Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
8:24:57 PM
வெள்ளி | 19 ஏப்ரல் 2024 | துல்ஹஜ் 1723, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
04:5412:2415:2818:3319:43
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:06Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்15:09
மறைவு18:27மறைவு03:03
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
04:5505:2005:45
உச்சி
12:16
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:4819:1319:38
Go to Homepage
செய்திகள்
Previous News ItemNext News Item
செய்தி எண் (ID #) 18822
#KOTW18822
Increase Font Size Decrease Font Size
ஞாயிறு, பிப்ரவரி 19, 2017
ரேஷன் பொருட்கள் விநியோகத்திற்கான ஆணையர் எஸ்.மதுமதி IAS உடன், “நடப்பது என்ன?” நிர்வாகிகள் சென்னையில் சந்திப்பு! காயல்பட்டினம் நியாய விலைக் கடைகளில் பொதுமக்கள் சந்திக்கும் பிரச்சினைகள், திட்ட மேம்பாட்டு ஆலோசனைகள் முன்வைப்பு!!
செய்திஎஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்)
இந்த பக்கம் 4202 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (1) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 0)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}

சென்னையில், ரேஷன் பொருட்கள் விநியோகத்திற்கான ஆணையர் எஸ்.மதுமதி IAS உடன், “நடப்பது என்ன?” நிர்வாகிகள் சென்னையில் நேரில் சந்தித்து, காயல்பட்டினம் நியாய விலைக் கடைகளில் பொதுமக்கள் சந்திக்கும் பிரச்சினைகள் குறித்தும், திட்ட மேம்பாட்டு ஆலோசனைகளை உள்ளடக்கியும் கோரிக்கைகளை முன்வைத்துள்ளனர்.

சென்னையிலுள்ள - தமிழக அரசின் உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறையின் ஆணையர் எஸ்.மதுமதி IAS-ஐ, காயல்பட்டினம் “நடப்பது என்ன?” சமூக ஊடகக் குழும நிர்வாகிகள் நேரில் சந்தித்துப் பேசினர்.



காயல்பட்டினம் நகரில் ரேஷன் பொருட்களை வாங்குகையில் பொதுமக்கள் சந்திக்கும் பிரச்சினைகள், குடும்ப அட்டையில் மாற்றங்கள் மேற்கொள்வதில் சந்திக்கும் பிரச்சனைகள் ஆகியன குறித்து, பிரச்சனைகள் இதன்போது அவரிடம் எடுத்துரைக்கப்பட்டது. அனைத்தையும் கேட்டறிந்த ஆணையர் எஸ்.மதுமதி IAS, இக்கோரிக்கைகள் குறித்து விரைந்து நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார்.

ஆதார் எண்கள் இணைக்கப்படாததைக் காரணங்காட்டி ரேஷன் அட்டைகள் மீதான தடையை - ஆதார் எண் சமர்ப்பித்த பிறகு நீக்கும் அதிகாரம், வட்ட வழங்கல் அலுவலருக்கு (TALUK SUPPLY OFFICER - TSO) வழங்கப்பட்டுள்ளதாகவும், அவரை பொதுமக்கள் அணுகலாம் என்றும் அப்போது அவர் கூறினார்.

தேவையான ரேஷன் பொருட்களைத் தவிர, சோப்பு, தேயிலைத் தூள் போன்ற தனியார் பொருட்களை வாங்க ரேஷன் கடைக்காரர்கள் நிர்பந்திக்கக் கூடாது என்று கூறிய அவர், இது தொடர்பாக புகார்கள் இருப்பின் தமக்குத் தெரிவிக்கும்படி கேட்டுக்கொண்டார்.

ரேஷன் கடைகளில் வாங்கும் பொருட்களுக்கு, விரைவில் கணினி ரசீது கொடுக்கப்படவுள்ளதாகக் கூறிய அவர், எடை குறைவு பிரச்சனைக்கு, நிரந்தரத் தீர்வு காணும் முயற்சியில் தாம் ஈடுப்பட்டு வருவதாகவும் கூறினார்.

Priority House Holds (PHH) / Non Priority House Holds (NPHH) என அட்டைகள் பிரிக்கப்படுவதாக உலாவரும் தகவல் குறித்து வினவியபோது, தாமும் அத்தகவலைப் பார்த்ததாகவும் – எரிவாயு உருளை (கேஸ் சிலிண்டர்) வழங்கப்படாது என்பன போன்ற தகவல்கள் உண்மையற்றவை என்றும், புதிய சட்டம் அடிப்படையில் - ரேஷன் அட்டைகளைப் பயன்படுத்துவோர் குறித்து வருவாய்த் துறை மூலமாக சில ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

ரேஷன் பொருட்கள் விநியோகம் ஒளிவுமறைவு இல்லாத முறையில் நடைபெற - கடந்த சில மாதங்களாக தமது துறை எடுத்து வரும் முயற்சிகளை - “நடப்பது என்ன?” குழும நிர்வாகிகளிடம் ஆணையர் விரிவாக விளக்கினார்.

பொதுமக்கள், tnpds.com இணையதளம் மூலம் – கடைகளில் பொருட்கள் இருப்பு நிலை, ஒதுக்கப்பட்டுள்ள பொருட்களின் அளவு, நுகர்வோர் வாங்கியுள்ள பொருட்கள் விபரம் உட்பட பல்வேறு தகவல்களைக் காணலாம் என்று அவர் கூறினார்.

வாங்காத பொருட்கள் வாங்கப்பட்டதாகப் பதிவு செய்யப்படுவதைத் தடுக்க, தானே ஒவ்வொரு மாதமும், சீரற்ற (random) முறையில் மொபைல் எண்களைத் தேர்வு செய்து, பொதுமக்களிடம் விசாரித்து வருவதாகவும் அவர் மேலும் கூறினார்.

தனது துறை அறிமுகப்படுத்தியுள்ள செயலி (tnePDS APP) மூலம், நுகர்வோர் - தாமே - ஆதார் எண்களை இணைக்கும் வசதி, வாங்கிய பொருட்களைப் பார்வையிடும் வசதி, தற்காலிகமாக பொருட்கள் வேண்டாம் எனக் கூறும் வசதி என பல்வேறு வசதிகள் செய்யப்பட்டுள்ளதாகக் கூறிய அவர், பல்வேறு புதிய அம்சங்களை அச்செயலியில் கொண்டு வர இருப்பதாகவும் கூறியதுடன், இதன் பயனாக - பொதுமக்கள், சிற்சிறு மாற்றங்களைச் செய்ய - தாலுகா அலுவலகத்திற்கு வீணாக அலைய வேண்டியிருக்காது என்றும் தெரிவித்தார்.

“நடப்பது என்ன?” குழுமம் சார்பாக - இணையதளத்தில் இணைக்க வேண்டி - பின்வருமாறு இரு அம்சங்கள் தெரிவிக்கப்பட்டது:-

(1) ஒரு கடைக்கு ஒதுக்கப்பட்டுள்ள பொருட்கள், கடையில் உள்ள பொருட்கள் ஆகிய தகவல்களை மட்டுமே இணையதளத்தில் காண முடிகிறது. இதன் அடிப்படையில், ஒரு கடையில் அங்குள்ள பொருட்கள் இருப்பு குறித்து கேள்வி எழுப்பினால், “பொருட்கள் ஒதுக்கப்பட்டிருந்தாலும் எங்களுக்கு இன்னும் அது வந்து சேரவில்லை” என்று கூறுவதைத் தவிர்க்க, அந்தந்த கடைகளுக்கு பொருட்கள் வினியோகிக்கப்பட்டுவிட்ட (Delivery Status) நிலை குறித்த தகவலையும் இணையதளத்தில் இடம்பெறச் செய்ய வேண்டும்...

(2) ஒரு குடும்ப அட்டையோடு எந்த மொபைல் எண் இணைக்கப்பட்டுள்ளது என்பதை இணையதளத்தில் பார்க்கவே இயலவில்லை. இக்குறையைப் போக்கும் வகையில் - சில எண்களை மறைத்து (MASKING) முறையில் மொபைல் எண்ணைக் காண்பிக்க வேண்டும்...

முன்வைக்கப்பட்ட இக்கோரிக்கைகள் உறுதியாகப் பரிசீலிக்கப்பட வேண்டியவை என்றும், விரைவில் இவை குறித்து பரிசீலித்து, உரிய நடவடிக்கை மேற்கொள்வதாகவும் ஆணையர் எஸ்.மதுமதி IAS, “நடப்பது என்ன?” குழும நிர்வாகிகளிடம் தெரிவித்தார்.

ரேஷன் கடைகள் சம்பந்தமாக விழிப்புணர்வு ஏற்படுத்த “நடப்பது என்ன?” குழுமம் மேற்கொண்டு வரும் பல்வேறு முயற்சிகள் குறித்துக் கேட்டறிந்த அவர், இதற்காக தனது மனமார்ந்த வாழ்த்துக்களை இதன்போது பதிவு செய்தார்.


Previous News ItemNext News Item
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. Re:...
posted by முஹம்மது ஆதம் சுல்தான் (yanbu) [19 February 2017]
IP: 37.*.*.* Romania | Comment Reference Number: 45241

"ரேஷன் பொருட்கள் விநியோகத்திற்கான ஆணையர் எஸ்.மதுமதி IAS உடன், “நடப்பது என்ன?” நிர்வாகிகள் சென்னையில் சந்திப்பு! காயல்பட்டினம் நியாய விலைக் கடைகளில் பொதுமக்கள் சந்திக்கும் பிரச்சினைகள், திட்ட மேம்பாட்டு ஆலோசனைகள் முன்வைப்பு!"

"அரசு மருத்துவமனைக்கு அடுத்த சில நாட்களில் புதிய மருத்துவர்கள் நியமனம்: “நடப்பது என்ன?” நிர்வாகிகளிடம் சுகாதாரத் துறை அதிகாரிகள் தகவல்!"

"காயல்பட்டினம் ஆரம்ப சுகாதார நிலைய திட்டத்தின் நடப்பு நிலையைக் கேட்டும், விரைவில் நிதி ஒதுக்கக் கோரியும், “நடப்பது என்ன?” சமூக ஊடகக் குழுமம் சார்பில் சென்னையிலுள்ள இயக்குநரிடம் நேரில் மனு!"

"காயல்பட்டினத்தில் போக்குவரத்துத் துறை காவலர்களைப் பணியமர்த்த, சென்னையிலுள்ள காவல்துறை கூடுதல் தலைமை இயக்குநரிடம் (ADGP) “நடப்பது என்ன?” சமூக ஊடகக் குழுமம் சார்பில் நேரில் கோரிக்கை!"

"காயல்பட்டினத்திற்கு ‘108 ஆம்புலன்ஸ்’ வசதி கோரி, “நடப்பது என்ன?” சமூக ஊடகக் குழுமம் சார்பில் அரசு செயலர், திட்ட இயக்குநரிடம் நேரில் கோரிக்கை மனு!"

"பேருந்து 24 மணி நேர கண்காணிப்பின் அறிக்கை, “நடப்பது என்ன?” சமூக ஊடகக் குழுமம் சார்பில் போக்குவரத்துத் துறை முதன்மைச் செயலரிடம் சமர்ப்பிப்பு!"

"பேருந்து நிலையத்தில் பேருந்துகள் நுழையவும், வெளியேறவும் தனி வழி ஏற்பாடு! “நடப்பது என்ன?” முறையீட்டைத் தொடர்ந்து காவல்துறை நடவடிக்கை!"

"ஒருவழிப்பாதையில் இடையூறுகளை நீக்க நடவடிக்கை! “நடப்பது என்ன?” கோரிக்கையைத் தொடர்ந்து, மாவட்ட காவல் துணை கண்காணிப்பாளர் நேரில் உறுதி!"

கடந்த மூன்று நாட்களின் செய்தியாக நமதூருக்காக இந்த "நடப்பதென்ன குழுமம்" என்னென்ன காரியங்களில்லாம் இறங்கி செயலாற்றி வருகிறதென்பதன் பட்டியல்தான் ஒரு மூன்று நாட்கள் செய்திகளின் தொகுப்பாகும்!

நமதூர் ரேஷன் கடைகளின் விநியோக பிரச்சனை முதற்கொண்டு நம் அரசு மருத்துவமனைக்குறியதேவை, சுகாதாரம்,108 ஆம்புலன்ஸ் வசதி சேவை,மற்றும் போக்குவரத்து விழுப்புணர்ச்சி சேவை, போக்குவரத்து காவலர்களை அமர்ததுதல், போக்குவரத்து சீரமைப்புக்குரிய பாதையை தேர்வு செய்து அதை நடைமுறை படுத்துதல் போன்ற ஊர் நன்மைகளுக்குரிய காரியங்களை கோரிக்கைகள் மூலம் முன்னெடுத்து உடனேயே அதன் பலனை பலவற்றை பெற்று,

இனியும் பெறவேண்டிய முயற்சிக்ளில் இறங்கி இங்குள்ள அதிகாரிகளையும் ,தமிழக தலைநகரான சென்னையிலும் அதிகாரிகளை சந்தித்துக்கொண்டிருக்கின்ற அன்பு நெஞ்சங்களாகிய "நடப்பதென்ன" குழும சகோதரர்களே உங்களின் புண்ணியப்பணி தொடரட்டும், உங்களின் தொண்டுள்ள முயற்சிக்கு எல்லாம் வல்ல அல்லாஹ் வெற்றியையும் அதற்குரிய கூலியையும் கொடுத்தருள்வானாக ஆமீன்!

அன்பு காயல் நகர மற்றைய தொண்டுள்ளங்களே ,ஊரின் ஒட்டுமொத்த மக்களின் பிரதிநிதியாக விளங்குகின்ற பொது அமைப்பு என்று கூறும் அமைப்புகளே, நீங்கள் ஊர் நன்மைக்காக செய்த தொண்டினை இந்த ஊடகத்தின் மூலமாக மக்களுக்கு தெரிவித்தால் என்ன? நாங்களும் அறிந்து கொள்ள ஏதுவாக இருக்குமல்லவா? அதோடு எங்களின் ஒத்துழைப்பும் உண்மையாக உழைக்கும் உத்தமர்களுக்கு போய் சேர வழிவகுக்குமல்லவா?

ஒருவேளை நீங்கள் செய்தியை கொடுத்து இந்த ஊடகம் வெளியிட மறுத்ததா?அப்படியென்றால் உங்களின் ஊர்நலப்பணியினை சொல்லுங்கள் மக்களிடம்.வேறு பல ஊடகத்தின் வாயிலாகவோ அல்லது துண்டுபிரசுரத்தின் மூலமாகவோ! அல்லாஹ் அனைத்தும் அறிந்தவன்!

அன்புடன்,
முஹம்மது ஆதம் சுல்தான்!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>

முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்

பிற செய்திகள்

காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
Fathima JewellersAKM Jewellers
FaamsCathedral Road LKS Gold Paradise

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved