Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
4:37:52 PM
சனி | 20 ஏப்ரல் 2024 | துல்ஹஜ் 1724, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
04:5212:2315:3018:3319:43
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:05Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்15:52
மறைவு18:27மறைவு03:40
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
04:5405:1905:44
உச்சி
12:16
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:4819:1319:38
Go to Homepage
செய்திகள்
Previous News ItemNext News Item
செய்தி எண் (ID #) 18037
#KOTW18037
Increase Font Size Decrease Font Size
ஞாயிறு, ஜுலை 3, 2016
பைக் மோதியதில் முதியவர் மரணம்! மகுதூம் ஜும்ஆ பள்ளியில் நல்லடக்கம் செய்யப்பட்டது!!
செய்திஎஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்)
இந்த பக்கம் 3003 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (10) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 1)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}

காயல்பட்டினம் எல்.எஃப். வீதியில், பைக் மோதி விபத்துக்குள்ளானதையடுத்து முதியவர் காலமானார். விபரம் வருமாறு:-

காயல்பட்டினம் எல்.எஃப். வீதியில், ‘கேப்டன்’ தர்வேஷ் முஹம்மத் என்பவர், தன் மனைவி, இரண்டு பெண் மக்களுடன் வசித்து வந்தார். திருப்பாலைக்குடியைச் சொந்த ஊராகக் கொண்ட இவர், இலங்கை வரக்காப்பொல நகரில் நீண்ட காலம் வசித்த நிலையில், 1990ஆம் ஆண்டு முதல் காயல்பட்டினத்தில் வசித்து வந்தார்.

நேற்று (02.07.2016. சனிக்கிழமை) 20.00 மணியளவில், அருகிலிருக்கும் தப்லீக் மர்கஸ் பள்ளிவாசலில் ரமழான் சிறப்புத் தொழுகையில் கலந்துகொள்வதற்காக அவர் தன் வீட்டிலிருந்து சாலையைக் கடக்க முயன்றபோது, 18 வயது கூட நிறையாத இளைஞர் ஒருவர் வேகமாக ஓட்டி வந்த மோட்டார் இரு சக்கர வாகனம், சுமார் 72 வயதாகும் அவர் மீது மோதவே, அவர் உடலிலிருந்து இரத்தம் அதிகளவில் வழிந்தோடி, நிகழ்விடத்திலேயே மயங்கி விழுந்துள்ளார்.

பின்னர், திருச்செந்தூரிலுள்ள தனியார் மருத்துவமனையில் அவசர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்ட அவர், சிகிச்சை பலனின்றி மரணமானார்.

இன்று காலையில் அவரது உடல் மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டு குடும்பத்தாரிடம் ஒப்படைக்கப்பட்டது. அங்கேயே இறுதிச் சடங்குகள் நிறைவேற்றப்பட்ட பின், தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழக ஆம்புலன்ஸ் வாகனத்தில் அவரது உடல், எல்.எஃப். வீதியிலுள்ள அவரது இல்லத்திற்குக் கொண்டு வரப்பட்டது.

அங்கு பொதுமக்கள் பார்வையிட்டதையடுத்து, 14.30 மணியளவில் - மகுதூம் ஜும்ஆ பள்ளியில் ஜனாஸா தொழுகை நடத்தப்பட்டு, அங்குள்ள மையவாடியில் அவரது உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது. இந்நல்லடக்கத்தில் காயல்பட்டினத்தில் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்கள் திரளாகக் கலந்துகொண்டனர்.

இவ்விபத்தில், மோட்டார் வாகனத்தை ஓட்டிச் சென்றவருக்கும் காயம் ஏற்பட்டு, சிகிச்சை பெற்று வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அவர் குறித்த உறுதி செய்யப்பட்ட தகவல்கள் இதுவரை கிடைக்கப்பெறவில்லை. ஆறுமுகநேரி காவல்துறையினர் இதுகுறித்து விசாரித்து வருகின்றனர்.

நிகழும் ரமழான் மாதத்தில், 18 வயது கூட நிரம்பாத இளைஞர்கள் மோட்டார் இரு சக்கர வாகனங்களில் இரண்டு, மூன்று, நான்கு பேர்களாக அமர்ந்துகொண்டு, சாலையோரங்களில் செல்வோரின் பாதுகாப்பு குறித்தோ, தமது பாதுகாப்பு குறித்தோ சிறிதும் கவலைப்படாமல் மிக வேகமாக ஓட்டிச் செல்வது வாடிக்கையாகிவிட்ட தற்காலச் சூழலில், இவ்விபத்து பொதுமக்களிடையே பெரும் கோபத்தை ஏற்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.


Previous News ItemNext News Item
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. பிள்ளைகளை நேர்மையின்பாலே வளர்ப்பார்கள்
posted by N.S.E.மஹ்மூது (காயல்பட்டணம்) [04 July 2016]
IP: 103.*.*.* | Comment Reference Number: 44198

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்).

பைக் மோதியதில் முதியவர் மரணம் (இன்னாலில்லாஹி வஇன்னாஇலைஹி ராஜியூன்) செய்தியை அறிந்து மனம் மிகவும் வேதனை அடைகிறது. வல்ல அல்லாஹ்! மர்ஹூம் அவர்களின் பிழைகளை பொறுத்து மேலான சுவன பதியை கொடுத்தருள்வானாக ஆமீன்.

----------------------------

இரு சக்கர வாகனம் ஓட்டுகிறவர்கள் பெரும்பாலும் விமானம் ஓட்டுகிறதாகத்தான் நினைப்பு – விமானம் ஓட்டுகிறவர்கள் கூட அவரவர் வான் எல்லைக்குள்தான் ஓட்டுவார்கள் – ஆனால் இருசக்கர ஓட்டிகளோ! எல்லையே இல்லாத நினைப்பில்தான் ஓட்டுகிறார்கள். பலரும் பலமுறை எச்சரித்து இருக்கிறோம் அடங்குவதாக தெரியவில்லை – அவர்கள் உயிர் அடங்கும் வரை, அவர்களை அடக்கும் வரை, அவர்களுக்கு அடக்கம் என்பது வராது என்பதாகவே தெரிகிறது.

--------------------------

பைக் கீழே விழுந்தால் அதை தூக்கக்கூட சக்தியில்லாத 10, 11 வயதே உடைய பையன்கள் பைக் ஓட்டுகிறார்கள் அவர்களுக்கு பின்னால் அவர்களுடைய பொறுப்பற்ற தாயோ! சகோதரியோ! ஏதோ ஒரு பெண் உட்கார்ந்து கொண்டு போகிறாள்.

பைக் ஓட்ட அனுமதிக்கப்படாதவர்கள், தாறுமாறாக, திமிராக ஓட்டுபவர்கள் விபத்துக்குள்ளாகி செத்தாலோ! காயமேற்பட்டாலோ! யாரும் அதிகம் கவலை கொள்ளப்போவதில்லை. ஆனால் அப்பாவி பாதசாரிகளை கொல்லுவதும், காயமேற்படுத்துவதும் மேலும் துன்பத்திற்குள்ளாக்குவதும்தான் கவலையை தருகிறது.

----------------------------

இன்று ஒருவர் கொல்லப்பட்டிருக்கிறார் இதன் மூலம் ஏதேனும் இந்த மக்களுக்கு பாடம் ஏற்படுமா? என்றால் ஏற்படாது. அட! நிரந்தரப்பாடம் வேண்டாம் ஏதோ! 4 நாளைக்காவது கொஞ்சம் அமைதியாக, வேகமில்லாமல் ஓட்டுவார்களா? இல்லை, சிறு பையன்களாவது ஓட்டாமல் இருப்பார்களா? என்றால் இருக்காது.

ஏன், காரணம் என்ன, பெரும்பாலானவர்களிடம் நேர்மையான பணம் இல்லை. நேர்மையாக சம்பாதித்த பணமாக இருந்தால் – இது உயிருக்கு ஆபத்து என்பதை மனதில் நிறுத்தி சிறுவர்களுக்கு நிச்சயமாக பைக் வாங்கி கொடுக்க மாட்டார்கள் – சிறுவர்களை பைக் ஓட்டவும் அனுமதிக்க மாட்டார்கள்.

----------------------------

சிறுவர்கள் பைக் ஓட்டுவதற்கு முதல் காரணம் பெற்றோர்களே! எந்த பெற்றோர்களிடம் நேர்மையான பணம் இருக்கிறதோ! அவர்கள் தங்கள் பிள்ளைகளை நேர்மையின்பாலே வளர்ப்பார்கள்!!.

தன்னிடம் கோடிக்கணக்கில் பணம் இருக்கிறது, தான் யாரையும் ஏமாற்றாமல் தொழில் செய்து சம்பாதித்தது என்றாலும் அந்த பணம் ஹலாலாக ஆகிவிடாது – அந்த பணத்திற்கான ஜக்காத் (ஏழை வரியை) கொடுத்திருந்தால்தான் அது நேர்மையான (ஹலாலான) பணம் ஆகும்.

------------------------------

வேண்டுகோள்!

பெரியவர்கள் பைக்கை தாறுமாராக ஓட்டி நாசமாக போகிறது ஒருபக்கமிருக்கட்டும் – தயவு செய்து சிறுவர்களுக்கு பைக் ஓட்டகொடுக்காதீர்கள் – இந்த சோக நிகழ்வு நடந்த பிறகும் உங்கள் சிறுவர்களை பைக் ஓட்ட அனுமதித்தீர்களானால் , அந்த சிறுவர்களை கொலையாளியாகவே! மாற்றுகிறீர்கள் என்று அர்த்தமாகும் – இதன் மூலம் அவர்கள் மட்டுமல்ல, நீங்களும் நரகம் செல்ல நாடுகிறீர்கள் என்பது திண்ணமாகும்.

எனவே! கண்டிப்பாக சிறுவர்களை பைக் ஓட்ட அனுமதிக்காதீர்கள் அதன் மூலம் உங்கள் பிள்ளைகளையும் , பாதசாரிகளையும் கொல்லாதீர்கள்.

வஸ்ஸலாம்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
2. Re:...
posted by Moosa Sahib (Dubai) [04 July 2016]
IP: 92.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 44199

That person should be known by surrounding people to see this accident. Put him and his parents in jail. The should know about others people pain.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
3. Re:...
posted by Rizwan (Jeddah.k.s.a) [04 July 2016]
IP: 223.*.*.* India | Comment Reference Number: 44200

இன்னாலில்லாஹி வஇன்னா இனலஹி ராஐிஊன்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
4. Re:...Condolence
posted by shaik (Quede Millath Nagar) [04 July 2016]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 44201

CONDOLENCE

Assalamu alaikum wrwb.

INNALILLAHI WA INNA ILAIHI RAJIOON.

எல்லாம் வல்ல அல்லாஹ் அவர்களின் பிழைகளை மன்னித்து மேலான பிர்தவ்சுல் அஃலா எனும் சுவன பதியை தந்தருள் புரிவானாக. ஆமீன் . அவர்களின் பிரிவால் துயருற்றிருக்கும் குடும்பத்தார், உற்றார் - உறவினர் அனைவருக்கும் வல்ல அல்லாஹ் மேலான பொறுமையை நல்குவானாக ஆமீன். வஸ்ஸலாம்.

May Allah forgive his/her sins and accept his/her good deeds and give him/her a place in Jannathul Firdous. I request the family members to be patient and Allah will give them reward in this world and in the hereafter.

Wassalam. S.D.Segu Abdul Cader.
Quede Millath Nagar.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
5. Re:...முடிவுக்கு பிறகு விடிவு என்ன?
posted by mackie noohuthambi (kayalpatnam ) [04 July 2016]
IP: 163.*.*.* Japan | Comment Reference Number: 44202

பெரியவர் அடிபட்ட செய்தி கேள்வி பட்டபோது அடிவயிற்றில் அமிலம் சுரந்தது. அமைதியே உருவான அந்த பெரியவர் மர்கஸிலேதான் தான் வணக்க வழிபாடுகளில் திளைத்து இருப்பவர். யாரிடமும் கலகலவென வழவழவென பேச மாட்டார். ஜும்மா தொழுகைக்கு மட்டும் மகுதூம் பள்ளிக்கு வருவார்.

பலநூறு மக்கள் கூடும் அந்த ஜும்மா தொழுகை கூட்டத்தில் இவரை தனியாக அடையாளம் கண்டு கொள்ளலாம். வெள்ளை வெளேரென ஜுப்ப்பா மருதாணி பூசப்பட்ட தாடி தலையில் வெள்ளை தொப்பி இது தான் அவரது உருவ தோற்றம். அவர்களின் வாழ்க்கை ரமலான் பிறை 27il முடிவுக்கு வந்துள்ளது. அல்லாஹ் அவர்களுக்கு மேலான சுவர்க்க வாழ்வை கொடுத்தருள்வானாக அவர்கள் குடும்பத்தினருக்கு நல்ல பொறுமையை கொடுத்தருள்வானாக.

இந்த வாழ்வின் முடிவுக்கு அல்லாஹ்வின் களா கத்ரு என்று நாம் சமாதானம் சொல்லிக் கொண்டாலும் மனித உயிர் பலியாக மனிதனே காரணமான இருக்கும் இந்த விபத்தை நாம் வேறொரு கோணத்திலும் பார்க்க வேண்டும்.

கீழக்கரையில் ஏற்பட்ட பைக் விபத்தில் வபாத்தான மாணவர்கள்,கடையநல்லூர் பைக் விபத்தில் வபாத்தான மாணவர்கள் இவர்களின் உயிரின் விலை என்ன இவர்களை எவ்வளவு கனவுகளுடனும் எதிர்பார்ப்புக்களுடனும் அவர்கள் பெற்றோர் அவர்களை வளர்த்து வாலிபமாக்கி சமுகத்தில் வலம் வர விட்டிருப்பார்கள். ஆனால் அவர்கள் கனவுகளை சிதைத்து சின்னாபின்னமாக்கியத்துடன் தங்கள் வாழ்வுகளையும் சிதைத்துக் கொண்ட இவர்களை என்னென்று சொல்வது.

சமீப காலமாக பெருகி வரும் பைக் கலாச்சாரம் நம்மை சிந்திக்க வைக்கிறது காவல் துறை உதவியை நாடி நமதூரில் பைக் கலாச்சாரத்து ஒரு முடிவை ஏற்படுத்த வேண்டும். போது நல சேவையில் ஈடுபட்டிருக்கும் சங்கங்கள், காயல் நல மன்றங்கள், கல்வி நிலையங்கள் இக்ரா kcgc போன்ற மாணவர்களின் மீது அக்கறை கொண்ட தொண்டு நிறுவனங்கள், நமதூரில் உள்ள ஜமாத் பெரியவர்கள், இணைய தலை நிறுவனர்கள் எல்லோரும் கலந்து கொள்ளும் ஒரு கூட்டத்தை கூட்டி இதுபற்றி பேசி ஒரு விதி வகுக்க வேண்டும்.

புனித ரமலான் முடிவுக்கு வந்துள்ள இந்த தருணத்தில், இக்ரா கூட்டம் 10.7.16 இல் நடக்கவிருக்கும் தருணத்தில் இந்த தலைப்பையும் வைத்து விவாதம் நடத்த வேண்டும் என்று இந்த இணையதளம் மூலம் கேட்டுக் கொள்கிறேன்.

நமது மண்ணின் மைந்தன் கடையநல்லூர் சட்டமன்ற உறுப்பினரையும் அழைத்து இந்த விஷயமாக ஆலோசனைகள் செய்து சட்டமன்றத்திலும் பேசி இந்த பைக் கலாச்சாரத்துக்கு ஒரு முற்றுப் புள்ளி வைக்க முயற்சிப்போம்.

எல்லாம் வல்லா அல்லாஹ் நம் இளைஞர்களை இந்த பைக் கலாச்சாரத்தினால் ஏற்படும் சீரழிவுகளை விலை மதிக்க முடியாத உயிர்கள் காவு கொள்ளப் படுவதையும் தடுத்து நிறுத்த அருள்புரிவானாக ஆமீன்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
6. இன்னாலில்லாஹி வ இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன் .
posted by SHEIKH ABDUL QADER (RIYADH) [04 July 2016]
IP: 62.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 44203

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வ பரக்காத்துஹு. இறையருள் நிறைக.

இன்னாலில்லாஹி வ இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன் .

வல்ல இறைவன் மர்ஹூம் அவர்களின் பிழைகளை மன்னித்து மண்ணறையைப்பிரகாசமாக்கி,விசாலமாக்கி இன்ஷா அல்லாஹ் நாளைமறுமையில் வல்ல இறைவன் தனது அழகுதிருக்காட்ச்சியுடன் சுவனத்தில் அமர்த்துவானாக ஆமீன்.

அன்னாரின் குடும்பத்தினருக்கு அமைதியுடன் அழகிய பொறுமையைக்கொடுத்தருள்வானாக ஆமீன்

இறைவன் மிகப்பெரியவன்.

இறையடிமை,
ஷேக் அப்துல் காதிர்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
7. Re:...இன்ன லில்லாஹி வ இன்ன இலைஹி ராஜிவூன் ...
posted by A.S.L.SULAIMAN LEBBAI (RIYADH - S . ARABIA) [04 July 2016]
IP: 5.*.*.* | Comment Reference Number: 44204

இன்ன லில்லாஹி வ இன்ன இலைஹி ராஜிவூன் ...

வல்ல நாயன் அல்லாஹு மர்ஹூம் அவர்களின் பாவங்களை பொறுத்து மேலான சுவன பதியை கொடுத்து அருள்வானாக . ஆமீன் .

அன்னாரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினர் அனைவர்களுக்கும் அழகிய பொறுமையை கொடுத்து அருள்வானாக ஆமீன்.

வல்ல நாயன் இது போன்ற சாலை விபத்துக்களையும் & வாகன விபத்துக்களையும் விட்டும் நமது ஊரு மக்களுக்கு பாதுகாப்பை அளிப்பானாக . ஆமீன் .

நாம் இயன்ற வரை நமது பிள்ளைகளை மிக கண்டிப்புடன் வளர்ப்போம் .. இரு சக்கர வாகனங்களை அதிக வேகத்துடன் ஓட்டும் அனைவர்களும் நாம் தடுத்து நிறுத்துவதுடன் அவர்களுக்கு நம்மால் இயன்ற எச்சரிக்கையும் செய்வோம் .... வல்ல நாயன் அல்லாஹு நமது அனைத்து மக்களுக்கும் அவனது பாதுகாப்பை கொடுத்து அருள்வானாக ஆமீன் .. .


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
8. Re:...
posted by Sadak Zabir (Kuwait) [04 July 2016]
IP: 188.*.*.* Kuwait | Comment Reference Number: 44207

Inna lillahi wa inna ilaihi rajioon... May Allah forgive his sins and place his in jannathul Firdos... Aameen


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
9. Re:...
posted by s.e.mohideen abdul cader (bahrain) [05 July 2016]
IP: 94.*.*.* Bahrain | Comment Reference Number: 44208

எல்லாம் வல்ல அல்லாஹ் அவர்களின் பிழைகளை மன்னித்து மேலான பிர்தவ்சுல் அஃலா எனும் சுவன பதியை தந்தருள் புரிவானாக. ஆமீன் .

அவர்களின் பிரிவால் துயருற்றிருக்கும் குடும்பத்தார், உற்றார் - உறவினர் அனைவருக்கும் வல்ல அல்லாஹ் மேலான பொறுமையை நல்குவானாக ஆமீன். வஸ்ஸலாம்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
10. Re:...
posted by Khatheeb Muhammad Muhyiddeen (Doha) [05 July 2016]
IP: 176.*.*.* Qatar | Comment Reference Number: 44211

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>

முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்

பிற செய்திகள்

காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
Cathedral Road LKS Gold ParadiseFathima Jewellers
AKM JewellersFaams

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved