Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
1:50:02 PM
சனி | 20 ஏப்ரல் 2024 | துல்ஹஜ் 1724, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
04:5212:2315:3018:3319:43
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:05Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்15:52
மறைவு18:27மறைவு03:40
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
04:5405:1905:44
உச்சி
12:16
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:4819:1319:38
Go to Homepage
செய்திகள்
Previous News ItemNext News Item
செய்தி எண் (ID #) 4879
#KOTW4879
Increase Font Size Decrease Font Size
ஞாயிறு, அக்டோபர் 10, 2010
பொதுச்சேவைகளில் கணவருக்கு உறுதுணையாயிருங்கள்! பொதுக்குழுக் கூட்டத்தில் மகளிருக்கு சிங்கை கா.ந.மன்றத் தலைவர் அறிவுரை!!
செய்திஎஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்)
இந்த பக்கம் 3402 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (2) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 0)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}

பொதுச்சேவைகளில் தத்தம் கணவருக்கு மனைவியர் உறுதுணையாயிருந்தால், அவர்களால் நகரில் பல நற்பணிகள் நடைபெறும் என்று சிங்கப்பூர் காயல் நல மன்ற பொதுக்கூட்டத்தில், அதன் தலைவர் ஹாஜி பாளையம் முஹம்மத் ஹஸன் தெரிவித்தார்.

கூட்ட நிகழ்வுகள் குறித்து, அம்மன்றத்தின் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கை பின்வருமாறு:-

சிங்கப்பூர் காயல் நல மன்றத்தின் பொதுக்குழுக் கூட்டம் மற்றும் குடும்ப ஒன்றுகூடல் நிகழ்வுகள், 09.10.2010 அன்று மாலை 07.00 மணிக்கு, சிங்கப்பூர் செந்தோஸா பாலவன் கடற்கரையில் நடைபெற்றது.

முன்னதாக, ரம்மியமான அன்றைய மாலைப்பொழுதை கைப்பந்து, கால்பந்து விளையாட்டுக்களுடன் மன்ற உறுப்பினர்கள் உற்சாகமாகக் கழித்தனர்.













பின்னர் துவங்கிய கூட்டத்திற்கு முனைவர் முஹம்மத் லெப்பை தலைமை தாங்கினார். எஸ்.டி.செய்யித் முஹ்யித்தீன் கிராஅத் ஓதி கூட்டத்தைத் துவக்கிவைத்தார்.



மவ்லவீ ஹாஃபிழ் எஸ்.எம்.எஸ்.உமர் ரிழ்வானுல்லாஹ் அனைவரையும் வரவேற்றுப் பேசியதோடு, பிரார்த்தனையின் முக்கியத்துவம் என்ற தலைப்பில் சிற்றுரையும் வழங்கினார். பின்னர் மன்றத்தின் புதிய உறுப்பினர்கள் அனைத்து உறுப்பினர்களுக்கும் அறிமுகம் செய்யப்பட்டனர்.



இரங்கல் தீர்மானம்:
அண்மையில் காலமான, சிங்கப்பூர் அரசின் மதியுரை அமைச்சர் லீ க்வான் யூ-வின் மனைவியும், சிங்கப்பூர் பிரதமர் லீ ஷியாங் லூங்கின் தாயாருமான திருமதி க்வா ஜியோக் சூ-வின் மறைவிற்கு இரங்கல் தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

அதனைத் தொடர்ந்து மன்றத் தலைவர் ஹாஜி பாளையம் முஹம்மத் ஹஸன் பின்வருமாறு சில விஷயங்களை இக்கூட்டத்தில் பகிர்ந்துகொண்டார்:-

உண்டியல் மூலம் நன்கொடை சேகரிப்பு, காயல்பட்டினம்.காம் வலைதளத்தில் செய்திகள் மற்றும் புகைப்படங்களைப் பதிவு செய்வதன் நோக்கம் உள்ளிட்ட - 01.10.2010 அன்று நடைபெற்ற செயற்குழுக் கூட்டத்தில் விவாதிக்கப்பட்ட அம்சங்கள் குறித்து விளக்கிப் பேசினார்.

உண்டியல் வசூல் - மக்கள் கருத்துக்கு நன்றி;:
சிங்கப்பூர் காயல் நல மன்றத்தின் அந்த செயற்குழு செய்தியைப் பார்த்த மக்கள் பாராட்டித் தெரிவித்துள்ள கருத்துக்களை விவரித்துப் பேசிய அவர், அனைத்து உறுப்பினர்களின் கூட்டுமுயற்சியாலேயே இவற்றை சாதிக்க முடிந்தது என்றும், பாராட்டு தெரிவித்த அனைவருக்கும் தாம் மனமார்ந்த நன்றியைத் தெரிவிப்பதாகவும் தெரிவித்தார்.

பொதுச்சேவைகளில் கணவர்களுக்கு ஊக்கமளியுங்கள்!
தலைவர் தொடர்ந்து உரையாற்றுகையில், சமூகத்திற்கு பயனுள்ள நற்சேவைகளை தொய்வின்றி தொடர்ந்து ஊக்கத்துடனும், உற்சாகத்துடனும் ஆற்றிடும் பொருட்டு, மன்றத்தால் நடத்தப்படும் அனைத்து ஆலோசனைக் கூட்டங்களிலும் அது சம்பந்தப்பட்ட உறுப்பினர்கள் தவறாமல் பங்கேற்க வேண்டியது மிகவும் அவசியம் என்றார்.

மன்றத்தின் கூட்டங்களில் கலந்துகொள்வதற்கு தமது கணவர்களை அனுப்பும் வேலைகளை பெண்கள் ஆர்வத்துடன் செய்துகொடுக்க வேண்டும் என்றும், ஒரு மனைவியாக பொதுச்சேவைகளில் அவர்களை உற்சாகப்படுத்துவதன் மூலம் நம் சமுதாயத்திற்கான அவர்களின் பங்களிப்பை மிகுந்த சக்தியும், வீரியமும் மிக்கதாக ஆக்க பெண்களாலேயே இயலும் என்றார்.

அவ்வாறு அவர்களை ஊக்கப்படுத்துவதால், அப்பொதுச் சேவைகளில் இறைவனால் தம் கணவருக்கு வழங்கப்படும் அதே நற்கூலிகளை அவர்களுக்குச் சமமாக அவர்களின் மனைவியரும் பெற்றுக்கொள்ளலாம் என்றும், வல்ல அல்லாஹ் நம் மன்ற உறுப்பினர்களுக்கு சமூகப் பணிகளில் தேவைப்படும் அனைத்து ஒத்துழைப்புகளையும் நிறைவாக வழங்கிட வேண்டும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

புதிய தலைவர்:
மன்றத்தின் வருடாந்திர பொதுக்குழுக் கூட்டத்தின்போது, அடுத்த தலைவராக தற்போதைய செயலர் ரஷீத் ஜமானையும், செயலராக தற்போதைய துணைச் செயலர் மொகுதூம் முஹம்மதையும் நியமிப்பது குறித்த தனது விருப்பத்தைத் தெரிவித்த மன்றத் தலைவர், போட்டியின்றி அவ்விருவரையும் தேர்ந்தெடுப்பது குறித்து உறுப்பினர்கள் கருத்து தெரிவிக்கக் கோரினார்.

அனைத்து உறுப்பினர்களும் ஏகமனதாக அக்கருத்தை ஆமோதித்தனர். அவ்வாறு அவர்கள் பொறுப்புகளில் நியமிக்கப்படுகையில், அவர்களுக்குத் தேவையான அனைத்து ஒத்துழைப்புகளையும் நமது மன்ற உறுப்பினர்களும், நமது காயலர்களும் நிச்சயம் வழங்குவர் என்று தலைவர் தெரிவித்தார்.

கூட்ட நிகழ்வுகள்:
கடந்த செயற்குழுவின்போது விவாதித்து முடிவெடுக்கப்பட்ட அம்சங்கள் குறித்து மன்றச் செயலாளர் ரஷீத் ஜமான் அனைவருக்கும் விவரித்தார்.

மன்றத்தின் வரவு-செலவு கணக்கறிக்கையை இக்கூட்டத்தில் சமர்ப்பித்த மன்றப் பொருளாளர் எஸ்.எச்.அன்ஸாரீ, வரும் 2010ஆம் ஆண்டு டிசம்பர் வரையிலான மாத சந்தா தொகைகளை உறுப்பினர்கள் இயன்றளவு விரைவாக செலுத்தி ஒத்துழைக்குமாறு கேட்டுக் கொண்டார்.

காயலர்களிடமிருந்து உதவி கோரி மன்றத்தால் பெறப்பட்ட மனுக்கள் குறித்து மன்ற துணைச் செயலர் மொகுதூம் முஹம்மத் விவரித்தார். பரிசீலனைக்குப் பின், அவற்றுள் சில விண்ணப்பங்கள் ஏற்கப்பட்டன.

அத்தியாவசிய சமையல் பொருளுதவி:
வரும் ஹஜ் பெருநாளை முன்னிட்டு, நலிவுற்ற காயலர் குடும்பங்களுக்கு அரிசி, எண்ணெய், சர்க்கரை உட்பட 23 சமையல் பொருட்களடங்கிய பொதிகளை துல்ஹஜ் முதல் நாளன்றே வழங்கிட தீர்மானிக்கப்பட்டது.

வருடாந்திர பொதுக்குழு:
மன்றத்தின் வருடாந்திர பொதுக்குழுக் கூட்டம் இன்ஷாஅல்லாஹ் வரும் 26.03.2011 அன்று நடத்தப்படும் என்றும், 01.04.2011 முதல் 31.03.2013 வரையுள்ள பருவத்திற்கான மன்றத்தின் புதிய செயற்குழு உறுப்பினர்கள் அக்கூட்டத்தின்போது தேர்வு செய்யப்படுவர் என்றும் தீர்மானிக்கப்பட்டது.

மன்றத்தின் பொதுச் சேவைகளில் ஓரங்கமாக, சிங்கப்பூர் மட்டார் சாலையிலுள்ள அனாதை நிலையத்திற்குச் சென்று உதவிப்பொருட்கள் வழங்குவதென தீர்மானிக்கப்பட்டது.

வேலைவாய்ப்பைத் தேடும் பொருட்டு தகுதியுள்ள ஒரு காயலரை சிங்கப்பூருக்கு வரவழைக்க தீர்மானிக்கப்பட்டது. அவர்களின் கல்வித்தகுதி, பணியனுபவம், குடும்ப பொருளாதாரச் சூழல் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு அந்நபர் தேர்வு செய்யப்படுவார் எனவும், தேர்வு செய்யப்படும் அந்நபருக்கு தகுந்த வேலைவாய்ப்பு கிடைக்கும் வரை அவரது உணவு மற்றும் தங்குமிட ஏற்பாடுகளுக்கான செலவுகளை மன்றம் பொறுப்பேற்றுக்கொள்ளும் என்றும் தீர்மானிக்கப்பட்டதோடு, தகுதியும் விருப்பமுமுள்ள காயலர்கள் kwasingapore@hotmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்குத் தொடர்புகொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டது.

விவாதிக்க வேறு அம்சங்கள் இல்லாத நிலையில், ஹாஃபிழ் அஹ்மத் துஆ இறைஞ்ச, ஸலவாத்துடன் கூட்டம் நிறைவுற்றது.

கூட்டம் நிறைவுற்றதும், புது மணமகனும், மன்ற உறுப்பினருமான ஜவஹர் இஸ்மாயில் மற்றும் குடும்பத்தார் அனுசரணையில் உறுப்பினர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தார் அனைவருக்கும் விருந்தோம்பல் நடைபெற்றது. அனைத்து உறுப்பினர்களும், புது மணமகனைக் கட்டித் தழுவி, கைலாகு செய்து தமது வாழ்த்துக்களைத் தெரிவித்தனர்.






இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தகவல்:
மொகுதூம் முஹம்மத்,
துணைச் செயலாளர்,
காயல் நல மன்றம், சிங்கப்பூர்.


Previous News ItemNext News Item
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. local charity
posted by salahu deen (hong kong) [11 October 2010]
IP: 219.*.*.* Hong Kong | Comment Reference Number: 482

kwa now spread the wings to help local orphanage. alhamdu lillah every things tobe success.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
2. Nice Comments.
posted by Mahmood Seyed Mohamed (Kingdom Of Saudi Arabia) [13 October 2010]
IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 497

ALIMSA KEERI PILLAI THAAN.
WE DON'T WANT TEACH TO S.K.S LIKE THIS TYP OF JOKES.
WELL DONE SALIH.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>

முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்

பிற செய்திகள்

காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
Cathedral Road LKS Gold ParadiseFathima Jewellers
AKM JewellersFaams

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved