Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
11:11:56 AM
வெள்ளி | 29 மார்ச் 2024 | துல்ஹஜ் 1702, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
05:0812:3015:4118:3419:42
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:16Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்21:42
மறைவு18:28மறைவு08:48
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
05:0705:3105:55
உச்சி
12:22
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:4919:1319:37
Go to Homepage
செய்திகள்
Previous News ItemNext News Item
செய்தி எண் (ID #) 19037
#KOTW19037
Increase Font Size Decrease Font Size
திங்கள், ஏப்ரல் 10, 2017
இளைஞர் ஐக்கிய முன்னணியின் முன்னாள் நிர்வாகி காலமானார்! ஏப். 11 காலை 11.30 மணிக்கு நல்லடக்கம்!!
செய்திஎஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்)
இந்த பக்கம் 2737 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (9) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 0)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}

காயல்பட்டினம் இளைஞர் ஐக்கிய முன்னணி (YUF)யின் முன்னாள் நிர்வாகி, தீவுத் தெருவைச் சேர்ந்த சொளுக்கு எஸ்.எஸ்.எம்.யூஸுஃப் ஸாஹிப் (சாபு) இன்று 13.00 மணியளவில் காலமானார். அவருக்கு வயது 78. அன்னார்,

மர்ஹூம் சொளுக்கு செய்யித் முஹம்மத் ஸாஹிப் அவர்களின் மகனும்,

மர்ஹூம் அல்லாமா நஹ்வீ செ.இ.இஸ்ஹாக் லெப்பை ஆலிம் அவர்களின் மருமகனாரும்,

மர்ஹூம் ஹாஃபிழ் சொளுக்கு எஸ்.எஸ்.எம்.ஷெய்க் அலீ, மர்ஹூம் சொளுக்கு எஸ்.எஸ்.எம்.செய்யித் அஹ்மத் கபீர், காயல்பட்டினம் முஸ்லிம் ஐக்கியப் பேரவை நிர்வாகி சொளுக்கு எஸ்.எஸ்.எம்.முஹம்மத் இஸ்மாஈல் (முத்து ஹாஜி) (தொடர்பு எண்: +91 94878 26539), சொளுக்கு எஸ்.எஸ்.எம்.செய்யித் அஹ்மத் (தொடர்பு எண்: +91 70922 72492), சொளுக்கு எஸ்.எஸ்.எம்.செய்யித் (தொடர்பு எண்: +91 94428 13733), பெரிய குத்பா பள்ளியின் கத்தீப் மவ்லவீ ஹாஃபிழ் எச்.ஏ.அஹ்மத் அப்துல் காதிர் மஹ்ழரீ (தொடர்பு எண்: +91 98421 82780), சொளுக்கு எஸ்.எம்.செய்யித் அஹ்மத் கபீர் ஆகியோரின் சகோதரரும்,

சொளுக்கு எஸ்.ஒய்.எஸ்.செய்யித் முஹம்மத் ஸாஹிப் உடைய (தொடர்பு எண்: +971 50 650 8485) தந்தையும்,

குருவித்துறைப் பள்ளி & மஜ்லிஸுல் புகாரி ஷரீஃப் தலைவர் நஹ்வீ இ.எஸ்.செய்யித் முஹம்மத் புகாரீ ஆலிம், மர்ஹூம் நஹ்வீ இ.எஸ்.செய்யித் இஸ்மாஈல், மவ்லவீ நஹ்வீ ஐ.எல்.செய்யித் அஹ்மத் முத்துவாப்பா ஃபாஸீ (தொடர்பு எண்: +91 97882 41429), ஹாமிதிய்யா மார்க்கக் கல்வி நிறுவனத்தின் முதல்வர் நஹ்வீ ஐ.எல்.நூருல் ஹக் நுஸ்கீ (தொடர்பு எண்: +91 8437 72864) ஆகியோரின் மச்சானும்,

மர்ஹூம் சொளுக்கு எஸ்.எம்.ஏ.முஹம்மத் ஸலீம், குருவித்துறைப் பள்ளியின் இணைச் செயலர் கே.எம்.செய்யித் அஹ்மத் (தொடர்பு எண்: +91 94434 82800), மர்ஹூம் எஸ்.ஏ.முஹம்மத் இஸ்மாஈல் காதிரீ ஆகியோரின் சகலையும்,

ஹாஃபிழ் சொளுக்கு எஸ்.எம்.எஸ்.முஹ்யித்தீன் அப்துல் காதிர் தவ்ஹீத் (தொடர்பு எண்: +91 99439 33914), சொளுக்கு எஸ்.எம்.எஸ்.இஸ்ஹாக் லெப்பை, சொளுக்கு எஸ்.எம்.எஸ்.ஷெய்க் அப்துல் காதிர் (தொடர்பு எண்: +91 96887 27145), ஹாஃபிழ் எம்.ஐ.கே.செய்யித் அபூதாஹிர் ஆகியோரின் பெரிய தந்தையும்,

நஹ்வீ எஸ்.ஐ.இஸ்ஹாக் லெப்பை, எஸ்.என்.சுல்தான் அப்துல் காதிர், மவ்லவீ ஹாஃபிழ் நஹ்வீ எஸ்.ஏ.இஸ்ஹாக் லெப்பை மஹ்ழரீ ஆகியோரின் மாமாவுமாவார்.

அன்னாரின் ஜனாஸா, நாளை (ஏப்ரல் 11 செவ்வாய்க்கிழமை) 11.30 மணியளவில், குருவித்துறைப் பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படவுள்ளது.

சிறந்த விளையாட்டு வீரரும், பொதுநல ஆர்வலருமான இவர் சர்வதேச நாடுகளின் அரிய தபால் தலைகள், நாணயங்கள், பணத்தாள்கள், பழங்காலப் பெருமக்களின் அரிய புகைப்படங்களைச் சேமித்தும், பல்வேறு போட்டிகளில் அவற்றைக் காட்சிப்படுத்தி தொடராகப் பரிசுகள் பல பெற்றும் வந்தமை குறிப்பிடத்தக்கது.

தகவல்:
சொளுக்கு S.S.M.முஹம்மத் இஸ்மாஈல் (முத்து ஹாஜி)


[விரிவான விபரம் & படம் இணைக்கப்பட்டுள்ளது @ 08:08 / 11.04.2017.]


Previous News ItemNext News Item
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. Condolence
posted by Hameed MN (Hong Kong) [10 April 2017]
IP: 61.*.*.* Hong Kong | Comment Reference Number: 45452

Inna Lillaahi O Inna Ilaihi Rajioon ... May almighty Allah forgive all his sin and place him in the Jannathul Firdhouse , Aameen...


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
2. Re:... இளைஞர் ஐக்கிய முன்னணியின் முன்னாள் நிர்வாகி காலமானார்!
posted by சாளை:M.A.K முஹம்மத் இப்ராஹீம் ஸுஃபி. (கோழிக்கோடு.) [10 April 2017]
IP: 137.*.*.* United States | Comment Reference Number: 45453

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹு.

யா அல்லாஹ்!
இவரை மன்னிப்பாயாக!
இவருக்கு அருள் புரிவாயாக!
இவரது தவறுகளை அலட்சியப்படுத்துவாயாக!
இவர்தங்கும் இடத்தை மதிப்பு மிக்கதாக ஆக்குவாயாக!
இவர் நுழையும் இடத்தை விசாலமானதாக
ஆக்குவாயாக!
இவரை தண்ணீராலும், பனிக்கட்டியாலும்,
ஆலங்கட்டியாலும் கழுகுவாயாக!
வெண்மையான ஆடையை அழுக்கிலிருந்து சுத்தம் செய்வதைப்போல்
இவரை குற்றத்திலிருந்து சுத்தம் செய்வாயாக!
இங்கிருக்கும் வீட்டைவிட சிறந்த வீட்டையும், சிறந்த குடும்பத்தையும்
கொடுப்பாயாக!
யா ரஹ்மானே !
இந்த துஆ வை ஏற்றுக் கொள்வாயாக!.

சாளைM.A.K.முஹம்மத் இப்ராஹீம் ஸுஃபி,
கேரள மாநிலம்,
கோழிக்கோடு,
2017 ஏப்ரல் 10.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
3. Re:...குண்டான் தடி முருங்கை தடி சிறைச் சாலை பூஞ்சோலை
posted by mackie noohuthambi (colombo) [10 April 2017]
IP: 175.*.*.* Sri Lanka | Comment Reference Number: 45454

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.

சாபு காக்கா அவர்களை இலங்கையின் கிழக்கு மாவட்டமான மட்டக்களப்பு கல்முனை காத்தான்குடி, வாழைச்சேனை ஏறாவூர் இப்படி அடுக்கி கொண்டே போகலாம் அவர்களை அறியாதவர்கள் இல்லை அங்கெல்லாம் அவர்கள் கால் படாத இடம் இல்லை. தமிழரசு கட்சி இலங்கையில் வலுவான தமிழர் தன் மானம் காக்கும் இயக்கமாக தமிழர்தந்தை செல்வ நாயகம் அவர்கள் அந்த கட்சிக்கு தலைமை ஏற்று நடந்த காலத்திலேயே தமிழ் தமிழ் என்று தமிழுக்காக தமிழ் மக்களுக்காக குரல் கொடுத்தபோது நமது காயல்பட்டினத்து மக்கள் தலைவர் சாபு காக்கா அவர்கள் செல்வாவுக்கு துணையாக இறங்கி போராட்டம் புரிந்தவர். ராஜதுரை என்ற மற்றொரு தமிழ் தலைவருக்கு வலது கையாக இருந்தவர்.

மட்டக்களப்பில் சிங்கள ஆதிக்கத்துக்கும் அடக்குமுறைக்கும் எதிராக நடந்த போராட்டத்தின்போது தற்செயலாக நானும் SK மச்சான் அவர்களும் மட்டக்களப்பு சென்றிருந்த பொது அவர்களுடன் சேர்ந்து உண்ணாவிரதம் இருந்த ஞாபகம்.

குண்டாந்தடி முருங்கை தடி
சிறை சாலை பூஞ்சோலை
உடல் மண்ணுக்கு உயிர் தமிழுக்கு
இவைதான் அன்றைய போராட்டத்தின் எழுச்சி மிக்க கோஷங்கள்.

தனது ஆதரவுக் கடிதம் எழுதி இரத்தத்தில் கையெழுத்து போட்டு தமிழரசு கட்சிக்கு அனுப்பி[ தனக்கு தமிழ் மீதுள்ள தீரா காதலை வெளிப்படுத்தி இருந்தார்கள். உறவினர்களிடமிருந்து எதிர்ப்பு வந்தபோதும் தான் கொண்ட கொள்கையில் விடாப் பிடியாக இருந்தார்கள்.

இன்றும் கூட நமதூர் லெப்பை தம்பி சாலையில் இயங்கி வரும் வீனஸ் ஸ்டூடியோ வுக்கு போனால் அவர்களது சிறுவயது முதல் பெரிய வயதுவரை உள்ள புகைப் பட தொகுப்பை அங்கு சுவரில் காணலாம்.

புகாரி ஷரீபில் உரையாற்றிய எங்கள் பாசத்துக்குரிய தந்தை அவர்களின் ஒலி நாடாவும் சாவன்னா ஆலிம் ஐதுரூஸ் ஆலிம் செய்தாலிம்ஸா போன்ற பெருந்தகைகள் ஒலி நாடாவும் அவர்களிடம் இருந்தது. மலரும் நினைவுகளாக அவற்றை போட்டு காட்டுவார்கள். ஆனால் அவற்றை அவர்களிடமிருந்து யாரும் கவர்ந்து செல்ல முடியாது.

மர்ஹூம் அவர்களின் நல்லமல்களை அல்லாஹ் பொருந்திக் கொள்வானாக அவர்கள் பாவங்களை மன்னித்தருள்வானாக அவர்களது மண்ணறையை விசாலமாக்குவானாக அவர்களுக்கு மேலான சுவர்க்கவாழ்வை கொடுத்தருள்வானாக. தம்பி செய்யித் முஹம்மது சாஹிப் ஹாபிஸ் அவர்களுக்கும் மற்றும் குடும்பத்தார் அனைவருக்கும் அல்லாஹ் நல்ல பொறுமையை கொடுத்தருள்வானாக ஆமீன் .

VA ITHAA ASAABATHUM MUSEEBATHUN QAALOO INNAA LILLAAHI VA INNAA ILAIHI RAAJIVOON. ULAAYIKA ALAIHIM SALAWAATHUM MIN RABBIHIM VA RAHMAA...

தங்கள் துயரத்தில் பங்கு கொள்ளும்

மக்கி நூஹுத்தம்பி & மக்கி ஆலிம் குடும்பத்தினர்கள்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
4. Re:...
posted by S.H.SEYED IBRAHIM (Riyadh. K.S.A.) [10 April 2017]
IP: 78.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 45455

அஸ்ஸலாமு அலைக்கும்."

இன்ன லில்லாஹி வா இன்னா இலைஹி ராஜஹீவூன்.!!!

எல்லாம் வல்ல அல்லாஹ், மர்ஹூம் சாபு மாமாஅவர்களின் நற்செயல்களை ஏற்றும், பாவப் பிழைகளை மன்னித்தும், மண்ணறை - மறுமை வாழ்வுகளை ஒளிமயமாக்கி வைத்து மேலான சுவனபதியான ஜன்னதுல் பிர்தௌஸ் எனும் அழகிய பூங்காவில் நபிமார்களுடன் அமரச் செய்வானாகவும் ஆமீன்! ஆமீன்! யா ரப்பல் ஆலமீன்!!!

மர்ஹூம் அவர்களின் பிரிவால் துயருற்றிருக்கும் குடும்பத்தினர்கள், உறவினர்களுக்கு இவ்விழப்பைத் தாங்கிடும் பொறுமையை கொடுத்தருள்வானாக - ஆமீன்!

அத்துடன், அவர்களின் சஹோதரகள், சொளுக்கு எஸ்.எஸ்.எம்.முஹம்மத் இஸ்மாஈல் (முத்து ஹாஜி) சொளுக்கு எஸ்.எஸ்.எம்.செய்யித் அஹ்மத் ஹாஜி, சொளுக்கு எஸ்.எஸ்.எம்.செய்யித் ஹாஜி, அன்பு மகன். மச்சான், நண்பர். மவ்லவீ சொளுக்கு எஸ்.ஒய்.எஸ்.செய்யித் முஹம்மத் ஸாஹிப், மற்றும், மவ்லவீ நஹ்வீ ஐ.எல்.செய்யித் அஹ்மத் முத்துவாப்பா ஃபாஸீ, ஹாமிதிய்யா மார்க்கக் கல்வி நிறுவனத்தின் எங்கள் கண்ணியத்துக்குரிய முதல்வர். நஹ்வீ ஐ.எல்.நூருல் ஹக் நுஸ்கீ, அனைத்து குடும்ப உறவினரிகளுக்கும், எனது சார்பாகவும், எங்களது குடும்பத்தின் சார்பாகவும், ஆழ்ந்த இரங்கலையும், நற்ஸலாத்தினையும் "அஸ்ஸலாமு அலைக்கும்." இதன் மூலம் தெரிவிக்கிறோம்.

மிக்க துயரமுடன்,

சூப்பர் இப்ராஹிம். எஸ். எச். + குடும்பத்தினர், குளம். ஷேய்க் அப்துல் காதிர். கே. எஸ். எச். நஹ்வி. ஹாபிஸ். செய்து சதக்கத்துல்லாஹ். எம். எம். இப்ராஹிம் ஜெமீல். கே. மவ்லவி. ஓ.எல். நூஹு சிராஜுதீன், ஆலிம்.

ரியாத். சவூதி அரேபியா.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
5. Re:.Condolence..
posted by S.D.Segu Abdul Cader (Quede Millath Nagar) [11 April 2017]
IP: 59.*.*.* India | Comment Reference Number: 45456

CONDOLENCE Assalamu alaikum wrwb. INNALILLAHI WA INNA ILAIHI RAJIOON. إن لِلَّهِ مَا أَخَذَ وَلَهُ مَا أَعْطَى، وَكُلُّ شَيْءٍ عِنْدَهُ بِأَجَلٍ مُسَمًّى، فَلْتَصْبِرْ وَلْتَحْتَسِبْ நிச்சயமாக அல்லாஹ் நமக்கு கொடுத்ததும், மீண்டும் எடுத்துக்கொண்டதும் அவனுக்கு சொந்தமானதே!! மேலும் எல்லாவற்றுக்கும் அவனிடம் குறிப்பிட்ட ஒரு தவணையுண்டு, எனவே நன்மை நாடி பொருமையாக இருக்க வேண்டும். ஆதாரம் :- புகாரி -7377 எல்லாம் வல்ல அல்லாஹ் அவர்களின் பிழைகளை மன்னித்து மேலான பிர்தவ்சுல் அஃலா எனும் சுவன பதியை தந்தருள் புரிவானாக. ஆமீன் . அவர்களின் பிரிவால் துயருற்றிருக்கும் குடும்பத்தார், உற்றார் - உறவினர் அனைவருக்கும் வல்ல அல்லாஹ் மேலான பொறுமையை நல்குவானாக ஆமீன். வஸ்ஸலாம். May Allah make his/her barzakh life smooth for him/her, forgive his/her sins, enter him/her into Jannatul Firdous and grant sabr for the family. Aameen! Wassalam. S.D.Segu Abdul Cader. Quede Millath Nagar.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
6. எங்கள் குடும்பத் தலைவர்!
posted by S.K.Salih (Kayalpatnam) [11 April 2017]
IP: 157.*.*.* Indonesia | Comment Reference Number: 45457

எங்கள் குடும்பத் தலைவரை இழந்திருக்கிறோம்...

சிறந்த விளையாட்டு வீரர்... எப்போது வீட்டுக்கு வந்தாலும் அவர்களின் நகைச்சுவையும், உரத்த குரலிலான சிரிப்புப் பேச்சும் வீட்டையே அதிரச் செய்யும்.

என் தாயாரின் தாயாரும் (உம்மம்மா), இவர்களும் உடன்பிறப்புகள். உம்மம்மா ஹயாத்தோடு இருந்த காலகட்டத்தில், அவர்களைச் சந்திக்காமல் ஒரு நாள் கூட இவர்களுக்கு நகராது. இவர்களைப் போலவே, இவர்களது காக்கா மர்ஹூம் எஸ்.எஸ்.எம்.கபீர் அப்புமாமா அவர்களும்.

என் உம்மம்மாவின் வஃபாத்தையடுத்து, இவர்களின் வரத்தும் குறைந்துபோனது... நாட்கள் செல்லச் செல்ல இவ்விருவரும் வீட்டிலேயே இருக்கும் நிலையும் ஏற்பட்டது.

என்றாலும், எனக்கு வாய்ப்பு கிடைத்தபோதெல்லாம் இவ்விருவரையும் வீடு சென்று சந்திப்பதை வழமையாகக் கொண்டிருந்தேன். தற்போது மறைந்துள்ள சாபு மாமா (அப்பு மாமா) அவர்களை அடிக்கடி சந்திக்கும் வாய்ப்பையும் பெற்றேன்தான்! என்றாலும், அவர்களின் இப்பிரிவு, “ஒவ்வொரு நாளும் அவர்களைச் சந்தித்திருக்கலாமோ...?” என என்னை ஏங்க வைத்துவிட்டது.

பழங்கால அரிய பெரியவர்களின் புகைப்படங்களை இவர்கள் சேர்த்து வைத்துள்ள பாங்கே அலாதி. என் தந்தை ஹயாத்தாக இருந்த காலத்தில் இருவருக்கும் நன்றாக ஓடும். பேசி முடித்து இவர்கள் விடைபெற்ற பிறகு, அவர்களுக்குக் காண்பிக்க வைத்திருந்த பழைய படங்களை ஒவ்வொன்றாக ஆராய்வார்கள் என் வாப்பா... நிறைவில், “தூக்கிட்டுப் போயிட்டாரா...? தூக்கிட்டுப் போயிட்டாரா...?” என்று புலம்புவார்கள். பிறகு என்றாவது நேரில் கண்டு கேட்டால், அவர்களுக்கே உரிய வெடிச்சிரிப்பை பதிலாகத் தருவார்கள் சாபு மாமா...

அதேபோன்று, அவர்கள் வைத்திருக்கும் பழைய படங்களை என் தந்தையும் “சுட்டு”ச் செல்வது வழமை.

“நா ஊருல உள்ள கள்ளனுக்கெல்லாம் கூட இந்தளவுக்கு பயந்ததில்லை எஸ்கே... நீ வந்துட்டாத்தான் பக்கு பக்குன்னு அடிக்கிது...” என்பார்கள். இதைக் கேட்டு என் தந்தையும் சிரிப்பார்கள். “நான் சொல்ல வேண்டியதை நீங்க சொல்றீங்களாக்கும்?” என மறுதலிப்பார்கள் என் தந்தை அவர்கள்.

வல்ல அல்லாஹ்வின் கட்டளைக்கிணங்க மர்ஹூம் (அப்பு மாமா) அவர்கள் தமது இவ்வுலக வாழ்வை முடித்துக்கொண்டார்கள்.

அவர்களும், நாமும் நம் வாழ்நாளில் அறிந்தோ, அறியாமலோ செய்த பாவப்பிழைகள் அனைத்தையும் கருணையுள்ள அல்லாஹ் தன் அளப்பெரும் கிருபை கொண்டு பொறுத்தருளி, ஜன்னத்துல் ஃபிர்தவ்ஸ் எனும் உயர்சுவனத்தில், நபிமார் - ஸித்தீக்கீன் - ஷுஹதா - ஸாலிஹீனுடன் இணைந்திருக்கும் பாக்கியத்தை அவர்களுக்கும், நமக்கும் நற்கூலியாக வழங்கியருள்வானாக...

மர்ஹூம் அவர்களது பிரிவால் துயரிலிருக்கும் எனதன்பு சாச்சப்பா எஸ்.ஒய்.எஸ்.செய்யித் முஹம்மத் ஸாஹிப் ஆலிம் மஹ்ழரீ உள்ளிட்ட குடும்பத்தார் யாவருக்கும் அல்லாஹ் ‘ஸப்ரன் ஜமீலா’ எனும் அழகிய பொறுமையை வழங்கியருள்வானாக... ஆமீன்.

அனைவருக்கும் அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காதுஹ்.

துஆக்களுடன்,
எஸ்.கே.ஸாலிஹ்
மற்றும்
மர்ஹூம் எஸ்.கே.ஷாஹுல் ஹமீத் குடும்பத்தார்
கொச்சியார் தெரு, காயல்பட்டினம்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
7. Re:...
posted by THAJUL ANAM (MADINA MUNAWARA) [11 April 2017]
IP: 5.*.*.* Europe | Comment Reference Number: 45458

எல்லாம் வல்ல அல்லாஹ், மர்ஹூம் அவர்களின் நற்செயல்களை ஏற்றும், பாவப் பிழைகளை மன்னித்தும், மண்ணறை - மறுமை வாழ்வுகளை ஒளிமயமாக்கி வைத்து மேலான சுவனபதியான ஜன்னதுல் பிர்தௌஸ் எனும் அழகிய பூங்காவில் நபிமார்களுடன் அமரச் செய்வானாகவும் ஆமீன்.

மர்ஹூம் அவர்களின் பிரிவால் துயருற்றிருக்கும் குடும்பத்தினர்கள், உறவினர்களுக்கு இவ்விழப்பைத் தாங்கிடும் பொறுமையை கொடுத்தருள்வானாக - ஆமீன்.

தாஜுல் அனாம்
மதீனா முனவரா


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
8. أللهم اغفر له وارحمه
posted by M.S.Kaja Mahlari (Singapore) [12 April 2017]
IP: 118.*.*.* China | Comment Reference Number: 45459

பாசத்திற்குரிய எனது அருமை தாய் மாமா அல்ஹாஜ் யூஸுப் சாஹிப் (சாபு) அவர்களின் பிரிவு எங்களையெல்லாம் மிகவும் கவலைக்குள்ளாக்கியது . இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.

மிகவும் ஒரு சிறந்த சமூக சேவையாளர். இளைனர் ஐக்கிய முன்னணி எனும் ஒரு சிறந்த பொதுசேவை நிறுவனம் உருவாக அவர்களின் பங்கு மகத்தானது.

நமது முஹல்லாவில் உண்டான குருவித்துரைப் பள்ளி, புகாரிஸ் சரீப் ,ஹாமிதிய்யா ,ஈக்கியப்பா தைக்கா என அனைத்திலும் அவர்களின் பொதுசேவை பங்கு என்றேண்டும் நினைவு கூறத் தக்கது.

சிறந்த விளையாட்டு வீரர்... எப்போது வீட்டுக்கு வந்தாலும் அவர்களின் நகைச்சுவையும், உரத்த குரலிலான சிரிப்புப் பேச்சும் வீட்டையே அதிரச் செய்யும். எல்லா உறவினர் வீடுகளுக்கும் முறை வைத்து வருகை தந்து குடும்ப உறவை மிகவும் பேணிகாத்து வந்தார்கள்.

பழங்கால அரிய பெரியவர்களின் புகைப்படங்களை இவர்கள் சேர்த்து வைத்துள்ள பாங்கே அலாதி.

நான் ஊருக்கு போகும்போதும், திரும்பி வரும்போதும் அவர்களை சந்தித்து விட்டுதான் வருவேன். அப்போதெல்லாம் பல நாகளின் நாணயங்கள், நோட்டுகள் இவைகள் அனுப்பிவை என்பார்கள். அதைப் போல் நானும் அனுப்பிவைத்து அவர்களின் இந்த ஆர்வத்தில் பங்கேற்றுள்ளேன்.

பழைய காலத்து பெரியோர்கள் ,குடும்ப பாரம்பரிய போட்டாக்கள் அனைத்தையும் மிகச் சிறப்பாக சேர்த்து வைத்துள்ளார்கள். ஒவ்வொரு ஆல்பமாக காண்பித்து அது யார் ? என்ன ? என்ற அணைத்து விபரங்களையும் சொல்வார்கள்.

வல்ல அல்லாஹ்வின் கட்டளைக்கிணங்க மர்ஹூம் (மாமா) அவர்கள் தமது இவ்வுலக வாழ்வை முடித்துக்கொண்டார்கள்.

மர்ஹூம் அவர்களது பிரிவால் துயரிலிருக்கும் எனதன்பு மச்சான் எஸ்.ஒய்.எஸ்.செய்யித் முஹம்மத் ஸாஹிப் ஆலிம் மஹ்ழரீ, அருமை மாமி உள்ளிட்ட குடும்பத்தார் யாவருக்கும் அல்லாஹ் ‘ஸப்ரன் ஜமீலா’ எனும் அழகிய பொறுமையை வழங்கியருள்வானாக...

உங்கள் அனைவருக்கும் எனது சார்பாகவும், எனது குடும்பத்தார்கள் சார்பாகவும் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்.

அவர்களும், நாமும் நம் வாழ்நாளில் அறிந்தோ, அறியாமலோ செய்த பாவப்பிழைகள் அனைத்தையும் கருணையுள்ள அல்லாஹ் தன் அளப்பெரும் கிருபை கொண்டு பொறுத்தருளி, ஜன்னத்துல் ஃபிர்தவ்ஸ் எனும் உயர்சுவனத்தில், நபிமார் - ஸித்தீக்கீன் - ஷுஹதா - ஸாலிஹீனுடன் இணைந்திருக்கும் பாக்கியத்தை அவர்களுக்கும், நமக்கும் நற்கூலியாக வழங்கியருள்வானாக... நமது நாயகம் (ஸல் லல்லாஹு அலைஹி வ ஸல்லம் ) அவர்களின் சபாஅத் எனும் பரிந்துரையை அவர்களுக்கும் நம் அனைவருக்கும் வல்ல நாயன் வழங்குவானாக !

அனைவருக்கும் அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காதுஹ்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
9. إنـاّ لله وانـاّ اليــه راجـعـــون
posted by YAHYA MOHIADEEN (dubai) [16 April 2017]
IP: 86.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 45467

يَا أَيَّتُهَا النَّفْسُ الْمُطْمَئِنَّةُ ارْجِعِي إِلَىٰ رَبِّكِ رَاضِيَةً مَّرْضِيَّةً فَادْخُلِي فِي عِبَادِي وَادْخُلِي جَنَّتِي

(அந்நாளில் நல்லடியார்களை நோக்கி) "திருப்தியடைந்த ஆத்மாவே! நீ உன் இறைவன் பக்கம் செல்! அவனைக் கொண்டு நீ திருப்தியடை! உன்னைப் பற்றி அவன் திருப்தியடைந்திருக்கின்றான்" (என்றும்) "நீ என்னுடைய நல்லடியார்களில் சேர்ந்து, என்னுடைய சுவனபதியிலும் நீ நுழைந்துவிடு" (என்றும் கூறுவான்).

أللهم اغفر له وارحمه واٰنس الله وحشته ونور الله ضريحه وتقبل الله من حسناتنا وحسناته وجاوز الله عن سيآتنا وسيآته وغفر الله ذنوبنا وذنوبه وجمع الله بيننا وبينه في جنات النعيم وجعله مع المتقين بحرمة حبيبنا سبدنا محمد صلى الله عليه وآله وصحبه وسلم...

‎اَللّهُمَّ اغْفِرْ لَهُ وَارْحَمْهُ وَعَافِهِ وَاعْفُ عَنْهُ وَأَكْرِمْ نُزُلَهُ وَوَسِّعْ مُدْخَلَهُ وَاغْسِلْهُ بِالْمَاءِ وَالثَّلْجِ وَالْبَرَدِ وَنَقِّهِ مِنْ الْخَطَايَا كَمَا نَقَّيْتَ الثَّوْبَ الأَبْيَضَ مِنَ الدَّنَسِ وَأَبْدِلْهُ دَارًا خَيْرًا مِنْ دَارِهِ وَأَهْلاً خَيْرًا مِنْ أَهْلِهِ وَزَوْجًا خَيْرًا مِنْ زَوْجِهِ وَأَدْخِلْهُ الْجَنَّةَ وَأَعِذْهُ مِنْ عَذَابِ الْقَبْر

"எல்லா ஆன்மாக்களும் மரணத்தை சுவைத்தே தீரும்" என்ற இறைவாக்கின் படி நடந்த இக்கருமத்திற்கு நாம் பொறுமையை மேற்கொள்ள கடமைபட்டிருக்கிறோம்.

எல்லாம் வல்ல அல்லாஹ் ரப்புல் ஆலமீன், மறைந்த இந்நல்லடியாரை பொருந்திக்கொள்வானாக, அன்னாரது பாவங்களை மன்னித்து, அவன் கிருபையைக்கொண்டு மேலான சுவனபதியில் வீற்றிருக்கச் செய்வானாக.

மர்ஹூம் அவர்களை இழந்து வாடும் குடும்பத்தினர் அனைவருக்கும், அல்லாஹ் அவனது மேலான பொறுமையை வழங்குவானாக ஆமீன்.

யஹ்யா முஹியித்தீன்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>

முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்

பிற செய்திகள்

காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
AKM JewellersFaams
Cathedral Road LKS Gold ParadiseFathima Jewellers

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved