபி தோழர் பள்ளிவாசலுக்கு வந்து இரண்டு ரக அத் தொழுது அதை அல்லாஹ்விடம் வேண்டினார்கள். வீட்டில் சாப்பிடுவதற்கு உணவு இல்லை என்று இன்னொரு நபி தோழர் மஸ்ஜிதுன் நபவிக்கு வந்து அல்லாஹ்விடம் கோரிக்கை வைத்து அதைப் பெற்றுக் கொண்டார்கள் என்று நபிகள் நாயகம் சொல்லிக் காட்டியதை புகாரி ஷரீப் போன்ற நூல்களில் காண்கிறோம்.

இதை எல்லாம் தாண்டி ஒரு குற்றவாளி என்று தீர்ப்பளிக்கப் பட்டு முதல்வர் பதவியையும் சட்டமன்ற உறுப்பினர் பதவியையும் இழந்து நிற்கும் ஒரு சாதாரண பெண்மணிக்காக இந்த இறை நேச செல்வர் களிடம் நீங்கள் வேண்டிக் கொண்டது மனதை நெருட செய்கிறது.

முன்னாள் முதல்வர் அவர்கள் 10 ஆண்டுகள் தேர்தலிலே நிற்க முடியாது என்று அரசிதழில் வெளியிட்ட அரசும் இதே அரசுதான். அப்படி இருக்க உங்கள் கோரிக்கை எப்படி நிறைவேறும்.

குற்றப் பின்னணி உள்ளவர்களுக்கெல்லாம் இறை நேச செல்வர்கள் பரிந்துரை செய்வது என்று வந்தால்நாளை கலைஞர் மகள் கனி மொழிக் கும் ராஜாவுக்கும் – ஏன் பாபர் மசூதியை இடித்து நமது இதயங் களை சுக்கு நூறாக்கி விட்ட அத்வானி போன்றவர்களும் அந்த கட்சியை சார்ந்தவர்களும் நாகூர் முதல் அஜ்மீர் வரை – காவேரிப் பட்டினம் முதல் காயல்பட்டினம் வரை வந்து தர்காக்களில் து ஆ கேட்க முயற்சிப் பார்கள்.

அவர்களை தடுக்க முடியாமல் போய்விடும். கேட்டால் இது ஜனநாயக நாடு. ஆளுக்கொரு சட்டமா என்று ஆர்ப்பாட்டம் செய்வார்கள்.

புரிந்து கொண்ட நல் புத்திசாலிகள் புண்ணியம் சுமந்து கொண்டார்கள்.

தயவு செய்து வக்ப் வாரியம் பள்ளி வாசல்களின் நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்றி தர ஆவன செய்யுங்கள். கோடிக் கணக்கான வக்ப் சொத்துக்கள் முஸ்லிம்களாலேயே சூறையாடப் பட்டுக் கொண்டிருக்கிறதே, அதற்கு ஒரு முடிவுகட்ட உங்கள் பதவிக் காலத்தை பயன்படுத்திக் கொள்ளுங்கள்.

இஸ்லாமிய சமுதாயம் உங்களை நன்றியுடன் பார்க்கும். இல்லா விட்டால் பத்தோடு பதினொன்று அத்தோடு இது ஒன்று என்று மக்கள் நினைத்து உங்களை புறம் தள்ளி விடுவார்கள்.

2016 ஆம் ஆண்டு அல்லாஹ் யார் கையில் ஆட்சியை கொடுப்பானோ யார் அறிவார். அந்த அல்லாஹ்வே அறிவான். எனவே உங்கள் பதவி காலத்தை இந்த சமுதாய மேன்மைக்காக பயன்படுத்திக் கொள்ளுங்கள்.

கட்சி – ஆட்சி – எல்லாம் கானல் நீர். கலையும் கனவுகள்.

எத்தனை காலம் மனிதன் வாழ்ந்தான் என்பது கேள்வி இல்லை அவன் எப்படி வாழ்ந்தான் என்பதை நினைத்தால் வாழ்க்கையில் தோல்வி இல்லை.

இருந்தாலும் மறைந்தாலும் பேர் சொல்ல வேண்டும் இவர் போல் யார் என்று ஊர் சொல்லவேண்டும்.

இவை புரட்சி தலைவர் நமக்கு சொல்லி சென்ற வைர வரிகள்.

“அழகிய தமிழ் மகன்” அவர்கள் சிந்தனைக்கு இதனை சம்பர்ப்பிக்கிறேன்..


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
3. Re:...
posted by Abulkasim (SG) [05 December 2014]
IP: 220.*.*.* Singapore | Comment Reference Number: 38357

அல்லாஹ் கூறுகின்றான் அவர்களால் உங்களுக்கு எந்த உதவியும் செய்ய முடியாது. மஸ்ஜிதில் சென்று இரண்டு ரக்கத் தொழுதுவிட்டு அல்லாஹ்விடம் பிராத்தியுங்கள். அது யாருக்காக இருந்தாலும் எதற்க்காக இருந்தாலும் அல்லாஹ் நாடினால் நடக்கும்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
4. அல்லாஹ் அனைத்தும் அறிந்தவன்!
posted by முஹம்மது ஆதம் சுல்தான்! (yanbu) [05 December 2014]
IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 38358

சகோதரர் மக்கி நூஹுத்தம்பி காக்கா அவர்கள் அறிவது, தங்களின் கருத்து பதிவின்படி"கலைஞர் மகள் கனிமொழி,ராஜா ஆகியோர் குற்றபின்னணியில் இருக்கும் குற்றவாளிகள் ஆகவே கனிமொழிக்கும், ராஜாவுக்கும் தண்டனை கிடைக்கும் அவர்களுக்காகவும் நாளைக்கு தர்ஹாகளுக்கு பிரார்த்தனைக்காக வருவார்கள் என்ற தோரணையில் எழுதிஇருக்கிறீர்கள்!

கனிமொழிக்கும்,ராஜாவுக்கும் எந்த கோர்ட்டில் எத்தனை வருடம் எந்த நீதிபதி தண்டனை தீர்ப்பை வழங்கி இருக்கிறார்.ஏன் இந்த இதயங்கனிந்த ஏக்கமுடைய எதிர்பார்ப்பு.ஒருவர் குற்றவாளி என்ற தீர்ப்பைபெற்றால் அவரோடுமட்டும் உங்கள் கருத்துபதிவு நிற்க ஏன்மனம்வருவதில்லை இன்றைக்கு இவர்,நாளைக்கு அவருக்கு கிடைக்கப்போகின்ற இதைவிட பெரிய பரிசை பரவசமுடனும்,மகிழ்வுடனும் எதிநோக்கி இருக்கும் உங்களின் உள்ளத்தை நினைத்தால் உண்மையிலேயே மெய்சிலிர்க்கிறது.

குறைவான விலை மின்சாரத்தை நிறைய விலை கொடுத்து வாங்கி தன் வசதியை சேர்க்கின்றவருக்கும், மூன்று ரூபாய்க்கு மேல் விறககூடிய தொலைபேசி கட்டணத்தை ஒருரூபைக்கு விற்று மக்களுக்கு லாபத்தையும் அரசுக்கு நஷ்டதையும் எற்படுதியவர்களுக்குள்ள வித்தியாசத்தை உணர்வீர்கள் என்று நம்புகிறேன்!

ஒருவேளை நீங்கள் ஆவலுடன் எதிர்பார்த்து அது ஏமாற்றமாக மாறி கனிமொழி, ராஜாவின் குற்றங்கள் சரியாக நிரூபிக்கப்படவில்லை என்று தீர்ப்புவந்தால்,ஐயோ வடைபோச்சே என்று அதிர்ச்சியில்அப்படியே அல்லாடி விடுவீர்கள் போலிருக்கிறதே.எவ்வளவு அக்கறை அவர்களுக்கு விலங்கிட்டு பார்க்கும் மகிழ்வில்.பலகீன இதயமுடயவராக நீங்கள் இருந்தால் இன்னும் பக்குவமாக பார்த்து இருந்து கொள்ளுங்கள் ஆண்டவன் காப்பாற்றுவானாக!

வக்பு வாரிய தலைவரின் வழிபாட்டுச்செயலானது அவருடைய சொந்த விருப்பமானது,அவரது நம்பிக்கையின் அடிப்படையில் அமைந்திருக்கிறது. அதில் தலையிட நமக்கு உரிமை இல்லை.வக்பு வாரிய செயல்பாட்டில் ஏதும் குற்றம் குறை இருந்தால் சுட்டிக்காட்டலாமே தவிர,அவரின் இறை நம்பிக்கையையோ ,இறைநேசர்களின் நம்பிக்கையையோ நாம் விமர்சிப்பது சரியல்ல,அவரின் இறை வழிபாட்டு நம்பிக்கையையும், எண்ணத்தையும் நம்மீது அவர் திணிக்காதவரை!

அவரின்நடவடிக்கையை வீரமுடன்விமர்சிக்க முன்வருவீர்களேயானால், அவருக்கு பின்னால் பல்லாயிரக்கணக்கானோர் வரிசையுடன் நிற்கிறார்களே அவர்களை உங்களால் திருத்தமுடியுமா? நம்மை சாடாதவரையில் நம் வழியில் நாம் செல்வதுதான் சாலச்சிறந்தது! .

ஆகவே எது நீதியுடைய நடவடிக்கையோ அதை நேர்மையுடன் ஏற்றுக்கொள்வதை விட்டுவிட்டு, எதிர்வீட்டுக்காரன் எப்போது கம்பி எண்ணுவான் என்று ஏக்கத்துடன் எதிர்பார்க்கும் இறுகிய இதயத்திற்கு சொந்தக்காரர்கள் பட்டியலில் உங்கள் பெயரையும் பதிவு செய்ய முயலாதீர்கள் அல்லாஹ் அனைத்தும் அறிந்தவன்!

அன்புடன்,
முஹம்மது ஆதம் சுல்தான்!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
5. சொல்வதற்கு ஒன்றும் இல்லை
posted by Muhammadh Abubacker (Muscat) [07 December 2014]
IP: 188.*.*.* Oman | Comment Reference Number: 38373

அவர் ஊர் ஊராக போய் பிராத்திப்பது சரியா தவறா என்பது பற்றி எல்லாம் இங்கு ஒன்றும் சொல்வதற்கில்லை. விமர்சனம் என்கிற பேரில் எதை எதையோ எழுதுவது நாகரீகம் அல்ல. www.kayalpatnam.com என்பது பொது இணையதளமா(?) என்கிற ஐயப்பாடு என்னைபோன்ற பலருக்கு இருக்கிறது.

தர்காக்களுக்கு சென்று பிராத்தனை செய்வது அவரவர் விருப்பம். ஏதோ தனக்குத்தான் எல்லாம் தெரியும் என்கின்ற பெயரில் அரை பக்க செய்திக்கு முழுபக்க விமர்சனம் எழுதுவது சிலருக்கு வாடிக்கையாகி விட்டது.

தான் ஏதோ எல்லாம் அறிந்த மார்க்க அறிஞர் போல மார்க்க தீர்ப்பு சொல்வது வேடிக்கையாக உள்ளது. இங்கு பக்கம் பக்கமாக எழுதிவிட்டு நேரடியாக வந்து கேட்டால் அதுவெல்லாம் முடிவுக்கு வராத விஷயம் என்று சொல்வது வழக்கமாகிவிட்டது.

99% அரசியல்வாதிகள் ஊழல் பேர்வழிகள். அவர்களுக்கு பரிந்து பேசி நமக்குள் அடித்துக்கொள்வது அவ்வளவு சுகாதாரமான போக்கு அல்ல.

சிலருக்கு தர்காகளுக்கு மக்கள் செல்வது கூடாது என்று அவர்களின் புரட்சி தலைவர்களின் வயிர வரிகளில் சொல்லி இருக்கின்றதோ என்னவோ.

வக்பு வாரிய தலைவர் அவர்கள் வக்பு வாரிய சொத்துக்களை பாதுகாப்பதற்கு உரிய நடவடிக்கை எடுப்பதை மக்கள் விரும்புகிறார்கள். எல்லாரும் பொருப்புதாரிகள்.

என்னுடைய விமர்சனத்தை முழுமையாக வெளியிடுவதென்றால் வெளியுடுங்கள். இல்லை என்றால் தேவையில்லை.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>

முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்

பிற செய்திகள்

காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
Cathedral Road LKS Gold ParadiseFathima Jewellers
AKM JewellersFaams

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved