Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
5:22:01 PM
செவ்வாய் | 19 மார்ச் 2024 | துல்ஹஜ் 1692, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
05:1312:3315:4718:3419:43
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:22Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்14:00
மறைவு18:28மறைவு02:10
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
05:1205:3706:01
உச்சி
12:25
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:4919:1319:38
Go to Homepage
செய்திகள்
Previous News ItemNext News Item
செய்தி எண் (ID #) 17127
#KOTW17127
Increase Font Size Decrease Font Size
திங்கள், ஐனவரி 11, 2016
காயல்பட்டினம் நகராட்சி நிலுவைப் பணிகள் குறித்து மாவட்ட ஆட்சியரிடம் நகர்மன்றத் தலைவர் மக்கள் குறைதீர் கூட்டத்தின் போது கோரிக்கை!
செய்திகாயல்பட்டணம்.காம்
இந்த பக்கம் 5086 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (3) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 0)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}

2014ஆம் ஆண்டில் நகர்மன்றத்தால் அனுமதி வழங்கப்பட்ட 16 சாலைகள் குறித்தும்,

2014ஆம் ஆண்டில் நகர்மன்றத்தால் அனுமதி வழங்கப்பட்ட 30 லட்சம் ரூபாய் மதிப்பிலான உயர் கோபுர எல்.இ.டி. மின்விளக்குப் பணிகள் குறித்தும்,

46 லட்சம் ரூபாய் மதிப்பிலான கடற்கரையை இணைக்கும் ஸீ-கஸ்டம்ஸ் சாலை குறித்தும்,

நகராட்சியில் முறையாக அனுமதி பெறாமல் கட்டுமானப் பணிகள் செய்து வருகிற மற்றும் வரி ஏய்ப்பு செய்து வரும் டி.சி.டபிள்யு. தொழிற்சாலை மீது நடவடிக்கை எடுப்பது குறித்தும்

நகராட்சியினால் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை செயல்படுத்த, மாவட்ட நகராட்சிகள் சட்டம் 1920, மாவட்ட ஆட்சியருக்கு வழங்கியுள்ள அதிகாரத்தை பயன்படுத்தி, ஆணையருக்கு உத்தரவிடுமாறு இன்று (11.01.2016. திங்கட்கிழமை) காலையில், தூத்துக்குடி மாவட்ட ஆட்சியரகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர் வாராந்திர கூட்டத்தின்போது, காயல்பட்டினம் நகர்மன்றத் தலைவர் ஐ.ஆபிதா ஷேக் - தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் ம.ரவிக்குமாரிடம் நேரில் கோரிக்கை மனு அளித்தார்.



ஏற்கனவே டெண்டர் விடப்பட்ட சாலைப் பணிகளுக்கு ஒப்புதல் கொடுக்க நகர்மன்றத்தின் அவசர கூட்டம் கூட்டுவது குறித்து வழங்கப்பட்ட மனு

















சி-கஸ்டம்ஸ் சாலை டெண்டர் முடிவுகளை மன்றத்தில் சமர்ப்பிக்க கோரி வழங்கப்பட்ட மனு



LED உயர் மின் கோபுரங்கள் டெண்டர் முடிவுகளை மன்றத்தில் சமர்ப்பிக்க கோரி வழங்கப்பட்ட மனு









DCW தொழிற்சாலை குறித்து நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை அமல் செய்து அது குறித்த அறிக்கையயை மன்றத்தில் சமர்ப்பிக்க கோரி வழங்கப்பட்ட மனு



மேலும், காயல்பட்டினம் நகராட்சியின் நடப்பு நிலை குறித்து தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் ம.ரவிக்குமார் கூறியதாக, நாளிதழ் ஒன்றில் (தினமலர்) ஜனவரி 05, 2016 அன்று செய்தி ஒன்று வெளியிடப்பட்டிருந்தது.

அதுகுறித்த தனது விளக்கத்தை, காயல்பட்டினம் நகர்மன்றத் தலைவர் ஐ.ஆபிதா ஷேக், பின்வருமாறு அறிக்கையாக செய்தியாளர்களிடம் வழங்கினார்:-

ஜனவரி 4., 2016 அன்று நடந்த மக்கள் குறைதீர் கூட்டத்திற்கு பிறகு, பத்திரிக்கையாளர்களை சந்தித்த மாவட்ட ஆட்சியர் திரு ம.ரவிகுமார் IAS அவர்கள் காயல்பட்டினம் நகராட்சி குறித்து சொன்னதாக சில கருத்துக்கள் ஊடகம் ஒன்றில் வெளியாகியிருந்தது. இது போன்ற கருத்தை மாவட்ட ஆட்சியர் அவர்கள் தன்னை சந்திக்க வரும் சிலரிடம் கூறி வருவதாக நான் கேள்வியுற்றிருந்தாலும், ஊடகம் வாயிலாக அக்கருத்து வெளிப்படுத்தப்படும் போது, அதற்கான விளக்கத்தை வழங்குவது எனது கடமை என்பதால் இந்த அறிக்கையை வெளியிடுகிறேன்:

மாவட்ட ஆட்சியர் கூறியதாக வெளிவந்த ஜனவரி 05, 2016 நாளிதழ் (தினமலர்) செய்தி:-

"காயல்பட்டினம் நகராட்சி கூட்டத்தில் ஒரு தீர்மானம் கூட நிறைவேற்ற முடியவில்லை. கடைசியாக ரோடு போடும் பணிக்குரிய தீர்மானத்தை நிறைவேற்ற முயற்சி எடுத்து நிறைவேற்றினோம். ஆனால் அதற்கு ஸ்டே வாங்கி விட்டனர். 16 கோடி ருபாய் பணம் வீணாக இருக்கிறது. காயல்பட்டினத்தில் வீடுகள் எல்லாம் பெரிய, பெரிய வீடுகளாக இருக்கிறது. ஆனால் ரோடுகள் மோசமாக இருக்கிறது. பணம் இருந்தும் போட முடியாத நிலை இருக்கிறது. குறைகள் ஏதுமிருந்தால் தெரிவிக்கலாம். அதில் உண்மை இருந்தால் அதனை நிவர்த்தி செய்யவும் தயாராக இருக்கிறோம். இவ்வாறு கலெக்டர் தெரிவித்தார்."

காயல்பட்டினம் நகராட்சியின் நகர்மன்றக் கூட்டங்களில் கடந்த 4 1/4 ஆண்டுகளில் ஏறத்தாழ 1100 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. தீர்மானங்களை நிறைவேற்றும் பணியை நகர்மன்றம் செவ்வனே செய்துதான் வருகிறது. இங்கு பிரச்சனை தீர்மானங்கள் நிறைவேற்றப்படுவதில் அல்ல; அவற்றை செயல்முறைக்குக் கொண்டுவருவதில்தான்!

மக்கள் பிரதிநிதிகளால் தீர்மானங்களை நிறைவேற்ற மட்டுமே முடியும்; அந்தத் தீர்மானங்களை டெண்டர் படிவங்களாக மாற்றுவது, நாளிதழ்கள் மூலம் ஒப்பந்தப்புள்ளிகள் கோருவது, ஒப்பந்தாரருக்கு வேலை ஆணை வழங்குவது, வேலை ஆணைகள் படி பணிகளை நிறைவேற்றுவது - இவையனைத்தும் ஆணையரின் கடமை.

உதாரணமாக - ஜூன் 2014 இல் 22 சாலைகளுக்கு நகர்மன்றம் ஒப்புதல் கொடுத்தது. அதில் 16 சாலைகளுக்கான பணிகள் - 17 மாதங்கள் ஆகியும், இன்று வரையும் துவக்கப்படவில்லை. எந்த நீதிமன்றத் தடையும் அந்த சாலைகளுக்கு இல்லை.

அதே ஜூன் 2014 மாதத்தில், 29.5 லட்ச ரூபாய் மதிப்பில், LED உயர் மின் கோபுரங்கள் நிறுவ - தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அந்த பணிகளுக்கு, 14 மாதங்கள் கழித்து - ஆகஸ்ட் 2015இல் - ஆணையர் டெண்டர் விட்டார். எந்த நீதிமன்ற தடையும் அந்த பணிகளுக்கு இல்லை. ஆனால் அந்த டெண்டர் முடிவுகளை - இதுவரை - ஆணையர் திரு ம.காந்திராஜன், நகர்மன்றத்தின் பார்வைக்கே கொண்டுவரவில்லை.

மாவட்ட ஆட்சியர் கூறியிருப்பது போல, நீதிமன்ற உத்தரவால் பாதிக்கப்பட்டுள்ளவை இரண்டு தீர்மானங்கள் மட்டுமே! எஞ்சிய தீர்மானங்கள் மீது இன்றளவும் நடவடிக்கை மேற்கொள்ளப்படாமல் இருப்பதற்கு - காயல்பட்டினம் நகராட்சி அதிகாரிகளுக்கும், சில காண்ட்ராக்டர்களுக்கும் உள்ள பலமான கூட்டணியே காரணம்.

காண்ட்ராக்டர்கள் சௌகரியப்படியே டெண்டர் விடப்படுகிறது, புதிதாக எந்த காண்ட்ராக்டர்களையும் பதிவு செய்ய விடுவதில்லை. இ-டெண்டர் மூலம் புதிதாக ஒரு ஒப்பந்ததாரர் டெண்டரில் கலந்துகொண்டுவிட்டால், அந்த டெண்டரையே காணாமல் ஆக்கிவிடுகிறார்கள். இதுதான் - காயல்பட்டினம் நகராட்சியின் கசப்பான உண்மை.

ஜூலை 2015இல் - முறையாக மதிப்பீடு தயாரிக்காமல், 3.5 கோடி ரூபாய் மதிப்பீட்டில், சாலை பணிகள் மேற்கொள்ள அதிகாரிகளால் முயற்சி செய்யப்பட்டது. இதில் உள்ள தவறினை ஈமெயில், FAX உட்பட பல வழிகளில், மாவட்ட ஆட்சியர் உட்பட நகராட்சி சம்பந்தமான அதிகாரிகளுக்கு நான் தெரிவித்தேன். சட்டத்திற்குப் புறம்பாக நகர்மன்றத் தலைவரை ஒதுக்கிவிட்டு, துணைத் தலைவர் மூலம் கூட்டத்தை நடத்தி, நிறைவேற்றப்பட்ட அதற்கான தீர்மானத்தை ரத்து செய்யக் கோரி, மாவட்ட ஆட்சியருக்கு நான் கடிதம் எழுதினேன். ஆட்சியரிடம் இருந்து பதில் ஏதும் இல்லை. அதன் பிறகே, அந்த தீர்மானத்திற்கு நீதிமன்றம் தடை வழங்கியது.

காயல்பட்டினம் நகராட்சியில் 16 கோடி ரூபாய் வீணாக உள்ளதாக மாவட்ட ஆட்சியர் தெரிவித்ததாகவும் அதே ஊடக செய்தியில் உள்ளது. சம்பந்தப்பட்ட நகர்மன்றத்தின் தலைவர் - RTI சட்டம் மூலம் கேட்ட பின்பும் கூட ஆணையரால் வழங்கபடாத அரிய தகவல் ஒன்றை மாவட்ட ஆட்சியர் இங்கே வழங்கியுள்ளார். அதற்காக அவருக்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

அதிகாரிகள் தங்கள் கடமையை செய்யத் தவறும்போதும், முறைகேடுகளில் ஈடுபடும்போதும், மக்கள் பிரதிநிதிகளால் உயர் அதிகாரிகளிடம் புகார் மட்டும்தான் கொடுக்க முடியும். மக்களுக்கு கஷ்டம் கொடுத்து, தங்கள் சுயலாபத்திற்காகவும் - மாண்புமிகு புரட்சி தலைவி அம்மா அவர்களின் அரசுக்கு அவப்பெயர் ஏற்படுத்தும் வகையிலும் நடந்து வரும் நகராட்சி ஆணையர் மற்றும் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்காமல், மாவட்ட ஆட்சியர் போன்ற அதிகாரிகள் - மக்கள் பிரதிநிதிகள் மீது வீண் பழியை சுமத்துவது, வேடிக்கையான - வருந்தத்தக்க செயல்மட்டும் அல்ல; அபத்தமான - திசைதிருப்பும் செயலுமாகும்.

‘குறைகள் ஏதுமிருந்தால் தெரிவிக்கலாம். அதில் உண்மை இருந்தால் அதனை நிவர்த்தி செய்யவும் தயாராக இருக்கிறோம்” என்று மாவட்ட ஆட்சியர் அவர்கள் அந்த செய்தியில் தெரிவித்திருப்பதால், காயல்பட்டினம் நகராட்சி ஆணையரால் செயல்முறைக்கு கொண்டு வரப்படாமல் இருக்கும் சில தீர்மானங்கள் விபரங்களை (16 சாலைகள் + 1 பாலம், சி-கஸ்டம்ஸ் சாலை, LED உயர்மின் கோபுரங்கள், DCW தொழிசாலை) - இன்று மனுவாக, மாவட்ட ஆட்சியிரிடம் சமர்ப்பித்துள்ளேன். தீர்மானங்களை செயல்முறைக்கு கொண்டு வர, ஆணையருக்கு உத்தரவிடும் அதிகாரத்தை மாவட்ட ஆட்சியருக்கு - மாவட்ட நகராட்சிகள் சட்டம் 1920, பிரிவு 35 வழங்கியிருப்பதால், என் மனுக்கள் மீது மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுப்பார் என நான் நம்புகிறேன்.

THE TAMIL NADU DISTRICT MUNICIPALITES ACT, 1920

35. Collector's power to enforce execution of resolutions.— If it appears to the District Collector that the Executive Authority of a Municipality has made default in carrying out any resolution of the Council, the said Collector, after giving the Executive Authority, a reasonable opportunity of explanation, shall send a report thereon together with the explanation, if any, of the Executive Authority to the State Government and at the same time forward a copy of the same to the Council.


இவ்வாறு அந்த அறிக்கை வாசகம் அமைந்துள்ளது.


Previous News ItemNext News Item
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. Right Definition in Right Time
posted by KJ KALIFA SEYED MOHAMED (Chennai) [11 January 2016]
IP: 122.*.*.* India | Comment Reference Number: 42767

மாஷா அல்லாஹ்! சரியான நேரத்தில் சரியான விளக்கத்தை மாவட்ட ஆட்சியர் விளங்கும் வகையில் அளித்துள்ளார் நமது நகர்மன்றத்தலைவர். உங்கள் மக்கள் பணி தொடர வாழ்த்துக்கள்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
2. Re:...
posted by K.D.N.MOHAMED LEBBAI (RIYADH) [11 January 2016]
IP: 159.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 42768

அஸ்ஸலாமு அலைக்கும்

நல்ல சரியான ஒரு விளக்கத்தை,,மிக சரியான நேரத்தில் .. நம் நகர் மன்ற தலைவி அவர்கள் ...நம் மாவட்ட அதிகாரி அவர்கள் விளங்கும் விதமாக மிக தெளிவுபட மனு கொடுத்து இருப்பது பாராட்ட பட கூடியது ....

தங்களின் ஊருக்கான சேவையில் தொய்வு ''இல்லை என்பதையே தான் இது காட்டுகிறது .....பொது மக்கள் தங்களின் உண்மையான செயல்பாட்டை புரிந்து கொண்டார்கள் ...ஆனால் ஒரு சில சுயநல விரும்பிகள் தான் தப்பான கருத்து பதிவை தருகிறார்கள் ........காலபோக்கில் அவர்களும் உண்மையை புரிந்து கொள்வார்கள் ........

நம் மாவட்ட அதிகாரி அவர்கள் நம் நகர் மன்ற தலைவி அவர்களின் மனு மீதான திட்டங்களுக்கு தக்க நடவடிக்கை எடுக்க முயர்ச்சிப்பார்கள் என்று நாம் நம்புகிறோம் ....

வஸ்ஸலாம்
K.D.N.MOHAMED LEBBAI
RIYADH
SAUDI ARABIA


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
3. Re:...
posted by தமிழன் முத்து இஸ்மாயில். (INDIA) [12 January 2016]
IP: 163.*.*.* Japan | Comment Reference Number: 42792

நகரில் போடப்படும் சாலைகளுக்கு குறைந்தபட்சம் இரண்டு ஆண்டுகள் உத்தரவாதம் அளிக்கப்படவேண்டும் என்று நகர் மன்றம் தீர்மானம் நிறைவேற்றி இருக்கும் போது...! முக்கிய சாலையான சி.கஸ்டமஸ் சாலைக்கு ஏன்...? எதற்க்காக...? ஒரு ஆண்டு உத்தரவாதம் இருந்தால் போதுமானது என ஆணையர் காந்திராஜன் குறிப்பிடுகிறார்..? அப்படி குறிப்பிடுவதின் உள் நோக்கமென்ன..? இதுவரை நம்மில் எவராவது இது குறித்து நகராட்சியில் கேள்வி எழுப்பியதுண்டா..? உங்கள் மனசாட்சியை தொட்டு சொல்லுங்கள்..!

முக்கிய சாலையான சி.கஸ்டமஸ் சாலைக்கு நகர்மன்ற தீர்மானத்திற்கு எதிராக ஆணையரால் ஒரு ஆண்டு உத்தரவாதம் அளித்து சாலை பணி ஆரம்பிக்கப் பட்டால் நகர்மன்ற தீர்மானத்திற்கு எதிராக / முரணாக / முறைகேடாக / விதி முறைக்கு மாற்றமாக செயல்படும் அச்சாலை பணியை நிறுத்த கோரி ( நீதிமன்ற ஸ்டே) சிறிதளவும் கூட சுயநலம் கருதாத அப்பகுதியிலுள்ள அமைப்பினர்களோ..! அல்லது - நகர்நலன் கருதும் நகரின் பொதுமக்களில் எவரேனும் இப்பணியை எதிர்த்து நீதி மன்றத்தை அணுகலாம் என தெரிகிறது - அதற்க்கு முன்பாக ஊர் நலன் நாடும் உறுப்பினர்கள் ஆணையரிடம் இத்தவறை சுட்டி காட்டி 2 ஆண்டுக்கான உத்திரவாதத்தை உறுதி படுத்துவார் என நம்புவோமாக..!!

குறிப்பு:- முக்கிய சாலையான சி.கஸ்டமஸ் சாலை அமைய ஒப்பந்ததாரால் பணி செய்ய ஆயுத்தமாகும் போது இதன் நடப்பு குறித்து தெரியவரும் - அதுவரை நாம் பொறுமை காப்போம்..!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>

முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்

பிற செய்திகள்

காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
Cathedral Road LKS Gold ParadiseFathima Jewellers
AKM JewellersFaams

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved