Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
8:48:33 AM
வெள்ளி | 26 ஏப்ரல் 2024 | துல்ஹஜ் 1730, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
04:5012:2115:3118:3219:44
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:03Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்20:32
மறைவு18:27மறைவு07:32
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
04:5105:1605:42
உச்சி
12:15
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:4919:1419:39
Go to Homepage
செய்திகள்
Previous News ItemNext News Item
செய்தி எண் (ID #) 4874
#KOTW4874
Increase Font Size Decrease Font Size
சனி, அக்டோபர் 9, 2010
காயல்பட்டினம் மின்வாரிய அதிகாரி மீது YUF குற்றச்சாட்டு! உயரதிகாரியிடம் நேரில் முறையிட்டனர்!!
செய்திஎஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்)
இந்த பக்கம் 3295 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (6) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 0)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}

காயல்பட்டினம் மின்வாரிய அலுவலகத்தில் இளநிலை பொறியாளராகப் பணிபுரியும் முருகன் என்பவர் மின் இணைப்பு விஷயத்தில் பொதுமக்களை தேவையற்று அலைக்கழிப்பதாக, காயல்பட்டினம் இளைஞர் ஐக்கிய முன்னணி (YUF) சார்பில் மின்வாரிய உதவி செயற்பொறியாளர் ஜெயப்பிரகாசத்திடம் முறையிடப்பட்டது.

இளைஞர் ஐக்கிய முன்னணி சார்பில் ஏற்கனவே முன்வைக்கப்பட்ட கோரிக்கையின் அடிப்படையில் நேரில் விசாரிப்பதற்காக, மின்வாரிய உதவி செயற்பொறியாளர் ஜெயப்பிரகாசம், காயல்பட்டினம் மின்வாரிய அலுவலகத்திற்கு வருகை தந்தார்.



அவரிடம் குற்றச்சாட்டுகளை முறையிடுவதற்காக, காயல்பட்டினம் இளைஞர் ஐக்கிய முன்னணி சார்பில் அதன் செயலர் எஸ்.ஏ.கே.முஹ்யித்தீன் அப்துல் காதிர் தலைமையில் சங்க நிர்வாகிகளும், காயல்பட்டினம் நகரின் பல்வேறு பகுதிகளைச் சார்ந்த பொதுமக்களும் திரண்டு சென்றனர்.



காயல்பட்டினம் மின்வாரிய இளநிலை பொறியாளர் முருகன் குறித்து நேரில் அவர்கள் தெரிவித்த குற்றச்சாட்டுகளைக் கேட்டறிந்த உதவி செயற்பொறியாளர் ஜெயப்பிரகாசம், மாவட்ட மின்வாரிய அதிகாரியின் முன்னிலையில் இன்னும் ஒரு வார காலத்திற்குள் மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடத்த தாம் ஏற்பாடு செய்யப்போவதாகவும், அப்போது பொதுமக்கள் அனைவரும் தங்கள் குற்றச்சாட்டுக்களை அவரிடம் முறையிடலாம் என்றும் தெரிவித்ததையடுத்து அவர்கள் கலைந்து சென்றனர்.

பின்னர், இளைஞர் ஐக்கிய முன்னணி செயலாளர் எஸ்.ஏ.கே.முஹ்யித்தீன் அப்துல் காதிர் நம்மிடம் தெரிவித்ததாவது:-

காயல்பட்டினம் மின்வாரிய அலுவலகத்தில் இளநிலை பொறியாளராகப் பணியாற்றும் திரு.முருகன் என்பவர் மக்கள் துறையை தன் சொந்தத் துறையாக நினைத்து, மின் நுகர்வோரிடமும், புதிய மின் இணைப்பு கோருவோரிடமும் தம் விருப்பப்படி, மின்வாரியாத்தில் இல்லாத புதுப்புது சட்டங்களைக் கூறி, அரசுக்கும், மின் வாரியத்திற்கும் தேவையற்ற அவப்பெயரையும், பொதுமக்களுக்கு பெரும் இடையூறையும் ஏற்படுத்தி வருகிறார்.

புதிய மின் இணைப்பு கேட்டு மனு செய்தால், குறிப்பிட்ட நபர் நேரில் வர வேண்டும் என்று கூறுகிறார். புதிய மின் இணைப்பு விண்ணப்பத்தில் வீட்டுத் தீர்வை நகல் மற்றும் சோதனைப் படிவத்தை இணைத்தாலே போதுமானது என்றிருக்க, இந்த மாநிலத்திலேயே இல்லாத நடைமுறையாக, வீட்டு வரைபடம் மற்றும் பத்திர நகலை இணைக்க வேண்டும் என்று கூறுகிறார். வீட்டுத் தீர்வை செலுத்திய ரசீதின் நகலை அதிகாரம் பெற்ற அதிகாரியிடம் கையொப்பம் வாங்கிக் கொடுத்தாலும் ஏற்காமல், அசல் வீட்டுத் தீர்வை ரசீதுதான் வேண்டும் என்று கூறி மக்களை சிரமப்படுத்துகிறார்.

புதிய இணைப்பு கோரியவர் ஊரில் இல்லாத நேரத்தில் உறவினர்களை அனுப்பி வைத்தால், “உனக்கு எவ்வளவு கமிஷன்?” என்று அனைவர் முன்னிலையிலும் கேவலமாகப் பேசுகிறார். அதே நேரத்தில் அவருக்கு வேண்டப்பட்டவர்கள் வந்தால் எந்தவித விசாரணையுமின்றி அவர்களின் மனுவை உடனடியாகப் பெற்றுக் கொள்கிறார்.

இது மட்டுமின்றி, மின்சார மீட்டர் இடமாற்றம் செய்தல், தற்காலிக மின் இணைப்பு பெறுதல், தற்காலிகமாக மின் இணைப்பைத் துண்டித்தல் போன்ற தேவைகளுக்காக செல்லும் மக்களை, மின் வாரியத்திற்கு சிறிதும் சம்பந்தமேயில்லாத சட்டங்களையெல்லாம் கூறி மிகுந்த சிரமப்படுத்துவதுடன், வேண்டுமென்றே அவர்களின் மனுக்கள் மீதான நடவடிக்கைகளை காலதாமதம் செய்து, அலுவலகத்தில் தினமும் பிரச்சினைகளை ஏற்படுத்துவது இவரது வாடிக்கையாகிவிட்டது.

பதிமூன்றாயிரம் மின் இணைப்புகளைக் கொண்ட காயல்பட்டினத்தில், அவர்களின் நலனைக் கருத்தில் கொள்ளாமல், ஒரு தனியார் தொழிற்சாலை நிர்வாகத்திற்கு சார்பாக அவர் நடந்து வருகிறார்.

இந்த ஊர் மக்கள் நான்கு வருடங்களாக இவர் மூலம் வேதனைப்பட்டது போதும். இனியும் பொதுமக்கள் அவசியமின்றி வேதனைப்படுவதை எங்களால் பார்த்துக்கொண்டிருக்க முடியாது என்ற காரணத்தாலேயே இக்குற்றச்சாட்டுகளை மேலதிகாரியிடம் முன்வைத்துள்ளோம்.

அவர்கள் தெரிவித்தபடி குறித்த காலத்தில் மக்கள் குறைதீர்ப்புக் கூட்டம் நடத்தி, துறை நடவடிக்கை மூலம் தீர்வு காண முயலாத பட்சத்தில், தமிழக மின்வாரியத்துறை அமைச்சர் மற்றும் தமிழக முதல்வரின் கவனத்திற்கு இக்குற்றச்சாட்டை வலுவாகக் கொண்டு செல்ல முடிவு செய்துள்ளோம்.


இவ்வாறு அவர் தெரிவித்தார்.


Previous News ItemNext News Item
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. take action
posted by syed (kayalpatnam) [09 October 2010]
IP: 119.*.*.* China | Comment Reference Number: 462

better to take action against this man.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
2. Give Him Chance.
posted by Mahmood Seyed Mohamed (Kingdom Saudi Arabia) [09 October 2010]
IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 463

DON'T TAKE ANY ACTION AGAINST TO HIM. GIVE HIM CHANCE TO CHANGE HIS ATTITUED AND GIVE HIM WARNINIG ALSO.IF NOT CHANGE HIS ATTITUE IN FUTURE, THAN TAKE THE ACTION AGAINST TO HIM.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
3. eb junior
posted by hyder (colombo) [09 October 2010]
IP: 112.*.*.* Sri Lanka | Comment Reference Number: 465

take action.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
4. Sad news
posted by Thai Nadu Sayna (Bangkok ) [10 October 2010]
IP: 58.*.*.* Thailand | Comment Reference Number: 473

Mr.Murugan is nice and gentelman, i cant belive this, He never ever to take commisson or lanjam anyone, he need full documentation and then he give the new connection,

I cant belive this news, once again pls investigate abt this,
boc our kalay perons collect commission from the house owner and apply the connection,
I Mr.Murugan have lot of Records with him,
I think he have lot of fake evidances,
If mr.murugan subbmit that records to higher officer is problems for our kalaylties,


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
5. Distinction between sincerity and harassment
posted by Mohamed Ibrahim (Bangalore) [11 October 2010]
IP: 199.*.*.* United States | Comment Reference Number: 483

The mentioned officer may be sincere but he should draw line between sincerity and harassment. My sister is one of the victims. She applied for temporary disconnection of power supply at her home two months back for old building demolition. Since then Mr.Murugan has been dragging the application till today with no success despite all documents have been submitted.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
6. Take the action against him is the Right activity
posted by Mahmood (mahmood.my@gmail.com) [11 October 2010]
IP: 14.*.*.* India | Comment Reference Number: 488

I f we will leave him like this all the department peoples will do the same things, so people will suffer ,so this is the right time to take the action against him


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>

முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்

பிற செய்திகள்

காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
Fathima JewellersAKM Jewellers
FaamsCathedral Road LKS Gold Paradise

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved