Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
5:42:06 PM
வெள்ளி | 26 ஏப்ரல் 2024 | துல்ஹஜ் 1730, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
04:5012:2115:3118:3219:44
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:03Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்20:32
மறைவு18:27மறைவு07:32
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
04:5105:1605:42
உச்சி
12:15
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:4919:1419:39
Go to Homepage
செய்திகள்
Previous News ItemNext News Item
செய்தி எண் (ID #) 15218
#KOTW15218
Increase Font Size Decrease Font Size
ஞாயிறு, ஐனவரி 18, 2015
முன்னாள் நகர்மன்றத் தலைவரால் நகராட்சிக்கு வழங்கப்பட்டுள்ள சர்வே எண் 278 இடம்: ஒரு களப் பார்வை!
செய்திகாயல்பட்டணம்.காம்
இந்த பக்கம் 3944 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (7) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 0)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}

கொம்புத்துறையில் (கடையக்குடி) இருந்து சில கிலோமீட்டர் தூரத்தில் - DCW தொழிற்சாலை கழிவுகள் சேரும் ஓடைக்கு தெற்கிலும், வங்காள விரிகுடா கடலுக்கு மேற்கிலும் அமைந்துள்ளது - காயல்பட்டினம் நகராட்சிக்கு முன்னாள் நகர்மன்றத் தலைவர் ஹாஜி வாவு செய்யத் அப்துர் ரஹ்மான் மூலம் தரப்பட்டுள்ள, சர்வே எண் 278 இடம்.





இந்த இடத்தை நோக்கி - கோமான் தெருக்கள், அருணாச்சலபுரம் வழியாக பயணம் செய்யும் போது, கொம்புத்துறை பகுதியை அடைந்தவுடன் - முதலில் தென்படும் பிரதான கட்டிடம், தூய ஸ்தீஃபன் தேவாலையம் ஆகும். இதன் அருகில் தான் - இப்பகுதியின் இறுதி மின்மாற்றி (TRANSFORMER) அமைந்துள்ளது. மின்வாரியத்தின் High Tension (HT) LINE (உயர் அழுத்த இணைப்பு) இந்த மின்மாற்றியுடன் நிறைவாகிறது.



அந்த மின்மாற்றியில் இருந்து, கிழக்கு நோக்கி, சுமார் 300 மீட்டர் தூரத்திற்கு தார் சாலை உள்ளது. மேலும் அந்த சாலையில் உள்ள மின் கம்பங்களில் 5 கம்பிகள் கொண்ட, குறைந்த அழுத்த (Low Tension [LT] Line) இணைப்பு உள்ளது.

அதன் பிறகு - வடக்கு நோக்கி சாலை திரும்பி, சுமார் 400 மீட்டருக்கு தார் சாலை அமைந்துள்ளது. இந்த பாதையில் உள்ள மின் கம்பங்களில் கொஞ்ச தூரம், 3 கம்பிகள் கொண்ட, குறைந்த அழுத்த (Low Tension [LT] Line) இணைப்புகளும், அதன் பிறகு 2 கம்பிகள் கொண்ட, குறைந்த அழுத்த (Low Tension [LT] Line) இணைப்புகளும் உள்ளன.

வடக்கு நோக்கிய இந்த தார் சாலை முடிவுற்றவுடன், மின் கம்பங்களும், வீடுகளும் இல்லாத காட்டு பகுதி துவங்குகிறது.







தொடரும் சுமார் 100 மீட்டர் தூரம் மிகவும் பழுதடைந்த சாலையாகவும், அதன் பிறகு 100 மீட்டர் தூரம் சரல் சாலையாகவும் உள்ளது.







சரல் சாலை முடிவுற்றவுடன், தொடர்வது மண் சாலையாகும். இது 400 மீட்டருக்கும் மேலான தூரமாகும். இங்கிருந்த மேற்கு நோக்கி, சாலை அமைக்கப்பட்டு, நகராட்சிக்கு வழங்கப்பட்ட இடத்தினை அடைய வேண்டி இருக்கும்.







கடலுக்கும், நீரோடைக்கும் அருகில் உள்ள இந்த பகுதியில் தற்போது நீர் தேங்கி காணப்படுகிறது.







தெருவிளக்குகள் முற்றிலும் இல்லாத இக்காட்டு பகுதியில், பயோ காஸ் மையம் தனித்து இயங்குவதில் உள்ள பாதுகாப்பு பிரச்சனைகள் தனியானவை. கடலுக்கு மிக அருகாமையில் உள்ளதால் - இயற்கை சீற்றங்கள் மூலம் உள்ள பிரச்சனைகளும் தனியானவை.

அவைகள் தவிர - பிற அடிப்படையான பிரச்சனைகளும் இவ்விடம் குறித்து உள்ளன.

தற்போது இப்பகுதியில் மின் இணைப்பு கிடையாது. இங்கு பயோ காஸ் மையம் அமைத்திட மின் இணைப்பு புதிதாக கொண்டு வரவேண்டும்.

இங்கிருந்து உருவாகும் மின்சாரத்தினை எவ்வாறு அருகில் உள்ள தெரு விளக்குகளுக்கு கொண்டு செல்வது என்பது அடுத்த முக்கிய பிரச்சனையாகும்.

ஆற்காடு நகராட்சியில் அமைந்துள்ள பயோ காஸ் மையம் இடத்திற்கு எதிரிலேயே மின்மாற்றி உள்ளது. எனவே - அங்கு எளிதாக, பயோ காஸ் மையத்தில் இருந்து மின்மாற்றி வரை, தரை வழியாக, மின் கம்பிகள் புதைக்கப்பட்டு, மின்சாரம் கொண்டு செல்லப்படுகிறது. ஆனால் - சர்வே எண் 278இல் பயோ காஸ் திட்டம் அமைந்தால், அருகில் உள்ள மின்மாற்றி தூரம் சுமார் 2 கிலோ மீட்டர் ஆகும்.

அதுமட்டும் அல்ல, மின் கம்பிகள் புதைக்கப்பட்டு தரை வழியாக கொண்டு செல்லவேண்டிய பாதையும், சாலையும் எந்தெந்த தனியார் நிலங்களில் எல்லாம் அமையும் என்பதும், உரிமையாளர்களின் அனுமதியும் ஊர்ஜிதம் இல்லை.

புதிய சாலைகள் உட்பட தொடர்பான பணிகளுக்கு, நகராட்சி பொது நிதியில் இருந்து பல லட்சங்கள் செலவு செய்ய வேண்டி இருக்கும்.

வழங்கப்பட்டுள்ள நிலத்தை சுற்றி BUFFER ZONE அமைப்பது நகர்மன்றத்தால் நிராகரிக்கப்பட்டுள்ள நிலையில், வழங்கப்பட்டுள்ள அணுகு சாலைக்கான நிலம் CRZ-1 பகுதிக்குள் அமைந்துள்ள நிலையில் - இவ்விடத்தில் கம்போஸ்ட் யார்டு அமைவதன் சாத்தியக்கூறுகள் மிகவும் குறைவு.

இச்சூழலில் - நகரில் பயோ காஸ் திட்டம் அமைந்திட பல அரசு இடங்கள் இருக்க, அவற்றில் ஏதாவது ஒரு நிலத்தில் பயோ காஸ் திட்டத்தினை கொண்டு வராமல், (சாலை CRZ பிரச்சனை சரி காணப்பட்டு, BUFFER ZONE பிரச்சனை சரி காணப்படாமல்) இவ்விடத்தில் பயோ காஸ் திட்டம் கொண்டு வர, இவ்விடத்தினை சுற்றி, சாலைகளுக்கும், பிற பணிகளுக்கும் - நகராட்சி பணம் செலவு செய்யப்படுவது கேள்விக்குரியதாகும்.

புகைப்படங்கள், வரைப்படம் மற்றும் தகவல்:
சாளை பஷீர்


Previous News ItemNext News Item
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. மக்கள் வரிப்பணம் மக்களுக்கே பயன்பெற வேண்டும் / தனியார்களுக்கு அல்ல...!
posted by தமிழன் முத்து இஸ்மாயில் (காயல்பட்டினம்.) [19 January 2015]
IP: 163.*.*.* Japan | Comment Reference Number: 38974

நகரின் முக்கிய பெருந்தகை பொதுநல சேவகர் மர்ஹும் ஹாஜி எம்.கே.டி. அப்பா என பாசத்தோடு நாம் மற்றும் நகரின் அணைத்து சமூக மக்கள் அனைவராலும் அழைக்கப்பட்டு வரும் எம்.கே.டி. அபூபக்கர் அவர்கள் தலைமையிலான அப்போதைய பஞ்சாயத்து குப்பை கொட்ட தீர்மானம் நிறைவேற்றிய சர்வே எண் 392 / 5 - நிலம் ஏன் புறக்களிக்கப்பட்டு வருகிறது...? அதற்க்கான காரணங்கள் தான் என்ன...? தற்போது நன்கொடையாக பெறப்பட்ட நிலமான சர்வே எண் 278 க்கு மட்டும் முக்கியத்துவம் அளிக்கப்படுவத்தின் நோக்கம் தான் என்ன..? இதில் ஏதோ மர்மமாகவே உள்ளது..

நகர்மக்கள் நலன் கருதி தொலைநோக்கு பார்வையுடன் சுயநலன் கருதாது நல்ல எண்ணத்துடன் 1958 இல் தீர்மானம் நிறைவேற்றிய பெருந்தகை மறைந்து 56 ஆண்டுகளாக அந்த தீர்மானம் முழுமையாக நிறைவேற்றப்படாமலேயே உள்ளது.

56 ஆண்டுகளுக்கு முன்பு குப்பைக்கொட்டவே ஒதுக்கிய சர்வே எண் 392 / 5 பெருந்தைகையின் தீர்மானம் நிறைவேற உறுப்பினர்கள் நல்ல எண்ணத்துடன் ஒரு மனதாக ஒத்துழைக்க வேண்டும் - மறைந்தும் இன்று நம் மனதில் வாழும் அந்த பெருந்தகைக்கு நாம் செய்யும் கடமையும் ஆகும்..

மக்கள் வரிப்பணம் மக்களுக்கே பயன்பெற வேண்டும் / தனியார்களுக்கு அல்ல...!

மக்கள் வரி பணம் சர்வே எண் 278 இல் சாலைகள் அமைக்கவும் / சுற்று சுவர் எழுப்பவும் அதனால் அப்பகுதியின் நில ஜவான்களின் நிலங்கள் பல லட்சம் ரூபாய் மதிப்பு ஏற வைத்து நில ஜவான்கள் ஆதாயம் அடையவும் நகர் மக்கள் வரி பணம் பல லட்சம் பலி கிடா ஆக வேண்டாம்..


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
2. மின்னல் வேக கடமையுணர்ச்சி!
posted by Hameed Rifai (Jeddah (ksa)) [19 January 2015]
IP: 37.*.*.* | Comment Reference Number: 38976

ஆக... முன்னாள் நகர்மன்றத் தலைவரே தனது நிலத்தைக் கொடுப்பதற்கும் முன்பாகவே நமது உறுப்பினர்கள் அந்த இடத்தில்தான் தீட்டம் வர வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றியிருப்பதை அறியும்போது என் உடம்பெல்லாம் புல்லரிக்கிறது.

அவர்கள்தான் இப்படி என்றால், நமது ஆணையரோ ஒரு படி மேலே போய், குப்பை கொட்டுவதை பிறகு பார்த்துக்கொள்ளலாம்; பயோமெத்தனேஷன் திட்டத்தை முதலில் கொண்டு வருவோம் என இந்த ஊர் நலனில் எவ்வளவு அக்கறை(???)யுடன் பேசியிருக்கிறார்!!!

ஹூம்... எல்லாம் நம் தலைவிதி! நம் நகராட்சியிலிருந்து ஒரு வீட்டு ப்ளான் அப்ரூவல் எடுப்பதற்குள் கிழவி குமரியாகிவிடும் காலத்தில், இப்படி மின்னல் வேகத்தில் செயல்படும் இவர்களைப் பாராட்ட (???) என்னிடம் வார்த்தைகளே இல்லை!

எனக்கு இன்னும் விடை கிடைக்காத கேள்விகள் என்னவென்றால்....

(1) நமது கண்ணியத்திற்குரிய முன்னோர்கள் நம் ஊர் நலன் கருதி, அப்போதைய ஊராட்சிக்குச் சொந்தமான நிலத்தில் குப்பை கொட்ட தீர்மானம் தீட்டி ஒதுக்கியிருந்த நிலத்தை இன்றளவும் பரிசீலிக்காமலே இருந்தது ஏன்?

(2) அந்த இடத்தில் இன்று பயோகேஸ் திட்டத்தை மட்டுமாவது கொண்டு வந்தால், அப்பகுதியில் ஏற்கனவே இருக்கும் பல்சமய மக்கள் அடங்கிய குடியிருப்புகளுக்கு இரவெல்லாம் வெளிச்சம் கிடைக்குமே...? அதை விட்டுவிட்டு, இன்றைய சூழலில் யாருக்கும் தேவையில்லாத சர்வே எண் 278இல்தான் பயோ கேஸ் திட்டமும் வர வேண்டும் என்று கருதுவதற்கு நியாயமான காரணங்கள் ஏதும் உண்டா? இதை உறுப்பினர்களை நோக்கியும், அதிகாரிகளை நோக்கியும், சர்வே எண் 278இல்தான் பயோகேஸ் வர வேண்டும் என்ற தொணியில் கருத்து எழுதிய என் அன்புச் சகோதரர்களை நோக்கியும் கேள்வியாக முன்வைக்கிறேன். தாங்கள் அளிக்கும் பொருள் பொதிந்த விளக்கத்தை திறந்த மனதுடன் ஏற்றுக்கொள்ள தயாராகவே உள்ளேன்.

(3) முன்னாள் நகர்மன்றத் தலைவர் அவர்கள் (ஆவணப் படி) குப்பை கொட்டுவதற்குத்தான் சர்வே எண் 278 நிலத்தைத் தந்துள்ளார்கள். அதை நடைமுறைப்படுத்துவதே தற்போது சட்டச்சிக்கலாக இருக்கும்போது, அவர்களே எதிர்பார்க்காத பயோகேஸ் திட்டத்தையும் அங்குதான் கொண்டு வருவோம் என துடியாய்த் துடிக்கும் உறுப்பினர்களே.... தங்கள் ஆர்வத்திற்கு நியாயமான காரணம் ஏதும் உள்ளதா, கூறுங்களேன்...

இவ்வளவு விபரங்களும் முன்னாள் நகர்மன்றத் தலைவர் அவர்களின் கவனத்திற்குச் சென்றுதான் இருக்கும். பொறுத்திருந்து பார்ப்போம்..........

நான் ஒரு விஷயத்தைத் தெளிவுபடுத்திக் கொள்கிறேன்...

யாரையும் புண்படுத்தவோ, விமர்சிக்கவோ அல்லது மறு சாராரைத் தூக்கி வைக்கவோ இக்கருத்தை நான் பதியவில்லை. இந்த ஊரின் ஒரு குடிமகன் என்ற அடிப்படையிலும், மர்ஹூம் எம்.கே.டி. அப்பா அவர்கள் ஒதுக்கிய நிலத்தை நேரடியாகச் சென்று பார்த்தறிந்தவன் என்ற அடிப்படையிலுமே இக்கருத்தை நான் பதிவு செய்துள்ளேன்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
3. Re:...
posted by Fareed (Dubai) [19 January 2015]
IP: 2.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 38977

Assalammu Alaikkum

Reading complete articles related to bio gas land issues, we can clearly understand some issues in the land which donated by our KPM person.

Why so hurry to use this land by our municipality teams. I believe some one may benefited due to this works as per Tamilan Mr.Muthu Ismail statement. Municipality head to do clear investigation for all the merits and demerits before approve the land for use


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
4. வேதனைப்பயணம் தொடர்கிறது!.
posted by முஹம்மது ஆதம் சுதான்! (yanbu) [19 January 2015]
IP: 128.*.*.* Romania | Comment Reference Number: 38978

இங்கு என்னையா நடக்குது?.நினைக்கவே வேட்கமாகவும் வேதனையாகவும் இருக்கிறது.எவருடைய வரிப்பணமும் எப்படி பாலானாலும் பரவில்லை ,எங்களுக்கு நாங்கள் நினைத்தது நடக்கனும்.எதை இழந்தாவது, எவனைப்பிடித்தாவது எங்கள் கௌரவம் எங்கள் இலட்சியம் கோலோட்சிப்பட வேண்டும்.!..

எங்கள் எதிர் சக்திக்கு இமியளவும் இறங்கி வரமாட்டோம், அதில் எவ்வளவு நன்மைகள் இருந்தாலும் சரிதான்,நாங்கள் செல்லும் பாதையில் எவ்வளவு இடர்பாடுடைய நஷ்டமானாலும் சரிதான்.இந்த ஊர் கெட்டுப்போக பந்தயம் வைத்து விட்டோம். விளையாட விருப்பமுள்ளவர்கள் களத்தில் குதிக்கலாம் என்ற வக்கர உள்நோக்கமிகு கொவ்ரவ கோமானும்,சீமானும் பந்தயம் கட்டும்பொழுது சாமானியர்களாகிய நாம் என்னதான் செய்துவிட முடியும்.இதுபோன்ற இணையத்தளத்தில் தான் ஒப்பாரி வைக்க முடியும்.அதுதவிர்த்து ஒரு உரோமத்ததைக்கூட....??? முடியாது! அல்லாஹ் அனைத்தும் அறிந்தவன்!

வேதனையுடன்,
முஹம்மது ஆதம் சுதான்!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
5. Re:...
posted by netcom buhari (chennai) [20 January 2015]
IP: 101.*.*.* India | Comment Reference Number: 38980

மக்கள் வரிப்பணம் மக்களுக்கே பயன்பெற வேண்டும் / தனியார்களுக்கு அல்ல...!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
6. Re:...
posted by Omer Abdul Qadir (Malaysia) [20 January 2015]
IP: 182.*.*.* India | Comment Reference Number: 38981

அஸ்ஸலாமு அலைக்கும்...

சம்பந்தப்பட்ட நபர்கள் இனியாவது தவறை உணர்ந்து அதை திருத்திக்கொள்வார்களா ?அல்லது யார் எக்கேடு கெட்டால் எனக்கென்ன என்று வரட்டுப்பிடிவாதம் பிடிப்பார்களா ?

ஒன்று அவர்கள் செய்வது சரி என்றால் அதற்கான நியாயத்தை இதே இணயத்தில் வெளியிடட்டும்..அல்லது அவர்கள் வேண்டுமென்றே தவறு என்று தெரிந்தும் இவ்வாறு செய்தால்.... சகோ முஹம்மது ஆதம் சுல்தான்! சொன்னது போல் ..எங்கள் எதிர் சக்திக்கு இமியளவும் இறங்கி வரமாட்டோம், அதில் எவ்வளவு நன்மைகள் இருந்தாலும் சரிதான்,நாங்கள் செல்லும் பாதையில் எவ்வளவு இடர்பாடுடைய நஷ்டமானாலும் சரிதான். இந்த ஊர் கெட்டுப்போக பந்தயம் வைத்து விட்டோம். விளையாட விருப்பமுள்ளவர்கள் களத்தில் குதிக்கலாம் என்ற வக்கர உள்நோக்கமிகு கொவ்ரவ கோமானும்,சீமானும் பந்தயம் கட்டும்பொழுது சாமானியர்களாகிய நாம் என்னதான் செய்துவிட முடியும். இதுபோன்ற இணையத்தளத்தில் தான் ஒப்பாரி வைக்க முடியும்.அதுதவிர்த்து ஒரு உரோமத்ததைக்கூட....??? என்று நினத்து விட வேண்டாம் .. வக்கிரக்காரர்கள் ,பேராசைக்காரர்கள் , நம்ரூதுகள், பிர்அவுன்கள்,ஆது ,தமூது களின் முடிவுகளைப்பார்த்து மறு பரிசீலனை செய்வார்கள் என்று நம்புவோமாக.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
7. Re:...
posted by K.D.N.MOHAMED LEBBAI (RIYADH) [20 January 2015]
IP: 77.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 38982

அஸ்ஸலாமு அலைக்கும்

நம் அருமை சகோதரர் .சாளை.பஷீர் அவர்களின் ...வரை படமும் & தகவலும் மிகவும் தெளிவாகவே நம் கண் முன் கொண்டு வந்து விட்டார் .....இவ்வளவு மிக தெளிவாக நமக்கு தகவல் தந்த பின்பும் ஏன் மற்றவர்கள் பிடிவாதமாக இருந்து ....பொது மக்களின் வரி பணத்தை ....தேவைகற்று .. வீண் விரையை செய்கிறார்கள் அதான் இப்போதைய நிலைப்பாடு வரை .... யாவர்களுக்கும் ஒன்றுமே புரியவே மாட்டேன்கிறது ??

நம் வரி பணம் இப்படி வீணாக்குவதை கண்டிப்பாக நம் ஊர் பொது மக்கள் யாவர்களும் கொஞ்சமும் ஏற்று கொள்ளவே மாட்டார்கள் .....

நம் வரி பணம் நமக்கு நல்ல முறையில் வந்து நம் ஊர் / மக்கள் பயன் பாட்டுக்கு வந்தால் அது தான் நமக்கு மன நிம்மதி & நம் ஊர் முனேற்றத்துக்கும் வழிவகுக்கும் ( முன்னேற்றம் அடையும் ....

நம்மை சுற்றி உள்ள அனைத்து பகுதி நகராச்சி ....களைவிட நம் ஊர் நகராசியில் தான் மாஷா அல்லாஹ் நல்லதோர் வருமானம் வருகிறது ....அப்படி இருக்க நம் பணம் நம் ஊர் பொது மக்களுக்கு உபயோகம் இல்லாமல் .... வேறு யாருக்கோ தேவைகற்று உபயோகம் ஆவது எந்த விதத்தில் நியாயம் .....

நம் தமிழக அரசாங்கம் நமக்கு தரும் பணத்தை கூட ....நம் நகர் மன்றம் செய்யமுடியாமல் இருப்பதின் காரணம் என்ன ?? அதை கூட நம் நகர் மன்ற மரியாதைக்குரிய உறுப்பினர்கள் ஏன் தடையாகவே உள்ளார்கள் என்பது தான் பொது மக்கள் யாவர்களுக்கும் சுத்தமாக நமக்கு புரிய வில்லை ?? அல்லாஹ் போது மாணவன் ....

இவ்வளவு தெளிவாக நம் யாவர்களுக்கும் நன்கு புரிந்தும் ...நாம் தப்பு செய்து பொது மக்களின் வரி பணம் ..தப்பான வழியில் செல்வது தான் கடும் வேதனை .....

இவ்வளவு காலங்கள் கழித்தும் .... நம் மரியாதைக்குரிய ஜனாப் .ஹாஜி .MKT ...அப்பா அவர்களை எல்லாம் நாம் நினைத்து இன்னும் பெருமை படுவது உண்மையே ......

எப்படி தான் முடிவு வருகிறது என்று நாம் பார்ப்போம் ..... நல்லதோர் முடிவையே நாம் நினைப்போமாக .....

வஸ்ஸலாம்

K.D.N.MOHAMED LEBBAI
RIYADH


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>

முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்

பிற செய்திகள்

காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
Cathedral Road LKS Gold ParadiseFathima Jewellers
AKM JewellersFaams

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved