Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
12:23:15 AM
புதன் | 17 ஏப்ரல் 2024 | துல்ஹஜ் 1721, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
04:5412:2415:2818:3319:43
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:07Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்13:37
மறைவு18:27மறைவு01:41
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
04:5605:2105:45
உச்சி
12:17
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:4819:1319:38
Go to Homepage
செய்திகள்
Previous News ItemNext News Item
செய்தி எண் (ID #) 18899
#KOTW18899
Increase Font Size Decrease Font Size
புதன், மார்ச் 8, 2017
காயல்பட்டினம் இரண்டாம் குடிநீர் திட்டம்: முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி நெல்லையில் இன்று துவக்கி வைத்தார்! பொன்னன்குறிச்சியில் நடந்த நிகழ்ச்சியில் நகர பொதுமக்கள் பங்கேற்பு!!
செய்திஎஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்)
இந்த பக்கம் 3123 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (6) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 0)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}

காயல்பட்டினம் மக்களின் நீண்ட கால எதிர்பார்ப்பான - இரண்டாம் குடிநீர் திட்டத்தை, தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி நெல்லையில் இன்று துவக்கி வைத்தார். அதே நேரத்தில் பொன்னன்குறிச்சியில் நடந்த நிகழ்ச்சியில் காயல்பட்டினம் நகர பொதுமக்களும் பங்கேற்றுள்ளனர். இதுகுறித்து, “நடப்பது என்ன?” சமூக ஊடகக் குழுமம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்தியறிக்கை:-

இன்று - நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டையில் நடந்த விழாவில், திருநெல்வேலி மண்டலத்திற்கு உட்பட்ட திருநெல்வேலி, கன்னியாகுமரி, தூத்துக்குடி ஆகிய 3 மாவட்டங்களின் - 235 கோடியே 61 லட்ச ரூபாய் மதிப்பீட்டில் நிறைவு செய்யப்பட்டுள்ள - 1098 திட்டப்பணிகளை, தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி துவக்கி வைத்து உரையாற்றினார்.





ஏறத்தாழ 30 கோடி ரூபாய் மதிப்பிலான - காயல்பட்டினம் நகராட்சியின் இரண்டாம் குடிநீர் திட்டமும் அதில் அடங்கும். இத்திட்டத்தின் மூலம், ஸ்ரீவைகுண்டம் அருகில் உள்ள பொன்னன்குறிச்சி அருகிலிருந்து, 27 கிலோ மீட்டர் அளவுக்குப் பதிக்கப்பட்டுள்ள குழாய்கள் மூலம், காயல்பட்டினத்திற்கு நேரடியாகக் குடிநீர் கொண்டு வரப்படுகிறது.

தாமிரபரணி ஆற்றிலிருந்து காயல்பட்டினம் உயர்நிலை தொட்டிகள் வரை குடிநீர் கொண்டு வரும் பணிகள் தற்போது நிறைவுற்றுள்ளன. அப்பணிகளே - இன்று, தமிழக முதல்வரால் துவக்கி வைக்கப்பட்டுள்ளது.

திருநெல்வேலியில் அரசு விழா நடந்துகொண்டிருந்த அதே வேளையில், பொன்னன்குறிச்சியிலும் - நகராட்சி சார்பாக சிறு நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அதில், நகராட்சியில் புதிதாகப் பொறுப்பெற்றுள்ள ஆணையர் பி.பொன்னம்பலம் உட்பட பல நகராட்சி அதிகாரிகள் கலந்துகொண்டனர். மேலும், “நடப்பது என்ன?” சமூக ஊடகக் குழும நிர்வாகிகள், அங்கத்தினர்கள் உள்ளிட்ட பொதுமக்கள் சிலரும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.









இத்திட்டப்படி, நகரிலுள்ள பழைய இல்ல இணைப்புகள் (HOUSE SERVICE CONNECTIONS) அகற்றப்பட்டு, புதிய இணைப்புகள் மூலமாகக் குடிநீர் வழங்கப்படவேண்டும். இதுவரையிலும் நிறைவடையாத இப்பணிகளை வேகப்படுத்தக் கோரி, “நடப்பது என்ன?” குழுமம் சார்பாக - அரசுக்கு மனுக்கள் வழங்கப்பட்டுள்ளன.


இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Previous News ItemNext News Item
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. Re:...
posted by M.I. மூசா நெய்னா (புரைதா - சவூதி அரேபியா ) [09 March 2017]
IP: 151.*.*.* | Comment Reference Number: 45327

நமது நகர மக்களின் நெடு நாள் தேவையான 2 - ம் குடி நீர் திட்டம் மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் மூலமாக தொடங்கி வைத்ததற்கு பாராட்டுக்கள்.

பொன்னங்குறிச்சியில் நடைபெற்ற விழாவில் நகர பொதுமக்கள் கலந்து கொண்டதாக செய்தியில் குறிப்பிடபட்டுள்ளது. ஆனால் செய்தியில் இணைக்கபட்ட புகைபடங்களில் நமதூரின் முக்கிய பிரமுகர்கள் யாரும் கலந்து கொண்டதாக தெரியவில்லையே. இத்திட்டம் நிறைவேற பல வழிகளில் பாடுபட்டவர்களை பாராட்டும் விதமாக ஒரு விழா ஏற்பாடு செய்து இருக்க வேண்டும்.

மேலும் , அனைத்து கட்சி பிரமுகர்கள், குறிப்பாக இத்திட்டத்திற்கு முதலில் வித்திட்ட திராவிட முன்னேற்ற கழகம், பின்னர் இத்திட்டம் தொடர குரல் கொடுத்த முஸ்லிம் லீக், அதிமுக போன்ற கட்சி பிரமுகர்கள், முன்னால் நகராட்சி தலைவர்கள், குறிப்பாக மதிப்பிற்குரிய வாவு. அப்துர்ரஹ்மான் ஹாஜியார், மதிப்பிகுரிய சகோதரி ஆபிதா ஷேக் அவர்கள், மற்றும் நகராட்சி உறுப்பினர்கள், ஊரின் முக்கிய பிரமுகர்கள், அனைத்து ஜமாத்தின் ஒருங்கிணைப்பாக இருக்ககூடிய ஐக்கிய பேரவை நிர்வாகிகள் மற்றும் பலர் திரளாக பங்கேற்றிருந்தால் சிறப்பாக இருந்து இருக்கும்.

இவர்களை எல்லாம் புறக்கணித்ததின் நோக்கம் என்ன. முன்னால் சேர்மன் அப்துர்ரஹ்மான் ஹாஜி அவர்களும் , சகோதரி ஆபிதா ஷேக் அவர்களும் இத்திட்டம் விரைவாக நிறைவேற எவ்வளவு பாடுபட்டார்கள் என்பது எல்லோருக்கும் தெரியும்.

ஆனால் தற்போது வாட்ஸப் குழுமம் என்ற பெயரில் எங்களால் தான் இத்திட்டம் நிறைவேறியது என்று பறைசாற்றி கொண்டு இத்திட்டத்தின் முழு பலன்களையும் சொந்தம் கொண்டாடுவதை ஏற்று கொள்ளமுடியாது.

நமதூரின் பெரியவர்களின் கடின உழைப்பாலும் , முயற்சியாலும் நமதூருக்கு எத்தனையோ நல்ல பல காரியங்கள் நடைபெற்றுள்ளன. அது போல் தான் இத்திட்டமும். இதில் பலருக்கும் பங்குண்டு.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
2. குடிநீர் கட்டணம் நிலுவை உள்ளவர்களுக்கு புதிய இணைப்புகள் கொடுக்க வேண்டாம்.
posted by N.S.E.மஹ்மூது (சென்னை) [09 March 2017]
IP: 106.*.*.* India | Comment Reference Number: 45333

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்).

இத்திட்டப்படி, வீடுகளில் உள்ள பழைய இணைப்புகள் அகற்றப்பட்டு, புதிய இணைப்புகள் மூலமாகக் குடிநீர் வழங்கப்பட வேண்டுமா!!!???. - அப்படியானால் – அது நிறைவு அடைய ஒரு மகாமகம் ஆகுமே!

-------------------------------------

ஒரு வேளை பழைய இணைப்புகளை அகற்றிவிட்டு புதிய இணைப்புகள் கொடுக்கப்பட வேண்டும் என்று காண்ட்ராக்டில் இருந்தால் , அதன்படி அவர்கள் செயல்படுத்தும்போது அவற்றை, ”நேர்மையான பொதுமக்கள்” உஷாராக இருந்து கண்கானிக்க வேண்டும் - கள்ளத்தனமான இணைப்புகள் கொடுக்கப்படுவதை தடுக்க வேண்டும்.

-------------------------------------

நம் மக்கள்களிலேயே பல பிரிவுகளாக இருந்து, ஒருவருக்கொருவர் அவசியமற்ற கருத்துக்களை பதிவதில் எவரும் எவருக்கும் சளைத்தவரில்லை என்று மார்தட்டுவதை விட்டுவிட்டு , பொதுவான விசயங்களில், வீரியத்தை காட்டுவதைவிட காரியத்தை சாதிப்பதில் நேரத்தை செலவழித்தால் பயனுள்ளதாக இருக்கும்.

இதுதான் நல்ல சந்தர்ப்பம், இதைப் பயன்படுத்தி, இதற்கு முன்பு கொடுக்கப்பட்ட அத்தனை கள்ளத்தனமான குடிநீர் இணைப்புகளையும் அகற்றுவதற்கு – இந்த சந்தர்ப்பத்தை தவரவிட்டால் பிரிதொரு சந்தர்ப்பம் கிடைப்பது அரிது.

ஆகவே, எல்லாத்தரப்பினறும் ஒன்றாக செயல்பட்டு முறையின்றி கொடுக்கப்பட்ட குடிநீர் இணைப்புகளை அகற்றுங்கள் – முறையாக குடிநீர் இணைப்புகள் பெற்றவர்களுக்கு தடையின்றி குடிநீர் கிடைக்க வழி வகுங்கள்.

---------------------------------------

நகராட்சி அதிகாரிகளே!

முறையாக குடிநீர் இணைப்பு பெற்றவர்களுக்கே! புதிய இணைப்புகளை கொடுங்கள்.

மேலும் குடிநீர் கட்டணம் நிலுவை உள்ளவர்களுக்கு புதிய இணைப்புகள் கொடுக்க வேண்டாம்.

நிலுவையில் உள்ள கட்டணத்தை செலுத்தி, அந்த ரஷீது வைத்திருப்பவர்களுக்கு மட்டுமே, புதிய இணைப்பு கொடுக்கப்படும் என்பதை மக்களுக்கு முன் அறிவிப்பு செய்து, இணைப்புகளை கொடுக்க தொடங்குங்கள்.

அதை பொருட்படுத்தாமல் இருப்பவர்களுக்கு கொடுக்க வேண்டாம் – அது எவ்வளவு பெரிய மனிதராக இருந்தாலும் சரி, ஊருக்கு உபதேசம் செய்கிற என் போன்றவராக இருந்தாலும் சரி.

-------------------------------------

இந்த சந்தர்ப்பத்தை பயபடுத்தி, நீங்கள் ஒழுங்குப்படுத்தினால் நகராட்சிக்கு பல நன்மைகள் ஏற்படும் – முறையின்றி கொடுக்கப்பட்ட இணைப்புகள் இரத்தாகும் – நிலுவையில் உள்ள குடிநீர் கட்டணங்கள் முழுவதும் வசூலாகும்.

நிலுவையில் உள்ள குடிநீர் கட்டணம் ஒரிரு இலட்சங்கள் அல்ல - குறைந்தது 40 (நாற்பது) இலட்சம் ரூபாய்கள்.

எந்த ஒரு மாநகராட்சியிலும் இல்லாத அளவில் நமது நகராட்சியிலே குடிநீர் கட்டணம் பெரிய தொகையாக நிலுவையில் உள்ளது என்பதை நினைவு கூற விரும்புகிறேன்.

----------------------------------------

மக்களே!

குடிநீர் கட்டணம் மட்டும் இவ்வளவு பெரிய தொகை பாக்கியா? இதற்கெல்லாம் காரணம் இவர்தான், அவர்தான் என்றும் அவர்கள் செய்த நிர்வாகத்தின் இலட்சணம் இதுதான் என்றும் முன்னால் தலைவர்களை எல்லாம் குறை கூறிக்கொண்டிருக்க வேண்டாம்.

தலைவர்களும், உறுப்பினர்களும் கட்டணங்களை வசூலிக்கவில்லை – அரசு அலுவலர்கள்தான் கட்டணத்தை வசூலிப்பவர்கள் – அகா, ஓகோ என்று அரசு அலுவலர்களை புகழ்கிறீகளே! வசூல் செய்யப்படாமல் இருந்ததற்கு காரணம் யார்? எந்தை சிந்தியுங்கள்.

அடுத்து தலைவர்களுக்கும், உறுப்பினர்களுக்கும் கட்டணங்கள் வசூல் செய்வதின் நெறிமுறைகளை ஒழுங்குப்படுத்துவதில் பங்குண்டு அவர்கள் எல்லாம் இவ்வளவு காலமாக என்ன செய்து கொடிருந்தார்கள்? என்பதையும் உற்று நோக்கவேண்டும்.

ஒருசில உறுப்பினர்களையும் ஆகா, ஓகோ என்றும் புகழ்கிறீர்கள் – இதுவும் தவிர்க்கப்பட வேண்டும்.

கட்டணங்கள் நிலுவையிருப்பது ஒற்றை இலக்க வருடங்கள் அல்ல இரட்டை இலக்க வருடங்கள். ஆகவே கட்டண பாக்கி இருப்பதற்கு இந்த நிர்வாகம்தான் காரணம் என்றோ! இல்லை அந்த நிர்வாகம்தான் காரணம் என்றோ! யாரையும் குறிப்பிட்டு சொல்வதற்கில்லை - அனைவரும் தான் காரணம் என்பதை மக்கள் உணர வேண்டும்.

வஸ்ஸலாம்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
3. Re:...
posted by சாளை எஸ்.ஐ.ஜியாவுத்தீன் (அல்கோபர்) [09 March 2017]
IP: 51.*.*.* United Kingdom | Comment Reference Number: 45334

மாஷா அல்லாஹ்.

பார்க்க, படிக்க, செய்திகளை அறிய மிக்க சந்தோசம். எல்லாப் புகழும் வல்ல ரஹ்மானுக்கே.

காயல் கனவு திட்டங்களில் முக்கிய திட்டமான இந்த திட்டம் நிறைவு பெற ஆரம்பிக்கவும் தான் தாமதம், உடனே நான்தான் இந்த திட்டத்தை கொண்டுவந்தேன் என்று ரேஞ்சுக்கு ஆளாளுக்கு உரிமை கொண்டாடி வருகிறார்கள். பல வாரங்களாக சமூக தளங்களில் பதியப்படும் பதிவுகளை காணவே தலை சுற்றுகிறது.

மைக்செட் கட்டுனவன், சோடா உடைத்து கொடுத்தவன், கரங்களைக் கட்டி பராக்கு பார்த்தவன் எல்லாம், நான் தான் இதை கொண்டுவந்தேன் என்று CM லெவலுக்கு பீலா உடுவதை காண சகிக்கவில்லை.

ஆனால், மக்களுக்கு உண்மைகள் எல்லாம் தெரிந்து தான் உள்ளது. மக்களை ஏமாற்ற இது ஒன்றும் பழைய காலம் அல்ல.

ஏன், நாம் எல்லோரும் சேர்ந்து செய்த கூட்டு முயற்சியால் தான் இந்த திட்டம் நமக்கு கிடைத்தது என்று சொல்ல எது தடுக்கின்றது..? எல்லாம் அந்த ஷைத்தானுடைய தூண்டுதலான "ஈகோ" என்ற இரண்டு எழுத்து படுத்தும் பாடுதான்.

வல்ல அல்லாஹ், இதற்க்கு பாடுபட்ட அனைத்து நல்ல உள்ளங்களையும் அங்கீகரிப்பானாக. அவர்களுக்கு உன்னுடைய ரஹ்மத்தை வாரி வழங்குவாயாக. அனைவர்களுக்கும் பாராட்டுக்களும் நன்றிகளும்.

என்று தான் நமக்குள் ஒற்றுமை வருமோ தெரியவில்லை.

அப்புறம், ஐந்தாவது புகைப்படத்தில் வெள்ளோட்ட தண்ணீர் ஜன்னல் வழியாக பீச்சி அடிப்பதில், அது எலக்ட்ரிக் வயர், பிளக் பாக்ஸ் மீதும் பாய்ந்து செல்லுவதை கண்டதும் அதிர்ந்தது. இதற்கும் பாராட்டுக்கள்.

சாளை எஸ்.ஐ.ஜியாவுத்தீன், அல்கோபர்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
4. நெனச்சேன்!!!
posted by S.K.Salih (Kayalpatnam) [09 March 2017]
IP: 157.*.*.* Indonesia | Comment Reference Number: 45335

இச்செய்தியை வெளியிடும்போதே, அப்படத்தை நானும் சற்று கவனத்துடன் உற்று நோக்கினேன்.

“கண்டிப்பாக, சஊதியிலிருந்து ஒரு ஜீவன் வரும்... கரெக்ட்டா இத மட்டும் கண்டுபிடிச்சி கமெண்ட் அடிக்கும்” என்று எண்ணியவாறே படத்தையும், செய்தியையும் வெளியிட்டேன்.

அந்த ஜீ(யா)வன் நான் நெனச்ச மாதிரியே பண்ணிடிச்சி!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
5. Re:... இரண்டாம் குடிநீர் திட்டம். யா அல்லாஹ்!
posted by சாளை:M.A.K முஹம்மத் இப்ராஹீம் ஸுஃபி. (கோழிக்கோடு.) [10 March 2017]
IP: 157.*.*.* Indonesia | Comment Reference Number: 45340

யா அல்லாஹ்! சங்கைக்குரியவனே! எல்லாப்புகழும் உனக்கே சாரும்.

யா அல்லாஹ் !

உன் உவப்பை நாடி, எங்கள் ஊருக்கு இரண்டாம் குடிநீர் திட்டம் நிறைவேற காரணமாக இருந்து,

இதற்கெதிரிறான பல தடைகளையும் உடைத்தெறிந்து அதற்காக முயற்சித்து யாரெல்லாம் உழைத்தார்களோ அவர்களுக்கும் , கியாமநாள்வரையிலான அவர்களின் சந்ததிகளுக்கும் பாவங்களை மன்னிப்பாயாக!

இம்மையிலும் மறுமையிலும் அவர்களுடைய மனம் மகிழ்வடையும் விதமான வாழ்க்கையை கொடுத்து அருள்புரிவாயாக!

யா அல்லாஹ்! இரண்டாம் குடிநீர் திட்டத்தின் மூலம் வரக்கூடிய தண்ணீரை நாங்கள் தங்கு தடையின்றி அனுபவிக்க உதவி புரிவாயாக

யா அல்லாஹ் !

கல்லபைப் லைன் கொடுத்த அதிகாரிகளை நீ பார்த்துக் கொள்வாயாக!

புதியபைப் லைன் மூலமாக எந்த வித கோல்மால்களும் இல்லாமல் கிடைக்கச் செய்வாயாக!

ஆமீன்!ஆமீன்!! யாரப்பில் ஆலமீன்!!!

**************************

நம் காயலர்களுக்கு மன மகிழ்வானஇச்செய்தியை வெளியிட்டுள்ள நடப்பது என்ன? சமூக ஊடகத்திற்கு எனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கின்றேன்.

மேலும் நீங்கள் நமதூருக்கு மறுக்கப்படும் உரிமைகளை பெற்றுத் தரும் விதமாக அரசாங்கத்திடம் முறையான பல முயற்சிகளை செய்து அதன் மூலம் பல நன்மைகள் நமதூருக்கு கிடைக்க செய்ததை, கிடைக்கச்செய்து கொண்டிருப்பதையும், தக்க ஆதாரங்களுடன் ஊடக வலைதளங்களில் காணக் கிடைக்கின்றது. அல்ஹம்துலில்லாஹ்! ஜஸாகுமுல்லாஹுக்ஹைரா!

அதே சமயம் நீங்கள் செய்யும் முயற்சியின் மூலம் நமதூருக்கு கிடைக்கும் நன்மைகளையெல்லாம் "எந்த ஒரு முயற்சியும் செய்யாத ஒரு சிறு கூட்டம் தாங்கள் செய்ததை போல் தகுந்த ஆதாரங்கள் இல்லாமல் மக்களிடத்தில் பரப்பும் நிலையை என்னவென்று சொல்வது.?

உண்மையில் நமதூருக்கு ஆக்கபூர்மான செயல்களை அவர்களும் செய்தால் வரவேற்கத்தக்கது. பாராட்டத்தக்கது. நன்மைக்காண ஆரோக்கியமான போட்டி என்று சொல்லலாம்.

மாறாக ஊர் நலனுக்காக ஆக்கப்பூர்வமான ஒரு முயற்சியும் செய்யாத, உழவுக்கு உதவாத அழகு காளைகளாய் , நேர்ந்துவிடப்பட்ட கோவில் காளைகளை போல் உருண்டு திறன்டு உலா வந்து கொண்டிருக்கும் சிலர் தாங்கள் செய்யாதையெல்லாம்

_நாங்க தான் செஞ்சோம்_
_நாங்க தான் செஞ்சோம்_
என்றுஊளை இடுவதை கேட்கும் போது கீழ் உள்ள கதைதான் ஞாபகம் வருது.

ஒரு பிச்சைகாரன் காலை நேரத்தில் சாலையோர மரத்தடியில் ஒரு துணியை விரித்து விட்டு அருகில் மல்லாக்கப் படுத்து குறட்டை விட்டு அயர்ந்து தூங்கினானாம்.

மாலையில் விழித்தபோது போர்வையில் கிடைத்த சில்லறைகளையெல்லாம் பொறுக்கி அல்லிக்கொண்டு அவன் மனைவிக்கு இரவுக்கான உணவும் பூவும் ,ஹல்வாவும் வாங்கிக் கொண்டு அதை மனைவியிடம் கொடுத்து விட்டு, எஞ்சிய சில்லறைகளையும் தன் மனையிடம் கொடுத்து விட்டு வழமை போல் நாளை என் வங்கிக் கணக்கில் சேர்த்து விடு என்று சொல்லிவிட்டு...

“இது நான் மிக கடினமாக உழைத்து சம்பாதித்தது என்றானாம்*

பின்பு தன் துணைவியிடம்
சரி சரி பேசிக் கொண்டிருக்க நேரமில்லை .
இன்று காலையிலிருந்து மாலைவரை

*நான் மிக மிக கடினமாக உழைத்ததால் என் உடல் அழுப்பாக இருக்கின்றது.*

எனவே நான் குளிக்க வெந்நீர் வை என்றானாம்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
6. Re:...
posted by Meera Sahib (kayalpatnam) [12 March 2017]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 45343

நல்ல செய்தி ! யார் காரணமாக இருந்தாலும் அது பாராட்டுக்கு உரியது. நமது ஊருக்கு நன்மை பயக்கும் செய்தி . இனி நமக்கு தண்ணீர் பஞ்சமே இல்லை என பிரார்த்திப்போம் . தண்ணீர் கட்டண பாக்கி இவ்வளவு அதிகமாக இருப்பதை தவிர்க்க இணையவழி செலுத்துவதை ஏற்ப்பாடு செய்து தந்தால் மக்களுக்கும் சிரமம் இல்லாமல் இருக்கும். நகராட்சிக்கும் நல்லது.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>

முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்

பிற செய்திகள்

காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
Cathedral Road LKS Gold ParadiseFathima Jewellers
AKM JewellersFaams

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved