Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
10:08:15 AM
சனி | 20 ஏப்ரல் 2024 | துல்ஹஜ் 1724, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
04:5212:2315:3018:3319:43
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:05Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்15:52
மறைவு18:27மறைவு03:40
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
04:5405:1905:44
உச்சி
12:16
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:4819:1319:38
Go to Homepage
செய்திகள்
Previous News ItemNext News Item
செய்தி எண் (ID #) 21079
#KOTW21079
Increase Font Size Decrease Font Size
திங்கள், நவம்பர் 5, 2018
(பாகம் 1) நாம் ஏன் வரி செலுத்த வேண்டும்? மும்பை உயர்நீதிமன்ற நீதிபதி மக்களுக்குச் சொன்ன அறிவுரை! “மெகா | நடப்பது என்ன?” தகவலறிக்கை!!
செய்திஎஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்)
இந்த பக்கம் 1347 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (1) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 0)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}

அரசுக்கு நாம் வரி செலுத்த வேண்டியதன் அவசியத்தை விளக்கி, மும்பை உயர்நீதிமன்ற நீதிபதி பொதுமக்களுக்குச் சொன்ன அறிவுரைத் தகவல்களை உள்ளடக்கி, காயல்பட்டினம் மக்கள் உரிமை நிலைநாட்டல் மற்றும் வழிகாட்டு அமைப்பு – மெகா | “நடப்பது என்ன?” சமூக ஊடகக் குழுமம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள தகவலறிக்கை:-

பிப்ரவரி 2016 இல் - மும்பை உயர்நீதிமன்றத்தின் நாக்பூர் கிளை முன்பு ஒரு வழக்கு விசாரணைக்கு வந்தது. பலகோடி ரூபாய் ஊழல் சம்பந்தப்பட்ட வழக்கு அது. அந்த வழக்கு விபரத்தை பார்வையிட்ட நீதிபதி அருண் சவுதரி அதிர்ச்சியுற்றார்.

அந்த அதிர்ச்சியின் வெளிப்பாடாக, பல்வேறு கருத்துக்களை திறந்த நீதிமன்றத்தில் நீதிபதி அன்றைய தினம் பதிவு செய்தார்.

அவற்றின் சாராம்சம்:

// ஊழலை எதிர்த்து, அரசாங்கங்களுக்கு எதிராக - பொதுமக்கள் ஒன்றிணைந்து குரல் கொடுக்கவேண்டும்

// வரி செலுத்தும் பொது மக்கள், கடந்த பல ஆண்டுகளாக கடுமையான வருத்தத்தில் உள்ளார்கள்

// ஊழல் என்பது பல தலைகள் கொண்ட அசுரன்

// மக்களின் கடுமையான அதிருப்தியை அரசாங்கங்கள் உணர வேண்டும்

// அரசாங்கங்கள் விளையாடவா பொது மக்கள் வரிசெலுத்துகிறார்கள்?

// எவ்வாறு மக்களின் வரிப்பணம் சூறையாடப்படுகிறது என்பதை காணும்போது அதிர்ச்சியாகவுள்ளது

// இந்த நிலை தொடர்ந்தால், ஒத்துழையாமை இயக்கம் மூலம் பொது மக்கள் வரி செலுத்த மறுக்க வேண்டும்

நீதிபதி அருண் சவுதரியின் கருத்துக்கள் - நாடு முழுவதும் பொருந்தக்கூடியவை. ஏன் - நாட்டின் தென்கோடியில் அமைந்துள்ள காயல்பட்டினத்திற்கும் பொருந்தக்கூடியவை.

https://timesofindia.indiatimes.com/city/nagpur/Dont-pay-taxes-if-government-fails-to-curb-corruption-HC/articleshow/50826888.cms

இச்சிறு நகராட்சியில், ஆளும் கட்சி / எதிர் கட்சி என்ற எந்த பாகுபாடும் இல்லாமல், அரசு அதிகாரிகள் / ஒப்பந்ததார்களுடனான கூட்டணியில், எவ்வாறெல்லாம் - மக்கள் வரிப்பணம் சூறையாடப்பட்டது / சூறையாடப்படுகிறது என்பதற்கு நாம் அனைவரும் சாட்சி.

காயல்பட்டினம் நகராட்சியில் அரங்கேறிய மோசடிகள் குறித்து - இன்றளவும் - பல வழக்குகள் விசாரணையில் உள்ளன.

ஊழலை கண்காணிக்க வேண்டிய / கட்டுப்படுத்த வேண்டிய அனைத்து அமைப்புகளையும் வழு இழக்க செய்த அரசாங்கம், உள்ளாட்சி மன்றங்களில் மக்கள் பிரதிநிதிகள் இல்லாத சூழலை பயன்படுத்தி - புதிய வரிகளை அமல்படுத்துகிறது; ஏற்கனவே செலுத்தப்படும் வரிகளை கடுமையான அளவுக்கு உயர்த்துகிறது.

அவர்கள் கூறும் காரணம்?

வரி மூலம்தான் அரசாங்கத்திற்கு வருமானம் வருகிறது. அந்த வருமானம் வந்தால்தான் - மக்கள் பணி செய்ய இயலும்.

உண்மைதான்.

ஆனால் - ஊழல் மூலமாக சுரண்டப்படும் சுமார் 30 சதவீத மக்கள் வரிப்பணத்தை பாதுகாக்க அரசாங்கங்கள் என்ன நடவடிக்கை எடுத்தன?

அந்த வரிப்பணம் சூறையாடப்படாமல் - கஜானாவில் இருந்தால், புதிய வரிகள் அறிமுகம் செய்ய / உள்ள வரிகளை உயர்த்த அவசியம் ஏற்படுமா?



அடுத்தடுத்த பாகங்களில் - காயல்பட்டினம் நகராட்சியை உதாரணமாக எடுத்துக்கொண்டு - எவ்வாறு மக்கள் வரிப்பணம் வீண் விரையம் செய்யப்படுகிறது, அதனை தடுத்தாலே புதிதாக எந்த வரியும் அறிமுகம் செய்ய அவசியமில்லை; வரிகளை உயர்த்த வேண்டிய தேவையில்லை என்பதை விரிவாக - இறைவன் நாடினால் - காண்போம்.

[தொடரும்]

இவண்,
நிர்வாகிகள்,
நடப்பது என்ன? சமூக ஊடகக் குழுமம்.
[மக்கள் உரிமை நிலைநாட்டல் மற்றும் வழிகாட்டு அமைப்பின் (MEGA) சமூக ஊடகப்பிரிவு; அரசு பதிவு எண்: 75/2016; தூத்துக்குடி மாவட்டம்]

[பதிவு: நவம்பர் 4, 2018; 4:30 pm]
[#NEPR/2018110402]


இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Previous News ItemNext News Item
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. Re:...ஒத்துழையாமை இயக்கம்
posted by mackie noohuthambi (colombo) [05 November 2018]
IP: 175.*.*.* Sri Lanka | Comment Reference Number: 46303

நீதிபதி அவர்கள் கூறியுள்ளது நூற்றுக்கு நூறு உண்மை. ஆனால் மத்திய அரசும் மாநில அரசும் கூட்டு சேர்ந்து கொண்டு அல்லது தனி தனியாக அடிக்கும் கொள்ளைகளை எதிர்க்க கட்சி தலைவர்கள் அன்றாடம் சொல்லி கொண்டே இருக்கிறார்கள். மகாத்மா காந்தி அவர்கள் ஒத்துழையாமை இயக்கம் வரிகொடாமை இயக்கம் நடத்தியபோது அன்றைய மக்களுக்கு இருந்த ஆர்வம் கவலை இன்று மக்களிடையே இல்லை.

ஒருவர் பொது வெளியிலே தவறு செய்த போது அதை இன்னொரு நேர்மையானவர் கண்டு மனம் வெந்து போனாராம். அவர் சிறுநீர் கழித்தபோது சிறுநீர் இரத்தமாக சென்றதாம். அடுத்தநாளும் இதே போன்று நடப்பதை பார்த்து விட்டு மனம் வெதும்பி போனாராம்., அப்போது சிறுநீர் மஞ்சளாக போனதாம். மூன்றாம் நாளும் இதே தவறை பார்த்து விட்டு இது சர்வ சாதாரணம் என்ற எண்ணம் அவருக்கு ஏற்பட்டது இப்போது அவர் சிறுநீர் கழித்தபோது வழக்கமான நிறத்தில் சிறுநீர் கழிந்ததாம்.

நமது ஊழல் அரசுகளுக்கும் நமது மனங்களுக்கு இது பொருந்தி போகிறது. ஓட்டுக்கு நோட்டு நோட்டுக்கு ஓட்டு என்ற சூத்திரம் வெகுவாக பரவி அது திருமங்கலம் சூத்திரம் திருநெல்வேலி சூத்திரம் ஆர்கே நகர் சூத்திரம் என்று ஜேஜே என்று ஓடிக் கொண்டிருக்கும் இந்த நேரத்தில் ஒத்துழையாமை இயக்கம் பற்றி பேசிக் கொண்டிருக்கிறோம். இந்த வருடத்தின் ஜோக் என்று இதை எடுத்துக் கொள்வதா அல்லது நீதிபதிகள் பேசுவதையும் அவர்கள் செயல்பாடுகளையும் பார்த்து நீதி தேவன் மயக்கம் என்று எடுத்துக் கொள்வதா...ஒன்றுமே புரியவில்லை...

அல்லாஹ்வின் பள்ளியிலே சென்று அங்கிருந்த உண்டியலை உடைத்து பணத்தை கொள்ளையடித்து விட்டு செல்கிறார்கள். கோயிலுக்கு சென்று சாமி கும்பிட்டுவிட்டு அங்கிருக்கும் கடவுள் சிலையையே திருத்தி சென்று பல கோடிக்கு விற்றுவிட்டு அமைதியாக இருக்கிறார்கள்..இறைபக்தி இறை அச்சம் எல்லாம் அருகிவிட்ட ஒரு நாட்டில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.

கோயிலிலே குழப்பம் விளைவித்தேன் கோயில் கூடாது என்பதற்காக அல்ல கோயில் கொடியவர்கள் கூடாரம் ஆகி விடக் கூடாது என்பதற்காக.. பூசாரியை தாக்கினேன் அவன் பக்தன் என்பதற்காக அல்ல பக்தி பகல் வேஷமாகி விடக் கூடாது என்பதற்காக...

கலைஞரின் வைர வரிகள் ஞாபகத்துக்கு வருகிறது.

திருடனாய் பார்த்து திருந்தா விட்டால் திருட்டை ஒழிக்க முடியாது....


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>

முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்

பிற செய்திகள்

காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
Fathima JewellersAKM Jewellers
FaamsCathedral Road LKS Gold Paradise

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved