Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
8:03:56 AM
சனி | 20 ஏப்ரல் 2024 | துல்ஹஜ் 1724, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
04:5212:2315:3018:3319:43
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:05Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்15:52
மறைவு18:27மறைவு03:40
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
04:5405:1905:44
உச்சி
12:16
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:4819:1319:38
Go to Homepage
செய்திகள்
Previous News ItemNext News Item
செய்தி எண் (ID #) 18630
#KOTW18630
Increase Font Size Decrease Font Size
திங்கள், ஐனவரி 2, 2017
காயல்பட்டினத்தைப் புறக்கணித்துச் செல்ல முயன்ற பேருந்தை பொதுமக்கள் முற்றுகை! ஓட்டுநரும், நடத்துநரும் மன்னிப்புக் கேட்டதையடுத்து வழிவிடப்பட்டது!! பொதுமக்களிடம் “நடப்பது என்ன?” குழுமம் வேண்டுகோள்!!!
செய்திஎஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்)
இந்த பக்கம் 2927 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (2) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 0)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}

காயல்பட்டினம் வழியாக வந்து செல்ல வேண்டிய அரசுப் பேருந்துகள், அவ்வழித்தடத்தைப் புறக்கணித்துச் செல்வதைக் கண்டித்து, காயல்பட்டினம் “நடப்பது என்ன?” சமூக ஊடகக் குழுமம் - கடந்த ஜூன் மாதம் முதல் பல்வேறு நடவடிக்கைகளைத் தொடர்ந்து எடுத்து வருகிறது.

இதனையடுத்து, பெரும்பாலான பேருந்துகள் தற்போது காயல்பட்டினம் வழித்தடத்தில் வந்து செல்கிறது. எனினும் ஒரு சில பேருந்து ஓட்டுநர்கள் இன்றளவும் காயல்பட்டினத்தைப் புறக்கணித்துவிட்டு மாற்றுப் பாதையில் செல்வதை வழமையாகக் கொண்டுள்ளனர்.

இவ்வாறாக, விதி மீறிப் பேருந்துகள் இயக்கப்படுவதையடுத்து, அப்பேருந்துகளில் பயணித்த - காயல்பட்டினம் “நடப்பது என்ன?” சமூக ஊடகக் குழும அங்கத்தினர், பேருந்துகளில் இருந்தவாறே - தமது பயண விபரம், ஓட்டுநர் - நடத்துநரின் விதிமீறல்கள் குறித்து, தம் பயணச் சீட்டு ஆதாரத்துடன் - குழுமத்தில் தகவல் தெரிவிக்க, அத்தகவல்கள் அடிப்படையில் பல்வேறு நடவடிக்கைகளைக் குழுமம் எடுத்து வந்துள்ளது.

நேற்று (01.01.2017. ஞாயிற்றுக்கிழமை) மாலையில் தம் குடும்பத்துடன் பயணித்த - காயல்பட்டினம் எல்.கே.மேனிலைப் பள்ளியின் ஆசிரியர் ஹுஸைன், இளையான்குடியில் நின்றிருந்த காரைக்குடி - திருச்செந்தூர் அரசுப் பேருந்தில் ஏறி, காயல்பட்டினத்திற்குப் பயணச் சீட்டு கேட்டிருக்கிறார். காயல்பட்டினம் வழித்தடத்தில் அப்பேருந்து செல்லாது என அவரிடம் கூற, அப்பேருந்து காயல்பட்டினம் வழித்தடத்தில் செல்ல வேண்டிய பேருந்து என்பதைப் பலமுறை அவர் வலியுறுத்திக் கூறியும், அதைக் கண்டுகொள்ளாத நடத்துநர், காயல்பட்டினத்திற்கு முந்திய ஊரான ஆறுமுகநேரிக்கு பயணச்சீட்டு கொடுக்க, வேறு வழியின்றி அவரும் பயணத்தைத் தொடர்ந்திருக்கிறார்.

பேருந்து நடத்துநருக்கு ஆசிரியர் ஹுஸைன் தொடர்ந்து நெருக்கடி கொடுத்ததையடுத்து, தூத்துக்குடி பழைய பேருந்து நிலையத்திற்குள் அப்பேருந்து வந்தபோது - சில பயணியர் அதில் ஏறி, காயல்பட்டினத்திற்குப் பயணச் சீட்டு கேட்க, நடத்துநரும் பயணச் சீட்டை வழங்கியிருக்கிறார். இதனைக் கண்ணுற்ற ஆசிரியர் ஹுஸைன், தனக்கு மட்டும் காயல்பட்டினத்திற்குப் பயணச் சீட்டு தராமல் மறுத்ததற்கான காரணத்தைக் கேட்க, “நீங்க ஆறுமுகநேரியிலிருந்து காயல்பட்டினத்திற்கு இன்னொரு டிக்கெட் வாங்கிக் கொள்ளுங்கள்!” என்று நடத்துநர் கூறியிருக்கிறார். இதனையடுத்து, ஆறுமுகநேரியிலிருந்து இன்னொரு பயணச் சீட்டைப் பெற்றுக்கொண்டு அவர் காயல்பட்டினம் வந்தடைந்தார்.

இளையான்குடியில் தனக்கு காயல்பட்டினத்திற்குப் பயணச் சீட்டு தர மறுக்கப்பட்டவுடனேயே அவர் சக ஆசிரியர் மூலமாக, காயல்பட்டினம் “நடப்பது என்ன?” சமூக ஊடகக் குழும நிர்வாகிகளுக்கு இதுகுறித்து தகவல் தெரிவிக்கவே, பேருந்து காயல்பட்டினம் வரும் நேரத்தில், குழும நிர்வாகிகளும், அங்கத்தினரும் அங்கு சென்றனர். இத்தகவலைக் கேள்வியுற்ற சுமார் 150 பொதுமக்களும் பேருந்து நிலையம் அருகில் திரண்டுவிட்டனர்.



22:25 மணியளவில் காயல்பட்டினம் பேருந்து நிலையம் அருகில் அப்பேருந்து வந்தபோது, பொதுமக்கள் அதை முற்றுகையிட்டனர். அதிலிருந்து இறங்கிய ஆசிரியர் ஹுஸைன், தனக்கு நேர்ந்த நிகழ்வுகள் குறித்து பொதுமக்களிடம் விளக்கினார்.









நிர்ணயிக்கப்பட்ட காயல்பட்டினம் வழித்தடத்தை விட்டுவிட்டு, மாற்றுப் பாதையில் செல்ல முனைந்ததற்கான காரணத்தையும், அதில் பயணித்த ஆசிரியருக்கு காயல்பட்டினத்திற்குப் பயணச் சீட்டு கொடுக்காமல் ஆறுமுகநேரிக்குக் கொடுத்ததற்கான காரணத்தையும், பேருந்தின் ஓட்டுநர் சுரேஷ், நடத்துநர் செல்வராஜ் ஆகியோரிடம் - “நடப்பது என்ன?” சமூக ஊடகக் குழுமத்தினர் கேட்க, துவக்கத்தில் அவ்விருவரும் முன்னுக்குப் பின் முரண்பாடாகப் பேசினர்.





அடுத்த சில மணித்துளிகளில் - “தவறாக நடந்துகொண்டதற்காக எங்களை மன்னித்துக் கொள்ளுங்கள்! இனி வருங்காலங்களில் விதி மீற மாட்டோம்...” என்று கூறவே, அவர்களுக்கு அறிவுரைகளை வழங்கப்பட்டு, பேருந்து கடந்து செல்ல பொதுமக்கள் வழிவிட்டனர்.

பின்னர் திரண்டிருந்த பொதுமக்களிடம் “நடப்பது என்ன?” சமூக ஊடகக் குழும நிர்வாகிகளுள் ஒருவரான எஸ்.கே.ஸாலிஹ் சில விளக்கங்களையும், கோரிக்கைகளையும் எடுத்துரைத்தார்:



காயல்பட்டினம் வழித்தடத்தைப் புறக்கணித்துச் செல்லும் பேருந்துகள் தொடர்பாக - கடந்த 2016 ஜூன் மாதம் முதல் குழுமத்தால் மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கைகளை விளக்கிப் பேசிய அவர், “நடப்பது என்ன?” சமூக ஊடகக் குழுமம் சிந்தித்து செயல்திட்டம் தீட்டி, ஒருங்கிணைக்கும் பணியைச் செய்து வருகிறது என்றாலும், பொதுமக்கள் அனைவரும் தொடர்ந்து ஒத்துழைத்து வருவதாலேயே இன்று எழுபது சதவிகிதப் பேருந்துகள் காயல்பட்டினம் வழித்தடத்தில் மீண்டும் இயக்கப்படுவதாகவும், இன்றளவும் காயல்பட்டினத்தைப் புறக்கணித்துச் செல்லும் பேருந்துகளைக் கண்காணிப்பதற்காக, “சமூகக் கண்காணிப்பு - Community Monitoring” முறையில் வரும் 04.01.2017. புதன்கிழமையன்று ஒரு நாள் முழுக்க 24 மணி நேரம் – சுழற்சி முறையில் பேருந்து நிலையத்தில் முகாமிட்டு, காயல்பட்டினம் வழித்தடத்தில் வந்து செல்கின்ற பேருந்துகள் கண்காணிக்கப்பட்டு, இவ்வழித்தடத்தைப் புறக்கணிக்கும் பேருந்துகள் முழுமையாக இனங்காணப்பட்டு, அதனடிப்படையில் – “நடப்பது என்ன?” சமூக ஊடகக் குழுமத்தின் சார்பில் மேல் நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாகக் கூறினார்.





“காயல்பட்டினம் வழித்தடத்தைப் பேருந்துகள் புறக்கணித்துச் செல்வதற்கு நாமும் ஒரு முக்கிய காரணமாக இருந்து வருகிறோம்... சாலை விதிகளை மதியாமை, ஒருவழிப் பாதை முறையைப் பேணாமை, இரு சக்கர - நாற்சக்கர வாகனங்களைப் பேருந்துப் போக்குவரத்திற்கு இடைஞ்சலாக முறையற்று நிறுத்துவது உள்ளிட்ட தீய பழக்கவழக்கம் நம்மிடத்தில் இருந்து வருவதே பேருந்து ஓட்டுநர்களின் அலட்சியத்திற்கான முக்கிய காரணங்களுள் ஒன்றாக உள்ளது... நம்மை நாம் சரி செய்துகொண்டால், நம் உரிமைகளை இன்னும் வலிமையுடன் கேட்டுப் பெற இயலும்...” என்று அவர் மேலும் கூறினார்.

ஒரு சில மணித்துளிகளே அவகாசம் இருந்த நிலையிலும், இரவு என்றும் பாராமல் - திரண்டு வந்து உரிமையை நிலைநாட்டியமைக்காக பொதுமக்களுக்கு அவர் நன்றி கூறியதோடு, 04.01.2017. அன்று நடைபெறவுள்ள - பேருந்துகள் சமூகக் கண்காணிப்பில் அனைவரும் ஆர்வமுடன் பங்கேற்க வருமாறும் அவர்களைக் கேட்டுக்கொண்டார்.

கள உதவி:
‘ஆசிரியர்’ S.A.N.அஹ்மத் மீராத்தம்பி
M.M.முஜாஹித் அலீ
M.A.காழி அலாவுத்தீன் (TAS)
M.W.ஹாமித் ரிஃபாய்


“நடப்பது என்ன?” சமூக ஊடகக் குழுமத்திற்காக,
தகவல்:
காயல்பட்டினத்திலிருந்து...
எஸ்.கே.ஸாலிஹ்
(செய்தி தொடர்பாளர்)


Previous News ItemNext News Item
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. Re:...
posted by VILACK SMA (Jeddah) [02 January 2017]
IP: 5.*.*.* | Comment Reference Number: 45044

[ “காயல்பட்டினம் வழித்தடத்தைப் பேருந்துகள் புறக்கணித்துச் செல்வதற்கு நாமும் ஒரு முக்கிய காரணமாக இருந்து வருகிறோம்... சாலை விதிகளை மதியாமை, ஒருவழிப் பாதை முறையைப் பேணாமை, இரு சக்கர - நாற்சக்கர வாகனங்களைப் பேருந்துப் போக்குவரத்திற்கு இடைஞ்சலாக முறையற்று நிறுத்துவது உள்ளிட்ட தீய பழக்கவழக்கம் நம்மிடத்தில் இருந்து வருவதே பேருந்து ஓட்டுநர்களின் அலட்சியத்திற்கான முக்கிய காரணங்களுள் ஒன்றாக உள்ளது... நம்மை நாம் சரி செய்துகொண்டால், நம் உரிமைகளை இன்னும் வலிமையுடன் கேட்டுப் பெற இயலும்...” என்று அவர் மேலும் கூறினார். ] C & P

காயல்பட்டினத்தை பேரூந்துகள் புறக்கணிப்பதன் உண்மையான காரணம் இதுதான் .


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
2. Re:...உறுதியான நடவடிக்கை தேவை.
posted by Abdul Gaffoor (Kayalpatnam) [02 January 2017]
IP: 163.*.*.* Japan | Comment Reference Number: 45045

முதலில் சகோதரர் ஆசிரியர் ஹுசைன் சார் அவர்களுக்கு பாராட்டுக்கள்.

மிக்க துணிச்சலுடன் பேருந்தில் இருந்து கொண்டே நடப்பது என்ன குழுமத்தை தொடர்பு கொண்டு பேருந்து குறித்த சரியான வழித்தடத்தை அறிந்து இறுதி வரை நடத்துனருடன் போராடி நம் ஊர் வழியே பேருந்தை வரச்செய்து உள்ளீர்கள்,

இதே துணிச்சல் நம் அனைத்து மக்களிடையே இருந்தால் இன்ஷா அல்லாஹ் நம் ஊர் வழியே தான் அனைத்து பேருந்துகளும் செல்லும்.

அடுத்து சகோதரர் ஸாலிஹ் காக்கா கூறியது போல் நாம் அனைவரும் சாலையில் பேருந்துகளுக்கு இடைஞ்சல் தரும்படி நம் வாகனங்களை நிறுத்தாமல் இருந்தால் கண்டிப்பாக அனைத்து பேருந்துகளும் நம் ஊர் வழியே வந்து செல்லும்.

நிறைவாக சில பேருந்து ஓட்டுனர்கள் மற்றும் நடத்துனர்கள் வேண்டுமென்றே நம் ஊரை புறக்கணிக்கிறார்கள். குறிப்பாக மதுரை மற்றும் கும்பகோணம் மண்டல பேருந்துகள் தான் அதிகம். Community Monitoring முறையில் வரும் 04.01.2017. புதன்கிழமையன்று ஒரு நாள் முழுக்க 24 மணி நேரம் – சுழற்சி முறையில் பேருந்து நிலையத்தில் முகாமிட்டு, காயல்பட்டினம் வழித்தடத்தில் வந்து செல்கின்ற பேருந்துகள் கண்காணிப்பு செய்யும் முறை மிகவும் பயனுள்ள ஒன்று. அதே நேரம் இதே முறையை நாம் ஆறுமுகநேரி-அடைகலாபுரம்-வீரபாண்டிய பட்டணம் சாலையிலும் போட்டோ மற்றும் வீடியோ பதிவுகள் மூலம் கண்காணித்து அந்த பதிவுகளை அந்த மண்டல மேலாளர்களிடம் ஒப்படைத்து அவர்களிடம் உறுதியான நடவடிக்கைக்கு வலியுறுத்தலாம்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>

முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்

பிற செய்திகள்

காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
Cathedral Road LKS Gold ParadiseFathima Jewellers
AKM JewellersFaams

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved